Friday, July 6, 2018

MKU winds up course that was started with much fanfare 

Pon Vasanth B.A 

 
MADURAI, July 06, 2018 00:00 IST



Students of five-year M. Tech. anxious about their future



The five-year integrated M. Tech course which was being offered by the Centre for Film and Electronic Media Studies (CFEMS) in Madurai Kamaraj University is being wound up causing anxiety to students who are presently studying this course.

The M. Tech course, which had no precedence in the country was launched in 2012 under the initiative of the then Vice-Chancellor Kalyani Mathivanan.

More than Rs. ten crore worth equipment were procured. A preview theatre was built and Academy-award winning sound engineer Resul Pookutty came to inaugurate the recording studios.

After six years, two batches of students are yet to receive their degrees. Now the university has decided to stop offering the M. Tech. in Film and Electronic Studies course from this academic year, causing anxiety to the roughly 70 students presently studying in second to fifth year.

The university has decided to disband CFEMS and instead offer a two-year M. Sc. course in Film and Electronic Media through its School of Media Studies. However, admission to this course is unlikely to begin this year owing to delay in approvals, sources said.

Importantly, a proposal has been made to rent the expensive production and post-production infrastructure available at CFEMS to the film industry to generate revenue for the university, which has made the students even more agitated.

Speaking to The Hindu , a final year student said that it felt as if the university had abandoned them.

“It is an expensive course, costing us more than Rs. 50,000 a year. With the MKU itself in a confusion over whether the M. Tech. programme has proper recognition, we are worried about our future,” he said.

A fourth year student pointed out that the course was mentioned in the prospectus as a B. Tech. plus M. Tech programme.

“We were told that we can opt to leave the course after three years with just a B. Tech. degree. However, after joining, we realised that it was not the case,” he said.

Another final year student, showing pictures taken with his mobile phone, said that some expensive equipment, costing several lakhs, were infested with termites. “The equipment available here are suitable for professionally shooting a movie. But they are not maintained properly,” he said.

A senior faculty member said that by correcting the issues related to recognition of the M. Tech. programme and with state-of-the-art facilities available here, the course could be a unique opportunity for aspiring students from southern districts. “Some short films made by students have won awards at national level competitions,” he said. “If they are offering it as a two-year M. Sc programme, it will be more theory-oriented. Moreover, it will have a lot of similarities with the M. A and M. Sc programmes already offered by School of Media Studies,” he added.

When contacted, K. Karnamaharajan, Head of CFEMS, denied that there was any problem with recognition of the M. Tech course. “Two batches of students have not received their degrees because they did not apply for convocation. The students presently doing the course need not worry,” he said.

He said that the decision to stop the course was taken by MKU administration to bring uniformity in the courses it offered.

Denying that there was a proposal to ‘rent’ the available infrastructure, he said that it would instead be a ‘collaboration’ with the film industry to provide better exposure to students.
Fisheries varsity V-C contests complaint 

Special Correspondent 

 
CHENNAI, July 06, 2018 00:00 IST 


  S. Felix, Vice-Chancellor of Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University, has filed a writ petition in the Madras High Court challenging a government order issued by the Fisheries Department on May 9 appointing an enquiry officer to probe a “sexual harassment” complaint lodged against him by a faculty of the university.

Justice Satrughana Pujahari issued notice to the State government on the petition returnable by four weeks.

In his affidavit, the Vice-Chancellor claimed that the complaint lodged by the faculty concerned did not make out an allegation of sexual harassment and hence the appointment of the inquiry officer was completely unwarranted.

‘False complaint’

Stating that he was a stickler for work, who believed in making his subordinates perform their duties without any lapses, he said that a false complaint had been lodged against him at the instance of a former Registrar, against whom he had initiated action on the charge of having caused financial loss to the university.

He alleged that the government had refused to furnish a copy of the complaint lodged against him and it was only the inquiry officer Justice K. Venkataraman, a retired judge of the High Court, who was kind enough to provide him a copy.

Nevertheless, the government had erroneously ordered an inquiry under the Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal) Act of 2013, he said and urged the court to quash the G.O.
T.N. paves way for 2 private varsities 

Special Correspondent
Chennai, July 06, 2018 00:00 IST




Higher Education Minister K.P. Anbalagan.R. RaguR_Ragu

In a significant policy shift, the Tamil Nadu government on Thursday cleared the decks for establishing two private universities in the State.

Higher Education Minister K.P. Anbalagan introduced Bills in the Assembly, providing for the establishment of Shiv Nadar University and Sai University. Later, they were adopted.

The principal Opposition party, DMK, opposed the Shiv Nadar University Bill and the Sai University Bill, 2018, at the stage of introduction.

While Shiv Nadar University will be established by the SSN Trust, floated by industrialist Shiv Nadar, Sai University is the brainchild of NASSCOM founder-member and philanthropist K.V. Ramani. As per the provisions of the Bills, the universities will be self-financing institutions and will not make any demand for financial assistance from the government. They would be allowed to establish constituent colleges, regional centres, additional campuses and study centres.
Ola driver ‘kidnaps’ passenger 

Special Correspondent 

 
Bengaluru, July 06, 2018 00:00 IST


She was rescued by toll booth staff near the Kempegowda International Airport

A 25-year-old woman was allegedly kidnapped by the driver of a taxi she had booked on aggregator platform Ola on Thursday around 2 a.m.

The driver, Suresh, was arrested by the Chikkajala police, who said that the woman had booked the taxi from Banaswadi to the airport.

She told police that she was heading to Mumbai on work and had booked an Ola cab. As the cab approached the airport toll gate, Suresh changed lanes and began driving towards Hyderabad.

“When she started instructing him to go back towards the airport, she realised that he was inebriated. He refused to stop, misbehaved with her and told her to keep quiet,” said a police officer.

The woman had the presence of mind to alert staff at the toll booth on the highway. She started shouting for help, which caught the attention of toll booth staff who immediately came to her aid.

They prevented Suresh from driving away and helped her get out of the vehicle. She immediately alerted the police who arrested Suresh.

“He has been booked for kidnapping and driving under the influence of alcohol. Our initial probe has revealed that the car was registered on Ola by Suresh’s brother. We are waiting for Suresh to become sober so that we can question him,” the police officer added.

The woman alerted her family who came to pick her up from the toll booth.

In a statement to mediapersons, an Ola spokesperson said that the taxi has been removed from the platform. “We are deeply disturbed to learn about the incident. We are also engaging with the police to lend assistance in their ongoing investigations,” read the statement.

This is the second such incident in a little over a month where a woman on her way to the airport was harassed by a driver booked on the platform. On June 1, an Ola taxi driver was arrested for allegedly molesting a 26-year-old architect who was headed to the airport.
காற்றில் கரையாத நினைவுகள் 18: நட்பெனும் நிழலில்!

Published : 03 Jul 2018 08:56 IST

வெ. இறையன்பு






அன்று நட்பை வசிக்கும் இருப்பிடமும், படிக்கும் பள்ளியுமே தீர்மானித்தன. ஒரே பகுதியில் குடியிருப்பவர்கள் பெரும்பாலும் ஒரே பள்ளியில் படிப்பார்கள். அண்ணன்கள் இருவரும் ஒரே வகுப்பிலும், தம்பிகள் இருவரும் ஒரே வகுப்பிலும் படிக்க குடும்பங்கள் இரண்டும் நெருங்கிவிடும். அன்று பரீட்சை என்பது முதல்நாள் படிப்பு என்பதால் கூடிப் பேசவும், ஓடி ஆடவும் அவகாசம் இருந்தது.

நண்பர்களை விளையாட்டு என்கிற கண்ணுக்குத் தெரியாத கயிறே இணைத்தது. நன்றாகப் படிக்கிற மாணவனை நண்பன் எனச் சொல்வதைவிட, அதிகமாக கோல் அடிக்கிற மாணவனை நண்பன் எனச் சொல்வதே அன்று பெருமையாக இருந்தது.

ஆரம்பப் பள்ளியில் படிக்கும்போதே எங்களுக்கு அகலமான மைதானங்கள் தட்டில் வைத்துத் தரப்பட்டன. அதிகம் ஆக்கிரமிக்கப்படாத வீட்டுமனைகள் உள்ள பகுதி என்பதால் காலியிடங்களெல்லாம் கால்பந்து மைதானங்கள்; அரைகுறைக் கட்டிடங்கள் எல்லாம் கண்ணாமூச்சி விளையாட்டரங்கங்கள். எப்போதும் விளையாட்டு, பருவத்துக்கு ஏற்ப விளையாட்டு. பொங்கல் பண்டிகை சமயத்தில் கடைகளில் பம்பரம் வந்துவிடும். கோடைக் காலத்தில் கில்லி தாண்டல். அவ்வப்போது பச்சைக் குதிரை, சோடா மூடியை வட்டத்துக்குள் வைத்து சல்லியால் அடித்து வெற்றி பெறுவது என்று பணமே இல்லாத பலவித விளையாட்டுகள். பந்து மட்டும் இருந்தால் ஒருவருக்கொருவர் அடித்து விளையாடும் சூரப்பந்து. கொஞ்சம் வசதி இருந்தால் கட்டுமானச் செங்கல் ஸ்டம்ப்ஸ் ஆகும். விறகுக் கட்டைதான் பந்து அடிக்கும் மட்டை.

கால்சட்டையில் ‘தபால்பெட்டி’

அன்று மாவட்டம் முழுவதும் ஒன்றிரெண்டு பணக்காரப் பள்ளிகள் மட்டுமே. மற்றவற்றில் அனைவரும் சங்கமம். எனவே, ஏற்றத் தாழ்வற்ற நட்பு நிலவியது. என்னுடன் தொடக்கப் பள்ளியில் படித்த அன்வரும், அரவிந்தனும் நெருங்கிய நண்பர்கள். அரவிந்தனோ துணிக்கடை வைத்திருப்பவரின் மகன். அன்வரின் தந்தையோ மாட்டுவண்டி வைத்திருந்த எளிய மனிதர். எங்களுக்கு இடையே எந்த இடைவெளியும் நட்பில் இருந்தது இல்லை. சில மாணவர்களுக்கு கால்சட்டையில் கிழிசல் இருக்கும். மற்றவர் அதை ‘தபால்பெட்டி’ என்று கேலி செய்வார்கள். அந்த கால் சட்டையை அணிந்த மாணவனும் அதற்கு சிரித்துக்கொள்வான். அந்த நொடியோடு அந்தக் கேலி மறைந்துவிடும்.

ஏழை மாணவர்களே பள்ளிக்குக் காசு கொண்டு வருவார்கள். வீட்டில் கூழ் குடித்தாலும் பள்ளியில் விருப்பமானதை வாங்கித் தின்னட்டும் என்பதில் அவர்களின் பெற்றோர் குறியாக இருந்தனர். அம்மாணவர்கள் வாங்குகிற தேன்மிட்டாயையும், சவ்வு மிட்டாயையும் அத்தனை நண்பர்களுக்கும் பகிர்ந்து தருவார்கள்.

கமர்கட்டை சட்டை நுனியில் மடித்து ‘காக்காய் கடி’ கடித்துத் தருவார்கள். எச்சிலால் நோய் வரும் என எடுத்துச் சொல்ல ஆளும் இல்லை; அதை நினைத்துப் பார்க்கும் மனமும் அப்போது இல்லை. எந்த மாணவனுக்காவது இருமல் வந்தால் நண்பன் சென்று ‘சளி மிட்டாய்’ என்ற ஒன்றை வாங்கி வந்து தருவான். அதோடு இருமல் நின்றுவிடும்.

நண்பர்களுக்குள் சண்டைகளும் வரும். ஆனால், அது வீடுவரை போகாது. எந்த மாணவனும் சண்டைபோட்டு அடி வாங்கியதை புகாராகச் சொன்னது இல்லை. அடுத்த நாளே சண்டைபோட்ட மாணவர் இருவரும் சமமாக அமர்ந்து கதைகள் பேசி சிரித்திருப்பார்கள்.

மாணவர் திரைப்படம்

ஆண்டு இறுதியில் தேர்ச்சி பெற்றது தெரிந்ததும் பழைய நோட்டுகளை எல்லாம் எடுத்துச் சென்று எடைக்குப் போட்டு காசு பெறுவது வழக்கம். அதில் சக மாணவர்களுக்குத் தின்பண்டம் வாங்கித் தருவதும் உண்டு. ‘மாணவர் திரைப்படம்’ என்று ஆண்டுக்கொரு முறை திரையிடப்படும். பள்ளிக்கூடமே அந்தத் திரைப்படத்துக்கு எங்களை அழைத்துச் செல்லும். பள்ளிப் போட்டிகளில் யார் முதல் பரிசு பெற்றாலும் அனைத்து மாணவர்களும் ஆசையாக கைத் தட்டுவார்கள். இன்று பள்ளிகளில் பரிசளிக்கும்போது கைத் தட்ட ஆளே இல்லை. அடிக்கடி கைத் தட்டும்படி அறிவிப்புகள் மட்டுமே ஒலிக்கின்றன. அடுக்கடுக்காகப் பரிசுகள் தந்தால் கைத் தட்டுவது எப்படி இயல்பாய் நிகழும்.

நாங்கள் உயர்நிலைப் பள்ளிக்கு வரும்போது ஆங்கில ஊடகத்தில் தொடக்கத்தில் இருந்து படித்த சில மாணவர்கள் வந்து சேர்வார்கள். அவர்கள் பேசுகிற நுனிநாக்கு ஆங்கிலத்தைக் கண்டு நாங்கள் தாழ்வு மனப்பான்மையில் தவழ்வது உண்டு. ஆனால், ஓரிரு மாதங்களில் அவர்களையும் எங்களைப் போலவே தமிழில் பேச தயார் செய்துவிடுவோம். மாலை நேரத்தில் மைதானத்தில் அமர்ந்து குழுவாய்ச் சேர்ந்து படிக்கிற வகுப்புகள் அன்றைக்கு இருந்தன.

இரும்புக் கை மாயாவி

என்னுடன் படித்த மாணவர் ஒருவர், திலீப் என்று பெயர். மூக்குப்பொடி கம்பெனிக்குச் சொந்தக்காரர். அவர் கொண்டுவந்த மூக்குப் பொடியை மாணவர் ஒருவர் வாங்கி மற்றவர் மூக்குகளில் திணித்து ஏ, பி, சி, டி, இ, எஃப், ஜி வரை சொல்லி அவர்கள் ‘எச்’ என்று தும்முவதைக் கண்டு சிரிப்பது உண்டு. ஓரிரு மாணவர் வாங்கும் ‘இரும்புக் கை மாயாவி’, ‘பெய்ரூட்டில் ஜானி’, ‘மஞ்சள் பூ மர்மம்’ போன்ற காமிக்ஸ் புத்தகங்கள் வகுப்பறையையே வலம் வரும்.

ஆண்டு முழுவதும் சீருடை கட்டாயம். தீபாவளிக்கு மறுநாள் மட்டும் வண்ண உடையில் வரலாம் என்ற விதித் தளர்வு உண்டு. அப்போது கிறிஸ்துமஸுக்கு வாங்கிய புதுத் துணியையும், ரம்ஜானுக்கு வாங்கிய புதுச் சட்டையையும் அணிந்துகொண்டு அந்த மாணவர்கள் வருவது உண்டு.

கல்லூரிக்கு படிக்க வரும்போது ‘நட்பு’ என்பது அன்பினால் மட்டுமே அன்று நிகழ்ந்தது. பலதரப்பட்ட பொருளாதாரப் பின்னணியில் இருந்து மாணவர்கள் கல்லூரியில் சேர்வார்கள். அவர்கள் இணக்கத்தை பணம், காசு தீர்மானிக்காது. ஏழை மாணவன் ஒருவனுக்கு விடுதிக் கட்டணம் கட்ட தாமதமானால் மற்றொரு மாணவன் மனம் உவந்து கட்டுவான். சுற்றுலாச் செல்லும் இடங்களில் யாராவது பணத்தைத் தொலைத்துவிட்டால், எல்லோரும் கொஞ்சம் பங்களித்து அந்த மாணவனுக்கு செலவுக்குக் கொடுப்பார்கள். எந்த மாணவனாவது விபத்தில் சிக்கினால் ஓடிச் சென்று ரத்தம் கொடுக்கும் நண்பர்கள் இருந்தார்கள்.

இன்றும் எங்கள் பள்ளியில் படித்து சேலத்திலேயே பணியாற்றும் மாணவர்கள் அன்று இருந்ததைப் போலவே இன்றும் நெருக்கமாக இருக்கிறார்கள். அடிக்கடி சந்திக்கிறார்கள். ஒருவருக்கொருவர் ஒத்தாசை செய்துகொள்கிறார்கள். யாருக்கேனும் பிரச்சினை என்றால் ஓடிச்சென்று உதவுகிறார்கள். சின்ன வயதில் பள்ளியில் இட்ட நட்பு உரம் இன்று வரை கனிகளைத் தந்து பசியாற்றுகிறது.

‘என்னை மறந்துவிடாதே...’

என்னுடன் ஐந்தாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்த மாணவன் ராஜசேகர். உயர்நிலைப் பள்ளியில் வேறு பிரிவுக்குச் சென்றுவிட்டார். ஒரு நாள் மாலையில் பள்ளி திரும்பும்போது ‘அன்பு’ என யாரோ கூப்பிட திரும்பிப் பார்த்தேன். கையில் மண்வெட்டியுடன் ராஜசேகர். ‘‘அப்பா இறந்துவிட்டார். படிக்க இயலாதச் சூழல். கொத்துவேலைக்கு வந்துவிட்டேன். என்னை மறந்துவிடாதே’’ என்றார். அன்று இரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை. இப்போது எங்கிருக்கிறாரோ தெரியவில்லை.

என்னோடு ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்த நண்பர்கள் உண்டு. அன்று அமைதியாக இருந்த ஹரன் இன்று ‘பாரதியார்’ நாடகத்தில் சுப்பிரமணிய சிவா பாத்திரத்தில் கலக்குகிறார். உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கும் எங்கள் பள்ளி நட்புகளை ‘புலனம்’ (வாட்ஸ் அப்) என்கிற ஒற்றைச் சரடு இணைத்துவிட்டது. அவர்கள் ஒருமையில் என்னை அழைத்தாலும் என்னால் அவர்களை அப்படி அழைக்க முடியவில்லை. ஒரே இடத்தில் ஓடினாலும் இறங்கும்போது இன்னொரு வெள்ளமாக இருக்கும் நதிகள் அவர்கள் என்பதால்.

இன்றோ பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாவட்டரீதியாகவும், சாதிரீதியாகவும் நட்பு எல்லைகள் சில இடங்களில் குறுகிவிட்டன.

பிரிவுகளைத் தாண்டிய அன்றைய நட்பில் எதேச்சையாக அறிமுகமாகி, நாகையில் நான் சார் ஆட்சியராகப் பணிபுரிந்தபோது என்னுடன் தங்கிப் படித்த சுரேஷ் என்கிற நண்பர், துணை ஆட்சியராகத் தேர்வு பெற்றார். திருவில்லிப்புத்தூருக்கு அவர் திருமணத்துக்குச் சென்றிருந்த நான், பால்கோவா வாங்கி வந்தேன். அந்தப் பால்கோவா தீர்வதற்குள் அவருடைய மரணம் சம்பவித்து விட்டது.

ஒவ்வொரு நல்ல நண்பரின் எண்ணையும் அலைபேசியில் இருந்து அகற்றுவதைவிடப் பெரிய சோகம் எதுவுமில்லை.

- நினைவுகள் படரும்...
எழும்பூர் ரயில் நிலையத்தில் சான்றிதழ்களை பறிகொடுத்த மாணவரை மருத்துவ கலந்தாய்வுக்கு அனுமதிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Published : 05 Jul 2018 09:20 IST

சென்னை



பூபதிராஜா

சான்றிதழ்களை பறிகொடுத்த மாணவரை மருத்துவ கலந்தாய்வுக்கு அனுமதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்தவர் மாணவர் ஜி.பூபதி ராஜா. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை மாணவரான இவர் பிளஸ் 2 தேர்வில் 1,114 மதிப்பெண்ணும், நீட் தேர்வில் 236 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார். தந்தை முன்னாள் ராணுவ வீரர் என்பதால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு முன் னாள் ராணுவ வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் விண்ணப்பித்து இருந்தார்.

கடந்த ஜூலை 1-ம் தேதி சென்னையில் தொடங்கிய கலந்தாய்வில் பங்கேற்க அவர், தனது அசல் மதிப்பெண் சான்றிதழ்களுடன், மாமா கணேசனை அழைத்துக்கொண்டு அன்றைய தினம் அதிகாலை எழும்பூர் ரயில் நிலையம் வந்துள்ளார். அப் போது மர்மநபர்கள் பூபதிராஜாவின் சான்றிதழ்கள் இருந்த பையைத் திருடிச் சென்றனர்.

அந்தப்பையில் தனது தந்தை முன்னாள் ராணுவ வீரர் என்பதற்கான சான்று மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், நீட் மதிப்பெண் சான்றிதழ் உள்ளி்ட்டவை பறிபோனதால் இதுகுறித்து போலீஸாரிடம் முறை யி்ட்டு பூபதிராஜா அழுதுள்ளார்.

இந்த விவரத்தை கலந்தாய்வில் இருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தும் அவர்கள் பூபதிராஜாவை கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கவில்லை. இதுதொடர்பாக ‘இந்து தமிழ்’ உள்ளிட்ட நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன. இதையடுத்து இந்த விவரம் நேற்று மாலை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்யநாதனின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதையடுத்து நீதிபதி எஸ்.வைத்யநாதன், ‘‘ஏழை மாணவரான பூபதிராஜாவை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்’’ என அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணுக்கு வாய்மொழியாக உத்தரவிட்டார். இதுதொடர்பாக அரசின் விளக்கத்தை கேட்டு தெரிவி்க்கவும் உத்தரவிட்டார்.

கல்விக் கடன் வாராக்கடனாகலாமா?

By எஸ். ரவி | Published on : 06th July 2018 02:26 AM |


வங்கிகள் கல்விக்கடனை அள்ளிவீசும் காலம் இது. "கடன் வாங்கலையோ கடன்' என்று தெருவில் கூவி விற்காத குறையாக வங்கிகள் நம்மை அழைக்கின்றன. பத்தாம் வகுப்பு தேர்வானவர்கள் ஐ.டி.ஐ. மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் சேர கல்விக்கடன் பெறலாம். அதே போன்று, நான்கு ஆண்டு கால பொறியியல்/ தொழில்நுட்பம் (பி.ஈ/ பி.டெக்.), ஐந்து ஆண்டு கால மருத்துவப் படிப்பு (எம்.பி.பி.எஸ்.) படிக்கவும் கல்விக்கடன் வழங்கப்படும். மூன்று ஆண்டு கால பி.ஏ., பி.எஸ்சி. பட்டப் படிப்புகள், பட்டயக் கணக்காளர் படிப்பு (சி.ஏ.) இவற்றுக்கும் கடன் பெற வழி உண்டு.
ஒட்டுமொத்தமாக அனைத்து வங்கிகளையும் நிர்வகிக்கும் Indian Bank's Association (IBA), கல்விக்கடனுக்கான விதிமுறைகளை வகுத்துள்ளது. அவ்விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டே அனைத்து வங்கிகளும் செயலாற்றுகின்றன. இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளில் சேர அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கல்விக்கடன் பெற வாய்ப்புள்ளது.

வங்கிக் கடனுக்கான வட்டி விகிதம் வங்கிக்கு வங்கி மாறுபடும். தற்போது பாரத ஸ்டேட் வங்கி 8.30 சதவீத வட்டியில் கல்விக்கடன் வழங்குகிறது. இதுதான் மிகக் குறைந்த விகிதம். அதாவது, ரூ.100 கடன் தொகைக்கு ஓராண்டுக்கு ரூ.8.50 வட்டி கட்ட வேண்டும். வங்கிக்கு வங்கி வட்டி சதவீத வேறுபாடு அதிகபட்சம் 1.5 சதவீதம் தான் இருக்கும். மாணவிகள், பிற்படுத்தப்பட்ட சமூக மாணவ- மாணவியர், மாற்றுத் திறனாளிகள் போன்ற பிரிவினருக்கு வட்டியில் சலுகைகளை பெரும்பான்மையான வங்கிகள் அளிக்கின்றன. புகழ்பெற்ற கல்வி நிலையங்களில் (ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்., ஐ.ஐ.எம். போன்ற கல்வி நிறுவனங்கள்) பயில்பவர்களுக்கு சில வங்கிகள் வட்டி விகிதத்தில் சலுகை தருகின்றன. உதாரணமாக, இந்தியன் வங்கி இத்தகைய மாணவர்களுக்கு தற்போது 9.95 சதவீதத்தில் கடன் தருகிறது. MCLR எனப்படும் குறைந்தபட்ச வட்டி விகிதத்தைக் கவனத்தில் கொண்டு, சுமார் 1.1 சதவீதம் அதிகமாக லாபத்தை ஈட்டும் வண்ணம், பெரும்பாலான வங்கிகள் வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்கின்றன.

ரூ.4 லட்சத்திற்குள் கடன் பெற வேண்டுமானால் வீட்டுமனைப் பத்திரம், ஜாமீன் போன்ற எதுவும் தேவையில்லை. இதை Collateral free loan என்று சொல்வதுண்டு. ரூ.4 லட்சத்துக்கு மேல் ரூ.7.5 லட்சம் வரை கடன் பெறுவதாயின், ஒரு மூன்றாம் நபரின் உத்தரவாதம் தேவைப்படும். அதற்கும் மேல் கடன் தொகை பெற வேண்டுமானால் காலிமனை, வீட்டுமனை அல்லது வேறு ஏதாவது ஆவணம் அடமானமாக தேவைப்படும்.

மொத்த படிப்புச் செலவு என்பது கற்பிக்கும் தொகை (Tuition fees), போக்குவரத்து தொகை (Transport fees), விடுதி தொகை (Hostel fees), திட்ட செயல்முறை தொகை (Project fees), தேர்வு மற்றும் புத்தக செலவு (Exam & Book fees)- இவையெல்லாம் அடங்கியவை. கட்டடத் தொகை, விரிவாக்கத் தொகை (Development fees), நன்கொடை (Donation) போன்றவை கல்விக்கடனில் அடங்க வாய்ப்பில்லை. இந்த மொத்த செலவுத் தொகையை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். மாணவருக்காக பெற்றோர் தங்களது சேமிப்பிலிருந்து தரும் பணம் (அதாவது முன்பணம் / Margin). அடுத்த பகுதி, வங்கிக் கடன். மொத்த செலவுத் தொகையில் பெற்றோர் பங்கு 10% என்றால், வங்கிக் கடன் 90% அமையும். கடன் தொகை நான்கு லட்சமோ, அதற்குக் குறைவாகவோ அமைந்தால் முன்பணம், அதாவது பெற்றோரின் பங்கு எதுவுமே தேவையில்லை. மொத்தத் தொகையையுமே வங்கி கடனாகத் தந்துவிடும்.
மருத்துவம்/ பொறியியல்/ தொழில்நுட்பம் போன்ற பட்டப்படிப்புகளுக்கு வட்டிச் சலுகை உண்டு. மத்திய அரசின் அறிவிப்பின்படி, பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், இச்சலுகையைப் பெறலாம். கடன் பெற்றது முதல் திரும்ப செலுத்தும் ஆண்டு வரையிலான முழு வட்டித்தொகையையும் கடன் அளிக்கும் வங்கிக்கு மத்திய அரசு தந்துவிடும். அதாவது, கடனை திரும்ப செலுத்தத் தொடங்கும் வரை (EMI Starting period) வட்டித் தொகையை மாணவர்/ மாணவி செலுத்த வேண்டிய அவசியமில்லை. இதைக் கண்காணிக்கும் பொறுப்பை கனரா வங்கி ஏற்றுள்ளது.

பொதுவாக, முதல் தவணை கடன் தொகை பெற்றது முதல் மொத்த கடனையும் 10 ஆண்டுகளுக்குள் முழுமையாக அடைத்துவிடும்படி வங்கிகள் திட்டமிடுகின்றன. சில வங்கிகள், பெருங்கடனாளிகளுக்கு (ரூ.7.5 லட்சத்துக்கும் மேலாக பெற்றவர்கள்) கால அவகாசத்தை 15 ஆண்டுகளுக்குக் கூட நீட்டிப்பதுண்டு. படிப்பு முடித்தவுடன், வேலையில் அமர்ந்த பின், அதிகபட்சமாக 6 மாதங்களுக்குள் வங்கிக் கடனைத் திரும்ப செலுத்த தொடங்க வேண்டும். படிப்பு முடிந்தவுடன், வேலை கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், அதிகபட்சமாக ஓராண்டு காலத்திற்குள் கடன் தொகையை சட்டப்படி திரும்ப செலுத்த தொடங்க வேண்டும்.
வருமான வரி சட்டம் 80 இ பிரிவின் கீழ், கல்விக்கடன் தொகையின் வட்டித்தொகைக்கு வரிவிலக்கு உண்டு. அதாவது, மொத்த ஆண்டு வருமானத்திலிருந்து கல்விக்கடனுக்கான வட்டித்தொகையைக் கழித்துவிட்டு, மீதி தொகைக்கு வருமான வரி செலுத்த வேண்டும். ஆனால், கடன் பெற்ற முதல் எட்டு ஆண்டுகள் வரையே இந்த வரிச்சலுகை அனுமதிக்கப்படும்.

CIBIL என்ற அமைப்பு, கடன் பெறுவோருக்கு மதிப்பெண் தரும் நிறுவனம். கடன் பெறுவோரின் எல்லா விவரங்களையும் - முக்கியமாக வருமான வரி நிரந்தரக் கணக்கு எண் (PAN) - தருவதன் மூலமாக CIBIL, கடன் பெறுவோருக்கான மதிப்பெண்களை வழங்கும். அதிக மதிப்பெண்களைப் பெற்றால் (சாதாரண தேர்வுகளின் சட்டவிதிப்படி) நல்ல நேர்மையான கடனாளி என்று பொருள். 750-க்கு மேல் மதிப்பெண் பெற்ற வாடிக்கையாளரையே வங்கிகள் கடனுக்காகப் பரிசீலனை செய்கின்றன. மதிப்பெண் பரிசீலனைக்கான தொகையாக மிகக் குறைவாக (ரூ.250 ) சில வங்கிகள் கடனாளிகளிடமிருந்து வசூல் செய்வதுண்டு. இதில் தற்போது ஒரு நல்ல செய்தி. www.cibil.com என்ற இணையதளத்தில் வாடிக்கையாளர்கள் இலவசமாகவே தமது மதிப்பெண்களை பெற்றுக்கொள்ளலாம். இங்கே ஓர் எச்சரிக்கை தேவை. ஒரே வாடிக்கையாளர் வெவ்வேறு வங்கிகளில் அடிக்கடி மதிப்பெண் பெற முயற்சி செய்தால், அவருக்கு பண நெருக்கடி என்ற எண்ணம் ஏற்படக்கூடும். எனவே, அப்படி முயற்சி செய்வதால் cibil மதிப்பெண் குறைய வாய்ப்புண்டு.

உத்தரவாத ஆவணம் (Collateral free), அதாவது, சொத்து பத்திரமில்லாமல் ரூ.4 லட்சம் வரை கடன் தரலாம் என்பது தற்போது அனைவரும் அறிந்ததே. இதற்கு வித்திட்டது 2002-ஆம் ஆண்டில் ஆர்.ஜி.காமத் தலைமையில் நிறுவப்பட்ட குழு. பிறகு, வெவ்வேறு வங்கிகள் தங்கள் விருப்பப்படி கற்பிக்கும் தொகை, விடுதியில் தங்கும் தொகை, பயிற்சி தொகை, புத்தக தொகை என்ற முறைப்படி தனித்தனி உச்சவரம்பை ஏற்படுத்த, சில முரண்பாடுகள் உருவாயின. அதை சரிசெய்ய பாலசுப்ரமணியன் என்பவரின் தலைமையில் குழு ஏற்படுத்தப்பட்டு அது ஓர் அறிக்கை வழங்கியது. தமிழ்நாட்டில் பெரும்பாலான வங்கிகள் அந்தக் குழுவின் அறிக்கையையே பின்பற்றுகின்றன.

கல்விக்கடன் பெறுவதற்கு முன்னால் மாணவ-மாணவியர் பெயரில் காப்பீடு எடுப்பது அவசியம். அப்படி செய்வதால், எதிர்பாராத விதமாக மாணவர் மரணமடைந்து விட்டால், காப்பீட்டு நிறுவனம் வங்கிக்குக் கடனை திருப்பி செலுத்திவிடும். காப்பீடுக்கு உரிய தவணைத் தொகையைக் கூட கடன் தொகையில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

www.vidyalakshmi.co.in என்ற இணையதளம் மூலமாக மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான வங்கிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஒரு வாடிக்கையாளர் வங்கியில் வாங்கிய கடனை கடன் தொகையைத் திரும்ப செலுத்தாமல் போனால் அது வாராக்கடனாகிறது. பொதுத்துறை வங்கிகளில் சென்ற நிதியாண்டின் (2017 மார்ச்) கல்விக்கடன் நிலுவைத்தொகை ரூ.67,608 கோடி. அதில் வாராக்கடன் ரூ.5,192 கோடி. எனவே, தாங்கள் கொடுக்கும் கடன் வாராக்கடனாகுமோ என்ற அச்சத்தினால் பல வங்கிகள் கடன் தரத் தயங்குகின்றன. இதில் தவறேதும் இல்லை. மாணவர்கள் தாங்கள் வாங்கிய கடனை எப்படியும் திரும்ப செலுத்தி விட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட வேண்டும். "கடன் தள்ளுபடியாகும்', "இலவசமாகக் கிடைக்க வழி என்ன?' போன்ற சபலங்களுக்கு ஆளாகக் கூடாது. ஆனால், அரசியல் கட்சிகள் இலவசங்களைச் சொல்லி விளம்பரம் தேடி, ஆட்சியைப் பிடிக்க முயலுகின்றன. இதனால், திரும்ப செலுத்தக் கூடிய பொருளாதார ரீதியில் வசதி படைத்த மாணவர்கள் கூட வேண்டுமென்றே திரும்ப செலுத்தாமல், அதை "வாராக்கடன்' என்ற அவப்பெயருக்குத் தள்ளுகின்றனர். அப்படி செய்தால் வட்டியிலும் அசலிலும் தள்ளுபடி பெறலாம் என நினைக்கின்றனர். இந்நினைப்பு மாற உண்மையைப் பேசக் கூடிய அரசியல் தலைவர்கள் தேவை! அதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லையே!

கட்டுரையாளர்:
வங்கி அதிகாரி (ஓய்வு).

NEWS TODAY 26.01.2026