Tuesday, July 3, 2018

MBBS counselling begins, 572 seats allotted on Day 1

Pushpa.Narayan@timesgroup.com

Chennai: 03.07.2018

Counselling for admissions to MBBS/BDS by the state selection committee began on Monday at the Government multi-speciality hospital.

At 9am, health minister C Vijaya Baskar gave away allotment orders to toppers – most opted for seats in Madras Medical College. Among the top ten candidates – only the second and fourth ranked students attended counselling.

Counters opened with 3,501MBBS seats and1068 BDS seats in the state quota. While there were 2447 seats from the 22 government colleges, 65 seats were reserved for ESIC KK Nagar, 862 for self-financing colleges and 127 for Raja Muthiah Medical College of Annamalai University. When the counters opened, there were 65 seats in Madras Medical College and 66 seats in Stanley Medical College. By 2pm, open category seats in Madras Medical College and Stanley Medical College were empty and open seats in Dharamapuri (26), Theni (26), Tiruvarur (26) and Pudukkottai

(40) were down to 10.

“No student has been admitted to Dharmapuri, Theni, Tiruvarur and Pudukkottai but the open category seats in these colleges were transferred. We follow this looping so students from reserved community students in open category can be accommodated in top colleges,” a counsellor was heard telling parents.

By the end of day 1, 185 of the 757 OC seats were filled with no seats in Madras Medical College, Stanley Medical College, Madurai Medical College and Coimbatore Medical College. Of the 609 students called for counselling, 580 attended and seats were allotted to 572 candidates in government medical colleges, while one student opted for a seat in a self-financing college.


Aadhaar helps TN trim PDS list; 1.43cr duplicate names off

Julie.Mariappan@timesgroup.com

Chennai 03.07.2018

: Thanks to Aadhaar, the demographic and biometric authentication process has helped remove the names of 1.4 crore people from the public distribution system database in the state as they appeared on more than one ration card. The duplications were rectified after seeding of Aadhaar numbers in the government database for universal PDS.

About 10 lakh duplicate PDS cards were also eliminated during the exercise, said a policy note tabled by R Kamaraj, food and consumer protection minister, in the state assembly. “Names of these people appeared in one or more cards and they were enjoying subsidized commodities. After seeding of unique numbers to the database for the distribution of smart cards, the number of people came down from eight crore to 6.6 crore in our database,” said a senior government official.

“The eligible cards have now come down to 1.96 crore,” he said. Under PDS and special PDS, essential commodities are sold at subsidized rates, while rice is supplied free of cost.




Rice supplied by govt unfit for consumption, says Cong MLA

Between 2011 and 2016, periodical door-to-door verification resulted in elimination of 5.47 lakh cards. During the debate on demand for grants for the department in the assembly, the opposition and treasury benches locked horns over the quality of essentials sold in PDS outlets. “The rice supplied by government is unfit for consumption and quality check parameters have not been followed,” R Ganesh (Congress) alleged. Minister Kamaraj said the Congress couldn’t make such an allegation as it levied service tax on storage of rice but scrapped it following stiff opposition from former CM J Jayalalithaa. The monthly allotment of 2.92 lakh tonnes of rice to TN from the central pool was checked for quality before being sold in outlets. While 3.17 lakh tonnes is the monthly offtake, the state meets the demand by purchasing at a higher rate from the Centre.

TN spends ₹6,000 crore towards food subsidy each year, despite implementing the National Food Safety Act that narrows down priority and nonpriority households. “But all rice cardholders are eligible for 5kg rice each as per NFSA,” chief minister Edappadi K Palaniswami said.

The abrupt stoppage of urad dal under special PDS came in for sharp criticism from the opposition, but government said 20,000 tonnesof tur dal and 1.5 crore litres of palmolein oil were supplied to all cardholders every month to keep the price hike under control. The supply will continue upto February next year.

In a bid to put in place security mechanism, Kamaraj announced GPS in trucks that transport goods from the Food Corporation of India and Civil Supplies godowns to PDS outlets, besides CCTV surveillance at a cost of ₹20 crore. Twenty-five direct purchase centres to procure paddy directly from farmers will be set up in the delta districts at ₹12 crore this fiscal.
ரயில் பயணியருக்கு 'டிஸ்போசபிள்' டவல்

Added : ஜூலை 03, 2018 01:47

புதுடில்லி: ரயில்களில், 'ஏசி' பெட்டி களில் பயணிப்போருக்கு, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய, 'டிஸ்போசபிள்' டவலை வழங்கும்படி, ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.அனைத்து மண்டல ரயில்வே மேலாளர்களுக்கும், ரயில்வே வாரியம் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போது, பயணியருக்கு வழங்கப்படும், ஒரு டவலுக்கு, கொள்முதல் விலை மற்றும் துவைப்பதற்கான செலவு உட்பட, 3.53 ரூபாய் செலவாகிறது. அதற்கு பதில், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் வகையில், கையடக்கமான பருத்தி டவலை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.'புதிய டவல்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக, தண்ணீரை உறிஞ்சும் வகையில் இருக்கும்' என, ரயில்வே அதிகாரிகள்கூறினர்.
மாவட்ட செய்திகள்

சேலத்தில் 2-வது நாளாக கனமழை; 1,500 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட மாணவனை தேடும் பணி தீவிரம்



சேலத்தில் 2-வது நாளாக கனமழை பெய்தது. இதனால் 1,500 வீடுகளில் வெள்ளம் புகுந்தது. மேலும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட மாணவனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஜூலை 03, 2018, 06:45 AM
சேலம்,

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலையில் வெயிலின் தாக்கம் ஓரளவு இருந்து வருகிறது. மாலையில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் இரவு 9.20 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. பின்னர் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கனமழையின் போது பயங்கர காற்று வீசியதால் சில இடங்களில் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன.

பின்னர் விடிய, விடிய கனமழை விட்டு, விட்டு பெய்து கொண்டே இருந்தது. இந்த மழையினால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளத்தில் வாகனங்கள் தத்தளித்து ஊர்ந்து கொண்டே சென்றன.

சேலம் களரம்பட்டி, பச்சப்பட்டி, நாராயண நகர், அஸ்தம்பட்டி, சங்கர் நகர், பெரமனூர், சன்னியாசி குண்டு, அண்ணா நகர், பொன்னம்மாபேட்டை புதுத்தெரு, சூரமங்கலம் சுப்பிரமணிய நகர், அம்மாபேட்டை என மாநகரின் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதியில் உள்ள 1,500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

சாக்கடை கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாகவும், அது நிரம்பியதாலும் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. வீடுகள் மற்றும் தெருக்களில் முட்டியளவை தாண்டியும் தண்ணீர் நின்றதால் பொதுமக்கள் பெரிதும் அவதியுற்றனர். வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை அவர்கள் பாத்திரங்களில் நிரப்பி வெளியே கொண்டு ஊற்றினர். இதனால் விடிய, விடிய தூங்காமல் பொதுமக்கள் தவித்தனர்.

சிலருடைய வீட்டில் மழைநீரில் மாணவ, மாணவிகளின் புத்தகங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் நனைந்தன. புத்தகங்கள் நனைந்ததாலும், வீடுகளில் மழைநீர் புகுந்ததாலும் ஏராளமான மாணவ, மாணவிகள் நேற்று பள்ளிக்கூடத்துக்கு செல்லவில்லை. வீட்டு முன்பும், தெருக்களிலும் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் தேங்கி நின்ற தண்ணீரில் மூழ்கின.

சேலம் கிச்சிபாளையம் நாராயணன் நகர், பச்சப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. தெருக்களில் மழைநீருடன் சாக்கடை நீர் கலந்து ஆறாக ஓடியது. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலக வேலைக்கு சென்றவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பெரும்பாலான சாலைகள் சேறும், சகதியுமாகவே காட்சியளித்தன.

மேலும் கடைகளிலும் மழைநீர் தேங்கி நின்றது. கடை ஊழியர்கள் காலையில் பணிக்கு வந்ததும் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். மழைநீரில் கடையில் பராமரிக்கப்பட்டு வந்த ஆவணங்கள் நனைந்துவிட்டதாக கடை ஊழியர்கள் தெரிவித்தனர். சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு சைக்கிள் நிறுத்தும் இடத்தில் மழைநீர் புகுந்ததால் இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் வாகனத்தின் உரிமையாளர்கள் எது? தன்னுடைய வாகனம் என்று தெரியாமல் எடுக்க முடியாமல் திணறினர்.

சிவதாபுரம் ரெயில்வே தரைப்பாலத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் சிவதாபுரம், சித்தர்கோவில், இளம்பிள்ளை, சின்னப்பம்பட்டி, ஜலகண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டனர். மழைநீர் தேங்கியதால் இந்த வழித்தடத்தில் பஸ்கள் இயக்கப்படவில்லை.

சேலம் நாராயண நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் முகமது ஆஷாத்(வயது 16). 10-ம் வகுப்பு படித்துவந்த அவன் நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் 3 பேருடன் சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பினான். வீடு அருகே வந்த போது எதிர்பாராத விதமாக ஓடையில் மாணவன் தவறி விழுந்தான். அவனை நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவனை காப்பாற்ற முடியவில்லை. முகமது ஆஷாத் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டான்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் மாணவனின் பெற்றோர், உறவினர்கள் அங்கு விரைந்து சென்று அந்த ஓடை பகுதியில் தேடி பார்த்தனர். சம்பவ இடத்துக்கு கிச்சிபாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனே சென்று மாணவனை தேடினர். நேற்று காலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கூடுதலாக தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு மாணவனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.

தீயணைப்பு வீரர்கள் சிலர் உடலில் கயிற்றை கட்டிக் கொண்டு ஓடைக்குள் இறங்கி மாணவனை தேடி பார்த்தனர். ஆனால் தண்ணீர் அதிகமாக சென்றதால் மாணவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த பணியை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர், துணை கமிஷனர்கள் சுப்புலட்சுமி, தங்கதுரை ஆகியோர் பார்வையிட்டனர். தொடர்ந்து மாணவனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி அந்த பகுதியில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதனிடையே மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தலைமையில் வீடுகளில் தேங்கி இருக்கும் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஏராளமான ஊழியர்கள் ஈடுபட்டனர். ஓடை, சாக்கடை கால்வாய்களில் தூர்வாரும் பணியும் நடந்தது. சம்பவம் நடந்த இடத்தை பார்வையிடுவதற்காக கலெக்டர் ரோகிணி காரில் அங்கு வந்தார். பின்னர் அவர் மாணவன் தவறி விழுந்த ஓடையை பார்வையிட்டார்.

இதையடுத்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட மாணவனின் வீட்டுக்கு கலெக்டர் ரோகிணி சென்றார். அங்கு அவர் முகமது ஆசாத்தின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். இதையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அப்போது அவருடைய காரை சிலர் முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீஸ் உயர் அதிகாரிகள் பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, ‘கடந்த முறை மழை பெய்து வெள்ளம் வீடுகளில் புகுந்த போது ராஜவாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதுடன் தூர்வாரப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதுவரை அதற்கான எந்த பணிகளும் நடக்கவில்லை. இதனால் தான் தண்ணீர் வாய்க்காலில் இருந்து வெளியேறி வீடுகளுக்கும் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் நடத்துவோம்‘ என்றனர்.

மேலும் சேலம் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள திருமணிமுத்தாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், கரையின் ஒரு பகுதி உடைந்தது. கன மழையினால் சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் மழைநீர்குளம் போல் தேங்கி நின்றது. அதிலும் சில சிறுவர்கள் விளையாடினர்.

சேலம் 47-வது வார்டு பெரியார் வளைவு அருகே உள்ள அம்பேத்கர் நகரில் கன மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மழையின் காரணமாக அந்த பகுதியை சேர்ந்த ஆறுமுகம் உள்ளிட்ட 4 பேரின் வீடுகள் திடீரென இடிந்து விழுந்தன. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் எந்த சேதமும் ஏற்படவில்லை.

மேலும் சாக்கடை கால்வாயை தூர்வாரக்கோரி சேலத்தில் களரம்பட்டி, நாராயண நகர், பஞ்சதாங்கி ஏரி, அம்மாபேட்டை மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. சேலத்தில் நேற்று முன்தினம் பெய்த மழைக்கு பல்வேறு இடங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. இதை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணி அளவில் திடீரென சேலத்தில் கனமழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் இந்த மழை நீடித்தது. 2-வது நாளாக பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். இந்த மழையினால் மணக்காடு பகுதியில் டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஏற்கனவே தேங்கிய தண்ணீர் வடியாத நிலையில், மீண்டும் மழை தொடர்ந்து பெய்ததால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து விடுமோ? என்ற அச்சத்தில் மக்கள் தவித்தனர்.
தலையங்கம்

‘ஜி.எஸ்.டி’யால் பலனா?, பாதிப்பா?




கடந்த ஆண்டு ஜூன் 30–ந்தேதி முடிந்து, ஜூலை 1–ந்தேதி பிறக்கும் நள்ளிரவில் பாராளுமன்றத்தில் ‘ஜி.எஸ்.டி’ என்று கூறப்படும் சரக்குசேவைவரி நிறைவேற்றப்பட்டது.

ஜூலை 03 2018, 03:30

நமது வரிவிதிப்பு முறைகளில் நேரடி வரி, மறைமுக வரி என்று இரண்டு வகையான வரிகள் உண்டு. நேரடியாக மக்கள்மீது விதிக்கப்படும் வருமானவரி, சொத்துவரி போன்ற வரிகள் நேரடி வரியாகவும், மத்திய கலால்வரி, கூடுதல் கலால்வரி, சுங்கவரி, சேவைவரி, விற்பனைவரி, கேளிக்கைவரி, நுழைவுவரி, விளம்பரவரி போன்ற பொருட்கள், சேவைகள் மீது விதிக்கப்படும் வரிகள் மறைமுக வரிகளாகவும் கருதப்பட்டன. 17 மறைமுக வரிகளையும், 23 மேல்வரிகளையும் ஒன்றாக்கி ஒரேவரியாக ‘ஜி.எஸ்.டி.’ அறிமுகப்படுத்தப்பட்டது. ‘ஜி.எஸ்.டி’ சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் பிரதமர் நரேந்திரமோடி பேசும்போது, இது வரி மட்டுமல்ல, பொருளாதார சீர்திருத்தம் மட்டுமல்ல, மக்களை நேர்மையாக வரிகட்டச்செய்யும் சமூகசீர்திருத்தம். ஏழைகளுக்கு பலன்தரும் திட்டம் என்று பெருமைப்படக்கூறினார்.

6 விதமான வரிவிதிப்பில் ‘ஜி.எஸ்.டி’ வகைப்படுத்தப்பட்டது. முழுமையான வரிவிலக்கு பெற்றுள்ள பொருட்கள் 0 சதவீதம் என்றும், தங்கம், வெள்ளி போன்ற பொருட்கள் 3 சதவீத வரிவிதிப்பிலும், மற்றபொருட்கள் 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என்ற வரிவிகிதத்தின் கீழும் வரி வசூலிக்கப்படுகிறது. இதில் பல பொருட்களின் விலை உயர்ந்திருக்கிறது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. எடுத்துக்காட்டாக, இந்த வரிவிதிப்பிற்கு முன்பு சேவைவரி 15 சதவீதமாக இருந்தது. வரிவிதிப்பிற்கு பின் 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சேவைவரியை 15 சதவீதமாக குறைக்க ‘ஜி.எஸ்.டி’ கவுன்சில் பரிசீலிக்கவேண்டும். இதுபோல, பெட்ரோல்–டீசல், புகையிலை, மதுபானம் போன்றவை ‘ஜி.எஸ்.டி’ வரம்புக்குள் கொண்டுவரப்படவில்லை. புகையிலைக்கும், மதுபானத்துக்கும் எவ்வளவு வரிவேண்டுமானாலும் விதிக்கலாம். ஆனால், பெட்ரோல்–டீசலை ‘ஜி.எஸ்.டி’க்குள் கொண்டுவந்து அதிகபட்ச 28 சதவீதவரியை விதிக்கலாம். ஆனால், அதற்குமேல் மதிப்புகூட்டுவரி, மேல்வரி, ஆயத்தீர்வை வசூலிக்கக்கூடாது. இந்த வருவாய் தியாகத்தை மத்திய–மாநில அரசுகள் செய்யவேண்டும்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல், மார்ச்வரை 9 மாதகாலத்தில், ரூ.8 லட்சத்து 20 ஆயிரம் கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இதை ஓராண்டுக்கு கணக்கிட்டால் ரூ.11 லட்சம் கோடி வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது. ‘ஜி.எஸ்.டி’ அறிமுகப்படுத்தப்படும் முன்பு நடந்த மறைமுக வரிவசூலில் 11.9 சதவீதம் இது அதிகமாகும். இந்த ஆண்டு வசூல்தொகையை ரூ.13 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், பலபொருட்களுக்கு வரியை குறைக்கவேண்டும் என்ற கோரிக்கை பரவலாக பொதுமக்களிடம் இருந்துவரும் நேரத்தில், ரூ.13 லட்சம் கோடியாக இலக்கை உயர்த்தியிருப்பதும், மாதத்திற்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி என்று குறியீடு வைத்திருப்பதும் நிச்சயமாக பொதுமக்களுக்கு பலன்தருமா? என்று இப்போது சொல்லமுடியாது. கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி தமிழ்நாட்டில் ரூ.23 ஆயிரத்து 325 கோடியே 5 லட்சம் ‘ஜி.எஸ்.டி’ வசூலிக்கப்பட்டு முதல் 5 மாநில பட்டியலில் இருக்கிறது. ஜி.எஸ்.டி.யால் மக்களுக்கு பலன்கிடைத்துள்ளதா?, பாதிப்பா? என்பது மக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் செலவு குறைகிறதா?, கூடுகிறதா?, விலைவாசி உயர்கிறதா?, குறைந்துள்ளதா? என்பதையெல்லாம் பொருத்துத்தான் தெரியும்.
தேசிய செய்திகள்

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை




நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #HeavyRain

ஜூலை 03, 2018, 06:49 AM

புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீர், அஸ்ஸாம், குஜராத், தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இந்த வாரம் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தென்மேற்கு பருவ மழை வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30 வரை 4 மாதங்களுக்கு நீடிக்கும். இந்த ஆண்டு 3 நாள்களுக்கு முன்பாக மே 29-ஆம் தேதியே பருவ மழை தொடங்கிவிட்டது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், நாட்டின் பல்வேறு இடங்கள் நல்ல மழைப்பொழிவை பெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- அஸ்ஸாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் செவ்வாய்க்கிழமை கனமழை முதல் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. இதேபோல், உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதி, மேற்கு வங்கத்தில் இமய மலையையொட்டிய மாவட்டங்களிலும், சிக்கிம், பிகாரிலும் செவ்வாய்க்கிழமை கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும், தமிழகம் ஜம்மு-காஷ்மீர், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், ஹரியாணா, சண்டீகர், ஜார்க்கண்ட், அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களிலும், கொங்கன் பகுதி, ராயலசீமா, கர்நாடகத்தின் கடலோரப் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.

மகாராஷ்டிரத்தின் மத்தியப் பகுதி, மேற்கு வங்கத்தில் இமய மலையையொட்டிய மாவட்டங்கள், கர்நாடகத்தின் கடலோரப் பகுதி, குஜராத் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் புதன்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஆந்திரத்தின் கடலோரப் பகுதிகள், சத்தீஸ்கர், ஒடிஸா, மேகாலயா, கேரளம், கர்நாடகத்தின் உள்பகுதிகளில் வியாழக்கிழமையும், கோவா, கொங்கன் பகுதிகளில் வெள்ளிக்கிழமையும் கனமழை பெய்யக்கூடும். நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் அன்றைய தினம் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
மருத்துவ கல்வி பொது கலந்தாய்வு: முதல் 10 மாணவர்கள் சென்னை மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தனர்
மருத்துவ கல்வி பொது கலந்தாய்வு:
முதல் 10 மாணவர்கள் சென்னை மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தனர்
  மருத்துவ கல்வி பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கிவைத்து முதலிடம் பெற்ற 10 மாணவ-மாணவிகளுக்கு ஒதுக்கீட்டு கடிதத்தை வழங்கினார்.

ஜூலை 03, 2018, 05:15 AM

சென்னை,

2018-19ம் ஆண்டுக்கான மருத்துவ படிப்பு(எம்.பி.பி. எஸ்.) மற்றும் பல் மருத்துவ படிப்பு(பி.டி.எஸ்.) ஆகியவற்றுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளான நேற்று முன்தினம் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில் 40 மாணவ-மாணவிகள் அரசு மருத்துவ கல்லூரிகளில் இடங்களை பெற்றனர்.

பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் தொடங்கிவைத்து, முதல் 10 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஒதுக்கீடு கடிதத்தை வழங்கினார். அவர்கள் அனைவரும் சென்னை மருத்துவ கல்லூரியை தேர்வு செய்திருந்தனர்.

தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்த மேற்கு தாம்பரத்தை சேர்ந்த கே.கீர்த்தனா என்ற மாணவி அகில இந்திய இடஒதுக்கீட்டில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை தேர்வு செய்துவிட்டதால், நேற்றைய கலந்தாய்வில் அவர் பங்கேற்கவில்லை. இதேபோன்று அகில இந்திய இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புகளை தேர்வு செய்த மேலும் சிலரும் வரவில்லை.

மற்ற மாணவர்களில் முதல் 10 இடங்களை பெற்ற மாணவ- மாணவிகள் நேற்றைய கலந்தாய்வில் கலந்து கொண்டு அமைச்சரிடம் ஒதுக்கீட்டு கடிதத்தை பெற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் எட்வின் ஜோ, மருத்துவ கல்வி தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்கள் விவரம் வருமாறு:- ஆர்.ராஜ்செந்தூர் அபிஷேக்(நீட் மதிப்பெண் 656), முகமது சுஐப்ஹசன்(644), ஆர்.எஸ்.சுப்ரஜா(613), எஸ்.சபரீஷ்(610), அனஹ நிடுகலா ஷியாம்குமா(610), ஷிரிஷ் செந்தில்குமார்(607), எம்.தினகர்(606), ஆல்பிரட் விவியன் ஆல்வின்(604), எச்.சதீஷ்(604), ஜெ.ஜோஸ்வா அஜய்(602). இதில் ஆர்.எஸ்.சுப்ரஜா, எஸ்.சபரீஷ், எம்.தினகர் ஆகியோர் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொது மருத்துவ கலந்தாய்வுக்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு பிரிவின்கீழ் 40 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். 7-ந் தேதி வரை பொது பிரிவுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. இன்று(நேற்று) 609 பேர் அழைக்கப்பட்டனர். நாளை(இன்று) 850 பேரும், நாளை மறுநாள்(நாளை) ஆயிரம் பேரும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி அரசு மருத்துவ கல்லூரிகளில் 3,501 மருத்துவ இடங்கள் உள்ளன. நிர்வாக ஒதுக்கீட்டில் 723 இடங்கள் உள்ளன. மாநில பாடத்திட்டத்தில் படித்த 70 சதவீதம் பேருக்கு எம்.பி.பி.எஸ். படிக்க வாய்ப்பு கிடைக்கும். சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. மாணவர்களுக்கு 30 சதவீதம் வாய்ப்பு உள்ளது.

வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரியின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான வழக்கு ஐகோர்ட்டில் உள்ளது. கோர்ட்டு முடிவை அரசு ஏற்கும். இது தவிர தனலட்சுமி, ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரிகளில் 65 சதவீதம் இடங்கள் இந்த ஆண்டு கூடுதலாக கிடைத்துள்ளது.

தமிழகத்தை பூர்வீகமாக கொண்டு வெளிமாநிலத்தில் நீட் தேர்வு எழுதியவர்களும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி 90 பேர் தகுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் 29 பேருக்கு மருத்துவ படிப்புக்கான இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதற்கான இருப்பிட சான்று உள்ளிட்ட 14 விதிமுறைகள் விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

கடந்த 7 ஆண்டுகளில் ஆயிரம் மருத்துவ படிப்புக்கான இடங்கள் அதிகரித்து உள்ளன. புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கியதன் மூலமாகவும், ஏற்கனவே உள்ள மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் உருவாக்கியதன் மூலமாகவும் இந்த இடங்கள் கிடைத்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று நடைபெற்ற கலந்தாய்வுக்கு 609 பேர் அழைக்கப்பட்டிருந்ததில் 29 பேரை தவிர்த்து 580 பேர் கலந்து கொண்டனர். இதில் 572 பேர் அரசு மருத்துவ கல்லூரி இடங் களுக்கான ஒதுக்கீட்டையும், ஒருவர் சுயநிதி மருத்துவ கல்லூரிக்கான ஒதுக்கீட்டையும் பெற்றுள்ளனர். மேலும் தகுதியுடைய 7 பேர் தங்களுக்கான இட ஒதுக்கீட்டை இன்று(செவ்வாய்க்கிழமை) தேர்வு செய்ய உள்ளனர்.

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...