Tuesday, December 26, 2017


Study from home, earn 20% credits in PG at Madras Univ

Siddharth.Prabhakar @timesgroup.com

Chennai: From the next academic year, postgraduate students of University of Madras will have the option to earn 20% of credits by staying home and taking courses online.

The university’s syndicate on December 15 approved crucial changes in the choicebased credit system (CBCS) regulations to include massive open online courses (MOOCs) on portals like Swayam, National Programme on Technology Enhanced Learning (NPTEL) that the University approves. The university also plans to have a portal of its own. The CBCS regulations are being modified after 10 years.

Core, elective and softskill courses on these portals can be taken to earn credits, university vice-chancellor P Duraisamy said.

“We have asked our departments to come out with detailed guidelines on the online courses and the respective credits. The departments will consider the available MOOCs and choose the courses and credits based on the content and duration,” he said.

The process will first be tested in the university’s departments before being extended to affiliated colleges.

Postgraduate students have to earn 60 credits in core subjects, 21 in elective and 10 in soft-skill courses. Examination and evaluation of online courses will be specified at the beginning of the semester.

Another reform has been brought in the CBCS regulations with respect to core courses.

Departments and schools will have the freedom to prescribe core courses for more than 60 credits, which can be offered by any department across schools.

This means that students will get a choice on the type of specialised courses they want to study in a discipline and will also have the option of skipping some courses. This flexibility was not available till date.

“This would pave way for inter-departmental collaboration. At present, the process of selecting electives is rigid,” Duraisamy said.

An alumnus who passed out of the university recently said that professors often decided on students’ electives.

“There is pressure to choose an elective from within the department. The change in regulations will facilitate students to study subjects in other disciplines as well,” he said.

The modifications are a result of a brainstorming session the vice-chancellor recently had with heads of departments and the university’s centres.



Ragging in TN jumps 30%, Anna university 2nd in nat’l case count

Ram.Sundaram @timesgroup.com

Chennai: The number of ragging cases registered in Tamil Nadu increased by nearly 30% in the last three years.

Besides, Anna University, Asia’s largest technical institution, reported the second highest number of ragging incidents in the country from 2009 to 2017, with 166 cases registered by students from 532 affiliated colleges, according to a University Grants Commission (apex higher education regulator) report.

A ragging-related incident in Tamil Nadu in 1996, in which a Chidambaram medical college student was murdered, led to the passing of the first anti-ragging legislation in the country.

In Tamil Nadu, a state-level committee formed under the chairmanship of the governorchancellor in this regard recently claimed the practice had been completely eradicated.

Plaints mostly from colleges in rural areas

However, UGC records suggest there has been an increase in the number of ragging complaints received and cases registered, with the 43 case registered in 2017 being the highest in the last four years.

Complaints were predominantly from professional colleges affiliated to Anna University and Tamil Nadu Dr MGR Medical University, many of them in tier-II cities and rural areas.

The most recent incident of ragging was reported in Madras Medical College on September 19 and is still pending, say UGC sources.

Of the complainants, nearly 88% were men who were hosteliers.

In most cases, UGC sources say, calls to the college authorities from the helpline do not get prompt response. “This delay gives the perpetrators more time to flee.”

Concurring, the UGC report suggests that of the 3,300 complaints received across the country only 950 cases were registered. And, only 35% of the perpetrators in these cases were suspended or rusticated; others were let off with a warning or fine.

One in every three complaints filed with college authorities has been escalated to higher regulatory authorities since the complainant was not satisfied with the action taken by the colleges, some of whom even refuse minimum cooperation.

On the positive side, the number of affidavits filed by TN students promising to stop ragging is on the rise. A total of 11.57 lakh students from Tamil Nadu have filed affidavits in both online and offline mode in the last eight years.


கடன் பெற்றார் நெஞ்சம்!

By  முனைவர் ச. சுப்புரெத்தினம்  |   Published on : 26th December 2017 02:50 AM     
|  
கடன் வாங்குவது என்பது எவராலும் தவிர்க்கவியலாத ஒன்றுதான். சங்க கால முதலே மனிதன் பிறரிடம் கடன் வாங்கித் தனது தேவையை நிறைவேற்றிக் கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறான். ஒரு விவசாயி இன்னொரு விவசாயி வசம் தானியங்களைக் கடனாகப் பெற்று அவற்றை விதைத்து, விளைவித்து, அறுவடை செய்த பின் கடனைத் திரும்ப அடைத்திருக்கிறான்.
 அண்மையில் சில நாளிதழ்களில் தொடர்ச்சியாக வெளிவந்த தனியார் நிதி நிறுவனத்தின் தங்க நகை ஏல அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது. இரண்டு முழுப்பக்க அளவிற்கு அந்த விளம்பரங்கள் இருந்தன. அந்தக் கால எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி எண்களின் வெளியீடு போல் இருந்தன அவை.
 கேரளத்தில் தனது பதிவு அலுவலகத்தைக் கொண்டு இயங்கி வரும் ஒரு தனியார் நிறுவனத்தின் இந்த விளம்பரம், ஏலத்திற்கு வரப்போகும் நகைகளின் உடைமையாளர்களின் மனத்தில் நிச்சயம் கவலையை ஏற்படுத்தியிருக்கும்.
 தமிழகத்தில் மதுரை, திருச்சி மற்றும் தேனி மண்டல அலுவலகங்களுக்கு உட்பட்ட கிளைகளில், தங்களது நகைகளை அடமானம் வைத்து நகைக் கடன் பெற்று, கடன் முழுவதும் கட்டி முடிக்க வேண்டிய காலக்கெடு முடிந்தும், அவற்றை மீட்காதவர்களுக்கான அறிவிப்பாக அது இருந்தது.
 குறிப்பிட்ட அந்த ஏல அறிவிப்பு, நகைகளை அடகு வைத்துக் கடன் பெற்றவர்களின் பரிதாப நிலையை வெளிச்சமிட்டுக் காட்டுவதாக இருந்தது. அடுத்தடுத்த சில நாட்களிலேயே, கேரளத்தைப் பதிவிடமாகக் கொண்டு இயங்கி வரும் வேறிரண்டு இதே போன்ற நிதி நிறுவனங்களும் இத்தகைய தங்க நகை ஏல அறிவிப்பினைச் செய்தித்தாள்களில் வெளியிட்டிருந்தன.
 தனியார் துறையைச் சேர்ந்த அந் நிதி நிறுவனங்களுள் ஒன்றின் ஏல அறிவிப்பு மட்டும் இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. மேற்குறிப்பிட்ட அந் நிறுவனத்தின், தமிழகத்திலுள்ள 107 கிளைகளில் - அதாவது 107 ஊர்களில் வசிக்கும் பொதுமக்களால் தங்க நகைகள் அடகு வைக்கப்பட்டுக் கடன் பெறப்பட்டுள்ளது.
 தங்க நகை அடமானத்தின் பேரில் குறிப்பிட்ட அந் நிறுவனத்தில் மட்டும் கடன் பெற்றவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டியிருக்கும் என்பது ஒரு கணிப்பு. அவர்களுள், தாங்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தி, நகையை மீட்டவர்கள் போக, கடனைச் செலுத்தாமல் நகைகளை ஏலத்தின் மூலம் இழக்கப் போகும் எஞ்சிய கடனாளிகளின் அந்தப் பட்டியல்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 அலங்காநல்லூர், அருப்புக்கோட்டை என அகர வரிசையில் தொடங்கிய அக்கிளைகளின் பெயர்கள் விழுப்புரம், விராலிமலை என மொத்தம் 107 என்ற எண்ணிக்கையில் முடிவடைந்தன. இந்தக் கிளைகளின் மூலம் ஏலத்திற்கு வந்துள்ள நகை உரிமையாளர்களின் எண்ணிக்கை 9,258 ஆகும்.
 இவர்களுள் 12-இல் 1 பங்கு வாடிக்கையாளர்கள், திண்டுக்கல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியினர். அதாவது, 9,258 பேரில் 700 பேர் அப்பகுதியைச் சேர்ந்தவர்களாகி முதலிடத்தை வகிக்கின்றனர். 592 பேர் என்ற எண்ணிக்கையில் வேளாங்கண்ணி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியைச் சார்ந்தவர்கள் இரண்டாமிடம் பிடித்துள்ளனர். மூன்றாமிடத்தில் இருப்போர், சின்னமனூர் பகுதியைச் சேர்ந்தவர்களான 281 பேர்.
 இந்த நகை ஏல அறிவிப்பு என்பது, திடீரென்று கொடுக்கப்பட்ட அறிவிப்பு அல்ல. ஏற்கெனவே, நகைகளை மீட்டுக் கொள்வதற்கான காலக்கெடு முடிவடைந்த பிறகு, பதிவுத் தபால் மூலம் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே தெரிவித்தும், சில தபால் பட்டுவாடா ஆகாமலும், ஆக, பல வகையிலும் தெரிவித்தும் தம் நகைகளை மீட்டுச் செல்ல முன்வராத இறுதிக்கட்டத்தில்தான் இந்த ஏல அறிவிப்பு வந்துள்ளது.
 இந்த அறிவிப்பும் நகையை மீட்க இன்னொரு சந்தர்ப்பத்தையும் சில நாட்களுக்குக் கொடுத்து, "அதன் பின்னும் மீட்கத் தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தின் சில குறிப்பிட்ட கிளை அலுவலகத்தின் மூலம் ஏலம் விடப்படும்' என்று அந்த அறிவிப்பு கூறுகிறது.
 இதிலிருந்து ஒன்றை மட்டும் நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. கடன் வாங்கும் முன் இருக்கும் தவிப்பும், விறுவிறுப்பும், வேட்கையும் அக்கடனைத் திரும்பச் செலுத்தும் நிலையில் இருப்பதில்லை என்பதுதான் அது.
 இது, மக்களின் இயலாமை என்பதைவிட முயலாமை என்பதன் விளைவுதான்.
 இதுபற்றியே அந்தக் காலத்தில் வேடிக்கையாகப் பழமொழி ஒன்றைச் சொல்வார்கள். "கடனை வொடனை வாங்கி ஒடம்பத்தேத்து; கடங்கார(ன்) வந்து கேட்டா(ல்) ஒத்த வெரலைக் காட்டு' என்பதுதான் அது.
 இந்தியர்களின் வாழ்க்கையில் - குறிப்பாக, தமிழர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒன்று தங்க நகை என்பது.
 இந்தியாவில் ஆபரணத் தங்கத்தின் ஆண்டுக்கான தேவை சுமார் 400 டன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இத்தகைய நகையின் தேவை, கடன் தேவையைப் பூர்த்தி செய்யவும் இன்றியமையாததாகி விடுகிறது.
 தாம் அடகு வைத்துள்ள "அந்த நகைகள் மீட்கப்பட முடியாமல் போனாலென்ன? பிறகு எப்படியாவது சம்பாதித்து, வேறு புதிய நகைகளை வாங்கிக் கொள்ளலாம்' என்ற அலட்சிய மனப்பான்மைதான் இதற்குக் காரணம் எனலாம். குடும்பத்திலுள்ள பெரியவர்களின் இந்த மனப்பான்மை, அடுத்த தலைமுறையினருக்கும் வந்துவிடும் என்பதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
 மேற்குறித்த விளம்பரத்தின்படி, அதிக எண்ணிக்கையில் ஏலத்திற்கு வந்துள்ள நிதி நிறுவனக் கிளைகள் அமைந்துள்ள பகுதிகளைப் பார்க்கையில், அவை கல்வியிலும், தொழில் துறையிலும் பின்தங்கிய பகுதியாக இருக்க வேண்டுமென ஊகிக்க முடிகிறது.
 எல்லாவற்றிற்கும் மேலாக, இப் பகுதிகளில் நிறைய எண்ணிக்கையில் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிக் கிளைகள் அமையாததும், அதனால் தனியார் நிதி நிறுவனங்கள் தமது ஆதிக்கத்தை அங்குச் செலுத்துவதும்தான் காரணம் எனலாம்.
 1969-ஆம் ஆண்டு பல வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டன. தொடக்கக் காலங்களில் தங்க நகை அடகுக் கடன் அவ்வளவாகத் தரப்படவில்லை. ஆனால், இப்பொழுதெல்லாம் அனைத்து வங்கிகளின் எல்லா கிளைகளிலுமே தங்க நகை ஈட்டுக் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
 ஒரு கிராம் தங்க நகைக்கு எவ்வளவு ரூபாய் வரையில், எத்தனை சதவிகித வட்டியில் தரப்படுகிறது என்னும் விவரங்கள் வங்கியின் வாசல் மற்றும் பிற இடங்களிலும் விளம்பரப்படுத்தப்படுகின்றன.
 நாட்டுடைமை வங்கிகளில் வேளாண் நோக்கத்திற்கான கடன்களும் வழங்கப்படுகின்றன. கடன் வேண்டுபவரின் நிலம் தொடர்பான "சிட்டா'வின் அடையாளத்துடன் அணுகினால், 3 லட்ச ரூபாய் வரையில் 7% வட்டியில் தனியொருவருக்குத் தங்க நகை ஈட்டின் பேரில் கடன் வழங்கப்படுகிறது. "சிட்டா'வைச் சமர்ப்பிக்க இயலவில்லையெனில், ஒரு லட்ச ரூபாய் வரையில் கடன் பெறலாம்.
 தாம் வாங்கிய வேளாண் கடனை 11 மாதங்களில் எவ்வித நிலுவையுமின்றித் திரும்பச் செலுத்தி முடிப்போர்க்கு அரசால் 3% வட்டி மானியம் தரப்படுகிறது. ஆக, இதன் மூலம் இப்படிக் கடன் பெறுவோர்க்கான ஆண்டு வட்டி என்பது வெறும் 4% மட்டுமே. இதைவிடக் குறைந்த வட்டியில் வேறெங்கும் கடன் பெற இயலாது.
 இத்தகைய வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டால், தனியார் நிதி நிறுவனங்களில் நகைக் கடன் வாங்கித் தங்களின் நகைகள் ஏலத்தில் மூழ்கி விடுவதைத் தவிர்க்கலாம் என்பதை மக்கள் உணர வேண்டும்.
 அவ்வப்பொழுது கையில் கிடைக்கும் தொகையை வரவு வைத்து வட்டித் தொகையைக் குறைக்கலாம் என்ற விழிப்புணர்வும், செயல் வேகமும் பலரிடம் இருப்பதில்லை.
 மிக நீண்ட காலமாகக் கடனைத் திருப்பிச் செலுத்தாத 12 தனியார் நிறுவனங்களடங்கிய முதற் பட்டியலை சில மாதங்களுக்கு முன்னர் ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அந்த முதல் பட்டியலின்படி, மொத்த வாராக் கடன் 2,60,000 கோடி ரூபாய் ஆகும்.
 இத்தகைய வாராக் கடன்களை வசூலிப்பதில் வங்கிகள் வெற்றி பெற்றுவிட்டால், வங்கிகளின் கையிருப்புத் தொகையைக் கொண்டு ஏராளமான, நேர்மைமிக்க ஏழைகளுக்கும், தொழில் முனைவோர்க்கும் கடனளித்து, இத்தகையோர் தனியார் நிதி நிறுவனங்களிடம் அதிக வட்டிக்குக் கடன் பெறுவதை அரசு தடுத்து நிறுத்த முடியும்.
 நடுத்தர மக்களும், ஏழைகளும் பொருளாதார ரீதியில் துன்புறாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியது மாபெரும் வங்கிக் கட்டமைப்பினையுடைய ஒரு நல்ல அரசின் கடமையாகும். இலவசங்களைக் கொடுப்பதைவிட இது நல்ல பலனை அளிக்கும்.
 தனியார் நிதி நிறுவனங்களைவிட, நாட்டுடைமை வங்கிகளின் நம்பகத்தன்மை மிகுதி என்பதை மக்கள் அறிந்தே வைத்துள்ளனர். இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாதவர்கள்தாம் தனியார் நிதி நிறுவனங்களில் அதிகமான வட்டிக்குத் தங்க நகைக் கடன் மற்றும் இதர கடன்களைப் பெற்றுக் கடனில் மூழ்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
 ஏழைகள் பயன்பெறும் வகையில் ஆயிரம், இரண்டாயிரம், ஐயாயிரம் என்ற குறைந்தபட்சத் தொகைகளில் வங்கிகளில் கடன்கள் தரப்படுமானால் இந்தப் பரிதாப நிலை நீங்கும். அதற்கெனத் தனிக் கிளைகள் அல்லது பிரிவு தொடங்கப்பட வேண்டும்.
 கடன் வாங்குவது என்பது குடும்ப வாழ்க்கையில் தவிர்க்கவியலாத ஒன்றுதான் என்றாலும், தேவையற்றும், பகட்டுச் செலவினங்களுக்காகவும் கடன் வாங்கி - குறிப்பாக, அதிக வட்டிக்குத் தனியார் நிதி நிறுவனங்களில் தங்க நகைக் கடன் வாங்கித் துன்புறும் நிலையை நாமே வலிய உருவாக்கிக் கொள்ளக் கூடாது. கடன் பட்டார் நெஞ்சம் உறக்கத்திலும் அமைதி கொள்ளாது!

பிழைகள் மறைக்கப்பட வேண்டியவை அல்ல

By  இரா. கதிரவன்  |   Published on : 26th December 2017 02:51 AM 
 |
பிழைகள் எதுவுமே இல்லாமல் எந்தச் செயலையாவது செய்ய முடியுமா? ஒருவர் பல பணிகளைச் செய்யும்போது, ஏதேனும் சில பிழைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், பிழைகளை இழைத்துவிடுவோமோ என அஞ்சி, எந்தச் செயலையும் செய்யாமல் இருப்பதுதான் பெரும் பிழையாக அமையும்.
 தனி மனிதராக மட்டுமல்ல, பலர் இணைந்து செய்யும் செயல்களிலும் சரியான ஒருங்கிணைப்பு - கூட்டுமுயற்சி - ஒற்றுமை, இவற்றுள் ஏதேனும் குறைவேற்படும்போது, தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், கவனிக்கப் பட வேண்டிய விஷயம், தவறுகளில் இருந்து - பிழைகளில் இருந்து பாடம் - படிப்பினை கற்றுக் கொள்வதுதான்.
 இதற்கு "உள்ளதை உள்ளபடி' அங்கீகரிக்கும் பழக்கமும், இரண்டாவதாக, எந்தத் தவறையும் "மூடி மறைக்காமல்' இருக்கும் பழக்கமும் வேண்டும்.
 எந்த ஒரு விஷயத்தையும் மிகைப்படுத்தியோ அல்லது மட்டுப் படுத்தியோ கூறுவதன் மூலம் அல்லது அணுகுவதன் மூலம் நமக்கு நாமே எந்த நன்மையையும் செய்து கொள்ளப் போவதில்லை.
 மாறாக, ஒரு பிரச்னையின் வீரியத்தை அதிகப்படுத்தியோ - குறைத்தோ அணுகுவதால், அப்பிரச்னையை சரிவரக் கையாளும் வாய்ப்பைத் தவறவிடுகின்றோம்.
 இத்தகைய பழக்கத்தின் நீட்சியாக, சில விஷயங்களை மறைப்பது - அல்லது அங்கீகரிக்க மறுப்பது எனும் வழக்கமும் நம்மிடம் இருக்கிறது.
 தவறுகளை - பிழைகளை மூடி மறைக்காமல் ஒப்புக்கொள்ளும்போது - உள்ளதை உள்ளபடி பார்க்கும்போது, அவற்றிலிருந்து நாம் படிப்பினைகளைக் கற்றுக் கொள்ள முடியும்.
 பிழைகளை இழைப்பதனை விட, அவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாமல் இருப்பது பெரும் தவறாகும்.
 ஏவுகணைகளை விண்ணில் செலுத்தும்போது, விஞ்ஞானிகள் அதன் பாதையை - பயணத்தைத் தொடர்ந்து இடைவிடாது கண்காணித்து வருவார்கள்; அதன் பாதையில் திட்டமிடப்படாத சிறு மாறுதல்கள் ஏற்படும்போது அதனது பயணம் சரியான திசைக்கு மாற்றப்படும்; சற்று யோசியுங்கள், ஏவுகணை திசை மாறிச் செல்லுகிறது என்பதனை விஞ்ஞானிகள் குழு ஏற்க மறுத்தால் அல்லது மூடி மறைத்தால் என்னவாகும்?
 ஒரு பெரும் நிர்மாணப் பணியின் களநிலை குறித்த ஆய்வு நடத்தும்போது, அதில் ஏற்பட்டிருக்கும் தாமதத்தை, குறைபாடுகளை ஏற்க மறுத்தால் என்னவாகும்? பல கோடி பொருள் இழப்பும் - உழைப்பின் விரயமும் ஏற்படும்.
 பெரிய தனியார் நிறுவனங்கள் தங்களது நிர்மாணப் பணிகள் - கட்டுமானப் பணிகள் போன்றவற்றில் ஈடுபடும்போது, தவிர்க்கப் பட்டிருக்கக் கூடிய தவறுகள் சில நிகழ்வது உண்டு. அவற்றின் காரணமாக, பொருள் சேதம், பணமிழப்பு, கால விரயம் போன்றவை ஏற்படக் கூடும்.
 அந்நிறுவனங்கள், அவற்றை மூடி மறைக்காது, எந்தெந்தப் பணிகளில் இத்தகைய பொருள் சேதம் - கால விரயம் போன்றவை ஏற்பட்டன, அவற்றுக்கான காரணங்களாகக் கருதப்படுபவை யாவை, அத்தகைய தவறுகளை எவ்வாறு தவிர்த்திருக்க முடியும் என்பதனை, "தவறுகளில் இருந்து கற்றுக் கொண்ட படிப்பினைகள்' என்று ஆவணப் படுத்தி, நிறுவனத்தின் பல்வேறு தளங்களிலும் பகிர்ந்து கொள்வார்கள்.
 இதன் மூலம், பிறரும் இத்தகைய தவறுகளை இழைக்காமல் இருப்பதனை உறுதி செய்வார்கள்.
 தனது தவறுகளில் இருந்து பாடம் கற்பதனைவிட, பிறரது தவறுகளில் இருந்து பாடம் கற்பது என்பது மேலும் சிறந்தது ஆகும். எனவே, தவறுகளைத் தாமாக உணராவிட்டால், பிறர் சுட்டிக் காட்டும்போதாவது உணர வேண்டும்.
 இதனை நமது அரசு - நிர்வாக இயந்திரம் ஆகியவற்றோடு கூட பொருத்திப் பார்க்கலாம். பெரும் விபத்து, பேரிடர் குறித்த விவரங்கள், திடீர் நோய் பரவல் குறித்த விவரங்கள் போன்றவற்றை அரசு உடனடியாக, வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும். வெளிப்படையான அணுகுமுறை என்பது அரசு - பெரு நிறுவனங்கள் - பொதுமக்கள் ஆகியோருக்கும் பொருந்தும்.
 ஒவ்வொரு குடும்பத்துக்கும் - ஒவ்வொரு பெற்றோருக்குமான செய்தி இதில் அடங்கியிருக்கிறது.
 குழந்தைகள் தங்களது தவறுகளை உணர, மூடி மறைக்காது இருக்க, அவற்றுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ள, தயக்கமின்றி அவை குறித்து பேசிப் பரிசீலிக்க, தவறுகளில் இருந்து பாடம் கற்று கொள்ள, மறுபடியும் அத்தகைய தவறுகளை இழைக்காமல் தவிர்க்க நாம் பழக்கப்படுத்த வேண்டும்.
 பெற்றோர்கள் - ஆசிரியர்கள் ஆகியோர் இளைய தலைமுறையினரை இதற்குப் பழக்க வேண்டும். இளைய தலைமுறையினருக்குப் பெரியோர் முன்னுதாரணமாகவும் இருக்க வேண்டும்.
 தவறுகளை உணரும் பழக்கமும் தங்களது தவறுகளைத் திருத்திக் கொள்ள வாய்ப்புகள் தரப்படும் எனும் உணர்வும் குழந்தைகளுக்கும் பதின்பருவத்தில் இருப்பவர்களுக்கும் மேலும் நேர்மையையும் - தன்னம்பிக்கையையும் தரும்.
 ஒவ்வொரு குழந்தைக்கும் நாம் சொல்லித் தர வேண்டிய இன்றியமையாச் செய்திகளுள் ஒன்று, "பிழைகள் தவிர்க்கப்படவேண்டியவை மட்டுமே - மறைக்கப்படவேண்டியவை அல்ல' என்பதாகும்.
 
அ.தி.மு.க.,வில் தினகரன் ஆதரவு மா.செ.,க்கள் 6 பேர் பதவி பறிப்பு!
அ.தி.மு.க.,வில் தினகரன் ஆதரவு, மாவட்ட செயலர்கள், ஆறு பேரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது ஆதரவாளர்களாக உள்ள புகழேந்தி, சி.ஆர்.சரஸ்வதி, சம்பத் ஆகியோர், கட்சியில் இருந்தே நீக்கப்பட்டுள்ளனர். முதல்வர், பழனிசாமி, துணை முதல்வர், பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின், இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.




அ.தி.மு.க.,வில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தினகரன், தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு ஆதரவு அளித்த, 18 எம்.எல்.ஏ.,க்களின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், சுயேச்சையாக களமிறங்கிய, தினகரன், 40 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில், வெற்றி பெற்றுள்ளார். ஆளும் கட்சியாக இருப்பதாலும், இரட்டை இலை சின்னம் இருப்பதாலும், எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்ற, அ.தி.மு.க.,வின் கணக்கை முறியடித்துள்ளார்.

அமைதி காத்ததன் விளைவு

இதற்கு முக்கிய காரணம், மாவட்ட செயலர், பகுதி செயலர், வட்ட செயலர் போன்றோர், தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டது தான். இவர்கள், அ.தி.மு.க., பதவிகளில் இருந்த போதிலும், தினகரனுக்கு ஆதரவாக, பகிரங்கமாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களை நீக்காமல், அமைதி காத்ததன் விளைவு, ஆளும் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது.

இந்நிலையில், இடைத்தேர்தல் தோல்வி


குறித்து ஆராய்வதற்காக, சென்னையில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், அமைச்சர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகள் கூட்டம், நேற்று நடந்தது. கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

கட்சியின் அடிப்படை உறுப்பினர்

கூட்டத்தில், தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் நிர்வாகிகள் மீது, நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது. முதல் கட்டமாக, தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால், எம்.எல்.ஏ., பதவியிலிருந்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட, வட சென்னை வடக்கு - வெற்றிவேல், வேலுார் கிழக்கு - பார்த்திபன், தஞ்சாவூர் வடக்கு - ரெங்கசாமி, தேனி - தங்க தமிழ்செல்வன் ஆகியோர், மாவட்ட செயலர் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர்.

தினகரனுக்கு ஆதரவாக, தேர்தல் பணியாற்றிய, தென் சென்னை வடக்கு மாவட்ட செயலர், கலைராஜன்; திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயலர், பாப்புலர் முத்தையா, கர்நாடக மாநில செயலர், புகழேந்தி, செய்தி தொடர்புக்குழு உறுப்பினர், சம்பத், மகளிர் அணி துணைச் செயலர், சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட, அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, தினகரனுக்கு ஆதரவாக உள்ள, அனைத்து நிர்வாகிகளையும், படிப்படியாக நீக்கிவிட்டு, அப்பதவிகளில், புதிய நிர்வாகிகளை நியமிக்க, முடிவு செய்துள்ளனர்.

மகளிர் அணி கோஷம்

அ.தி.மு.க.,தலைமை அலுவலகத்தில், ஆலோசனைக் கூட்டம் நடப்பதை அறிந்து, மகளிர் அணி

நிர்வாகிகள் பலர், கட்சி அலுவலகம் வந்தனர். அவர்கள், அலுவலகத்திற்கு வெளியில் நின்று, 'தோல்விக்கு காரணமான, துரோகிகளை கட்சியிலிருந்து நீக்க வேண்டும். 'ஸ்லீப்பர் செல்'களை துாக்கி எறிய வேண்டும். ஜெ., வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மற்றும் தினகரனை கைது செய்ய வேண்டும்' என, கோஷமிட்டனர்.

சிலர், முதல்வரையும் வசைபாடினர். 'போலீசை கையில் வைத்திருந்தும், தினகரன் பணம் கொடுப்பதை தடுக்காமல் விட்டு விட்டார்' என, குற்றம் சாட்டினர். மதுசூதனன் வந்தபோது, 'தோற்றதற்காக கலங்க வேண்டாம்; நாங்கள் இருக்கிறோம்' என்றனர். அதை கேட்டதும், மதுசூதனன் கண் கலங்கினார்.

ஐந்து மந்திரிகள் 'ஆப்சென்ட்!'

வனத்துறை அமைச்சர், சீனிவாசன், செய்தித்துறை அமைச்சர், ராஜு, வணிக வரித்துறை அமைச்சர், வீரமணி, பால் வளத்துறை அமைச்சர், ராஜேந்திர பாலாஜி, கதர் துறை அமைச்சர், பாஸ்கரன் ஆகியோர் வரவில்லை. அரசு விழா உள்ளிட்ட பல்வேறு பணி காரணமாக, அவர்கள் வரவில்லை என, காரணம் கூறப்பட்டது.

எம்.எல்.ஏ.,க்கள் நீக்கமில்லை!

தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட, வெற்றிவேல், பார்த்திபன், ரெங்கசாமி, தங்கதமிழ்செல்வன் ஆகியோரிடமிருந்த, மாவட்ட செயலர் பதவி மட்டும் பறிக்கப்பட்டுள்ளது. அவர்கள், எம்.எல்.ஏ., பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதன் காரணமாக, அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படவில்லை. கட்சி பொறுப்பிலிருந்து மட்டும் நீக்கப்பட்டுள்ளனர்

- நமது நிருபர் -
மாணவியின் கனவு நிறைவேற காரில் அமர வைத்த கலெக்டர்!

Added : டிச 25, 2017 22:38 |



செய்யாறு: அதிக மதிப்பெண் எடுத்த மாணவியின் கனவை நிறைவேற்றும் வகையில், தன் காரின் இருக்கையில் அமர வைத்து, 'நீயும் என்னைப்போல் கலெக்டராக வேண்டும்' என, கலெக்டர் கந்தசாமி ஊக்கப்படுத்தினார்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சிப்காட்டில், அரசு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவியருக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் நடந்தது.

பாராட்டு

மாணவ - -மாணவியருக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்கி கலெக்டர் கந்தசாமி பாராட்டினார்.அப்போது, செய்யாறு அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 படிக்கும் மாணவி மோனிஷா, கடந்த, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 491 மதிப்பெண் பெற்றதால், அவருக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசை கலெக்டர் வழங்கி பாராட்டினார். அப்போது கலெக்டரிடம் மோனிஷா, ''நானும் உங்களைப்போல் கலெக்டராக வேண்டும்; அதுதான் என் லட்சியம்,'' என்றார்.

இதை கேட்ட கலெக்டர், பரிசளிப்பு விழா முடிந்ததும், மாணவி மோனிஷாவை அழைத்து, தன் சைரன் பொருத்திய அரசு காரில், தான் உட்காரும் இடத்தில் அமர வைத்து, அருகில் கலெக்டர் நின்று போட்டோ எடுத்துக் கொண்டார்.

நெகிழ்ச்சி

அந்த புகைப்படத்தை மாணவியிடம் காண்பித்து, 'இதை பார்க்கும்போது, நீயும் என்னைப்போல் கலெக்டராக வேண்டும் என்ற எண்ணம் உன்னுடைய மனதில் உதிக்க வேண்டும்' என்று கூறி, ஊக்கப்படுத்தினார்.

மேலும் அவர் கூறுகையில், ''நானும் உன்னைப்போல் அரசு பள்ளியில் படித்துத் தான், கலெக்டர் பதவியை வகித்து வருகிறேன்,'' என்றார். கலெக்டரின் இந்த செயல்பாடு, மாணவியை நெகிழ்ச்சியடைய செய்தது.
ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு: பணமா, பொருளா?

ரேஷன் கடைகளில், பொங்கலை முன்னிட்டு, தலா, ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரையுடன், 100 ரூபாய் ரொக்கம் அல்லது முந்திரி, திராட்சை, ஏலம் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பாக, அரசு ஆலோசித்து வருகிறது.





தமிழக ரேஷன் கடைகளில், 2017 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தலா, ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை; தலா, 20 கிராம் முந்திரி, திராட்சை; ஐந்து கிராம் ஏலம்; இரண்டு அடி கரும்பு துண்டு ஆகியவை வழங்கப்பட்டன. இவை, அரிசி கார்டுதாரர், காவலர்கள், முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர்கள் என, 1.80 கோடி ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்பட்டன. இதற்காக, தமிழக அரசு, 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.

பணமா, பொருளா?

இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தி.மு.க.,ஆட்சியில், பொங்கலுக்கு, பச்சரிசி, வெல்லம், ஏலம், முந்திரி, திராட்சை ஆகியவை அடங்கிய, பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. பின், முதல்வரான ஜெயலலிதா, ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இரண்டு அடி கரும்பு மற்றும், 100 ரூபாய் ரொக்கம் வழங்கினார். அவர் மறைவால், ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார்.

அந்த சமயத்தில், செல்லாத நோட்டு அறிவிப்பால், 100 ரூபாய் நோட்டுக்கு தட்டுப்பாடும் நிலவியது. ஏற்கனவே, அரசும், நிதி நெருக்கடியில் இருந்ததால், இந்த ஆண்டு பொங்கலுக்கு, பச்சரிசி, சர்க்கரை உடன், 100ரூபாய் ரொக்கத்திற்கு பதில், முந்திரி, திராட்சை, ஏலம், கரும்பு துண்டு வழங்கப்பட்டன.

ஒரு வாரத்திற்குள் இறுதி முடிவு

வரும் பொங்கலுக்கும் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அதில், 100 ரூபாய்

ரொக்கமா அல்லது பரிசு பொருட்களா என்பது குறித்து, நிதித்துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், 100 ரூபாய்க்கு பதில், ஏற்கனவே வழங்கியது போல்,

முந்திரி, திராட்சை, ஏலம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கவே வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக, ஒரு வாரத்திற்குள் இறுதி முடிவு எடுத்து, அரசிடம் ஒப்புதல் பெறப்படும். அப்போது தான், ஜனவரி துவங்கியதும், 10 நாட்களுக்குள் அனைவருக்கும் வினியோகிக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

NEWS TODAY 29.01.2026