Thursday, January 4, 2018

சென்னையில் இருந்து 5,158 சிறப்பு பஸ்கள் பொங்கல் பண்டிகைக்காக அரசு ஏற்பாடு

Added : ஜன 04, 2018 01:43

சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன், கூடுதலாக, 5,158 சிறப்பு பஸ்களை இயக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.சென்னை, பல்லவன் இல்லத்தில், நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின், போக்குவரத்து துறை அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியதாவது:சென்னையில் இருந்து தினமும், 2,275 பஸ்கள், வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன. 


பொங்கல் பண்டிகையையொட்டி, வரும், 11ம் தேதி, 796; 12ம் தேதி, 1,980; 13ம் தேதி, 2,382 என, மொத்தம், 5,158 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.வழக்கமாக, மூன்று நாட்களிலும் இயக்கப்படும் பஸ்களையும் சேர்த்து, மொத்தம், 11 ஆயிரத்து, 983 பஸ்கள் இயக்கப்படும்.அதற்காக, கோயம்பேடு பஸ் நிலையத்தில், 26; தாம்பரம் சானடோரியம் பஸ் நிலையத்தில், 2; பூந்தமல்லி பஸ் நிலையத்தில், ஒன்று என, 29 முன்பதிவு மையங்கள், வரும், 9ம் தேதி முதல் செயல்படும்.அதேபோல, மற்ற ஊர்களில் இருந்து, 11ம் தேதி, 1,405; 12ம் தேதி, 3,656; 13ம் தேதி, 5,376 என, மொத்தம், 10 ஆயிரத்து, 437 சிறப்பு பஸ்களை இயக்கவும், அரசு திட்டமிட்டுள்ளது.பொங்கலுக்கு பின், 15, 16, 17ம் தேதிகளில், முறையே, 792; 1,548; 1,430 என, மொத்தம், 3,770 சிறப்பு பஸ்கள், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து, சென்னைக்கு இயக்கப்பட உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

பஸ் நிலையங்கள் எங்கே?பண்டிகை காலங்களில், சென்னை மாநகரில் ஏற்படும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ஐந்து இடங்களில், சிறப்பு பஸ் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. செங்குன்றம் வழியாக ஆந்திரா செல்லும், தமிழக மற்றும் ஆந்திர மாநில அரசு பஸ்கள், அண்ணாநகர் மேற்கில் உள்ள, மாநகர பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்* கிழக்கு கடற்கரை சாலை வழியாக, புதுச்சேரி, கடலுார், சிதம்பரம் செல்லும் பஸ்கள், சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகேயுள்ள பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்* திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக, கும்பகோணம், தஞ்சை செல்லும் பஸ்கள், தாம்பரம் சானடோரியம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்* பூந்தமல்லி வழியாக, ஆற்காடு, ஆரணி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார் மற்றும் ஓசூருக்கு செல்லும் பஸ்கள், பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.* மயிலாடுதுறை, நாகை, வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, நெல்லை, செங்கோட்டை, துாத்துக்குடி, திருச்செந்துார், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், பண்ருட்டி, நெய்வேலி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், கோவை, எர்ணாகுளம், பெங்களூரு செல்லும் பஸ்கள், வழக்கம் போல், கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.

நெரிசல்ஏற்படும்பொங்கல் பண்டிகை சிறப்பு பஸ்கள் இயக்கம், வெளியூர் செல்லும் வாகனங்கள் அதிகரிப்பால், வரும், 11 முதல், 13ம் தேதி வரை, தாம்பரம், பெருங்களத்துார் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே, வாகனங்கள், திருக்கழுக்குன்றம் - செங்கல்பட்டு; ஸ்ரீபெரும்புதுார் - செங்கல்பட்டு வழியாக செல்லலாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்தீர்களா? கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஏறும் வகையில், 11ம் தேதி முதல், 13ம் தேதி வரை முன்பதிவு செய்துள்ளோர், சம்பந்தப்பட்ட சிறப்பு பஸ் நிலையங்களுக்கு சென்று, பயணிக்க வேண்டும். கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருக்கை பூர்த்தியான பஸ்கள், வெளிவட்ட சாலை வழியாக, வண்டலுார் சென்று விடும். எனவே, தாம்பரம், பெருங்களத்துாரில் ஏறும் வகையில் முன்பதிவு செய்துள்ளோர், ஊரப்பாக்கம் தற்காலிக பஸ் நிலையம் சென்று பயணிக்கலாம்.

தனியார் இன்ஜி., பல்கலைகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ., புது கட்டுப்பாடு

Added : ஜன 04, 2018 00:11

'தனியார் இன்ஜினியரிங் பல்கலைகளில், மாணவர்களை சேர்க்க, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., ஒப்புதல் பெற வேண்டும்' என, நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.தனியார் பல்கலைகள், நிகர்நிலை பல்கலைகளாக, எந்த கட்டுப்பாடும் இன்றி செயல்பட்டு வந்தன. நீதிமன்ற உத்தரவு காரணமாக, அனைத்து தனியார் பல்கலைகளும், 'பல்கலை' என்ற பெயரை பயன்படுத்த, தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பல்கலைகளுக்கு நிகரான கல்லுாரியாகவே, அவை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மத்திய மனிதவள அமைச்சகமும், பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி.,யும் அறிவித்தன.இதை தொடர்ந்து, அனைத்து தனியார் பல்கலைகளும், தங்கள் நிறுவன பெயரில் இருந்த, பல்கலை என்றவார்த்தையை நீக்கியுள்ளன. இதையடுத்து, அனைத்து நிகர்நிலை பல்கலைகளும், இன்ஜினியரிங், 'ஆர்கிடெக்ட், பார்மசி' மற்றும் மேலாண்மை படிப்பில் மாணவர்களை சேர்க்க, ஏ.ஐ.சி.டி.இ., ஒப்புதல் பெற வேண்டும் என, தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை, தனியார் பல்கலைகள், யு.ஜி.சி.,யின் அங்கீகாரத்தை மட்டுமே பெற்று, மாணவர்களை சேர்த்து வந்த நிலையில், இந்த புது கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இதனால், தனியார் பல்கலைகளின் தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு, கடிவாளம் போடப்பட்டுள்ளது. ஏ.ஐ.சி.டி.இ., விதிகளின் படி, ஆய்வக வசதி, பேராசிரியர்கள், உள்கட்டமைப்புகள் இருந்தால் மட்டுமே, இன்ஜி., படிப்புக்கு, இனி, அங்கீகாரம் பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. - நமது நிருபர் -
ஷீரடிக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

Added : ஜன 04, 2018 00:02

சென்னை இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், மஹாராஷ்டிரா மாநிலம், ஷீரடிக்கு சிறப்பு சுற்றுலா ரயிலை இயக்குகிறது.* இந்த ரயில், மதுரையில் இருந்து ஷீரடிக்கு, வரும், 23ல், புறப்படுகிறது * ஏழு நாள் சுற்றுலாவில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி, பந்திப்பூர் மற்றும் ஆந்திரா மாநிலம், மத்ராலயத்திற்கு சென்று வரலாம். ஒருவருக்கு, 6,615 ரூபாய் கட்டணம். *மதுரையில் இருந்து, வரும், 12ம் தேதி, அமாவாசை சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. இதில், ஒடிசா மாநிலத்தில், பூரி ஜெகநாதர், கோனார்க் சூரிய நாராயணா கோவில்கள், புவனேஸ்வர் லிங்கராஜா கோவில், பீஹார் மாநிலம், கயாவிற்கு செல்லலாம் *காசியில் கங்கா ஸ்நானம் செய்யலாம். காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணியை தரிசிக்கலாம். அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நீராடலாம். ஒன்பது நாள் சுற்றுலாவுக்கு, ஒருவருக்கு, 8,505 ரூபாய் கட்டணம்*இந்த இரண்டு ரயில்களும், திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்ப்பேட்டை, காட்பாடி மற்றும் சென்னை சென்ட்ரல் வழியாக செல்லும் *மேலும், தகவலுக்கு, சென்னை, ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகத்தை, 90031 40681 என்ற, மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
'மொபைல் - ஆதார்' இணைப்பது இனி எளிது!

Updated : ஜன 04, 2018 00:29 | Added : ஜன 04, 2018 00:27 |

Aadhaar card,ஆதார்,ஆதார் அட்டை
 மொபைல் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம். 2017 டிசம்பருக்குள் இணைக்காவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என, மத்திய அரசு எச்சரித்தது.

அதனால், அந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர் மையங்களில், மக்கள் முட்டி மோதினர். இதையடுத்து, அதற்கான கெடு, வரும் மார்ச் இறுதி வரை நீட்டிக்கப்பட்டது.இந்த சூழலில், ஆதார் எண்ணுடன், வாடிக்கையாளரே, மொபைல் எண்ணை இணைக்கும் வகை யில், மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, '1456' என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை, மொபைலில் அழைத்தால், பதிவு செய்யப்பட்ட குரல் சேவை ஒலிக்கும்.

அதில், விருப்ப மொழியை தேர்ந்தெடுத்து, உங்கள் ஆதார் எண்ணை, 'டைப்' செய்ய வேண்டும். அது, உடனடியாக தனித்துவ அடையாள எண் ஆணையமான, யு.ஐ.டி.ஏ.ஐ.,க்கு அனுப்பப்படும்.அது, தகவல்களை உறுதி செய்ததும், 'ஒன் டைம் பாஸ்வேர்டு' மொபைல் போனுக்கு வரும். அந்த எண்ணை உடனே, 'டைப்' செய்து அனுப்பிய பின், இணைப்பை துண்டிக்கலாம். அடுத்த நிமிடத்தில், உங்கள் எண், ஆதாருடன் இணைத்ததை உறுதி செய்து, எஸ்.எம்.எஸ்., செய்தி வரும். சில நிமிடங்களில் இதைச் செய்து விடலாம்.

- நமது நிருபர் -
பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரயில்

Added : ஜன 03, 2018 19:11

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நெல்லை வரை செல்லும் சுவிதா எக்ஸ்பிரஸ் ரயில் ஜன., 5, 11, 12, 13, 19 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இரவு 9.50 மணிக்கு புறப்படுகிறது. நெல்லையில் இருந்து எழும்பூருக்கு ஜன. 7,28 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Doctor who embalmed Jaya’s body deposes before panel

By Express News Service  |   Published: 04th January 2018 02:10 AM  |  
 
CHENNAI: Dr Sudha Seshayyan, a government doctor who carried out the embalming procedure to preserve former Chief Minister J Jayalalithaa’s body, deposed before the inquiry commission looking into the death of the late leader on Wednesday.

Dr Sudha Seshayyan, vice-principal of Madras Medical College, appeared before retired judge A Arumughaswamy, who is heading the commission. Later, she told mediapersons that she had given a detailed account of how embalming procedure was done on Jayalalithaa’s body. The 15-to-20 minute procedure was to prevent the body from decomposing.

Meanwhile, the counsel for Apollo Hospitals chief Dr Pratap C Reddy and his daughter Preetha Reddy appeared before the commission and sought more time to file their responses. The commission has granted them time till January 12.

Apollo chief gets time

The counsel for Apollo Hospitals chief and his daughter appeared before the panel and sought more time to file their responses. The panel granted them time till January 12.

Evaluator shortage cripples Bangalore University; salaries may be held back

By Express News Service | Published: 04th January 2018 02:38 AM |



BENGALURU: After being delayed due to protests staged by UGC teachers, the evaluation work of Bangalore University is now facing another problem - shortage of evaluators.As per the data available from Bangalore University examination department, 50 per cent of the teachers are not attending the ongoing evaluation work. The university has now issued a warning that it will submit a report to the Department of Collegiate Education asking to withhold the salaries of teachers from government and aided colleges.

Dr Shivaraj, registrar evaluation of Bangalore University, told Express, “It has become really difficult for us to continue the evaluation work as half of the eligible teachers from government and aided colleges are not taking part.”According to university authorities, the shortage of evaluators is more for English subject. The highest number of scripts that need to be evaluated are in the English subject (2 lakh). This is followed by Commerce courses. “We have no issues with Kannada as there is 100 per cent attendance for this subject. But when it comes to English language and Commerce subjects, we are falling short of teachers. If this continues, then the evaluation work will be delayed further and this in turn will affect the announcement of results and reopening of classes for the next semester,” Shivraj said.

The Karnataka State Universities Act 2000 and also the Examination Ordinance of Bangalore University 2011 mandates evaluation for all lecturers.“I have written letters to the principals of all private colleges asking them to send eligible faculty members for evaluation work. On Thursday, I will meet the commissioner for collegiate education and submit a representation requesting to withhold the salaries of those faculty members who are not attending the evaluation work,” Shivraj added.University authorities said that some private colleges have scheduled to reopen classes for the next semester in violation of the university calender and in such cases action will be initiated.

NEWS TODAY 31.01.2026