Wednesday, May 23, 2018

மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம்: துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி, நீதி விசாரணை நடத்த அரசு உத்தரவு



ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்ததால் தூத்துக்குடி நகரம் போர்க்களம் ஆனது. போலீஸ் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி ஆனார்கள். இதுபற்றி நீதி விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டு உள்ளது.

மே 23, 2018, 05:45 AM
தூத்துக்குடி,

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் தாமிர உருக் காலை கடந்த 1996-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.

இந்த ஆலையில் ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் பாஸ்பாரிக் அமிலம், கந்தக அமிலம் ஆகியவையும் தயாரிக்கப்படுகிறது. மேலும் கூடுதலாக 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யக்கூடிய அளவுக்கு இந்த ஆலையை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வந்தது.

இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் பொதுமக்கள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதனால் ஸ்டெர்லைட் ஆலையை மேலும் விரிவாக்கம் செய்வதை கைவிட்டு, நிரந்தரமாக மூடவேண்டும் என்று வலியுறுத்தி அந்த பகுதியில் உள்ள அ.குமரெட்டியபுரம் மக்கள் போராட்டத்தை தொடங்கினார்கள். இந்த போராட்டத்துக்கு மடத்தூர் உள்ளிட்ட 18 கிராம மக்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தடை விதித்தது. இதனால் கடந்த 1½ மாதங்களாக ஸ்டெர்லைட் ஆலை இயங்கவில்லை. இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் நேற்று 100-வது நாளாக நீடித்தது.

நூறாவது நாளையொட்டி, ‘ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு’ சார்பில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.

இந்த போராட்ட அறிவிப்பை தொடர்ந்து, தூத்துக்குடியில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் இன்று (புதன்கிழமை) காலை 8 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்துக்கு ஆதரவாக தூத்துக்குடியில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. பெரும்பாலான லாரிகள் ஓடவில்லை.

முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க வந்த கிராம மக்கள் மடத்தூரிலும், தூத்துக்குடி நகர்ப்புறம் மற்றும் திரேஸ்புரம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம் அருகேயும் நேற்று காலை 9 மணி அளவில் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டது. ஆலயம் அருகே திரண்ட போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

ஆனால், ஆங்காங்கே போலீசார் அவர்களை வழிமறித்தனர். இருந்தபோதும், போலீசார் வைத்து இருந்த தடுப்புகளை மீறி போராட்டக்காரர்கள் முன்னேறிச் சென்றனர். தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே அவர்கள் வந்தபோது, அந்த பகுதியில் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார் தலைமையில் போலீசார் இரும்பு தடுப்புகளை வைத்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி, 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டு இருப்பதால் கலைந்து செல்லும்படி எச்சரித்தனர்.

இதனால் ஆவேசம் அடைந்த போராட்டக்காரர் கள் இரும்பு தடுப்புகளை தள்ளிக்கொண்டு முன்னேறிச் செல்ல முயன்றனர். இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினார்கள். இதில் சிலர் காயம் அடைந்தனர். இதனால் கலவரம் வெடித்தது.

ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதால், போலீசார் அங்கிருந்து பின்வாங்கி ஓடினார்கள். தொடர்ந்து போலீசாரை ஓட, ஓட விரட்டி கல்வீசினார்கள். மேலும், அங்கு நின்ற போலீஸ் வாகனம் ஒன்றை கவிழ்த்து போட்டு கல்வீசி தாக்கினார்கள். இதில் போலீஸ் வாகனத்தின் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தன. பின்னர் இரும்பு தடுப்புகளை உடைத்து விட்டு கலெக்டர் அலுவலகம் நோக்கி முன்னேறிச் சென்றனர். இந்த கல்வீச்சு சம்பவத்தில் போலீசாரும், ஏராளமான பொதுமக்களும் காயம் அடைந்தனர்.

பேரணியாக வந்த போராட்டக்காரர்களை இந்திய உணவு கழக குடோன் அருகே போலீசார் மீண்டும் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து முன்னேற முயன்ற போராட்டக்காரர்களை நோக்கி, வஜ்ரா வாகனம் மூலம் 27 முறை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள்.

ஆனாலும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல் போலீசாரை நோக்கி கற்களை வீசியபடி முன்னேறியதால், போலீசார், வஜ்ரா வாகனத்துடன் அங்கிருந்து பின்வாங்கினார்கள்.

அதே நேரத்தில், மடத்தூரில் திரண்டு இருந்த மக்களும் அங்கிருந்து கலெக்டர் அலுவலகத்தை நோக்கி வந்தனர். அவர்களை கலெக்டர் அலுவலகம் முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தடுத்தனர்.

இருந்தாலும் ரெயில் தண்டவாளம் வழியாகவும், காட்டுப்பகுதி வழியாகவும் சாரை சாரையாக இந்திய உணவு கழக குடோன் பகுதியில் மக்கள் வந்து சேர்ந்தனர். இதனால் கூட்டம் அதிகமானதால் போலீசாரால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

பொதுமக்கள் கல்வீசி தாக்கியதால் போலீசார் பின்வாங்கி ஓடினார்கள். அப்போது சாலை ஒரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த போலீசாரின் இருசக்கர வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதனால் போராட்டம் பயங்கர கலவரமாக மாறியது. கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பாலத்தின் கீழ் நின்ற இருசக்கர வாகனங்களும் தீவைத்து எரிக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை கலெக்டர் அலுவலக வாசலில் நிறுத்தப்பட்டு இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தை கலைக்க போலீசார் மீண்டும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள்.

அப்போது சிதறி ஓடிய போராட்டக்காரர்களில் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்தில் புகுந்தனர். அந்த வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களை தீவைத்து எரித்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை கல்வீசி தாக்கி சூறையாடினார்கள். இதனால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைக்க முயன்றனர்.

ஆனால், போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதால், நிலைமை மிகவும் மோசம் அடைந்தது. இதைத்தொடர்ந்து கூட்டத்தை கலைப்பதற்காக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

துப்பாக்கி சூட்டை தொடர்ந்து, போராட்டக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினார்கள். அப்போது போராட்டக்காரர்கள் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது.

துப்பாக்கி சூட்டில், ரஞ்சித் குமார் என்பவர் குண்டு பாய்ந்து பலி ஆனார். மேலும் 15-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை போராட்டக்காரர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி ஒரு மாணவி உள்பட 8 பேர் உயிர் இழந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 9 ஆனது. பலியானவர்களின் பெயர் விவரம் வருமாறு.

1. ரஞ்சித்குமார் (வயது 22). தூத்துக்குடி.

2. கிளாஸ்டன் (40), தூத்துக்குடி லூர்தம்மாள்புரம்.

3. கந்தையா (55), சிலோன் காலனி.

4. தமிழரசன் (45), ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குச்சாலையைச் சேர்ந்தவர்.

5. சண்முகம் (25), தூத்துக்குடி மாசிலாமணிபுரம்.

6. எஸ்.எஸ்.எல்.சி. மாணவி வெனிஸ்டா (17), தூத்துக்குடி.

7. அந்தோணி செல்வராஜ் (35), தூத்துக்குடி.

8. மணிராஜ் (25), தூத்துக் குடி தாமோதர நகர்.

9. கார்த்திக் (20), தூத்துக் குடி

மேலும் இந்த சம்பவத்தில் 15 போலீசார் உள்பட 65-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். போராட்டக்காரர்கள் மதியம் 1 மணி அளவில் வீடு திரும்பிக்கொண்டு இருந்த போது, 3-வது மைல் பகுதியில் போலீசார் அவர்களை வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சிலர் காயம் அடைந்தனர்.

இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் நேற்று மாலை வடக்கு கடற்கரை ரோட்டில் உள்ள தனது வீட்டுக்கு காரில் சென்று கொண்டு இருந்த போது, திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த மக்கள் திடீரென்று அவரது காரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

கலைந்து செல்லுமாறு எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் தடியடி நடத்தினர். பதிலுக்கு பொதுமக்களும் போலீசாரை தாக்கினார்கள். நிலைமை மோசமானதால் போலீசார் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தி அவர்களை கலைத்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் திரேஸ்புரத்தைச் சேர்ந்த வினிதா (37) என்ற பெண் பலி ஆனார். இதனால் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.

தூத்துக்குடியில் நேற்று நடந்த கலவரத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த அரசு வாகனங்கள் மற்றும் ஊழியர்களின் இருசக்கர வாகனங்கள், போலீஸ் வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் என சுமார் 110-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் காரணமாக தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், நகர் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சம்பவம் பற்றி ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் மூலம் நீதி விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. மேலும் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிவித்து இருக்கிறது.
தலையங்கம்

நிம்மதியை கெடுக்கும் ‘நிபா’ வைரஸ்




தமிழ்நாட்டில் பலநேரங்களில் வெளிமாநிலங்களில் இருந்துதான் நோய்கள் வந்து பரவுவது உண்டு.

மே 23 2018, 03:00

தமிழ்நாட்டில் பலநேரங்களில் வெளிமாநிலங்களில் இருந்துதான் நோய்கள் வந்து பரவுவது உண்டு. தற்போது கேரளாவில் பரவும் மிகக்கொடிய நோயான ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் தமிழக மக்களின், குறிப்பாக கேரளா எல்லையோரம் உள்ள மக்களின் நிம்மதியை கெடுத்துக்கொண்டிருக்கிறது. சரியான சிகிச்சையே இல்லாத ‘நிபா’ வைரஸ், 1999–ம் ஆண்டு முதலில் மலேசியா நாட்டில் உள்ள ‘சுங்கை நிபா’ என்ற கிராமத்தில் கண்டறியப்பட்டது. அந்த காலக்கட்டங்களில் இந்த வைரஸ் பல உயிர்களை பறித்தது. அந்த ஊரில் தொடங்கிய வைரஸ் என்பதால் இதற்கு அந்த ஊரின் பெயரையே சூட்டும் வகையில் ‘நிபா’ வைரஸ் என்று பெயரிடப்பட்டது. பெரும்பாலும் பழந்தின்னி வவ்வால்கள் மூலமே இந்த நோய் பரவுகிறது. பழந்தின்னி வவ்வால்கள் ஏதாவது ஒரு பழத்தை சாப்பிட்டுவிட்டு அப்படியே விட்டுவிடும். இது அணில் கடித்த பழம் சுவையாக இருக்கும் என்று அதை சாப்பிட்டு ‘நிபா’ வைரசை வாங்கிக்கொள்கிறார்கள். இந்த வவ்வால்கள் சாப்பிட்டு கீழே விழும் பழங்களை சாப்பிடும் பன்றிகள் மூலமாகவும் மனிதர்களுக்கு இந்த நோய் பரவுகிறது. மனிதர்களில் ஒருவருக்கு பரவினால் இது ஒரு தொற்றுநோய் என்றவகையில் அடுத்தவர்களுக்கும் வேகமாக பரவிவிடுகிறது. இந்த நோயின் அறிகுறி தொடர்ச்சியாக 2 வாரகாலத்திற்கு காய்ச்சலும், தலைவலியும் இருக்கும். மிகச்சோர்வும், மனக்குழப்பமும் இருக்கும். இதற்கு இன்னும் தகுந்த சிகிச்சைகளை கண்டுபிடிக்காத நிலையில், பாதிக்கப்பட்ட அனைவரும் மரணத்தைத்தான் தழுவுகிறார்கள்.

கேரளாவில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த சங்கரோத் என்னும் கிராமத்தில் வசித்த மூசா என்பவரின் 2 மகன்களுக்குத்தான் முதலில் இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டது. மூசா வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் ஏராளமான வவ்வால்கள் இருந்தது தெரியவந்தது. இதில் பெரிய கொடுமை என்னவென்றால், ‘நிபா’ வைரஸ் நோயாளிகளுக்கு மிகவும் கடமை உணர்வோடு சிகிச்சை அளித்த பெரம்பரா தாலுகா மருத்துவமனை நர்சு லினி தன் 31–வது வயதில் இந்த நோய்க்கு பலியானதுதான். மேலும் 3 நர்சுகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு, இப்போது சிகிச்சைப்பெற்று வருகிறார்கள்.

பழங்களை சாப்பிடும்போது நன்றாக கழுவியோ, தோலை உரித்தோதான் சாப்பிடவேண்டும். கூடுமான வரையில் வவ்வால்கள், பன்றிகள் இருக்கும் இடங்களுக்கு அருகில் நிற்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் இந்த நோய் பரவாத வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு உறுதி செய்யவேண்டும். கேரளாவில் இருந்து வரும் ரெயில்கள், பஸ்கள், விமானங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பயணிகள் யாராவது வருகிறார்களா? என்பதை கவனமாக கண்காணிக்கவேண்டும். ஏற்கனவே சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் இதுகுறித்து, மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்து மருத்துவத்துறை துணை இயக்குனர்களுக்கும் அறிவுறுத்தி இருக்கிறார். பொதுமக்களுக்கும் இந்த நோய் குறித்து நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். நோய் வந்தவுடன் குணமாக்குவதைவிட, நோய் வராமலே தடுப்பது என்றவகையில் உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கவேண்டும். ஏனெனில், இந்த நோய்க்கு சிகிச்சையே இல்லை என்றவகையில், நோய் வந்தால் மரணம் நிச்சயம் என்பதால், நோய் வராமல் தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநில செய்திகள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட துளிகள்





தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பாலத்தின் கீழ் பகுதியில் இருந்த 2 மோட்டார் சைக்கிள்களை தீவைத்து எரித்தனர்.

மே 23, 2018, 05:30 AM
தூத்துக்குடியில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு போலீஸ் வாகனம் வந்தது. அந்த வாகனம் மீது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல்வீசி தாக்கினார்கள்.

மேலும் 3-வது மைல் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மற்றொரு போலீஸ் வாகனத்துக்கு தீவைக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் நின்ற அரசு ஜீப்கள் கவிழ்த்து போட்டு தீவைத்து கொளுத்தப்பட்டன.

தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களில் மொத்தம் 67 மோட்டார் சைக்கிள்கள், 42 கார்கள், ஒரு போலீஸ் வாகனம் தீவைத்து எரிக்கப்பட்டன. மேலும் 2 ஆம்புலன்ஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன.

துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போராட்டக்காரர்கள் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். அப்போது, ஆஸ்பத்திரி வளாகத்தில் 2 ஆம்புலன்சுகள் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தன. அந்த ஆம்புலன்சுகள் காயம் அடைந்தவர்களை மீட்க செல்லவில்லை என்று கூறி அவர்கள் ஆம்புலன்சுகளை கல்வீசி தாக்கினார்கள். மேலும் அங்கு நின்ற இரண்டு 108 ஆம்புலன்சுகளையும் ஒன்றன் பின் ஒன்றாக ஓட்டிச் சென்றனர். அப்போது, நெல்லை மாவட்டத்தில் இருந்து பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசார் அரசு ஆஸ்பத்திரியில் இருந்த போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர். இதில் சிலர் காயம் அடைந்தனர்.

போராட்டக்காரர்கள் நேற்று காலையில் தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் இருந்து பேரணியாக தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர். அவர்கள் 9 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்தே கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர். அவர்களுக்கு சாலையில் இருந்த பொதுமக்கள் தண்ணீர், பிஸ்கெட் உள்ளிட்டவற்றை இலவசமாக கொடுத்தனர்.

துப்பாக்கி சூட்டில் பலியான மாணவி குறித்து உறவினர்கள் உருக்கம்.
கலெக்டர் அலுவலகத்தில் நேற்று போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தூத்துக்குடியைச் சேர்ந்த வெனிஸ்டா (வயது 17) என்பவர் உயிரிழந்தார். இவர் தற்போது, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதி விட்டு முடிவுக்காக காத்து இருந்தார்.

மாணவி இறந்த தகவல் அறிந்ததும் அவரது பெற்றோர், உறவினர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர். அவர்கள் வெனிஸ்டா உடலை பார்த்து கதறி அழுதனர்.

மேலும் மாணவியின் உறவினர்கள் கூறுகையில், வெனிஸ்டா சிறுவயதில் இருந்தே நன்றாக படிப்பவர். தற்போது, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதி உள்ளார். தேர்வில் நல்ல மதிப்பெண் எடுப்பேன் என்று வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்து வந்தார். நாளை (அதாவது இன்று) தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டபோது துரதிர்ஷ்டவசமாக அவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியாகிவிட்டார் என்று உருக்கமாக தெரிவித்தனர்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் 4 பேர் மீது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.

அவர்களின் கேமராவையும் பறித்து சேதப்படுத்தினார்கள். அவர்களின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஒரு பத்திரிகையாளரின் வாகனம் தீவைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

போராட்ட துளிகள்

* ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், முள்ளக்காடு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 18 ஆயிரம் கடைகள் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன.

* தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு பஸ்கள் எதுவும் இயக்கப்படாததால் தூத்துக்குடி பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டன.

* தூத்துக்குடியில் அனைத்து தியேட்டர்களிலும் நேற்று காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

* போராட்டத்தில் ஏராளமான பெண்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர். சில இளைஞர்கள் தங்களது செல்போனில் ‘செல்பி’ எடுத்துக்கொண்டனர்.

* மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு நேற்று மதியம் முதல் பஸ்கள் இயக்கப்படவில்லை. ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி வழியாக திருச்செந்தூர், கன்னியாகுமரிக்கு செல்லும் பஸ்கள் எப்போதும்வென்றானில் இருந்து பசுவந்தனை, கடம்பூர், கயத்தாறு, நெல்லை வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன.

* தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் நாட்டுப்படகுகள் கடற்கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

* ஐ.ஜி.க்கள் சண்முகராஜேசுவரன், ரதராஜ் ஆகியோர் மாலையில் தூத்துக்குடிக்கு வந்தனர். மேலும் ஏராளமான வெளிமாவட்ட போலீசார் தூத்துக்குடியில் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் சந்தேகத்துக்கு இடமான நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

* நேற்று காலை 9 மணி அளவில் தொடங்கிய போராட்டம் மாலை 4 மணி அளவில் முடிவடைந்தது.

Tuesday, May 22, 2018

WhatsApp-ல் Delete செய்த படங்கள் & வீடியோவை திரும்ப பெறுவது எப்படி?


இந்தியாவில் பல மில்லியன் மக்கள் வாட்ஸ் அப் செயலியை அதிகம் உபயோகம் செய்கின்றனர், குறிப்பாக குறுந்தகவல் முதல் தொழில் சம்மந்தப்பட்ட அனைத்து பயன்பாட்டிற்கும் இந்த செயலி அதிகளவு பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்த வாட்ஸ்அப் செயலி. மேலும் வாட்ஸ்அப் புதிய அப்டேட்டின் மூலம் நீக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும்புகைப்படங்களை மிக எளிமையாக திரும்ப பெறலாம் என வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயன்பாடு பல்வேறு மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.பொதுவாக வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும்,பெறப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பயனர்கள் நீக்கிவிட்டால் அதனை மீண்டும் பெறுவது என்பது இயலாத காரியம், ஆனால் தற்சமயம் கொண்டுவந்துள்ள புதிய அப்டேட் மூலம் மிக எளிமையா போட்டோ மற்றும் வீடியோக்களை திரும்பபெற முடியும். இப்போது வாட்ஸ்ஆப் செயலியில் ரீடவுன்லோடு(WhatsApp) எனும் புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது, இதன்மூலம் அனுப்பப்பட்ட புகைபடங்கள், வீடியோக்களை எளிமையாக திரும்ப பெற முடியும்.

இந்த வசதி தொழில் செய்யும் பல்வேறு மக்களுக்கு உதவியாய் இருக்கும் என வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில்தகவல் தெரிவிக்க்ப்பட்டுள்ளது. பொதுவாக வாட்ஸ்அப் செயலியில் பகிரப்படும் மீடியா தகவல்கள் 30 நாட்களுக்கு வாட்ஸ்அப் ஆன்லைன் நினைவகத்தில் சேமித்து வைக்கப்படும்.

எனினும் இந்த தகவல்களை பயனர்கள் தங்கள் போனில் இருந்து நீக்கிவிட்டால் மீண்டும் திரும்பப் பெற இயலாது. ஆனால் தற்போது வந்துள்ள ரீடவுன்லோடு எனும் வசதியின் மூலம் 30 நாட்களுக்குள்ளாக இந்த தகவல்கள் திரும்பப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.வாட்ஸ்அப் செயலியின் புதிய ரீடவுன்லோடு அம்சம் பொறுத்தவரை 2.18.142 பதிப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக பயனர்கள் இன்னும் அப்டேட் செய்யவில்லை என்றால் கூகுள் பிளே ஸ்டோரில் எளிமையா அப்டேட் செய்யமுடியும்.

இந்த ரீடவுன்லோடு அப்டேட் பொறுத்தவரை வாட்ஸ்அப் பயன்படுத்தும் அனைவருக்கும் உதவியாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,விரைவில் வாட்அப் செயலியில் புதிய அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
`அந்த விமானத்தின் இயந்திரக் கோளாறு நீடித்திருந்தால்…!" - ராஜீவ் நினைவு தினப் பகிர்வு!

ஜெ.பஷீர் அஹமது

vikatan 21.05.2018

ராஜீவ் காந்தி என்ற ஆளுமையின் மரணம் இந்திய வரலாற்றில் ஒரு கரைபடிந்த அத்தியாயம். 1984-1989 காலகட்டத்தில் அவர் இந்திய பிரதமராக பதவியில் இருந்து செயல்பட்ட விதம் இளையதலைமுறையின் ஒரு பிரிவினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது.




வி.பி.சிங் ஆட்சி கவிழ்ந்து சந்திரசேகர் பொறுப்பேற்று 117 நாள்களில் அந்த ஆட்சியும் கவிழ்ந்ததோடு நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் வந்தது. நாடு தழுவிய அளவில் பயணம் செய்து பரப்புரை செய்த ராஜீவ் காந்தி 1991, மே 21 அன்று ஆந்திர மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அன்று மாலை 6.30 மணிக்குத் தனிவிமானம் மூலம் தமிழகத்துக்கு வந்து பரப்புரை செய்யவிருப்பதாக இருந்தது நிகழ்ச்சி நிரல். அவர் புறப்பட தயாராக இருந்தார். அந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் மறுநாள் பயணம் செய்யலாம் என நிகழ்ச்சியை மாற்றி அமைத்து விருந்தினர் மாளிகைக்குத் திரும்பிச் சென்றார்.

ஆனால், சற்று நேரத்திலேயே `இயந்திரக் கோளாறு சரியாகிவிட்டது சென்னைக்குப் புறப்படலாம்' என அவருக்கு அழைப்பு வந்தது. மீண்டும் விமான நிலையத்துக்குத் திரும்பினார் ராஜீவ். ஆந்திராவிலிருந்து சென்னை வந்த அவர் இரவு 10 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் சென்றடைந்தார். உற்சாக வரவேற்பு. அந்த வரவேற்புக்கு மத்தியில் கையில் சந்தன மாலையுடன் நின்றுகொண்டிருந்தார் ஓர் இளம்பெண். ராஜீவ் காந்தி கழுத்தில் அந்த மாலையை அணிவித்த நொடிப்பொழுதில் மனித வெடிகுண்டாக இயங்கினார் அந்தப் பெண். ராஜீவ் உடல் சிதறியது.

நேரு குடும்பத்தின் ஓர் ஆளுமைமிக்க தலைவரின் அத்தியாயம் அங்கேயே முடிந்தது. அவரோடு காவல்துறை அதிகாரிகள், உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்தனர். அவரது மரணம் ஏற்படுத்திய அனுதாப அலை நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தது. பி.வி.நரசிம்மராவ் பிரதமரானார். நாடாளுமன்றத் தேர்தலோடு நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அந்த அனுதாபம் தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு மகத்தான வெற்றியைத் தேடிதந்தது. முதல் முறையாக ஜெயலலிதா முதல்வரானார். தி.மு.க படுதோல்வி அடைந்தது.



ராஜீவ் காந்தி மறைந்தாலும் அவருடைய மரணத்தில் ஏற்படுத்தப்பட்ட சர்ச்சை முடிவுக்கு வரவில்லை. `ராஜீவ் கொலை வழக்கில் மூளையாகச் செயல்பட்டார்' எனக் கருதப்பட்ட சிவராசன் உள்ளிட்டோர் தலைமறைவாக இருந்தனர். தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியது காவல்துறை. தமிழகம் முழுவதும் சல்லடையாக அலசப்பட்டது. இறுதியாக சிவராசன் மற்றும் அவருடன் இருந்தவர்கள் பதுங்கியிருந்த இடம் தெரியவந்தது. போலீஸ் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு சிவராசன் பதுங்கியிருந்த இடம் சுற்றிவளைக்கப்பட்டது. அவர்களை கைது செய்யும் நேரத்தில் சிலர் தற்கொலை செய்து கொண்டனர்.

இப்படி தற்கொலை செய்துகொண்டவர்கள் 12 பேர் தவிற, கைது செய்யப்பட்டவர்களில் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் இன்னமும் சிறைச்சாலையில் உள்ளனர். அவர்கள் விடுதலைக்கான சட்டப்போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இத்தனை வருடங்களுக்குப்பிறகு பேரறிவாளன் பரோலில் வெளிவந்து மீண்டும் சிறை திரும்பினார். மற்றவர்கள் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கின்றனர்.



ராஜீவ் காந்தியின் மரணம் தமிழகத்திற்கு தீராத களங்கத்தை ஏற்படுத்தியது என்றாலும், அந்த மரணம் ஏன் ஏற்பட்டது? என்ற வினாவுக்கு முடிவில்லாத விளக்கங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
HC permits cultural events in temples with conditions 

Staff Reporter 

 
Madurai, May 22, 2018 00:00 IST


The Madurai Bench of the Madras High Court, hearing a number of petitions seeking permission to conduct cultural programmes, including aadal paadal , in temple festivals, granted permission with conditions.

Justice M.S. Ramesh observed that permission for cultural programmes in temples could be granted, but they should be regulated by the police in order to avoid law and order situation or misuse of permission by resorting to vulgarity or obscenity. The court said that the events could be held between 6 p.m. and 11 p.m. and imposed the following conditions:

There should be no obscene or vulgar act or dialogues during the performance by any of the participants. No songs with double entendre shall be played out, so as to not spoil the minds of students and youth. No song or dance which shows affiliation to any religious or political party, community or caste shall be played. No flex board in support of any political party shall be erected and there shall be no discrimination made on the grounds of caste.

The court directed the police to take appropriate action if there was any violation of the conditions. The functions could be stopped if they went beyond the permissible time.
85-year-old man made to wait till 9 p.m. at Collectorate 

Staff Reporter 

 
Coimbatore, May 22, 2018 00:00 IST 


Bojarajan (85), who had come to the Collectorate to submit petition for Old Age Pension (OAP) during the grievance day redress meeting on Monday, was made to wait till 9 p.m.

The officials in charge at the section had refused to accept the petition and directed him to wait.

Based on their direction, he waited till 9 p.m. but there was no response from the authorities concerned.

On noticing his plight, a few scribes brought him food and had informed his family members, who rushed to the Collectorate and picked up him up late at night.

PCI announces special provisions for B.Pharm students admitted up to AY 2025-26

PCI announces special provisions for B.Pharm students admitted up to AY 2025-26 Gireesh Babu, New Delhi Saturday, July 25, 2026, 08:00 Hrs ...