Tuesday, May 1, 2018

மனசு போல வாழ்க்கை- 21: வெற்றியை உருவாக்கும் எண்ணங்கள்

Published : 11 Aug 2015 12:22 IST

டாக்டர். ஆர். கார்த்திகேயன்





வியாபாரத்தில் ஜெயித்தவர்கள் பெரும்பாலும் பல தோல்விகளுக்குப் பிறகுதான் தலையெடுத்திருப்பார்கள். குறிப்பாக, முதல் முறையாகத் தொழில் செய்பவர்கள் நிறைய தோல்விகளையும் தடைகளையும் சந்திப்பது இயல்பு.

ஒரு முறை தோல்வி வந்ததும் நம்மால் முடியாது என்று விலகிச் செல்பவர்கள் ஏராளம்.

நம்மைச் சுற்றிப் பார்த்தாலே சொந்தத் தொழில் பரிசோதனையைச் செய்து பார்த்துவிட்டு வந்தவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். தங்களின் தோல்விகள் பற்றி அவர்கள் சொல்லும்போதே அவர்களின் எண்ண ஓட்டங்களைப் புரிந்துகொள்ளலாம்.

வலிமையான எண்ணங்கள்

“அந்தத் தொழில் மோசமான தொழில், தெரியாம மாட்டிக்கிட்டேன்”, “ கூட்டாளிகளை நம்பி ஏமாந்தேன்!”,

“ நம்ம குணத்துக்கு அந்தத் தொழில் ஆகாது”, “நிலையான வருமானம் இல்லாட்டி ரொம்பக் கஷ்டம்”, “நம்ம குடும்பத்துக்கெல்லாம் பிஸினஸ் ஆகாது”, “இந்த தொழில்னாலே வேறெங்கும் நகர முடியாது. எதுவும் செய்ய முடியாது. இதே கதின்னு கிடக்கணும்!”

நீங்கள் எதை நினைத்தாலும் அதுதான் சரி என்று உணர்த்துவது போல உங்கள் வாழ்க்கையில் அனுபவங்கள் கிடைக்கும். உங்கள் எண்ணத்தைக் கவர்ந்துவரும் மனிதர்களும் சம்பவங்களும் அதைத் தொடர்ந்து நிரூபிப்பார்கள். அதுதான் எண்ணங்களின் வலிமை.

அனுபவத்தால் எண்ணங்கள் தோன்றுவதில்லை. எண்ணத்தால் அனுபவங்கள் தோன்றுகின்றன. தொழிலில் தோற்பவர்கள் 95 சதவீதம். ஜெயிப்பவர்கள் 5 சதவீதம்தான். காரணம் அவர்களின் எண்ணங்கள். அதனால் எடுக்கும் முடிவுகள். அந்த முடிவுகள் தூண்டும் செயல்பாடுகள். அந்தச் செயல்பாட்டின் மூலம் வலிமை பெறும் நேர்மறையான எண்ணங்கள். இந்தச் சுழற்சிதான் வெற்றியை தீர்மானிக்கிறது.

தொழில் செய்வதை, பிடித்த விளையாட்டை விளையாடுவது போல அணுகுபவர்கள் அதை ரசித்துச் செய்வார்கள். விளையாட்டில் வெற்றி தோல்வி எப்படி என்பதை விட, விளையாட்டை விளையாட்டுக்காகவே எப்படி ரசிக்கிறோமோ அப்படித் தொழிலை ரசிக்க வேண்டும். அதுதான் நம்மை அந்தத் தொழிலில் நிலைக்க வைக்கும்.

தோல்வியால் கற்கும் பாடங்கள் நமது தொழில் திறனைக் கூர்மையாக்கும் என்று நம்ப வேண்டும். எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்பதைவிட எப்படி ஜெயிப்பது என்பதைத் தோல்வியில்தான் ஆராய்ந்து கற்க முடியும். பிறரின் தோல்விகளிலிருந்து பாடம் கற்பவர்கள் புத்திசாலிகள்.

தோல்விக் கதைகள்

வெற்றி பெற்றவர்களைப் பார்த்து ஆசை மட்டும் படுவதுதான் இங்கு பிரச்சினையே. அவர்களின் தொழில் திறனைப் புரிந்துகொள்ளாமல் அவர்களின் வெற்றியின் பளபளப்பில் மயங்கிப் போவது. அவர்கள் செய்யும் தொழிலைச் செய்தாலே அதே வெற்றியைப் பெற முடியும் என்று நம்புவது.

“ஒரு ஆன்லைன் சைட் வைத்தே 5 ஆயிரம் கோடி சம்பாதிச்சிட்டாங்க!”, “கோழி முட்டை வியாபாரத்துல இன்னிக்கு ஒரு பன்னாட்டு கம்பெனி மாதிரி வளந்துட்டாங்க!”, “ஒரே படம் எடுத்தாங்க; எங்கேயோ போயிட்டாங்க!”, “சும்மா ஆரம்பிச்சாங்க இந்த பியூட்டி பிஸினஸ. இன்னிக்கு முன்னணி நடிகைங்க எல்லா பிராண்டுகளுக்கும் அம்பாசடர் ஆகும் அளவு வளர்ந்துட்டாங்க!” ,“ஒரே ஒரு ஆப் டெவலப் பண்ணி இன்னிக்கு கம்பனில பெரிய பெரிய முதலீட்டாளர்களைக் கொண்டாந்துட்டாங்க!”...

இதெல்லாம் பனிக்கட்டியின் நுனி போல. ஒவ்வொரு வெற்றிக் கதைக்குப் பின்னும் நூறு மடங்கு தோல்விக் கதைகள் உள்ளன. அவை வெளியே தெரியாது. வெற்றியாளர்கள் பின்னும் ஏராளமான தோல்விக் கதைகள் உண்டு. ஆனால் அதைவிட அவர்கள் வெற்றியின் பிரகாசம் நம் கண்களை மறைக்கும்.

இதுவே ஆதாரம்

தோல்விகளையும் பார்த்து, அதன் பாடங்களைக் கற்று, அதன் பின்னும் அந்த தொழிலை ரசித்துச் செய்ய முடியுமா? அப்படி என்றால் நீங்கள் இந்த தொழிலுக்குத் தயார். தொழில் செய்ய வேண்டும், அதில் தொடர்ந்து பணம் பண்ண வேண்டும், எது வந்தாலும் கற்று மேலே போக வேண்டும் என்ற எண்ணங்கள் கொண்டவர்கள்தான் தொழிலில் வெற்றி பெறுகிறார்கள்.

நேரம், சூழ்நிலை, பிறர் ஆதரவு எல்லாம் தொழிலை பாதிக்கும்தான். உண்மைதான். ஆனால் தொழிலில் நிலைக்க ஆதாரமானது தொழில் பற்றிய எண்ணங்கள்தான்.

அரைக்காசு அரசு வேலை

ஒரு மார்வாடி நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார்: “இந்தத் தொழில் நிலையில்லாதது. பேசாமல் படித்து வேலைக்குப் போகலாம்னு அப்பாவிடம் சொன்னேன். அதற்கு அவர் சொன்னார்: ‘ஒரு வேலைக்காரனா இருந்தா யார் உனக்கு பொண்ணு தருவா? சின்னதா இருந்தாலும் உனக்க்குன்னு எப்பவும் ஒரு தொழில் இருக்கணும்!”.

நான் நினைத்துப் பார்த்தேன். ‘அரைக்காசு உத்தியோகம்னாலும் அரசாங்க உத்தியோகம்’ என்பதைக் கேட்டுத்தான் நான் வளர்ந்தேன். தெரிந்தவர்கள் எவ்வளவு பெரிய தொழில் பண்ணினாலும், “ஏதோ பிஸினஸ் பிஸினஸ்னு சொல்றாங்க..என்ன வருதோ தெரியலை” என்பார்கள்.

தொழில் பற்றிய நம் எண்ணங்கள் தான் படிப்பு, திருமணம், வாழ்க்கை பற்றிய எண்ணங்களைத் தீர்மானிக்கும். கடனை நிர்வாகம் செய்வது, தொழிலாளிகளை நிர்வாகம் பண்ணுவது, சந்தையை எடை போடுவது, விலையை நிர்ணயம் செய்வது என அனைத்துக்கும் நம் எண்ணங்கள்தான் விதைகள்.

‘வீடு, குடும்பம் எதையும் கவனிக்க நேரமில்லை, எப்பவும் பிஸினஸ் தான்’ என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். வீடு, குடும்பம் மட்டுமல்ல, பிடித்த எல்லாவற்றையும் செய்ய முடிகிறது இந்த பிசினஸ் வெற்றிகளால் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
'மரம் வளர்த்தால் கூடுதல் மதிப்பெண்' - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்..! 

நவீன் இளங்கோவன்
ரமேஷ் கந்தசாமி

Gobichettipalayam:

“பள்ளிப் பருவத்திலேயே ஒவ்வொரு மாணவரும் ஒரு மரக்கன்றினை நட்டுப் பேணிக்காத்து வளர்க்க வேண்டும். அதனடிப்படையில், மாணவர்களுக்கு இந்த ஆண்டு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும்” என கோபிச்செட்டிபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளாளபாளையத்தில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் எம்.பி சத்தியபாமா, அந்தியூர் எம்.எல்.ஏ இ.எம்.ஆர்.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில், “இயற்கை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு அரசின் சார்பில் பல்வேறு இடங்களில் மரம் நடும் விழாக்களை நடத்தி வருகிறோம். அதன்படி பள்ளிப் பருவத்திலேயே ஒவ்வொரு மாணவரும் ஒரு மரக்கன்றினை நட்டுப் பேணிக்காத்து வளர்க்க வேண்டும். பள்ளியின் இந்த ஆண்டு முடிவில் மாணவர்களுக்கு மரம் வளர்ப்பின் அடிப்படையில், கூடுதல் மதிப்பெண்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாளை மறுதினம் பள்ளிக்கல்வித்துறையில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மிக விரைவில் அனைத்துப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளாக மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் 9 கல்லூரிகளில் நீட் போன்ற போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் சுமார் 3,145 மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தலா ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 20 ஆயிரம் பள்ளிகளுக்கு இணையதள வசதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.
200 வகைகள்... தனிக்கூடு... யானையை ஒரே கடியில் கொல்லும் விஷம்! - இது ராஜநாகத்தின் கதை

துரை.நாகராஜன்


vikatan 
 
'பாம்பென்றால் படையே நடுங்கும் என்பார்கள்'. அதிலும் ராஜநாகம் என்றால் பார்ப்போருக்கு சற்று கிலி ஏற்படுவதாகவே இருக்கும். உலகில் கொடூர விஷம் கொண்ட பாம்புகள் என்றால் அது ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கோப்ரா இனப் பாம்புகள்தான். அதற்கு அடுத்தது ஆசியாவிலேயே அதிக விஷம் கொண்டது ராஜ நாகம்தான். இந்த ராஜநாகம் மட்டும்தான் பாம்பு வகைகளில் கூடு கட்டி, முட்டையிட்டு அடைகாக்கும். இந்தப் பாம்புகள் இந்தியா, மலேசியா, தென்சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளிலும், வடக்கு ஆப்பிரிக்காவிலும், பிலிப்பைன்ஸிலும் காணப்படுகின்றன. ராஜநாகங்கள் குளிர்ச்சியான இடங்களில் மட்டுமே வாழும். அதன்படி எடுத்துக்கொண்டால் பசுமை மாறாக் காடுகள்தான் இவற்றின் முக்கியமான வாழ்விடம். இவற்றில் மொத்தமாக 200 வகையான பிரிவுகள் உள்ளன. மற்ற பாம்புகளை விட ராஜநாகங்களின் கண்பார்வை கூர்மையானவை. 300 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளைக் கூட மிகத் தெளிவாக காணக்கூடியது. இரவிலும் இதன் பார்வை மிகத் தெளிவாக இருக்கும்.



Photo - aboutanimals

ராஜநாகம் குறைந்தபட்சம் எட்டு முதல் 20 அடி நீளம் வரை இருக்கும். மற்ற வகை பாம்புகள் தவளை, எலி எனச் சாப்பிட்டாலும், ராஜநாகம் மட்டும் மற்றொரு பாம்பை மட்டுமே உணவாக எடுத்துக்கொள்ளும். மற்ற பாம்புகள் கிடைக்காத நேரங்களில் அணில், ஓணான் ஆகியவற்றை உணவாகவும் எடுத்துக்கொள்ளும். ராஜநாகங்கள் இனப்பெருக்கக் காலத்தின்போது, 30 முட்டைகள் வரை இடும். இதன் விஷம் ஒரே நேரத்தில் 20 பேரைக் கொல்லும் தன்மை கொண்டது. இது தெற்கு ஆசியாவில் அதிகமாகக் காணப்படுகிறது. இதன் பற்கள் மனிதனைத் தீண்டும்போது 1.5 செ.மீக்கு ஆழமாகக் காயம் ஏற்படும். ராஜநாகம் கடித்துவிட்டால் பெரும்பாலும் மரணத்தைத்தான் தழுவ வேண்டி இருக்கும். இதன் பற்கள் மிகக் கூர்மையானதாகவும், மிகச் சிறிய துளையுடனும் அமைந்திருக்கும். இந்தப் பாம்பு மனிதனைத் தீண்டும்போது நரம்பு மண்டலத்தைத் தாக்கி கண்களைச் செயல் இழக்க வைக்கும். அதன் பின்னர் மூளை செயலிழந்து கோமா நிலையை அடைய நேரிடும். அதன் பின்னர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணத்தைத் தழுவ வேண்டியிருக்கும். ஒரு ஆண் ராஜநாகம் மற்றொரு பெண் ராஜநாகத்துடன் இணையும்போது ஒருவித புனுகு வாசனையையும், உளுந்து வாசனையையும் வெளிப்படுத்தும். இந்த வாசனைகளை வைத்துத்தான் கிராமங்களில் ராஜநாகங்களை மக்கள் கண்டுபிடிக்கிறார்கள்.

இணையும் பெண் பாம்பு இரண்டு மாதங்கள் கழித்து முட்டைகளை இடும். அந்த முட்டைகளை அடைகாப்பதற்கு பெண் ராஜநாகம் கூடுகளைக் கட்டும். அடைகாக்கும் நேரத்தில் கூட்டின் காவலன் ஆண் ராஜநாகம்தான். 60 முதல் 100 நாள்கள் முதல் குட்டிகள் வெளிவரத் தொடங்கும். அவை 50 செ.மீ நீளம் வரை இருக்கும். முட்டையிலிருந்து குட்டிகள் வெளிவருவதற்கு ஒரு நாளைக்கு முன்பே அடைகாக்கும் தாய் ராஜநாகம் கூட்டை விட்டு வெளியேறிவிடும். அதன் பின்னர் எப்போதுமே அதன் கூட்டுக்கு அது திரும்பாது. குட்டிகள் சுதந்திரமாக சுற்றித் திரியும். தாய் ராஜநாகம் வெளியேறுவதற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. அடைகாக்கத் தொடங்கும் நேரத்தில் இருந்து உணவை எடுத்துக்கொள்ளாது. அதனால் குட்டிகள் வெளிவந்தால் பசியில் தின்றுவிடுவோமோ என்ற எண்ணத்தால்தான் ஒரு நாளைக்கு முன்னரே கூட்டை விட்டு வெளியேறுகிறது, பெண் ராஜநாகம். ராஜநாகம் நுனி வாலை மட்டும் தரையில் பதித்து ஐந்து அடிவரை மேலே எழுந்து நின்று தாக்கக் கூடியது. சாதாரணமாக 20 வருடங்கள் வரைக்கும் இவை உயிர்வாழும். மனிதர்களைக் கண்டால் பயந்து ஒதுங்கிக்கொள்ளும் தன்மையுடையது இந்த ராஜநாகம். தன்னைச் சீண்டுபவர்களிடம் மட்டும்தான் தனது பலத்தைக் காட்டும்.



Photo - San Diego Zoo Animals

பாம்பின் விஷமானது அதிகமான புரோட்டீன்களால் ஆனது. இது நியூக்ரோ டாக்ஸிஸ் என அழைக்கப்படுகிறது. புரதம் என்ற ஒரு பொருள் மனிதன் உயிர்வாழ மிகவும் அத்தியாவசியமான ஒன்றுதானே என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆம், நாம் உண்ணக்கூடிய உணவில் புரதங்கள் அதிகமாக இருக்கின்றன. ஆனால், நமது உடலுக்கு என சில விதிமுறைகள் உண்டு. ஒரு புரதம், வைட்டமின் என எதுவாக இருந்தாலும், அது வாய் வழியாக உட்கொள்ளப்பட்டு வயிற்றில் செரிமானம் ஆக வேண்டும். செரிமானம் ஆன உணவிலிருந்து மெட்டாபாலிசம் செய்யப்பட்டு தேவையற்ற பொருள்கள் அகற்றப்பட்டு அதன் பின்னர்தான் ரத்தத்தில் புரோட்டீன் கலக்கும். பொதுவாகப் பாம்புகள் கடிக்கும்போது, நேரடியாக ரத்தத்தில் கலக்கும் புரோட்டீனால், மனித உடல் இயல்பானது மாறுகிறது. இதனால்தான் மரணம் ஏற்படுகிறது. பாம்புக் கடிக்கான மருந்து தயாரிப்பு தவிர, வலி நிவாரணி, மூட்டுத்தசை மற்றும் புற்றுநோய் ஆகியவற்றைத் தயாரிப்பதில் பாம்பின் விஷம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ராகநாகம் பாம்புக் கடிக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிறது அறிவியல். ராஜநாகம் ஒரு முறை கடிப்பதால் வெளியேறும் விஷம் மிகப்பெரிய யானையையே சில நிமிடங்களில் மரணத்தைத் தழுவச் செய்யும் அளவுக்கு வீரியம் மிக்கதாக இருக்கும்.



ராஜநாகம் அடைகாத்த பின்னர் அதிலிருந்து முழுவதுமாக வெளியேறும் குட்டிகள் முழு வீரியம் கொண்டதாகவே வெளியேறும். சிறிய குட்டிகளின் விஷம் கூட பெரிய ராஜநாகத்தின் விஷத்தைப் போல வீரியம் மிக்கதாக இருக்கும். அதிகமான விஷம் கொண்டதாக இருந்தாலும், ஒரு காலத்தில் அதிகமாக வேட்டையாடப்பட்ட பாம்புகளில் முக்கியமான இடம் ராஜநாகத்துக்கு உண்டு. அதனால் தற்போது வன உயிரின பாதுகாப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

Bombay HC Rules In Favour Of Wife, Nullifies 9yr Old Marriage Due To Non-Consummation, Husband To Appeal Before SC [Read Judgment] | Live Law

Bombay HC Rules In Favour Of Wife, Nullifies 9yr Old Marriage Due To Non-Consummation, Husband To Appeal Before SC [Read Judgment] | Live Law: The Bombay High Court has allowed an appeal against a judgment of a District Court in Kolhapur and nullified a 9-year-old marriage between two parties on grounds of non-consummation. Justice Mridula Bhatkar held that the first appellate court at Kolhapur had erred in holding that the marriage was valid despite the fact that there was …

Government servant news

நெஞ்சில் சாதிப் பெயர்: போலீஸ் வேலைக்குத் தேர்வு!


மத்திய பிரதேசத்தில் தார் மாவட்டத்தில் நடந்த காவலர்கள் வேலைக்கான தோ்வில் பங்கேற்றவர்களின் நெஞ்சில் அவர்களது சாதிப் பெயரை எழுதியது அந்த மாநிலம் முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

தார் மாவட்டத் தில் கடந்த சனி்கிழமையன்று காவலர்கள் வேலைக்கான மருத்துவ தேர்வுகள் நடைபெற்றன. அதில் பங்கேற்றவர்கள் வரிசையாக மேல் சட்டையின்றி நிறுத்தப்பட்டனர். பின்னர் ஒவ்வொருவரின் நெஞ்சிலும் ஸ்கெட்ச் பேனாவினால் அவர்களின் சாதிப் பெயரும் அவர்கள் எந்த வகுப்பைச் சேர்ந்தவர் என்பதும் எழுதப்பட்டது.

இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதைத் தொடர்ந்து விசாரணைக்கு தார் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் வீரேந்திர சிங் உத்தரவிட்டுள்ளார். சம்பவம் பற்றி அவர் கூறுகையில், “மருத்துவப் பரிசோதனையை நடத்தியவர்கள், பங்கேற்றவர்களை வகுப்புவாரியாகப் பிரிப்பதற்காக இது போன்ற முறைகளைக் கையாண்டுள்ளனர். அவர்கள் வேறு வழிகளைக் கையாண்டிருக்கலாம் எனினும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
73 hospitalised after taking 'prasadam' in temple in Tamil Nadu

As many as 73 people including six children and 14 women took ill after consuming 'prasadam' at a temple in the district today.

Published: 30th April 2018 11:57 AM | Last Updated: 30th April 2018 11:57 AM

  By PTI

CUDDALORE: As many as 73 people including six children and 14 women took ill after consuming 'prasadam' at a temple in the district today, police said.

The devotees took 'Sambar' rice offered at Amman temple in V Sathamangalam village as part of a festival, they said.

Soon after, they complained of giddiness and vomiting and were taken to the government hospital at Virudachalam near here.

Virudachalam Revenue Divisional Officer S Chandra, visited the hospital.

Meanwhile, the devotees alleged that a dead lizard was found in the rice served to them.

A case has been registered and investigation is on, police said.

On April 5, two women, who were among the 30 people hospitalised after taking temple 'prasadam' in Coimbatore district, died.

Poor academics no bar to jobs for high-rankers: HC

Poor academics no bar to jobs for high-rankers: HC  18.04.2026 Cuttack : The Orissa high court observed that high ranking candidates in a re...