Saturday, May 19, 2018

முதுநிலை மருத்துவ படிப்புக்கு இன்று கவுன்சிலிங்

Added : மே 19, 2018 05:36



சென்னை: முதுநிலை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங், இன்று(மே 19) துவங்குகிறது.

தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.டி., - எம்.எஸ்., - எம்.டி.எஸ்., ஆகிய முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில், இன்று துவங்கி, 23ம் தேதி வரை நடக்கிறது. இன்று, சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங்கும், நாளை முதல், பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங்கும் நடக்கிறது.

மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்ட தரவரிசை பட்டியலில், 10 ஆயிரத்து, 108 பேர் இடம் பெற்றுள்ளனர்.
மாவட்ட செய்திகள்

சிவகாசியில் 1 மணி நேரம் பலத்த மழை




சிவகாசியில் நேற்று பிற்பகல் 3½ மணிக்கு பலத்த காற்று வீசியது. பின்னர் சிறிது நேரத்தில் பலத்த இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது.

மே 19, 2018, 04:36 AM
சிவகாசி,

சிவகாசியில் நேற்று பிற்பகல் 3½ மணிக்கு பலத்த இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது.இந்த மழை 1 மணி நேரம் நீடித்தது. பயங்கர காற்று மற்றும் இடி-மின்னலுடன் மழை பெய்ததால் சாலையில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. நகரின் முக்கிய பகுதியில் உள்ள தாழ்வான இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது.

இதனால் மழைக்கு பின்னர் வாகன ஓட்டிகளும், நடந்து சென்றவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சிவகாசி நகராட்சி அலுவலகம் உள்ள இடத்தில் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது. அதே போல் சிவகாசி நகராட்சி கார் ஸ்டேண்டு அருகில் தண்ணீர் பெரும் அளவில் தேங்கி நின்றது. 1 மணி நேரம் பெய்த மழையால் இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.
மாநில செய்திகள்

போதிய வருகை இல்லாத சட்டக்கல்லூரி மாணவரை தேர்வு எழுத அனுமதிக்க முடியாது





போதிய வருகை இல்லாததால், செமஸ்டர் தேர்வு எழுத சட்டக்கல்லூரி மாணவருக்கு அனுமதி வழங்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மே 19, 2018, 05:15 AM
சென்னை,

சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர் பி.பாலசுப்பிரமணியன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது.

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நான் என்னுடைய சொந்த ஊரில் சிகிச்சை பெற்று வந்தேன். இதனால், கல்லூரிக்கு செல்ல முடியவில்லை. மேலும், 4-வது செமஸ்டர் தேர்வு கட்டணம், கடந்த ஜனவரி 31-ந் தேதிக்குள் செலுத்தவில்லை. உடல்நலம் தேறி பிப்ரவரி மாதம் கல்லூரிக்கு வந்தபோது, கல்லூரியை இடம் மாற்றுவதை கண்டித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கல்லூரி செயல்படவில்லை. இதன் காரணமாக தேர்வு கட்டணத்தை பெற கல்லூரி நிர்வாகம் மறுத்துவிட்டது.

அதுமட்டுமல்லாமல், போதிய வருகை இல்லை என்று என்னை செமஸ்டர் தேர்வு எழுதவும் அனுமதிக்க மறுத்துவிட்டனர். எனவே, செமஸ்டர் தேர்வு எழுத எனக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். அப்போது கல்லூரி முதல்வர் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘குறிப்பிட்ட தேதிக்கு முன்பாக கட்டணத்தை மனுதாரர் செலுத்தவில்லை. அதேபோல ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கல்லூரி நடைபெறாத காலகட்டத்திற்காக, மார்ச் மாதத்தில் நடத்தப்பட்ட சிறப்பு வகுப்புகளிலும் அவர் பங்கேற்கவில்லை. 66 சதவீதத்திற்கும் குறைவாக வருகைப்பதிவு உள்ளதால், செமஸ்டர் தேர்வை எழுத அனுமதிக்க முடியாது. அதனால், அவர் 4-வது செமஸ்டர் தேர்வை எழுத மீண்டும் படிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதி, ‘சம்பந்தப்பட்ட மாணவர் உரிய தேதிக்குள் கட்டணத்தை செலுத்தவில்லை. அதுபோல வருகைப்பதிவும் இல்லை. அதனால், செமஸ்டர் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது. அவர் மீண்டும் 4-வது செமஸ்டரை படிக்க வேண்டும்’ என்று கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
தலையங்கம்

3 நாட்கள் முதல்–மந்திரியா?, நீடிக்கும் முதல்–மந்திரியா?





கர்நாடக சட்டசபையில் இதுவரை இரண்டு முறை எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாமல் 1983 மற்றும் 2004–ம் ஆண்டுகளில் தொங்கு சட்டசபை அமைந்து இருக்கிறது.

மே 19 2018, 03:00

கர்நாடக சட்டசபையில் இதுவரை இரண்டு முறை எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாமல் 1983 மற்றும் 2004–ம் ஆண்டுகளில் தொங்கு சட்டசபை அமைந்து இருக்கிறது. அதுபோல கடந்த 12–ந்தேதி நடந்த சட்டசபை தேர்தலிலும் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காதநிலை இருந்தது. காங்கிரஸ், பா.ஜ.க., மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய 3 கட்சிகளும் ஒன்றையொன்று எதிர்த்து போட்டியிட்டன. தேர்தல் முடிவுகள் 15–ந்தேதி வெளிவந்தது. மொத்தம் தேர்தல் நடந்த 222 தொகுதிகளில், பா.ஜ.க. 104 இடங்களிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதாதளம் 37 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்திலும், 2 சுயேச்சைகளும் வெற்றிபெற்றன. ஆட்சி அமைக்க 112 எம்.எல்.ஏ.க்கள் வேண்டியநிலையில், யாருக்கும் பெரும்பான்மை இல்லை. எதிர்பாராதவிதமாக காங்கிரசும்–மதசார்பற்ற ஜனதாதளமும் கைகோர்த்தன. 37 இடங்களில் வெற்றிபெற்ற மதசார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமியை முதல்–மந்திரியாக ஏற்கிறோம் என்று காங்கிரஸ் கூறியது.

இந்தநிலையில் பா.ஜ.க.வை கவர்னர் ஆட்சி அமைக்க அழைத்தார். எடியூரப்பா நேற்று முன்தினம் முதல்–மந்திரியாக பதவி ஏற்றார். பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசமும் கவர்னரால் வழங்கப்பட்டது. உடனடியாக காங்கிரஸ் கட்சி இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பா.ஜ.க. குதிரைபேரம் நடத்தி தங்கள் எம்.எல்.ஏ.க்களை பறித்துச்சென்றுவிடும் என்ற அச்சத்தில், தமிழ்நாட்டில் நடந்த ‘கூவத்தூர்’ சம்பவம்போல காங்கிரசும், மதசார்பற்ற ஜனதாதளமும் தங்கள் எம்.எல்.ஏ.க்களை சொகுசு விடுதிகளில் தங்கவைத்து கண்ணும் கருத்துமாக பார்த்து வந்தனர்.

நேற்று உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒரு பெரிய அதிர்வை கொடுத்துள்ளது. இன்று மாலை 4 மணிக்கு சட்டசபையில் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். உரிய பாதுகாப்பை போலீஸ் டி.ஜி.பி. வழங்கவேண்டும். இந்த வாக்கெடுப்பு முடியும்வரை எந்த பெரிய கொள்கை முடிவுகளையும் எடியூரப்பா எடுக்கக்கூடாது. வாக்கெடுப்பில் வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும் என்ற வகையில் ரகசிய ஓட்டெடுப்பு முறை பின்பற்றக்கூடாது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ஆக, இந்த சட்டசபை உறுப்பினர்களில் மூத்த உறுப்பினர் தற்காலிக சபாநாயகராக இருந்து எண்ணி கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு நடத்துவார். அதாவது, தீர்மானத்தை ஆதரிக்கும் ஒவ்வொரு பிளாக்காக எதிர்ப்பவர் யார்?, ஆதரிப்பவர் யார்?, நடுநிலை வகிப்பவர் யார்? என்று உறுப்பினர்களை எழுந்து நிற்கவைத்து தனித்தனியாக பெயர் சொல்லி கையை தூக்கச்சொல்லி தற்காலிக சபாநாயகர் கணக்கெடுப்பு நடத்துவார். தற்காலிக சபாநாயகராக பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் போபையாவை கவர்னர் நியமித்துள்ளார். 8 முறை எம்.எல்.ஏ.யாக இருக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தேஷ்பாண்டேயை நியமிப்பதுதான் சரியான மரபு என்று காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. இரு தரப்புமே நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்று கூறுகிறது. பா.ஜ.க. எங்களுக்கு 8 காங்கிரஸ், 2 மதசார்பற்ற ஜனதாதளம், 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்கிறது என்கிறது. ஆனால் ஓட்டெடுப்பு முடிந்தபிறகுதான் பா.ஜ.க. முதல்–மந்திரியாக எடியூரப்பா நீடிப்பாரா? அல்லது 3 நாள் முதல்–மந்திரியாக அவரது பதவி பறிபோய்விடுமா? அல்லது மதசார்பற்ற ஜனதாதளம்–காங்கிரஸ் கூட்டணிதான் ஆட்சி அமைக்குமா? என்பதெல்லாம் தெரிந்துவிடும்.
தேசிய செய்திகள்

எடியூரப்பா பதவி நீடிக்குமா? பரபரப்பான அரசியலுக்கு இன்று தீர்வு





சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து, கர்நாடக சட்டசபையில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் பலப்பரீட்சையின் போது, எடியூரப்பாவின் பதவி நீடிக்குமா? என்பது தெரிந்து விடும்.

மே 19, 2018, 05:42 AM
பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலில் தனித்து ஆட்சி அமைக்கக் கூடிய அளவுக்கு எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக் காததால் குழப்பம் ஏற்பட்டது.

தேர்தல் நடந்த 222 இடங்களில் 78 இடங்களை பெற்ற காங்கிரசும், 37 இடங்களை பெற்ற குமாரசாமியின் ஜனதா தளம் (எஸ்) கட்சியும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சித்த நிலையில், 104 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பாரதீய ஜனதாவைச் சேர்ந்த எடியூரப்பாவுக்கு ஆட்சி அமைக்க கவர்னர் வஜூபாய் வாலா கடந்த புதன்கிழமை இரவு அழைப்பு விடுத்தார். அப்போது, சட்டசபையில் 15 நாட்களுக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு எடியூரப்பாவுக்கு அவர் ‘கெடு’ விதித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகள், கவர்னரின் முடிவை எதிர்த்து உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பாரதீய ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தது சட்ட விரோதம் என்றும், எனவே எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்க தடைவிதிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தனர்.

இந்த மனுவை விடிய விடிய விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, எடியூரப்பா பதவி ஏற்பதற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. என்றாலும் இந்த வழக்கின் தீர்ப்பு அவர் முதல்-மந்திரி பதவியில் நீடிப்பதை கட்டுப்படுத்தும் என்று கூறியது.

இதைத்தொடர்ந்து, கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக எடியூரப்பா நேற்று முன்தினம் பதவி ஏற்றார். அவருடன் மந்திரிகள் யாரும் பதவி ஏற்கவில்லை.

இந்த நிலையில், கவர்னரின் முடிவுக்கு எதிராக காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காரசாரமான விவாதம் நடைபெற்றது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், கர்நாடக சட்டசபையில் இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு முதல்-மந்திரி எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அத்துடன், வாக்கெடுப்பை நடத்த மூத்த உறுப்பினர் ஒருவரை தற்காலிக சபாநாயகராக நியமிக்கவேண்டும் என்றும், எம்.எல்.ஏ.க்களுக்கு மாநில டி.ஜி.பி. உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த உத்தரவு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியதோடு காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளுக்கு மிகுந்த உற்சாகத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து, கர்நாடக சட்டசபை இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது. முதலில் புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக்கொள்வார்கள். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள பாரதீய ஜனதாக கட்சியைச் சேர்ந்த போப்பையா பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிந்ததும் மாலை 4 மணிக்கு, நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை முதல்-மந்திரி எடியூரப்பா சட்டசபையில் தாக்கல் செய்து பேசுவார். அதன்பிறகு எதிர்க் கட்சி தலைவர்கள் பேசுவார்கள்.

பின்னர் நம்பிக்கை தீர்மானத்தின் மீது தற்காலிக சபாநாயகர் வாக்கெடுப்பு நடத்துவார். ஓட்டெடுப்பை ரகசியமாக நடத்தக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதால், வெளிப்படையாக நடைபெறும். நம்பிக்கை தீர்மானத்தை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கைகளை உயர்த்தியோ அல்லது எழுந்து நின்றோ ஆதரவு தெரிவிப்பார்கள்.

எடியூரப்பா அரசு பிழைக் குமா? அல்லது அற்ப ஆயுளில் கவிழுமா? என்பது இந்த பலப்பரீட்சையின்போது தெரிந்துவிடும்.

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவது குறித்து எடியூரப்பா நேற்று பெங்களூருவில் நிருபர்களிடம் பேசுகையில், “சட்டசபையில் தன்னால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியும் என்றும் இதில் நூறு சதவீதம் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

பாரதீய ஜனதாவுக்கு 104 எம்.எல்.ஏ.க்கள்தான் உள்ளனர். எனவே இன்னும் 7 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

காங்கிரசுக்கு 78 பேரும், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 36 பேரும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ.வும் உள்ளனர். இது தவிர சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் உள்ளனர். இந்த இருவரும் காங்கிரசுக்கு ஆதரவாக உள்ளனர்.

காங்கிரசுக்கு உள்ள 78 எம்.எல்.ஏ.க்களில், ஆனந்த்சிங், பிரதாப்கவுடா பட்டீல் ஆகிய 2 பேரும் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக திரும்பிவிட்ட அவர்கள் இன்று சட்டசபைக்கு வர மாட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

இன்று சட்டசபைக்கு எத்தனை எம்.எல்.ஏ.க்கள் வருவார்கள் என்பதை பொறுத்தே, நம்பிக்கை தீர்மானத்தில் வெற்றி பெற எடியூரப்பாவுக்கு எத்தனை பேரின் ஆதரவு தேவை என்பது அமையும்.

இதற்கிடையே, தங்கள் எம்.எல்.ஏ.க்களை பாரதீய ஜனதா விலைபேசி இழுத்து விடாமல் தடுக்க அவர்களை காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர்கள் ஐதராபாத்துக்கு அழைத்துச்சென்று அங்குள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைத்து உள்ளனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஓட்டலிலும், ஜனதாதளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்கள் ஐதராபாத்தின் புறநகர் பகுதியில் உள்ள நோவோடெல் ஓட்டலிலும் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

முதலில் அவர்களை கேரள மாநிலம் கொச்சிக்கு அழைத்துச்செல்வதாக இருந்தது. கடைசி நேரத்தில் அந்த திட்டத்தை மாற்றி, ஐதராபாத்துக்கு பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்பதற்காகவும், நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்வதற்காகவும் அவர்கள் அனைவரும் அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் பெங்களூரு அழைத்து வரப்படுகிறார்கள்.

முன்னதாக எடியூரப்பா பதவி ஏற்புக்கு தடை விதிக்க கோரி கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வராவும், ஜனதாதளம் (எஸ்) தலைவர் குமாரசாமியும் தொடுத்த ‘ரிட்’ வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆட்சி அமைக்க உரிமை கோரி, கவர்னர் வஜூபாய் வாலாவுக்கு எடியூரப்பா எழுதிய 2 கடிதங்களையும், அவரது சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி, கோர்ட்டில் தாக்கல் செய்தார். அதன் நகல்கள், வழக்குதாரர் களுக்கு வழங்கப்பட்டது.

16-ந்தேதி கவர்னருக்கு எடியூரப்பா எழுதிய கடிதத்தின் முக்கிய அம்சமான, தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்ததை முகுல் ரோத்தகி வாசித்து காட்டினார்.

காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) அணி சார்பில் கவர்னருக்கு குமாரசாமி அளித்த கடிதத்தில் இடம் பெற்று இருந்த எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்து பற்றி கேள்வி எழுப்பிய அவர், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த திங்கட்கிழமை வரை அவகாசம் கேட்டார். ஆனால் நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்.

குமாரசாமி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி, “15-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை முடிவதற்கு முன்பே, எந்த கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்கும் என தெரியும் முன்பே எடியூரப்பா ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னருக்கு கடிதம் எழுதி இருக்கக் கூடாது” என கூறினார்.

அபிஷேக் சிங்வியுடன் ஆஜரான மற்றொரு மூத்த வக்கீலான கபில் சிபல், “காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) அணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்துக்களுடன் கடிதம் தரப்பட்ட நிலையில், கவர்னர் விருப்புரிமையை பயன் படுத்த முடியாது” என்று வாதிட்டார்.

அவர்கள் தரப்பில் ஆஜரான மற்றொரு மூத்த வக்கீலான ப.சிதம்பரம், ஆங்கிலோ இந்திய எம்.எல்.ஏ. நியமன பிரச்சினையை எழுப்பி வாதிட்டார்.

வாதங்கள் முடிந்ததும், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

* கர்நாடக சட்டசபையை நாளை (இன்று) கூட்டி எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

* சட்டப்படி தற்காலிக சபாநாயகர் ஓட்டெடுப்பை நடத்துவார்.

* ஓட்டெடுப்பில் பங்கேற்க ஆங்கிலோ இந்திய சமூக எம். எல்.ஏ. நியமனம் கூடாது.

* ரகசிய ஓட்டெடுப்பு கூடாது. கைகளை உயர்த்தி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை தெரிவிக்கலாம்.

* ஓட்டெடுப்புக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் டி.ஜி.பி.யும் அதிகாரிகளும் மேற்கொள்ள வேண்டும்.

* சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கிற வரையில், அரசாங்கம் பெரிய அளவிலான கொள்கை முடிவு எதையும் எடுக்கக்கூடாது.

* எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தது அரசியல் சாசனப்படி செல்லுபடியாகுமா என்பது பற்றி பின்னர் ஆய்வு செய்யப்படும்.

இவ்வாறு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Friday, May 18, 2018

நலம் தரும் நான்கெழுத்து 22: தேடினால் தொலையும் தூக்கம்!

Published : 17 Feb 2018 11:02 IST

டாக்டர் ஜி. ராமானுஜம்





தூக்கம் என்பது ஆரோக்கியத்தையும் உடலையும் இணைக்கும் ஒரு தங்கச் சங்கிலி

- தாமஸ் டெக்கர்


அரிதிலும் அரிதான இந்த மானிடப் பிறவியில், மூன்றில் ஒரு பங்கு தூக்கத்திலேயே கழிகிறது. இதிலிருந்தே தூக்கம் மனிதர்களுக்கு எவ்வளவு இன்றியமையாதது எனப் புரியும். சில நாட்கள் தூங்காமல் இருந்தாலே மனித உடலில் பல பாதகமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

பல்லாயிரம் ஆண்டுகளாக மனித இனம் சூரிய வெளிச்சத்தைப் பொறுத்தே தன்னுடைய தூக்கம், விழிப்பை அமைத்துக்கொண்டுவந்திருக்கிறது. அதற்கு ஏற்றவாறே நமது உடலும் சூரியகாந்தி மலர்களைப் போல் சூரிய வெளிச்சத்துக்கு ஏற்றவாறு பகலில் வேலை செய்யவும் இரவில் ஓய்வெடுக்கவும் பழகியுள்ளது.

கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில்கூட இரவானதும் சுமார் ஏழு –ஏழரை மணிக்கே மக்கள் தூங்கச் சென்றுள்ளனர். இரவைப் பகலாக்கும் மின்சாரத்தின் பரவலாக்கத்துக்குப் பின்னரே தூங்கச் செல்லும் நேரம் தாமதமாகத் தொடங்கியது. பின்னர் வானொலி, தொலைக்காட்சி, கணினி என ஒவ்வொன்றாகப் படுக்கையறையை ஆக்கிரமிக்க, இறுதியில் செல்பேசியின் வருகையால் பலரும் மறுநாள்தான் தூங்கச் செல்வது என்றாகிவிட்டது. என்னதான் அதிநவீன ஐபோனைப் பார்த்துக்கொண்டே படுத்துக் கொண்டிருந்தாலும், அந்தி கருத்தவுடனேயே தூங்கச் சென்ற ஆதிமனிதன் காலத்திலிருந்து நம்முடைய உடல் பெரிதாக மாறிவிடவில்லை.

குறையும் எதிர்ப்பு ஆற்றல்

தூக்கத்தின்போது உடலுக்குள் நிகழும் செயல்கள் பற்றி இன்னும் முழுமையாகத் தெரிந்துகொள்ளப்படவில்லை. எனினும், உயிரினங்கள் எல்லாவற்றுக்குமே தூக்கம் மிக முக்கியம். அதுவும் உயிரினங்களில் மூளையின் செயல்பாடுகள் சிக்கலாகச் சிக்கலாகத் தூக்கத்தின் தேவையும் அதிகரிக்கிறது.

தூங்காமல் இருக்கும்போது உடலில் ஸ்டீராய்டு ஹார்மோன்கள் அதிகமாகச் சுரப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. ரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது. உடல் பருமனுக்குத் தூக்கமின்மையும் ஒரு முக்கியக் காரணம். நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைதல் போன்ற பல எதிர்விளைவுகளும் ஏற்படுகின்றன. தூக்கமின்மையால் வரும் கவனக் குறைபாட்டால் பல விபத்துகள் ஏற்படுகின்றன என்பதும் அதிர்ச்சியூட்டும் உண்மை.

கவலையால் வராத தூக்கம்

தூக்கமின்மைக்கு ஒரு முக்கியக் காரணம், மனப் பதற்றம். தூங்கப் போகும்போதுதான் 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஒன்றில் செருப்பைத் தொலைத்தது பற்றி வருத்தப்படவும், 20 ஆண்டுகளுக்குப் பின் வரப்போகும் மகளின் திருமணத்தைப் பற்றிக் கவலைப்படவும் தொடங்குகிறோம். ஏனென்றால், பகல் முழுதும் வேறு வேறு வேலைகள் நமது கவனத்தை ஆக்கிரமித்து இருந்திருக்கும். இரவு வந்தவுடன் சிந்தனை வௌவால்கள் சிறகடித்துப் பறக்க ஆரம்பிக்கும்.

இன்னும் சிலருக்கு வேறொரு கவலையால் தூக்கம் வராமல் போய்விடும். தூக்கம் வரவில்லையே என்ற கவலைதான் அது! குடிப் பழக்கத்தை நிறுத்த முடியவில்லையே என்ற கவலையால் குடிப்பதைப் போன்றதுதான் இதுவும். மகிழ்ச்சியைப் பற்றி ஓஷோ கூறும்போது ‘தேடுவதை நிறுத்துங்கள். தேடியது கிடைக்கும்’ என்பார். அதாவது மகிழ்ச்சியைத் தேடி ஓடாமல் அமைதியாக இருந்தோமென்றாலே மகிழ்ச்சி தானாக நம்மைத் தேடி வரும். அதுபோல்தான் தூக்கமும்.

தூங்கவிடாத சிந்தனை

தூக்கம் வரவில்லையே எனக் கவலைப்பட்டாலே தூக்கம் தொலைந்து போய்விடும். தூங்குவது இயல்பாக நடைபெறாமல், அதற்காகப் பெரிதும் முயற்சி மேற்கொண்டால் ‘மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கலை’ என ‘முதல் மரியாதை’ திரைப்படப் பாடல் வரிபோல் எதிர்மறையாகவே முடிந்துவிடும். பதவி, புகழ், நல்ல பெயர், விளம்பரம் போன்றவற்றைப் போல் தூக்கமும் தானாக வருவதே சிறப்பாகும்.

இன்னும் சிலர் மது, காபி, தேநீர், குளிர்பானங்கள் போன்றவை தூக்கத்துக்கு உதவும் என நினைத்துப் பயன்படுத்துவார்கள். அவை தற்காலிகமாகத் தூக்கத்தைத் தந்தாலும், சொந்தச் செலவில் சூனியம் வைப்பதுபோல் நாளடைவில் தூக்கமின்மையை இவை அதிகரித்துவிடும்.

தூங்கும் அறைக்குள் சிந்தனைகளுக்கும் செல்போன்களுக்கும் தடா போட வேண்டும். நல்ல தூக்கத்துக்கு உடற்பயிற்சி உறுதுணை. இவ்வளவு சிறப்புமிக்க தூக்கம் முக்கியமே என்றாலும், அளவுக்கு அதிகமாகத் தூங்குவதும் சமநிலைச் சீர்குலைவை ஏற்படுத்தும். எப்படி?

கட்டுரையாளர், மனநலத் துறைப் பேராசிரியர்
தொடர்புக்கு: ramsych2@gmail.com

Madras HC okays PG medical course admissions with clauses

No weightage (incentive marks) shall be given to candidates coming under the A3 category (doctors who had done specialisation, working in emergency and critical care units), the bench made it clear.



Published: 18th May 2018 03:56 AM

Madras HC (File | PTI)

By Express News Service

CHENNAI : A vacation bench of the Madras High Court has directed the Tamil Nadu government to complete the process of selection of candidates for PG degree/diploma courses in medicine and proceed with the admission for 2018-19 before May 31 on the basis of the Supreme Court directions and orders of the government. No weightage (incentive marks) shall be given to candidates coming under the A3 category (doctors who had done specialisation, working in emergency and critical care units), the bench made it clear.

“Although it appears that the committee, which had recommended the categorisation, might not have considered certain parameters laid down by the Supreme Court, the basis adopted by it cannot completely be held as wholly extraneous and uncalled for. In the above circumstances, we hold that in order to complete the admission process of the PG degree/diploma courses, the categorisation, as provided in the impugned GOs, sans A(3) shall be construed to be valid for the purpose of admission for the academic year 2018-19,” the bench said.

The bench was partly allowing a writ appeal from the State government challenging the single judge order dated April 18 last and disposing of the writ petitions on the issue, on Thursday.
The bench also directed the government to include a retired judge of the High Court in the expert committee, which was constituted to identify the categorisation of difficult, remote and rural areas, as directed by the Supreme Court.

Each time such an identification and categorisation takes place, it is always put to challenge by the aggrieved sections, who were omitted to be included or sections which are held not entitled and thereby the admission process gets completely derailed every academic year. In such an event, the courts are forced to pass orders more on the basis of expediency only to protect the interest of the public at large. 


To avoid such recurrence in future towards categorisation of doctors who are employed in the remote, difficult and rural areas for the purpose of benefit of additional weightage, as envisaged in proviso to sub-clause IV of Regulation 9 of the Medical Council of India, the committee may be headed by a retired judge of the High Court.

This is more so, when repeatedly such an identification or categorisation is challenged in the legal forum so that the experts, who are part of the committee, will have the benefit of legal acumen from the judge concerned while making the recommendations for identifying the areas in tune with the provisions of the MCI and the directions of the apex court, the bench said and hoped that the government would bear this in mind while constituting any further committee/s for future academic years in respect of admissions to PG degree/diploma courses.

Way out


To avoid such recurrence in future towards categorisation of doctors who are employed in the remote areas for the purpose of benefit of weightage, as envisaged in proviso to sub-clause IV of Regulation 9 of the Medical Council of India
720 more seats in Anna Univ centres
Anna university will set up four new BE or BTech progr-ammes that will create an additional 720 seats (240 in each centres) in TN.

Medical PG student dies by suicide

Medical PG student dies by suicide  26.07.2026 Hyderabad: A 29-year-old postgraduate medical student died after allegedly jumping from the t...