Saturday, July 14, 2018

நாட்டின் 3-வது திருநங்கை நீதிபதி :அசாமில் இன்று பதவியேற்பு

Updated : ஜூலை 14, 2018 07:13 | Added : ஜூலை 14, 2018 07:09



கவுகாத்தி: மகாராஷ்டிரா,மே.வங்கத்தை தொடர்ந்து அசாம் மாநிலத்தில் திருநங்கை ஒருவர் நாட்டின் மூன்றாவது நீதிபதியாக இன்று பதவியேற்கிறார்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம் மாநிலத்தில் லோக் அதாலத் நீதிமன்றத்தின் நீதிபதிகளில் ஒருவராக சுவாதிபிதான் ராய் என்ற திருநங்கை ஒருவர் நீதிபதியாக இன்று பதவியேற்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில் : என்னை நீதிபதியாக நியமனம் செய்திருப்பதுஎன்னுடைய சமுதாயத்திற்கு மிகவும் சாதகமான விசயமாகும். மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எதிரான பாகுபாடுகுறித்த விழிப்புணர்வை உருவாக்க இது உதவும் என கூறினார். மூன்றாம் பாலினத்தவர்களின் திறன் அங்கீகரிக்கப்பட வேண்டும். அது அவர்களின் கண்ணியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்று உறுதி செய்ய போதுமான வாய்ப்பாக வழங்கப்பட வேண்டும்.

மேலும் பல்வேறு நீதிமன்றங்களில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எதிராக பல தீர்க்கப்படாத வழக்குகள் உள்ளன. அவை விரைவில் தீர்க்கப்படும் என தான் நம்புவதாகவும்,ஒரு நீதிபதியாக இயற்கையான நீதிக்கான கொள்கையை நான் பராமரிக்க முடியும் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
கடந்த 20170-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஜோயிதா மோன்தால் நாட்டின் முதல் திருநங்கை நீதிபதியாக பதவியேற்றார். தொடர்ந்து 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த வித்யா கம்ப்ளே நாக்பூரில் 2-வது திருநங்கை நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.

தமிழத்திலும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த திருநங்கை சத்ய்ஸ்ரீ சர்மிளா என்பவர் கடந்த மாதம் 30-ம் தேதி இந்தியாவின் முதல் திருநங்கை வக்கீலாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில செய்திகள்

2-வது மாடியில் இருந்து தள்ளியதால் கல்லூரி மாணவி பலி : போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்





கோவையை அடுத்த நரசீபுரம் விராலியூர் சாலையில் உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று முன்தினம் நாட்டு நலப்பணித்திட்ட (என்.எஸ்.எஸ்.) மாணவர்களுக்கான பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது.

பதிவு: ஜூலை 14, 2018 05:45 AM

கோவை,

ஆறுமுகம் (வயது 31) என்பவர் இந்த பயிற்சியை நடத்தினார். காலை 11 மணி முதல் 1.30 மணி வரை பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. அதன்பின்னர் பிற்பகல் 3 மணி முதல் செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. உயரமான கட்டிடங்களில் தீப்பிடித்தால் கீழே குதித்து தப்பிப்பது எப்படி? என்ற பயிற்சி செய்து காட்டப்பட்டது.

இதற்காக கல்லூரி வளாகத்தில் உள்ள 3 மாடி கட்டிடத்தின் 2-வது மாடியின் ஜன்னல் மேல் உள்ள ஷன் ஷேடு பகுதியில் இருந்து மாணவர்களை கீழே குதிக்க வைத்தனர். பயிற்சியாளர் ஆறுமுகம் ஷன் ஷேடு பகுதியில் நின்று கொண்டு மாணவர்கள் ஒவ்வொருவராக குதிக்கவைத்தார். 2-வது மாடியின் ஷன் ஷேடு பகுதியில் இருந்து கீழே குதிக்கும் மாணவர்களை பாதுகாப்பாக பிடிப்பதற்காக சில மாணவர்கள் கீழே பெரிய வலையை கையில் பிடித்து தயாராக நின்றனர்.

முதலில் சில மாணவர்கள் கீழே குதித்தனர். அவர்களை கீழே நின்ற மாணவர்கள் வலையை விரித்து பிடித்து காப்பாற்றினார்கள். அதன்பின்னர் 2 மாணவிகள் 2-வது மாடியில் இருந்து குதித்தனர்.

இந்த பயிற்சியில் தொண்டா முத்தூர் அருகே உள்ள நாதே கவுண்டன்புதூரை சேர்ந்த நல்லா கவுண்டர்-சிவகாமி தம்பதியரின் மகள் லோகேஸ்வரி (19) என்ற மாணவியும் பங்கேற்றார். இவர் அந்த கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

பயிற்சியின் போது 2-வது மாடியின் ‘சன் ஷேடு’ (சிலாப்) பகுதியில் மாணவி லோகேஸ்வரி நின்றார். உயரமான இடத்தில் இருந்து கீழே பார்த்ததும் பயம் ஏற்பட்டதால் அவர் உட்கார்ந்து கொண்டார். ஆனால் பயிற்சியாளர் ஆறுமுகம், “சும்மா குதியுங்கள். கீழே வலை உள்ளது” என்று கூறியும் லோகேஸ்வரி குதிக்க மறுத்து ‘சன் ஷேடு’ பகுதியை கெட்டியாக பிடித்துக்கொண்டார்.

ஆனால் பயிற்சியாளர் ஆறுமுகம் விடாப்பிடியாக, குதிக்குமாறு வற்புறுத்தியதால் அவர் பயத்தில் கூச்சலிட்டார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பயிற்சியாளர் லோகேஸ்வரியை வலுக் கட்டாயமாக கீழே தள்ளி விட்டார்.

இதனால் அலறிக்கொண்டே கீழே விழுந்த மாணவி லோகேஸ்வரியின் தலை மற்றும் கழுத்து பகுதி முதல் மாடியின் ‘சன் ஷேடு’ பகுதியில் இடித்தது. இதனால் பலத்த காயம் அடைந்தார். தரையை நோக்கி வேகமாக வந்த அவரை, கீழே நின்றிருந்த மாணவர்கள் தங்களது கைகளில் விரித்து வைத்திருந்த வலையில் பிடித்தனர்.

படுகாயம் அடைந்ததால் மாணவி லோகேஸ்வரி வேதனையில் முனங்கியபடி சுய நினைவு இழந்து கிடந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை தொண்டாமுத்தூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

இந்த சம்பவம் நடந்து பல மணி நேரம் கழித்து தான் ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மாணவி லோகேஸ்வரி இறந்தது குறித்து தகவல் அறிந்த அவரது பெற்றோர், உறவினர்கள் அலறி அடித்துக்கொண்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். மாணவியின் உடலை பார்த்து அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

இது தொடர்பாக மாணவியின் தந்தை நல்லா கவுண்டர் ஆலாந்துறை போலீசில் அளித்த புகாரின் பேரில் பயிற்சியாளர் ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இவர் சென்னையை அடுத்த மாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. இவர் மீது இந்திய தண்டனை சட்டம் 304(2) (இறப்பு ஏற்படும் என்று தெரிந்தும் உயிரிழப்பை ஏற்படுத்துதல்) பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குப்பிரிவு கொலை முயற்சிக்கு இணையான பிரிவு என்றும், இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

மாணவி லோகேஸ்வரியின் உடல் கோவை அரசு ஆஸ்பத்திரி சவ கிடங்கில் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆஸ்பத்திரி வளாகத்தில் மாணவியின் உறவினர்கள் கல்லூரி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் ஏராளமானவர்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் மாணவியின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. பிரேத பரிசோதனை முடிந்து நேற்று மதியம் 1 மணி அளவில் மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன்பிறகு மாணவி லோகேஸ்வரியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் நாதே கவுண்டன்புதூரில் உள்ள அவருடைய வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், மத்வராயபுரத்தில் உள்ள மின் மயானத்தில் மாணவியின் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மாணவி லோகேஸ்வரி இறந்ததை தொடர்ந்து அவர் படித்த கல்லூரிக்கு வருகிற திங்கட்கிழமை வரை விடுமுறை விடப்பட்டு உள்ளது. மேலும் கல்லூரியின் நுழைவுவாயில் பூட்டப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, போலீசார் நடத்திய விசாரணையில், மாணவி லோகேஸ்வரியின் மரணத்துக்கு காரணமான ஆறுமுகம் போலி பயிற்சியாளர் என்ற திடுக்கிடும் தகவல் வெளியானது.

ஆறுமுகம் டெல்லியில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பயிற்சி பெற்றதாகவும், அதற்கான கடிதத்தை கல்லூரி நிர்வாகத்திடம் காண்பித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த கடிதத்தை போலீசார் ஆய்வு செய்ததில் அந்த கடிதம் போலியானது என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இந்த சம்பவத்துக்கு காரணமான பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மாணவி கீழே விழுந்த வீடியோ பதிவு உள்ளது. அதன் மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கும் போது சில விதிமுறைகள் உள்ளன. அவை பின்பற்றப்பட்டதா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பயிற்சியாளர் ஆறுமுகம் அந்த கல்லூரிக்கு அவராகவே சென்று பயிற்சி அளிப்பதாக கூறி உள்ளார். இதற்காக கடந்த 3-ந் தேதி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் இருந்து வந்ததாக கூறி ஒரு கடிதத்தை கல்லூரி முதல்வரிடம் கொடுத்து இருக்கிறார். அந்த கடிதத்தில் முத்திரை கூட கிடையாது. அந்த கடிதத்தை அவராகவே தயாரித்ததாக தெரிகிறது. அது போலி கடிதம் ஆகும்.

மேலும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் அவர் பயிற்சி பெற்றதாக கூறி உள்ளார். அந்த சான்றிதழ்கள் போலியானது என்று தற்போது தெரியவந்து உள்ளது. அவர் அங்கு பயிற்சி பெறவில்லை.

அவர் போலி சான்றிதழ்களை கொண்டு கடந்த 6 ஆண்டுகளாக கோவை மற்றும் பிற மாவட்டங்களில் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து இருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்து உள்ளது. இதன் மூலம் பயிற்சியாளர் ஆறுமுகம் மீது மேலும் சில பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படும். பயிற்சியாளர் அளித்த முகவரி உண்மையானது தானா? என்றும் சென்னை போலீசார் மூலம் விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
தலையங்கம்

சி.பி.எஸ்.இ.யின் தவறால் மாணவர்களுக்கு பாதிப்பா?



இந்த ஆண்டு ‘நீட்’ தமிழ் தேர்வில் நிறைய கேள்விகள் தவறாக கேட்கப்பட்டு இருந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எம்.பி.யான டி.கே.ரங்கராஜன் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

ஜூலை 14 2018, 03:00

இந்த ஆண்டு ‘நீட்’ தமிழ் தேர்வில் நிறைய கேள்விகள் தவறாக கேட்கப்பட்டு இருந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எம்.பி.யான டி.கே.ரங்கராஜன் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட 180 வினாக்களில் 49 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டன. எடுத்துக்காட்டாக, ‘ரகம்’ என்ற வார்த்தைக்கு பதிலாக ‘நகம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ‘சிறுத்தை’ என்ற வார்த்தைக்கு பதிலாக ஆங்கில வார்த்தையான ‘சீத்தா’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இவ்வாறு 49 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டிருந்ததால், ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் வீதம் 196 மதிப்பெண்கள் கொடுக்கப் படவேண்டும் என்று அந்த வழக்கில் கூறப்பட்டிருந்தது. நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது இந்த வழக்கை விசாரித்து மொழி மாற்றத்தில் தவறு நடந்திருக்கிறது என்பதை உறுதிபடுத்தினர்.

தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 49 கேள்விகளுக்கும் தலா 4 மதிப்பெண் வீதம் ஒவ்வொரு வருக்கும் கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும். இந்த மதிப்பெண்கள் அடிப்படையில் புதிய தரவரிசை பட்டியல் 2 வாரத்தில் வெளியிடப்படவேண்டும் என்று உத்தரவிட்டனர். மொத்தம் 720 மதிப்பெண்களில், தமிழில் தேர்வு எழுதிய ஏறத்தாழ 24 ஆயிரம் மாணவர் களுக்கு இந்த 196 மதிப்பெண்கள் கூடுதலாக கொடுக்கப்பட இருக்கிறது. இந்த அடிப்படையில் புதிய தரவரிசை பட்டியல் வெளியிட்டால், தமிழில் தேர்வு எழுதிய 780 மாணவர்களுக்கு மருத்துவக்கல்லூரியில் இடம் கொடுக்கவேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும். ஏற்கனவே கவுன்சிலிங் மூலம் இடம் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்ட 3,501 மாணவர்களின் இடங்களில் இருந்துதான் இந்த 780 பேருக்கும் இடம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை வரும். நிச்சயமாக அப்போது பெரிய குழப்பம் ஏற்படும். இந்த நிலைக்கு சி.பி.எஸ்.இ.தான் முழு பொறுப்பு. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சி.பி.எஸ்.இ. சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்போகிறது.

மாநில மொழிகளில் ‘நீட்’ தேர்வு எழுதும் மாணவர் களுக்கு அவர்கள் மாநில மொழியுடன் ஆங்கிலத்திலும் கேள்வித்தாள் வழங்கப்படும். ஒருவேளை மாநில மொழியில் மொழிபெயர்ப்பு தெளிவாக இல்லாமல் இருந்தால் ஆங்கில கேள்வித்தாளே இறுதியானதாக கருதப்படும் என்ற விதிகளை சி.பி.எஸ்.இ. தாக்கல் செய்யும் என்று கூறப்படுகிறது. ஆக, இனி முடிவு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகுதான் இருக்கிறது. சி.பி.எஸ்.இ. இவ்வாறு 49 கேள்விகளை தவறாக மொழிமாற்றம் செய்து, கேள்விகளை கேட்டிருந்தது நிச்சயமாக ஏற்புடையதல்ல. எதிர்காலத்தில் தமிழில் வினாக்களை தயாரிக்கும்போது, நல்ல நிபுணர்களின் துணையோடு தான் தயாரிக்கவேண்டும். விடைகளில் தவறு வரலாம். வினாக்களில் நிச்சயமாக தவறு ஏற்படக்கூடாது. தமிழக அரசும் தமிழ் மொழி வழிகல்வியில் படிக்கும் மாணவர் களுக்கு ஆங்கிலத்திலும் திறமையை வளர்க்க வேண்டும். ஒருவேளை சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.எஸ்.இ. அப்பீலில் இந்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்டால், இந்த 780 இடங்களையும் இந்த ஒரு ஆண்டுக்கு மட்டும் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், சுயநிதி கல்லூரிகளிலும் கூடுதலாக கொடுக்கவேண்டும். இதுமட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் அவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் அவர்களுக்கான கல்வி கட்டணத்தை மத்திய அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

Friday, July 13, 2018

Recovery Of Salary Of Teachers On Election Duty For Non-Performance Of Teaching Duty; Patna HC Asks Education Dept Not To Pass ‘Absurd’ Orders [Read Judgment] | Live Law

Recovery Of Salary Of Teachers On Election Duty For Non-Performance Of Teaching Duty; Patna HC Asks Education Dept Not To Pass ‘Absurd’ Orders [Read Judgment] | Live Law: If the petitioner refused to join election duty, he is liable to be prosecuted and disciplinary action. If he carried the direction and discharged the duty

No Exemption For Woman To Appear Before Enforcement Directorate”, Madras High Court Dismisses Nalini Chidambaram’s Challenge Against Summons Under Money Laundering Act | Live Law

No Exemption For Woman To Appear Before Enforcement Directorate”, Madras High Court Dismisses Nalini Chidambaram’s Challenge Against Summons Under Money Laundering Act | Live Law: A Division Bench of the Madras High Court has dismissed the challenge made by Senior Advocate Nalini Chidambaram against the summons
Press Information Bureau 

Government of India


Ministry of Health and Family Welfare


12-July-2018 14:07 IST 


Use of Aadhaar in Ayushman Bharat – Desirable and not “Must”


Some newspapers have reported today that the use of Aadhaar Card will be a “must” to avail benefits under the Ayushman Bharat – National Health Protection Mission.

This is factually incorrect.

Notification of the Ayushman Bharat – National Health Protection Mission being issued by MoHFW under Section 7 of the Aadhaar Act, merely enables the implementation agencies to ask for the beneficiary Aadhaar Card to authenticate their identity. In order to authenticate the identity of beneficiaries accurately, the use of Aadhaar card is preferable, but it is not a “must”. There shall be no denial of benefit for want of Aadhaar number.

The Union Health Minister Shri J P Nadda confirmed that “we will provide services to all eligible beneficiaries with or without Aadhaar cards.”

The draft notification also provides for exception handling mechanism, viz production of alternate identification mechanisms such as Ration Card, Voter ID Card, MGNREGA Card etc. (as mentioned in the notification) in case the beneficiary does not have an Aadhaar No. Furthermore, it also makes the implementation agencies accountable for setting up of Aadhaar enrollment centers for the beneficiaries who are not yet enrolled for Aadhaar, at convenient locations.

ABNHPM guidelines on beneficiary identification very clearly state that beneficiaries can bring Aadhar or any other valid government id(s) decided by the State if they do not have an Aadhaar.

https://www.abnhpm.gov.in/sites/default/files/201806/GuidelinesonProcessofBeneficiaryIdentification_0.pdf

Selection committee Notification


NEWS TODAY 28.01.2026