Friday, May 25, 2018

Man, 27, tries to suck venom out of friend’s leg after snakebite, faints

TIMES NEWS NETWORK

Chennai: 25.05.2018


A youth filming a venomous snake near Mannivakkam on Wednesday night was bitten on a toe by the reptile. However, his friend acted quickly sucking out the venom helping the youth but putting himself in danger.

The police said Boominathan, 20, of Mannivakkam and his friend Sadhiq, 27, from the same locality usually went to Mannivakkam lake for a chat after dinner. Boominathan is a butcher in the locality, while Sadhiq is employed at a private firm.

Around 9pm on Wednesday, they found a snake near their usual spot. As there was no proper illumination, Boominathan switched on the torch on his mobile phone and decided to film the snake’s movement. According to the police, he kept following the snake which was trying to move away from them.

Eventually the reptile bit Boominathan’s toe before slithering away. Hearing his friend cry out in pain, Sadhiq rushed to his side. He first made a tourniquet using a piece of cloth and tied it just above the bite marks on the leg. He then proceeded to suck the venom out.

Soon after spitting the venom out, Sadhiq swooned. Boominathan, who had recovered a bit by then, cried out for help and a few other men who were seated nearby rushed to their aid. Both were immediately taken to Rajiv Gandhi Government General Hospital. They were given treatment and are said to be out of danger. They are yet to be discharged.

Sadhiq told the police that he decided to suck the venom out based on what he had seen in movies. The Peerkankaranai police have registered a case and are investigating.


Woman dies of snakebite, another critical

Chennai: A 61-year-old woman died on Wednesday after a poisonous snake bit her at her house in Menambedu village near Avadi. Another woman who was also bitten by a snake is battling for life at West Tambaram. The police said the deceased Radha was cleaning the house when she felt a sting on her leg. Only after seeing a snake slither away did she know that she was bitten by a reptile. She began to froth in the mouth. Neighbours rushed to her rescue and also informed her son Murugan, 37, who was living a few houses away. The police suspect the snake had slithered in from the bushes surrounding her house. “Her son took her to Thiruvallur government hospital where she was declared brought dead,” an officer said. In another incident, Rajeshwari, 39, was out on a walk when she accidentally stepped on a snake. She felt the reptile bite her on her leg. Passersby took her to the hospital where doctors said she was in a critical condition. TNN
ராணுவ வீரர்கள் போல் குறிபார்த்து சுட்ட கமாண்டோ வீரர்கள்; துப்பாக்கிச் சூட்டில் விதிகள் மீறப்பட்டதா?-ஓர் அலசல்

Published : 23 May 2018 13:28 IST


மு.அப்துல் முத்தலீஃப்



குறிவைத்து சுடும் கமாண்டோ வீரர்கள், உயிரிழந்தோர்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டில் விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

துப்பாக்கிச் சூடு என்றால் விதிகளைப் பின்பற்றி என்னென்ன செய்திருக்க வேண்டும், என்ன வகையான துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட வேண்டும்?

ஒரு கலவரம் திடீரென உருவாவதில்லை. பல நாட்கள் அதன் கொதிநிலை அதிகரித்து ஏதோ ஒரு சின்ன சம்பவத்தில் அது கலவரமாக வெடிக்கும். இந்தக் கொதிநிலையை போலீஸின் உளவுத்துறை தொடர்ந்து கண்காணிக்கும், அரசுக்கு அறிக்கையாக அனுப்பும். அரசு எந்திரம் தேவையான நடவடிக்கை எடுக்கும்.

பல போராட்டங்கள் திறமையான காவல் அதிகாரிகளால் தந்திரமாகக் கையாளப்பட்டு அமைதியாக நடந்த வரலாறு உண்டு. நடைமுறை அறிவுகூட இல்லாமல் சிறிய போராட்டத்தையும் பெரும் கலவரமாக மாற்றி உயிரிழப்பு, சொத்து சேதம் ஏற்படக் காரணமாக அமைந்த சந்தர்ப்பமும் அமைந்தது உண்டு.

அப்படிப்பட்ட நிகழ்வுதான் நேற்றைய தூத்துக்குடி சம்பவம். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு என்பது ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தையே முடக்குவது ஆகும். அதனால்தான் அப்படிப்பட்ட துப்பாக்கிச் சூட்டை இறுதிக்கட்டமாக அதுவும் குறிப்பிட்ட விதிகளின் கீழ்தான் பின்பற்றவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யாரோ சில அதிகாரிகள் ஆத்திரத்தில் அப்போதுள்ள உணர்வுகளை வைத்து எடுப்பதல்ல துப்பாக்கிச் சூடு என்பது. அது அரசின் கொள்கை முடிவு என்று கூட சொல்லலாம். அதனால் தான் காவல் அதிகாரிகள் முடிவெடுக்காமல் ( சென்னை போன்ற இடங்கள் தவிர) ஆட்சியர்கள் முடிவெடுக்கிறார்கள்.

அப்படிப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நேற்று உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை பத்தை தாண்டியுள்ளது. 7க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆனால் இது போராட்டக்காரர்களின் ஆவேசத்தைக் கட்டுப்படுத்தி அமைதி ஏற்படுத்த நடந்தது என்று டிஜிபி சார்பில் சொல்லப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட விதத்தைப் பார்க்கும்போது விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டதாக அனைவரும் கூறுகின்றனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த விதத்தைப் பார்க்கும் போது கமாண்டோ வீரர்கள், செல்ஃப் லோடிங் ரைபிள் எனப்படும் வகையான துப்பாக்கியை உபயோகப்படுத்தியுள்ளது இது முதல் முறை ஆகும். மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தும்போது சில விதிமுறைகள் உள்ளன. அவை கடைபிடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

போலீஸ் வேன் மீது ஏறிய கமாண்டோ படை வீரர்கள் பொதுமக்களை ராணுவ வீரர்கள் போல் குறிவைத்துச் சுடுவது இதுவரை இல்லாத ஒன்று என போலீஸ் அதிகாரிகளே ஒப்புக்கொள்கிறார்கள்.



பாய்ண்ட் 303 வகை துப்பாக்கியை உபயோகப்படுத்துவதுதான் வாடிக்கை. அந்தத் துப்பாக்கியில் ஒரு முறைதான் சுட முடியும். அடுத்து புல்லட் ஆபரேட் செய்து பிறகு சுட வேண்டும். அந்தத் துப்பாக்கியில் அதிகபட்சம் 6 குண்டுகள் நிரப்ப முடியும். அதை ஒவ்வொரு முறையும் லோடு செய்ய வேண்டும்.

ஆனால், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் செல்ப் லோடட் ரைபிள் என அழைக்கப்படும் எஸ்.எல்.ஆர் வகை துப்பாக்கியை உபயோகப்படுத்தியுள்ளனர். இதன் கொள்ளளவு 32 புல்லட்டுகள். ட்ரிக்கரை அழுத்திப் பிடித்தால் அடுத்தடுத்து குண்டுகள் சீறிப்பாயும். தனித்தனியாக லோடு செய்ய வேண்டியது இல்லை. இவைகளை தீவிரவாதிகள், பெரும் கொள்ளை சம்பவங்களில், ராணுவத்தில் பயன்படுத்துவார்கள்.

ஆனால் வேன் மீது ஏறி நின்று கைதேர்ந்த கமாண்டோ படை வீரர்கள் பலநூறு மீட்டர் சீறிப்பாயும் எஸ்.எல்.ஆர் வகை துப்பாக்கிகளைப் பயன்படுத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முறையாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தகவல் இல்லை.

துப்பாக்கிச் சூட்டில் விதிகள் மீறப்பட்டதா என்பது குறித்து காவல் கண்காணிப்பாளர்(ஓய்வு) கருணாநிதியிடம் 'தி இந்து' தமிழ் இணையதளம் சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது:

நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? விதிகள் மீறப்பட்டதாக பரவலாக சொல்லப்படுகிறதே?

விதிமீறல் என்பது விசாரணையில் தான் தெரியவரும். துப்பாக்கிச் சூட்டுக்கு சில விதிமுறைகள் உண்டு. கூட்டம் அதிகமாக அத்துமீறும் போது அவர்களுக்கு ஓப்பன் மைக்கில் எச்சரிக்கை விடுவார்கள். என்ன செய்யப் போகிறோம் என்று அறிவுறுத்துவார்கள். கண்ணீர் புகை குண்டை வீசுவோம் என்று கூறி வீசுவார்கள்.

அடுத்தும் வன்முறை அதிகமாகி, கூட்டம் கலையவில்லை என்றால் அடுத்து எச்சரிக்கை விடுத்து லத்தி சார்ஜ் என்று எச்சரித்து லத்திசார்ஜ் நடத்தப்படும். அப்போதும் கூட்டம் கலையவில்லை என்றால் மீண்டும் மைக்கில் எச்சரித்து துப்பாக்கிச் சூடு நடத்துவோம் என்று எச்சரிக்க வேண்டும். அதன் பின்னும் கூட்டம் கலையவில்லை என்றால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்று எச்சரிப்பார்கள்.

அதையும் மீறி வன்முறையில் ஈடுபட்டால் வன்முறையில் ஈடுபடும் முக்கியமான நபரை குறிவைத்து பஸ்ஸுக்கு தீ வைக்கிறான் பார். அவனைக் குறி பார்த்து சுடு என்று குழு தலைவர் ஆணையிடுவார். அப்போது சுடுவார்கள். அவன் ஓடிக்கொண்டிருப்பான், அவன் மீதுதான் குண்டு பாயும் என்றும் சொல்ல முடியாது. இடுப்புக்குக் கீழ் சுட வேண்டும், கால் முட்டிக்குக் கீழ் சுடவேண்டும் என்பதெல்லாம் விதி அல்ல.

ஆனால் வன்முறையில் அதிகம் ஈடுபடும் ஒரு நபரைக் குறி வைப்பார்கள், பொதுமக்களை அல்ல. அந்த குண்டு உடலில் எங்கு வேண்டுமானாலும் பாய வாய்ப்பு உண்டு. அதனால் எங்கு பட்டாலும் குற்றமாகாது. நான் மேற்சொன்ன விதிகளை நேற்றைய சம்பவத்தில் கடைபிடிக்கவில்லை என்றால் அது விதிமீறல்தான்.

வேன் மீது ஏறி சுடுவது, எஸ்.எல்.ஆர் வகை துப்பாக்கிகளைப் பயன்படுத்தியது சரியா? இதற்கு முன்னர் பயன்படுத்தியுள்ளனரா?

எஸ்.எல்.ஆர் வகை துப்பாக்கிகளை உபயோகப்படுத்த மாட்டார்கள். அது அதிமுக்கியமான இடங்களில் தீவிரவாதிகள் ஆபரேஷனில் தான் பயன்படுத்துவார்கள். துப்பாக்கிச் சூடு என்றால் சாதாரணமாக ஒரு ரவுண்டு தான் சுடுவது வழக்கம். எஸ்.எல்.ஆர் வகை துப்பாக்கி ஒரு வேலை பயன்படுத்தியிருந்தால் ஒரு ரவுண்டு மட்டுமே சுட வேண்டும். அப்படிச் சுடுவது ஒரு நபரைக் குறிவைத்து தான் இருக்கும்.

அதுவும் வன்முறையில் ஈடுபடும் நபர்களை குறிவைத்து சுடுவார்கள் ஆனால் இந்த சம்பவத்தில் 17 வயது பெண் சுடப்பட்டு இறந்துள்ளார். அவர் வன்முறையைத் தூண்டவா வந்திருப்பார்?

அணிவகுத்து நான்கைந்து பேரை நிற்கவைத்து தானே எச்சரித்து சுடுவார்கள்?

ஆமாம், அதற்கென ரைபிள் ஸ்குவாட் உண்டு. அணிவகுத்து நின்று எச்சரித்த பின்னர் தான் சுடுவார்கள்.

ஆனால் இந்த சம்பவத்தில் கமாண்டோ வீரர்களைப் பயன்படுத்தி வேன் மீது எல்லாம் ஏறி நின்று சுடுகிறார்களே?

அது பொசிஷன் எடுப்பது எங்கிருந்து வேண்டுமானால் நின்று சுடுவார்கள். அதற்கென உள்ள ரைபிள் வீரர்களைப் பயன்படுத்துவார்கள்.

என்ன வகையான துப்பாக்கி பயன்படுத்துவார்கள்?

303 வகை துப்பாக்கியைத்தான் பயன்படுத்துவார்கள். பால் அமினேஷன் என்பார்கள் ( ஒரு ரவுண்டு துப்பாக்கியால் சுடுவது) அப்படி சுடுவார்கள். பிளாங்க் எனப்படும் மேல் நோக்கி அடித்து எச்சரிப்பதற்காக அடிப்பார்கள். பக் ஷாட்டும் அடிப்பார்கள், அது கூட்டம் அதிகமாகி கலவரம் ஏற்பட்டால் பயன்படுத்துவார்கள்.

பக் ஷாட் என்றால் என்ன?

அது கூட்டத்தைக் கலைக்கப் பயன்படுத்தும் குண்டு. சின்ன சின்ன பெல்லட்ஸ் இருக்கும் அதில். அப்படியே சிதறிச் செல்லும். கூட்டத்தில் அதிகமான நபர்கள் மீது குண்டு பாய்ந்து காயத்தை மட்டும் ஏற்படுத்தும். ஆனால் கண், தலை என்று முக்கியமான இடத்தில் குண்டு பாயும்போது உயிரிழப்பும் ஏற்படும் என்பதால் அதைப் பயன்படுத்த யோசிப்பதில்லை. பெரும்பாலும் பால்மினேஷன் என ஒரு ரவுண்டு சுடுவதுதான் வழக்கம்.

ரப்பர் குண்டுகளை ஏன் பயன்படுத்துவதில்லை?

அப்படி ஒன்று காவல்துறையில் உள்ளதா என்றே தெரியவில்லை. எங்கள் காலத்திலேயே சொல்லிக் கொண்டிருந்தார்களே தவிர நடைமுறைக்கு வந்ததில்லை. ஏன் வஜ்ரா எனப்படும் வாட்டர் கேனை உபயோகப்படுத்தியே கூட்டத்தைக் கலைத்திருக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சட்ட விரோத கும்பல்களை எப்படி கலைக்க வேண்டும் என்று "தமிழ்நாடு காவல் நிலை ஆணைகள் பிரிவு 703-லும், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து, கவாத்து மற்றும் பயிற்சி கையேடு பிரிவு 123-லும் கூறப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பாக, உயிரிழப்புகள் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்க வேண்டும். கும்பலின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கொம்பொலி பயன்படுத்த வேண்டும். கலவரக் கொடி கட்டாயம் ஏற்றப்பட வேண்டும். கூம்பு வடிவ ஒலிப்பான் வாயிலாக எச்சரிக்கை செய்ய வேண்டும்.

குறி வைப்பது கும்பலை பயமுறுத்துவதற்காக இருக்க வேண்டும். பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் காவல்துறைக்கு இருக்கவே கூடாது. ஆனால் துணை ராணுவப்படை தீவிரவாதிகள் ஆபரேஷனில் பயன்படுத்தும் துப்பாக்கிகள் பொதுமக்கள் மீது பிரயோகப்படுத்தப்பட்டிருப்பது சரியா தவறா? என்பது விசாரணையின் முடிவில் வெளிவந்து தக்க வழிகாட்டுதல் வழங்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.
கர்நாடகாவை தொடர்ந்து கோவாவிலும் பாஜகவுக்கு சிக்கல்?- அரசுக்கு திடீர் நெருக்கடி

Published : 24 May 2018 20:46 IST

பனாஜி



கோவாவில் பாஜகவின் கூட்டணிக்கட்சியான கோவா பார்வர்டு கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளதால் அம்மாநில அரசுக்கு திடீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் 222 தொகுதிகளுக்கும் கடந்த 12-ம் தேதி தேர்தல் நடந்தது. இதில், 104 இடங்களில் வெற்றி பெற்று பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் கட்சிக்கு 78 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 38 இடங்களும், இதர கட்சிகளுக்கு 2 இடங்களும் கிடைத்தன.

  மாநிலத்தில் ஆட்சி அமைக்க 7 எம்எல்ஏக்கள் மட்டுமே பாஜகவுக்கு தேவைப்பட்டது. போதிய பெரும்பான்மை இல்லாத போதும், எடியூரப்பாவிற்கு ஆளுநர் வாஜுபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். பெரும்பான்மைய நிருபிக்க போதிய பலம் இல்லாததால் பின்னர் அவர் பதவி விலகினார். இதையடுத்து காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளக் கூட்டணியின் சார்பில் முதல்வராக குமாரசாமி பொறுப்பேற்றார்.

முன்னதாக, பெரும்பான்மை இல்லாத நிலையில் பாஜகவை ஆளுநர் அழைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முன்பு கோவாவில் இதேபோன்ற சூழல் எழுந்தபோது, ஆளுநர் தனிப்பெரும் கட்சியான காங்கிரஸை அழைக்காமல், கூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சியமைக்க முன்வந்த பாஜகவை அழைத்தார். இதை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் கோவாவிலும் ஆட்சியமைக்க உரிமைகோரி ஆளுநரிடம் மனு அளித்தது.

இந்நிலையில் கோவாவில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசுக்கு தற்போது உண்மையிலேயே ஆபத்து ஏற்பட்டுள்ளது. பாஜகவின் கூட்டணிக் கட்சியான கோவா பார்வர்டு கட்சி, அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சித் தலைவரும், கோவா அமைச்சருமான விஜய் சர்தேசாய் கூறுகையில் ‘‘கோவாவில் சுரங்கம் தோண்ட தடை விதிக்கப்பட்டதால் பெரும் பிரச்சினை நிலவி வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வர பாஜக முயற்சி எடுக்க வேண்டும். இல்லயென்றால் மாநில அரசில் இருந்து வெளியேறுவோம்’’ எனக் கூறியுள்ளார்.

40 இடங்களை கொண்ட கோவா சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 15 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதன் கூட்டணிக்கட்சியான கோவா பார்வர்டு கட்சி மற்றும் மஹாராஷ்டிரவாதி கோமந்த்தக் கட்சிகளுக்கு தலா 3 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
இன்று இயல்பு வாழ்க்கை பாதிக்கக்கூடாது; டி.ஜி.பி.,க்கு தலைமை செயலர் உத்தரவு

Added : மே 25, 2018 02:03 | 


 

எதிர்க்கட்சிகள், இன்று(மே 25) முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், சட்டம் - ஒழுங்கை பராமரிக்கவும், அத்தியாவசிய பொருட்கள், பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்கவும், உரிய நடவடிக்கை எடுக்க, டி.ஜி.பி.,க்கு, தமிழக அரசின் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

டி.ஜி.பி.,க்கு, அவர் அனுப்பிய உத்தரவில் கூறியிருப்பதாவது:

* துாத்துக்குடியில் நடந்த, போலீஸ் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்தும், 'ஸ்டெர்லைட்' ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், இன்று முழு அடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளன. இந்நிலையில், சட்டம் - ஒழுங்கை பராமரிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

* மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், குறிப்பாக, பால், குடிநீர், எரிபொருள் போன்றவை, தடையின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

* மருத்துவமனைகள், போக்குவரத்து வாகனங்கள், தடையின்றி இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். மத்திய அரசு அலுவலகங்கள், ரயில், விமான நிலையங்கள் போன்றவற்றுக்கு, உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்

* முக்கிய பகுதிகளில், போலீசார் ரோந்து செல்ல, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீசார் இணைந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

* எந்த வகையிலும், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது. கடைகளை மூட கட்டாயப்படுத்துவோர் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலம் முழுவதும், போலீசார் விழிப்புடன் இருக்க வேண்டும்.

* போலீஸ் கட்டுப்பாட்டு அறைகள் அனைத்தும், முழு வேகத்தில் இயங்க வேண்டும். அசம்பாவிதங்கள் எதுவும் நடந்தால், சம்பவ இடத்திற்கு, உடனடியாக போலீசாரை அனுப்ப வேண்டும்

* மாவட்ட கலெக்டர்கள், பிற துறைகளின் வாகனங்களை, போலீஸ் எஸ்.பி.,க்கள், சொல்லும் இடங்களுக்கு அனுப்பி உதவ வேண்டும். இன்று காலை, 6:00 மணி முதல், மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை, சட்டம் - ஒழுங்கு குறித்த அறிக்கையை, தலைமை செயலர் அலுவலகத்திற்கு, அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
அண்ணா பல்கலை தேர்வு தேதி மாற்றம்

Added : மே 25, 2018 01:14




சென்னை, : துாத்துக்குடி கலவரம் காரணமாக, அண்ணா பல்கலை தேர்வு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

துாத்துக்குடி கலவரத்தால், இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. எனவே, அண்ணா பல்கலையின் இணைப்பு இன்ஜினியரிங் கல்லுாரிகளில், இன்று முதல் நடக்கவிருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இன்று நடக்கவிருந்த தேர்வு, ஜூன், 5க்கும், நாளை நடக்கவிருந்த தேர்வு, ஜூன், 6; 28ல் நடக்கவிருந்த தேர்வு, ஜூன், 7க்கும் மாற்றப்பட்டுள்ளது.

ஜூன், 29 முதல் நடக்கவுள்ள தேர்வுகள், திட்டமிட்டபடி நடத்தப்படும் என, அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு பொறுப்பு அதிகாரி, வெங்கடேசன் அறிவித்துள்ளார்.
முதுகலை மருத்துவ கவுன்சிலிங் நிராகரிப்பை எதிர்த்து வழக்கு

Added : மே 25, 2018 05:25

மதுரை : முதுகலை மருத்துவப் படிப்பில் மாநில ஒதுக்கீடு கவுன்சிலிங்கில் நிராகரித்ததைஎதிர்த்து தாக்கலான மனுக்கள் மீதான விசாரணையை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை ஒத்திவைத்தது.

திருச்சி பிரியா ஆர்த்தி தாக்கல் செய்த மனு: எம்.பி.பி.எஸ்., தேர்ச்சியடைந்தேன். முதுகலை மருத்துவ மேற்படிப்பு 'நீட்' தேர்வில் 653 மதிப்பெண் பெற்றேன். அகில இந்தியஒதுக்கீட்டிற்கான கவுன்சிலிங்மார்ச்சில் நடந்ததில் பங்கேற்றேன். ராஜஸ்தான் மருத்துவக்கல்லுாரியில் எம்.டி.,படிப்பில்சேர்ந்தேன். அகில இந்திய ஒதுக்கீடுகவுன்சிலிங் முடிந்ததும், மாநில கவுன்சிலிங்கை மார்ச் 25 நடத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை. மே 20 மாநிலகவுன்சிலிங்கில் அசல் கல்விச் சான்றை சமர்ப்பிக்கவில்லை எனக்கூறி, மருத்துவக் கல்விஇயக்குனரக தேர்வுக்குழு செயலர்நிராகரித்தார்.

விதிகள்படி அசல் சான்றுகள் அவசியமில்லை.என்னைவிட குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு, மாநில ஒதுக்கீட்டில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. என்னைநிராகரித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில்அரசு மருத்துவக் கல்லுாரியில்இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்தார். புதுக்கோட்டை நந்தினிதேவியும் மனு செய்தார்.நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஜூன் 12 க்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
அடுத்தடுத்து போராட்டத்தால் திணறியது சென்னை

dinamalar 25.05.2018

சென்னை:சென்னையில் நேற்று, தி.மு.க., மற்றும் சில அமைப்பினர், அடுத்தடுத்த இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், போக்குவரத்து ஸ்தம்பித்து, மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.




''துாத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பந்தமாக, மனு அளிக்க முயன்ற போது, முதல்வர், தங்களை சந்திக்க மறுத்து விட்டார்,'' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் குற்றம் சாட்டி னார். அவரது தலைமையில், எம்.எல்.ஏ.,க் கள், தலைமைச் செயலக வளாகத்தில், நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன், கூடுதல் கமிஷனர், ஜெயராம் தலைமையிலான போலீசார், பேச்சு நடத்தினர். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தி.மு.க.,வினர், காமராஜர் சாலை மற்றும் ராஜாஜி சாலைகளில் அமர்ந்து,

போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பாரிமுனையில் இருந்து, அடையாறு வரை, பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் வரிசைகட்டி நின்றன. பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

அதேபோல், பாரிமுனையில் இருந்து, கோயம்பேடு வரை,பல மணி நேரம், வாகனங்கள் காத்துக் கிடந்தன. அதில், சென்ட்ரல் மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய, ஆம்புலன்ஸ் வாகனங்களும் சிக்கின.அதேபோல், தாம்பரம், சிட்லபாக்கம், பெருங்களத்துார் என, புறநகர் பகுதிகளிலும், தி.மு.க.,வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், வெளியூர்களில் இருந்து, கோயம்பேடு நோக்கி வந்த பேருந்துகள், பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டன.

கோயம்பேட்டில் இருந்து, பெருங்களத்துார் வரை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆவடி, அம்பத்துார், கொளத்துார், பெரம்பூர், ராயபுரம், தங்கசாலை என, பல இடங்களிலும், சாலைமறியல் போராட்டங்கள்நடத்தப்பட்டன. இதனால், வட சென்னை முழுவதிலும் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.திருநின்றவூரில், காங்., கட்சியினரும், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தி.நகர், ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை சந்திப்பு, அசோக்நகர், மேற்கு மாம்பலம் என, பல இடங் களில், சாலை மறியல் போராட்டம் நடந்ததால்,

தி.நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.

மாலையில், வாலாஜா சாலையில், கலைவாணர் அரங்கில் இருந்து, மெரினா கடற்கரை நோக்கி, தமிழக வாழ்வுரிமை என்ற கட்சியினர், பேரணியாக புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அவர்கள், திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், அண்ணா சாலையில் இருந்து, கிண்டி வரை போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.தி.மு.க., மற்றும் சில அமைப்பினர், அடுத்தடுத்த இடங்களில் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால், சென்னை மாநகரம்,திணறியது.

Medical PG student dies by suicide

Medical PG student dies by suicide  26.07.2026 Hyderabad: A 29-year-old postgraduate medical student died after allegedly jumping from the t...