Monday, December 25, 2017

ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் முடிவுகள் 
 
 
ரபரப்பாய் நடந்து முடிந்த ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் முடிவு எம்.ஜி.ஆர். நினைவு நாளான நேற்று வெளிவந்துள்ளது. இந்த தேர்தலில் டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றுள்ளார். அடுத்த இடத்தில் அ.தி.மு.க.வும், 3-வது இடத்தில் தி.மு.க.வும் தள்ளப்பட்டுள்ளது. தி.மு.க., நாம் தமிழர் கட்சி, பாரதீய ஜனதா கட்சிகள் உள்பட 57 வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்துள்ளனர். பா.ஜ.க.வை விட நாம் தமிழர் கட்சியும், எந்த கட்சிக்கும் வாக்களிக்க விரும்பாத நோட்டாவும் அதிக ஓட்டுகள் வாங்கியுள்ளன. முதல்சுற்றில் இருந்தே டி.டி.வி.தினகரனின் ‘குக்கர்’ சின்னம்தான் முதல் இடத்தில் இருந்தது. நிச்சயமாக இந்த தேர்தல்முடிவுகள் அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சின்னங்களை வைத்து மட்டும் வெற்றிபெற முடியாது என்பதை இந்த தேர்தல் முடிவு காட்டிவிட்டது. மதுசூதனனும், மருதுகணேசும் அவர்கள் கட்சி சின்னங்களில்தான் போட்டியிட்டனர். ஆனால் டி.டி.வி.தினகரன் கடந்தமுறை ‘தொப்பி’ சின்னத்திலும், இந்தமுறை ‘குக்கர்’ சின்னத்திலும் சுயேச்சையாகத்தான் களத்தில் இறங்கினார். எல்லா தொகுதிகளிலும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் மக்கள் தேர்தலை சந்திப்பார்கள். ஆனால், ஆர்.கே.நகர் தொகுதி அடிக்கடி தேர்தலை சந்திக்கும் தொகுதியாக மாறிவிட்டது. கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வெற்றிவேல் வெற்றி பெற்றார். 2015-ம் ஆண்டு மே மாதம் நடந்த இடைத்தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றார். மீண்டும் 2016-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஜெயலலிதா மரணம் அடைந்தவுடன் இந்த ஆண்டு ஏப்ரல் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக இருந்தது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.வே பிளவுபட்டு சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் மதுசூதனனும், தி.மு.க. சார்பில் மருதுகணேசும் போட்டியிட்டனர். தேர்தல் பிரசாரம் ஓய்ந்தநிலையில், ஏப்ரல் 9-ந் தேதி இரவில் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு பெருமளவில் பண வினியோகம் செய்யப்பட்டு முறைகேடுகள் நடந்ததுதான் ரத்து செய்யப்பட்டதற்கு காரணமாகும். மீண்டும் கடந்த 21-ந் தேதி இந்த தொகுதியில் தேர்தல் நடந்தது. சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், அ.தி.மு.க. சார்பில் மதுசூதனனும், தி.மு.க. சார்பில் மீண்டும் மருதுகணேசும் போட்டியிட்டனர்.

அடிக்கடி தேர்தல் நடந்து வருவதால் இந்த தொகுதி மக்கள் சலிப்பு அடையவில்லை, மகிழ்வோடு ஏற்றுக்கொண்டனர். வழக்கமாக தேர்தலின்போது வன்முறைகள் நடைபெறும், வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்படும். ஆனால் இந்த தேர்தலில் அப்படி எந்த வன்முறைகளோ, தேர்தல் தகராறோ, சண்டை சச்சரவுகளோ இல்லாமல் அமைதியாகவே நடந்தது. பணமழை பொழிகிறது என்று அரசியல் கட்சிகள் தேர்தல் கமிஷனிடம் புகார் சொன்னாலும், பொதுமக்களிடம் இருந்து புகார் வரவில்லை. பெரிய அளவில் பணப்பரிமாற்றம் கண்டுபிடிக்கப்படவில்லை. 28 லட்ச ரூபாய்தான் பறிமுதல் செய்யப்பட்டது. 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தலை நிறுத்தக்கூடிய அளவில் எந்த புகார்களும் நிரூபிக்கப்படவில்லை. காரணங்கள் ஆயிரம் கூறினாலும், தேர்தல்முடிவை ஏற்றுக்கொள்வதுதான் ஜனநாயக கலாசாரம். இதற்கு பிறகு நடக்கப்போவதை அரசியல் உலகில் இனிதான் பார்க்கவேண்டும்.

Sunday, December 24, 2017

Vaikunta Ekadasi at Besant Nagar Ashtalakshmi Temple on Dec 29

Posted on : 23/Dec/2017 17:20:31



On the special and sacred occasion of Vaikunta Ekadasi falling on 29th December, in the Besant Nagar Ashtalakshmi Temple, Suprabhata Seva will be performed at 4.00 AM on 29th December. Special Aaradhana will be performed at 4.30 AM. Sorga Vaasal (the main temple entrance) will be opened at 5.00 AM.

The corridors of the Sannadhis (Sanctum Sanctorum of the Gods/Goddesses) will be opened for the devotees from 5.00 AM.

Keeping the convenience of the devotees in mind, the lines for standing in queues have been arranged right from the Northern entrance of the temple.

Further arrangements have been made for the Darshan without any distinction between Paid mode and free (unpaid) mode.

The routine on normal days is to perform the Archanas in the sanctum sanctorum of the Goddess Dhairyalakshmi. But, on 29th, Archanas can be performed on the Sanctum Sanctorum of 3 Goddesses – Aadhilakshmi, Dhanyalakshmi, and Dhairya Lakshmi, However, note that only Darshan can be had on the other Sanctum Sanctorum of the other Goddesses.

But for the times when the regular pooja and the cleaning sessions are taken up, arrangements have been made for the devotees to have Darshans in all the Sanctum Sanctorum of the Gods and Goddesses. The needful security arrangements have also been made.
நம்பியாரிடம் இரட்டை இலை இருந்தால் ஓட்டு விழாது: தினகரன்

Updated : டிச 24, 2017 19:21 | Added : டிச 24, 2017 19:06 |


சென்னை: வில்லன்களான அசோகன், நம்பியாரிடம் இரட்டை இலை இருந்தால் ஓட்டு விழாது என ஆர்.கே.,நகரில் வெற்றி பெற்ற தினகரன் மாலையில் நிருபர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

தேர்தல் முடிந்த பின்னர் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் இருந்து வெற்றி சான்றிதழை சுயேட்சை வேட்பாளர் தினகரன் பெற்றார். நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடை தேர்ததலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு 89,013 ஓட்டுக்கள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர்மதுசூதனன் மட்டுமே டெபாசிட் பெற்றார். வெற்றிபெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் பிரவீன்நாயரிடம் இருந்து தினகரன் பெற்றுக்கொண்டா். ஓட்டு எண்ணிக்கை நடைபெற்ற ராணி மேரி கல்லூரியில் சான்றிதழ் வழங்கப்பட்டது. சான்றிதழை பெற்ற தினகரனுடன் தங்கதமிழ்செல்வன், செந்தில்பாலாஜி உடன் இருந்தனர்.

சான்றிதழை பெற்ற பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வெற்றி பெற காரணமாக இருந்த தொண்டர்களுக்கு நன்றி . இன்னும் 2 மாதம் கூட இந்த ஆட்சி இருக்காது.வெற்றிக்காக உழைத்தவர்களுக்கும் வாக்களித்தவர்களுக்கும் நன்றி.மக்கள் விரோத காட்சியை முடிவுக்கு கொண்டுவர அதற்கு அச்சாரமாக வெற்றி கிடைத்திருக்கிறது. காவல்துறை செயல்பாடு கண்டனத்திற்குரியது. இனிமேல் மாற்றங்கள் நிகழும். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பொறுத்திருந்து பாருங்கள் . ஜெயலலிதாவனின் ஆசிபெற்ற என்னை ஆர்.கே.நகர் மக்கள் என்னை வெற்றி பெற வைத்துள்ளனர். மக்கள் கணிப்பு என்னை இடைத்தேர்தலில் வெற்றிபெற வைத்துள்ளது. ஜெயலலிதா விட்டுச்சென்ற பணிகளை சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் தொடர்வேன்.

காவல்துறையினர் ஏவல் துறையாக இருக்க கூடாது. நான் இன்று முளைத்த காளான் அல்ல. நான் அகங்காரத்தில் பேச வில்லை. மக்களின் நாடி துடிப்பு எனக்கு தெரியும். 60 சதவீத வாக்கு கிடைக்கும் என எதிர்பார்த்தேன். சிலகாரணங்களால் 50 சதவீதம் கிடைத்துள்ளது. ஆர்.கே. தொகுதியில் இருப்பவர்கள் சாமானியர்கள் . அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும். நான் முன்னிலைப்படுத்தப்பட்டு இருக்கிறேன். நான் தனிப்பட்ட முறையில் முடிவுஎடுக்க மாட்டேன். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வில்லை.ஸீலீப்பர் செல்கள் வெளியில் வருவார்கள் தொடர்ந்து பின்னர் சசிகலாவை சந்தித்து ஆசீர் வாதம் வாங்க இருக்கிறேன். இவ்வாறு தினகரன் கூறினார்.

ஆர்.கே.நகர் தேர்தல்- செல்வாக்கை இழந்த இரட்டை இலை... பதவியை பறிகொடுக்கிறாரா எடப்பாடி?

தினகரன்

ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரனின்  வெற்றி  தமிழக அரசியல் அத்தியாயத்தை புதிய பாதையை  நோக்கி நகர்த்திச் செல்கிறது” என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தை எடப்பாடி கையில் வைத்திருந்தபோதும், பன்னீர் செல்வத்தின் போர்க்கொடியால் இரட்டை இலை சின்னமும், கட்சியும் தேர்தல் ஆணையத்தினால் முடக்கப்பட்டது. ஆட்சியையும், கட்சியையும் தன்வயப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்ட எடப்பாடி வலியச்சென்று பன்னீரோடு இணைப்பு நடத்தினார். அந்த இணைப்பே அ.தி.மு.க வின் அடிநாதமாக விளங்கிய இரட்டை இலையைப் பெறவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலானதாக இருந்தது.

இரட்டை இலையை பெற்றுவிட்டால் ஒரு கோடிக்கும் மேலான தொண்டர்களையும், நாற்பது ஆண்டு காலம் தமிழகத்தில் கோலோச்சி வரும் அ.தி.மு.க. என்ற இயக்கத்தையும் தன் வயப்படுத்தி விடலாம் என்ற கணக்கே எடப்பாடியிடம் ஓங்கி இருந்தது. அதற்காகவே மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசிடம் மடிப்பிச்சை கேட்காத குறையாக எடப்பாடி மண்டியிடவும் செய்தார். ஒருபக்கம் எடப்பாடி, கட்சியைக் கைப்பற்ற காய்நகர்த்தி வர, மறுபுறம் பவ்யமாக பன்னீரும் மத்திய அரசின் துணையோடு கட்சியைக் கைப்பற்றக் கணக்கு போட்டார். ஆனால், மத்திய பி.ஜே.பி. அரசோ  இரண்டு பேரையும் தங்கள் கைகளில் வைத்துக் கொண்டு தமிழகத்தின் ஆட்சி அதி்காரத்தை  ஆட்டுவிக்க கணக்குப் போட்டது.

தினகரன் தரப்போ,கட்சியை  கைப்பற்ற ஒருபுறம் வியூகம் வகுத்து வந்தாலும், தனது ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கும்  பணியையும் மற்றொருபுறம் மேற்கொண்டே வந்தது. ஆனால், எடப்பாடி தரப்போ இரட்டை இலை வந்துவிட்டால் எல்லாம் தங்கள் வசம் வந்துவிடும் என்ற ஒற்றை நம்பிக்கையிலேயே இருந்து வந்தது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலையோடு களத்தில் இறங்கினால் வெற்றி பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தில் தீவிரமாக இருந்தனர் எடப்பாடி- பன்னீர் தரப்பினர். மத்திய அரசிடமும் இதை சூசகமாகத் தெரிவித்தனர். அதன் விளைவுதான்,இரட்டை இலையை எடப்பாடிவசம் தேர்தல் ஆணையம் ஒப்படைத்த மறுதினமே, ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிப்பும் வெளிவந்தது. கட்சியும், சின்னமும் தங்கள் வசம் வந்துவிட்டதால், ஆர்.கே. நகரில் வெற்றி நமக்குத்தான் என்று எடப்பாடி அணியினர் கணக்குப் போட்டு வைத்திருந்தனர்.
ஆனால், அதன்பிறகுதான் தினகரன் தரப்பு விஸ்வரூபமாக களத்தில் இறங்கியது. கட்சியும் இல்லை, சின்னமும் இல்லை என்ற நிலையில் ஆர்.கே.நகர் தேர்தலில் துணிச்சலாகக் களத்தில் இறங்க முடிவுசெய்தார்.தினகரன் தன் மீது உள்ள நம்பிக்கை ஒரு புறம் என்றால், மறுபுறம் எடப்பாடி தரப்புக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்பதையும் உணர்ந்துதான் இந்த துணிச்சலான முடிவை எடுத்தார். அ.தி.மு.க வை விட ஒரு வாக்காவது கூடுதலாக வாங்கிவிட்டால் போதும் என்ற  கணக்கில்தான் ஆரம்பத்தில் களத்தில் இறங்கினார். ஆனால், ஆர்.கே.நகரில் அவருக்கு கிடைத்த வரவேற்பு வெற்றியை எளி்தாக்கிவிட்டது.
இந்த தேர்தல் முடிவு  தினகரனுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்வதை விட இத்தனை ஆண்டுகள் அ.தி.மு.க வுக்கு வலிமை சேர்த்து வந்த இரட்டை இலை தனது செல்வாக்கை இழந்துவிட்டதோ என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த இரட்டை இலை சின்னம் கிடைத்தால், எதையும் சாதித்துவிடலாம் என்ற எடப்பாடியின் எண்ணத்தை தவிடு பொடியாக்கிவிட்டது ஆர்.கே. நகர் முடிவு. இத்தனை ஆண்டுகள் கோலோச்சி வந்த இரட்டை இலை சின்னத்தை நேற்று வந்த குக்கர் சின்னம் காலி செய்துவிட்டது என்ற செய்தியும் கொஞ்சம் அதிர்ச்சிகரமானதுதான். ஆனால், இதைத் தான் தினகரன் எதிர்பார்த்தார். ஆர்.கே. நகர் தேர்தலில் நாம் வலிமைபெற்றுவிட்டால், கட்சியை தன்வயப்படுத்திவிடலாம் என்ற திட்டத்தில் அவர் தெளிவாக இருந்தார். இதையெல்லாம் உணர்ந்து தான், எடப்பாடி தரப்பும் வாக்குக்கு ஆறாயிரம் ரூபாய் பணத்தை வாரி இறைத்ததாக தகவல்கள் வெளியாகின.

தினகரனின் இந்த வெற்றி அ.தி.மு.க  என்ற இயக்கம் இனி யார்வசம் செல்லப்போகிறது என்ற கேள்வியையும் சேர்த்தே எழுப்பியுள்ளது. இரட்டை இலை இருக்கும் பக்கம் தான் தொண்டர்கள் இருப்பார்கள் என்றால், இப்போது இரட்டை இலைக்கு எதிராக வாக்களித்த மக்களின் மனநிலை எதை பிரதிபலிக்கிறது என்ற கேள்வியும் எழுகிறது?. சின்னம் யார் வசம் இருக்கிறது, கட்சி யாரிடம் இருக்கிறது என்பதை மக்கள் பார்க்கவில்லை என்பதை உணர்ந்துகொள்ளமுடிகிறது. இந்த தேர்தல் முடிவு அ.தி.மு.க வின் நிர்வாகிககள் மத்தியிலும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக “சின்னம் எடப்பாடி அணியிடம் இருந்ததால் அவர் பின்னால் சென்றோம்” என்று சொன்னவர்களின் மனநிலையிலும் இனி மாற்றம் ஏற்படலாம்.

ஸ்லீப்பர் செல் இருக்கிறார்கள் என்று தினகரன் இத்தனை நாட்கள் சொல்லிவந்தார். இந்த ஸ்லீப்பர் செல்லாக இருப்பவர்கள் இனி உண்மையாகவே தினகரன் பின்னால் நிற்கலாம்.சட்டமன்ற கூட்டத்தொடரை அடுத்த மாதம் கூட்டவேண்டிய நிலையில் சட்டமன்ற உறுப்பினராக தினகரன் உள்ளே செல்லும் போது, அவர் பின்னால் மேலும் பல சட்டமன்ற உறுப்பினர்கள் அணிவகுக்கும் நிலையை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏற்படுத்திவிட்டது. கிட்டத்தட்ட முதல்வராக எடப்பாடி எதிர்காலத்தில் தொடருவதில் கூட சிக்கலை ஏற்படுத்திவிடலாம். தினகரனின் இந்த வெற்றி  எடப்பாடி பின்னால் இருக்கும் எம்.எல்.ஏக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தும் நிலையும் உள்ளது.இதனால்,தமிழக அரசியல் புதிய பாதையில் வரும் காலத்தில் பயணிக்கும் என்பதை கணிக்க துவங்கிவிட்டார்கள் அரசியல் நோக்கர்கள். தினகரனின் வெற்றிக்கு பின்னால், மறைமுகமாக சில அமைச்சர்களே பணியாற்றினார்கள் என்ற தகவலை லேட்டாக தான் அறிந்து கொண்டுள்ளார் எடப்பாடி. தினகரனின் இந்த வெற்றி ஆட்சி கட்சி இரண்டையும் தினகரன் கைப்பற்றுவதற்குக்  கிடைத்த வெற்றியாக  அவரின்  ஆதரவாளர்கள் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். “இனி, எடப்பாடி பக்கம் இருந்து தினகரன் பக்கம் அணிமாறும் படலத்தை காணப்போகிறீர்கள்” என்று வெற்றி உற்சாகத்தில் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் தினகரன் ஆதரவாளர்கள்.
ஆட்சியை கச்சிதமாக நகர்த்தி, கட்சியையும் லாவகமாக கைப்பற்ற தெரிந்த எடப்பாடிக்கு ஆர்.கே. நகரில் காய்நகரத்த தெரியாமல் போனதால், எதிர்காலத்தில் ஆட்சி, கட்சி என்ற இரண்டையுமே அவர் இழக்கும் அபாயத்திற்கு சென்றுவிட்டார்.

"ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ-வாகிய நான்...!" - தினகரனின் திடீர் குபீர் அறிக்கை

நாட்டின் மதச்சார்பற்றக் கொள்கைக்கு ஊறு விளையாமல் பாதுகாத்திடுவோம் என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன் என்று டி.டி.வி.தினகரன் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் இமாலய வெற்றி பெற்றுள்ளார். இந்தநிலையில் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ என்று குறிப்பிட்டு டி.டி.வி.தினகரன் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அவருடைய வாழ்த்து செய்தியில், 'உன்னைப் போல பிறரையும் நேசி என்கிற உயர்ந்த தத்துவத்தைப் போதித்து, சகோதரத்துவத்தையும், அன்பையும் எடுத்துரைத்த, தேவகுமாரனாம் இயேசுகிறிஸ்து அவதரித்த பொன்னாளாம் கிறிஸ்துமஸ் நன்னாளில் கிறிஸ்துவ மக்கள் அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
நம்கொரு பாலகன் பிறந்தார். நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் என்கிற வேத வாக்கியத்தை தேவன் நிறைவேற்றிய காலம் கிறிஸ்துமஸ்  காலம் அன்பை, எளிமையை, மன்னிக்கும் குணத்தை, ஈகையை, இதயத்தூய்மையை, இறைவன் மீது நான் கொள்ளவேண்டிய விசுவாசத்தை, பிரசங்கித்த இயேசுநாதரை எல்லோரும் போற்றிடுவோம்.
ஏழைகளுக்கு இறங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான்' என்கிற இயேசு கிறிஸ்துவின் வாக்கியத்தின்படி, ஏழைகளுக்கு உதவும் எண்ணத்தை தங்கள் குணமாகவே கொண்ட எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் கிறிஸ்துவத்தின் மீதும் கிறிஸ்துவ மக்களின் மீதும் எப்போதும் அளவற்ற அன்பினை பொழிந்துள்ளனர் என்பதை எண்ணிப்பார்க்கிறேன்.
அன்பால் உலகை ஆட்கொண்ட தேவகுமாரனாகிய இயேசுபிரான் போதித்த போதனைகளை இதயத்தில் தாங்கிய கிறிஸ்துவ மக்கள், தூய தொண்டினை மக்களுக்கு ஆற்றும் வகையில் கல்வியிலும், மருத்துவத்திலும், சமூகத்திலும் அவர்களின் பணி என்றும் போற்றத்தக்கது. தொடர்ந்து இந்த அன்பின் நற்செய்தியும், நற்செயலும், தங்கு தடையின்றி தமிழகத்தில் தழைத்து ஓங்கிட எப்போதும் நாம் துணை நின்றிடுவோம். நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைக்கு ஊறு விளையாமல் பாதுகாத்திடுவோம் என்பதை உறுதியாக தெரிவித்து, உலகெங்கிலும் வாழும் என் அன்பு கிறிஸ்துவ சகோதரர்களுக்கு, மீண்டும் ஒருமுறை இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் இரண்டு மாதம் கூட இந்த ஆட்சி நீடிக்காது: தினகரன்

Published : 24 Dec 2017 19:12 IST
சென்னை




டிடிவி தினகரன்

என்னைத் தவிர அனைவரும் டெபாசிட் இழப்பார்கள் என எதிர்பார்த்தேன், ஒருவர் மட்டும் தப்பி பிழைத்துவிட்டார்.இன்னும் இரண்டு மாதம் கூட இந்த ஆட்சி நீடிக்காது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றதற்கான சான்றிதழை, தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் நாயரிடமிருந்து பெற்றார் டிடிவி தினகரன்.

அதற்குப் பிறகு சென்னை ராணிமேரி கல்லூரியில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''ஆர்.கே.நகர் தேர்தலில் நான் வெற்றி பெறக் காரணமாக இருந்த தொண்டர்களுக்கும், எனக்காக வாக்களித்தவர்களுக்கும் நன்றி. ஜெயலலிதாவின் ஆதரவு பெற்ற என்னை ஆர்.கே.நகர் மக்கள் வெற்றி பெற வைத்துள்ளனர். ஆர்.கே.நகர் மக்களை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.

ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை உறுப்பினர் என்ற முறையில் தொடருவேன்.ஜெயலலிதா வீடியோவுக்கும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வீடியோ வெளியிட்டது தொடர்பாக வெற்றிவேலைக் கண்டித்தேன்.

அதிமுகவின் மூன்றாவது அத்தியாயம் ஆர்.கே.நகரில் தொடங்கும் என்று ஏற்கெனவே சொன்னேன். அது நடந்திருக்கிறது.

காவல்துறை ஏவல்துறையாக நடக்கக் கூடாது. நடுநிலையுடன் செயல்பட வேண்டும். எனது ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது.

என்னைத் தவிர அனைவரும் டெபாசிட் இழப்பார்கள் என எதிர்பார்த்தேன், ஒருவர் மட்டும் தப்பி பிழைத்துவிட்டார்.இன்னும் இரண்டு மாதம் கூட இந்த ஆட்சி நீடிக்காது'' என்று தினகரன் கூறினார்.
RK Nagar bypoll: NOTA gets more votes than BJP candidatePradeep Kumar 

| TNN | Updated: Dec 24, 2017, 19:15 IST

Highlights

The BJP polled 1,417 votes while NOTA received 2,373 votes.

The BJP fielded Karu Nagarajan, the party's state unit secretary, as its candidate for the bypoll.

Nagarajan alleged that it (RK Nagar bypoll) was "not a democratic election."



BJP candidate polled 1,417 votes while NOTA received 2,373 votes.

CHENNAI: With less than 1% vote share, the Bharatiya Janata Party (BJP) failed to leave a mark on the RK Nagar bypoll. So poor was the national party's performance that even NOTA (None of the Above) option polled higher number of votes than the BJP.
BJP fielded Karu Nagarajan, the party's state unit secretary, as its candidate for the bypoll.

At the end of 19 rounds of counting on Sunday evening, Nagarajan polled 1,417 votes, which was only 0.80% of the total votes polled. In comparison, NOTA received 2,373 votes.

Nagarajan left the counting venue midway through the process after it became evident that the BJP was not going to even remotely alter the outcome, which saw independent candidate T T V Dhinakaran being declared the winner.

Nagarajan later alleged that it (RK Nagar bypoll) was "not a democratic election." He added that political parties, except the BJP, had distributed cash to voters.

Earlier, as the BJP was setting a terrible pace during the counting, Subramanian Swamy tweeted: "TN BJP record: A national ruling party gets a quarter of NOTA's vote. Time for accountability."

Editor of Thuglak magazine and RSS think-tank S Gurumurthy tweeted: "RK Nagar byelection is a fraud. It is bought by Dinakaran by money."

NEWS TODAY 29.01.2026