Monday, December 25, 2017

மாணவர் மனம் நலமா 08: கையில் செல்ஃபோனை வைத்திருப்பதைக் கைவிடுங்கள்!

ஏதோ ஆர்வத்தில் ஸ்மார்ட்ஃபோனை அடிக்கடி பயன்படுத்திய நிலையிலிருந்து தற்போது அதிகப்படியான நேரம் ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்தும் நிலைக்கு என்னை அறியாமலேயே தள்ளப்பட்டிருக்கிறேன். இதனால் ஏற்படும் உடல், மனப் பிரச்சினைகளைப் பற்றிய தெளிவு வேண்டும்.
- ராஜேந்திரகுமார், பள்ளிக்கரணை, சென்னை.

இருந்த இடத்திலிருந்தே யாரையும் உடனடியாகத் தொடர்புகொள்ள, உலகத்துடன் எந்நேரமும் தொடர்பில் இருக்க இணையத்துடன்கூடிய செல்ஃபோன் உதவுகிறது. இதனால் நம்முடைய தினசரி வாழ்வின் இன்றியமையாத தேவைகளுள் ஒன்றாக செல்ஃபோனும் மாறிவிட்டது. 100-ல் 72 பேர் தங்கள் செல்ஃபோனை ஐந்தடி தூரத்துக்குள் வைத்திருக்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு. எங்கே இந்த உலகத்தின் தொடர்புநிலையிலிருந்து தான் மட்டும் விலக்கப்பட்டுவிடுவோமோ என்ற பயத்தின் விளைவிது. இதை ‘நோமோஃபோபியா’ என்பார்கள்.

குடி, புகைப்பிடித்தல் ஆகியவற்றுக்கு அடிமையாவதைப் போல, செல்ஃபோனைச் சார்ந்திருப்பதும் ஒருவித ‘நடத்தை அடிமைத்தனம்’. அதீதமாக செல்ஃபோன் பயன்படுத்துவதற்கு மனவருத்தம்கூட ஒரு காரணமாக இருக்கலாம். பிரச்சினைகளைக் கையாள முடியாத கையறுநிலை, கவனக்குறைவு, பொதுஇடங்களில் மற்றவர்களோடு இயல்பாகப் பழக பதற்றம் ஏற்படுவது போன்றவற்றிலிருந்து தப்பிக்க சிலர் அதிகப்படியாக செல்ஃபோன்களைப் பயன்படுத்துகின்றனர்.

குறிப்பாக, குழந்தைகள் ஸ்மார்ட்ஃபோன்களைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம். எது சரி, எது தவறு என்று தெரிந்துகொள்ள நேரிடையாகக் குழந்தை மற்றவர்களோடு தொடர்புகொள்ள வேண்டும். அப்போதுதான், சரியான ஆளுமையை நோக்கி குழந்தை வளரத் தொடங்கும். ஸ்மார்ட்ஃபோன்கள் மூலமாகச் செய்தி அனுப்புதல்,பேசுதல், இணையத்தில் உலாவுதல் மூலமாக குழந்தையால் எதனையும் கற்றுக்கொள்ள முடியாது.

வயது முதிர்ந்தவர்கள் அதிக நேரம் ஸ்மார்ட்ஃபோன் தொடுதிரையைப் பயன்படுத்தும்போது, மெலடோனின் என்ற ரசாயனப் பொருளின் அளவு குறைந்து, தூக்கம் கெடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. தூக்கமின்மையால் கவனம் குறைந்து மனதில் பதிய வேண்டிய விஷயங்கள் நீர்த்துப்போகும். இதனால், அடுத்த நாள் நிகழ்வுகள் அனைத்தும் பாதிப்புக்கு உள்ளாகும்.
சமூக ஊடகங்களில் தங்களின் கருத்துகளைப் பதிவுசெய்வது சிலருக்கு ஒருவித அடையாளத்தைத் தருகிறது. அடிப்படையில், வித்தியாசமான, பிரச்சினைக்குரிய ஆளுமைகளோடு இருப்பவர்கள், சமூக ஊடகங்களில், போலியான முகமூடிகளோடு தங்களை நகைச்சுவை மிகுந்தவர்களாகவும் நல்லவர்களாகவும் வெளிப்படுத்திக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. அதீத அளவில் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துவதால், ‘டெக்ஸ்டோஃபிரினியா’ என்ற பிரச்சினை தோன்ற வாய்ப்பிருக்கிறது. அழைப்போ மெசேஜோ வராதபோதும், அடிக்கடி செல்ஃபோனைப் பார்க்கும் பழக்கம், ‘டெக்ஸ்டோஃபிரினியா’ என்றழைக்கப்படுகிறது.

மூன்று மாதங்களுக்கும் அதிகமாகத் தினசரி ஆறு மணிநேரத்துக்கு மேல் ஸ்மார்ட் ஃபோனைப் பயன்படுத்துபவர்களுக்கு, மற்ற வேலைகள் பாதிக்கப்படுவதுடன், உடல், மனப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அலைபேசியால் உண்டாகும் உடல்பிரச்சினைகள்

1. கண்களில் எரிச்சல்
2. பார்வை மங்குதல் போன்ற உணர்வு
3. கண்களில் தளர்வு
4. தலைவலி
5. கழுத்துவலி

அலைபேசியால் உண்டாகும் மனப் பிரச்சினைகள்

1. தூக்கமின்மை
2. மனவருத்தம்
3. உறவுநிலைகளில் பிரச்சினைகள்
4. பதற்றம்

எப்படி மீள்வது?

1. செல்ஃபோனைப் பற்றிய கருத்தில் முதலாவதாக மாற்றம் கொண்டுவருவோம். அவசியமான நேரத்தில் ஃபோனைப் பயன்படுத்தினால்போதும் என்று ஒரு உடன்படிக்கையை முதலில் செய்துகொள்ளுங்கள்.
2. ஒரு நாளைக்கு எவ்வளவு மணிநேரம் செல்ஃபோனைத் தேவையில்லாமல் பயன்படுத்துகிறீர்கள் என்பதைக் கணக்கிடுங்கள்.
3. பயன்பாட்டைத் திட்டமிடுங்கள். குறிப்பிட்ட நேரத்துக்கு அலைபேசியிலேயே அலாரம் வைத்துக்கொண்டு அந்த நேரத்தில் மட்டும் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.
4. செல்ஃபோனில் செலவழிக்கும் நேரத்தில் உங்களுக்குப் பிடித்த ஹோட்டலில் சாப்பிடுவது, பிடித்த உடை எடுத்துக்கொள்வது என்று நீங்களே உங்களுக்கு வெகுமதி கொடுத்துக்கொள்ளலாம்.
5. ஃபோனை அடிக்கடி ‘செக் பண்ணுவதை’ தவிருங்கள் அல்லது தள்ளிப்போடுங்கள்.
6. எந்நேரமும் கையில் செல்ஃபோனை வைத்திருப்பதைக் கைவிடுங்கள். பார்க்காத இடத்தில், வெகுதூரத்தில் ஃபோனை வையுங்கள்.
7. ஒவ்வொரு முறை மெசேஜ் வரும்போது, சிறு ஒலி எழுப்பி உங்கள் கவனத்தை ஈர்ப்பதை மாற்றிவிடுங்கள்.
8. முடிந்தவரை சிலரிடம் நேரில் பார்க்கும்போது பேசிக்கொள்ளலாம் என்று முடிவெடுங்கள்.
9. ஓய்வு நேரத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செயல்களில் ஈடுபடுங்கள்.
10. சமூக நிகழ்வுகளில் நேரடியாக ஈடுபடுங்கள்
11. முடிந்தால் புதிய பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபடுங்கள்.
12. எப்போதுமே உங்களை ‘பிஸியாக’ வைத்திருங்கள்.
‘மாணவர் மனம் நலமா?’ கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் மனநல மருத்துவர் டாக்டர் டி.வி. அசோகன் (தொடர்புக்கு: tvasokan@gmail.com). வாசகர்கள் தங்களுடையப் படிப்புத் தொடர்பான உளவியல் சந்தேகங்களை இப்பகுதிக்கு அனுப்பலாம்.

முகவரி: வெற்றிக்கொடி, தி இந்து-தமிழ் நாளிதழ், கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை, சென்னை-600 002,
மின்னஞ்சல்: vetrikodi@thehindutamil.co.in

  வாழ்க்கை எப்போதும் இனிதாக இருப்பதில்லை. சூழல் மிக இக்கட்டாக இருக்கலாம். பிரச்சினைகள் சவால் மிகுந்ததாக இருக்கலாம். ஆனால், இவை அனைத்தையும் சமாளிக்கும் தெளிவும் மனோதிடமும் நம்மிடம் இருக்க வேண்டும். இவற்றை நமக்கு அளிப்பதுதான் உண்மையான தலைமைப் பண்பு. அப்படியானால், தலைமைப் பண்பு என்பது பிறரை வழிநடத்துவதும் ஆளுவதும் இல்லையா? தன்னை ஆள முடியாதவர் தலைவராக முடியாது.

தலைமைப் பண்பின் தேவை

வீட்டில் நீங்கள் செல்லப் பிள்ளையாக இருக்கலாம். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் அங்கே பூர்த்தி செய்யப்படலாம். நீங்கள் விழுவதற்கு முன்பே தூக்கிப் பிடிக்கப்படலாம். உங்கள் தவறுகள் உங்கள் மனம் கோணாமல் கண்டிக்கப்படலாம். ஆனால், வெளி உலகம் கண்டிப்பாக இதற்கு நேரெதிரானது. தொட்டால் சிணுங்கியாக நீங்கள் இருந்தால் உலகம் உங்களைப் பந்தாடும். எனவே, உலகை எதிர்கொள்வதற்குக் கீழே விழுந்தால் தானே எழுந்து நிற்கும் திறனும் உங்களுக்குத் தேவை. தலைமைப் பண்பை வளர்த்தால், இத்தகைய இயல்புகள் உங்களைத் தானே வந்தடைந்து வெற்றிக்கு இட்டுச் செல்லும்.
அத்தகைய தலைமைப் பண்பைப் பயிலத் தொடங்குவதற்கான மிகச் சிறந்த இடம் கல்வி நிலையம்தான். ஏனென்றால், வெளி உலகுடனான முதல் தொடர்பை நமக்கு அளிப்பது பள்ளிக்கூடமும் கல்லூரியும்தானே! அங்கே பாடத்தைப் படிப்பதோடு மட்டும் கற்றலை சுருக்கிக்கொள்ளக் கூடாது. பிற்காலத்தில், நாம் சந்திக்கப்போகும் சவால்களை எதிர்கொள்ளத் தேவைப்படும் தலைமைப் பண்பையும் அங்கே கற்றுப் பழகலாம். கீழே உள்ள எளிய வழிமுறைகள் அவற்றுக்கு உதவும்.

ஒழுக்கம் பழகுதல்

ஒழுக்கம் என்பது வெளியிலிருந்து நம் மீது திணிக்கப்படும் ஒன்றாக இருக்கக் கூடாது. அது எந்த நிர்ப்பந்தமுமின்றி நம்மிடமிருந்து வெளிப்படும், இயல்பாக மாற வேண்டும். சுலபமான பயிற்சிகள் மூலம் இது சாத்தியம். நேரம் தவறாமல் இருக்கப் பழகுதல், குறித்த நேரத்தில் தூங்கி எழுதல், ஆசிரியர் சொன்ன நேரத்துக்குள் படித்து முடித்தல், தினமும் சுத்தமான உடை அணிதல், நகங்களை ஒழுங்காக வெட்டுதல், தலைமுடியை ஒழுங்காகப் பேணுதல், தினமும் உடற்பயிற்சி செய்தல் ஆகியவை இந்த இயல்பைப் பலப்படுத்த உதவும்.

பொறுப்புகளை விரும்பி ஏற்கப் பழகுதல்

நிறைய பொறுப்புகளை விரும்பி ஏற்பது தலைமைப் பண்பை வளர்ப்பதற்கான சிறந்த வழிமுறை. படிப்பதற்கே நேரமில்லை, இதில் எங்கே கூடுதல் பொறுப்புகளை ஏற்பது என்று தோன்றலாம். இப்படி யோசித்துப் பாருங்கள், 100 மீட்டர் ஓடுவது என்பது இன்று உங்களுக்குச் சிரமமாகத் தோன்றலாம். ஆரம்ப நாட்களில் உசேன் போல்ட்டுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். ஆனால், அவர் அதையும் மீறி தன்னுடைய திறனைச் சவாலுக்கு அழைத்தார். அதனால்தான் அவரால் 100 மீட்டர் தூரத்தை 9.58 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைக்க முடிந்தது.

எனவே, உங்களுடைய ஆற்றலின் அளவு எல்லையற்றது என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். கூடுதலாகப் பொறுப்புகளை ஏற்க ஏற்க உங்களுடைய ஆற்றலின் அளவும் அதிகரிக்கும். பொறுப்புகளை விரும்பி ஏற்றுக்கொள்ளுங்கள். வகுப்புக்குத் தலைமை வகிப்பது, விளையாட்டு அணிகளில் பங்கேற்பது, சாரணர் அணியில் இணைவது, சமூக சேவையில் ஈடுபடுவது, வீட்டு நிர்வாகத்தை ஏற்கப் பழகுவது போன்றவை உங்களுடைய திறனை அதிகரிக்க உதவும்.

பின் செல்லப் பழகுதல்

கண்மூடித்தனமாக யாரையும் பின்பற்றுவது மடமை. ஆனால், சில விஷயங்களில் நம்மைவிடச் சிறந்தவர்கள் பலர் இருப்பார்கள். அவர்களை நாம் பின்பற்றிச் செல்லத் தயாராக இருப்பது நல்லது. அதை இழுக்கென்று எண்ணத் தேவை இல்லை. முக்கியமாக அவர்களைப் போட்டியாளராகக் கருதாமல் மதிப்பளித்து உரிய மரியாதையை அவர்களுக்கு அளித்துப் பழக வேண்டும்.

விழித்திருக்கப் பழகுதல்

சூழ்நிலையை முழுமையாக உணர்வதன் மூலம் பிரச்சினைகள் வரும் முன்னே அவற்றை ஊகிப்பவர் தலைவர் ஆகிறார். அதற்கு முதலாவதாக, எப்போதும் நம்முடைய சூழல் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். அதில் அவ்வப்போது வரும் பிரச்சினைகளையும் கவனிக்க வேண்டும். பின்பு அந்தப் பிரச்சினைகளையும் சூழலையும் பொருத்திப் பார்க்க வேண்டும். அவ்வாறு நேராமல் இருக்க ஏதும் வழியுண்டா என்று யோசிக்க வேண்டும். அந்த வழிமுறையை அடுத்த முறை பிரச்சினை வரும்முன்னே செயல்படுத்திப் பார்க்க வேண்டும். இதைப் பள்ளி, கல்லூரியில் மட்டுமில்லாமல் வீட்டிலும் செயல்படுத்திப் பழகலாம்.

பிறரை ஊக்குவித்தல்

தன் வேலையை மட்டும் சிறப்பாகச் செய்வது தலைவருக்கான அடையாளம் அல்ல. தன் குழுவினரின் தனித்துவத்தைக் கண்டறிந்து, அவர்களை ஊக்குவித்து, அவர்கள் ஆகச் சிறந்த திறனை வெளிப்படுத்தச் செய்வதுதான் தலைமைப் பொறுப்பை வகிப்பவரின் முக்கியப் பணி. எனவே, யாரையும் போட்டியாகக் கருதாதீர்கள். பொறாமைகொள்வதைத் தவிர்த்து அனைவரின் திறமைகளையும் அங்கீகரித்து ஊக்குவித்துப் பழகுங்கள். சில நேரங்களில் உங்களுடைய சிறிய ஊக்குவிப்பு அவர்களின் வாழ்க்கையையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டதாக இருக்கலாம். நீங்கள் ஏதேனும் ஒரு குழுவின் தலைவராக இருந்தால், உங்கள் அதிகாரத்தை மற்றவர்களுக்கும் பகிர்ந்து அளித்துப் பழகுங்கள். இது உங்கள் பணியை மட்டும் சுலபமாக்காது, அந்த நபரின் தன்னம்பிக்கையையும் பன்மடங்கு அதிகரிக்கும்.
பணி பிரம்மாக்கள்!

Published : 19 Dec 2017 10:44 IST
 
ம.சுசித்ரா



பயிலரங்கத்தில் பங்கேற்ற மாணவி

படித்த படிப்புக்கு உரிய வேலை கிடைப்பதில்லை. வேலைவாய்ப்பு சந்தையின் தேவைக்குக் கல்லூரியில் படித்த பாடம் ஈடுகொடுப்பதில்லை. கையில் பட்டம் வாங்கிய பிறகு கல்வி கற்பித்த நிறுவனத்துக்கும் நமக்கும் தொடர்பற்றுப் போய்விடுகிறது.

இவைதான் இந்தியாவில் தொழில்துறை படிப்புகள் முதற்கொண்டு வெவ்வேறு பாடப் பிரிவுகளைப் படித்த பெரும்பாலோரின் நிலை. ஆனால், அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம், மாசாசூசட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் போன்ற கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதோடு நின்றுவிடுவதில்லை. தங்களுடைய சிறந்த மாணவர்களுக்கு அக்கல்வி நிறுவனங்களே வேலை அளிப்பது மட்டுமல்லாமல் அவர்களுடைய புதிய தொழில் முயற்சிகளுக்கும், தொழில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கும் வாய்ப்பு வசதிகளைப் பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளேயே செய்துதருகின்றன.

தங்களிடம் படித்த மாணவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளைக் கல்வி நிறுவனங்களே உருவாக்கித் தரும் நிலை இந்தியா போன்ற நாட்டில் சாத்தியமா? டெல்லி, ஹைதராபாத், பெங்களூருவில் மட்டுமின்றி சென்னையிலும் சாத்தியம் என நிரூபித்துள்ளது சென்னை ஐ.ஐ.டி. தங்களுடைய முன்னாள் மாணவர்களுக்கு மட்டுமல்லாது மற்ற கல்வி நிறுவனங்களில் படித்த திறன்வாய்ந்த இளைஞர்களுக்கும் பணிவாழ்க்கையை உருவாக்கித் தந்துகொண்டிருக்கிறது இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் சென்னை ஆராய்ச்சி பூங்கா.

அசத்தும் ஸ்டார்ட் அப்

அழகிய பூங்காபோலக் காட்சி அளிக்கும் ஐ.ஐ.டி.எம். ரிசர்ச் பார்க்கில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தன்னம்பிக்கை மிளிர வேலைபார்த்துக்கொண்டிருக்கிறார்கள். டைட்டன், செயின்ட்கோபைன் உள்படப் பன்னாட்டு நிறுவனங்களின் ஆராய்ச்சிக் கூடங்களில் சிலர் இளம் ஆராய்ச்சியாளர்களாகப் பணிபுரிகின்றனர். அதைவிடவும் ஆச்சரியப்படுத்தும் விஷயம் தங்களுடைய சொந்த ஸ்டார்ட் அப்புகளை நிறுவியுள்ள இளம் சாதனையாளர்கள் இங்கு பலர் உள்ளனர். ஐ.ஐ.டி.யின் முன்னாள் மாணவர்கள் சிறிய குழுக்களாகப் பிரிந்து தொடங்கிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பல இங்கு செயல்பட்டுவருகின்றன.

இவர்கள் சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளைபோன்ற வழக்கமான வேலைகளைச் செய்யவில்லை. சூரியஒளி மின்சாரம் மூலமாக வாகனங்களை இயக்கும் ஆராய்ச்சி நிறுவனமான ‘Pibeam Labs’, வாகன நிறுத்தத்தைத் தானியங்கி அமைப்புக்குள் கொண்டுவரும் திட்டத்தை வடிவமைத்துவரும் ‘Wiitronics’ நிறுவனம், நீர் மேலாண்மையில் ஈடுபடும் ‘Green Environment’ என வித்தியாசமான பல நிறுவனங்கள் இங்குச் செயல்படுகின்றன. புதிய கண்டுபிடிப்புகள், அடுத்த தலைமுறையினருக்கான தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் எனப் படைப்பாற்றல் மிக்க வேலைகள் இங்குச் சத்தமில்லாமல் நடைபெற்றுவருகின்றன.

அவற்றில் குழந்தைகளின் படைப்பாற்றலை வளர்க்கும் மாற்றுக் கல்வி திட்டத்தை வடிவமைக்கும் ‘ஸ்கில் ஏஞ்சல்ஸ்’, பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ், எம்பெடட் சிஸ்டம், இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ், கம்ப்யூட்டர் விஷன் அண்ட் மிஷின் லேர்னிங் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பக் கல்வியை வழங்கும் ‘லேமா லாப்ஸ்’ போன்றவை கவனத்தை ஈர்க்கின்றன.


படைப்பாற்றல்மிக்க கற்றல் முறை

ரிசர்ச் பார்க்கின் முதல் மாடியில் இருந்த ஒரு அறையில் ‘ஸ்கில் ஏஞ்சல்ஸ்’ இயங்கிக்கொண்டிருக்கிறது. ஏழு, எட்டு இளைஞர்கள் தங்களுடைய கணினியில் ஏதோ வீடியோ கேம்ஸ் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த அறையின் நடுவில் மூன்றடி உயரத்தில் மஞ்சள் நிறத்தில் சிரித்த முகத்துடன் நின்றுகொண்டிருந்தது ‘எக்ஸ்புளோரா’ (‘Explora’) என்னும் அவர்கள் வடிவமைத்த ரோபோட்.

‘இவர்கள் யாரும் வேலை பார்க்கிற மாதிரித் தெரியலையே!’ என்கிற நம்முடைய மனவோட்டத்தைக் கணித்த அதன் நிறுவனர் சரவணன் சுந்தரமூர்த்தி, “இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை கணினி, தொலைக்காட்சி, மொபைல்ஃபோன் என ஏதோ ஒரு திரையைத்தான் அதிகப்படியான நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதில் வெறும் பார்வையாளர்களாக இருக்கிறார்களே தவிரப் பங்கேற்பாளராக இருப்பதில்லை.


இதை மாற்ற நாங்கள் ‘கேம் பேஸ்டு லேர்னிங்க்’ எனப்படும் விளையாட்டின் மூலமாகக் கற்பிக்கும்முறையில் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறோம். தொடக்கநிலை முதல் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள்வரை அவர்களுடைய நுண்ணறிவை கூர்மைப்படுத்த இது கைகொடுக்கும். அதேநேரத்தில் கற்றலைச் சுமையாக உணராமல் சுவாரசியமாக மாற்றும் முயற்சி இது.

வழக்கமான பாடங்கள் தவிர்த்துப் போட்டித் தேர்வுகளில் சோதிக்கப்படுவது பகுப்பாய்வுத் திறன். நினைவாற்றல், காட்சி நுண்ணறிவு, கணிதப் புதிர்களுக்குத் தீர்வு காணுதல், கவனக்குவிப்பு, மொழி ஆற்றல் போன்றவற்றை வளர்க்கும் விளையாட்டுகளை இங்கு வடிவமைத்துவருகிறோம். பன்னாட்டு நிறுவனங்களும் பணியாளர்களுக்கான தேர்வில் எங்களுடைய ‘கேம் பேஸ்ட் லேர்னிங்க்’-ஐ தற்போது பயன்படுத்துகிறார்கள். ஆக, பொழுதுபோக்கு என்கிற நிலையிலிருந்து படைப்பாற்றல்மிக்க கற்றல் முறை என்கிற புதிய அர்த்தத்தை நாங்கள் விளையாட்டுகளுக்குத் தந்துகொண்டிருக்கிறோம்” என்றார் உற்சாகமாக.

இயந்திரம் டூ எந்திரம்

அங்கிருந்து வெளியேறிக் கீழ்த்தளத்துக்கு வந்தால் ‘கெயிஜன் ரோபோட்டிக்ஸ் புரோகிராம்’ ஆங்காங்கே பரபரப்பாக நடந்துகொண்டிருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் உத்வேகத்தோடு குட்டி ரோபோட்களை இயக்கியபடி வகுப்பில் விரிவுரையாற்றிக்கொண்டிருந்த இளைஞர்களை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் கல்லூரி மாணவர்கள்கூட அல்ல என்பது பின்பு தெரியவந்தது. “குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நான் தற்போது சிங்கப்பூரில் ஃபிசியோதெரபிஸ்டாக இருக்கிறேன். கூடிய சீக்கிரம் மருத்துவத் தொழிலுக்கும் ரோபோட் தொழில்நுட்பம் அத்தியாவசியமாகிவிடும் என்பதால் இந்தப் பயிலரங்கம் குறித்துக் கேள்விப்பட்டு வந்தேன்” என்றார் தாரா. கோயம்புத்தூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராகப் பணிபுரிந்துவரும் அனிதா, “நான் தயாரிப்பு பிரிவில் வேலை பார்க்கிறேன். இன்று இயந்திர வடிவில் இருக்கும் பல பொருள்கள் விரைவில் எந்திர வடிவமாக மாறவிருப்பதால் இங்கு அடுத்தகட்டத் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ள வந்திருக்கிறேன்” என்றார்.

கண்டுபிடிப்புகளுக்கான இடம்

தனிக் குழுக்களாகப் பிரித்து இவர்களுக்கு ரோபோட்டிக்ஸ் வகுப்பு எடுத்த இளைஞர்களில் ஒருவரான பார்த்திபன், “நான் சாதாரண குடும்பச்சூழலில் இருந்து வந்தவன். என்னுடைய பெற்றோர் செங்கல் சூளையில் வேலை பார்த்துத்தான் அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.இ. எம்பெடட் டெக்னாலஜி வரைக்கும் என்னைப் படிக்கவைத்தார்கள். ஆனால், படித்துமுடித்த பிறகு ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்க விருப்பமில்லை. இன்று பொறியியல் படித்த பல இளைஞர்கள் அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அடுத்தகட்டத் தொழில்நுட்பக் கல்வியைக் கற்பித்து வழிநடத்தும் ஐ.ஐ.டி.யின் லேமா லேப்ஸில் 2012-ல் இணைந்தேன். இது புதிய படைப்பாற்றலுக்கான, கண்டுபிடிப்புகளுக்கான இடம்.


மாணவிகளுக்கு ரோபோட்டிக்ஸ் வகுப்பு எடுக்கும் பார்த்திபன்

இங்கு வாராவாரம் 40 மணி நேரத்துக்கு ரோபோட்டிக்ஸ் உட்படப் புதிய தலைமுறை தொழில்நுட்பங்களை செயல்முறை விளக்கத்தோடு கற்பிக்கிறோம். அதில் சேரும் மாணவர்களை 4 மாதங்களுக்குப் புதிய புராஜெக்ட்டுகள் மற்றும் சர்வதேசப் போட்டிகளுக்குத் தயார்படுத்துவோம். 10 ரோபோட்களை ஒவ்வொருவரும் தானாக உருவாக்கும் ஆற்றலை வழங்குவோம். இப்படி எங்களிடம் பயிற்சி பெற்ற பல இளைஞர்கள் ஐ.ஐ.டி. ரிசர்ச் பார்க்கில் உள்ள புதிய நிறுவனங்களில்கூடப் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இளைஞர்களுக்கு மட்டுமின்றிப் பள்ளி எட்டாம் வகுப்பு அதற்கு மேற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கும் குறைந்த கட்டணத்தில் பயிற்சி அளிக்கிறோம். டிசம்பர் 26 முதல் பள்ளி மாணவர்களுக்கான பயிலரங்கம் தொடங்கவிருக்கிறது. பள்ளிக்கூடங்கள் மூலமாக மட்டுமல்லாமல் நேரடியாகவும் lemalabs.com/register என்கிற இணையதளத்தில் பதிந்து இங்கு சேர்ந்து எதிர்காலத்தை எதிர்கொள்ள உங்களைத் தயார்படுத்திக்கொள்ளலாம்” என்கிறார்.

ஏதோ ஒரு பணியில் சேர நம்மைத் தயார்படுத்தும் கல்வி நிறுவனங்களுக்கு மத்தியில் புதிய பணிகளை உருவாக்கும் இளைஞர்களுக்கு தாய்மடியாகத் திகழும் இதுபோன்ற கல்வி நிறுவனங்கள்தான் இன்றைய அவசியத் தேவை.

Fake PAN, Aadhaar card racket busted in Uttar Pradesh's Shamli: Police

By PTI  |   Published: 24th December 2017 09:06 PM  |  
Last Updated: 24th December 2017 09:28 PM 
Image used for representational purpose only
MUZZAFARNAGAR: Police in Uttar Pradesh's Shamli district today claimed to have busted a gang which made fake Aadhaar and PAN cards with the arrest of one person.
The accused was arrested from a house in Khurgan village in Shamli's Kairana during a police raid yesterday, officials said.

A car, a laptop, a camera and a large number of fake Aadhaar and permanent account number (PAN) cards were seized from the accused, Javed, station house officer (SHO), Kairana police station, Bhagwat Singh said.

The SHO said two of Javed's accomplices managed to give police the slip during the action and a hunt has been launched for them.

Interrogation of the arrested accused was underway, Singh added.

Aadhaar is a 12 digit unique-identity number issued by the government to all residents based on their biometric and demographic data.
Reliance Jio introduces Happy New Year 2018 plan starting at Rs 199 

DECCAN CHRONICLE.

Published Dec 24, 2017, 3:06 pm IST

Under the new plans, users will get 1.2GB and 2GB 4G data respectively with a validity of 28 days.


As the telecom battle gets stiff, major service providers have started pushing dirt cheap offers, each passing day. Now Reliance Jio has introduced its Happy New Year 2018 offer with Rs 199 and Rs 299 prepaid recharges.

As the telecom battle gets stiff, major service providers have started pushing dirt cheap offers, each passing day. Now Reliance Jio has introduced its Happy New Year 2018 offer with Rs 199 and Rs 299 prepaid recharges.

Under the new plans, users will get 1.2GB and 2GB 4G data respectively. Both plans come with a validity of 28 days and are one of the cheapest in the category.

Jio subscribers will also be able to make free unlimited local, STD and roaming voice calls and SMS to any other operators. The offers also allow excess to Jio apps such as MyJio, JioChat, JioCinema, JioTV, JioMusic, JioXpressNews, JioMoney, and more.

Recently the company also announced to extend its triple cash back offer which was announced last month. This is the second time the company has extended the validity of the plan. Earlier, the expiry date was extended until December 15, but now users can avail the plan till December 25, 2017.

The special offer for the Prime customers includes triple cashback of up to Rs 2,599 on every recharge of Rs 399 or above.

Jio will give Rs 400 cashback in the form of eight vouchers of Rs 50. These vouchers can be used to deduct Rs 50 while purchasing future recharge packs on MyJio app or www.jio.com. Users cannot use multiple of these vouchers for a single recharge, meaning they will have to make eight recharges for utilising these vouchers completely.
200 scorpions rescued from hawker

Trichy: Representatives of Animal Welfare Board of India (AWBI) rescued 200 venomous scorpions, including a few black scorpions, from a hawker selling oil extracts for headache in Trichy on Sunday. The scorpions retrieved from the 60-year-old hawker were later let out into a suitable forest habitat near Kaatukeelakurichi.

According to AWBI sources, the board was informed about the hawker displaying scorpions on a road near Ponmalai Market to attract locals for selling oil extracts products. On information, AWBI members rushed to Ponmalai and found S Samsudeen of Kanda Nagar in Musiri with the scorpions.

For the past 30 years, Samsudeen had been selling oil extracts. “It seems, to attract people and also to project himself as a natural healer, the hawker displayed at least 200 scorpions including a few black scorpions in plastic boxes,” an AWBI member said. TNN
Dentist stabs friend to death at hotel 
 Had A Heated Exchange Of Words Over His Ex-Wife

TIMES NEWS NETWORK

Chennai: A dentist allegedly stabbed to death his friend, a 32-year-old call centre employee, at a beach side hotel in Mamallapuram on Saturday night after an argument turned ugly .

The deceased was identified as Sanjeev Raj, a native of Udumalaipet who was working in Guindy. Police arrested Senthil Raj, 42, a dentist working as a senior manager in a private firm at Ekkatuthangal and charged him with the murder.

Police said Senthil, a divorcee living with his son, was not happy with Sanjeev’s friendship with his former wife Surekha. Sanjeev was a colleague of Surekha.

Sanjeev along with 20 other friends had organised a Christmas party at the hotel. They came on Saturday morning and decided to leave on Sunday evening.

They booked five rooms to spend the weekend. Sanjeev also brought his dentist friend Senthil, from Guindy, to the party.

“While the women colleagues retired to their rooms after dinner at 10pm, the men gathered for drinks in a room,” said an investigating officer.

All of them began joking with each other, when Sanjeev, who had invited Surekha also to the party, confronted Senthil. A scuffle broke out when Senthil questioned him on his relationship with his ex-wife.

The others tried to pacify Senthil but in vain. In a fit of rage, Senthil took out a pen knife and stabbed Sanjeev.

The victim suffered serious injuries to his stomach and chest, police said. The frightened female members of the group vacated the hotel soon after the murder.

Senthil too fled the spot. He reportedly took a bus to Chennai. The other friends took the victim to a nearby private hospital where the doctors on duty declared him brought dead.

The Mamallapuram police registered a case and launched a hunt for the suspect. They sent the body of the victim to the Chengalpet government hospital for postmortem.

After an intense search, the police nabbed the dentist from a bus near Kovalam. He was booked on murder charges and later arrested.

Police sources said that Sanjeev was trying to patch up the discord between the estranged couple, which led to a heated exchange of words and culminated in the murder.

Police are questioning Senthil further in this connection. They are also interrogating the others who were present at the party on Saturday.



MURDERED: Sanjeev Raj

NEWS TODAY 29.01.2026