Sunday, May 20, 2018

1,855 prisoners’ release hangs fire, thanks to Raj Bhavan

TIMES NEWS NETWORK

Chennai: 20.05.2018


The release of 1,855 prisoners from Tamil Nadu’s prisons, as promised by chief minister Edappadi K Palaniswami, is hanging fire after governor Banwarilal Purohit asked for separate processing of papers of the prisoners.

Following a government order early this year, the chief minister announced that prisoners who have completed 10 years of imprisonment by February 28 would be given premature release. Officials at the secretariat confirmed that the governor’ office wanted the papers of remission to be processed separately for the 1,855 prisoners.

“This is a herculean task, something which the Raj Bhavan never insisted on in the past,” said an official, pointing out the one-strike release of 1,405 prisoners during the DMK rule in 2008. An intelligence official said the reason could be that the Centre wants to scrutinise the political background of the crimes the prisoners were convicted for. “In case of murders, the political background of the victim may matter,” said the officer. Jail officials said many prisoners were upbeat after the announcement, but have now started asking if there was a problem. “Many had packed and were waiting to meet their families,” said an official. If the Raj Bhavan decides to vet the list, some may be disappointed.
Long queues at immigration counters in airport irk flyers

TIMES NEWS NETWORK

Chennai:   20.05.2018


Long queues at immigration counters have miffed passengers at Chennai airport. Though the international terminal is seeing an increase in passenger traffic due to summer holidays, immigration check continues to be slow. Departing and arriving travellers have to stand in queue for more than two hours to clear immigration check.

Irate passengers tweeted about their plight and tagged AAI and the civil aviation ministry on Saturday. A tweet by a passenger read, “Total chaos at immigration ...More than 500 people in queue...” He further says he had landed at 12.04 am and 45 minutes later, there were 100 people in the queue. It took an hour for him to clear the immigration check at Chennai airport.

Frequent flyers say immigration authorities at the airport were not realising the importance of manning all the counters. Two days ago, there was a huge crowd of 500 to 1000 people but only a few counters were working at the departure terminal, said a traveller.

Responding to one of the tweets, AAI said “There was an unprecedented movement of passengers from 500 to 1000 between 11.15pm and 12.15am which led to the delay.”

Air Passengers Association of India national president D Sudhakara Reddy said, “AAI tells us there is a shortage of people and the home ministry is yet to allot staff for immigration. But why should there be a delay to allot people. Chennai airport should be treated better.” 


CHAOTIC SCENES: A photo of crowded immigration counters at the airport on Saturday
TNPSC probe finds 67 blank answer sheets went missing

Helped Rig Process Of Recruitment

A.Selvaraj@timesgroup.com  20.05.2018

Chennai:

At least 67 unused answer sheets meant for the Group-I examinations went missing from the TNPSC office premises, helping the recruitment process to be rigged, officials with the state public service commission have revealed.

The central crime branch (CCB) police have already arrested four TNPSC officials and one of them, Kasi Ramkumar, stated during questioning that he was an ex-student of Apollo Study Centre which has come under the scanner because 62 of the 74 candidates selected are from the institute. An investigation officer said Ramkumar had spilled the beans about others involved in the racket who are yet to be named in the FIR. Apart from the four TNPSC officials, police have also arrested a candidate Ramkumar, his friend Kumaresan, both hailing from Madurai, and a broker Paulraj.

The XV additional sessions judge (vacation judge), S Purushothaman, had granted anticipatory bail to Apollo Study Centre director Sam Rajeshwaran on May 16 and directed him not to leave the country without the prior permission of the court. A senior police officer said, “We may get more information after questioning Rajeshwaran.” Police will soon approach the court to cancel his bail plea as they believe he performed a key role in the scam.

Investigation officers had already collected the mobile call list of Rajeshwaran and the arrested TNPSC officials. “We can conclude based on the call list that Rajeshwaran was in touch with TNPSC officials on a regular basis. He was also in touch with experts who prepared question papers for the examination held last year,” said the officer. Preliminary investigations had confirmed several irregularities as some answer sheets were also altered post-examination before being sent for evaluation.

The investigation was shifted from the forgery wing of the CCB to the investigations unit of crime against women (IUCAW) wing. The additional deputy commissioner of police V Shyamala Devi, who was promoted as deputy commissioner of police, has been assigned as a special officer to probe the case. 


Yeddy Run Out By Loyal Challengers 

The 55-Hour-Old CM Failed The Test Of Time As SC’s 1-Day Deadline Proved Too Short To Lure Away Cong-JD(S) MLAs
K’taka Shifts To HD: Kumaraswamy To Take Crease On Wed

Manu Aiyappa Kanathanda &Sandeep Moudgal TNN

Bengaluru:

A week after Karnataka went to the polls, four days after it threw up a fractured mandate and barely 55 hours after being sworn in chief minister, B S Yeddyurappa of the BJP resigned around 4pm — the time set by the Supreme Court for the floor test on Saturday.

With numbers staying as they were on Tuesday —104 for the BJP,117 for the JD(S)-Congress-BSP and independents combine — and the apex court dramatically curtailing the time given to him to prove his majority to28hoursfrom 15days,Yeddyurappa wasunableto maketheseat arithmeticwork. This forced him to resign before a floor test for the second timein his politicalcareer.

This paved the way for JDS’sHDKumaraswamy tobe sworn in chief minister and for the hastily-formed Congress-JDS alliance to form the government. Kumaraswamy's oath ceremony was initially slated for Monday (between noon and 1.05pm, apparently on the adviceof hisfather Deve Gowda’s astrologer). However, he later deferred it to Wednesday as May 21is the death anniversary of Rajiv Gandhi. The assembly speaker will be chosen on Thursday.

The three-day-old drama, thus, ended in a tame anti-climax after having promised to be an edge-of-the-seat thriller (although TOI in its Saturday edition had listed pre-trust vote resignation asoneof thescenarios).

BJP’sinability towin the vote will have national implications and will boost the efforts of its rivalstoform an anti-BJP national coalition ahead of next year’s general election. Signalling this, Kumaraswamy saidthatinvitationsfor hisswearing-in ceremonywouldbeextended to Mayawati of BSP, Tejaswi Yadav of RJD, Akhilesh Yadav of SP, Mamata Bannerjee of TMC, KC Rao of TRS and Chandrababu Naidu of TDP. The Gandhis, Sonia and Rahul, of course, areinvited.


JD(S)’s HD Kumaraswamy and Cong’s D K Shivakumar celebrate B S Yeddyurappa’s resignation 



Will ensure BJP wins all 28 LS seats: BSY

The day, though, wasn’t without drama. It started with the tired legislators of Congress and JD(S) doing the return bus trip from Hyderabad and checking into various star hotels. The Congress, by mid-morning, started releasing a series of audio recordings allegedly showing BJP leaders, including Yeddyurappa, reaching out to their MLAs. BJP denied these charges, including one where Yeddyurappa’s son Vijayendra and another close aide were purportedly heard making an MLA’s wife an offer of ₹15 crore or ₹5 crore plus a cabinet post for her husband’s cooperation.

In his exit speech BSY admitted that he had personally reached out to rival MLAs. “I admit that I had gotten in touch with MLAs to ensure that a stable BJP government is in power. The MLAs had even promised support but anything can happen in politics,” he said.

And, then, for the Congress there were anxious moments over two of its missing Congress MLAs. Mining baron Anand Singh (Vijayanagara) and Pratapgouda Patil (Maski) had vanished from the party camp soon after the results were announced. On Saturday, Patil was traced to a hotel close to Vidhana Soudha. Attempts by Congress leaders to meet him and serve the whip were unfruitful.

Mining baron Janardhana Reddy’s brother Somashekhar Reddy was supposedly closeted with him. Cops were pressed into service with senior officers visiting Patil in his room. However, Patil came to the assembly escorted by two BJP MLAs but on entering, chose to go to the Congress camp.

As TV screens streamed pictures of him having lunch with Congress MLAs the realisation set in that, perhaps, the game was up for the BJP. The needle didn’t seem to have moved in their number quest one bit.

Awhile later Anand Singh also appeared, accompanied by his family and Shivakumar. That drained all hope in the BJP camp. Soon, only Shobha Karandlaje, a close confidante of BSY, was seen in the visitors’ gallery, cutting a forlorn figure. With most of BJP’s senior brass by then opting to leave, she was seated next to Congress leaders Ashok Gehlot and Mallikarjun Kharge as Yeddyurappa rose to speak.

The Lingayat strongman began his emotional speech looking to send a message to his supporters and party leadership, saying: “If people of Karnataka had given me few more seats, I would have made Karnataka a model state. But I am not going to get bogged down by this defeat. I will ensure the party wins 28 out of 28 seats in Lok Sabha.’’ Repeatedly referring to Prime Minister Modi and party chief Amit Shah, he said he would continue his fight for the farmers’ rights. His 23-minute address brought applause from his colleagues and drew tears from the Udupi-Chikkamagalur MP Karandlaje.

Yeddyurappa said Karnataka may face a midterm poll with the fall of the Congress-JD(S) coalition government and took direct jibes at both his predecessor (Siddaramaiah) and successor (Kumaraswamy). 



IN HIS OWN SPACE


அனுபவம் புதுமை 05: எனக்கொரு ‘ட்ரீட்’டு வேணுமடா!

Published : 18 May 2018 11:03 IST

  கா. கார்த்திகேயன்




தொண்ணூறுகளில் பாக்கெட் மணி என்பது டீக்கும் வடைக்கும் மட்டுமே சரியாக இருக்கும். இன்றைக்குச் சில பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்குத் தருகிற ‘பாக்கெட் மணி’யைப் பார்த்தால், பாக்கெட் முழுவதுமே ‘மணி’யாகத்தான் இருக்கிறது. இவ்வளவு பணத்தை வாங்கி பசங்க என்னதான் செய்கிறார்கள்? எங்கும் ‘ட்ரீட்’, எதிலும் ‘ட்ரீட்’, தொட்டதெற்கெல்லாம் ‘ட்ரீட்!’

படிப்பை முடித்ததற்காக, திருமணத்துக்காக, வீடு கட்டியதற்காக, அலுவலத்தில் புரோமோஷனுக்காக என விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் முன்பு ‘ட்ரீட்’களும் அதற்கான காரணங்களும் இருந்தன.

ஆனால், இந்தக் காலத்துப் பசங்களின் கொண்டாட்டத்துக்கு வரையறையே கிடையாது. கல்லூரியில் ‘அரியர்’ இல்லாமல்கூட இருப்போம். ஆனால், ‘ட்ரீட்’ இல்லாமல் இருக்கவே மாட்டோம் என்கிற ரீதியில் பரீட்சையில் ‘பாஸா’னால் ‘ட்ரீட்’, ‘ஃபெயிலா’னாலும் ‘ட்ரீட்’, அப்பா ‘பாக்கெட் மணி’ கொடுத்தால் ‘ட்ரீட்’, ‘புரொஃபஸ’ரிடம் திட்டு வாங்கினாலும் ‘ட்ரீட்’, மருத்துவமனையில் சேர்ந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆனாலும் ‘ட்ரீட்’, நண்பர்கள் சண்டை போட்டாலும் ‘ட்ரீட்’, மீண்டும் ஒன்று சேர்ந்தாலும் ‘ட்ரீட்’. அட, ஒரு வாரம் தொடர்ந்து காலேஜுக்கு வந்தால், அதுக்கும் ‘ட்ரீட்’ எனப் பட்டியல் அனுமார் வால் போல நீண்டுகொண்டே செல்கிறது.

எப்போதும் ‘ட்ரீட்’ மன நிலையிலேயே இருக்கும் சில இளைஞர்கள், கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு வேலைக்குச் செல்லும்போதும்கூட அதை விடுவதில்லை. ஒரு கட்டத்தில் கொண்டாட்டம் எல்லாம் காணமல் போய் திண்டாட்டம் வரும்போது, அதை எதிர்கொள்ள முடியாமல் தவிர்க்கிறார்கள். எப்போதும் ‘ட்ரீட்’ மனநிலையிலிருந்து பின்னர் மாட்டிக்கொண்டு முழித்த என் முன்னாள் மாணவரின் அனுபவமும் அந்த ரகம்தான்.

2006-ம் ஆண்டில் படித்த மாணவன். பெயர் மோகன். கல்லூரியில் அவனை ‘அல்டாப்’ மோகன் என்றுதான் பலரும் அழைப்பார்கள். அவனைப் போலப் புதுப்புது காரணங்களைக் கண்டுபிடித்து நண்பர்களுக்கு ‘ட்ரீட்’ தருவதற்கு நிச்சயம் யாராலும் முடியாது. ‘ட்ரீட்’ வைப்பதற்குப் புதிய கடைகளைத் தேடி அலைவான்.

“பணத்தை இப்படியெல்லாம் செலவு செய்யாதே” என்று அறிவுரை வழங்கினால், “சரி சரி” என்று தலையாட்டுவான். ஆனால், அடுத்த சில நாட்களில் புதிய ‘ட்ரீட்’டுக்குத் தயாராகிவிடுவான். ஒரு முறை அவன் தந்தையிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தபோது இதைப் பற்றிக் கேட்டேன்.

“ஏன் சார், இவ்வளவு செலவு செய்ய அனுமதி கொடுக்குறீங்க”.

“எங்க வீட்ல முதுகலை படிக்கிற முதல் தலைமுறை பையன் இவன்தான். நல்லாவும் படிக்கிறான். இப்படி எல்லாம் ‘ட்ரீட்’ தந்தாதான் மரியாதை கிடைக்கும்னு சொல்றான்” என்று அப்பாவியாகச் சொன்னார்.

“பாக்கெட் மணி தருவது தவறில்லை. ஆனா, அந்தப் பணத்தை ஈட்ட நீங்கள் படும் கஷ்டத்தையும் காட்டி வளர்க்கணும். அதுதான் பொறுப்புணர்வை வளர்க்கும்” என்று சொல்லி அனுப்பிவைத்தேன். இந்தச் சந்திப்பு நிகழ்ந்த இரண்டு நாட்கள் கழித்து ஒரு ‘ட்ரீட்’ வைத்தான் மோகன். என்ன காரணம் என மாணவர்களிடம் விசாரித்தபோது, அவன் புதிதாக ஒரு நாய்க் குட்டி வாங்கியிருப்பதாகச் சொன்னார்கள்.

எனக்குக் கோபம் தலைக்கேறியது. மோகனை அழைத்து, “ஏன்பா, செலவு பண்றதுக்கு வகைதொகை வேண்டாமா, எப்பவும் இப்படி ‘ட்ரீட்’ மனநிலையிலேயே இருந்தா எப்படி? என்றாவது ஒரு நாள் அவசரத் தேவைன்னா என்ன பண்ணுவ” என்றேன். அவனோ கேள்வியின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல், “சார், ‘கேம்பஸ் இண்டர்வியூ’வில் தேர்வாயிட்டேன். அடுத்து வேலைதான். பணத்துக்குப் பிரச்சினையே இல்ல” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

அதன் பிறகு மோகனை நான்கு ஆண்டுகள் கழித்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பின் போதுதான் பார்த்தேன்.

“சார் வணக்கம்” என்று அவன் சொன்ன விதமே மனச்சோர்வுக்கு ஆளாகி இருந்தான் என்பதைத் தெளிவாகக் காட்டியது.

“மோகன், எப்படி இருக்க?”

“ஒரு வருஷமா கொஞ்சம் பிரச்சினை சார். 7 லட்சம் ரூபாய்வரை செலவாயிடுச்சு” என்றான்.

“ஏன், என்னாச்சு.”

“எதிர்பாராம ஒரு விபத்து நடந்துபோச்சு. ஒரு பையன் மேல வண்டியை மோதிட்டேன். அவனுக்குப் பயங்கர அடி, அவன் வண்டிக்கும் ரொம்ப சேதம். பிரச்சினையை மேற்கொண்டு வளர்க்காம, அந்தப் பையன் வீட்டுல பேசி, அவனோட மருத்துவச் செலவு, புது வண்டிக்கு ஆன செலவை ஏற்றுக்கொண்டு ஏற்பாடு பண்ணிக் கொடுத்தேன். அதுக்கு 7 லட்சம் ரூபாய் செலவாயிடுச்சு. வீட்ல பணம் கேட்க முடியாது; கடன் வாங்கித்தான் கொடுத்தேன். அந்தக் கடனை வட்டிகட்டி அடைச்சுக்கிட்டு இருக்கேன்” என்றான் சோகம் சூழ்ந்த முகத்துடன்.

“அடடா, கவனமா இருக்கக் கூடாதா? விபத்து எங்க ஏற்பட்டது?” என்றேன்

“மாமல்லபுரத்தில் சார்”

“உன்னோட ஆபீஸ் சென்னையிலதானே”

“ஆமா சார், வார இறுதிக் கொண்டாட்ட ‘ட்ரீட்’க்கு ஈசிஆர் போனப்பதான் இப்படி ஆயிடுச்சு” எனத் தயக்கத்துடன் சொன்னான்.

“படிக்குற காலத்துல ஆரம்பிச்ச இந்த ‘ட்ரீட்’ மோகம், இன்று எவ்ளோ பெரிய சிக்கலில் உன்னை இழுத்துவிட்டு இருக்குது பார்த்தியா” எனக் கோபத்துடன் சொன்னேன்.

“இந்தச் சம்பவத்துக்குப் பிறகு நிறையவே புரிந்துகொண்டேன். கடந்த ஆறு மாசமா யாருக்கும் ‘ட்ரீட்’ தரதில்ல. யாரு ‘ட்ரீட்’ வைத்தாலும் போறதில்லை” என்று விரக்தியாகப் பேசியவனிடம் குறுக்கிட்டேன்.

“கொண்டாட்டங்கள், பரிசுப் பொருட்கள், வாழ்த்துக்கள் அன்பின் வெளிப்பாடுதான். அதில் தப்பு ஏதும் இல்ல. ஆனா, அது வரையறைக்குள் தர்க்கரீதியா இருப்பது அவசியம். கடமையை நிறைவாய் செய்ததற்கும் அதைத் தொடர்வதற்கும் கொண்டாட்டம் அவசியம்தான். கடமையிலிருந்து விலகி நிற்கிற கொண்டாட்டம் தேவை இல்ல” என்றேன்.

மோகன் அதை ஆமோதித்தான். வரையறை இல்லாத கொண்டாட்டங்களுக்கு என்றும் மரியாதை கிடையாது அல்லவா?

(அனுபவம் பேசும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: karthikk_77@yahoo.com
இனிப்பு தேசம் 06: காலை பானம், தேவை கூடுதல் கவனம்

Published : 19 May 2018 11:40 IST

மருத்துவர் கு. சிவராமன்




எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது மற்ற எந்த நோயையும்விட நீரிழிவு நோயில் எல்லோரும் அடிக்கடி கேட்கும் கேள்வி இது. “அதைச் சாப்பிடாதே, இதைச் சாப்பிடாதே எனச் சொல்றீங்களே! எதைத்தான் சாப்பிடறது?” என்ற கேள்வியோடு, மருத்துவர் முகத்தை வருத்தமாய்ப் பார்க்கும் நீரிழிவு நோயாளிகள் பலர். இந்த இனிப்பு தேசத்தில் ஏராளமான உன்னத உணவு வகைகள் அவர்களுக்கு உண்டு. தேவையெல்லாம் கொஞ்சம் கரிசனமும் அக்கறையும் மட்டும்தான்.

காலை வெறும் வயிற்றில் உள்ள சர்க்கரை அளவு நீரிழிவு நோயாளிகளுக்கு மிக முக்கியமானது. அதிகாலையில் அந்த அளவு கொஞ்சம் கூடுதலாக உள்ளபோது நடு இரவில் இன்னும் அதிகமாகவே இருந்திருக்கும்; உறக்கத்தில் இருக்கும் நீரிழிவு நோயாளிக்கு அது சற்று ஆபத்தானது. நீரிழிவு நோயினருக்கு வரும் மாரடைப்பு அதிகம் வலியைத் தராது என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, ஒவ்வொரு நீரிழிவு நோயாளியும் இரவு உணவிலும் அதிகாலை பானத்திலும் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

முதல் உணவு

கொஞ்சம் சீனி போட்டு கும்பகோணம் டிகிரி காபி குடிக்கலைன்னா அந்த நாளே போச்சு; மூன்று சப்பாத்தி சாப்பிட்டாலும், கடைசியா நான்கு உருண்டை தயிர் சோறு சாப்பிட்டாத்தான் தூக்கம் வரும் என்ற வறட்டுப் பிடிவாதங்களை நீரிழிவு நோயாளிகள் உடைத்தே ஆக வேண்டும். முதலில் காலை பானங்களைப் பற்றிப் பார்ப்போம்.

காபியைவிட நிச்சயம் தேநீர் சிறப்பு. அதுவும் குறிப்பாக பிளாக் டீ எனப்படும் வறத் தேநீர்-கட்டன் சாயா, கிரீன் டீ, ஊலாங் டீ ஆகிய தேநீர் வகைகள் ரத்த சர்க்கரை அளவு கூடாமல் பாதுகாப்பதிலும், நீரிழிவு நோயாளிகளுக்கு, ரத்த நாளச்சுவர்களைச் சிதையாது பாதுகாப்பதிலும் உதவுவதை மருத்துவ ஆய்வுகள் நிரூபித்துள்ளன. தொடர்ச்சியாக மூணு முதல் ஆறு கோப்பை பிளாக் டீ அன்றாடம் அருந்தும் நீரிழிவு நோயாளிக்கு, இதய நோய் 60% தடுக்கப்படுகிறது என ஆய்வுகள் சொல்கின்றன. தேநீரில் கொட்டிக்கிடக்கும் பாலிபீனால்களும் தியானைன் சத்தும்தான் இந்தப் பணியைச் செய்ய உதவுகின்றன.

பால் கூடாது

கிரீன் டீ என்பது, இந்த பாலிபீனால்கள் தேயிலையைப் பதப்படுத்தும்போதும் மணச்செறிவூட்டுகையிலும் இழக்கப்பட்டுவிடாமல், அப்படியே உலரவைத்து எடுக்கப்படுபவை. அதனால்தான் கிரீன் டீக்கு மதிப்பு கொஞ்சம் கூடுதல், விலையும் கூடுதல். கிரீன் டீயின் விலை அதிகம் என நினைத்தால், பிளாக் டீ குடித்தாலும் கிட்டத்தட்ட அதே பலன் கிடைக்கும். பிளாக் டீயோ கிரீன் டீயோ தேநீருக்குப் பால் சேர்த்தால், அதன் பலன் சட்டென்று சரிந்துவிடும். தேநீரில் பாலை ஊற்றியதும் பாலிபீனால்கள் சிதைவடைந்துவிடுவதால், ஆன்ட்டி ஆக்சிடண்ட் தன்மை, கேபிலரி பாதுகாப்பு எல்லாம் குறைந்து போய்விடுகிறதாம். இனி பாலில்லாத பிளாக் டீ அல்லது கிரீன் டீ நீரிழிவு நோயினரின் தேர்வு பானமாக இருக்கட்டும்.

“பால் வேண்டாம். துளியூண்டு சீனி?” என்று சிலர் கேட்கலாம். கூடவே கூடாது. இன்னொரு முக்கிய விஷயம் நீரிழிவு நோய் மிகச் சிறந்த கட்டுப்பாடு வரும்வரை நாட்டுச் சர்க்கரை, தென்னைச் சர்க்கரை, பனஞ் சர்க்கரை என எந்த வகை சர்க்கரையும் கொஞ்ச காலத்துக்கு வேண்டாம்.

சுக்ரலோஸ் இன்னும் மோசம்

நீரிழிவு நோய் இன்னும் வரவில்லை. வயது 35-யைத் தாண்டுகிறது. பரம்பரைச் சொத்தாக நீரிழிவு நோய் வந்துவிடுமோ என அச்சத்தில் இருப்பவரும், இனிப்பு சுவைக்குத் தேனோ பனங்கருப்படியோ கொஞ்சமாகப் பயன்படுத்தலாம். கரும்பு வெல்லம் என்றால், அதை வெளுக்க வைக்க பயன்படுத்தப்படும் ஹைட்ரோஸ் சேர்க்காத வெல்லத்தூளைக் கொஞ்சமாகப் பயன்படுத்தலாம். 40 வயதைத் தாண்டும் எல்லோருமே இனிப்பு, உப்பு சுவைகளைக் குறைத்து கசப்பு, துவர்ப்பு சுவையைக் கூட்டுவது நீரிழிவு இதய நோய்கள் வராது காக்கும்.

இனிப்பு வேண்டாம். செயற்கை இனிப்பு? இன்றைக்கு ஸீரோ கலோரி எனச் சந்தையில் ஏராளமாய்ப் புழங்கும் செயற்கைச் சர்க்கரையையும் சற்று எச்சரிக்கையுடனேயே அணுக வேண்டியுள்ளது. சுக்ரலோஸ் இன்று உலகச் சந்தையை ஆக்ரமித்துள்ள செயற்கைச் சர்க்கரை. ஒரிஜினல் சர்க்கரை மூலக்கூறுகளில், சில அணுக்களை நீக்கிவிட்டு, குளோரின் அணுக்களைச் சேர்த்து செயற்கையாக உருவாக்கப்படும் இந்த இனிப்பு, வெள்ளைச் சீனியைவிட 600 மடங்கு அதிக இனிப்பைத் தரும்.

முதலில் “இது முற்றிலும் பாதுகாப்பானது. உடலில் எந்த உறுப்போடும் பணியாற்றாது. முற்றிலும் இன்னெர்ட் (inert )” எனப் பேசப்பட்டது. சமீப காலமாக ஆங்காங்கே “இல்லை இந்த சுக்ரலோஸ் முற்றிலும் இன்னெர்ட் கிடையாது. குடல் நுண்ணியிரியோடு சேர்ந்து சில ரசாயனங்களை உருவாக்குகிறது. 450 பாரன்ஹீட்வரை உடையாது எனச் சொல்லப்பட்டாலும், சில சூழலில் அதற்கு முன்பே உடைந்துவிடுகிறது. அது புற்றுநோயை உருவாக்கும் காரணியாக மாறுமா?” என ஆராயத் தொடங்கியுள்ளனர்.

அதற்குள் செயற்கைச் சர்க்கரையில் செய்த கேசரி, குலாப் ஜாமூன் என இறங்குவது நிச்சயம் நல்லதல்ல. கசப்புத் தேநீரை காதலித்தே ஆக வேண்டும். கசப்பு, நீரிழிவுக்கு எப்போதும் சிறந்த பாதுகாப்பும்கூட.

சந்தையில் மூலிகைத் தேநீர் பிரபலம். அதுவும் பூங்காக்கள் வாசலில் திடீர் காபடேரியாக்கள், சூப் கடைகள் நிறையவே முளைத்துவிட்டன. அக்கறை, நல்லெண்ணத்துடன் அவற்றைச் சமைத்துவரும் சிறு வணிகர்களை நிச்சயம் ஊக்குவிக்கலாம். அதேநேரம், எல்லாச் சந்தையிலும் வணிகத்தை மட்டுமே பார்க்கும் திடீர் காளான் வணிகர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

வேளைக்கு ஒரு தேநீர்

இத்தொடரில் முன்பு பேசிய ஆவாரைக் குடிநீர் தேயிலை சேர்க்காத ஒரு மூலிகை பானம்தான். நிறைய வாசகர்கள் ஆவாரையோடு இணந்துள்ள பிற மூலிகைகள் என்ன எனக் கேட்டிருந்தனர். ஆவாரை, கொன்றை, நாவல், கோஷ்டம், மருதம், கடலழிஞ்சில், கோரைக்கிழங்கு எனும் ஏழு மூலிகைகள் சேர்ந்த இந்தப் பானம் கண்டிப்பாய் நாள்பட்ட நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறப்புப் பானம். நீரிழிவு நோயர்கள், தாங்களாகவே களத்தில் இறங்காமல், அருகிலுள்ள அரசு சித்த மருத்துவரை அணுகி, ஒருவார்த்தை ஆலோசித்துவிட்டு, இப்பானத்தை வாங்கி அருந்தலாம். வீட்டிலேயேகூட மூலிகைத் தேநீர் தயாரிக்க முடியும்.

லவங்கப்பட்டை, பிரியாணியில் சேர்க்கப்படும் ஒரு மூலிகை மணமூட்டி. நீரிழிவு நோயாளிகள் இந்தப் பட்டையைத் தேனீரோடு சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட சர்க்கரையைக் கட்டுப்படுவதில் பயனளிப்பதை, கூடவே கெட்ட கொழுப்பைக் குறைப்பதையும் ஆராய்ந்து சொல்லியிருக்கின்றனர். செம்பருத்திப்பூ இதழைத் தேயிலையுடன் சேர்த்துத் தேநீராக்கி அருந்த, கட்டுப்படாத நீரிழிவில் தொடரும் இதய நோய் வராதிருக்க உதவிடும்.

நடைப்பயிற்சிக்கு 20 நிமிடங்களுக்கு முன்னர் கொஞ்சமாக பிளாக் டீ, அலுவலகப் பணிக்கு இடையே சோர்வு நீக்க கிரீன் டீ, கொஞ்சம் கூடுதல் காஃபீன் மணத்தோடு தேநீர் வேண்டும் எனில் சீனத்து ஊலாங் டீ, மாலையில் லவங்கப் பட்டை, செம்பருத்தி இதழ் சேர்ந்த மூலிகைத் தேநீர், இரவு உணவுக்கும் காலை உணவுக்கும் முன்னதாக ஆவாரைக் குடி நீர் என நீரிழிவு நோயர் தங்கள் தேநீரைத் தேர்வு செய்துகொண்டால், எப்போதும் உற்சாகம் உண்டு. உடல் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்தும்!

(தொடரும்)
கட்டுரையாளர், சித்த மருத்துவர்
தொடர்புக்கு: herbsiddha@gmail.com
காஞ்சி முனிவரின் கோடீஸ்வர காரோட்டி

Published : 15 May 2018 10:00 IST

ஸ்ரீதர் சுவாமிநாதன்










‘‘மேத்தா... தலையை சுற்றுகிறது. பூஜையில் உட்காரக்கூட முடியலே...’’

முக்தி அடைவதற்கு முதல் நாள் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தொலைபேசியில் கூறிய வார்த்தைகள் இவை. தொலைபேசியில் அவர் தொடர்பு கொண்டு பேசியவர்... சுமார் 75 ஆண்டுகளாக குரு சேவையையே பணியாகக் கொண்டு வாழ்ந்து வரும் 83 வயதான சந்திரசேகர மேத்தா. பல தலைமுறைகளாக அவரது குடும்பமே காஞ்சி மடத்துக்கும் சங்கராச்சாரியார்களுக்கும் பணியாற்றி வருகிறது.

மகா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் அபரிமிதமான பக்தி கொண்ட இவரது பெயரும் சந்திரசேகரன்தான். அந்தப் பெயரை இவருக்கு வைக்கும்படி ஆசி வழங்கியதும் மகா பெரியவர்தான். ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு அணுக்கத் தொண்டராக இருந்து 64 ஆண்டுகளாக அவரோடு அருகிலேயே இருந்து பணியாற்றியதோடு, அவருக்கு கார் ஓட்டிய பெருமைக்கு உரியவர் சந்திரசேகர மேத்தா. ‘‘காஞ்சி முனிவரின் அருளாசியால் பெரும் கோடீஸ்வரக் குடும்பம் எங்களுடையது. அவர்களுக்கு சேவை செய்வதே எங்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியம்’’ என்று சிலிர்ப்புடன் கூறும் சந்திரசேகர மேத்தாவை சென்னை கீழ்பாக்கம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் சமீபத்தில் சந்தித்தோம். அவரது நினைவுகளில் இருந்து..

சந்திரசேகர மேத்தாவின் முன்னோர்கள் குஜராத்தின் ‘கேடவாள்’ என்ற வகுப்பைச் சேர்ந்த ரிக் வேத பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கி.பி..1685-ல் மேத்தாவின் மூதாதையர் குஜராத்தில் இருந்து தமிழகம் வந்தனர். தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் சரபோஜி மகாராஜாவின் ஆலோசனைப்படி அப்போது கும்பகோணத்தில் இருந்த காஞ்சி மடத்துக்குச் சென்று அப்போதைய பீடாதிபதியாக இருந்த சங்கராச்சாரியாரை தரிசித்தனர். அப்போதில் இருந்து மேத்தாவின் குடும்பத்தினருக்கும் காஞ்சி மடத்துக்கும் தொடர்பு ஏற்பட்டது.

சந்திரசேகர மேத்தாவின் பாட்டனார்கள் ‘டி.பி. மேத்தா அண்ட் சன்ஸ்’ என்ற பெயரில் வைர வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தனர். பெரும் செல்வந்தர்களாக விளங்கினர். சந்திரசேகர மேத்தாவின் தாத்தா ரங்கநாத் மேத்தா. ஆங்கிலேயர் ஆட்சியில் 1937 முதல் 47-ம் ஆண்டுவரை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் கவுரவ நீதிபதியாக இருந்தவர். 1947 முதல் 52-ம் ஆண்டுவரை இந்தியன் வங்கியின் இயக்குநராக இருந்துள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். சேம்பர் ஆஃப் காமர்ஸின் துணைத் தலைவர் உட்பட பல பதவிகளை வகித்தவர்.

ரங்கநாத் மேத்தாவின் மூத்த சகோதரர் ராமநாத் மேத்தா. அவரது மகன் நீலகண்ட மேத்தா. ‘‘இப்போது சென்னை தியாகராய நகரில் உள்ள நீலகண்ட மேத்தா தெரு இவரது பெயரில் அமைந்ததுதான். நீலகண்ட மேத்தாவின் சகோதரர் சிவசங்கர மேத்தா 1963-64-ல் சென்னை மாநகர மேயராக இருந்தவர். சென்னை நெல்சன் மாணிக்கம் சாலை பகுதியில் உள்ள ‘மேத்தா நகர்’ எனது பாட்டனார் பெயரில் அமைந்ததுதான்’’ என்று பூரிப்போடு சொல்கிறார் சந்திரசேகர மேத்தா.

இவருடைய தாத்தா ரங்கநாத் மேத்தா, காஞ்சி மகா பெரியவருடன் கூடவே இருந்து அவருக்கு கைங்கர்யம் செய்தவர். 1923-ம் ஆண்டு மகா பெரியவர் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரிக்கு தாடங்க பிரதிஷ்டை செய்தார். ரத்னங்கள் பதிக்கப்பட்ட அந்த தாடங்கங்களை மகா பெரியவர் உத்தரவுப்படி ரங்கநாத் மேத்தாவும் அவரது சகோதரர்களும் கைங்கர்யமாக செய்து கொடுத்துள்ளனர். ‘‘என் தாயின் வயிற்றில் நான் இருந்தபோதே எனக்கு பெயர் வைத்தவர் மகா பெரியவர்’’ என்று கூறி ஆச்சரியப்படுத்தினார் சந்திரசேகர மேத்தா. எப்படி.. என்று மனதில் தோன்றியபோதே அவரே விளக்கினார்.

பல இடங்களுக்கு செல்ல வேண்டியிருப்பதால் வாகனத்தில் செல்லுமாறு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் மகா பெரியவர் கூறியிருக்கிறார். 1958-ல் காஞ்சி மடத்துக்கு கார் வாங்கப்பட்டது. சந்திரசேகர மேத்தா தனது சொந்தக் காரை ஓட்டியபடி வருவதை பல முறை பார்த்த பெரியவர் அவரையே மடத்தின் காரை ஓட்டுமாறு பணித்தார். ‘‘1998-ம் ஆண்டு வரை ஜெயேந்திரர் செல்லும் காரை நான் ஓட்டினேன். பிறகு, எனக்கு வயதாகிவிட்டதால் எனது மகன் ரமேஷ் மேத்தா அந்தப் பணியைச் செய்தார்.

இப்போதும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு ரமேஷ் மேத்தாதான் கார் ஓட்டுகிறார். இது எங்கள் பரம்பரைக்கு கிடைத்த பேறு’’ என்கிறார் மேத்தா பெருமிதத்துடன்.

மகா பெரியவர் பற்றிய மேத்தாவின் நினைவுகளை கேட்டோம். சில விநாடிகள் நெற்றி சுருக்கி சிந்தனையில் மூழ்கியவர் பிரகாசமான முகத்துடன் சொன்னார்.. ‘‘ஒருமுறை சந்திரமவுலீஸ்வரர் பூஜை முடிந்து மகா பெரியவர் எல்லாருக்கும் தீர்த்த பிரசாதம் வழங்கிக் கொண்டிருந்தார். பிரசாதம் பெற்றுக் கொள்ள வரிசையில் ஒருவராக வந்து கொண்டிருந்தார் ‘கல்கி’ சதாசிவம். அவர் பெரியவர் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். பெரியவருக்கும் சதாசிவம் மீது அலாதி அன்பு. சதாசிவம் வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர். கடல் கடந்து சென்று வந்தவர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்படுவது இல்லை. இது தெரியாமல் சதாசிவம் வரிசையில் வந்து கொண்டிருந்தார். மடத்தைச் சேர்ந்தவர்களுக்கு சதாசிவம் வெளிநாடு சென்று வந்தவர் என்று தெரியும். இருந்தாலும் அவரிடம் சொல்ல முடியாமல் தர்மசங்கடத்துடன் தவித்துக் கொண்டிருந்தனர். பெரியவரை நெருங்கிய சதாசிவம் தீர்த்த பிரசாதம் பெற பவ்யமாக கை நீட்டினார். எல்லாருக்கும் என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு.. பெரியவர் சிரித்தபடி தன் முன் இருந்த தேங்காயை எடுத்து பக்குவமாக உடைத்து அதன் இளநீரை சதாசிவத்தின் கைகளில் பிரசாதமாக ஊற்றினார். மகிழ்ச்சியின் உச்சிக்கு சென்ற சதாசிவம், ‘எனக்கு ஸ்பெஷல் பிரசாதம்’ என்று பூரித்தார். கடல் கடந்து சென்றவருக்கு தீர்த்தப் பிரசாதம் வழங்கக் கூடாது என்ற சம்பிரதாயத்தையும் பெரியவர் மீறவில்லை. தன் பக்தரையும் ஏமாற்றவில்லை. தர்மத்தின் அவதாரம் மகா பெரியவர்’’.

ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு கார் ஓட்டிச் சென்றபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றிக் கேட்டோம்.. ‘‘ஜெயேந்திரருக்கு ஏழைகள், என்றால் மிகவும் பரிவு. எப்போதும் காரில் புடவை, வேட்டி, போர்வை, ஜமுக்காளம் ஆகியவை நிறைய இருக்கும். சாலையோரம் உள்ள சாதாரண மக்களைக் கண்டால் அவற்றை எடுத்துக் கொடுப்பார். குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டபோது, 5 லாரி நிறைய அரிசி, ஸ்டவ், மண்ணெண்ணை மற்றும் நிவாரணப் பொருட்களை எடுத்துக் கொண்டு ஜெயேந்திரருடன் குஜராத் சென்றது மறக்க முடியாத அனுபவம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஜெயேந்திரரே வழங்கினார். முக்தியடைவதற்கு முதல் நாள் காலை என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘தலை சுற்றுகிறது. பூஜையில் உட்காரக்கூட முடியவில்லை’ என்று தெரிவித்தார். நான் பதறிப் போனேன்.. மறுநாள்...’’ என்று வார்த்தையை முடிக்க முடியாமல் கலங்கிய மேத்தாவை உற்சாகப்படுத்தும் வகையில், ‘‘ஜெயேந்திரருக்கு நகைச்சுவை உணர்வு அதிகமாமே?’’ என்று கேட்டோம். மீண்டும் உற்சாகமாக பேசினார் மேத்தா..

‘‘ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுடன் கொடைக்கானல் சென்றிருந்தோம். ஆர்.ஆர்.ராஜூ என்பவரும் பெரியவரின் பக்தர்தான். அவர் கோல்ஃப் விளையாட்டைப் பற்றி ஜெயேந்திரரிடம் சொன்னார். கையில் பிடித்திருக்கும் ‘ஸ்டிக்’கால் சிறிய பந்தை அடித்து குழிக்குள் விழவைக்க வேண்டும் என்று விளக்கினார். இதை கவனித்த ஜெயேந்திரர் கோல்ஃப் விளையாடுவதற்கான சிறிய பந்தை எடுத்து குழிக்குள் போட்டுவிட்டு நிதானமாக.., ‘இதற்கு போய் இவ்வளவு கஷ்டப்படுவானேன்?’ என்று கேட்டு கலகலவென சிரித்தார்’’ என்று மலர்ந்த முகத்துடன் சொல்லி மகிழ்ச்சியான நினைவுகளில் மூழ்கினார் சந்திரசேகர மேத்தா!

Medical PG student dies by suicide

Medical PG student dies by suicide  26.07.2026 Hyderabad: A 29-year-old postgraduate medical student died after allegedly jumping from the t...