Sunday, July 15, 2018

அவசியத்திற்கு போராட வேண்டும், அனாவசியத்திற்கு போராடக்கூடாது: நீதிபதி என்.கிருபாகரன்

By DNS | Published on : 14th July 2018 05:57 PM |




நெய்வேலி: அரசியல், வீடு, சமூகம் எங்கும் இணக்கமில்லை, எதிர் மறையான சிந்தனையே உள்ளது. அவசியத்திற்கு போராட வேண்டும், அனாவசியத்திற்கு போராடக்கூடாது. இந்நிலையை மாற்றி சரியான பாதைக்கு மாணவா்களாகிய நீங்கள் தான் கொண்டுச்செல்ல வேண்டும் என்று சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி என்.கிருபாகரன் பேசினார்.

கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள டாக்டா் நா.மகாலிங்கம் கலையரங்கில் ஓபிஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஆர்.செல்வராஜ் எழுதிய அருட்செல்வரின் தருமத்தின் தவம் என்ற நூல் வெளியிட்டு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நூலை வெளியிட்டு பேசினார்.

அப்போது, கல்வி தற்போது வியாபாரமாகி விட்டதாகக் கூறுகின்றனா். அந்த வியாபாரத்தில் கொஞ்சமும் எதிர்பார்ப்பு இல்லாமல் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என சொல்லக்கூடிய நிறுவனம் ஓபிஆா் கல்வி நிறுவனம்.

நடிகா்கள், அரசியல் கட்சித்தலைவா்கள் பேசினால் கை தட்டல்கள் எழும். ஆனால், ஒரு கல்வி நிறுவனத்தின் செயலர் பேசுகையில் கை தட்டல் எழுந்தால் அவா் எந்த அளவிற்கு அரும்பணியாற்றியிருக்க வேண்டும்.

மருத்துவ தொழிலை தவிர வேறு எந்தத் தொழிலும் கிடையாது என சில பெற்றோர்கள் நினைக்கின்றனா். மருத்துவர் ஆக வேண்டும் என்று குழந்தை பருவம் முதலே மனப்பால் கொடுத்து வளர்க்கின்றனர். அதை அடைய முடியாத நிலையில் அந்த குழந்தை தற்கொலை செய்துக்கொள்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலை இருக்கக் கூடாது.

மருத்துவராக நினைக்கின்றனா். ஆக முடியாத நிலையில் பொறியாளா், ஆசிரியர், நல்ல அரசியல் வாதியாகலாம். நல்லவா்கள் வந்தால் தான் அரசியல் நன்றாக இருக்கும். ஆகவே, எந்தவொரு தொழிலாக இருந்தாலும் சரி நோ்மையாக நடந்துக்கொண்டால் தவறு ஏதுமில்லை.

கிராமத்தில் படித்தாலும், தமிழ் வழியில் படித்தாலும் உங்களின் உழைப்பு, நன்நடத்தை உங்களை உயா்ந்த இடத்திற்குக் கொண்டு செல்லும். தாய், தந்தையரை கடவுளாக போற்ற வேண்டும். ஆசிரியருக்கு மரியாதை செலுத்த வேண்டும். உற்றார் உறவினா்களிடையே விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். இதுதான் வாழ்க்கை.

எல்லோரும் சோ்ந்து வாழ்வது, விட்டுகொடுப்பது, இணக்கமாக இருப்பது, இருப்பதை கொடுப்பது போன்ற கொள்கைகளை கடைபிடித்தால் அமைதி மட்டும் தான் இருக்கும். மற்றவா்கள் உங்களை இழிவு படுத்தி பேசினாலும், அவா்கள் மனம் புண்படும் வகையில் நீங்கள் பேசக்கூடாது. வாதத்தை மென்மையானதாக இருக்க வேண்டும்.

சுதந்திரத்திற்காக பலா் தியாகம் செய்துள்ளனா். காந்தி, நேரு கண்ணுக்கு தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் பலா் உள்ளனா். அவா்கள் பெற்று தந்த சுதந்திரம் தான் நமது சுதந்திரம். இது வீணாகக்கூடாது. அரசியல், வீடு, சமூகம் எங்கும் இணக்கம் இல்லை. எதிர்மறை சிந்தனையே உள்ளது. இந்த சூழ்நிலையை சரியான திசைக்கு மாணவா்களாகிய நீங்கள் தான் கொண்டு செல்ல வேண்டும். அப்போதுதான் போராட்ட வீரா்களின் ஆம்மா சாந்தி அடையும்.

கல்வி வேண்டும் அதுவும் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும். அந்த மகிழ்ச்சிதான் உலக வாழ்க்கை. தற்போது சமூதாயத்தில் ஒத்துச்செல்லும் குணங்கள் இல்லை. ஜாதி, மதம், அரசியல், கட்சிகள் என பலவாக பிரிந்து கிடக்கிறார்கள். பள்ளி, கல்லூரியில் மகிழ்ச்சியான சூழல் உருவாகிறது என்றால் அந்த சமுதாயமே மகிழ்ச்சியான சமுதாயமாக அமையும். அங்கு பிரிவினை, ஏற்றத் தாழ்வுகள், சாதி, மதம், பிரிவினைகள் இருக்காது. சுத்த சன்மார்க்க வள்ளலார் கண்ட வழி அங்கே பிறக்கும்.

இப்போது எந்த இடத்தில் இருந்தாலும் எதிர் மறையான செயல்கள் நடக்கின்றன. எதற்கெடுத்தாலும் போராட்டங்கள். நமக்கு பகுத்தறிவு சிந்தனை வேண்டும். அவசியத்திற்கு போராட வேண்டும், அனாவசியத்திற்கு போராடக்கூடாது. தமிழ் தொன்மையான மொழி, அதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. நாம் பல அறிய பொக்கிஷங்களை அழித்து விட்டோம், அதன் பெருமை தெரியாமல். தமிழ்மொழி கடல் கடந்து பேசக்கூடிய மொழி. தமிழ் மொழியை நாம் பறைச்சாற்ற வேண்டும் என்றார்.
நீட் தேர்வு: கூடுதல் மதிப்பெண் வழங்கும் உத்தரவை எதிர்த்து சென்னை மாணவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

By DIN | Published on : 14th July 2018 10:00 PM 




புதுதில்லி: நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கும் உத்தரவை எதிர்த்து உச்ச நீதமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

நீட் தேர்வு வினாத்தாள் மொழி பெயர்ப்பில் பிரச்னை இருந்ததாக கூறி சிபிஎம் கட்சி எம்.பி. டி.கே.ரங்கராஜன் தாக்கல் செய்தல் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதலாக 196 கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், சென்னையை சேர்ந்த சத்ய தேவ் என்ற மாணவன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவால் கலந்தாய்வு மூலம் சேர்ந்த தனக்கு பாதிப்பு வரக்கூடாது என மாணவர் சத்யா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

இதேபோன்று தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வில் 69 சதவிகித இட ஒதுக்கீடு பின்பற்றுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓசி பிரிவை சேர்ந்த 2 மாணவர்கள் மனு தாக்கல் செய்துள்ளார்.

69 சதவிகித இடஒதுக்கீட்டை 50 சதவிகிதமாக குறைக்கவேண்டும் என இடஒதுக்கீடு இல்லாத (ஓசி) பிரிவை சேர்ந்த மாணவர்கள் முத்துராமகிருஷ்ணன், சத்தியநாராயணன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அம்மை பாதிப்பு மாணவி கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதி

Added : ஜூலை 15, 2018 02:23

சென்னை:அம்மை நோயால் பாதிக்கப்பட்டு, துணை தேர்வு எழுதிய மாணவியை, மருத்துவ கவுன்சிலிங்கிற்கு பரிசீலிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த, ஜெயகுமார் தாக்கல் செய்த மனு:என் மகள் ஹரிணி, ௨௦௧௭ மார்ச்சில் நடந்த, பிளஸ் ௨ தேர்வை எழுதினார். இந்த தேர்வின் போது, அம்மை நோயால் பாதிக்கப்பட்டதால், இயற்பியல், வேதியியல், விலங்கியல் ஆகிய பாடங்களின் தேர்வுகளை எழுத முடியவில்லை. 

குணமடைந்த பின், ஜூன் மாதம் நடந்த, துணை தேர்வில், மூன்று பாடங்களுக்கான தேர்வையும் எழுதி, தேர்ச்சி பெற்றார்.
நிராகரிப்புகடந்த, 2017 - 18ம் ஆண்டுக்கான மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்தார். விண்ணப்பத்தை குறித்த நேரத்தில் சமர்ப் பித்தாலும், மூன்று பாடங்களுக்கான தேர்வு முடிவு வராததால், மதிப்பெண் விபரங்களை, விண்ணப்பத்தில் குறிப்பிட முடியவில்லை; விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.எனவே, 2017 மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் எழுதிய தேர்வுகளை ஒன்றாக சேர்த்து, முதல் முறையாக எழுதியதாக கருதி, மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங்கில் அனுமதிக்கும்படி உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை, நீதிபதி, எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர், ஆர்.மலைச்சாமி, தேர்வு குழு சார்பில், கூடுதல் அரசு பிளீடர் ராஜபெருமாள் ஆஜராகினர்.

பரிசீலனை

நீதிபதி பிறப்பித்த உத்தரவு:பிளஸ் ௨ தேர்வில், முதன் முறையாக எழுதி பெற்ற மதிப்பெண்கள் தான் பரிசீலிக்கப்படும்; பகுதி பகுதியாக தேர்வு எழுதி பெறும் மதிப்பெண்கள் பரிசீலிக்கப்படாது என, அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.அம்மை நோயால், மாணவி பாதிக்கப்பட்டுள்ளார். அதற்கான மருத்துவ சான்றிதழையும் தாக்கல் செய்துள்ளார். இதை, அரசும் மறுக்கவில்லை.

தன்னை மீறி நடந்த காரியத்தால், ஒரு மாணவியால் தேர்வு எழுத முடியவில்லை. அதன்பின், எழுதிய துணை தேர்வை, பகுதி பகுதியாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அம்மை நோயால் பாதிக்கப்பட்ட மாணவியை, தேர்வு மையத்துக்குள் கண்டிப்பாக அனுமதித்திருக்க மாட்டார்கள். மற்றவர்களுக்கு பரவக்கூடும் என்பதால், மாணவியை அனுமதிக்காமல், ஆசிரியர் தடுத்திருப்பார்.

ஒவ்வொரு விதிமுறைக்கும், விதிவிலக்கும் உண்டு. இந்த வழக்கைப் பொறுத்தவரை, தேர்வு எழுத முடியாமல் போனதற்கு, மாணவிக்கு நியாயமான காரணங்கள் உள்ளன. எனவே, துணை தேர்வில் எழுதிய பாடங்களை, முதல் முறையாக எழுதியதாக கணக்கில் கொள்ள வேண்டும். 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றால், கவுன்சிலிங்கிற்கு மாணவியை பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
ஆடி அமாவாசை அன்று கொடுமுடியில் பித்ரு தர்ப்பணம்

Added : ஜூலை 15, 2018 04:55 |


சேலம்:தட்சிணாயண புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசை, முன்னோர் வழிபாட்டுக்கு சிறந்தது. அதனால் அளவற்ற நன்மைகள் உண்டாகும்.

காலைக்கதிர் 'ஆன்மிகக்கதிர்' வார இதழ் வாசகர்களுக்காக ஆடி அமாவாசை அன்று 'சமஷ்டி தர்ப்பணம்' நிகழ்ச்சியை நடத்துகிறது. ஈரோடு மாவட்டம், கொடுமுடி, ஏமகண்டனுார் காவிரி கரையில் ஆடி அமாவாசையான ஆக., 11ல், வேத விற்பனர்களால் 'சமஷ்டி தர்ப்பணம்' நிகழ்ச்சி நடக்கிறது. அதில் கணபதி பூஜை, அமாவாசை சங்கல்பம், வருண கலச பூஜை, நவகிரக பூஜை, பித்ரு பூஜை, பித்ரு பிண்ட பூஜை, தர்ப்பணம், தீபாராதனை, சூரிய நமஸ்காரம், பித்ரு பிரசாத ஆசீர்வாதம், கோ பூஜை (பித்ருக்களுக்கான சமஷ்டி ஹோமம்) நடக்கிறது. பங்கேற்க கட்டணம் உண்டு. காலை 6:30 - 7:00; 7:15 - 7:45; 8:00 - 8:30; 8:45 - 9:15; 9:30 - 10:00 மணி வரை என ஐந்து பிரிவாக நடக்கும்.

ஆடி அமாவாசையில் முன்னோர் ஆசி பெற்று எல்லா வளங்களையும் பெற, வரும் 25ம் தேதிக்குள் 95976 66400 என்ற எண்ணில் முன்பதிவு செய்யலாம்.
'நீட்' தேர்வு முடிவு: இன்று வெளியீடு

Added : ஜூலை 15, 2018 02:24

சென்னை:உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன.நாடு முழுவதும், உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளான, டி.எம்., - எம்.சி.எச்., போன்றவற்றை படிக்க, அரசு மருத்துவக்கல்லுாரிகளில், 1,215 இடங்கள் உள்ளன. அதிகபட்சமாக, தமிழகத்தில், 192 இடங்கள் உள்ளன.

இந்நிலையில், 2018 - 19ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, நீட் தேர்வு, ஜூலை, 6ல் நடந்தது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், நெல்லை உட்பட, நாடு முழுவதும், 42 நகரங்களில் தேர்வு நடந்தது.தேர்வு முடிவுகள், www.nbe.edu.in என்ற இணையளத்தில், இன்று வெளியிடப்பட உள்ளன. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கவுன்சிலிங்கை, மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் நடத்துகிறது.

கவுன்சிலிங் அட்டவணை உள்ளிட்ட விபரங்கள், www.mcc.nic.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் அபாய சங்கிலியை இழுத்த பயணியரிடம் ரூ.2.8 லட்சம் வசூல்

Added : ஜூலை 15, 2018 00:58 |

சென்னை:உரிய காரணமின்றி அபாய சங்கிலியை இழுத்து, ரயிலை நிறுத்திய பயணியரிடம், 2.8 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
அவசர கால உதவிக்கும், அசம்பாவிதம் ஏற்படும் போதும், ரயிலை நிறுத்த ஏதுவாக, பெட்டிகளில் அபாய சங்கிலிகள் பொருத்தப்பட்டு உள்ளன.கடந்த, 1989ம் ஆண்டு ரயில்வே சட்டப்படி, உரிய காரணமின்றி அபாய சங்கிலியை பிடித்து இழுத்தால், 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையிலும் பல்வேறு பயணியர், உரிய காரணமின்றி அபாய சங்கிலியை பிடித்து இழுத்து, ரயிலை நிறுத்துவது தொடர்கிறது.

 பயணியரின் இந்த பொறுப்பற்ற செயலை தடுக்க, தெற்கு ரயில்வே துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.அதன்படி, ரயில் பெட்டியில் இருந்து உடைமைகள் தவறி கீழே விழுந்து விட்டது, நிலையங்களில் தண்ணீர் பிடிக்க சென்ற போது ரயில் புறப்பட்டுவிட்டது, உடைமைகளை காணவில்லை போன்ற சின்ன சின்ன காரணங்களுக்காக அபாய சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தியதாக பயணியர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், 2018 ஜூன் வரை, ரயில்களில் அபாய சங்கிலியை இழுத்த பயணியர், 744 பேர் மீது, தெற்கு ரயில்வேயில் புகார் பதிவு செய்யப்பட்டது.இதில், 737 பேரிடம், 2.8 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் நேர்ந்தால், ரயில்வே பாதுகாப்பு படை உதவி மையத்திற்கு, 182 மற்றும் 1512 என்ற எண்களிலும், ரயில்வே பயணியர் உதவி மையத்திற்கு, 138 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
தேவையற்ற காரணங்களுக்காக, அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தக் கூடாது என, ரயில்வே நிர்வாகம் சார்பில், பயணியருக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
வருமான வரி கணக்கு, தாக்கல்,அபராதம்

சென்னை: வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதோருக்கு, 1,000, 5,000, 10 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதிக்கும் நடைமுறை, இந்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது. எனவே, வரும், 31ம் தேதிக்குள், கணக்கு சமர்ப்பிக்க வேண்டும் என, வருமான வரித்துறை, கண்டிப்பான ஆணை பிறப்பித்துள்ளது. அதன்பின், தாக்கல் செய்யப்படும் வரி கணக்குகளுக்கு, அபராதம் உண்டு என்றும், இந்த மதிப்பீட்டு ஆண்டுக்கான கணக்கை, 2019 மார்ச், 31க்கு பின், தாக்கல் செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

வருமான வரித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு:

வருமான வரி சட்டத்தின் கீழ், தங்கள் கணக்குகளுக்கு தணிக்கை தேவைப்படாத பிரிவினர், 2018 - 19ம் மதிப்பீட்டு ஆண்டிற்கான, அதாவது, 2017 - 18ம் நிதியாண்டிற்கான, வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய, வரும், 31ம் தேதி




கடைசி நாள். மாத ஊதியம், ஓய்வூதியம், வீட்டு சொத்தில் இருந்து வருமானம் பெறுவோர், மூலதன மதிப்பு உயர்வு, வர்த்தகம் அல்லது தொழில் வாயிலாக வருமானம் பெறுவோர், இதர வருமானம் பெறுவோர் ஆகியோர், இந்த வகையின் கீழ் வருகின்றனர். வருமான வரி கணக்கை, அதற்குரிய நாளான, வரும், 31க்கு முன்னதாக தாக்கல் செய்பவர்களுக்கு கட்டணம் எதுவுமில்லை. மொத்த வருமானம், ஐந்து லட்சம் ரூபாய்க்கு மிகாமல் உள்ளவர்கள், வருமான வரி கணக்கை, வரும், 31க்கு பின், 2019 மார்ச் மாதத்திற்கு முன் தாக்கல் செய்தால், 1,000 ரூபாய் தாமத கட்டணமாக செலுத்த வேண்டும்.

மொத்த வருமானம், ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்கள், கணக்கை இந்த மாதத்திற்குப்பின், வரும் டிசம்பருக்கு முன்னதாக தாக்கல் செய்தால், 5,000 ரூபாய் தாமத கட்டணம் செலுத்தியாக வேண்டும். மொத்த வருமானம், ஐந்து லட்சம் ரூபாய்க்கு அதிகமாக இருப்போர், வருமான வரி கணக்கை, 2018 டிச., மாதத்திற்கு பின், 2019 மார்ச் மாதத்திற்கு முன் தாக்கல் செய்தால், 10 ஆயிரம் ரூபாய் தாமத கட்டணம் செலுத்த வேண்டும்.வருமான வரி சட்டத்தின், புதிய நடைமுறைகளின் படி, சம்பந்தப்பட்ட மதிப்பீட்டு ஆண்டின் இறுதிக்கு பின், எந்தவித வருமான வரி கணக்கும்

தாக்கல் செய்ய இயலாது. உதாரணமாக, மதிப்பீட்டு ஆண்டான, 2018 - 19க்கு, மார்ச், 2019க்கு பின், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாது.
இதற்கு முன், 2020 மார்ச், 31 வரை அவகாசம் தரப்பட்டிருந்தது.மேலும், அனைத்து வரி செலுத்துவோரும், தங்கள் வருமான வரி கணக்குகளை, மின்னணு முறையில் தாக்கல் செய்ய வேண்டும். மாத ஊதியம், இதர ஊதியங்கள் மற்றும் ஒரே ஒரு வீட்டு சொத்தில் இருந்து வருமானம் பெறுவோர் அல்லது தோராய வருமானம் உடையவர், நிபந்தனைகளுக்கு உட்பட்டு, வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம்.வருமான வரி செலுத்துவதற்கு வசதியாக, சென்னை, நுங்கம்பாக்கம், ஆயக்கர் பவன் வளாகத்தில், வருமான வரி கணக்கு, முன் தயாரிப்பு கவுன்டர்கள் செயல்படும்.இவை, அனைத்து வேலை நாட்களிலும், இம்மாதம், 16ம் தேதி முதல் ஆக., 3 வரை செயல்படும். வரி செலுத்துவோர், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

NEWS TODAY 29.01.2026