Thursday, May 24, 2018


'நிபா' வைரஸ்: கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு செல்ல வேண்டாம்

Added : மே 24, 2018 06:38



திருவனந்தபுரம்: கேரளாவில், 'நிபா' வைரஸ் பாதிப்பு இருப்பதால், நான்கு மாவட்டங்களுக்கு செல்வதை, தற்காலிகமாக தவிர்க்கும்படி, கேரள சுகாதார துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவில் நிபா வைரஸ் தாக்கி, கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த, 10 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், கர்நாடக மாநிலம் மங்களூரில் இருவருக்கும், கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், நிபா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. மூவரின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவர்கள், தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, பிறபகுதிகளைச் சேர்ந்தோர், கேரளாவின் கோழிக்கோடு, மலப்புரம், கோட்டயம் மற்றும் கேரளா அருகே உள்ள, கர்நாடகாவின் மங்களூரு ஆகிய மாவட்டங்களுக்கு செல்வதை, தற்காலிகமாக தவிர்க்கும்படி, கேரள சுகாதார துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நிபா வைரஸ், வீட்டு விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி வருகிறது. குறிப்பாக, பழந்தின்னி வவ்வால்களிடம் இருந்து, இந்த வைரஸ் கிருமி பரவுவதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.

Advertisement

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...