Tuesday, April 24, 2018

தெரியாமல் ஜெயித்து விட்டேன்! : புலம்பும் நடிகர் கருணாஸ்

Added : ஏப் 24, 2018 05:23

ராமநாதபுரம்: ''தெரிந்தோ தெரியாமலோ தேர்தலில் ஜெயித்து விட்டேன். ஏன் ஜெயித்தோம் என்று இப்போது நினைக்கிறேன்,'' என நடிகரும், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை எம்.எல்.ஏ.,வுமான கருணாஸ் புலம்பினார்.திருவாடானை தொகுதியில் குடிநீர் திட்டம் செயல்படுத்துவது குறித்து, கலெக்டர் நடராஜனை கருணாஸ் சந்தித்தார். பின் அவர் கூறுகையில், ''அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை. என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. தொகுதிக்குள் போக முடியவில்லை,'' என்றார்.'அப்படியானால் உங்கள் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய வேண்டியது தானே' என நிருபர்கள் கேட்டனர்.அதற்கு கருணாஸ்,''கடிதம் கொடுக்கவில்லை. தொகுதிக்கு எந்த பணியும் செய்ய முடியாமல் இந்த பதவி தேவையா என சட்டசபையில் பேசி விட்டேன். தெரிந்தோ தெரியாமலோ ஜெயித்து விட்டேன். ஏன் ஜெயித்தோம் என நினைக்கிறேன். மாவட்டத்தில் எனக்கு பாதுகாப்பே இல்லை. தொகுதிக்குள் வரும் போது, நான்கு பேரை நிறுத்தி இவர்களே கல் எறிகின்றனர். கேட்டால், இன்னொரு சமுதாயத்தினர் எறிந்ததாக சொல்கின்றனர். அமைச்சர் மணிகண்டனால்தான் நான் தொகுதிப் பக்கமே வருவதில்லை.இவ்வாறு கூறினார்.முன்னதாக, தளிர்மருங்கூர் கிராமத்தினர் குடிநீர் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்திருந்தனர். அப்போது, கருணாசை பார்த்து, 'நீங்கள் ஓட்டு கேட்க வந்தீர்கள் சார்... அதுக்கப்புறம் வரவே இல்லை' என்றனர்.

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...