Thursday, January 4, 2018

Police verification for passport to go digital

Under the new initiative, the process will be completed in three to four days

Getting passport from Coimbatore Regional Passport office will be easy as the time consuming process of police verification will go digital soon.

With this, police verification which used to take around 20 days or more will be completed in three to four days.

Under the new initiative, each police station is expected to get a tab which will have an application to do the verification digitally.

“The police department has already purchased tabs to be used for the digital verification process. They are expected to reach stations soon. This will ease the police verification process as nothing will have to be done on paper,” said Regional Passport Officer G. Sivakumar, who assumed charge on Monday. Mr. Sivakumar said that he will request West Zone IG to conduct training programme for the police to use to the tab and the application for digital verification.

The application installed in the tabs will have all the forms that were used for police verification in digital format. Once cleared by the police in the field level, they will be cross checked by senior police officers in charge of the process before sending it to the Regional Passport Officer. Officers involved in the process will use digital signatures to clear each step.

“The digital verification was done on a pilot basis at Vepery police station in Chennai. It was a success. We hope that even the concept of tatkal application will become obsolete when digital verification becomes fully functional,” said Mr. Sivakumar. He said that efforts are being made to set up Post Office Passport Seva Kendra in Tirupur and Namakkal districts. Refuting rumours on the closure of the Regional Passport Office, Mr. Sivakumar said a land construction of new building is under the consideration of the Department for which land will have to identified. Currently, the Department is spending

In 2017, the Regional Passport Office which covers Coimbatore, the Nilgiris, Tirupur, Erode, Namakkal and Salem districts issued 1,73,147 passports from the total number of 1,82,751 applications received in normal, tatkal and miscellaneous categories.




தடையை மீறிய பிரேமலதா கைது! போலீஸுடன் கடும் வாக்குவாதம்

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்காத கடலூர் நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலையை முற்றுகையிட்ட தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து தே.மு.தி.க. தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழகம் முழுவதும் உள்ள கரும்பு விவசாயிகளுக்கு 42 சர்க்கரை ஆலைகள் சுமார் 1600 கோடி ரூபாய் நிலுவைத் தொகை பாக்கி வைத்துள்ளது. இதனை கண்டித்து தே.மு.தி.க. அந்தந்தப் பகுதிகளில் உள்ள சர்க்கரை ஆலைகளை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் செய்தனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் இ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலையை பிரேமலதா விஜயகாந்த் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தார். அப்போது அவர், " இ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலை நிர்வாகம் மட்டும் 170 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. அதை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அத்தோடு, விவசாயிகள் கொண்டுசெல்லும் கரும்புக்குச் சரியான எடையில்லை. அதனால் சர்க்கரை ஆலையில் செயல்படும் எடைமேடையை அரசே ஏற்று நடத்த வேண்டும். கரும்புக் காப்பீட்டு தொகையை விரைந்து வழங்க வேண்டும்" என்றார்.

பின்னர், மேடையைவிட்டு இறங்கிய பிரேமலதா விஜயகாந் திடீரென்று சர்க்கரை ஆலையை முற்றுகையிட முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், தடையை மீறி சென்றால் கைது செய்வோம் என்று எச்சரித்தனர். இதனால், இருவருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை கண்டித்து பிரேமலதா விஜயகாந்த் தனது தொண்டர்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அதனால், போலீஸார் பிரேமலதா விஜயகாந்த் உட்பட நூற்றுக்கணக்கான தே.மு.தி.க. தொண்டர்களை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

`எப்பா முன்னாடியே சொல்லிருக்க கூடாதா?' - தமிழிசைக்கு மல்லிகைப்பூ விற்ற பாட்டி கலகல!


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகிலுள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் நேற்று நடைபெற்ற தனியார் அறக்கட்டளைத் தொடக்க விழாவில் கலந்துகொள்வதற்காகத் தமிழிசை வந்தார். புதுக்கோட்டை வழியாகக் காரில் அவர் செல்லும்போது, ஆலங்குளம் அடுக்குமாடி குடியிருப்பு அருகில் அவரது கார் திடுதிப்பென்று நின்றது .பாதுகாப்புக்காக முன்னால் விரைந்துகொண்டிருந்த வாகனத்திலிருந்த போலீஸார் பதறி, அதே வேகத்தில் தங்களது வாகனத்தை ரிவர்ஸ் எடுத்து வந்தனர். சாலையின் நடுவில் தமிழிசை வந்த வாகனம் நின்றதால், பின்னால் வந்துகொண்டிருந்த மற்ற வாகனங்களும் வரிசைக்கட்டி நின்றன. விஷயம் தெரியாத உள்ளூர் வாசிகள் அலுவலகம் செல்லும் பரபரப்பில் டிஃராபிக் ஜாம் ஏற்பட்டுவிட்டதாகக் கருதி, தொடர்ந்து ஹாரன் அடித்துக்கொண்டிருந்தார்கள். சில விநாடிகளில் அந்த இடத்தில் பரபரப்பு பற்றிக்கொண்டது.
இதெல்லாம் நடந்துகொண்டிருந்தபோதே, தமிழிசையின் கார் கதவைத்திறந்துக்கொண்டு, உதவியாளர் ஒருவர் ஓட்டமும் நடையுமாகச் சாலையைக் குறுக்கே கடந்து எதிர்ப்புறம் இருந்த சிறிய பூக்கடையை நெருங்கினார். அங்கிருந்த பாட்டியிடம் 100 ரூபாய்க்கு மல்லிகைப்பூ கேட்டு, 500 ரூபாய் நோட்டை நீட்டினார். அதற்கு அந்தப்பாட்டி, "காலையிலேயே 500 குடுத்தா எப்படி. நான் சில்லறைக்கு எங்கே போவேன்" என்று கேட்க, அருகில் இருந்த பழக்கடைக்காரர் காரில் தமிழிசை அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு, சூழலைச் சட்டெனப் புரிந்துகொண்டு, ஐந்நூறு ரூபாய்க்கு சில்லறை கொடுத்தார். பூவையும் சில்லறையையும் வாங்கிக்கொண்டு விரைந்த அந்த உதவியாளர், பூவை தமிழிசையிடம் கொடுக்க, அதை வாங்கி மெல்லிய சிரிப்புடன் தன் தலையில் சூட்டிக்கொண்டார். அதன் பிறகு, அவர் கார் விரைந்து சென்றது.

நாம் அந்தப் பாட்டியிடம் சென்றோம். அதற்குள் அந்தப் பாட்டியைச் சூழ்ந்துக்கொண்ட அண்டைக்கடைக்காரர்கள், தமிழிசைக்குத்தான் பூ வாங்கிச் சென்றார்கள் என்ற தகவலைச் சொன்னார்கள். ஆனால், அந்தப்பாட்டியோ எந்தவித ஆச்சர்யத்துக்குள்ளாகாமல் பேரமைதியுடன் அமர்ந்திருந்தார். நாம் அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். "எனக்கு யாருக்கு பூ வாங்கிட்டுப் போறாங்கனு தெரியாதப்பா. தமிழிசைன்னு சொன்னாங்க. பெரிய கட்சித்தலைவராம். முன்னாடியே சொல்லிருந்தா, அந்த அம்மாவைப் பார்த்து என் கஷ்டத்தைச் சொல்லி உதவி கேட்டிருப்பேன். போகவிட்டுச் சொல்றாங்க. அவங்களைத் துரத்திகிட்டா போவ முடியும்" என்றவரிடம், 'அப்படி என்ன கஷ்டம் பாட்டி உங்களுக்கு' என்று கேட்டோம். எனக்கென்ன கஷ்டம். வீட்டு வாடகை குடுக்க முடியலை. இந்தக்கடைக்கு பூவாங்க சமயத்துல காசு இருக்காது. அந்தச் சமயத்துல கடை போட முடியாது. அன்னிக்கு பட்டனிதான். இந்தக்கடையை மூடாம நடத்த கொஞ்சம் பணம் வேணும். இதுதான் என்னோட கஷ்டம். ஆனாலும், அந்தம்மாதான் இன்னிக்கு முதல் போணி. 100 ரூபாய்க்கு பூ வாங்கி எனக்கு சந்தோஷப்படுத்திட்டாங்க" என்று குழந்தையின் குதூகலத்துடன் பேசிய அந்தப் பாட்டியின் பெயர் சாரதா. வயது 70. கணவர் இறந்துவிட்டார். ஒரு மகன் ஒரு மகள். இந்தப்பாட்டிதான் பூ விற்கும் வருமானத்தில் தன் மகனுக்கு சோறு போடுகிறாராம்.

‘வாட்ஸ்அப், 4G-யோட வர்றோம்... கலக்குறோம்!’ வெறித்தன அப்டேட்களுடன் நோக்கியா 3310 


மு.ராஜேஷ்



நடிகர்களின் ரசிகர்களின் ஒரு க்ரூப் உண்டு. அந்த நடிகரின் ஒரு சில படங்களுக்கு மட்டும் வெறித்தனமான ரசிகர்களாக இருப்பார்கள். அதுபோல நோக்கியாவின் ரசிகர்களில் 3310 மொபைலுக்கு ரசிகர்களின் எண்ணிக்கை கொஞ்சம் அதிகம்தான். இன்று ஆப்பிள், ஆண்ட்ராய்டு என பயன்படுத்தும் பெரும்பாலானோரின் முதல் மொபைலாக நோக்கியா 3310 இருந்திருக்கக்கூடும். மேலும், ஸ்னேக் கேம் இதன் தனித்துவமான அடையாளமாகவே மாறிப்போனது. 2000-ம் ஆண்டில் வெளியான இது உலகம் முழுவதும் 126 மில்லியன் மொபைல்கள் விற்று சாதனை படைத்தது. இந்த மொபைல் பல நாடுகளில் நோக்கியாவின் சகாப்தத்தைத் தொடங்கிவைத்தது என்றே கூறலாம்.

அதன் பிறகு மொபைல் சந்தையில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக அதிக வசதிகள்கொண்ட மொபைல்கள் வெளியாக படிப்படியாக காணாமல் போனது 3310. அதன் பிறகு நோக்கியாவே சத்தமின்றி காணாமல் போனது. இந்நிலையில்தான், கடந்த வருடம் மீண்டும் மொபைல் சந்தையில் நுழைவதாக நோக்கியா அறிவித்தது. சந்தையில் நுழைந்த பிறகு தொடர்ச்சியாக ஆண்ட்ராய்டு மொபைல்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தனது 3310 மொபைலையும் மீண்டும் அறிமுகப்படுத்தப் போவதாக தெரிவித்தது நோக்கியா. சொன்னது போலவே 3,310 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டது.



பழைய மொபைலின் வடிவத்தை புதிய மொபைலில் ஓரளவுக்குக் கொண்டுவந்து கேமரா, டூயல் சிம் என இந்தக் காலத்துக்கு தகுந்தவாறு வடிவமைக்கப்பட்டிருந்தது புதிய நோக்கியா 3310. அவ்வளவும் செய்த நோக்கியா தவறு செய்தது விலை விஷயத்தில்தான். இரண்டாயிரம் ரூபாய்க்கே ஆண்ட்ராய்டு மொபைல்கள் வரிசை கட்டி நிற்க பேஸிக் மாடல் மொபைலான நோக்கியா 3310 ஐ வாங்குவதற்கு சற்றே யோசித்தார்கள் மக்கள். இருந்தாலும் பழைய நினைவுகளை மனதில் வைத்து விலையைப் பற்றி கவலைப்படாமல் அதை வாங்கியவர்களும் உண்டு.

புதிய நெட்வொர்க், புதிய இயங்குதளம்

உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் 4G நெட்வொர்க் சேவை கிடைக்கிறது. பல நாடுகளில் 2G சேவை வழங்குவதை படிப்படியாக குறைத்து வருகின்றன தொலைத்தொடர்பு நிறுவனங்கள். இந்தியாவில்கூட கடந்த வருடத்துடன் 2G சேவையை முழுவதுமாக நிறுத்தியிருக்கிறது ரிலையன்ஸ் நிறுவனம். ஜியோவோ 4G சேவையை மட்டுமே அளிக்கிறது. 2Gயின் நிலைமை அப்படியிருக்க இந்த வருடம் முதல் 5G சேவை அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வாட்ஸ்அப் போன்ற சேவைகளையும் இன்று பலர் பயன்படுத்தி வருகிறார்கள். உலகம் முழுவதும் நிலைமை இப்படியிருக்க கடந்த வருடம் பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் நோக்கியா 3310 மொபைலில் 2G வசதி மட்டுமே இருந்தது, வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாதது போன்ற குறைகள் இருந்தன. பின்னர் அது மேம்படுத்தப்பட்டு அக்டோபர் மாதம் 3G யில் இயங்குமாறு வெளியிடப்பட்டது. இந்நிலையில்தான் 4G வசதியோடு நோக்கியா 3310 மீண்டும் அறிமுகப்படுத்தப்படப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.




அடுத்து வெளியாகப் போகும் புதிய நோக்கியா 3310 வின் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. இந்த மொபைலின் வெளித்தோற்றத்தில் எந்த மாறுதல்களும் செய்யப்படவில்லை. மாறாக அதன் உள்ளே சில மாற்றங்களைச் செய்துள்ளது நோக்கியா. இன்டர்னல் மெமரியை 512 MB யாக அதிகரித்துள்ளது. புதிய இயங்குதளம் பயன்படுத்தப்பட்டிருப்பதால் வாட்ஸ்அப் இதில் இயங்கும் வாய்ப்பு அதிகம். மேலும், இதில் 4G வசதியும் இருக்கிறது. வரும் பிப்ரவரி மாதம் பார்சிலோனாவில் நடைபெற இருக்கும் MWC 2018-ல் இந்த மொபைல் அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். 4G வசதியோடு திரும்ப வரும் நோக்கியா 3310 மக்களிடையே வரவேற்பைப் பெரும் என நம்பலாம்.

நலம் விசாரித்த ரஜினி... முகம்கொடுக்காத ஸ்டாலின்... என்ன நடந்தது கோபாலபுரத்தில்? #VikatanExclusive

ரஜினி ஸ்டாலின் கலைஞர் கோபாலபுரம்
சீரியஸாக அரசியல் தொடர்பான ட்வீட்களை நடிகர் கமல் பதிவிட்டுக் கொண்டிருந்த சமயத்தில், ''நீங்கள் எப்போது அரசியல் பிரவேசம் செய்வீர்கள்'’ என்று ஊடகத்தினர் கேட்ட கேள்விக்கு, ''நான் ஏற்கெனவே அரசியலில்தானே இருக்கிறேன்” என்று பளிச்சென பதில் சொன்னார் கமல். ஆனால் ரஜினி , 1996-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மீது கடுமையான விமர்சனங்களை வைத்தது, 1998-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு இரண்டு நாள்கள் முன்பு கோவை குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக கருத்துகளைக் கூறியது, 2004-ல் பா.ம.க-வுக்கு எதிராக அரசியல் விமர்சனங்களை முன்வைத்தது என வெளிப்படையாகவே அரசியலில் தன்னை  அடையாளப்படுத்திக் கொண்டிருந்தாலும், ‘'காலம் கனியும்போது எனது அரசியல் பிரவேச முடிவை வெளியிடுவேன்'’, “ஆண்டவனுக்குதான் தெரியும்” என்பது போன்று தொடர்ந்து கூறிவந்தார். கிட்டத்தட்ட 21 வருடம் கழித்து 2018-ல் அவருக்கு காலம் கனிந்திருக்கும் நிலையில், ‘'நான் அரசியலுக்கு வருவது உறுதி. வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் சந்திப்போம்’' என்று சூளுரை விடுத்திருக்கிறார். தனது இந்தப் பரபரப்பான அரசியல் அறிவிப்பை அடுத்து முக்கிய நபர்களைச் சந்தித்து வருகிறார் ரஜினி. அதன் ஒருகட்டமாக நேற்று சென்னைக் கோபாலபுரத்தில் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியைச் சந்தித்தார். அவருடனான ரஜினியின் இந்தச் சந்திப்பை தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்கவில்லை என்று நேற்று சந்திப்பின்போது உடனிருந்த கழக வட்டாரங்கள் கூறுகின்றன. இதுகுறித்து அவர்கள் கூறுகையில்...
ஸ்டாலின்
''நேற்று காலை நடிகர் ரஜினி வீட்டிலிருந்து போன் செய்து கருணாநிதியைச் சந்திக்க நேரம் கேட்டார்கள். சாதாரணமாகக் கட்சி ஆள்கள் அப்பாயின்மென்ட் கேட்டால் உடனடியாக நேரம் ஒதுக்கித் தந்துவிடும் கருணாநிதியின் உதவியாளர்கள், ரஜினி அப்பாயின்மென்ட் கேட்டதும்... அவர் தற்போது அரசியல் அறிவிப்பை வெளியிட்டிருக்கும் சூழலில் நேரம் ஒதுக்கச் சற்றே யோசித்தார்கள். பிறகு, ‘நீங்கள் நேரடியாக ஸ்டாலினிடமே கேட்டுக்கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளனர். ஸ்டாலின்...'நேரம் ஒதுக்குவதா... வேண்டாமா’ என்று யோசித்துக்கொண்டிருந்தபோதே மீடியா தரப்புக்குச் செய்தி சென்றுவிட்டதால், ரஜினியைத் தவிர்க்கமுடியாமல் மாலைக்கு மேல் கோபாலபுர இல்லத்தில் கருணாநிதியை வந்து சந்திக்க ரஜினிக்கு கால அவகாசம் ஒதுக்கியிருக்கிறார். சரியாக இரவு 8:20 மணிக்கு கோபாலபுரத்துக்கு வருகை தந்திருக்கிறார் ரஜினி. கோபாலபுரம் இல்லத்துக்கு வரும் முக்கிய விருந்தினர்களை வாசல்வரை சென்று வரவேற்கும் ஸ்டாலின், நேற்று ரஜினி வந்தபோது வீட்டுக்குள்ளேயே நின்று வரவேற்றிருக்கிறார். ரஜினியை, நேரே மாடியில் இருக்கும் கருணாநிதியின் அறைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அறையில் ஸ்டாலின், திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ. மற்றும் கருணாநிதியின் உதவியாளர் தவிர வேறு யாருக்கும் அனுமதி தரப்படவில்லை. ரஜினி கருணாநிதியைச் சந்தித்து உடல்நிலை பற்றி விசாரிக்க, அதற்கு கருணாநிதியின் உதவியாளரிடமிருந்து மட்டுமே பதில் வந்திருக்கிறது. ஸ்டாலின் மௌனமாகவே இருந்திருக்கிறார். அடுத்து தயாளு கோபாலபுரத்தில் ரஜினி பின்னணியில் ஸ்டாலின்அம்மாளைப் பார்க்க, ‘அம்மா எங்கே இருக்கிறார்’ என்று ரஜினி கேட்டதும், 'அம்மா நன்றாக இருக்கிறார்’ என்று கூறி ஸ்டாலின் தயாளு அம்மாளின் அறைக்கு அவரை அழைத்துச் சென்று காண்பித்தார். இதுமட்டுமே இருவருக்கும் இடையே நிகழ்ந்த அதிகபட்ச உரையாடல். இதையடுத்து ரஜினி அந்த இடத்திலிருந்து கிளம்பியிருக்கிறார். ரஜினி கிளம்பியதும் பத்திரிகையாளர்கள் ஸ்டாலினை மொய்க்க, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திணறினார். அதனால் கருணாநிதியின் உதவியாளரை உடனடியாக அழைத்து, ‘மீடியாவுக்கு என்ன சொல்வது?’ என்று கேட்டு, அதன் பிறகுதான், 'உடல்நிலை குறித்து விசாரிப்பதற்கே இந்தச் சந்திப்பு. தமிழர் பண்பாட்டின் அடிப்படையில் விருந்தினரை வரவேற்று உபசரித்தோம்’ என்று மீடியாவுக்கு பதிலளித்தார்.

அ.தி.மு.க.விலும் தொடர்ந்து உள்கட்சி சிக்கல் நீடித்துவரும் சூழலில், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்குப் பெரிதாக யாரும் போட்டியாக இருக்கமாட்டார்கள் என்று ஸ்டாலின் எண்ணியிருந்த நிலையில், தற்போது ரஜினி அரசியல் பிரவேசம் பற்றி அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதுதான் ஸ்டாலின் முகம்கொடுத்துக் கூட பேசாததற்குக் காரணம். 'முரசொலி' பவளவிழாவில்கூட இதே காரணப் பின்னணியில்தான் ரஜினி மேடையேற மறுத்தார்” என்று கழக வட்டாரங்கள் கூறுகின்றன. 

'பெரியாரும், அண்ணாவும், கருணாநிதியும் பண்படுத்திய திராவிட மண்’ என்று ஒருபுறம் ஸ்டாலின் பேசிவந்தாலும்.. துரைமுருகன், 'ரஜினியின் அரசியல் வருகையால் தி.மு.க-வுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை’ என்று கூறி வந்தாலும் 1996-ல் ரஜினியின் அரசியல் கருத்துகளை வரவேற்றதுபோல தற்போதைய கழக வட்டாரங்கள் அவரது அரசியல் அறிவிப்பை வரவேற்கவில்லை என்பதாகவே தெரிகிறது.

NEWS TODAY 31.01.2026