Thursday, July 5, 2018

Jet Airways flight suffers bird hit

CHENNAI, JULY 05, 2018 00:00 IST


It happened near the Mumbai airport

A brand new Jet Airways Boeing 737 Max 8 aircraft from Mumbai suffered a bird hit on Tuesday evening and was grounded at the Chennai airport.

The aircraft was operated for the first time only three days ago.

The flight, which that departed from Mumbai around 5.15 p.m., with 150 passengers suffered a bird hit just after take off but landed safely around 6.30 p.m.

“The bird strike occurred near Mumbai airport. But there was no problem and passengers were not affected. We saw some feathers and blood stains in the engine after the flight landed,” a source said.

The aircraft that was grounded left the city on Wednesday night, sources added.

Just two weeks ago, an Air India flight had to return to the airport over a suspected bird hit.

18 incidents

This airport has seen nearly 18 incidents of suspected and one confirmed bird strike from January this year.

Unlike a confirmed bird hit, a suspected bird hit means the authorities don’t find the bird but just feathers and blood stains, officials said.
719 seats in govt. medical colleges allotted

CHENNAI, JULY 05, 2018 00:00 IST

Most seats in city colleges filled up

On Tuesday, the second day of general counselling, majority of the seats in the four government medical colleges in the city were allotted. In total, 719 MBBS seats were allotted in the 22 government medical colleges across the State. With this, day three of general counselling will begin with 1,118 vacant seats in government medical colleges.

According to officials of the Selection Committee, the Directorate of Medical Education, a total of 828 candidates were called for counselling.

Of this, 813 candidates attended. While 719 seats in government medical colleges were allotted, 29 seats were allotted in the ESIC college.

A total of 59 MBBS seats were allotted in self-financing colleges. One BDS seat was allotted in the TamilNadu Government Dental College. At the end of day two of general counselling, a total of 808 seats were allotted.

As of now, the Madras Medical College (MMC) has six vacant seats — four for SC-Arundathiyar and two for ST, while the Government Stanley Medical College has 34 seats — 26 for SC, six for SC-Arundathiyar and two for ST.

There were 24 seats — 19 for SC, four for SC-Arundathiyar and one for ST — at the Government Kilpauk Medical College. The Government Medical College, Omandurar Estate has 22 vacant seats — 5 for MBC, 13 for SC, three for SC-Arundathiyar and one for ST.

There are a total of 802 vacant seats in self financing medical colleges. Official sources said the 100 seats of the Christian Medical College, Vellore would be offered under the management quota, with the counselling scheduled for early next week.

There are a total of 82 vacant seats in the Government Dental College, and 965 seats in self financing dental colleges.

Govt-aided student

J. Charan, a student of a government-aided school in Old Washermanpet, was among the 828 candidates called for counselling on Tuesday. Son of an electrician, Charan scored 416 in NEET. He stood at 972 in the general rank list and secured a community rank of 589 for Backward Classes.

“My school arranged for NEET coaching on the campus. Today, at the counselling, I did not get a medical seat in any of the government medical colleges in Chennai. There were no seats in Chengalpet medical college too. So, I opted for the Government Vellore Medical College,” he said.
Passengers hit as airline cancels flight

CHENNAI, JULY 05, 2018 00:00 IST

Nearly 80 passengers who were to fly to Port Blair were stranded at the Chennai airport as Air India cancelled the service. The flight that had to depart around 10 a.m. was cancelled for operational reasons, sources said. Passengers complained about the cancellation.

Tamilisai’s intervention

Around the same time, BJP state president Tamilisai Soundararajan came to the airport to meet the party’s national general secretary in-charge of Tamil Nadu P. Muralidhar Rao.

She claimed that the airline had agreed to provide accommodation for the passengers after her intervention. She said she had aired her concerns to Air India officials, who subsequently agreed to arrange accommodation and a flight for the 80 passengers.

They will leave in another flight on Thursday morning.
வயோதிகத்தால் வாட வேண்டியதில்லை!

2018-07-04@ 11:52:45




நன்றி குங்குமம் டாக்டர்

வணக்கம் சீனியர்

வயதும், உடலும் ஒத்துழைக்கிற வரையில் உலகமே காலடியில் இருப்பதுபோல் தோன்றும். ஆனால், லேசாக நரை தோன்றி, உடல் சிறிது தளர்ந்தாலே மனதின் தைரியம் குறைந்துவிடும். பணிரீதியான ஓய்வும், குடும்பப் பொறுப்புகளில் இருந்து விலகி இருக்க நேர்வதும், தனிமை உணர்வும் இன்னும் கலவரப்படுத்திவிடுகிறது.

இப்படி இல்லாமல் முதுமைப் பருவத்தை இனிதாக்க என்ன வழி? முதியோர்கள் அனுபவிக்கிற சிக்கல்கள் என்ன? அவர்களை குடும்பத்தினர் எந்த வகையில் புரிந்துகொண்டு ஒத்துழைக்க வேண்டும்?- மனநல மருத்துவர் ராஜேஷ் கண்ணனிடம் கேட்டோம்...

‘‘முதியோரின் முதல் தேவையே அன்பும், அரவணப்பும்தான். வெறுமனே உணவும், உடையும், உறைவிடமும் தருவது மட்டுமே அவர்களுக்குப் போதுமானது அல்ல. முதுமைகால தனிமையால் பிரச்னைகள் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்கு அவர்களின் பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் நட்பு வட்டாரங்களின் ஆதரவோடு சமூகம் சார்ந்த பிணைப்புகளும் முதியோருக்கு அவசியமாகிறது. இதன்மூலம் கிடைக்கிற மனநிறைவே அவர்களின் எதிர்பார்ப்புகளில் முதன்மையானதாக இருக்கிறது.

நல்ல உடல் ஆரோக்கியமும், தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான பொருளாதார வசதியும் அவர்களுடைய அடுத்தடுத்த எதிர்பார்ப்புகளாக இருக்கிறது. முதுமையில் உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த பல பிரச்னைகள் அவர்களுக்கு இயல்பாகவே ஏற்படுகிறது.

உடல் உறுப்புகளின் செயல்திறன் குறைவால் நோய்வாய்ப்பட்டு பலவீனமாதல், இரவு தூக்கத்தின் அளவு குறைந்து பகல் தூக்கத்தின் அளவு அதிகரித்தல், கேட்கும் திறன் மற்றும் பார்வைத்திறன் குறைதல் என்று புலன்களின் உணர்வுகள் குறைதல் போன்ற உடல்நல பிரச்னைகள் ஏற்படுகிறது.

இதுபோன்ற புலன்களின் உணர்வு குறைவால் பல சந்தேக உணர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சந்தேக உணர்வு உறவுகளுக்கிடையே விரிசல் ஏற்பட வழிவகுக்கிறது. முன் மூளையில் ஏற்படும் பிரச்னையால் மூளை தேய்மான நோய் ஏற்படுகிறது.

இந்நோயால் ஞாபக மறதி, குணம் மாறுதல், சுய உணர்விழத்தல், பிறரை அடையாளம் காண முடியாமல் போவது போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. அதீத பயத்தால் மனப்பதற்ற நோய் உண்டாகிறது. இதுபோன்ற பிரச்னைகளை நீண்ட நாட்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதால், ஒரு நிலையில் அதிக விரக்தி ஏற்பட்டு தற்கொலை எண்ணங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதுபோன்ற சூழலில் சிலர் தனிமையை விரும்புவது மற்றும் சொத்துக்களை உயில் எழுதுவது போன்ற செயல்களைச் செய்கின்றனர். முதுமையில் எந்த ஆதரவுமின்றி, வாழ்வதற்கே வழியின்றி இருப்பவர்களில் சிலர் விரக்தியின் விளிம்புக்குச் செல்வதால் தற்கொலை முடிவுகளுக்குத் தள்ளப்படுகிறார்கள்.

40 வயது வரை தானாகவே முடிவு எடுக்கும் நிலையில் இருந்தவர்கள், அந்த பொறுப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக தன் பிள்ளைகளிடமும், மற்றவர்களிடமும் ஒப்படைக்கிற நிலைக்கு மாறுகிறார்கள். இப்படி 60 வயதுக்கு மேலாகிறபோது பிறருடைய முடிவுகளை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தன்னை மாற்றிக் கொள்கிறார்கள்.

இப்படி முதுமையை நோக்கிச் செல்பவர்களின் பணி ஓய்வுக்குப் பிறகு வேலையின்றி, பணமின்றி, உடல்நலம் குறைகிற சூழல் ஏற்படுகிறது. அப்போது தன் அத்தியாவசிய தேவைகளுக்குக்கூட பிறரை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை உண்டாகிறது. இதுபோன்ற தருணங்களில் அவர்களுடைய பொருளாதார சுதந்திரம் பறிபோவதோடு வாழ்வின் அர்த்தமும் சில சமயங்களில் கேள்விக்குறியாகிறது.

முதுமையில் தன்னைப் பற்றிய சுயமதிப்பீடும், பாதுகாப்பு உணர்வும் குறைகிறது. இதுபோன்ற காரணங்களால் சிலர் தனது தேவைகள், எதிர்பார்ப்புகள் மட்டுமின்றி உடல் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்னைகளைக் கூட தன் பிள்ளைகளிடமோ, உறவினர்களிடமோ பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கிறார்கள். அந்த பிரச்னைகளை தன் மனதுக்குள்ளேயே வைத்து குழப்பிக்கொண்டு மன அழுத்தத்தை அதிகமாக்கிக் கொள்கிறார்கள்’’ என்கிற ராஜேஷ் கண்ணன், முதியோர் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் பற்றியும் வழிகாட்டுகிறார்.

‘‘வயது அதிகரிக்கிறபோது அதற்கேற்ற சரியான அனுபவங்களைப் பெற்று வாழ்வின் அடுத்தடுத்த நிலைக்கு நகர வேண்டும். அவரவருக்குக் கிடைக்கிற அனுபவங்களின் அடிப்படையிலேயே வாழ்வின் அடுத்தடுத்த நிலைகள் அமைகிறது. தான் பெற்ற அனுபவங்கள் மூலம் தன்னை மனதளவிலும், உடலளவிலும் பலப்படுத்திக் கொள்பவர்கள் மீதமிருக்கும் வாழ்வை தைரியமாக எதிர்கொள்வதோடு, சந்தோஷமாகவும் வாழ முடியும்.

முதுமை காலத்தை மனநிறைவுடன் கழிப்பதற்கு நல்ல நட்பு வட்டமும், சமூக உறவுகளும் அவசியம். பேரன், பேத்திகளோடு நேரம் செலவிடுதல், செல்லப்பிராணிகள் வளர்த்தல், புத்தகங்கள் படித்தல், உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வற்கு யோகா, உடற்பயிற்சிகள் செய்வது, வீட்டிலுள்ள வேலைகளை பிறரோடு பகிர்ந்து செய்வது, பயனுள்ள பொழுது போக்கு அம்சங்களை பழக்கப்படுத்திக்கொள்வது போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதால் தனிமை உணர்வைத் தவிர்க்கலாம்.

முதுமை காலத்தில் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் முன்னரே சேமிப்புகளை உறுதி செய்து கொள்வது நல்லது. முதியோருடைய எதிர்பார்ப்புகளை அவர்களுடைய பிள்ளைகள் நிறைவேற்றுவார்கள் என்று அதிகளவு நம்பிக்கை கொள்கிறார்கள்.

சில சமயங்களில் அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாமல் போகிறபோது அதற்கான சரியான காரணங்களை புரிந்துகொள்வது நல்லது. தற்போதைய மருத்துவத்துறை வளர்ச்சி முதுமையில் வாழ்நாளை அதிகரிப்பதற்கும், உடல் மற்றும் மனநல ஆரோக்கியத்துக்கும் உதவியாக இருக்கிறது.

தனது உடல் மற்றும் மனநிலையை உறுதியாக வைத்துக்கொள்பவர்கள் 70 வயதுக்குப் பிறகு மாரத்தானில் ஓடுபவர்களாகவும் இருக்கிறார்கள். எனவே, வாழ்க்கையை துணிவுடன் எதிர்கொள்வதற்கு எல்லா வயதினருக்கும் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் அவசியம். இவை அனைத்துக்கும் முதன்மையாக பெற்றோரும், பிள்ளைகளும் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்துகொண்டாலே, முதுமையிலும் இனிமையாக, மனநிறைவாக வாழலாம்.’’

- க.கதிரவன்

6 வார கால அவகாசத்திற்குள் மருத்துவ கல்லூரிகளில் நடத்தப்பட்ட சோதனை முடிவை வெளியிட வேண்டும்: இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவு

2018-07-05@ 00:16:04



புதுடெல்லி: மருத்துவ கல்லூரிகளில் நடத்தப்படும் சோதனையின் முடிவுகளை 6 வாரத்துக்குள் வெளியிட வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.மத்திய பிரதேச மாநிலம், போபாலில் உள்ள காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனை தொடர்பாக ஆண்டுதோறும் இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தி வரும் மதிப்பீடு அறிக்கையை கேட்டு தீபக் எஸ் மாராவி என்பவர் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டு மனு செய்தார். இதற்கான பதிலை அளிக்க இந்திய மருத்துவ கவுன்சில் மறுத்துவிட்டது. மேலும், மதிப்பீடு அறிக்கையை அனைவருக்கும் வழங்க முடியாது என்றும் தெரிவித்தது. இந்த முடிவை எதிர்த்து தீபக் மாராவி, மத்திய தகவல் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை பரிசீலித்த ஆணையர் யசோவர்தன் ஆசாத், அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதன் விவரம் வருமாறு: தகவல் ஆணைய சட்டப்பிரிவு 8ன்படி மருத்துவ கல்லூரி ஆய்வறிக்கை முடிவுகளை மருத்துவ கவுன்சில் மனுதாரருக்கு வழங்கியிருக்க வேண்டும். அதை வழங்காததற்கு மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி எந்தவித காரணத்தையும் சொல்ல முடியாது. தகவல் வழங்க விலக்கு பெற்ற பிரிவு 8(1)ஐ தவிர மற்ற தகவல்களை அவர் வழங்க மறுத்து இருப்பது சட்டத்தை அப்பட்டமாக மீறிய செயல்.

மேலும், வெளிப்படை தன்மையில் இருந்து மருத்துவ கல்லூரி மதிப்பீடு அறிக்கைகளை இந்திய மருத்துவ கவுன்சில் மறைத்து வைப்பது மருத்துவ கல்லூரி தரத்தை குறைக்கும் செயல். நிர்வாகத் தெளிவின்மைக்கு இங்கு இடமில்லை. அனைத்து நிர்வாக வழிகளிலும் ஊழலை எதிர்த்து போராட வேண்டிய நேரம் இது. எனவே, மருத்துவ கவுன்சில் அதன் இணையதளத்தில் மருத்துவ மதிப்பீட்டு அறிக்கையை வெளிப்படையாக வெளியிட வேண்டும். மருத்துவ மாணவர்கள், மருத்துவ கல்வி நிறுவனங்கள், அரசு உள்பட அனைத்து தரப்பினரும் தெளிவாக தெரிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு மருத்து நிறுவனங்கள் குறித்த அறிக்கையை, அந்த நிறுவனங்களில் ஆய்வு மற்றும் சோதனை நடத்தி முடிக்கப்பட்ட பிறகு 6 வார காலத்துக்குள் வெளியிட வேண்டும்.

ஏனெனில், மருத்துவ கல்வியை தற்போது ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம். அதற்கு ஒவ்வொரு மருத்துவ கல்லூரி தொடர்பான முழு அறிக்கை அவசியம். மதிப்பீடு அறிக்கையை நாடாளுமன்றம் கூட தர மறுப்பதில்லை. அப்படி இருக்கும்போது இந்திய மருத்துவ கவுன்சில் இதுபோன்ற அறிக்கையை வெளியிட ஏன் தயங்கியது என்று தெரியவில்லை. எனவே, இந்த ஆண்டு முதல் மருத்துவ கவுன்சில் சார்பில் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் சோதனை மற்றும் ஆய்வு தொடர்பான அறிக்கையை இந்திய மருத்துவ கவுன்சில் இணையதளத்தில் இன்னும் 6 வாரத்தில் வெளியிட உத்தரவிடுகிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அரசு பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் 180 நாள் லீவு: மனைவியை இழந்த ஆண்களுக்கும் பொருந்தும்

2018-07-05@ 00:29:46



மும்பை: குழந்தை பராமரிப்புக்காக பெண் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் 180 நாள் விடுமுறை கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது.மகாராஷ்டிரா அரசு குழந்தைகள் பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துள்ளது. இதற்காக பெண் அரசு ஊழியர்கள் மற்றும் மனைவியை இழந்த ஆண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய 180 நாள் விடுமுறை கொடுக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக இக்கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது அதற்கு அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. இத்தகவலை மாநில நிதியமைச்சர் சுதிர் முங்காந்திவர் தெரிவித்தார்.

தற்போது பெண்களுக்கு பிரசவ விடுமுறையாக 180 நாட்கள் வழங்கப்படுகிறது. இந்த விடுமுறை இரண்டு குழந்தைகளுக்கு பொருந்தும். தற்போது குழந்தை பராமரிப்புக்கும் விடுமுறை கொடுக்கப்பட்டு இருப்பதற்கு அரசு ஊழியர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.மனைவியை இழந்த ஆண் ஊழியர்களுக்கும் குழந்தை பராமரிப்புக்கு இந்த விடுமுறை எடுக்க முடியும். மத்திய அரசு பெண் ஊழியர்களுக்கு குழந்தை பராமரிப்புக்கு 2 ஆண்டுகள் விடுமுறை வழங்கப்படுகிறது.
சிவகங்கையில் ரசாயன பச்சை பட்டாணி

Added : ஜூலை 05, 2018 00:04



சிவகங்கை: சிவகங்கை வாரச்சந்தையில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய, ரசாயனம் கலந்த பச்சை பட்டாணி விற்கப்படுகிறது. நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின்கள் நிறைந்தது பச்சை பட்டாணி. ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும். கர்ப்பிணி, குழந்தைகளுக்கு சிறந்த உணவு. சிவகங்கை வாரச்சந்தையில் நேற்று தோல் உறித்த பட்டாணியை வியாபாரிகள் விற்பனை செய்தனர். அவை 'பச்சை பசேல்' என, இருந்தது. அவற்றை வாங்கி தண்ணீரில் ஊற வைத்தபோது தண்ணீர் பச்சை நிறமாக மாறியது. அதில் ரசாயனம் கலந்திருப்பது தெரியவந்தது.
சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: உலர் பட்டாணியை விட, பச்சை பட்டாணி விலை அதிகம். இதனால் உலர் பட்டாணியை பளிச்சென பச்சை நிறமாக தெரிவதற்கு 'மாலாசைட் கிரீன்' என்ற ரசாயனத்தை கலக்கின்றனர். இது தடை செய்யப்பட்ட ரசாயனம். இந்த ரசாயனம் கலந்த நீரில் உலர் பட்டாணியை முதல்நாளே ஊறவைத்து மறுநாள் பச்சை பட்டாணியாக விற்பனை செய்கின்றனர். இதை தொடர்ந்து உண்ணும்போது புற்றுநோய், மரபணு மாற்றம் போன்றவை ஏற்படும். மலட்டு தன்மையும் உண்டாகும். தோலுள்ள பட்டாணியை வாங்கி பயன்படுத்துவதே நல்லது, என்றார்.

NEWS TODAY 26.01.2026