Tuesday, April 24, 2018

Biryani battle: Court favours Thalappakatti in tussle over name

TIMES NEWS NETWORK   24.04.2018

Chennai : The Madras high court on Monday restrained the Dindigul Thalappakattu restaurant located on the Chennai- Tirupati bypass in Thiruvallur district from using the name after a civil suit was filed against it by the owners of the Thalappakatti Naidu Ananda Vilas Biriyani Hotel in Chennai.

The petitioners, who own the trademark to the brand ‘Thalappakatti’, had won a long-drawn legal tussle five years ago with a chain of biryani kiosks named ‘Thalappakattu’.

Justice C V Karthikeyan granted interim injunction after the petitioners alleged that the restaurant on the Chennai-Tirupati bypass infringed on their trademark and trading style by using an imitation of their trademark.

The counsel for the petitioners submitted that the mark of Thalappakatti Naidu Ananda Vilas Biriyani Hotel had been declared a “well known trademark” by the deputy registrar of trade marks in an order dated September 22, 2010, and further declared that the petitioners are the prior users and adopter of the mark “Thalappakatti”.

The Dindigul Thalappakattu restaurant located on Chennai-Tirupati bypass had commenced adopting identical or deceptively similar trademark and trading style since their inauguration in February 2018, the petition stated, adding that they had adopted the trademark and trading style of “Dindigul Thalappakatti Biriyani”, and also used the same red background on the board to deceive the public .

The Chennai-based entrepreneur signed a memorandum in which he stated that he would not use the name and that he would remove the name from all the 29 outlets of Dindigul Thalappakattu restaurant in the city and Madurai.
TN engg applications go online from May 3 
 
Sports, Disabled Candidates To Appear In Person

TIMES NEWS NETWORK

Chennai: Online registration and filling of applications for the Tamil Nadu Engineering Admissions (TNEA) will commence on May 3 while the last date for candidates to register is May 30, higher education minister K P Anbalagan said on Monday.

Single window counselling for admissions to engineering colleges across the state will go online for the first time this year. However, counselling for sports category, differently abled, vocational, SC-SCA and supplementary counselling will be held in person in Chennai. Original certificate verification for sports category will also be held in Chennai.

Counselling is expected to be held in the first week of July but may vary depending on the medical counselling, said the minister. This year, a total of 567 colleges will participate in the single window counselling process while 19 colleges have opted out due to application for closure. This has reduced the number of engineering seats by 4,695, said TNEA officials.

A total of 42 TNEA Facilitation Centres (TFCs) have been established across districts to guide rural applicants and those without internet facilities through the online process. The TFC for Chennai will be the Ramanujan Computing Centre, Anna University, Guindy. They will be equipped with internet enabled computer systems/ printers, trained personnel and a seminar hall along with water and sanitary facilities.

The counselling process will take place in three phases. The first phase will involve online registration where applicants are required to pay ₹500 (₹250 for SC/SCA/ ST). For the second phase of certificate verification, all students must go to the TFCs with their applications, original certificates and photocopies.

They will be given around aweek for this. During this time, a booklet with information on all colleges, seats and courses will be handed out to the candidates and also made available online, said TNEA secretary U Rhymend. A merit list of eligible candidates will be published on the TNEA portal. Candidates may contact the TNEA office for any grievances regarding the list.

The third phase of counselling will be held over five rounds. "Each round will go on for five days in which the candidate will take the first three days to enter their option (college/course) tentatively and may take the next two days to confirm the allotment given to them. Students may do this online but can also approach the TFCs for the counselling process," he said. The applicants are required to pay a sum of ₹5,000 (₹1,000 for SC/SCA/ST) as initial deposit for college admissions. 


பணத் தட்டுப்பாடு உருவாக்கும் அச்சம்: என்ன செய்கிறது அரசு

Published : 23 Apr 2018 09:43 IST


நீரை மகேந்திரன்

 


பேருந்து கட்டணம் இல்லாமல் நடுவழியில் தவித்தவர்கள், மருந்து வாங்க பணமில்லாததால் இறந்த குழந்தை, பாதியில் நின்ற திருமண ஏற்பாடு, சிறு வியாபாரிகளை ஒரே நாளில் கையேந்த வைத்தது என பணமதிப்பு நீக்கம் ஏற்படுத்திய காயங்கள் இன்னமும் மக்கள் மனதிலிருந்து ஆறவில்லை. புழக்கத்தில் இருந்த 86 சதவீத பணத்தை ஒரே கையெழுத்தில் செல்லாது என அறிவித்தார் பிரதமர் மோடி. ஏடிஎம் வாசல்களிலும், வங்கி வாசல்களிலும் மக்கள் பணத்துக்காக நாட்கணக்கில் காத்துக் கிடந்தனர். 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி என்றதுமே பலருக்கும் இந்த நினைவுகள் வந்து நெஞ்சில் மோதலாம். அந்த பாதிப்பிலிருந்து இன்னமும் மீளாத இந்த பதினைந்து மாதங்களில் மீண்டும் அப்படியான ஒரு நிலை உருவாகி வருகிறது.

கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் பல நகரங்களில் பெரும்பாலான ஏடிஎம் இயந்திரங்கள் பணமில்லாமல் மூடிக் கிடக்கின்றன. அறிவிக்கப்படாத பணத் தட்டுப்பாடு காரணமாக மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மீண்டும் ஒருமுறை பால்பவுடர் வாங்க பணமில்லாத நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்கின்றனர். மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் மக்களின் பணத்தேவைகளை சரியாகக் கணிக்கவில்லை என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். பணமதிப்பு நீக்கத்தால் மக்கள் மின்னணு பரிவர்த்தனைக்கு மாறுவார்கள் என்கிற இலக்கு தோல்வியடைந்த நிலையில், பணத் தட்டுப்பாட்டால் அதை உருவாக்க முனைவதாக ஒருசில தகவல்கள் வெளிவந்துள்ளன.

உண்மையில் இவை மட்டும்தான் காரணமா... என்னதான் நடக்கிறது இந்தியாவின் பணப் புழக்கத்தில்.? என்னதான் செய்கிறது அரசு?

பணத் தேவை அதிகரிப்பு

மக்கள் வங்கிகளில் இருந்து பணம் எடுக்கும் அளவு கடந்த மூன்று மாதங்களில் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் ரூ.1.4 லட்சம் கோடி பணம் எடுக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டில் இதே காலத்தில் 1.1 லட்சம் கோடி எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் பணமதிப்பு நீக்கம் காரணமாக பணம் எடுக்கும் விவரங்களை ஒப்பிட முடியாது. அதுபோல டெபாசிட்களை பொறுத்தவரை மார்ச் மாத நிலவரப்படி 6.7 சதவீதமாக உள்ளது. ஆனால் கடந்த ஆண்டில் இது 15.3 சதவீதமாக இருந்தது. மக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்யும் விகிதம் குறைந்துள்ளதுடன், பணம் எடுக்கும் போக்கும் அதிகரித்துள்ளது.

பற்றாக்குறை புழக்கம்

வளர்ச்சி அதிகமாக இருப்பதால் மக்களிடம் இருக்கும் பணத்தின் அளவு ரூ.19.4 லட்சம் கோடியாக இருக்கிறது. ஆனால் பணப் புழக்க மதிப்போ ரூ.17.5 கோடியாக இருக்கிறது. இதனால் உருவாகும் பற்றாக்குறை காரணமாகத்தான் பணத் தட்டுப்பாடு உருவாகியுள்ளது என்கிறது எஸ்பிஐ அறிக்கை. ஆனால் இந்த பற்றாக்குறை தொகை ரூ.1.9 லட்சம் கோடிதான். அதிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை மதிப்பு ரூ.1.2 லட்சம் கோடியாக உள்ளது. இதனால் ரூ.70,000 கோடி அளவுக்கு பணத்தட்டுப்பாடு இருக்கும் என்கிறது எஸ்பிஐ ஆய்வு.

ஏடிஎம் இயந்திர குழப்பம்

பணமதிப்பு நீக்கத்துக்கு பின்னர் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்ப ஏடிஎம் இயந்திங்களில் பணம் அடுக்கும் பெட்டியிலிருந்து, மென்பொருட்கள் வரை மாற்ற வேண்டும். பணமதிப்பு நீக்க காலத்தில் இந்த கட்டமைப்புக்கு வங்கிகள் ரூ.3,800 கோடி வரை செலவு செய்தன. 200 ரூபாய் நோட்டு வெளியிடப்பட்ட பிறகு ஏடிஎம் சேவை வழங்கும் நிறுவனங்கள் இயந்திரங்களின் கட்டமைப்பை மாற்றவில்லை. ஏற்கெனவே ரூ.3,800 கோடி நஷ்டம் என்பதால் மீண்டும் இதற்காக வங்கிகள் செலவிடவில்லை.

அச்சடிப்பு நிறுத்தம்

ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது 44 சதவீதம் குறைந்துள்ளதாக சில தகவல்கள் வெளிவந்துள்ளன. நாசிக் ரூபாய் நோட்டு அச்சகத்தில் 500 ரூபாய் நோட்டு அச்சடிப்பதை 2017- ம் ஆண்டு நவம்பரிலிருந்து நிறுத்தியுள்ளனர். ரூ.200, ரூ.100, ரூ.20 நோட்டுகளையும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நிறுத்தியுள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன. 2017-18-ம் ஆண்டுக்கான 500 ரூபாய் அச்சடிப்பு அளவு முடிந்துவிட்டதால் நிறுத்தப்பட்டுள்ளது.

இதர ரூபாய் நோட்டுகள் புதிய வடிவமைப்பில் கொண்டு வரும் திட்டம் உள்ளதால் அச்சடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த தகவல் குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை முதல் 2000 ரூபாய் நோட்டுகளை அளிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டது.

ஆர்பிஐ கட்டுப்பாடுகள்

வங்கிகளின் பணத் தேவைக்கும் ஆர்பிஐ அளிப்புக்கும் மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. ஒரு மாதத்திற்கு வங்கிகளுக்கு 40,000 கோடி முதல் 45,000 கோடி வரை தேவைப்படுகிறது. ஆனால் ஆர்பிஐ 20,000 கோடிதான் அளிக்கிறது. மக்களின் பணத்தட்டுப்பாட்டை பயன்படுத்தி பேடிஎம் போன்ற தனியார் செயலி நிறுவனங்கள் வளர்கின்றன.

தேர்தல் பதுக்கல்

கர்நாடக மாநில தேர்தலுக்கு பயன்படுத்துவதற்காக அதிக அளவு 2,000 ரூபாயை அரசியல் கட்சியினர் பதுக்கியுள்ளனர் என்கிற கருத்தும் நிலவுகிறது. ஆனால் எப்போதுமே இந்தியாவின் ஏதாவது ஒரு மாநில தேர்தல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பல மாநில தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடந்தபோதும் இந்தியா முழுவதும் பணத் தட்டுப்பாடு உருவானதில்லை.

2000 ரூபாய் நோட்டு

நாட்டின் உயர் மதிப்பிலான பணம்தான் பதுக்கலுக்கு பயன்படுகிறது என 1000 ரூபாய் நோட்டை தடை செய்தது அரசு. ஆனால் அதற்கு பதிலாக உயர்மதிப்பாக 2000 ரூபாய் நோட்டை கொண்டுவந்தது. “இந்த பணம் அதிக மதிப்பு கொண்டதால் மக்கள் கையில் சாதாரணமாக அதிகம் புழங்கவில்லை. அதனால் தினசரி பரிமாற்றத்துக்கு பயன்பட்ட நோட்டாகவும் இல்லை. ஆனால் அதிலும் தட்டுப்பாடு நிலவுகிறது” என்கிறார் எம்பேஸ் பேமண்ட் சிஸ்டத்தின் ரவி ராஜகோபாலன். மொத்த பணமதிப்பில் 52.2 சதவீதம் 2,000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. ஆனால் பணப் பதுக்கல்காரர்களுக்கு முன்பைவிடவும் புதிய உயர்பணமதிப்பு நோட்டுகள் வசதியாக உருவானது.

இந்த நிலையில்தான் நிதியமைச்சர் அருண்ஜேட்லி வழக்கம்போல இந்த குழப்பத்தை வீணான வதந்தி என மறுதலித்துள்ளதுடன், பணத் தேவை அதிகரித்துள்ளதால் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது என்கிறார். பணத் தேவைகள் அதிகரித்துவரும் நிலையில் புதிய வடிவமைப்புக்காக ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது ஏன் நிறுத்தப்பட வேண்டும்? மக்களின் பணத் தேவைகளை ஏன் முன்கூட்டியே கணிக்கவில்லை என கேள்வி எழுகிறது. ரிசர்வ் வங்கியும், அரசும் வங்கிகளை தவறாக வழி நடத்துகின்றன என முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கூறும் குற்றசாட்டுகளை புறம் தள்ள முடியாது.

பணமதிப்பு நீக்கம் குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், “பணமதிப்பு நீக்கம் திட்டமிடாமல் செயல்படுத்திய ஒன்று. அதனால் கிடைத்த பயன்கள் மிகவும் குறைவு. வரலாறுக்கு வேண்டுமானால் பயன்படும்” என்று கடுமையாக சாடியுள்ளார்.

பணமதிப்பு நீக்கத்தால் மின்னணு வர்த்தகம் அதிகரிக்கும் என்றனர். பணத் தேவை அதிகரித்துள்ளது. பணத்தட்டுப்பாடும் நிலவுகிறது. 1,000 ரூபாய் கறுப்பு பணம் ஒழியும் என்றனர். இப்போதோ 2,000 ரூபாயாக பதுக்கப்படுகிறது. பணமதிப்பு நீக்கம் போல, இந்த முறையும் தலையைச் சொறிய கொள்ளிக் கட்டையை எடுத்தால் நிர்வாக திறமையற்ற அரசு என நொந்து கொள்வதைத் தவிர வழியில்லை.

-maheswaran.p@thehindutamil.co.in

கால் டாக்ஸியில் ரூ.14.7 லட்சத்தை தவறவிட்ட துபாய் பயணி: ஜாலியாக செலவு செய்து சிக்கிய ஓட்டுநர்

Published : 23 Apr 2018 15:18 IST

சென்னை



சௌதி ரியால், கைதான கால்டாக்சி ஓட்டுநர் மதன்குமார், கண்காணிப்பு கேமரா பதிவு படம்: சிறப்பு ஏற்பாடு

சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கால் டாக்ஸியில் பயணம் செய்த துபாய் பயணி ஒருவர் ரூ.14.7 லட்சத்தைத் தவறவிட்டார். அதை உரியவரிடம் ஒப்படைக்காமல் ஜாலியாக செலவு செய்த ஓட்டுநர் போலீஸாரிடம் சிக்கினார்.

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த தோல் தொழில் செய்து வரும் தொழிலதிபர் அப்துல் ரஷீத் (40). இவர் துபாய் மற்றும் சவுதி அரேபியாவில் தொழில் செய்து வருகிறார். இவரும் இவரது நண்பர்கள் சிலரும் கடந்த மாதம் சென்னை வந்தனர், பின்னர் ரயிலில் கேரளா சென்றனர். இந்நிலையில் மீண்டும் துபாய் செல்ல கடந்த 13-ம் தேதி கேரளாவிலிருந்து நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிகாலை 5 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து இறங்கினர்.

அங்கிருந்து மதன் குமார் (39) என்பவரின் கால் டாக்ஸி மூலம் விமான நிலையத்துக்குச் சென்றுள்ளனர். விமான நிலையத்தில் இறங்கிய அப்துல் ரஷீத் மற்றும் அவரது நண்பர்கள் விமானத்தில் ஏறிவிட்டனர். அவர்களை ஏற்றிச்சென்ற கால் டாக்ஸியில் அப்துல் ரஷீத் தனது பை ஒன்றை தவறுதலாக விட்டு விட்டார். அதில் ரூ.14.75 லட்சம் மதிப்புள்ள 82 ஆயிரம் சவுதி ரியால் நோட்டுகள் இருந்தன.

மதன் குமாருக்கு பயணிகள் தவறவிட்டுச் சென்ற பை என்று தெரிந்தும் அதை போலீஸில் ஒப்படைக்க மனம் வரவில்லை. இரண்டு நாட்கள் அதை சும்மா வைத்திருந்த மதன் குமார் தனக்குத் தெரிந்த ஒருவர் மூலம் சவுதி ரியாலை இந்தியப் பணமாக மாற்றியுள்ளார்.

ரூ.12 லட்சம் கிடைத்துள்ளது. அந்தப் பணத்தில் ரூ.1.5 லட்சத்தில் தனது மனைவிக்கு நகைகள் வாங்கிக் கொடுத்துள்ளார். தனது வீட்டு உரிமையாளரிடம் ரூ.5.5 லட்சத்தை கொடுத்து லீஸ் அக்ரிமெண்ட் போட்டுள்ளார். வழக்கம் போல் சென்ட்ரலில் கால் டாக்ஸியை ஓட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் பணத்தைப் பறிகொடுத்த அப்துல் ரஷீத் சென்னை திரும்பியுள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த அவர் ரயில்வே போலீஸாரிடம் தனது கைப்பையை 82,000 ரியாலுடன் கால் டாக்ஸியில் தவற விட்டுவிட்டதாகவும் அதை ஓட்டுநர் எதுவும் ஒப்படைத்தாரா? என்றும் கேட்டுள்ளார்.

போலீஸார் இல்லை என்று தெரிவித்து, அந்த கால் டாக்ஸியின் அடையாளம் தெரியுமா? என்று கேட்டபோது அதிகாலை என்பதால் ஞாபகத்தில் இல்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து போலீஸார் 13-ம் தேதி அதிகாலை ரயில் நிலைய வாசலில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை ஆராய்ந்தபோது ஓட்டுநர் மதன் குமார் ரஷீதின் பையை தோளில் வைத்து தனது காருக்கு அழைத்துச்செல்வது தெரிய வந்தது.

உடனடியாக மதன் குமார் குடியிருக்கும் சூளை பகுதிக்கு சென்ற போலீஸார் அவரைக் கைது செய்தனர். மதனிடமிருந்து ரூ.4 லட்சம் ரொக்கப் பணம், அவரது மனைவிக்கு வாங்கிக்கொடுத்த நகைகளைப் பறிமுதல் செய்தனர். பொதுவாக பயணிகள் தவறவிடும் பொருட்களை நேர்மையாக ஒப்படைக்கும் ஓட்டுநர்களைப் பார்த்த போலீஸாருக்கு மதன் குமாரின் செய்கை அதிர்ச்சி அளித்துள்ளது.
கன்னியாகுமரி எக்ஸ்பிரசை நம்பாதீங்க : இணைப்பு ரயில் தாமதத்தால் அவதி

Added : ஏப் 24, 2018 05:17

நாகர்கோவில்: கன்னியாகுமரி--சென்னை எக்ஸ்பிரஸ் தினமும் தாமதமாவதால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்ல கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி ரயில்கள் உள்ளன. அனந்தபுரி ரயில் சென்னைக்கு காலை 8:00 மணிக்கு மேலும் செல்வதால், கன்னியா குமரி எக்ஸ்பிரஸ் ரயிலையே பயணிகள் விரும்புகின்றனர். மாலை 5:20க்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 6:00 மணிக்கு சென்னை சென்றடையும்.பெங்களூருவில் இருந்து கன்னியாகுமரி வரும் ஐலண்ட் எக்ஸ்பிரஸ் ரயில், இங்கிருந்து கன்னியாகுமரி எக்ஸ் பிரஸ் ரயிலாக புறப்படுகிறது. பெங்களூருவில் இருந்து வரும்போது கொல்லம் - திருவனந்தபுரம் இடையே பல சூப்பர் பாஸ்ட் ரயில்களுக்கும் வழிவிட வேண்டியுள்ளதால் கன்னியாகுமரிக்கு குறைந்தது அரைமணி முதல் இரண்டு மணி நேரம் வரை தாமதமாகிறது. இதனால் சென்னை செல்லும் பயணிகள் சிரமப்படுகின்றனர். எனவே கன்னியாகுமரி - சென்னை இடையே தனி ரயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
தெரியாமல் ஜெயித்து விட்டேன்! : புலம்பும் நடிகர் கருணாஸ்

Added : ஏப் 24, 2018 05:23

ராமநாதபுரம்: ''தெரிந்தோ தெரியாமலோ தேர்தலில் ஜெயித்து விட்டேன். ஏன் ஜெயித்தோம் என்று இப்போது நினைக்கிறேன்,'' என நடிகரும், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை எம்.எல்.ஏ.,வுமான கருணாஸ் புலம்பினார்.திருவாடானை தொகுதியில் குடிநீர் திட்டம் செயல்படுத்துவது குறித்து, கலெக்டர் நடராஜனை கருணாஸ் சந்தித்தார். பின் அவர் கூறுகையில், ''அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை. என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. தொகுதிக்குள் போக முடியவில்லை,'' என்றார்.'அப்படியானால் உங்கள் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய வேண்டியது தானே' என நிருபர்கள் கேட்டனர்.அதற்கு கருணாஸ்,''கடிதம் கொடுக்கவில்லை. தொகுதிக்கு எந்த பணியும் செய்ய முடியாமல் இந்த பதவி தேவையா என சட்டசபையில் பேசி விட்டேன். தெரிந்தோ தெரியாமலோ ஜெயித்து விட்டேன். ஏன் ஜெயித்தோம் என நினைக்கிறேன். மாவட்டத்தில் எனக்கு பாதுகாப்பே இல்லை. தொகுதிக்குள் வரும் போது, நான்கு பேரை நிறுத்தி இவர்களே கல் எறிகின்றனர். கேட்டால், இன்னொரு சமுதாயத்தினர் எறிந்ததாக சொல்கின்றனர். அமைச்சர் மணிகண்டனால்தான் நான் தொகுதிப் பக்கமே வருவதில்லை.இவ்வாறு கூறினார்.முன்னதாக, தளிர்மருங்கூர் கிராமத்தினர் குடிநீர் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்திருந்தனர். அப்போது, கருணாசை பார்த்து, 'நீங்கள் ஓட்டு கேட்க வந்தீர்கள் சார்... அதுக்கப்புறம் வரவே இல்லை' என்றனர்.
கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு

Added : ஏப் 24, 2018 02:36 | 



சிங்கப்பூர்: சிங்கப்பூரில், 164 ஆண்டுகள் பழமை வாய்ந்த, ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில், அந்நாட்டு பிரதமர், லீ சீன் லுாங் பங்கேற்றார்.

சிங்கப்பூரின், 'லிட்டில்இந்தியா' பகுதியில், 164 ஆண்டுகள் பழமையான, ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலை, 1978ல், தேசிய நினைவுச் சின்னமாக, சிங்கப்பூர் அரசு அறிவித்தது. கோவிலை, 29 கோடி ரூபாய் செலவில், நான்காவது முறையாக சீரமைக்கும் பணி, 2016ல் துவங்கியது. இப்பணியில், உள்ளூர் பக்தர்கள் மற்றும் தொழிலாளர்களுடன், தமிழகத்தைச் சேர்ந்த, சிற்ப மற்றும் ஓவியக் கலைஞர்களும் ஈடுபட்டனர்.

சீரமைப்புப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து, நேற்று முன்தினம், கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது, குடங்களில் எடுத்து வரப்பட்ட புனித நீர், ஒன்பது கோபுர கலசங்கள் மற்றும் கருவறையில் உள்ள பெருமாள் சிலை மீது தெளிக்கப்பட்டது.

இவ்விழாவில், 40 ஆயிரம் பக்தர்கள், சிங்கப்பூர் பிரதமர், லீ சீன் லுாங், பிரதமர் அலுவலக அமைச்சர், சான் சுன் சிங் உள்ளிட்ட நான்கு அமைச்சர்களும் பங்கேற்றனர்.

NEWS TODAY 30.06.2026