Wednesday, December 20, 2017

வாக்கிங் கிளம்புவதற்கு முன்னால் இது அவசியம் பாஸ்! 

இரா.செந்தில் குமார்

“ரொம்ப வெயிட் போட்டுட்டேன்னு எல்லோரும் சொன்னாங்க. தினமும் ஓடி உடம்பைக் குறைக்கலாம்னு, ரெண்டு கிலோமீட்டர் தான் ஓடினேன். அதுக்கே காலைப் பிடிச்சுக்கிச்சு. ரெண்டு நாளா நடக்க முடியாம தவிக்கிறேன்..." - இப்படிப்பட்ட புலம்பல்களை நீங்கள் அடிக்கடிக் கேட்கலாம். அல்லது நீங்களே கூட உங்கள் நண்பர்களிடம் புலம்பியிருக்கலாம். ‘உடம்பை ஃபிட்டாக வைத்துக்கொள்ள ஜிம்முக்குப் போகிறேன்' என்று வீராப்பாகச் சொல்லிட்டு அடுத்த நாள் கையையும், காலையும் தூக்கக்கூட முடியாமல் அவதிப்பட்டவர்களையும் பார்த்திருப்பீர்கள்.



இந்த அவஸ்தைகளுக்குக் காரணம் என்ன?

தசைப்பிடிப்பு.

உடற்பயிற்சி, விளையாட்டு போன்ற செயல்பாடுகளுக்கு மனரீதியாக நாம் தயாராகிவிட்டாலும், நம் உடல் தயாராக வேண்டியது மிக அவசியம். கிரிக்கெட், ஃபுட்பால், பளுதூக்குதல் என எந்த விளையாட்டும் துவங்குவதற்கு முன்பாக விளையாட்டு வீரர்கள் மைதானத்தில் மித வேகத்தில் ஓடிக் கொண்டிருப்பார்கள். கையைக் காலை தூக்கி 'ஸ்ட்ரெச்' செய்து தயார் ஆகிக் கொண்டிருப்பார்கள். உடற்பயிற்சி, விளையாட்டு இப்படி உடலின் எந்த ஒரு தீவிர செயல்பாட்டுக்கும் முன்பாக நம் உடலை அதற்குத் தயார் செய்ய 'வார்ம் - அப்' செய்யவேண்டியது அவசியம்.

வார்ம் - அப் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியும், அதனால் உண்டாகும் நன்மைகளைப் பற்றியும் விரிவாக விளக்குகிறார் பிசியோதெரபிஸ்ட் ஃபாமிதா

“வார்ம் - அப், உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதற்காக செய்யப்படுவது. இதில் ஸ்ட்ரெச்சிங் முக்கியமான ஒன்று. ஸ்ட்ரெச்சிங் செய்யும்போது உடலின் ஒவ்வொரு பகுதிகளிலும் ரத்த ஓட்டம் வேகமாகும். அதனால், தசைகளில் உள்ள அடுக்குகள் (Layers) திறக்கும். தேவையான அளவுக்கு ஆக்சிஜனும் கிடைக்கும். இதனை உடலைத் தூண்டும் பயிற்சிகள் என்று சொல்லலாம் (Golgi tendon stimulation).

அதிக எடையான ஒரு பொருளைத் தூக்குவதற்கு முன்போ, அல்லது அதிக வேகத்தில் ஓடுவதற்கு முன்போ இதுபோன்ற ஸ்ட்ரெச்சிங் மிக அவசியம். இதனால் தசைக்கும், மூளைக்கும் இடையே ஒருங்கிணைவு ஏற்படும். தசைகளுக்கு அதிகமாக ரத்தம் செல்லும்போது எந்த ஒரு வேலையையும் அதிக நேரம் செய்யமுடியும். திசுக்களில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்போது காயங்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

தசைகளுக்கு, தசை நார்களுக்கு (ligament) அதிகமாக ரத்தம் செல்லும்போது உடலின் நெகிழ்வுத்தன்மையும் (Flexibility ), மூட்டுக்களின் இயக்கமும் (Range of motion ) நன்றாக இருக்கும்.

15 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் வரை கண்டிப்பாக வார்ம் - அப் செய்யவேண்டும். அப்போதுதான் தசைகள் தயாரான நிலைக்கு வரும் (Muscle accommodation). அதற்குப் பிறகுதான் மற்ற தீவிரமான உடற்பயிற்சிகளில், விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டும். வாக்கிங் போவதாக இருந்தால் கூட ஸ்ட்ரெச்சிங் மிக அவசியம்.

ஸ்ட்ரெட்ச்சிங் வகைகள் :

கை, கால், கழுத்து, தொடை, எழும்பு மூட்டு, தோள்பட்டை என்று உடலின் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் தனித்தனி வார்ம் - அப்கள் உள்ளன. ஒரே இடத்தில் நின்று கொண்டு செய்யக்கூடியவை ஸ்டாடிக் ஸ்ட்ரெச்சிங் (Static stretching ). நகர்ந்துகொண்டு, ஓடிக்கொண்டு செய்வது டைனமிக் ஸ்ட்ரெச்சிங் (Dynamic Stretching). இதில் ஸ்டாடிக் ஸ்ட்ரெச்சிங் அதிக நன்மைகளைத் தரக்கூடியது. உட்கார்ந்த இடத்தில் இருந்துகொண்டே கூட ஸ்ட்ரெச்சிங் செய்யமுடியும்.

ஹேம்ஸ்டிரிங் ஸ்ட்ரெச்சிங் (Hamstring stretching), குவாட்ரிசெப்ஸ் ஸ்ட்ரெச்சிங் (quadriceps stretch) போன்றவை மிகவும் எளிமையானவை, அதிக பயன் தரக்கூடியவவை.

அதிலும் கண்டஞ்சதைக்கான ஸ்ட்ரெச்சிங் (calf muscles stretching) மிகவும் முக்கியமானது. காலுக்குக் கீழே உடலின் உறுப்புக்கள் அனைத்துக்கும் ரத்தத்தை கொண்டு செல்வதற்கான நரம்புகள் கண்டஞ்சதையில்தான் உள்ளன. இதனால், கண்டஞ்சதை, 'உடலின் இரண்டாவது இதயம்' என்று அழைக்கப்படுகிறது.

எந்த ஒரு செயலைச் செய்தாலும் முதலில் சோர்வடைவது கண்டஞ்சதைதான். இந்த ஸ்ட்ரெச்சிங் செய்துவிட்டால் உடல் எளிதாகச் சோர்வடைவதை தவிர்க்க முடியும்.

ஸ்ட்ரெட்ச்சிங் எப்படி இருக்கக் கூடாது?

கைக்கு ஒருநாள், காலுக்கு ஒருநாள் என்று தனித்தனியாகச் செய்யக் கூடாது. ஒட்டுமொத்த உடலுக்கானதாக ஸ்ட்ரெச்சிங் இருக்கவேண்டும்.

பொறுமையாக ஸ்ட்ரெச்சிங் செய்யவேண்டும். செய்யும்போது சுவாசம் ஆழ்ந்த நிலையிலும் ( Deep Breathing ) நிதானமாகவும் இருக்கவேண்டும்.

கடமைக்கு ஐந்து நிமிடங்கள் செய்துவிட்டு அடுத்த வேலைக்குப் போய்விடக் கூடாது. தசைகளின் வெப்பநிலை அதிகரிக்கும் அளவுக்கு வார்ம் - அப் செய்யவேண்டும்.



வார்ம் - அப் பால் உடலுக்கு என்ன நன்மை :

வார்ம் - அப் செய்யும்போதே நம் உடல் வெப்பமாவதை நம்மால் உணரமுடியும். அந்த நிலை வரும்வரை நாம் தொடர வேண்டும். அப்போதுதான் அட்ரினலின் போன்ற பல ஹார்மோன்கள் சுரக்கும். 'அட்ரினலின்' மகிழ்ச்சிக்கான ஹார்மோன் ஆகும்.

'ஹேப்பி ஹார்மோன்ஸ்' சுரப்பதால் மைண்ட் ரிலாக்ஸ் ஆகும்.

உடலில் உள்ள கொழுப்பு அமிலங்கள் கரைந்து உடலுக்குத் தேவையான ஹார்போஹைட்ரேட் கிடைக்கும். எந்த ஒரு செயலைச் செய்தாலும் நேர்த்தியாக செய்யும் பழக்கம் உருவாகும்.

விரக்தி மனநிலை குறையும்.

நேர்மறையான எண்ணங்கள் அதிகரிக்கும்.

தேவையற்ற கவலைகள், பயம், கெட்ட எண்ணங்கள், தேவையற்ற பதற்றம் குறையும்.

விழிப்புஉணர்வு, தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

வார்ம் - அப் செய்து முடிக்கும்போது மனதுக்கு திருப்தியும் உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும். " என்கிறார் ஃபாமிதா.

வார்ம் - அப் எவ்வளவு அவசியமோ அதே அளவுக்கு முடிந்ததும் கூல் -டவுன் அவசியம். வார்ம் அப்பில் செய்த அதே ஸ்ட்ரெட்ச்சிங் தான் கூல் - டவுனிலும் செய்யவேண்டும்.
பொறியியல் கல்லூரி, நிகர்நிலைப் பல்கலைகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ புதிய கெடுபிடி! 

ஞா. சக்திவேல் முருகன் Chennai:

கடந்த ஆண்டு மருத்துவப்படிப்புக்கான சேர்க்கையில், நிகர்நிலை மருத்துவக்கல்லூரிகள் நீட் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று 'செக்' வைத்தது உச்சநீதிமன்றம். இதைப்போலவே, இந்த ஆண்டு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் (All India Coucil for Technical Education) புதிய வழிகாட்டுதல்படி பொறியியல் படிப்புக்கான சேர்க்கையை நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு பொறியியல் கல்லூரிகளும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் தள்ளப்பட்டுள்ளன.



அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு புதிய வழிகாட்டுதல் நெறிமுறையை வெளியிட்டு இருக்கிறது. இந்த வழிகாட்டுதல் நெறிமுறையை தமிழ்நாட்டில் உள்ள 523 பொறியியல் கல்லூரிகளும் 28 நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் பின்பற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதுவரை, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தன்னிச்சையாகவும், பல்வேறு இடங்களில் வளாகங்களை அமைத்தும் அளவுக்கு அதிகமாக மாணவர்களைச் சேர்த்து வந்தன. இனி, அகில இந்திய தொழில்நுட்பக்குழு அனுமதி வழங்கும் எண்ணிக்கையில் மட்டுமே மாணவர் சேர்க்கையை நடத்திட வேண்டும். மேலும், ஒவ்வொரு வளாகத்துக்கும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுவின் அனுமதியைப் பெற வேண்டியது அவசியம்.

"புதிய வரைமுறையின் அடிப்படையில் ஏற்கெனவே, உள்ள பொறியியல் கல்லூரிகளும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் ஒவ்வொரு படிப்புக்கும் தனித்தனியே அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு விண்ணப்பிக்கும்போது ஏற்கெனவே கல்லூரி நடத்தி வருபவர்களும் கல்வி நிறுவனம் அமைந்துள்ள இடத்துக்கான அனுமதி, கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி, கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதற்கான சான்றிதழ், பாதுகாப்புக்கான சான்றிதழ், ஆய்வக வசதி, கேன்டீன் மற்றும் தொலைத்தொடர்பு வசதி என அனைத்தையும் முறையாக சமர்ப்பிக்க வேண்டும். இதனை எல்லாம் முறையாகப் பெற்றிருப்பவர்களுக்கே அனுமதி கிடைக்கும். மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் 30 சதவிதத்துக்கு குறைவாக மாணவர்கள் சேர்க்கையுள்ள படிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படுவது நிறுத்தப்படும். இனி, ஒரே பெயரில் கல்லூரிகள் திறக்கப்படுவதற்கும் அனுமதி கிடையாது" என்கிறார் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் அதிகாரி.



புதிய வரைமுறையில், ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் சேர்க்கையை அகில இந்திய தொழில்நுட்பக்குழுவின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு கல்வி நிறுவனமும் தன்னிச்சையாக புதிய படிப்புகளை ஆரம்பித்து நடத்தி வருகிறார்கள். இதனையும் ஒரு வரைமுறைக்குள் கொண்டு வரும்வகையில், தொழில்நுட்பக்குழு பரிந்துரைத்த பாடத்திட்டங்கள் 80 சதவிதத்துக்கும் குறைவில்லாத வகையில் பாடங்கள் இருக்க வேண்டும். அனைத்துக் கல்லூரிகளிலும் ஒரே ஷிப்ட் முறையில் மட்டுமே வகுப்புகள் சொல்லி கொடுக்க வேண்டும். 80%-க்கு மேல் மாணவர் சேர்க்கை கொண்டுள்ள கல்லூரிகளில் மட்டும் மாலையில் பகுதி நேர வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்படும். இதிலும் ஒரு கல்வி நிறுவனத்துக்கு அதிகபட்சம் நான்கு படிப்புகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.

அடுத்த கல்வியாண்டு முதல் மாணவர்களின் கட்டணங்கள் அனைத்தும் ஆன்லைன் வழியாக மட்டும் பெற வேண்டும் என்று புதிய விதிமுறையைக் கொண்டு வந்திருக்கிறது. மேலும், பணியாற்றும் ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் ஆறாவது சம்பளக்கமிஷன் பரிந்துரைத்த சம்பளம் வழங்க வேண்டும். முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பைச் சொல்லிக்கொடுக்கும் பாடப்பிரிவில் குறைந்தது முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர் ஒருவரும், இரண்டு இணை பேராசிரியர்கள், 6 உதவி பேராசிரியர்களும் பணியாற்ற வேண்டும்.



இளநிலை பொறியியல் படிப்பில் 20 மாணவருக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். அனைத்து ஆசிரியர்களின் தகவல்களும் பதிவு செய்யப்பட வேண்டும். இவர்கள் தங்களுடைய விவரங்களோடு ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும். மாணவர்களிடம் கல்வி கட்டணமாக மாநில அரசு பரிந்துரைத்த கட்டணத்தை விடக் கூடுதலாக பெறக்கூடாது என்று புதிய வரைமுறைகளில் விளக்கப்பட்டுள்ளது.

புதிய வரைமுறைகள் உடனடியாக அமல்படுத்தி பொறியியல் கல்விக்குப் புத்துயிர் ஊட்ட வேண்டும் என்பதே எல்லோருடயை ஆசை. தரமான பொறியியல் கல்வி வழங்குவதற்கான முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறது அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழு! பாராட்டுவோம்.

court warning


Chennai: Packers co directed to pay Rs 20,000 

DECCAN CHRONICLE.

Published Dec 20, 2017, 3:42 am IST

In the petition, V. Saravanan, Pammal, submitted that he was working in a private company in Chennai.



Chennai: The District Consumer Disputes Redressal Forum, Chennai (North), has directed a packers and movers company to pay a compensation of `20,000 to a person for causing damage to his bike during transit from Chennai to Pune.

In the petition, V. Saravanan, Pammal, submitted that he was working in a private company in Chennai.

After he was transferred to Pune in February 2015, he approached Agarwal Packers and Movers to shift his household articles, including his Honda Motor bike, to Pune. The workers from Agarwal Packers and Movers, Anna Nagar (East), packed and loaded the articles and bike on February 2, 2015 into their vehicle. He paid a sum of `12,650 towards charges for transport. Agarwal Packers had delivered goods in Pune on March 7. 2015.

He noticed that his bike’s petrol tank, visor and rear indicator were damaged badly at the time of delivery.

He sent several mails to the company about the damage. After checking a supervisor of Agarwal Packers, he asked him to apply for insurance claim. The supervisor also assured him that the company would pay the difference amount.

The insurance firm paid Rs 4,300 out of the total `11,077 incurred for repair.

Again he sent representations to Managers of Pune and Anna Nagar’s division of Agarwal Packers and the managing director of the company seeking balance amount from the company.

However, the company had not paid the amount. He filed the complainant claiming `11,077 for damage and compensation for deficiency in service and mental agony.

In its reply, Agarwal Packers submitted that the company asked him to provide the documents or surveyor report. He had not given any documents to show that the Insurance Company paid Rs 4,300. He can withdraw the complaint after producing documents or surveyor report.

The bench comprising president K.Jayabalan and member M.Uyirroli Kannan said that the damage was caused to bike during transit. Hence the company liable to pay for the damage caused to the vehicle. The bench directed the company to pay him a compensation of `20,102 for causing him mental agony.

Husband Can’t Complain Of Wife’s Visits To Parents’ Home: Delhi HC [Read Judgment] | Live Law

Husband Can’t Complain Of Wife’s Visits To Parents’ Home: Delhi HC [Read Judgment] | Live Law: A wife is certainly entitled to visit her parents’ home and such a visit per se cannot be the reason for a husband to complain, the bench said. The Delhi High Court has refused to grant divorce to a man who complained of his wife’s frequent visits to her parental home. A wife is certainly …

FACE BOOK ..TC ISSUE

Read more at Education Medical Dialogues: Students Beware: MK Shah Medical College under No admission Category for 2018-19 https://education.medicaldialogues.in/students-beware-mk-shah-medical-college-under-no-admission-category-for-2018-19/
Read more at Education Medical Dialogues: Students Beware: MK Shah Medical College under No admission Category for 2018-19 https://education.medicaldialogues.in/students-beware-mk-shah-medical-college-under-no-admission-category-for-2018-19/
Read more at Education Medical Dialogues: Students Beware: MK Shah Medical College under No admission Category for 2018-19 https://education.medicaldialogues.in/students-beware-mk-shah-medical-college-under-no-admission-category-for-2018-19/

NEWS TODAY 28.01.2026