Friday, July 6, 2018


I-T department knocks civil supplies’ door as ICDS supplier probed

I-T department sources said the probe was related to evasion of tax by floating a large number of shell companies.
 
Published: 06th July 2018 04:55 AM | Last Updated: 06th July 2018 04:55 AM By Express News Service

CHENNAI: Tamil Nadu Civil Supplies Corporation Managing Director M Sudha Devi was quizzed by the Income Tax department on Thursday even as I-T sleuths conducted simultaneous searches on the premises of Tiruchengode-based Christy Friedgrams Industry (CFI), a food processing company closely associated with implementation of the Integrated Child Development Services (ICDS) scheme.

I-T department sources said the probe was related to evasion of tax by floating a large number of shell companies. The company supplies nutritious food to 563 anganwadis in the State. According to its website, it started operations a few years after the first ICDS scheme was announced in TN in 1982.A top income tax official said the Managing Director of the State civil supplies corporation was quizzed on any links to the tax evasion. “There were no raids at her premises in All India Service quarters located at Nerkundram. It was only investigation,” said the official.

Besides 53 premises of CFI, officials are also conducting searches at 17 premises belonging to Agni Estates as it was found that the real estate firm had common transactions with CFI and had floated shell companies.Overall 70 premises across the State belonging to CFI and Agni Estates were raided, of which 40 are located in Chennai. Raids were also conducted in Tiruchengode in Namakkal district, Coimbatore and Nammakal.

CHRISTY Friedgrams Industry, the Tiruchengode-based company, had been under the I-T scanner since 2016.Officials said that searches were also being done in three places in Karnataka, which include Nelamangala, Davangere and Gulbarga. The firm had courted controversy in 2012 over an agreement with Karnataka’s Women and Child department which was later cancelled for supply of substandard food to anganwadis under the ICDS scheme.
Tamil Nadu: Pandemonium on Day V of medical counselling

OC, BC seats fill up by noon; BDS seats in self-financing colleges left.
 
Published: 06th July 2018 05:25 AM | Last Updated: 06th July 2018 05:25 AM |


By Express News Service

CHENNAI : The announcement of the selection committee of the Directorate of Medical Education on Thursday that there were no vacancies in OC and BC categories in government medical colleges, self-financing colleges and Raja Muthiah Medical College and also government dental colleges has caused confusion among students and parents waiting outside the venue where counselling for MBBS and BDS courses are being held.

The seats in OC and BC category were filled up and only BDS seats in self-financing colleges were there around noon. The selection committee officials asked the candidates who were not willing to join BDS in self-financing colleges to leave. Over 1,500 candidates were called for the counselling. The candidates and parents who were disappointed after long hours of waiting entered into an argument. Later the officials clarified and asked them to get wait-listed and leave.

CLEAN CHIT TO TN 2ND RANK HOLDER


The selection committee on Thursday called R Raj Chendur Abhishek, second rank candidate in the State rank list, allegedly after the committee heard that the student had applied for medical seat in Andhra Pradesh also. Raj Chendur, native of Dharmapuri in TN, had studied class XI and XII in Andhra Pradesh. “We called him for second verification as we received news that the student has applied in Andhra Pradesh also. But, after verification, it was turned to be false,” said Dr G Selvarajan, secretary, selection committee. Raj Chendur secured 656 marks in NEET and got seat in Madras Medical College.

‘all cmc seats come under managenment quota’
The selection committee officials said that all 100 seats in Christian Medical College, Vellore would be filled under management quota. The college did not surrender any seats to the government. “They will take part in the first phase counselling itself. The first phase of counselling will end on Saturday,” said a senior official of the selection committee.
Diwali, online bookings make Pandiyan Express tickets dearer

The sleeper class waiting-list of the Pandiyan Express (Chennai-Madurai) touched 1,058, while the waiting list of the Cheran Express (Chennai-Coimbatore) reached 639.

 
Published: 06th July 2018 04:46 AM | Last Updated: 06th July 


2018 04:46 AM |
  By Express News Service

CHENNAI: Pandiyan Express, a flagship train of Madurai, has become one of the much sought-after trains for the Diwali festival this year, with the waiting list touching 1,058 for sleeper class reservation.


On Thursday, as soon as advance reservation commenced around 8 am for travelling for Deepavali festival on November 2, tickets sold out in less than five minutes. Train ticket demand for the Chennai-Madurai, Chennai-Tiruchy, Chennai-Coimbatore, Chennai-Tirupur and Chennai-Erode sections remained high.

The sleeper class waiting-list of the Pandiyan Express (Chennai-Madurai) touched 1,058, while the waiting list of the Cheran Express (Chennai-Coimbatore) reached 639. Similarly, the Chennai-Coimbatore Nilagiri Express, Chennai-Erode Yercaud Express, Chennai-Tiruchy Rockfort Express also remained most preferred trains among passengers.

The sleeper berth waiting lists for the Nilgiri Express, Yercaud Express and Rockfort Express closed at 365, 487 and 276 respectively.Each train has waiting list limits for sleeper class somewhere between 150 and 250. Once waiting lists exceeds, ticket bookings will automatically get blocked. However, due to festival demands, the IRCTC has increased the waiting list limit for many trains.


The unforeseen demand for the Pandiyan Express and other trains is attributed to upgraded IRCTC website and the provisions to forecast confirmation probability.

“The upgraded website has reduced the ticket booking time. It also has a provision to forecast the probability of getting confirmed tickets. For upto 200 and 250 sleeper waiting lists, the IRCTC predicted 45 to 60 per cent chances for RAC ticket. As for the Pandiyan Express, for 700 waiting lists the portal predicted confirmation chances at 40 per cent,” said S Balamurana, a travel agent in Chennai.Earlier, many passengers who booked their tickets through counters after spending several hours were disappointed as many they got wait-listed tickets.

கல்வி வளாகத்தில் அத்துமீறினால்... - உயர்கல்வித் துறை கொண்டுவரும் கடுமையான அரசாணை

ஞா. சக்திவேல் முருகன்

உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தைத் தொடர்ந்து, கல்வி நிறுவனங்களில் அத்துமீறுபவர்களுக்குத் தகுந்த பாடம் கற்பிக்கும் வகையில் புதிய விதிமுறைகளை வகுத்திருக்கிறது உயர்கல்வித் துறை.




உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தைத் தொடர்ந்து, கல்வி நிறுவனங்களில் அத்துமீறுபவர்களுக்குத் தகுந்த பாடம் கற்பிக்கும் வகையில், புதிய விதிமுறைகளை வகுத்திருக்கிறது உயர்கல்வித் துறை.

கடந்த ஏப்ரல் மாதத்தில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியின் உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி, இளநிலைப் பட்டப்படிப்பு மாணவிகளிடம் மதுரை பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்காகப் பரிந்துபேசிய விவகாரம், உயர்கல்வி நிறுவனங்களை அதிரவைத்தது. இதையடுத்து, கல்வித்துறையில் இருப்பவர்கள் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மாணவர்கள், உடன் பணியாற்றும் பேராசிரியர்கள், பேராசிரியைகள் அல்லது இதர பணியாளர்களிடம் அத்துமீறினால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

அத்துமீறுபவர்கள்மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கான அரசாணையை, தமிழக உயர்கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ளது. இதில், `கல்வி வளாகங்களில் எந்தவிதமான பயமும் இல்லாமல் செயல்படவேண்டியது அவசியம். கல்வி வளாகத்தில் மற்றவர்களுக்குரிய மதிப்பும் மரியாதையும் வழங்க வேண்டும். எந்த வகையான அத்துமீறலும் இருக்கக் கூடாது. கல்வி வளாகங்களில் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவவும், பாதிப்பை ஏற்படுத்துபவர்களுக்கு சட்டப்படியான தண்டனை வழங்கவும் உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிய வரைமுறையை தமிழகப் பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகள், அனைத்து தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், தன்னாட்சிக் கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள், பயிற்சி மையங்கள், படிப்பு மையங்கள், தொலைதூரக் கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் கடைப்பிடிக்க வேண்டும்.

அத்துமீறல்கள் என்னென்ன?

ஏற்றுக்கொள்ள முடியாத அல்லது கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் தவறான நடத்தைகள் அனைத்தையுமே அத்துமீறல்களாகவே எடுத்துக்கொள்ளப்படும். தரம் தாழ்த்தல், சிறுமைப்படுத்தல், அவமானப்படுத்தல், ஒருவரைத் தாக்கும் வகையில் தொடர்ந்து கருத்து தெரிவித்தல் போன்றவையும் அத்துமீறல்களாகவே கருதப்படும். இவை தவிர மிரட்டல், வெளிப்படையான மற்றும் மறைமுக அச்சுறுத்தல்கள், உடல்ரீதியான துஷ்பிரயோகம், கடிதம், மின்னணு மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஆட்சேபிக்கக்கூடிய வகையில் கருத்துகளைப் பரப்புதல் போன்ற செயல்களும் கண்டிக்கத்தவை.
 

உயர் அதிகாரிகளுக்கு அல்லது உயர் நிறுவனங்களுக்கு அனுப்பப்படும் கடிதங்களை அனுப்பத் தாமதப்படுத்துவது, அனுப்ப மறுப்பது, பணம் அல்லது இதர வகையான அன்பளிப்புகளை எதிர்பார்ப்பது, ஆராய்ச்சி (எம்.ஃபில்/பி.ஹெச்டி) படிப்புக்கு மாணவர்கள் பதிவுசெய்யும்போது ஆராய்ச்சி வழிகாட்டலுக்கும், தேர்வு மற்றும் ஆராய்ச்சி முடிவுகளை மதிப்பிடுதலுக்கும் பரிசுகள் மற்றும் வெகுமதிகளைப் பெறுவது, வாய்மொழித் தேர்வுக்காக வருபவருக்கு செலவுசெய்யச் சொல்வது, பயணச் செலவுகளை ஏற்றுக்கொள்ளச் சொல்வது, கல்விசாராத பணிகளைச் செய்யச்சொல்வது, பணிநேரம் அல்லாத சமயத்தில் வேலைசெய்யச் சொல்வது, விருப்பமில்லாமல் வேலைசெய்யச் சொல்வது, மாணவர்கள், இதர ஆசிரியர்கள், குறிப்பாகப் பெண் ஆசிரியர்கள், மாணவிகளைக் கட்டாயத்தின்பேரில் களப்பணி மற்றும் இதர விழாவுக்கு அழைத்துச்செல்வது போன்றவையுமே அத்துமீறல்கள்தான்.

மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், திட்டப்பணியாளர்கள், பணியாளர்களுக்கு முறையான வழிமுறைகளைக் கடைப்பிடிக்காமல், ஒருவருக்கு சாதகமான வகையில் நடந்துகொள்ளுதலும், எதிர்காலத்தில் வளர்ச்சிக்குத் தடங்கல் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதும், கௌரவத்தைப் பாதிக்கும் வகையில் பாலினம், சாதி போன்றவற்றைக் குறிப்பிடுவதும் தண்டனைக்குரியதே!

எப்படி புகார் தெரிவிப்பது?

பாதிக்கப்படுபவர்கள், எழுத்துவடிவில் குற்றச்சாட்டைப் பதிவுசெய்ய வேண்டும். குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தையும் இணைக்க வேண்டும். இரண்டு மாதத்துக்குள் குற்றச்சாட்டைப் பதிவுசெய்ய வேண்டும். குற்றச்சாட்டைப் பதிவுசெய்தவுடன், அதற்கான ஒப்புதலை இரண்டு வாரத்துக்குள் சம்பந்தப்பட்டவரிடம் வழங்க வேண்டும். விசாரணையை ரகசியமாக நடத்தி, விசாரணை அறிக்கையைச் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத் துணைவேந்தர் அல்லது இயக்குநர் அல்லது கல்லூரி முதல்வரிடம் வழங்க வேண்டும். விசாரணை அறிக்கையின்மீது இரண்டு மாதங்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆறு மாதங்களுக்குள், குற்றச்சாட்டின்மீது நடவடிக்கை எடுத்து முடித்திருக்க வேண்டும்' என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாரிடம் தெரிவிப்பது?

`அத்துமீறல்களை விசாரிக்க, ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் குழு அமைக்க வேண்டும். இந்தக் குழுவில், மூத்த பேராசிரியர் ஒருவர் குழுத் தலைவராகவும், மூத்த பேராசிரியர், இணை அல்லது துணை பேராசிரியர் ஒருவர், பேராசிரியை ஒருவரும் உறுப்பினர்களாக இருப்பர். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பைச் சார்ந்தவர்களில் ஒருவர் இந்தக் குழுவில் கண்காணிப்பாளராகச் செயல்பட வேண்டும்.

என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

குற்றச்சாட்டின்மீது நடவடிக்கையாக, அத்துமீறியவர்களை எச்சரிக்கைசெய்யவும், எம்.ஃபில் அல்லது பி.ஹெச்டி மாணவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களை மற்ற பேராசிரியரிடம் வழிகாட்டுதல் பொறுப்பை ஒப்படைக்கவும், பேராசிரியரிடமிருந்து வழிகாட்டுதல் பொறுப்பைத் திரும்பப்பெறவும், சம்பள உயர்வை நிறுத்தம்செய்யவும், தலைமைப் பொறுப்பில் இருந்தால் அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கவும், அத்துமீறலின் அளவைப் பொறுத்து வேலையிலிருந்து வெளியேற்றவும், தற்காலிகமாக நீக்கவும் பரிந்துரைசெய்யலாம். ஒருவேளை முகாந்திரம் இல்லாமல் குற்றம் சாட்டினால், அவர்கள்மீது விசாரணைக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வித் துறையின் அரசாணை ஏட்டில் மட்டும் இருக்காமல், அனைத்து வளாகங்களிலும் செயல்படுத்திட வேண்டும்!
தினமும் நெல்லிக்காய்ச் சாறு குடிக்கலாமா... மருத்துவம் சொல்வது என்ன? #AmlaJuiceAlert


மு.பிரசன்ன வெங்கடேஷ்


ஜெ.நிவேதா

தினமும் நெல்லிக்காய் சாறு குடிப்பது நல்லதா?




`ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும்' என ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. இந்த `ஒரு நாளைக்கு ஒன்று' பழக்கம் நெல்லிக்காய்க்கும் பொருந்தும். தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் `மலச்சிக்கல் நீங்கும், செரிமானம் சீராகும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்'... ஆனால், எந்த உணவாக, காயாக, பழமாக இருந்தாலும் குறிப்பிட்ட அளவுக்கு மீறி உட்கொள்ளக் கூடாது. `தினமும் நெல்லிக்காய்ச் சாறு அருந்துவது நல்லதல்ல' என்கிறார்கள் மருத்துவர்கள். இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் அனிதா பாலமுரளியிடம் கேட்டோம்...



``அளவுக்கு மீறி எதையுமே சாப்பிடக் கூடாது. நெல்லிக்காய்ச் சாறும் அப்படித்தான். இப்படிக் குறிப்பிட்டு சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. வெறும் நெல்லிக்காய் என்றால், ஒன்று அல்லது இரண்டு சாப்பிடுவோம். ஆனால், அதை ஜூஸாக்க வேண்டுமென்றால், நான்கு முதல் ஐந்து நெல்லிக்காய்களாவது தேவைப்படும். நான்கு, ஐந்து நெல்லிக்காயை ஒரே நேரத்தில் உட்கொள்வது, அதையும் தினமும் ஜூஸாக அருந்துவது பிரச்னைகளை ஏற்படுத்துவதில் ஆச்சர்யமில்லை. அப்படி என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்? பார்க்கலாம்...

* நெல்லிக்காய் வைட்டமின் சி சத்து நிறைந்தது. பொதுவாகவே, வைட்டமின் சி அமிலத்தன்மையை அதிகப்படுத்தும் என்பதால், அதிகளவு உட்கொள்ளும்போது நெஞ்செரிச்சல் ஏற்படும். அசிடிட்டி பிரச்னை இருப்பவர்களுக்கு, இது மேலும் தொந்தரவை ஏற்படுத்தும். கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் இதை தவிர்ப்பதே நல்லது.
  * இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் மற்றும் குடல் பிரச்னைகளுக்குச் சிறந்த தீர்வாக இருக்கும். என்றாலும், அளவுக்கதிகமாக உட்கொண்டால் மலம் கடினமாகி பிரச்னையை ஏற்படும். அதிலும், தண்ணீரைக் குறைவாகக் குடிப்பவர்களுக்குப் பிரச்னையின் தீவிரம் அதிகமாக இருக்கும்.

* சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களும், ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்களும் நெல்லிக்காயை ஊறுகாயாகச் சாப்பிடக் கூடாது. ஏனென்றால், அதில் பதப்படுத்துவதற்கான உப்பு பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த உப்பிலிருக்கும் சோடியம், பாதிப்பைத் தீவிரப்படுத்தும்.

* இதில் டையூரிடிக் (Diuretic) தன்மை இருக்கிறது. இது, தோலிலுள்ள ஈரத் தன்மையை வற்றச் செய்யும் தன்மைகொண்டது. அதிகளவு நெல்லிக்காயை ஜூஸாக அருந்தினால், உடல் வறட்சி ஏற்படலாம். சிலருக்கு இதனால் உடல் எடையும் குறையலாம்.



* நெல்லிக்கு உடல் சூட்டைக் குறைத்து, குளிர்ச்சி ஏற்படுத்தும் ஆற்றல் உண்டு. இதை, பழம் அல்லது சாறு என எப்படி உட்கொண்டாலும் குளிர்ச்சியால் ஏற்படும் நோய்கள் தீவிரமடையும்.

* நெல்லிகாய் அதிகமாகச் சாப்பிடுபவர்கள், அதிகளவு தண்ணீர் உட்கொள்ள வேண்டும். ஒருநாளைக்குக் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீராவது அருந்துவது நல்லது. இல்லையென்றால், சருமப் பிரச்னைகள், ஒவ்வாமை, முடி உதிர்வு, முதிர்ச்சியான தோற்றம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

* ஏதோ ஒரு நோய் பாதிப்புக்காக சிகிச்சை எடுத்து வருபவர்கள், நெல்லிக்காய் சாப்பிட்டால் அது எதிர்வினையை ஏற்படுத்தும். குறிப்பாக, இதயப் பிரச்னை இருப்பவர்கள், நெல்லிக்காயைத் தவிர்ப்பதுதான் சிறந்தது.



* நெல்லிக்காய், லேசான தலை சுற்றலை ஏற்படுத்தும் தன்மைகொண்டது. எனினும், உடல் சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்தாது. தொடர்ச்சியாக தினமும் நெல்லிக்காய்ச் சாறு அருந்துபவர்களுக்குத் தலைசுற்றல் அல்லது மயக்கம் ஏற்படலாம். எப்போதாவது நெல்லிக்காய் சாப்பிட்டு அதனால் தலைசுற்றல் ஏற்பட்டால் பிரச்னையில்லை. ஆனால், தினமும் அருந்தி, இந்தப் பாதிப்புகள் ஏற்பட்டால், மருத்துவ ஆலோசனை பெற்று பிரச்னையை முதல்நிலையிலேயே சரிசெய்துவிட வேண்டும்.

ஆக, நெல்லிக்காயின் மூலம் உடலுக்குப் பல்வேறு நன்மைகள் கிடைக்குமென்றாலும், தொடர்ச்சியாக அதை அதிகமாகவோ, சாறாகவோ உட்கொள்ளக் கூடாது. எனவே, தொடர்ச்சியாக தினமும் நெல்லிச்சாறு அருந்துவதைத் தவிர்ப்பதே சிறந்தது’’ என்கிறார் அனிதா பாலமுரளி.
அதிக வேகத்தில் சென்றதால் அபராதம் கட்டிய கேரள ஆளுநர் சதாசிவம்...!


சி.வெற்றிவேல்

அனுமதிக்கப்பட்ட வேகத்தை விடவும் அதிக வேகத்தில் சென்றதால் கேரள ஆளுநர் சதாசிவம் அபராதம் கட்டியிருக்கும் தகவல் வெளியாகியிருக்கிறது.

சில தினங்களுக்கு முன்பு கேரளா கவர்னர் மாளிகைக்கு அருகில் இருக்கும் கவுடியார் சாலையில் கேரளா மாநில கவர்னர் சதாசிவத்தின் கார் சுமார் 80 கி.மீ வேகத்தில் சென்றது. அந்த சாலையின் உச்ச பட்ச வாகன வேகம் 55. கி.மீ மட்டுமே. அனுமதிக்கப்பட்ட வேகத்தை விடவும் கூடுதலான வேகத்தில் சென்றதால் ஆளுநரின் காருக்கு அங்கிருந்த போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் விதித்துள்ளனர். அபராதம் விதிக்கப்பட்ட போது ஆளுநர் சதாசிவம் காரில் பயணிக்கவில்லை என்று தகவல் வெளியாகியிருக்கிறது.



இதுகுறித்து ஆளுநருக்குத் தெரியவந்த போது அபராதத் தொகையான 400 ரூபாயைச் செலுத்திவிட்டு ரசீது பெற்றுக்கொள்ளும்படி ஓட்டுநருக்கு ஆளுநர் அறிவுரை வழங்கியுள்ளார்.

ஆளுநரின் காருக்கு அபராதம் விதிக்கப்பட்ட தகவல் போக்குவரத்துத் துறையினர் மூலமாகவே கசிந்திருக்கிறது. சட்ட விதிகள் அனைவருக்கும் பொதுவானது என்பதை இந்த சம்பவம் உணர்த்துபடியாக அமைந்திருக்கிறது. ஆளுநரின் கார் என்றபோதும் தயக்கமில்லாமல் அபராதம் விதித்த போக்குவரத்து ஊழியருக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.

DGHS NOTICE 5.7.2018


NEWS TODAY 26.01.2026