Thursday, July 12, 2018

Heavy rain lashes city, more expected in coming days

TIMES NEWS NETWORK

Chennai:  12.07.2018

After intermittent mild rain in the last two days, heavy rain lashed the city on Wednesday evening. In a span of two hours, the city received 2.6cm rain in the core areas while the suburbs received 1.6cm rain with strong winds.

The intensity of the rain was high as the roads were flooded. There were two strong spells of rain the first of which began around 5.45pm.

Airport recorded wind at the speed of 40knots briefly forcing a few airlines to hold the departure for a few minutes. This caused minor delays to four to five flights between 6pm and 7pm. An official said three arrivals were told to hold and circle before landing.

A met department official said severe thunderstorm was forecasted for the day. More rain could be expected on Thursday because of convective cloud and high temperature during the day, he said. The sky would be cloudy and there were chances of rainfall.

Minimum temperature is expected to be 25° Celsius and maximum 35° Celsius. There was brief heavy rain in different parts of the city and the suburbs on Tuesday. This pattern may continue for a couple of days, said an official.

The evening rain and wind affected commuters as they faced slow traffic and congestion on most of the arterial roads.


SUDDEN SHOWERS: The evening rain and wind affected commuters as they faced slow traffic and congestion on most of the arterial roads
UGC denied IIT-M & Anna univ IoE status

Pushpa.Narayan@timesgroup.com

Chennai:12.07.2018

Two premier institutes from Tamil Nadu — the state-run Anna University and IIT-Madras — that figured in the list of eight public institutions chosen as Institutions of Eminence (IoE) by an University Grants Commission-appointed panel, were denied the status of IoE by the UGC in its final list of six, which included three private institutions, to ensure “equal weightage for private and public institutions”.

A 21-page ‘report of empowered expert committee’ released by the UGC on Wednesday listed eight public institutions — IISC-Bangalore, IIT-Madras, IIT-Kharagpur, IIT-Bombay, IIT-Delhi, Delhi University, Jadavpur University and Anna University. However, the UGC picked only three institutions — IIT-Delhi, IITBombay and IISc-Bangalore — as they had the highest rank in the QS world university rankings (2018).

Experts: Unfair to compare IIT-M with pvt colleges

UGC chairman D P Singh said, “It was a decision taken keeping in mind the principle of equity. These other five public institutions will be considered by the commission at a later stage. We don’t know when it will happen.”

Tamil Nadu and Delhi had two institutions each making it to the list, but Tamil Nadu became theonly statetohavebothof them rejected,kicking off a debate in political and academic circles. “The policy is conceived in an extraordinarily casual manner. Comparing IITs and IISc with Manipal University or BITS-Pilani is ridiculous. Across the globe, such status is accorded only to institutes that have high research outputs. The research output of IIT Madras is far superior to that of private universities,” said Anna University former vice-chancellor M Anandakrishnan, who was also the director of IIT Kanpur.

“The UGC has concluded that one yet-to-be established university has a potential to become autonomous, scuttling chances of institutions that have been proving themselves for decades just because they did not figure in international rankings,” he said.

While higher education minster K P Anbalagan did not respond to calls, higher education secretary Sunil Paliwal said the state was happy that Anna University figured in the list of premier institutions. “We always knew it was a good institution but now we know it is among the top eight public institutions across the country. It is only a matter of time before we get the IoE status,” he said.

Opposition parties like the DMK were not convinced. “It is unfair to drop two of our institutions because they did not figure in international rankings. It denies these institutions and its students the grant and allowancesthey rightfully own,” said former education minister Thangam Thenarasu. The state, he said, should take it up with the Centre. “It will be unfortunate if we don’t fight,” he said.

Earlier, chairman of the empowered committee N Gopalaswami also admitted that large share of weightage was given to perceptions in international rankings. “Number of foreign faculty and students does play a part. Many don’t choose Chennai because it is very hot, and instead prefer a more salubrious climate. So although research and per person output at IIT-M may be good, they were behind others in the international ranking,” he said.

IIT Madras director Bhaskar Ramamurthi said he was happy to know his institute made it to thefinaleight,but addedthattheonly option for the institute now was to wait. “We believe we can be IoE. In our presentation, we gave a clear pathway,” he said. “But frankly, I don’t know how we can improve people’s perceptions to get higher world rankings,” he said.

NEET: CBSE may move SC against HC’s ‘grace marks’


Manash.Gohain@timesgroup.com

New Delhi: 12.07.2018

The Central Board of Secondary Education is set to move the Supreme Court contesting the order of the Madras HC to grant 196 marks to every candidate who took the NEET-UG in Tamil this year for errors in translation of questions from English. The HC had said all such candidates should be granted four grace marks each for errors in 49 questions.

The board is awaiting a direction from the ministry of human resource development before going ahead with the appeal. According to a ministry source, the board is taking legal opinion and is likely to move the apex court on Friday after it gets the ministry’s nod.

The HRD ministry is also taking the opinion of the health ministry which is involved in counselling and seat allotment, the source said.

‘Awaiting HRD ministry views on the issue’

In CBSE’s information bulletin for NEET-2018, the source said, it was stated that candidates opting for regional languages would be provided bilingual test booklet — in selected regional language and English — and “in case of any ambiguity in translation of any of the questions, its English version shall be treated as final”.

“Right now we are in consultation with the legal team and planning to appeal against the order in the Supreme Court. However, we are also in touch with the HRD ministry and waiting for its views on the same,” said the source.

Candidates opting for Hindi or regional languages were given bilingual NEET test booklet with the English version of questions and those opting for English were provided with test booklet in English only.

Petitioner and senior CPM leader T K Rangarajan had sought full marks for the 49 questions, saying key words in the Tamil questions were wrongly translated from English and this caused confusion among the candidates.

The HC bench said the students who took the NEET for admission to medical, and dental colleges in Tamil should be suitably compensated to provide a level-playing ground.


RAY OF HOPE FOR STUDENTS
ஆங்கில​ம் அறிவோமே 221: இனி உதாரணத்துக்கு இடமில்லையா?

Published : 10 Jul 2018 10:24 IST
 
ஜி.எஸ்.எஸ்.

 






கேட்டாரே ஒரு கேள்வி

“தீக்குச்சியை match என்று சொல்ல வேண்டுமா, Match stick என்று சொல்ல வேண்டுமா?


Can I have a match என்பது சரியா, Can I have a match stick என்பது சரியா? தீக்குச்சியைத் தினமும் உரசும் ஒவ்வொரு முறையும் எனக்கு இந்தச் சந்தேகம் வருகிறது. விடை கூறுங்கள்”

------------------------------

Enervated என்ற ஆங்கிலச் சொல் நாம் எதிர்பார்த்ததற்கு மாறாக ‘சக்தியெல்லாம் இழக்கச்செய்கிற’ என்ற பொருள் தருகிறது என்று குறிப்பிட்டிருந்தேன். வாசகர் ஒருவர், “அதைப் போலதான் restive என்ற வார்த்தையும். இதற்கு ‘அமைதியில்லாத’ என்று பொருள்!”என்பதைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். நன்றி. ‘The elephant is restive’ என்றால் அதன் அருகே செல்லாமல் இருப்பதுதான் புத்திசாலித்தனம்.

------------------------------

“ஒரு திரைப்பட விமர்சனத்தில் ‘an ensemble cast’ என்று படித்தேன். இதற்கு என்ன பொருள்?” என்று கேட்டிருக்கிறார் வாசகர் ஒருவர்.

Cast என்ற தலைப்பின் கீழ் அந்தத் திரைப்படத்தில் நடிப்பவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் (ஜாதியைக் குறிப்பது caste என்ற சொல்).

Ensemble cast என்றால் அந்தத் திரைப்படத்தில் பல பிரபல நடிகர்கள் இணைந்து பணியாற்றி இருப்பார்கள்.

------------------------------

தீக்குச்சி என்பது match. அதுவே போதுமானது. Match என்றாலே சிறிய குச்சி என்றுதான் பொருள். Bring me a box of matches. Strike a match to make a fire.

------------------------------

நண்பரின் குடும்பத்துடன் ஐஸ்கிரீம் கடைக்குச் சென்றிருந்தேன். கடையில் உள்ள ஐஸ்கிரீம் வகைகளைப் பட்டியலிட்டு இதில் எது வேண்டுமென்று தன் மகளைக் கேட்டார் நண்பர். ‘வெனிலாவா’ இல்லாட்டி ‘பட்டர்ஸ்காட்சா’, இந்த இரண்டு வகை ஐஸ்கி​ரீம்களில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று திணறினாள் அந்தச் சிறுமி. “எப்போ இந்தக் கடைக்கு வந்தாலும் இது இவளுக்குப் பெரிய டைலமா” என்றார் நண்பர். ஆனால், இந்த இடத்தில் ‘confusion’ என்ற சொல்லே பொருத்தமாக இருக்கும்.

Dilemma என்ற சொல்லை நிறையப் பேர் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இரண்டுமே பிடித்திருக்கிறது அதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது டைலமா அல்ல. இரண்டுமே பிடிக்காவிட்டாலும், அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தே ஆக வேண்டும் என்றால் அது dilemma.

அதாவது, “உங்களுக்கு ஆண் குழந்தை வேண்டுமா, பெண் குழந்தை வேண்டுமா?” என்று கேட்டால் அது dilemma அல்ல.

மாறாக உங்கள் மனைவிக்குப் பிரசவம் பார்த்துக்கொண்டிருக்கும் டாக்டர் உங்களிடம், “பிரசவத்தில் சிக்கல். உங்கள் மனைவி அல்லது குழந்தை ஆகிய இருவரில் ஒரு உயிரைத்தான் காப்பாற்ற முடியும். உங்கள் முடிவு என்ன?” என்று கேட்கும்போது உண்டாவது டைலமா (சில திரைப்படக் காட்சிகளில் இடம்பெற்ற இதுபோன்ற கேள்வியை டாக்டர்கள் நிஜத்தில் கேட்பார்களா என்பதைக் கற்றறிந்த மருத்துவ வாசகர்கள்தான் கூற வேண்டும்).

------------------------------

Euphemism என்றால் என்ன?

ஒரு சங்கடமான விஷயத்தைக் குறிக்க ஒரு கடுமையான சொல் இருக்கிறது. அதைப் பயன்படுத்தாமல் மிருதுவான ஒரு சொல்லின் ​மூலம் அதை உணர்த்தினால் அது euphemism.

ஒரு நிறுவனத்தில் பலரை dismiss செய்து வீட்டுக்கு அனுப்பப் போவதை ‘downsizing’ என்று நா​​சூக்காகக் குறிப்பிடுவது euphemism.

கிரேக்க மொழியில் euphemism என்பதற்குப் பொருள் மங்கலமாகப் பேசுதல்.

“வேலையில்லாமல் இருக்கேன்”என்பதை bench-ல் இருப்பதாகச் சொல்வதும், “ராஜினாமா செய்யப் போறேன்” என்பதை paper போடுவதாகச் சொல்வதும்கூட euphemism-தான்.

------------------------------

“e.g. என்ற ஆங்கிலச் சுருக்கத்தின் விரிவாக்கம் என்ன?”என்று கேட்டிருக்கிறார் வாசகர் ஒருவர்.

Exempli gratia என்பதன் சுருக்கம் அது. லத்தீன் சொற்களான இவற்றின் பொருள் for example என்பதாகும். You should involve in more games, e.g. swimming, running and tennis.

உங்களுக்குத் தெரியுமா? e.g. என்பதை இனிப் பல ​நூல்களில் நீக்கிவிடப் போகிறார்களாம். பார்வையில்லாதவர்களுக்கு வாசகங்களை உணர்ந்து தானாக ஒலி வடிவில் அளிக்கும் மென்பொருட்கள் e.g. என்பதை egg என்று தவறாக வாசிக்கின்றனவாம். இதுதான் அந்த நீக்கலுக்கான முக்கியக் காரணம்.



போட்டியில் கேட்டுவிட்டால்?

After the ---------- of the new team, the company took a lead in new markets

a) shake down

b) shake off

c) shake out

d) shake up

Shake off என்றால் உங்களுக்குப் பிரச்சினைகளைக் கொடுத்துக்கொண்டிருக்கும் ஒன்றிலிருந்து (அது நோயாகவும் இருக்கலாம்) மீண்டு வருவது.

Shake out என்றால் உதறுவது. அதாவது காலையில் எழுந்ததும் படுக்கை விரிப்புகளை உதறிவிட்டு மடிப்போம் இல்லையா, அதுபோல.

Shake up என்றால் குலுக்குவது. மருந்து பாட்டில்களைக் குலுக்கிவிட்டு மருந்தை உட்கொள்வோமே, அதுபோல.

Shake down என்றால் ஒரு புதிய சூழலில் நிலைநிறுத்திக்கொள்வது.

இந்த நான்கில் shake down என்பது இங்கு அதிகமாகப் பொருந்துகிறது. புதிய குழு தன்னை நிலைநிறுத்திக்கொண்டதால், அந்த நிறுவனம் புதிய ச​ந்தைகளில் முதலிடம் பெற்றது.

After the shake down of the new team, the company took a lead in new markets என்பதுதான் சரி.

சிப்ஸ்

# இலைகள் சலசலத்தன என்கிறோமே அந்தச் சலசலப்புக்கான ஆங்கிலச் சொல் எது?

Rustling

# Private information என்பதற்கும், classified information என்பதற்கும் என்ன வேறுபாடு?

Private என்றால் அந்தரங்கமான அல்லது ரகசியமான. Classified என்றால் அலுவல் தொடர்பான ரகசியம் (officially secret).

# Letting the cat out of the bag என்றால்?

ரகசியம் ஒன்றை வெளிப்படுத்துவது.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com
கிண்டி பொறியியல் கல்லூரி 225: பொறியியல் கல்வியில் ஒரு கோபுரம்

Published : 10 Jul 2018 10:38 IST

ம.சுசித்ரா

 




சென்னையின் மத்தியில் வீற்றிருந்தாலும் பெருநகரத்தின் பரபரப்போ சலசலப்போ புழுதியோ படியாமல் கம்பீரமான அமைதியுடன் அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகம் திகழ்கிறது. 200 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்புடைய இப்பகுதிக்குள் அடியெடுத்து வைத்த சில நிமிடங்களில் பசுமை செறிந்த அடர்ந்த காட்டுக்குள் நடக்கும் உணர்வு ஏற்படுகிறது. வகுப்பறை வளாகங்களும் நிர்வாகக் கட்டிடங்களும் ஆய்வகங்களும் மரங்களிடையே ஒளிந்திருக்கின்றன.

எதிர்ப்படும் மாணவர்களின் முகத்தில் தன்னம்பிக்கையும் பெருமிதமும் மிளிர்கின்றன. காரணம், இதன் ஒரு பகுதியான கிண்டி பொறியியல் கல்லூரி தாங்கி நிற்கும் 224 ஆண்டுகால வரலாறு. இந்தியாவின் முதல் பொறியியல் கல்லூரி சி.இ.ஜி. என்றழைக்கப்படும் கிண்டி பொறியியல் கல்லூரியின் பெருமைகள் அநேகம்.

ஒரு கல்வி நிறுவனத்தின் தரத்தை நிர்ணயிக்கச் சிறந்த சான்று அதன் மாணவர்களே. அந்த வகையில் கிண்டி பொறியியல் கல்லூரியின் புகழையும் வரலாற்றையும் அங்கே படித்த மாணவர்கள்
பறைசாற்றிக்கொண்டிருக்கிறார்கள். உலகப் புகழ்பெற்ற தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் இந்தக் கல்வி நிலையத்தில் பட்டை தீட்டப்பட்டிருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் தங்களை வளர்த்தெடுத்த கல்லூரியை வணங்கும்விதமாக 2014-ல் அன்றைய மாணவர்களும் முன்னாள் மாணவர்களும் கூடி, தங்களுடைய கல்லூரியின் வரலாற்றை ஆராய்ந்து புத்தகமாக வெளியிட்டார்கள். ‘CEG: A Journey through Time’ என்ற அந்தப் புத்தகம் மாணவர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய வரலாற்றுப் பெட்டகம்.



ஆங்கிலேயர் கட்டிய கல்லூரி

225-வது ஆண்டில் அடியெடுத்துவைத்திருக்கும் கிண்டி பொறியியல் கல்லூரியின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள இந்தப் புத்தகத்தின் சில துளிகள்:

“இந்திய மாணவர்களுக்காகக் கிழக்கிந்திய கம்பெனியால் 1794-ம் ஆண்டு மே 17-ம் தேதி அன்றைய மதராஸின் புனித ஜார்ஜ் கோட்டையில் சி.இ.ஜி. நிறுவப்பட்டது. இந்தியாவில் தாங்கள் கைப்பற்றிய நிலப்பரப்பை அளவிட ஆங்கிலேயர்களை நியமிப்பதைக் காட்டிலும் உள்ளூர் மக்களுக்குப் பயிற்சி அளிப்பது சுலபமானது, சிக்கனமானது என்று கருதி இந்தக் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது. தொழிற்புரட்சிக் காலத்தில் அணை கட்டுவது, குளம் வெட்டுவது, பாலங்கள், கட்டிடங்கள் கட்டுமானப் பணிகளில் பிரிட்டிஷ் அரசாங்கம் இறங்கியபோது சிவில், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் கல்வியைக் கற்றுக்கொடுக்கும் பள்ளியாக இது மாற்றப்பட்டது.

1859-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் சி.இ.ஜி.கொண்டுவரப்பட்டது. 1861-ல் பொறியியல் கல்லூரியாக ஆனது. புனித ஜார்ஜ் கோட்டையில் திறக்கப்பட்ட பள்ளி சேப்பாக்கம் உள்ளிட்ட வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு, 1920-ல் தற்போதைய வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டது. 1930-களில் மின்சாரத் துறை உலக அளவில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியதும் முழு நேரப் பொறியியல் கல்லூரியாக மாற்றப்பட்டது. பிற்காலத்தில் 1978-ல்தான் பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (PAUT) நிறுவப்பட்டது. இதுவே பின்னாளில் அண்ணா பல்கலைக்கழகமாக மாறியது. இதன் கட்டுப்பாட்டில் சி.இ.ஜி. உட்பட மற்ற பொறியியல் கல்லூரிகளும் கொண்டுவரப்பட்டன.



அன்று பதுங்கு குழி இன்று நீச்சல்குளம்

இவை எல்லாவற்றையும் மிஞ்சும் சுவாரசியமான தகவல்களும் இந்த வளாகத்தைச் சுற்றி உண்டு. இரண்டாம் உலகப் போரின்போது, போர் விமானங்களையும் பீரங்கிகளையும் சி.இ.ஜி.யில் படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் கல்லூரி வளாகத்திலேயே தயாரித்து ராணுவத்துக்கு வழங்கியுள்ளனர். 1942, 1943 ஆண்டுகளில் பொறியியல் பட்டப் படிப்பை மேற்கொண்ட மாணவர்களுக்கு செமஸ்டர் விடுமுறை அளிக்கப்படவில்லை. இரண்டு ஆண்டுகளில் அத்தனை பாடங்களும் நடத்தப்பட்டுப் பட்டமும் வழங்கப்பட்டது. போர் மூளும் நேரத்தில் மாணவர்களைப் பாதுகாக்கக் கல்லூரி வளாகத்திலேயே பதுங்கு குழிகள் வெட்டப்பட்டன. அன்று வெட்டப்பட்ட அந்தப் பதுங்கு குழிகள்தாம் இன்றைய சி.இ.ஜி. மாணவர்களின் நீச்சல்குளம்.

வெறும் 8 மாணவர்களோடு ஆரம்பிக்கப்பட்ட கிண்டி பொறியியல் கல்லூரி இன்று அண்ணா பல்கலைக்கழகத்தின் முக்கிய அங்கமாக உள்ளது. ஆண்டுதோறும் 3,000-த்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு இளநிலைப் பொறியியல் கல்வியை அளித்துவருகிறது. இதுவரை கிட்டத்தட்ட 13 ஆயிரம் மாணவர்கள் பி.எச்டி., எம்.எஸ்., எம்.டெக். உள்ளிட்ட ஆய்வு படிப்புகளைப் படித்திருக்கிறார்கள். பொறியியல் படிப்பைக் கனவாகக் கொண்ட அனேகத் தமிழக மாணவர்களின் மனம் உச்சரிக்கும் சொல், அண்ணா பல்கலைக்கழகமாக இருக்க முக்கியக் காரணம் அதன் வேராகத் திகழும் கிண்டி பொறியியல் கல்லூரியே.

மூன்று தலைமுறை மாணவர்கள்


சி.இ.ஜி. கல்லூரியைப் போலவே அதன் முன்னாள் மாணவர் அமைப்புக்கும் (AACEG) நெடிய பாரம்பரியம் உள்ளது. இந்தக் கல்லூரியின் முதல் இந்திய முதல்வரான ராவ் பகதூர் ஜி.நாகரத்தினத்தால் 1925-ல் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் ஜூலை 21, 22 ஆகிய தேதிகளில் ‘சி.இ.ஜி. உலக முன்னாள் மாணவர் கூட்ட’த்தை நடத்தத் திட்டமிட்டுக்கொண்டிருக்கும் சி.இ.ஜி.யின் முன்னாள் மாணவர் அமைப்பின் தலைவர்கள் மூவரைச் சந்தித்தோம். அவர்கள் மூவரும் மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்கள்.

என் வகுப்பில் 2 மாணவிகள்!

தமிழகத்தில் மொத்தம் 5 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே இருந்த காலம் அது. ஐந்து ஆண்டு காலப் படிப்பாக பி.இ. எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் பட்டப் படிப்பை சி.இ.ஜி.யில் படித்து 1962-ல் பட்டம் பெற்றேன். ஆண்டுக்கு 216 ரூபாய் கல்விக் கட்டணம் செலுத்திப் படித்தேன். எங்களுடைய கல்லூரியின் தனித்தன்மையே படிப்புக்கு இணையாகத் தனித்திறமைகளை அங்கீகரிப்பது. என்னுடைய வகுப்பில் இரண்டே மாணவிகள்தான் படித்தார்கள். அன்று பொறியியல் படித்தவர்களுக்கு நெய்வேலி அனல் மின்நிலையத்தில், அகில இந்திய வானொலியில், சுரங்கத்துறையில், டி.என்.பி.எஸ்.சி.யில் அரசு வேலை கிடைத்தது.

- வாசுதேவன்

அரசும் தனியாரும்
நான் 1981-ல் சேர்ந்தபோது பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் நான்காண்டு படிப்பாக மாற்றப்பட்டிருந்தது. 80-களின் மத்தியில் மின்வாரியம் போன்ற அரசு நிறுவனங்கள் மட்டுமின்றி அசோக் லேலண்ட், விப்ரோ உள்ளிட்ட தனியார் நிறுவனங்களும் பொறியாளர்களுக்கு மரியாதையும் வேலைவாய்ப்பும் அளிக்கத் தொடங்கின. அன்றைய தேதியில் என்னுடைய கல்லூரியில் 70 மாணவிகள் படித்தார்கள். நான் வெறும் 1,440 ரூபாய் கட்டணம் செலுத்தி 1985-ல் பொறியியல் படிப்பை முடித்தேன்.

- விஸ்வநாதன்

சுயதொழில் காலம்

எங்களுடைய கல்லூரியின் சிறப்பு வாய்ந்த துறைகளில் ஒன்றான பி.இ. கணினி அறிவியலில் 2015-ல் பட்டம் பெற்றேன். இங்கே படிப்பவர்களுக்கு வளாக நேர்காணலின் மூலமாகவே முன்னணி நிறுவனங்களில் வேலை கிடைத்துவிடும். நான் சொந்தமாகத் தொழில் நடத்துவதில் உறுதியாக இருந்ததால் படிக்கும்போதே சக மாணவர்களுடன் சேர்ந்து சொந்த ‘ஸ்டார்ட் அப்’ தொடங்கிவிட்டேன். என் வகுப்பில் 50 சதவீதத்துக்கும் கூடுதலான மாணவிகள் இருந்தார்கள்.

- சரவணன் கிருஷ்ணா
எது அண்ணா பல்கலைக்கழகம்?

அண்ணா பல்கலைக்கழகம் என்பது கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை தொழில்நுட்ப நிறுவனம், அண்ணா கட்டிடக் கலை மற்றும் திட்டமிடல் பள்ளி ஆகிய நான்கு கல்லூரிகளை உள்ளடக்கியது.

2001-ல் தமிழகத்தின் அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டன. இவற்றில் தனியார் கல்லூரிகள் மட்டும் 590.

2017-ல் தமிழகத்தில் பொறியியல் பட்டப் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர்


முதல் மாணவிகள்

லீலமா, A.லலிதா

P.K.த்ரெசியா – 1944

பொறியியல் முதல் அச்சுத்தொழில்நுட்பம் வரை

மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் – 1894

எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங்– 1930

தொலைத்தொடர்பு மற்றும் நெடுஞ்சாலை இன்ஜினீயரிங் – 1945

அச்சுத் தொழில்நுட்பப் இன்ஜினீயரிங் – 1982
ஆக.15-ல் ரயில்வே காலஅட்டவணை: தாம்பரத்தில் இருந்து கூடுதலாக 2 ரயில் சேவை தொடங்க வாய்ப்பு

Published : 12 Jul 2018 07:44 IST

சென்னை
 


தெற்கு ரயில்வேயின் புதிய காலஅட்டவணை வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியிடப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து மேலும் 2 புதிய ரயில்கள் இயக்கப்படுவது குறித்த அறிவிப்பு இதில் இடம் பெறும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில்களின் காலஅட்டவணையை ஆண்டுக்கு ஒருமுறை தெற்கு ரயில்வே அறிவித்து வருகிறது. ரயில்களின் நேரம் மாற்றம், புதிய ரயில்களுக்கு நேரம் நிர்ணயம், சில ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களைக் கொண்டு காலஅட்டவணை தயாரிக்கப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டிலும் அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தாம்பரத்தில் புதிய ரயில் முனையம் திறக்கப்பட்டுள்ளதால், அங்கிருந்து மேலும் 2 ரயில்களின் சேவையை தொடங்குவதற்கான அறிவிப்பு அதில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:

தெற்கு ரயில்வேயில் மின்மயமாக்கல், இரட்டை வழிபாதை அமைத்தல், அகலப்பாதை அமைத்தல் போன்ற பணிகளில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னை - கன்னியாகுமரி ரயில் வழித்தடத்தில் மதுரை வரை இரட்டை பாதை பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதனால், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய ரயில்கள் முன்பைவிட விரைவாக செல்கின்றன. மேலும், கூடுதலாக சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, தெற்கு ரயில்வேயின் புதிய காலஅட்டவணை வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியிடப்பட்டு, மறுநாளே அமலுக்கு வரவுள்ளது. இதில், முக்கிய விரைவு ரயில்களின் வருகை அல்லது புறப்பாடு 10 முதல் 20 நிமிடங்கள் வரை மாற்றம் இருக்கும். மேலும், தாம்பரத்தில் இருந்து கூடுதலாக 2 ரயில்களின் சேவையை தொடங்குவதற்கான அறிவிப்பும் அட்டவணையில் இடம் பெறும் என்றனர்.
உலகமே வியந்து பார்த்த மீட்புப் பணி: தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்டது எப்படி?

Published : 12 Jul 2018 07:32 IST
மே சாய் (தாய்லாந்து)



குகையில் இருந்து அனைவரையும் பத்திரமாக வெளியில் அனுப்பிவிட்டு, கடைசியாக வந்த தாய்லாந்து ‘சீல்’ படையினர் 4 பேர் மகிழ்ச்சியில் வெற்றி சின்னம் காட்டினர்.



தாய்லாந்தில் உள்ள தாம் லுவாங் குகையில் கால்பந்து அணியை சேர்ந்த 12 சிறுவர்கள், பயிற்சியாளர் என 13 பேர் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க இரவு பகலாக மும்முரமாக மீட்புப் பணியில் ஈடுபட்ட வீரர்கள்.



குகையில் இருந்து அனைவரையும் பத்திரமாக வெளியில் அனுப்பிவிட்டு, கடைசியாக வந்த தாய்லாந்து ‘சீல்’ படையினர் 4 பேர் மகிழ்ச்சியில் வெற்றி சின்னம் காட்டினர்.



தாய்லாந்தில் உள்ள தாம் லுவாங் குகையில் கால்பந்து அணியை சேர்ந்த 12 சிறுவர்கள், பயிற்சியாளர் என 13 பேர் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க இரவு பகலாக மும்முரமாக மீட்புப் பணியில் ஈடுபட்ட வீரர்கள்.

தாய்லாந்து குகைக்குள் சிக்கிய 12 சிறுவர்களையும் பயிற்சியாளரையும் உயிருடன் மீட்டது உலகை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

தாய்லாந்தின் வடக்குப் பகுதியில் மியான்மர் எல்லையை ஒட்டி உள்ளது தாம் லுவாங் குகை. சுமார் 10 கி.மீ. தூரமுள்ள இந்தக் குகைக்கு கடந்த மாதம் 23-ம் தேதி ‘காட்டுப் பன்றிகள்’ என்ற கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் என 13 பேர் சாகச பயணம் மேற்கொண்டனர். மலை உச்சியில் இருந்து 800 மீட்டர் ஆழத்தில் இந்தக் குகை அமைந்துள்ளது.

இவர்கள் குகைக்குள் ஒரு கி.மீ. தூரம் சென்ற போது திடீரென பலத்த மழை பெய்தது. இதில் குகைக்குள் வெள்ளம் சூழ்ந்ததால் அதிர்ச்சி அடைந்த சிறுவர்களும் பயிற்சியாளரும் குகைக்கு உள்ளே மேலும் சிறிது தூரம் சென்று மேடான பாறை இடுக்கில் ஏறிவிட்டனர். வெள்ளம் சூழ்ந்ததால், அவர்களால் வெளியில் வர முடியவில்லை. குகைக்கு வெளியே அவர்கள் நிறுத்தியிருந்த சைக்கிள்களைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தாய்லாந்து, பிரிட்டன், இந்தியா உட்பட பல நாட்டு குகை மீட்பு வல்லுநர்கள், முக்குளிப்பு வீரர்கள் அங்குக் குவிந்தனர்.

ஒன்பது நாட்களுக்குப் பிறகுதான் அவர்கள் உயிருடன் இருப்பது வெளியுலகுக்குத் தெரிய வந்தது. அதன்பின் கடந்த ஞாயிற்றுக்கிழமை 4 சிறுவர்கள், திங்கட்கிழமை 4 சிறுவர்களை மீட்டு வந்தனர். கடைசியாக செவ்வாய்க்கிழமை 4 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரை தாய்லாந்து ‘சீல்’ படையினர் (கடல், வான், நிலம் ஆகிய 3 பகுதிகளிலும் செயல்படும் திறமை மிக்க வீரர்கள்) உயிருடன் பத்திரமாக மீட்டனர். இதை தாய்லாந்து நாடே மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.

குகைக்குள் சிக்கியவர்களை மீட்டது சாதாரண விஷயமல்ல. சோதனை முயற்சி, தவறுகள், அனுபவம் இல்லாமல் உடனுக்குடன் எடுத்த முடிவுகள், திறமை, தண்ணீரை வெளியேற்றும் ஏராளமான குழாய்கள், மோட்டார்கள், வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கும் குகைக்குள் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கொண்டு சென்றது போன்ற ஒவ்வொரு விஷயமும் சிலிர்க்க வைக்கும் நடவடிக்கையாகும்.

பிரிட்டனை சேர்ந்த 2 முக்குளிப்பு வீரர்கள்தான் முதலில் 12 சிறுவர்களையும் (ஜூலை 2-ம் தேதி) கண்டுபிடித்தனர். அவர்கள் வெளியில் வந்து சிறுவர்கள் எங்கிருக்கிறார்கள், எப்படி செல்வது போன்ற எல்லா விவரங்களையும் தெரிவித்தனர். அதில் முக்கியமானவர் ஜான் வோலந்தன். அவரைப் பார்த்ததும் சாப்பிட ஏதாவது கிடைக்குமா, இப்போதே எங்களை அழைத்து செல்ல முடியுமா என்றுதான் சிறுவர்கள் கேட்டுள்ளனர். ஆனால், பிரிட்டன் முக்குளிப்பு வீரர்கள் வெளியில் வந்து தகவல் சொன்ன 6 நாட்களுக்குப் பிறகுதான் முழு வீச்சில் மீட்புப்பணியைத் தொடங்க முடிந்தது. அதன்பின், தாய்லாந்தை சேர்ந்த 4 முக்குளிப்பு வீரரர்கள் குகைக்குள் சென்று அங்கேயே தங்கி சிறுவர்களுக்குத் தேவையான அதிக புரோட்டீன் உள்ள உணவுகளைக் கொடுத்து பாதுகாத்துள்ளனர்.

இதற்கிடையில் சிறுவர்கள் இருக்கும் இடத்துக்கு துணிச்சலாக தனியாளாக சென்று ஆக்ஸிஜன் சிலிண்டர் கொடுத்து விட்டு திரும்பும் போது தனக்கு ஆக்ஸிஜன் தீர்ந்து போனதால் தாய்லாந்து கடற்படை முன்னாள் வீரர் சமன் ககன் என்பவர் கடந்த 6-ம் தேதி பரிதாபமாக இறந்தார். இதுவே குகையின் அபாயத்தை மற்றவர்களுக்குப் புரிய வைத்தது.

தாம் லுவாங் குகை நேர் வழி பாதையாக இல்லை. சில இடங்களில் 33 அடி உயரத்துக்கு இருந்தாலும், பல இடங்களில் குறுகிய பாதை, ஏறி இறங்கும் சிறுசிறு குன்றுகள் போன்ற அமைப்புடையது. குகைக்குள் சிக்கிய சிறுவர்களில் பலருக்கு நீச்சலும் தெரியாது. குறுகிய பாதை இருக்கும் இடங்களை ஆக்ஸிஜன் சிலிண்டர்களுடன் கடந்து வருவதும் ஆபத்தானது.

எனவே, சிறுவர்களுக்கு நீச்சல் கற்றுத் தந்து மீட்க வேண்டும். அல்லது வெள்ளம் வடியும் வரை சுமார் 4 மாதம் குகையிலேயே காத்திருக்க வேண்டும். அதுவரை அவர்களுக்குத் தேவையான உணவு, ஆக்ஸிஜன் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்குவது என்று தாய்லாந்து ராணுவம் முதலில் முடிவு செய்தது. ஆனால், ஒவ்வொரு முறையும் முக்குளிக்கும் வீரர்கள் குகைக்குள் சென்று வருவது ஆபத்தாக இருக்கும். நேரமும் ஆகும் என்று கணிக்கப்பட்டது.

எனவே, மலை உச்சியில் ஓட்டை போட்டு குகைக்குள் இருக்கும் சிறுவர்களை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. குகை சுமார் 10 கி.மீ. தூரம் இருந்தாலும், முட்டு சந்து போல் முடிந்து விடும். குகைக்கு மறுவழி என்று எதுவும் இல்லை. அதனால் குகை முடியும் இடத்தில் பள்ளம் தோண்டி சிறுவர்களை மீட்க முயற்சி நடந்தது. இவை எல்லாம் தோல்வியில் முடிந்தன.

ஆனால், ராட்சத மோட்டார்கள் வைத்து குகைக்குள் இருந்து தண்ணீரை வெளியேற்றும் முயற்சி கை கொடுத்தது. அத்துடன் குகைக்குள் தண்ணீர் நுழைவதைத் தடுக்க உடனடியாக சிறிய அணை உருவாக்கப்பட்டது. குகையில் உள்ள சிறுவர்கள், பயிற்சியாளருக்கு உணவு, மருந்து, ஆக்சிஜன் சிலிண்டர் ஆகியவற்றை சப்ளை செய்யும் பணியை முக்குளிக்கும் வீரர்கள் மேற்கொண்டனர். இந்த மீட்புப் பணியில் கடற்படை வீரர்கள், ராணுவ வீரர்கள், தன்னார்வலர்கள், 20 அரசு துறைகள், முக்குளிப்பு வீரர்கள், குகைக்குள் சிக்கியவர்களை மீட்கும் வல்லுநர்கள் என ஒரு பெரும் படையே ஈடுபட்டது.

இதற்கிடையில் குகைக்குள் 2 முக்குளிக்கும் வீரர்கள் செல்வது, அங்கிருந்து இருவரும் ஒரு சிறுவனை மீட்டு வருவது என்று திட்டம் தீட்டப்பட்டது. முன்னதாக குகையில் இருந்து வெளியில் வரும் வழி முழுவதும் ஒரு கயிறு போடப்பட்டது. அதன் வழியாக 2 மீட்பு வீரர்களும் ஒரு சிறுவனும் நீந்திக் கடக்கும் வகையில் திட்டமிடப்பட்டது. குகைக்குள் செல்லும் 2 வீரர்களில் ஒருவர், சிறுவனுக்கு பொருத்தப்படும் ஆக்ஸிஜன் சிலிண்டரை சுமந்து கொள்வது, மற்றொரு வீரர் சிறுவனை பத்திரமாக வெளியில் கொண்டு வருவது என்று திட்டமிட்டனர். நீச்சல் தெரியாததால், சிறுவர்களுடைய முகத்தில் மூச்சுக் கவசமும் பொருத்தப்பட்டது. ஏற்கெனவே குகைக்குள் உள்ள கயிற்றை பிடிமானமாக வைத்துக் கொண்டு ஒவ்வொரு சிறுவனாக மீட்டுள்ளனர்.

ஆனால் தாம் லுவாங் குகை மேடும் பள்ளமுமாக, சில இடங்களில் குறுகலாகவும் இருந்ததால், நீந்துவது மட்டுமல்லாமல், சில இடங்களில் நடக்கவும், சில இடங்களில் பாறை மீது ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. குகையின் நுழைவு வாயிலில் இருந்து சற்று தொலைவில் மீட்புப் படையினர் முகாம் அமைத்திருந்தனர். அதுவரை சிறுவர்கள் வந்துவிட்டால் ஆபத்து நீங்கி விடும். அங்கிருந்து நடந்தே வெளியில் வரலாம். ஆனால், அந்த முகாம் வரை சிறுவர்களை கொண்டு வருவதுதான் மிகப்பெரும் சவாலாக இருந்தது.

இதுகுறித்து தாய்லாந்து கடற்படையினர் பேஸ்புக்கில் வெளியிட்ட செய்தியில், ‘‘இது அதிசயமா, அறிவியலா, வேறு எதுவோ தெரியாது. 13 பேரும் இப்போது குகைக்கு வெளியில் வந்துவிட்டனர்’’ என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

பயிற்சியாளர் எக்காபோல் சன்டாவாங்கையும் பாராட்டி வருகின்றனர். வெளியில் இருந்து உதவி வரும் வரை அவர்தான் 12 சிறுவர்களுக்கும் 9 நாட்களாக தைரியம் சொல்லி உயிருடன் இருக்கவும், அவர்கள் சோர்ந்து போகாமல் இருக்கவும் உதவி செய்துள்ளார்.

இந்திய அரசுக்கு தாய்லாந்து நன்றி

தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் டான் பிரமுத்வினய், மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தாய்லாந்து குகையில் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் அவர்களுடைய கால்பந்து பயிற்சியாளர் உள்ளிட்ட 13 பேரும் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என வாழ்த்தியதற்காக இந்திய அரசு மற்றும் இந்தியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, இவர்களை மீட்பதற்காக கிர்லோஸ்கர் பிரதர்ஸ் நிறுவனத்தின் தாய்லாந்து துணை நிறுவனத்தின் மூலம் தொழில்நுட்ப உதவி (திரவ மேலாண்மை) வழங்க ஏற்பாடு செய்த இந்திய தூதரகத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 13 பேரும் உயிருடன் மீட்கப்பட்ட செய்தியைக் கேட்டு எங்கள் நாட்டு மக்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்கள். தாய்லாந்து மட்டுமல்லாது பல்வேறு நாடுகளின் நிபுணர்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் இந்த மீட்புப் பணி சாத்தியமாகி இருக்காது.

இந்த மீட்பு பணியில் இந்திய அரசும் தனியார் துறையும் பெருந்தன்மையுடன் உதவியது இரு நாடுகளுக்கும் இடையே இதயப்பூர்வமான நட்புள்ளது என்பதை பிரதிபலிக்கிறது. அதற்காக, உங்களுக்கும் இந்திய மக்களுக்கும் தாய்லாந்து அரசு, மக்கள், குகையில் சிக்கியவர்களின் குடும்பத்தினர் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உதவி செய்த இந்திய நிறுவனம்

தாய்லாந்து குகையில் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரை மீட்க, வில் உள்ள ‘கிர்லோஸ்கர் பிரதர்ஸ் லிமிடெட்’ நிறுவனம் பல உதவிகளை செய்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு ‘கிர்லோஸ்கர் பிரதர்ஸ் லிமிடெட்’ (கேபிஎல்) நிறுவனம் செயல்படுகிறது. இதுகுறித்து கேபிஎல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தாய்லாந்து குகையில் 13 பேர் சிக்கியது, குகைக்குள் வெள்ளம் சூழ்ந்ததை அறிந்த இந்திய அரசு, எங்கள் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவிகளையும், நிபுணர்களையும் பயன்படுத்திக் கொள்ள தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் பரிந்துரை செய்துள்ளது. அதை ஏற்று தாய்லாந்து அதிகாரிகள் எங்களைத் தொடர்பு கொண்டனர். அதன்படி இந்தியா, தாய்லாந்து மற்றும் பிரிட்டனில் உள்ள எங்கள் நிபுணர்களை குகைக்கு அனுப்பி வைத்தோம்.

குகைக்குள் சூழ்ந்திருந்த வெள்ளத்தை வெளியேற்ற எங்கள் நிபுணர்கள் நடவடிக்கை எடுத்தனர். ஜூலை 5-ம் தேதி முதல் ராட்சத மோட்டார்கள் வைத்து குழாய்கள் மூலம் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டது. அதற்காக மகாராஷ்டிராவின் கிர்லோஸ்கர்வாடி தொழிற்சாலையில் இருந்து 4 அதிக திறன் கொண்ட மோட்டார் பம்ப்புகளை விமானத்தில் தாய்லாந்துக்கு அனுப்பி வைத்தோம். இவ்வாறு கேபிஎல் நிறுவனம் அறிக்கையில் கூறியுள்ளது. - பிடிஐ

NEWS TODAY 28.01.2026