Thursday, May 24, 2018

முதுநிலை மருத்துவம்; முதல்கட்ட கவுன்சிலிங் இன்று நிறைவு

Added : மே 24, 2018 05:01





சென்னை : முதுநிலை மருத்துவ படிப்புக்கான முதல்கட்ட கவுன்சிலிங் இன்று(மே 24) நிறைவடைகிறது.

அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, முதுநிலை மருத்துவப் படிப்பில், 981 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார் மருத்துவமனையில் நடக்கிறது. இதை, தமிழக மருத்துவ கல்வி இயக்கம் நடத்துகிறது. இந்நிலையில் முதல்கட்ட கவுன்சிலிங் இன்றுடன் நிறைவடைகிறது. மே 25ல் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சிலிங் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை முதலிடம்; கோட்டை விட்டது விருதுநகர்


Added : மே 24, 2018 04:35

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், பத்தாம் வகுப்பு தேர்வில் முதன்முறையாக மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.சிவகங்கை கல்வி மாவட்டத்தில் 127 பள்ளிகளைச் சேர்ந்த 3,926 மாணவர்கள், 4,165 மாணவிகள் என, 8,091 பேர் தேர்வு எழுதினர். இதில் 3,844 மாணவர்கள், 4,137 மாணவிகள் என, 7,981 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 97.91 சதவீதம், மாணவிகள் 99.33 சதவீதம், மொத்தம் 98.64 சதவீதம் தேர்ச்சி. தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் 148 பள்ளிகளைச் சேர்ந்த 5,469 மாணவர்கள், 5,277 மாணவிகள் என, 10,746 பேர் தேர்வு எழுதினர். இதில் 5,338 மாணவர்கள், 5,236 மாணவிகள் என, 10,574 பேர் தேர்ச்சி பெற்றனர்.மாணவர்கள் 97.60 சதவீதம், மாணவிகள் 99.22 சதவீதம், மொத்தம் 98.40 சதவீதம் தேர்ச்சி. சிவகங்கை வருவாய் மாவட்ட அளவில் 275 பள்ளிகளைச் சேர்ந்த 9,395 மாணவர்கள், 9,442 மாணவிகள் என, 18,837 பேர் தேர்வு எழுதினர். இதில் 9,182 மாணவர்கள், 9,373 மாணவிகள் என, 18,555 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 97.73 சதவீதம், மாணவிகள் 99.27 சதவீதம், மொத்தம் 98.50 சதவீதம் தேர்ச்சி.சிவகங்கை மாவட்டம் சென்ற ஆண்டு 97.02 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 8 வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு 1.48 சதவீதம் அதிகரித்து முதலிடத்திற்கு முன்னேறியது.முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி கூறியதாவது:

 முதன்முறையாக சிவகங்கை மாவட்டம் முதலிடத்தை பிடித்தது பெருமை அளிக்கிறது. இது தலைமைஆசிரியர், ஆசிரியர்களின் பணி மீதான அக்கறையை காட்டுகிறது. அவர்களது முயற்சியை பாராட்டுகிறேன். இந்த வெற்றியை தொடர்ந்து தக்க வைக்க வேண்டும். இனி தரமான கல்வியோடு, வேலைவாய்ப்புக்கும், வாழ்க்கை கல்விக்கும் முக்கியத்துவம் தரப்படும், என்றார்.3ம் இடத்தில் விருதுநகர் விருதுநகர் மாவட்டம் பல ஆண்டுகளாக மாநில முதலிடத்தை பெற்றது. இச்சாதனை பிளஸ் 2 தேர்ச்சியிலும் தொடர்கிறது. ஆனால் இந்த ஆண்டு முதலிடம் கோட்டைவிட்ட விருதுநகர், 98.26 சதவீதத்துடன் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

முதன்மை கல்வி அதிகாரி சுவாமிநாதன் கூறுகையில், ''குறைந்த வித்தியாசத்தில் முதல் இரண்டு இடங்களை பிடிக்க முடியாமல் போனது. ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் தேர்ச்சி குறைந்ததே காரணம். வரும் ஆண்டில் இது சீர் செய்யப்பட்டு, மீண்டும் முதலிடம் நோக்கி நகர்வோம்,'' என்றார்.

சுற்றுலா தல பட்டியல்: தாஜ்மஹால் சாதனை

Added : மே 24, 2018 04:24

மும்பை: உலகளவில். சுற்றுலா பயணியரை கவர்ந்த தலங்கள் பட்டியலில், தாஜ் மஹால், ஆறாம் இடத்தை பிடித்துள்ளது. சர்வதேச அளவில், சுற்றுலா பயணியரை கவரக்கூடிய இடங்கள் பற்றி, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 68 நாடுகளில் உள்ள முக்கியமான, 759 இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன இதில், முதல் இடத்தை, கம்போடியா நாட்டில் உள்ள அங்கோர் வாட் கோவில் பிடித்து உள்ளது. இரண்டாவது இடத்தை, ஸ்பெயினில் உள்ள, பிளாசா டி எஸ்பனாவும், மூன்றாவது இடத்தை, ஐக்கிய அரபு எமிரேட்சின், அபுதாபியில் உள்ள, ஷேக் சையத் மசூதியும் பிடித்துள்ளன.இந்தப் பட்டியலில், ஆறாவது இடத்தை, உ.பி., மாநிலம், ஆக்ராவில் உள்ள தாஜ் மஹால் பிடித்துள்ளது.ஆசிய அளவில், இரண்டாவது இடத்தை தாஜ் மஹாலும், ஒன்பதாவது இடத்தை, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் கோட்டையும், ௧௦வது இடத்தை, பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் உள்ள, பொற்கோவிலும் பிடித்துள்ளன.

'நிபா' வைரஸ்: கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு செல்ல வேண்டாம்

Added : மே 24, 2018 06:38



திருவனந்தபுரம்: கேரளாவில், 'நிபா' வைரஸ் பாதிப்பு இருப்பதால், நான்கு மாவட்டங்களுக்கு செல்வதை, தற்காலிகமாக தவிர்க்கும்படி, கேரள சுகாதார துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவில் நிபா வைரஸ் தாக்கி, கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த, 10 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், கர்நாடக மாநிலம் மங்களூரில் இருவருக்கும், கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், நிபா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. மூவரின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவர்கள், தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, பிறபகுதிகளைச் சேர்ந்தோர், கேரளாவின் கோழிக்கோடு, மலப்புரம், கோட்டயம் மற்றும் கேரளா அருகே உள்ள, கர்நாடகாவின் மங்களூரு ஆகிய மாவட்டங்களுக்கு செல்வதை, தற்காலிகமாக தவிர்க்கும்படி, கேரள சுகாதார துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நிபா வைரஸ், வீட்டு விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி வருகிறது. குறிப்பாக, பழந்தின்னி வவ்வால்களிடம் இருந்து, இந்த வைரஸ் கிருமி பரவுவதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.

Advertisement
லஞ்ச வேளாண் அதிகாரி சிறையில் அடைப்பு : விடிய, விடிய விசாரணை; ஆவணங்கள் சிக்கின

Added : மே 24, 2018 04:09

கோவை: கோவையில், லஞ்சம் வாங்கி சிக்கிய வேளாண் இணை இயக்குனர் மற்றும் உதவியாளர் வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய, விடிய சோதனை நடத்தி, ரொக்கம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றினர்.கோவை, புலியகுளத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார், 45. இவருக்கு, சூலுார் பகுதியில், 10 ஏக்கர்விவசாய நிலம் உள்ளது. இதை குடியிருப்பு நிலமாக மாற்றி, ரியல் எஸ்டேட் தொழில் செய்ய திட்டமிட்டார்.இதற்காக, தடாகம் ரோட்டில் உள்ள வேளாண் இணை இயக்குனர் சுகுமார், 57, என்பவரை அணுகி, விவசாய நிலத்தை குடியிருப்பு நிலமாக மாற்ற, 'பயனற்ற நிலம்' என தடையில்லா சான்று வழங்க கோரினார்.அதற்கு, நான்கு லட்சம் ரூபாய் லஞ்சமாக சுகுமார் கேட்டுள்ளார். 'அவ்வளவு தர முடியாது' என, அசோக்குமார் தெரிவித்தார்.இதன்பின், இணை இயக்குனர் மற்றும் அவரது உதவியாளர் முருகன், 37, ஆகியோர் பேரம் பேசினர். இறுதியில், 1.50 லட்சம் ரூபாய், இணை இயக்குனருக்கும், 10 ஆயிரம் ரூபாய், உதவியாளருக்கும் கொடுப்பதாக, அசோக்குமார் தெரிவித்தார்.பின், கோவை லஞ்ச ஒழிப்பு, டி.எஸ்.பி., ராஜேஷிடம், அசோக்குமார் புகார் அளித்தார். போலீசார் அளித்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு அசோக்குமார், இணை இயக்குனர் அலுவலகம் சென்றார்.லஞ்ச பணத்தை, இணை இயக்குனர் வாங்கியதும், மறைந்திருந்த போலீசார், அவரையும், உதவியாளரையும் பிடித்தனர்.பின், அலுவலக வளாகத்தில் உள்ள சுகுமாரின் வீட்டிலும், பொள்ளாச்சியில் உள்ள முருகனின் வீட்டிலும், போலீசார் நேற்று, அதிகாலை வரை விடிய, விடிய சோதனை நடத்தினர்.இதில், சுகுமார் வீட்டில் இருந்து, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், பல்வேறு ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.நேற்று காலை, இருவரையும் கைது செய்த போலீசார், கோவை லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில்அடைத்தனர்.
திண்டிவனத்திலும் சோதனைஇணை இயக்குனர் சுகுமாரின் சொந்த ஊர், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம். கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் அளித்த தகவலின்படி, திண்டிவனத்தில் உள்ள சுகுமாரின் வீட்டிலும், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

அங்கு கைப்பற்றப்பட்ட ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்த போலீசார், கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அனுப்பியுள்ளனர். சுகுமார், ஆறு மாதங்களாக கோவையில் பணியாற்றி வருகிறார். உதவியாளர் முருகன், ஓராண்டாக பணியாற்றி வருகிறார்.
சென்ட்ரல், டி.எம்.எஸ்.,சுக்கு மெட்ரோ நாளை முதல் சேவை துவக்கம்

Added : மே 24, 2018 00:27

சென்னை: நேரு பூங்கா - சென்ட்ரல், சின்னமலை - தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., இடையே, நாளை மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்கப்படுகிறது.சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில், ஷெனாய் நகர் - நேரு பூங்கா இரண்டாவது பாதை, நேரு பூங்கா - சென்ட்ரல் இடையே, இருவழிப்பாதை, சின்னமலை - தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., இடையே, இருவழிப்பாதை பணிகள் முடிந்துள்ளது. இதையடுத்து, ரயில்வே பாதுகாப்பு கமிஷனர், பயணியர் ரயில் இயக்கலாம் என, நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தார்.நேரு பூங்கா - சென்ட்ரல், சின்னமலை - தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., இடையே, நாளை மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்கப்படுகிறது.எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில், நாளை பிற்பகல், 12:30 மணிக்கு நடக்கிறது. முதல்வர் பழனிசாமி, ரயில் போக்குவரத்தை துவங்கி வைக்கிறார். மத்திய வீட்டு வசதித் துறை அமைச்சர், மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர், அதிகாரிகள் விழாவில் பங்கேற்கின்றனர்.

இப்பாதைகள் திறக்கப்படுவதால், விமான நிலையத்தில் இருந்து, கோயம்பேடு, நேரு பூங்கா வழியாக சென்ட்ரல் வரையும், கிண்டி, சின்னமலை வழியாக தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., வரையும், மெட்ரோ ரயிலில் பயணம் செய்யலாம்.
மொபைல் போன் எண் பெறுதல்: பொறியாளர்களுக்கு எச்சரிக்கை

Added : மே 24, 2018 00:22

மின் நுகர்வோரிடம் இருந்து, மொபைல் போன் எண்கள் வாங்கும் பணியை துரிதப்படுத்துமாறு, பிரிவு அலுவலக பொறியாளர்களை, மின் வாரியம் எச்சரித்துள்ளது.மின் கட்டணம் எவ்வளவு, செலுத்த வேண்டிய கடைசி தேதி என்ன, மின் தடை தேதி ஆகிய விபரங்களை, மின் நுகர்வோரின், மொபைல் போன் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., வாயிலாக, மின் வாரியம் தெரிவிக்கிறது.மின் கட்டணம் செலுத்த தகுதி உடைய, 2.50 கோடி பேரில், ஒரு கோடி பேர், மொபைல் எண்களை, பிரிவு அலுவலகங்களில் வழங்கவில்லை.இதுகுறித்து, நமது நாளிதழிலும், சமீபத்தில், விரிவாக செய்தி வெளியானது. இதையடுத்து, மொபைல் எண் தராதவர்களில், அவற்றை வாங்கும் பணியை, மின் வாரியம் துரிதப்படுத்தி உள்ளது.இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:தற்போது, 3,000 பிரிவு அலுவலகங்கள் உள்ளன. ஒவ்வொரு அலுவலகத்திலும், சராசரியாக, 2,000க்கும் மேற்பட்ட நுகர்வோர், மொபைல் போன் எண்களை தராமல் உள்ளனர்.இதனால் அவர்கள், மின் வாரியத்தின், எம்.எம்.எஸ்., சேவையை பெற முடியவில்லை.மொபைல் எண் தராதவர்களிடம், அதை வாங்கி, அந்த விபரத்தை, இம்மாத இறுதிக்குள் தெரிவிக்கும்படி, பிரிவு அலுவலக பொறியாளர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இந்த பணியில், அலட்சியம் காட்டுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Medical PG student dies by suicide

Medical PG student dies by suicide  26.07.2026 Hyderabad: A 29-year-old postgraduate medical student died after allegedly jumping from the t...