Sunday, December 31, 2017

எனக்கு ஏற்பட்ட அவமானங்களும் வேதனைகளும் சொல்லில் அடங்காதவை: தங்கர் பச்சான் வருத்தம்!

By DIN | Published on : 30th December 2017 01:05 PM

பல ஆண்டுகளுக்கு முன்பே இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கிய படம் - களவாடிய பொழுதுகள். பிரபு தேவா, பூமிகா, பிரகாஷ் ராஜ் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - பரத்வாஜ். ஐங்கரன் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

வெளியீட்டுச் சிக்கல்களால் முடங்கிக் கிடந்த படம் நேற்று வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இயக்குநர் தங்கர் பச்சான் ஃபேஸ்புக்கில் எழுதியதாவது:

இன்று எனக்கு விடுதலை! என்னால் இதை நம்ப முடியவில்லை!! விடுதலை இதோ கிடைத்துவிடும், இதோ கிடைத்துவிடும் என பலமுறை எதிர்பார்த்து ஏமார்ந்து போனதால் இந்த உண்மையை ஏற்க மனம் தயங்குகிறது.

என்ன குற்றம் செய்தேன்? எதற்காக சிறை படுத்தப்பட்டேன் என்பது எனக்குத் தெரியவில்லை! எப்படியாவது சிறையை உடைத்துக் கொண்டு வெளியேறி விடலாம் என எல்லா திசைகளிலும் முட்டி மோதிப் பார்த்ததால் முழு உடலும் கண்ணிப்போயிருக்கிறது. இரத்தக்கட்டுகளால் உறைந்து கிடக்கிறது.

இதுவரை நான் பணியாற்றிய எல்லாப் படங்களிலும் உழைத்த உழைப்பை எல்லாம் சேர்த்து இந்த ஒரு படத்தில் மட்டும் செலுத்தியிருக்கிறேன். அதற்காக இன்று வரை எனக்கு ஏற்பட்ட அவமானங்களும், சோதனைகளும், வேதனைகளும் சொல்லில் அடங்காதவை.

கருவை உருவாக்கி அதைக் கதையாக்கி பின் அதற்கு திரைக்கதை அமைத்து ஒவ்வொரு தயரிப்பாளராகத் தேடித் பிடித்து, ஒவ்வொரு நடிகரையும் சந்திக்க அலைந்து ஒரு வழியாக அவர்களைப் பிடித்து படப்பிடிப்பு தொடங்குவதே, மக்களின் வாழ்விலிருந்தே படைப்புக்களை உருவாக்கும் என் போன்றவர்களுக்கு பெரும் போராட்டம் தான்.

“களவாடிய பொழுதுகள்” திரைப்படத்தை திரைக்குக் கொண்டு வர நான் மேற்கொண்ட ஒவ்வொரு முயற்சிகளும், சந்தித்த சம்பவங்களும், மீண்டும் நினைக்க விரும்பாத மனிதர்களும், வெளியில் காண்பித்துக்கொள்ளாத அவமானங்களும் பட்டியலிட முடியாதவைகள்.

திரைப்படக்கலையின் மூலம் எதையாவது இந்த மக்களுக்கு சொல்லலாம் என நினைத்துத்தான் இந்தத் துறைக்கு வந்தேன். பணம் மட்டுமே போதும் என நினைத்திருந்தால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஆண்டுக்கு இரண்டு படங்களை எடுத்து பெரும் பணக்காரனாக மாறியிருப்பேன்! எப்படியாவது வாழ்ந்தால் போதும் என நினைக்காமல் இப்படித்தான் வாழ வேண்டும் என நினைப்பதால்தான் ஒவ்வொரு படைப்புக்காகவும் தொடர்ந்து முதல் படம் போலவே உழைத்து போராடிக் கொண்டிருக்கிறேன்.

ஒவ்வொரு மனதோடும் சென்று அவர்களோடு உரையாட வேண்டிய இப்படத்தின் கதைப் பாத்திரங்கள் உயிரற்றவர்களாக கிடந்தார்கள்! இனி உங்கள் மனதோடு அவர்கள் பேசுவார்கள். அவர்களின் நினைவுகள் சில நாட்களுக்கு உங்களை தொந்தரவு செய்து கொண்டே இருக்கும்! படம் பார்த்த பின் எத்தனைப்பேர் ஒருவருக்கும் தெரியாமல் யார் யாரைத்தேடி அலைவார்கள், சந்திக்க முயல்வார்கள், கைப்பேசியில் பேச முயல்வார்கள், தனிமையில் அழுவார்கள் என்பதெல்லாம் நடக்கத்தான் போகிறது.



நான் சிறைப்படுத்தப்பட்ட இத்தனைக் காலங்கள் எல்லாவற்றையும் எனக்குள்ளேயே புதைத்து அழித்துக்கொள்ள முயல்கிறேன்! அதற்காக முயன்று கொண்டிருக்கிறேன்!

எது எப்படியோ எனக்கு விடுதலை கிடைத்து விட்டது. நான் கூறியபடி என் பொற்செழியனும், ஜெயந்தியும் உங்கள் மனதோடு இனி பேசுவார்கள்; தொந்தரவு செய்வார்கள்! அப்போது என்னைத்திட்டுங்கள். அதுதான் செய்யாத குற்றத்திற்கு தண்டனை பெற்றதற்காக எனக்கு நீங்களெல்லாம் அளிக்கும் ஆறுதல் என்று எழுதியுள்ளார்.

சென்னையில் வசிக்கும் முதியோருக்கே இலவசப் பேருந்து பயணச்சீட்டு

By  சென்னை,  |   Published on : 31st December 2017 02:14 AM 
Buspass
சென்னையில் வசிக்கும் முதியோருக்கு மட்டுமே இலவச பேருந்துப் பயணச்சீட்டு வழங்கப்படும் என சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறினர்.
 சென்னை மாநகர போக்குவரத்துக் கழக குளிர் சாதன வசதிகள் இல்லாத அனைத்து பேருந்துகளிலும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்துப் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. இதில், மாதந்தோறும் ஒருவருக்கு 10 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. மாநகரப் பேருந்து நடத்துநரிடம், இந்த டோக்கன்களை கொடுத்து, கட்டணம் இல்லாமல் தாங்கள் விரும்பும் இடத்துக்கு முதியோர் பயணம் செய்யலாம். இந்த திட்டத்தால் சென்னையில் 1.93 லட்சத்திற்கும் மேற்பட்ட முதியோர் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் ஆவடி, பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முதியோருக்கு பயணச்சீட்டு வழங்கப்படவில்லை என புகார் எழுந்தது. இதன் காரணமாக அந்தப் பகுதியைச் சேர்ந்து முதியோர்கள் அவதியடைந்து வருகின்றனர்.


 அதேபோல அடையாறு, பெசன்ட்நகர், கிண்டி போன்ற பகுதிகளில் உள்ள மாதாந்திர பயணச்சீட்டு வழங்கும் கவுன்ட்டர்களில் இலவச பேருந்துப் பயணச்சீட்டை வாங்குவதற்காக முதியோர்கள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருப்பதால் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.


 மாதத்தின் கடைசி 10 நாட்களில் மட்டும் தான் முதியோருக்கான இலவசப் பேருந்து பயணச்சீட்டுகள் வழங்குவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனால், அந்த குறிப்பிட்ட நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதை தவிர்ப்பதற்காக மாதம் முழுவதும் இத்தகைய பேருந்துப் பயணச்சீட்டுக்களை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதியோர்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன.


 இது குறித்து விளக்கமளித்து மாநகரப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியது:
 சென்னை மாநகராட்சி மற்றும் அதன் எல்லைப் பகுதியில் வசிக்கும் முதியோருக்கு மட்டுமே இலவச பேருந்துப் பயணச்சீட்டு வழங்கப்படும். இத்திட்டத்தில் முதியவர் ஒருவருக்கு 3 மாதத்துக்கான 30 டோக்கன்கள் வழங்கப்படும். அந்தப் பயணச்சீட்டை குறிப்பிட்ட மாதத்துக்கு அந்தப் பயனாளி பயன்படுத்திக்கொள்ளலாம். பயணச்சீட்டுகள் காலாவதியாகும் ஒரு வாரத்துக்குள் அடுத்த காலாண்டுக்கான பயணச்சீட்டு டோக்கன்களை அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆண்டு முழுவதும் எந்தவித காலக்கெடுவும் வைக்காமல் மாதத்தில் அனைத்து வேலை நாட்களிலும் இந்தப் பயணச்சீட்டு வழங்கப்படும். கல்லூரி மாணவர்களுக்கான பயண அட்டை, வேலைக்குச் செல்வோருக்கான மாதாந்திர பயண அட்டை என பல்வேறு பயண அட்டைகளை வழங்கி வருகிறோம். ஆனால் இலவசப் பயணச்சீட்டைப் பயன்படுத்தும் முதியோர்கள், அதை பெறுவதற்கு கடைசி மூன்று நாட்களில் அதிகமாக வருகின்றனர். அதேவேளையில் இந்த நாள்களில் ஒரு நாளைக்கு குறைந்தது மாதாந்திர மற்றும் இலவச பயணச்சீட்டு பெறுவதற்கு பயணச்சீட்டு கவுன்ட்டர்களுக்கு 900 பேர் வருகின்றனர். இதனால் நீண்ட வரிசையில் முதியோர் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு முதியோர்கள், ஒவ்வொரு காலாண்டின் கடைசி மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து அடுத்த காலாண்டுக்குரிய 30 டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம்.

கொள்கையாவது கோட்பாடாவது...!

By ஆசிரியர்  |   Published on : 30th December 2017 01:34 AM  | 

ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவரும் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான இன்னொரு வழக்கிலும் சிறைத்தண்டனை பெற்றிருக்கிறார். லாலு பிரசாதைப் பொருத்தவரை, ராஞ்சியில் உள்ள பிர்ஸா முண்டா சிறைச்சாலை அவருக்குப் புதியதொன்றுமல்ல. மூன்றாவது முறையாக அவர் இந்தச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

1997-இல் பூதாகரமாக வெடித்த மாட்டுத் தீவன ஊழலில் லாலு பிரசாத் மீது ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த ஊழலின் பின்னணியில்தான் அவர் 1997-இல் முதல்வர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது.


மாட்டுத் தீவனம் வாங்கியதாகப் பொய்க்கணக்கு எழுதி அரசுக் கருவூலத்திலிருந்து பணத்தை மடைமாற்றம் செய்தார்கள் என்பதுதான் குற்றச்சாட்டு. 2013-இல் சாய்பாஸா மாவட்ட அரசுக் கருவூலத்திலிருந்து ரூ.37 கோடி பணம் முறைகேடாக எடுக்கப்பட்ட வழக்கில் அவருக்கு ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. அதன் காரணமாக, தேர்தலில் போட்டியிடும் தகுதியை அவர் இழந்திருக்கிறார். அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அவரை பிணையில் விடுவித்தது என்றாலும்கூட மேல்முறையீட்டில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை.
அவர்மீது தொடரப்பட்டிருக்கும் ஆறு வழக்குகளில் இரண்டாவது வழக்கிலும் இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தேவ்கர் அரசுக் கருவூலத்திலிருந்து 1994 - 1996-க்கு இடைப்பட்ட இரண்டாண்டுகளில் ரூ.84.50 லட்சம் முறைகேடாகப் பணம் மடைமாற்றப்பட்ட வழக்கில் சிபிஐ நீதிமன்றம் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்திருக்கிறது. தண்டனை இன்னும் அறிவிக்கப்படவில்லை. பிகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் இன்னும் இதேபோன்ற நான்கு வழக்குகளில் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றன.
இந்திய குற்றவியல் சட்டத்தின்படி ஒரே குற்றத்திற்காக ஒருவரை இரண்டு முறை தண்டிக்க முடியாது. இந்தச் சட்டப்பிரிவைக் காரணம் காட்டி, வெவ்வேறு அரசுக் கருவூலங்களிலிருந்து முறைகேடாகப் பணம் பெற்றதற்காகத் தண்டிக்கப்படுவது, தனக்கு அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் பாதுகாப்புக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றத்தில் லாலு பிரசாத் வாதிட்டுப் பார்த்தார். ஆனால், உச்ச நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. ஒரேமாதிரியான வழக்காக இருந்தாலும், கையாண்ட வழிமுறை ஒன்றாகவே இருந்தாலும் அவை வெவ்வேறு பரிமாற்றங்கள் தொடர்பானவை என்பதால் அவரது வாதத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. அதனால் இனி உள்ள நான்கு வழக்குகளிலும்கூட அவர் தண்டனை பெறக்கூடும்.
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டது எந்தவித அதிர்ச்சியையோ ஆச்சரியத்தையோ ஏற்படுத்தவில்லை. ஏற்கெனவே ஒரு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டிருப்பதால் ஏனைய வழக்குகளிலும் வேறுவிதமான தீர்ப்பு வழங்கப்படும் என்று யாரும் கருதவில்லை. அதேநேரத்தில், வியப்பும் வேதனையும் ஏற்படுத்துவதெல்லாம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காலஅவகாசம்.


1997-இல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து 20 ஆண்டுகள் கடந்து தீர்ப்பு வழங்கப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டு லாலு பிரசாத் தனது முதல்வர் பதவியைத் துறந்து இப்போது தண்டிக்கப்பட்டிருக்கும் கால இடைவெளியில் ஒரு தலைமுறையே மாறிவிட்டிருக்கிறது. இந்தியாவின் நீதி பரிபாலன முறையில் காணப்படும் இந்த ஆமை வேகமும் மெத்தனமும்தான் இந்திய ஜனநாயக அமைப்பின்மீதான நம்பிக்கையைச் சிதைக்கிறது.
இப்போது நாடாளுமன்ற-சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான கிரிமினல் குற்றச்சாட்டு வழக்குகளை உடனடியாக விசாரித்துத் தீர்ப்பு வழங்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய அரசு ஒத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அமைச்சர்கள் மீதும் பொறுப்பான பதவிகளை வகிக்கும் அதிகாரிகள் மீதும் எழுப்பப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் அல்லது முறைகேடுகளை விசாரிப்பதிலான தாமதத்தைக் குறைப்பதற்கு இதுவரை எந்தவித முயற்சியும் எடுக்கப்படவில்லை.


தேவையில்லாத நடைமுறைகள், இழுத்தடிக்கப்படும் வழக்கு விசாரணை, போதுமான ஊழியர்கள் இல்லாததால் நீதிமன்றங்களின் செயல்பாட்டுக் குறைவு ஆகியவை சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் நீதித்துறையின் செயல்பாடுகளைத் தடம் புரள வைத்து விடுகின்றன. இதெல்லாம் நமது ஆட்சியாளர்களுக்குத் தெரியாததல்ல. ஆனாலும்கூட, அதை மாற்றியமைக்கவோ இதற்குத் தீர்வு காணவோ அவர்கள் யாருமே தயாராக இல்லை.
ஓம்பிரகாஷ் சௌதாலா, ஜெயலலிதா, லாலு பிரசாத் என்று பல முதல்வர்களும் கட்சித் தலைவர்களும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றிருக்கிறார்கள். ஊழல் நிரூபிக்கப்பட்டும்கூட எந்த ஓர் அரசியல் தலைவரின் செல்வாக்கிலும் சரிவு ஏற்பட்டதாகவோ வருங்காலம் பாதிக்கப்பட்டதாகவோ தெரியவில்லை. கிரிமினல் குற்றவாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவதும், அவர்கள் தலைமையில் அரசியல் கட்சிகள் இயங்குவதும் விசித்திரமாக இருக்கிறது.


லாலு பிரசாதைப் பொருத்தவரை, அரசியல் தூய்மையாளர்கள் என்று கருதப்படும் ஜெயபிரகாஷ் நாராயண், கர்பூரிதாக்குர் ஆகியோரின் சீடர் என்று அறியப்பட்டு அரசியல் களம் கண்டவர். சமூக நீதிப் போராளி என்று தன்னை வர்ணித்துக் கொள்பவர். அப்படிப்பட்ட ஒருவர் ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்படுகிறார் என்றால், கொள்கை, கோட்பாடு என்பதெல்லாம் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கப் பயன்படும் வெற்று கோஷங்கள் மட்டும்தானா?


அவரது லஞ்சமும், ஊழலும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டும்கூட, அவரது அரசியல் செல்வாக்கில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று சொன்னால் வாக்காளர்கள் லஞ்சம் ஊழலை ஏற்றுக் கொள்கிறார்கள் என்று பொருளா?
பொங்கல் பரிசு தொகுப்பு 10 லட்சம் பேர் ஏமாற்றம்

Added : டிச 31, 2017 02:39





பொங்கல் பரிசு அறிவிப்பால், 10 லட்சம் சர்க்கரை கார்டுதாரர்கள், தமிழக அரசின் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.தமிழகத்தில், அரிசி, சர்க்கரை, காவலர், எந்த பொருளும் வாங்காத, 'என்' கார்டு ஆகிய பிரிவுகளில் இருந்த, ரேஷன் கார்டுகள், தற்போது, முன்னுரிமை மற்றும் முன்னுரிமை அல்லாதது என, பிரிக்கப்பட்டு உள்ளன.

இருப்பினும், மேற்கண்ட கார்டுகளுக்கு, வழக்கம் போல், அதே பிரிவில், ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன.பொங்கலை முன்னிட்டு, முகாம்களில் தங்கியுள்ள இலங்கை அகதிகள், காவலர் கார்டுகள் உட்பட, 1.84 கோடி அரிசி கார்டுகளுக்கு, பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலம், கரும்பு துண்டு ஆகிய பரிசு தொகுப்பை, அரசு அறிவித்துள்ளது. இதனால், சர்க்கரை கார்டுதாரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


இது குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:தி.மு.க., ஆட்சியில், பாரபட்சமின்றி, அனைத்து கார்டுகளுக்கும், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அதிகாரிகள், நிதி நெருக்கடியை காரணம் காட்டி, சில ஆண்டுகளாக, 10 லட்சம் சர்க்கரை கார்டுகளுக்கு, பொங்கல் பரிசு வழங்குவதில்லை. அந்த கார்டு வைத்திருப்பவர்களிலும், பலர் ஏழைகளாக உள்ளனர். எனவே, சர்க்கரை கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரேஷன் கடைகளில், முறைகேட்டை தடுக்க, தற்போது, ரேஷன் பொருட்கள் விற்பனை விபரம், எஸ்.எம்.எஸ்., செய்தி வாயிலாக, சம்பந்தப்பட்ட கார்டுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது. அதேபோல், பொங்கல் பரிசு வினியோக விபரமும், எஸ்.எம்.எஸ்., வாயிலாக தெரிவிக்கப்பட உள்ளது.

- நமது நிருபர் -
ரஜினி முடிவுக்காக காத்திருக்கும் கமல்

Added : டிச 31, 2017 01:39 | 



  அரசியல் பிரவேசம் தொடர்பாக, ரஜினியின் இன்றைய அறிவிப்பிற்காக, நடிகர் கமல் காத்திருக்கிறார். அதைப் பொறுத்தே, அவரது வியூகங்கள் அமையும் என, தெரிகிறது.
நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்காக, அவரது ரசிகர்கள், பல ஆண்டாக காத்திருக்கின்றனர். இந்த சூழலில், அரசியல் கட்சி துவங்கப் போவதாக, கமல் அறிவித்தார். அரசியல் கருத்துக்களை, சமூக வலைதளங்களில் உதிர்க்கத் துவங்கினார். அதற்கு, அ.தி.மு.க., தரப்பில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், 'புத்தாண்டில், தமிழக சுற்றுப்பயணம் செய்த பின், அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பேன்' என, நவ., 7ல் அறிவித்தார். பின், அமெரிக்காவுக்கு சென்றுவிட்ட அவர், அரசியல் கருத்துக்கள் எதுவும் கூறாமல், படப்பிடிப்பில் தீவிரமாக உள்ளார். இந்த சூழலில், சென்னையில், ஐந்து நாட்களாக ரசிகர்களை சந்தித்து வரும் ரஜினி, தன் அரசியல் பிரவேசம் குறித்து, இன்று அறிவிப்பதாக கூறியுள்ளார். அது, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, அமெரிக்காவில் இருக்கும் கமல், ரஜினியின் முடிவுக்காக காத்திருக்கிறார். அவரது முடிவை பொறுத்தே, தமிழக சுற்றுப்பயணம் மற்றும் இதர அரசியல் விவகாரங்களில், கமலின் முடிவுகள் அமையும் என, தெரிகிறது.


- நமது நிருபர் -
ரஜினி துவக்குவது கட்சி அல்ல., பேரவை ? இன்று அறிவிப்பு

Updated : டிச 31, 2017 00:07 | Added : டிச 30, 2017 20:46 



  சென்னை: நடிகர் ரஜினி இன்று கட்சி துவக்குவாரா ? அல்லது பேரவை துவக்கி மக்கள் சேவை செய்ய போகிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நீண்ட காலமாக அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் பேரவை என்ற பெயரில் தனி இயக்கம் துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது இன்று (டிச.,31). பத்திரிகையாளர்களை கூட்டி இதை அறிவிப்பார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் ரஜினி தொடர்ந்து பல கட்டங்களாக ரசிகர்களை சந்தித்து வருகிறார். ரசிகர்களுடன் இணைந்து போட்டோவும் எடுத்து கொள்கிறார்.
கடந்த சந்திப்பின் போது போர் வரும் போது பார்க்கலாம் என்றார். இந்த வார சந்திப்பில் , " அரசியலில் நான் ஏற்கனவே இருக்கிறேன். யுத்தத்திற்கு போவது முக்கியமல்ல, ஜெயிக்கனும், இதற்கு வியூகம் முக்கியம்." வரும் 31 ம் தேதி அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன் என்றார். இதனால் ரஜினி என்ன முடிவு எடுப்பார் என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மன்ற நிர்வாகி கருத்து

ரஜினியின் அடுத்த மூவ் எப்படி இருக்கும் என்பதை தென்மாவட்டத்தை சேர்ந்த ரஜினி மன்ற நிர்வாகி ஒருவர் கூறியதாவது: ரஜினி ரசிகர்களின் கருத்தை கேட்டு வருகிறார். மக்களிடம் நெருங்கி பழக வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என ரசிகர்களிடம் கேட்டார். முதலில் பேரவை துவக்கி அதை இயக்கமாக மாற்றி , கீழ்மட்டம் வரை நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் மக்கள் பிரச்சனையை தீர்க்க அவர் பணியாற்ற வேண்டும். மக்கள் மனங்களில் இடம் பிடித்த பின்னர் அரசியல் கட்சியாக மாற்ற வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதனை ரஜினி ஏற்று கொண்டதாக தெரிகிறது.எனவே இன்று (31ம் தேதி ) முதலில் பேரவை துவக்குவது குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அரசியல் கட்சியாக மாற்றுவது பற்றி அவர் பின்னர் அறிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தனிக்கட்சி ஆரம்பிக்காமல் இயக்கத்தை ஆரம்பித்து மக்களிடம் களப்பணி ஆற்றுவார். அதன் பிறகு அரசியல் பிரவேசம் இருக்கும் என்று தெரிகிறது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் ஆஜராக, அப்பலோ நிர்வாகம் 2 வாரம் அவகாசம் கோரியுள்ளது. #75dayinHospital #jeyalalithaa 
 
 விசாரணை ஆணையத்தில் ஆஜராக 2 வாரம் அவகாசம் கோரியது அப்பலோ நிர்வாகம்
சென்னை, 

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்.22 உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் சிகிச்சைக்கு பின் டிச.5 அன்று மரணமடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அதிமுகவில் இருந்து பிரிந்த ஓபிஎஸ், ஜெ.தீபா உள்ளிட்டோர் சந்தேகம் எழுப்பினர். திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினும் சந்தேகம் எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் அதிமுகவில் இணைவதற்கு விசாரணை ஆணையத்தை கோரிக்கையாக ஓபிஎஸ் வைத்தார். இதையடுத்து ஜெயலலிதா மறைவு குறித்து விசாரணை ஆணையம் அமைக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு ஓய்வு நீதிபதி ஆறுமுகசாமி தனது விசாரணையை தொடங்கினார்.

ஜெயலலிதா சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் யார் வேண்டுமானாலும் அளிக்கலாம் என அவர் அறிவித்திருந்த நிலையில் ஜெ.தீபா, மாதவன் உள்ளிட்டோரும் , திமுக திருப்பரங்குன்றம் வேட்பாளர் சரவணன் உள்ளிட்டோரும் தகவல்களை அளித்தனர். இது தவிர ஆயிரக்கணக்கானோர் தகவல் அளித்துள்ளனர்.நூற்றுக்கணக்கானோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்து வருகின்றனர்.

 விசாரணை ஆணையத் தலைவர் ஆறுமுகசாமி, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், ஜன. 2ம் தேதி ஆவணங்கள் தாக்கல் செய்யுமாறு,  சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் ஆஜராக 2 வாரம் அவகாசம் அப்பல்லோ நிர்வாகம் கோரியுள்ளது. #inquirycommission #ApolloHospital, #75dayinHospital #jeyalalithaa

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...