Tuesday, May 1, 2018

சிங்கப்பூர் சென்ற அதிகாரிகளிடம் அறிக்கை கேட்கிறது தமிழக அரசு

Added : மே 01, 2018 01:56

போக்குவரத்து சார்ந்த வளர்ச்சி குறித்து, சிங்கப்பூரில் நடந்த சர்வதேச மாநாட்டுக்கு சென்ற, சென்னை பெருநகர் வளர்ச்சி குழும அதிகாரிகளை, அது தொடர்பான புதிய திட்டங்களுக்கான அறிக்கை அளிக்குமாறு, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.நகர்ப்புற வளர்ச்சி தொடர்பாக, வெளிநாடுகளில் நடத்தப்படும் பல்வேறு மாநாடுகளுக்கு, தமிழகத்தில் இருந்து, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் சென்று வருவது வழக்கம். இவ்வாறு சென்ற அதிகாரிகள், அங்கு அறிந்த விஷயங்கள் அடிப்படையில், புதிய திட்டங்களை, அரசுக்கு பரிந்துரைப்பது இல்லை.இதனால், இதற்கு ஆகும் செலவுகள், பயிற்சி மேம்பாடு என்ற கணக்கில் எழுதப்படுவதுடன், நிறுத்திக் கொள்ளப்படுகிறது. இதில், சில கண்காணிப்பு நடவடிக்கைகளை, தமிழக அரசு துவக்கியுள்ளது.இதன்படி, போக்குவரத்து சார்ந்த வளர்ச்சி என்ற தலைப்பில், சர்வதேச மாநாடு, மார்ச் மாதம், சிங்கப்பூரில் நடந்தது. இதில் பங்கேற்க, சி.எம்.டி.ஏ.,வில் இருந்து, சீப் பிளானர்கள் என். உஷா, என்.கனகசபாபதி, சீனியர் பிளானர்கள், என்.எஸ்.பெரியசாமி, ஏ.கிருஷ்ணகுமார் ஆகியோர் சென்றனர்.அந்த மாநாட்டில் அறிந்த விஷயங்கள் அடிப்படையில், தமிழக சூழலில் செயல்படுத்த கூடிய திட்டங்களை, அரசின் திட்டமிடல் மேம்பாடு மற்றும் சிறப்பு திட்டங்கள் அமலாக்க துறைக்கு, அறிக்கையாக அனுப்ப, தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

- நமது நிருபர் -
புதிய சாதனை படைத்த சிக்கிம் முதல்வர்

Added : மே 01, 2018 06:41




புதுடில்லி : நாட்டிலேயே அதிக நாள் முதல்வராக இருந்த ஜோதிபாசுவின் சாதனையை முறியடித்து, சிக்கிம் முதல்வர் பவன் சாம்லிங்க்(67) புதிய சாதனையை படைத்துள்ளார்.

நாட்டில் அதிக நாள் முதல்வராக இருந்தவர் என்ற சாதனையை மேற்கு வங்க முதல்வராக இருந்த ஜோதிபாசு (மார்க்சிஸ்ட் கம்யூ.,) தன் வசம் வைத்திருந்தார். அவர் 1977 ஜூன் 21ம் தேதி மேற்குவங்க முதல்வராக பதவியேற்றபின், 2000 நவ.,6ம் தேதி வரை தொடர்ந்து மேற்கு வங்க முதல்வராக நீடித்தார். அவரது இச்சாதனையை சிக்கிம் முதல்வர் பவன் சாம்லிங்க் முறியடித்துள்ளார்.

சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் தலைவரான பவன்ர், 1994 டிச.,12ம் தேதி சிக்கிம் மாநில முதல்வராக பதவியேற்றார். தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்ற அவர், அம்மாநில முதல்வராக தற்போது வரை நீடித்து வருகிறார். இந்நிலையில் நாட்டில் அதிக நாள் முதல்வராக இருந்தவர் எனும் சாதனைகயை பவன் தற்போது சொந்தமாக்கியுள்ளார்.
'மையம் விசில் மொபைல் செயலி,
ஊழல்களை ஊதி பெரிதாக்கும்' 
 
சென்னை: ''போலீசுக்கோ, அதிகாரிகளுக்கோ மாற்றானது அல்ல, 'மையம் விசில்' செயலி. அவர்களுக்கு உதவி செய்யக்கூடிய; அவர்களையே விமர்சனம் செய்யக்கூடிய கருவியாக இருக்கும்'' என, மக்கள் நீதி மைய தலைவரும், நடிகருமான கமல் தெரிவித்தார்.

மையம் விசில்,மொபைல் செயலி,ஊழல்களை ஊதி பெரிதாக்கும்,கமல்


மக்கள் நீதி மையம் கட்சியின், 'மையம் விசில்' என்ற மொபைல் செயலி, நேற்று செயல்பாட்டுக்கு வந்தது.

தூரத்து உறவு

இதை, அறிமுகம் செய்து, கமல் பேசியதாவது: பத்திரிகையாளர்கள் செய்யும் விஷயத்தை, சாமானியனும் செய்யத் துாண்டும் வகையிலானது, மையம் விசில் செயலி.

பத்திரிகையாளர்களின் பலம் வேறு. அவர்களுக்கு துணையாக, தூரத்து உறவாக இந்த செயலி வழியாக, மக்கள் நீதி மையத்தினர் பணிபுரிவர்.

ஊதி பெரிதாக்கும்

அவர்களிடமிருந்து நல்ல, கெட்ட செய்திகளை பத்திரிகையாளர்களும் அறியலாம். நம்மைச்சுற்றி நடக்கும் குற்றங்கள், ஊழல்கள், மாசு இவற்றை எல்லாம் ஊதி பெரிதாக்கும், ஒரு அபாய சங்காக, இந்த செயலி இருக்கும். இதன் வழியாக, சுட்டிக்காட்டப்படும் தவறை, கண்காணிக்கும் ஏஜென்சியாக, மக்கள் நீதி மையம் செயல்படும்.

இதன் வாயிலாக, குறைகளை எல்லாம் ஒரேயடியாக தீர்த்து விட முடியாது. செவி சாய்க்கவும், கண் பார்க்கவும் ஒரு கருவியாக, மக்கள் நீதி மையத்திற்கு இது உதவும். தற்காப்பு காரணமாக, இந்த செயலியை, மக்கள் நீதி மைய உறுப்பினர்களுக்கு மட்டுமே தருகிறோம். இது, போலீசாருக்கோ, அதிகாரிகளுக்கோமாற்று அல்ல. ஆனால், அவர்களுக்கு

உதவக்கூடிய, விமர்சனம் செய்யக்கூடிய கருவியாக இருக்கும். நம் குறைகளை நாமே தெரிந்து கொண்டால், அந்த தவறில் நம் பங்கு என்ன என்பதை புரிந்து கொள்ள, மையல் விசில் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

'மையம் விசில்' செயலியை, உறுப்பினர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்; பிரச்னைகளை சுட்டிக் காட்ட முடியும். புகார்களை, கட்சி உறுப்பினர்கள் மூன்று பேர் தனித்தனியாக ஆய்வு செய்வர். புகார் உண்மை என தெரிந்தால், கட்சியின் உயர்மட்டக்குழு கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, April 30, 2018

காலை நடை அனுபவங்கள்

By வாதூலன்  |   Published on : 30th April 2018 02:07 AM
பதினைந்து ஆண்டுகளுக்கு முன் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, சென்னைக்கு மீண்டும் குடியேறிய சமயம், அதிகாலை வேளையில் கடற்கரை காவல் நிலையம் வரை நடை பயில்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். பல தரப்பட்ட மனிதர்களை சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கும். அந்தக் கால தமிழ் இலக்கியத்தைப் பற்றிக் கொண்டாடும் தமிழ்ப் புலவர். அரை டிராயருடன் வடமொழித் தோத்திரங்களைப் பொருள் விளக்கி விஸ்தரிக்கும் கம்பெனி நிர்வாகி. வேல் மாறலுக்குப் பாட அழைப்பு விடுக்கும் முருக பக்தர். சைக்கிளில் முட்டுக் கொடுத்து, கீழே இறங்காமலேயே உள்ளூர்ச் செய்திகளை விவரமாகக் கூறும் பிரமுகர்... இப்படிப் பலர். பேச்சு முற்றும் முழுக்க அன்றைய அரசியல் ஆளுமைகளைப் பற்றித்தான் என்று சொல்ல வேண்டியதில்லை.
 ஒரு சில எம்.ஸிடி. பள்ளித் தோழர்களைப் பார்ப்பதுண்டு. வங்கியில் உடன் பணியாற்றிய அதிகாரிகளையும் கூட தற்செயலாகப் பார்த்ததுண்டு. ஆனால் அவர்கள் உரையாடலில் கலந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் ரசனையே வேறு!
 கிட்டத்தட்ட முக்கால் மணி நேரத்துக்கு மேல் நடையுடன் பேச்சையும் முடித்துவிட்டுத் திரும்பும்போது பேருந்துக்காக காத்து நிற்கும் இளைஞர்கள் கண்ணில் படுவார்கள். அனைவர் கையிலும் ஆங்கில நாவல், அல்லது ஏதாவதோர் அரசியல் ஏடு!
 இன்று எல்லாமே மாறிப் போய்விட்டது. கடற்கரைக்குப் போகும் வழியில் அடுக்குமாடிக் குடியிருப்புகளும் கடைகளும் பெருகிவிட்டன. கடந்து செல்லும் காலத்தின் கனம் பழைய நண்பர்களை அமுக்கிவிட்டது. யாருக்கும் முன்போல தாழ்வான படித்தளங்களில் அமர்ந்து பேசத் தெம்பில்லை. இன்றைக்குப் பேருந்துக்காக காத்திருக்கும் இளைஞர்கள் எல்லார் கையிலும் நவீன செல்லிடப்பேசிகள்! பேருந்து வரும் வரையில் - அது கல்லூரிப் பேருந்தானாலும் அவர்கள் பணியாற்றும் அலுவலகப் பேருந்தானாலும் - செல்லிடப்பேசியிலேயே நோட்டம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
 அன்றிலிருந்து இன்று வரை என் வயதொத்த சில மனிதர்களிடம் மாறாமல் காணப்படும் ஓர் இயல்பு - ஓயாமல் பழைய காலங்களை அசை போடுவது!
 "அதெல்லாம் பொற்காலம் சார்! இப்போது எல்லாம் கெட்டு குட்டிச்சுவராகிவிட்டது' என்று புலம்புவார்கள். அதே சூட்டோடு சூடாக, அயல்நாட்டில் வசிக்கும் தங்கள் பேரக்குழந்தைகளுடன் ஸ்கைப் போன்ற இணையவழியாக உரையாடுவதையும் பெருமையடித்துக் கொள்வார்கள்.
 "பொற்காலத்தில் ஏன் இத்தகைய நவீன வசதி இல்லாமற் போனது' என்று எனக்குத் தோன்றும். இந்த "வசதிகள்' இல்லாததால்தான் அது பொற்காலமாயிருந்ததோ என்றும் எனக்கு ஒருசில சமயம் தோன்றியதுண்டு.
 சில வசதியானவர்கள் காடாறு மாதம், நாடாறு மாதம் என்பதுபோல, வெளிநாடு சென்று, பிள்ளை பேரன்களுடன் சிறிது காலம் கழித்துவிட்டு உலகம் சுற்றிய வாலிபராகத் திரும்பி வருவார்கள். இது போன்ற ஒரு நண்பர் காலை நடையின்போது, எங்கள் குடும்ப நலனை விசாரித்து, "உங்களுக்குப் பரவாயில்லை, பையன் பெண் இந்தியாவிலேயே இருக்கிறார்கள். என்னைப் பாருங்கள், ரெண்டு பையன்களும் அயல்நாட்டில். நாங்கள் அநாதைகள்' என்று சொன்னார். அவர் கையில் கனமான காய்கறிப் பை இருந்தது.
 நான் பதில் சொல்ல வாயெடுக்கும் முன் என் மனைவி பதிலடி கொடுத்தாள் -"உங்களை யார் அவர்களை அங்கெல்லாம் அனுப்பச் சொன்னது? உங்களுக்கும் அந்தப் பெருமை வேண்டித்தானே இருக்கிறது? இப்படிப் பேசாதீர்கள்' என்று சற்று வேகமாகவே கூறிவிட்டாள். நண்பர் மெளனமாக நகர்ந்துவிட்டார்.
 பாவம், ஏதோ அதிருப்தி இருப்பது போலப் பாசாங்கு செய்து, கூட இரண்டு சர்டிபிகேட் வாங்க வேண்டுமென்று எதிர்பார்த்தார். என் மனைவி அதற்கு இடம் தரவில்லை. இதனால் நண்பருக்கும் எனக்கும் சில நாள் மனத்தாங்கல் இருந்தது வேறு விஷயம்.
 ஆனாலும் மனைவி அல்லது மகள் என ஸ்திரீகளுடன் காலை நடை போவது சற்று வித்தியாசமான அனுபவம்தான். அங்கங்கு ஏதாவது காய்கறியோ, மளிகைப் பொருளோ மலிவாக விற்கும் கடை நடைபாதையில் தெரிந்தால், சட்டென்று நின்றுவிடுவார்கள். ஆந்திரா சித்தூரிலிருந்து புளி, தனியா; தென் மாவட்டங்களிலிருந்து பனங்கற்கண்டு, சில்லுக்கருப்பட்டி இத்யாதி... எனவே அவ்விதம் போகும்போது பர்ஸ் கனமாக இருக்கும்படி பார்த்துக் கொள்வேன்.
 அடுத்தது, உணவு சாதனங்களுக்கு சமமாக பெண்களை ஈர்ப்பது உடை. அதாவது, பிரபல கடைகளில் வாங்குவது அல்ல. இது வேறு ரகம்: சிவன் கோயிலில் ஏலம்விடும்போது வாங்குவது; ஏதாவது கோயில் விசேஷத்தின்போது, பந்தக்கால் நடும்போது கிடைப்பது. இத்தனைக்கும் புடவையின் தரம் சுமாராகத்தான் இருக்கும். இருந்தாலும் அதைப் பற்றி சக பெண்மணிகளிடம் ரசித்துப் பேசுவது அவர்களுக்கு கூடுதல் சுவாரஸ்யமாயிருக்கும்.
 மூன்றாவது - வீடு. எங்குமிருப்பது போல எங்கள் பகுதியிலும் மளமளவென்று அடுக்குமாடிக் குடியிருப்புகள் எழும்புகின்றன. பாதியில் நிற்கிற கட்டடங்கள்; சொன்னபடி அடுக்குமாடி வீட்டை முடிக்க இயலாமல் திணறுகிற ஒப்பந்தக்காரர்கள்; தனி வீட்டிலிருந்து அடுக்குமாடிக்கு குடிபுகுந்தவர்களுக்கு நேரும் சிரமங்கள்; இவற்றைப் பற்றி காலை நடையில் பெண்கள் பேசத் துவங்கினால் போதும்... பேச்சு நீண்டு கொண்டே போகும்.
 ஆக, ஆதி மனிதன், எஸ்கிமோ போல மூன்று "உ"க்கள் (உணவு, உடை, உறைவிடம்)தான் இன்றும் புதிய வடிவில் முன்னுரிமை பெறுகின்றன.
 இப்போதெல்லாம் காலத்தின் அழுத்தம் காரணமாக காலை நடை என்பது அருகிலுள்ள கோயில் வரைக்கும்தான் எனச் சுருங்கிவிட்டது. எவ்வாறாயினும், மூத்த குடிமக்களுக்கு காலை நடை என்பது உகந்த, உவப்பான விஷயம்தான். இளங்காலை வெயிலும் மிதமான காற்றும் புத்துணர்வைக் கூட்டுகிறது. நண்பர்களிடம் செய்திகளைப் பகிர்ந்து கொள்வதால் மனச்சுமை குறைகிறது. தெரிந்தவர்களின் வட்டத்தைப் பெருக்குகிறது. சில நினைவுகள் ஞாபக சக்தியை வளர்க்க வழி வகுக்கிறது.
 ஆனால் ஒன்று: காலை நடையின்போது கிட்டுகிற மருத்துவ உபதேசங்களை மட்டும் அறவே புறக்கணியுங்கள். அவற்றை நடைமுறையில் பின்பற்றினால் உறக்கம் கெட்டுவிடும்.
 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவியின் கழுத்தை பிளேடால் அறுத்த இளைஞர்

By DIN  |   Published on : 30th April 2018 12:20 PM  |

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவியின் கழுத்தை அறுத்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பிளேடால் கழுத்து அறுபட்ட நிலையில் படுகாயத்துடன் மருத்துவமனையில் மாணவி லாவண்யா அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கி படித்து வந்த பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு மாணவி லாவண்யா, இன்று காலை விடுதியில் இருந்து கல்லூரிக்குச் செல்லும் போது, நவீன்குமார் என்ற இளைஞர் அவரிடம் பேச முற்பட்டுள்ளார். லாவண்யா அவரிடம் பேச மறுத்ததால் ஆத்திரத்தில் தனது கையில் வைத்திருந்த பிளேடால் லாவண்யாவின் கழுத்தை அறுக்க முற்பட்டுள்ளார்.
இதை அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் உட்பட பொதுமக்கள் பார்த்து உடனடியாக நவீன்குமாரை தாக்கினர். இதில் லாவண்யாவின் கழுத்தை பாதி அறுத்த நிலையில் நவீன் குமாரின் பிடியில் இருந்து மாணவி மீட்கப்பட்டார்.
பொதுமக்கள் உடனடியாக லாவண்யாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நவீன்குமாரை பொதுமக்கள் கடுமையாக தாக்கினர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், நவீன் குமாரையும் கைது செய்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
பொதுமக்களின் சாமர்த்தியத்தால், மாணவி நூலிழையில் உயிர் தப்பியுள்ளார் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். 
சித்ரா பவுர்ணமி கிரிவலம் : தி.மலையில் திரண்ட பக்தர்கள்

Added : ஏப் 30, 2018 02:27

திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணா மலையில் நேற்று, லட்சக்கணக்கான பக்தர்கள், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், கிரிவலம் சென்று, சுவாமி தரிசனம் செய்தனர்.சித்ரா பவுர்ணமி திதி நேற்று காலை, 6:58 மணிக்கு துவங்கி, இன்று காலை, 7:57 வரை உள்ளது. நேற்று முன்தினம் இரவு, 9:00 மணி முதலே, பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று காலை, கட்டுக்கடங் காத கூட்ட நெரிசலில், பக்தர் கள் கிரிவலம் சென்றனர்.மெல்ல ஓடினர்காலை, 9:00 மணிக்கு மேல், வெயில் கொளுத்திய நிலையில், பாதங்களை கீழே வைக்க முடியாமல், மெல்ல ஓடியவாறே பக்தர்கள் கிரிவலம் சென்றனர். வெயிலின் தாக்கத்தை தணிக்க, சாலைகளில், லாரி மூலம், தண்ணீர் ஊற்றியவாறே இருந்தனர். கிரிவலப்பாதை முழுவதும் அன்னதானம், நீர் மோர் வழங்கப்பட்டது.பக்தர்கள் வசதிக்காக, 2,825 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கோவில் வெளிப்புறத்தில், பக்தர்கள் அதிகமாக கூடும் இடங்களில், ஷாமியானா பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.கோவிலில், ஐந்து முதல், ஆறு மணி நேரம் வரை, பக்தர்கள் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலை, 4:00 முதல் இன்று இரவு, 11:00 மணி வரை, நடை திறந்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தீர்த்தவாரிஅருணாசலேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும், சித்திரை மாதம் வளர்பிறையில், வசந்த உற்சவ விழா கொண்டாடப்படுகிறது. 19ம் தேதி, பந்தக்கால் முகூர்த்தத்துடன் விழா துவங்கியது. தினமும் சுவாமிகளுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது.நேற்று, உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், அய்யங்குளக்கரையில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின், சூல வடிவிலான சுவாமி தீர்த்தவாரி நடந்தது. நள்ளிரவு, மன்மத தகன விழா நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

'டிக்கெட்' உடன் டாக்ஸி முன்பதிவு : ஐ.ஆர்.சி.டி.சி., துவக்கம்

Added : ஏப் 30, 2018 00:30

ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், டிக்கெட் உடன் டாக்ஸியையும் முன்பதிவு செய்து, ஸ்டேஷன்களில் இருந்து பயணிக்கும் வசதி, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக்கழகத்தின், இணையதளத்தில், 'இ - டிக்கெட்' முன்பதிவு செய்து, தினமும் லட்சக்கணக்கானோர் ரயில்களில் பயணித்து வருகின்றனர். ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக, ஐ.ஆர்.சி.டி.சி., பயணியருக்கு சிறப்பு சலுகைகளுடன், பல்வேறு வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.அந்த வகையில், டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே, 'டாக்ஸி' முன்பதிவு செய்து, ஸ்டேஷனில் இருந்து பயணிக்கும் வசதி, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பயணியரின் போக்குவரத்து பிரச்னையை தீர்க்கும் விதமாக, தனியார் டாக்ஸி நிறுவனங்களுடன், ஐ.ஆர்.சி.டி.சி., ஒப்பந்தம் செய்துள்ளது. 'இணையதளத்தில், பயணியர் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே, விரும்பிய இடத்துக்கு செல்ல, ஏழு நாட்களுக்கு முன்னரே டாக்ஸி முன்பதிவு செய்யலாம். ஐ.ஆர்.சி.டி.சி., மொபைல் போன் செயலியில் இருந்தும், டாக்ஸி முன்பதிவு செய்யலாம்' என்றார்.

- நமது நிருபர் -

818 Medical Colleges in India, Maximum in UP, Maharashtra, Tamil Nadu: Health Ministry tells Parliament Written By : Divyani PaulPublished On 15 Feb 2026 11:00 AM  |  Updated On 15 Feb 2026 11:00 AM New Delhi: The Union Ministry of Health and Family Welfare has informed the Lok Sabha that India currently has a total of 818 medical colleges, including AIIMS and Institutes of National Importance (INIS) across India. The details were shared in response to an Unstarred Question on February 6, 2026. Replying to queries raised by Shri Jagannath Sarkar regarding districts without government medical colleges and plans for prioritising high-population districts, Minister of State for Health and Family Welfare Shri Prataprao Jadhav said that the National Medical Commission (NMC) has reported a total of 818 medical colleges nationwide. Also Read: 18 AIIMS Functional, 4 Under Construction: Health Minister tells Parliament As per the list shared in this regard, Uttar Pradesh has the highest number of medical colleges at 88 (51 government and 37 private), followed by Maharashtra with 85 (43 government and 42 private), and Tamil Nadu with 78 colleges (38 government, 40 private). Karnataka has 72 (24 government and 48 private), Telangana has 66 (37 government, 29 private), and Rajasthan has 49 (34 government, 15 private). However, several smaller States and UTs, such as Andaman & Nicobar Islands, Arunachal Pradesh, Chandigarh, Goa, Mizoram, Nagaland and Sikkim have only one medical college each.

818 Medical Colleges in India, Maximum in UP, Maharashtra, Tamil Nadu: Health Ministry tells Parliament Written By : Divyani PaulPublished O...