Friday, March 2, 2018

மார்ச் 3ம் தேதி துணை வேந்தர்களுடன் கவர்னர் ஆலோசனை

Added : மார் 01, 2018 23:06 |



  சென்னை: அனைத்து துணை வேந்தர்களுடனும், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நாளை மறுநாள்(மார்ச் 3) ஆலோசனை நடத்த உள்ளார். ராஜ்பவனில் நடக்கவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டம் ஆண்டுதோறும் வழக்கமாக நடைபெறுவது தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்கும் துணை வேந்தர்கள் அனைத்து புள்ளி விவரங்களையும் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Thursday, March 1, 2018

தேர்வு பயம் தேவையில்லை!

DINAMALAR




பதிவு செய்த நாள் 25 பிப்  2018   00:00

தேர்வு என்பது, படித்தவற்றை எந்த அளவிற்கு நினைவில் வைத்திருக்கிறீர்கள் என்பதை சோதிப்பதற்காக நடத்தப்படுகிறது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

அப்போதுதான், தேர்வு குறித்து, பயமோ, பதற்றமோ ஏற்படாது. அத்துடன், வகுப்பில் நடக்கும் மாதாந்திர தேர்வைப் போலவே, பொதுத் தேர்வையும் சாதாரண தேர்வாக நினைத்து, இயல்பாக எடுத்துக்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
தேர்வுக்கு ஒரு வாரத்திற்கு முன், புதிதாக எதையும் படிக்கக் கூடாது; அதற்கு முன்பே, அனைத்து பாடங்களையும் படித்து விடுங்கள். தேர்வுக்கு படிப்பதற்காக அட்டவணை தயாரிக்கும்போதே, இதை மனதில் வைத்து தயாரிப்பது முக்கியம். தேர்வுக்கு முந்தைய ஒரு வாரம், அதுவரை படித்த பாடங்களை மறுபடியும், 'ரிவைஸ்' செய்ய வேண்டும்; இது, உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்... உங்களால் முடியாதது எதுவுமே கிடையாது; ஆர்வமும், கடின உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் உங்களால் நிச்சயம் சாதிக்க முடியும்.
கணிதத்தை பொறுத்த மட்டில், மற்ற பாடங்களை போல், அதை மனப்பாடம் செய்ய முடியாது; புரிந்து படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண் பெற முடியும். ஆனால், சமன்பாடுகள் மற்றும் சூத்திரங்களை மனப்பாடம் செய்துதான் ஆக வேண்டும். இவற்றை தனியாக நோட்டில் எழுதி வைத்து, மனப்பாடம் செய்ய வேண்டும். சந்தேகம் வரும் போதெல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை ஒப்பிட்டு பார்ப்பதற்கு, இக்குறிப்பு உதவும்.
இனி, தேர்வை எதிர் கொள்வதில் கவனம் செலுத்துங்கள்; துணிச்சல் வந்து, பயம் பறந்தோடி விடும்.
* தேர்வு அறைக்கு செல்வதற்கு முன், உங்கள் நண்பர்களில் சிலர், ஏதேதோ சொல்லி குழப்புவர். நீங்கள் படிக்காத ஒரு கேள்வி கேட்கப்பட இருப்பதாக கூறுவர். இதைக் கேட்டு, அவசர அவசரமாக அந்தக் கேள்விக்கான விடையை பதற்றத்துடன் படிப்போர் அதிகம். ஆனால், இது தவறானது; வீண் வதந்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பதற்றத்தை அதிகரித்து கொள்ளாதீர்
* தேர்வு அறைக்கு செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் படித்தவற்றை மட்டும் மனதில் அசை போடுதல் நல்லது
* ஹால் டிக்கெட்டை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் எடுத்துச் செல்லும் பென்சில், பேனா வைக்கும் பாக்ஸ்சில் ஏதேனும் துண்டு சீட்டுகள் இருந்தால், அதை, உடனடியாக துாக்கி எறிந்து விடுங்கள்
* தேர்வு அறைக்கு சென்று, உரிய இடத்தில் அமர்ந்த பின், வினாத்தாளை வாங்கியதும், கவனமாக படியுங்கள்
* கேள்விகளின் எண்களை சரியாக எழுத வேண்டும். தவறாக எழுதினால், மதிப்பெண் கிடைக்காமல் போக வாய்ப்புண்டு. அதேபோல், விடைத் தாள்களின் பக்கங்களின் எண்களை சரியாக எழுதவும்
* விடைத்தாளில் அடித்தல், திருத்தல் இல்லாமல் இருக்க வேண்டும்; விடைத் தாளை சேதப்படுத்துதல் கூடாது
* விடைத்தாளில், மார்ஜின் விட்டு எழுத வேண்டும்
* விடைத்தாளின் முகப்பில், மறக்காமல் உரிய இடத்தில், உங்கள் கையெழுத்தை பதிவு செய்யுங்கள்
* ஒரு பக்கத்தில் குறைந்தது, 20 முதல் 25 வரிகள் எழுத வேண்டும்; இருபுறமும் கண்டிப்பாக எழுத வேண்டும்
* ஒரு கேள்விக்கான விடை எழுதி முடித்ததும், சற்று இடைவெளி விட்டு, அடுத்த கேள்விக்கான விடையை எழுதத் துவங்குங்கள்
* எழுதாத பக்கங்கள் இருந்தால், அவற்றின் குறுக்கே நீண்ட கோடு இடுவது அவசியம்
* கணிதத் தேர்வின்போது, விடைத்தாளின் கீழ் பகுதியில், கணக்கை செய்து பார்ப்பதற்கு ஒதுக்க வேண்டும்
* துணை தலைப்புகள் தெளிவாக தெரியும் விதத்தில், அடிக்கோடிட வேண்டும்
* வரை படத்தில், வண்ண நிறத்தாலான பென்சிலை பயன்படுத்துங்கள்
* கிராப் வரையும்போது, அளவுகளை மறக்காமல் குறியுங்கள்
* கண்காணிப்பாளரின் அனுமதியோடு, 'லாக்' புத்தகத்தை பயன்படுத்தலாம்
* சீக்கிரம் எழுதி முடித்துவிட்டால், உடனே கண்காணிப்பாளரிடம் கொடுத்துவிட்டு வெளியேறாமல், எழுதியவற்றை, நிதானமாக ஒருமுறை சரிபார்ப்பது நல்லது
* பத்து மாதங்களாக நீங்கள் உழைத்த உழைப்பை பரிசோதிப்பதற்காக, உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கால அளவு, இரண்டரை அல்லது மூன்று மணி நேரம் மட்டுமே!
இதை நினைவில் வைத்து, தெரிந்த வினாக்கள் என்னென்ன இருக்கிறதோ, அவற்றை முதலில் தேர்ந்தெடுத்து, பதில் எழுதுங்கள்
* ஒரு வினாவை தேர்வு செய்யும்போது, அதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதை முன்கூட்டியே கணிப்பது மிக முக்கியம்
* பதில் எழுதும் போது, வார்த்தைக்கு வார்த்தை போதிய இடைவெளி விட்டு எழுத வேண்டும். அதேபோல், வரிக்கு வரி போதிய இடைவெளி விடுவது முக்கியம்
* கையெழுத்து தெளிவாக, அழகாக இருக்க வேண்டும்
* தேர்வு முடிந்ததும், நண்பர்களுடன் ஊர் சுற்றாமல், நேராக வீட்டிற்கு சென்று, நன்றாக ஓய்வெடுத்து, பின், அடுத்த தேர்வுக்கு உங்களை தயார் செய்து கொள்ளுங்கள்.
இதையெல்லாம் கடைப்பிடித்தால், வெற்றி நிச்சயம்!

ஆ.ஜெயசூரியன்
 சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

 DINAMALAR

எம்.ஜி.ஆர். போல நிறமிருக்கலாம்; ஆனால்...

Added : பிப் 22, 2018 00:56







நான் சொல்வது உங்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தலாம், கமல். ஆனால், உங்களை, எம்.ஜி.ஆருடனும், கருணாநிதியுடனும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, கீழ்க்கண்ட விஷயங்களைச் சொல்லத் தோன்றுகிறது...

எம்.ஜி.ஆரின் உருவம், வெண்மை நிறம் கொண்டது. பொதுவாக, இந்த நிறத்தில் உள்ளவர்களை, எங்களைப் போல திராவிடர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். கறுமை தான், எங்களுக்குப் பிடிக்கும். ஆனால், தான் நடித்த படங்களில், தனி மனித ஒழுக்கத்தைப் பின்பற்றுபவராகவும், வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருக்கும் மக்களின் பிரச்னைகளைக் களைபவராகவும் தன்னை, எம்.ஜி.ஆர்., காட்டிக் கொண்டார். கிட்டத்தட்ட, காமராஜரின் வாழ்க்கையைப் பின்பற்றுபவர் போல!அதுவே, அவரின் அரசியல் வாழ்க்கைக்கு, மிக உறுதியான அடித்தளம் இட்டு விட்டது. எங்களைப் போன்ற அன்றாடம் காய்ச்சிகள், அவர் தான், உலகிலேயே மிகச் சிறந்த தலைவர் என்று நம்பி இருந்தோம்; அரசியல் வாழ்க்கையிலும், அவர் அப்படியே நடந்து கொண்டார்.

கருணாநிதிக்கு இப்படி நடிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்கவில்லை. ஏனெனில் அவர், எங்களைப் போல, திராவிடர்களின் சாயலைக் கொண்டிருந்தார்; எங்களின் மனநிலை புரிந்து, கூட்டங்கள் நடத்தினார். அரசியல் வாழ்க்கையில் மட்டும், அரிதாரம் பூச வேண்டி இருந்தது; அதையும் நன்றாகவே செய்து, வெற்றி பெற்றார்.நீங்கள்... கிட்டத்தட்ட, எம்.ஜி.ஆர்., நிறத்தைக் கொண்டிருக்கிறீர்கள். அவரைப் போல, கட்சி நடத்தி வெற்றி பெற வேண்டும் என ஆசைப்படுகிறீர்கள்; அதில் தவறில்லை. ஆனால், எம்.ஜி.ஆரைப் போல, சமூகப் பிரச்னைகளைச் சார்ந்த படங்களில் நீங்கள், பெரும்பாலும் நடித்ததில்லை.உங்களின் புகழைப் பறைசாற்றும் படங்கள் என்னவென்று பார்க்கும்போது, அவர்கள், மன்மத லீலை, பதினாறு வயதினிலே, மீண்டும் கோகிலா, மரோ சரித்ரா, அபூர்வ சகோதரர்கள், கைதியின் டயரி, சிங்கார வேலன், மைக்கேல் மதன காமராஜன், நாயகன், மகாநதி, அவ்வை சண்முகி, பஞ்ச தந்திரம், வேட்டையாடு விளையாடு, தசாவதாரம் என்று நீள்கிறது; அவை அனைத்திலும், உங்களின் நடிப்பை மெய்மறந்து பார்க்க முடிந்ததே தவிர, சமூக மேம்பாட்டுக்கென, நீங்கள் எந்தக் கருத்தையும் சொல்லவில்லை.வறுமையின் நிறம் சிவப்பு, உன்னால் முடியும் தம்பி என, ஒரு சில படங்களிலேயே, சமூக அக்கறை பிரதிபலித்திருக்கிறது.ஆனால், எம்.ஜி.ஆரின் ஒவ்வொரு படமும், ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கும் ஏதாவது ஒரு பிரச்னையை மையமாக வைத்தே அமைந்தது. சினிமா முடிந்து, அரசியலுக்குள் அவர் நுழைந்தபோது, கிட்டத்தட்ட, கடவுள் மாதிரியான தோற்றத்தில் தான் அவர் தென்பட்டார்.

அவருடைய வசீகரப் பேச்சு, ஆளுமைத்திறனைப் பார்த்து, கருணாநிதியை வியந்தார் என்பதே உண்மை.கருணாநிதியுடன் உங்களை இங்கே ஒப்பிட்டுப் பேசவே முடியாது. அவரின் தேன் சொட்டும் அல்லது விஷம் சொட்டும் பேச்சுகள், திராவிட மக்களை உணர்ச்சி பொங்க வைத்தன; அவருக்கு அடிமையாக்கி விட்டன.இந்த இரண்டு விஷயங்களுமே, உங்களிடம் மைனஸ். நேற்று மீனவர்களைக் கட்டிப் பிடித்த பாணி, கொஞ்சம் நாடகத்தனமாகவே இருந்தது.உங்களை குறை கூற விரும்பவில்லை. ஏனெனில், 'பார்ன் வித் ஏ சில்வர் ஸ்பூன்' என்ற, ஆங்கிலச் சொலவடை உண்டே... அது போல தான் உங்கள் பிறப்பும், வாழ்க்கையும்!பிறந்த சில ஆண்டுகளிலேயே, உயர்தர, நறுமணம் மிக்க சென்ட், லிப்ஸ்டிக், அரிதாரம் என வளைய வந்தவர்களுடன், உங்கள் வாழ்க்கைப் பயணம் தொடங்கி விட்டது; 60 ஆண்டுகளாய், அப்படியே பழகி விட்டீர்கள்.இனி, நிலைமை அப்படி இருக்கப் போவதில்லை. வியர்வை நாற்றத்துடன், ஓடி ஆடி வேலை செய்ய வேண்டிய உங்கள், பி.ஏ., முதல், கடைமட்ட தொண்டர்கள் வரையிலானோரின் நெருக்கத்தில் தான் நீங்கள் பணியாற்ற வேண்டும். அதற்குப் பழகி இருக்கிறீர்களா?இங்கு தான், எம்.ஜி.ஆரை நினைவுகொள்ள வேண்டி இருக்கிறது. அவருடைய இளமைப் பருவம், மிகவும் வறுமை வாய்ந்ததாகவே அமைந்திருந்தது. ஒரு வேளை சோற்றுக்கு வழி இல்லாதவராக, ஏதாவது ஒரு நாடகக் கம்பெனியிலாவது நடிக்க வாய்ப்பு கிடைக்காதா, கண்ணால் காசைப் பார்க்க முடியாதா என்று ஏங்கித் தவித்த வாழ்க்கை அவருடையது. வயிற்றுப் பசியின் வலியும், வியர்வையின் நாற்றமும்

அவருக்குப் பழக்கப்பட்டே இருந்திருக்கின்றன.இவற்றை உணர்ந்திருக்க, இவ்வளவு நாள் பழக்கப்பட்டிருக்கா விட்டாலும், இனி நீங்கள் பழகியாக வேண்டும்; சற்றே உணர்ச்சி வசப்பட்டு நீங்கள் அடிக்கடி பேசும் வார்த்தைகளும் உங்களுக்கு இதுநாள் வரை, எதிரியாகவே அமைந்து விட்டன. சரி... இனி, இவை எல்லாவற்றையும் மறப்போம்.கட்சியின் கடைமட்டத் தொண்டரையும் அனுசரித்துப் போக வேண்டிய நேரமிது; மற்ற கட்சியினரின், எடக்கு மடக்குப் பேச்சை, அவர்கள் மனம் நோகாமல் சமாளிக்க வேண்டிய தருணம்; தொண்டர்கள், நிர்வாகிகள் சற்றே ஓய்வெடுக்க வேண்டிய நேரம் வரும் நேரத்திலெல்லாம், சினிமா வாழ்க்கையில் நீங்கள் பின்பற்றிய, 'பர்பெக்ஷன்' எனும் ஆயுதத்தைக் கைவிட வேண்டிய நிர்ப்பந்தம்; ஒரு வேளை, முதல்வர் நாற்காலி கிடைத்தால், நிர்வாகம், மாநிலத்தின் பாதுகாப்பு ஆகிய இரண்டையும், கண்ணும், கருத்துமாகக் கையாள வேண்டிய கடமை என, பல விஷயங்கள் காத்திருக்கின்றன.அடுத்து வர இருக்கிறார், கண்டக்டராகத் தன் வாழ்க்கையைத் துவங்கி, சினிமாவில் ஆட்டோக்காரன், பால்காரன், தாதா போன்ற வேடங்களில் நடித்த உங்கள் நண்பர்... அவரையும் சமாளிக்க வேண்டும்!
முடியுமா உங்களால்... பொறுத்திருந்து பார்ப்போம் நாங்கள்!

வீ.சீனிவாசன், சமூக நல விரும்பிமைலாப்பூர், சென்னை.

NEET 2018: Delhi HC Stays CBSE Notifications On Upper Age Limit And NIOS | Live Law

NEET 2018: Delhi HC Stays CBSE Notifications On Upper Age Limit And NIOS | Live Law: Delhi High Court on Wednesday stayed the CBSE notification introducing the upper age limit of 25 years for unreserved candidates and 30 years for reserved category candidates for NEET 2018. The High Court has also stayed the notification barring the students from Open Schools (NIOS) from participating in the NEET. A Division Bench of Justices …

புதன் கிழமை முதல் வருகிறது RELIANCE BIG TV: ஒரு வருடத்துக்கான HD சேனல்கள்,SET TOP BOX இலவசம்

ரிலையன்ஸ் நிறுவனம் பிக் டிவி என்கிற சேவையைத் தொடங்குகிறது.
செட் டாப் பாக்ஸை இலவசமாகத் தருவதோடு, முக்கியமான ஹெச்டி சேனல்களை ஒரு வருடத்துக்கு இலவசமாகவும் தரவுள்ளது.

இது குறித்து கொடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், "ரிலையன்ஸ் பிக் டிவி ஒரு புதிய விடியலின் ஆரம்பமாக, இந்தியர்கள் அவர்களது தொலைக்காட்சி பெட்டிகள் மூலம் பொழுதுபோக்கை நாடிய விதத்தை மாற்றவுள்ளது. புதன்கிழமை முதல், ரிலையன்ஸ் பிக் டிவியின் சலுகையோடு பொழுதுபோக்கு இலவசமாகக் கிடைக்கவுள்ளது.

ஒவ்வொரு இந்திய வீட்டிலும் உயர் தர பொழுதுபோக்கு கிடைக்கும். நவீன ஹெச்டி செட் டாப் பாக்ஸுடன், மாணவர்கள் கல்வி ரீதியான விஷயங்களை இலவசமாக பார்க்கலாம்" என்று ரிலையன்ஸ் பிக் டிவி பிரிவின் இயக்குநர் விஜேந்தர் சிங் குறிப்பிட்டுள்ளார்.

ரிலையன்ஸின் இந்த சலுகை மூலம், பல கட்டண சேனல்களை (ஹெச்டி சேனல்கள் உட்பட) ஒரு வருடத்துக்கு இலவசமாகப் பார்க்கலாம். இலவச ஒளிபரப்பில் இருக்கும் 500க்கும் மேற்பட்ட சேனல்களும் ஐந்து வருடத்துக்கு இலவசமாகக் கிடைக்கிறது. இது பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவையொட்டிய திட்டம் என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

EXAM WISHES

Now, enjoy ad-free, Alexa-enabled songs on Amazon Prime Music in India
 
Users can simply tap the Alexa icon in the Amazon Prime Music app and ask for favourite songs, albums and artists.

IANS
Wednesday, February 28, 2018 - 22:03


Amazon.in on Wednesday launched Amazon Prime Music -- an ad-free streaming service with innovative voice controls with digital assistant Alexa -- for its Prime members in the country.

Amazon Prime members can now enjoy their favourite music across millions of songs in multiple languages at no additional cost to Prime membership, the company said in a statement.

Amazon Prime Music is available to play on Android and iOS mobile phone apps, Desktop app and Web player, Amazon Fire TV sticks and Amazon Echo devices.

Amazon Prime Music includes songs across major international and Indian music labels in over 10 languages including English, Hindi, Tamil, Punjabi, Bengali, Kannada, Telugu and more.

"With ad-free streaming at no additional cost to Prime members, Amazon Prime Music offers a welcome break from text and voice ads that come between you and your favourite music," said Sahas Malhotra, Director, Amazon Music India.

"Moreover, with voice controls, the music listening experience cannot get any simpler," he added.

Users can simply tap the Alexa icon in the Amazon Prime Music app and ask for favourite songs, albums and artists.

Amazon Prime Music has specially created playlists and stations to cater to Indian customers. Users can also build their own playlist and share playlists with family and friends.

"Prime members will enjoy this latest addition with benefits that already include unlimited streaming of movies and TV shows with Amazon Prime Video and unlimited free fast delivery on eligible items from India's largest online selection of products, early access to top deals and more" added Amit Agarwal, Senior Vice President and Country Head, Amazon India.

Customers who are not Prime members and want access to Amazon Prime Music can visit www.amazon.in/prime to learn more, the company said.

NEWS TODAY 31.01.2026