Friday, May 25, 2018

இன்று இயல்பு வாழ்க்கை பாதிக்கக்கூடாது; டி.ஜி.பி.,க்கு தலைமை செயலர் உத்தரவு

Added : மே 25, 2018 02:03 | 


 

எதிர்க்கட்சிகள், இன்று(மே 25) முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், சட்டம் - ஒழுங்கை பராமரிக்கவும், அத்தியாவசிய பொருட்கள், பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்கவும், உரிய நடவடிக்கை எடுக்க, டி.ஜி.பி.,க்கு, தமிழக அரசின் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

டி.ஜி.பி.,க்கு, அவர் அனுப்பிய உத்தரவில் கூறியிருப்பதாவது:

* துாத்துக்குடியில் நடந்த, போலீஸ் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்தும், 'ஸ்டெர்லைட்' ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், இன்று முழு அடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளன. இந்நிலையில், சட்டம் - ஒழுங்கை பராமரிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

* மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், குறிப்பாக, பால், குடிநீர், எரிபொருள் போன்றவை, தடையின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

* மருத்துவமனைகள், போக்குவரத்து வாகனங்கள், தடையின்றி இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். மத்திய அரசு அலுவலகங்கள், ரயில், விமான நிலையங்கள் போன்றவற்றுக்கு, உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்

* முக்கிய பகுதிகளில், போலீசார் ரோந்து செல்ல, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீசார் இணைந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

* எந்த வகையிலும், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது. கடைகளை மூட கட்டாயப்படுத்துவோர் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலம் முழுவதும், போலீசார் விழிப்புடன் இருக்க வேண்டும்.

* போலீஸ் கட்டுப்பாட்டு அறைகள் அனைத்தும், முழு வேகத்தில் இயங்க வேண்டும். அசம்பாவிதங்கள் எதுவும் நடந்தால், சம்பவ இடத்திற்கு, உடனடியாக போலீசாரை அனுப்ப வேண்டும்

* மாவட்ட கலெக்டர்கள், பிற துறைகளின் வாகனங்களை, போலீஸ் எஸ்.பி.,க்கள், சொல்லும் இடங்களுக்கு அனுப்பி உதவ வேண்டும். இன்று காலை, 6:00 மணி முதல், மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை, சட்டம் - ஒழுங்கு குறித்த அறிக்கையை, தலைமை செயலர் அலுவலகத்திற்கு, அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...