Tuesday, April 24, 2018

கன்னியாகுமரி எக்ஸ்பிரசை நம்பாதீங்க : இணைப்பு ரயில் தாமதத்தால் அவதி

Added : ஏப் 24, 2018 05:17

நாகர்கோவில்: கன்னியாகுமரி--சென்னை எக்ஸ்பிரஸ் தினமும் தாமதமாவதால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்ல கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி ரயில்கள் உள்ளன. அனந்தபுரி ரயில் சென்னைக்கு காலை 8:00 மணிக்கு மேலும் செல்வதால், கன்னியா குமரி எக்ஸ்பிரஸ் ரயிலையே பயணிகள் விரும்புகின்றனர். மாலை 5:20க்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 6:00 மணிக்கு சென்னை சென்றடையும்.பெங்களூருவில் இருந்து கன்னியாகுமரி வரும் ஐலண்ட் எக்ஸ்பிரஸ் ரயில், இங்கிருந்து கன்னியாகுமரி எக்ஸ் பிரஸ் ரயிலாக புறப்படுகிறது. பெங்களூருவில் இருந்து வரும்போது கொல்லம் - திருவனந்தபுரம் இடையே பல சூப்பர் பாஸ்ட் ரயில்களுக்கும் வழிவிட வேண்டியுள்ளதால் கன்னியாகுமரிக்கு குறைந்தது அரைமணி முதல் இரண்டு மணி நேரம் வரை தாமதமாகிறது. இதனால் சென்னை செல்லும் பயணிகள் சிரமப்படுகின்றனர். எனவே கன்னியாகுமரி - சென்னை இடையே தனி ரயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...