Friday, August 10, 2018

எக்ஸ்பிரஸ் ரயில்களில் பெட்டிகள் மாற்றம்

Added : ஆக 10, 2018 05:06

சென்னை:பாண்டியன் எக்ஸ்பிரஸ் உட்பட, மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்களில், தலா, ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி நீக்கப்பட்டு, 'ஏசி' மூன்றடுக்கு பெட்டி இணைக்கப்படுகிறது.சென்னை, எழும்பூரில் இருந்து, மதுரைக்கு இயக்கப்படும் பாண்டியன், திருச்சிக்கு இயக்கப்படும் சோழன் மற்றும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில்களில், இருவழிகளிலும், தலா ஒரு, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி நீக்கப்படுகிறது. அதற்கு பதிலாக, 'ஏசி' மூன்றடுக்கு பெட்டி இணைக்கப்படும்.

இவ்வசதி, பாண்டியனில், வரும், 20ல் இருந்தும், சோழன், ராக்போர்ட் ரயில்களில், வரும், 21ல் இருந்தும், அமல்படுத்தப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துஉள்ளது.

காமராஜருக்கு மெரினாவில் இடம் தர மறுத்தவர் கருணாநிதி:
ஸ்டாலினுக்கு அமைச்சர் பதில் 



dinamalar 10.08.2018

சென்னை : 'வழக்குகள் ஏதும் இல்லாத நிலையில், முதல்வராக இருந்து மரணமடைவோருக்கு தான், மெரினாவில் நினைவிடம் அமைக்க அனுமதி அளிக்கப்படும் எனக்கூறி, காமராஜருக்கு இடம் தர மறுத்தவர் தான் கருணாநிதி' என, மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.





அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலினின் குற்றச்சாட்டு கண்டு, உள்ளம் பதைபதைக்கிறது. 'அண்ணாதுரை சமாதி அருகே, கருணாநிதியை நல்லடக்கம் செய்ய இடம் கேட்டதாகவும், காழ்ப்புணர்ச்சியாலும், ஆட்டுவிப்போரின் சூழ்ச்சியாலும், இடம் ஒதுக்க மறுத்து விட்டனர்' என்ற, நச்சுக்கருத்தை, அவர் வெளிப்படுத்தி உள்ளார்.

கருணாநிதிக்கு உள்ளார்ந்த மரியாதையுடன், அ.தி.மு.க., அரசு செய்திருக்கும் சிறப்புக்களை, பட்டியலிட்டு கூறும் நிலைக்கு, ஸ்டாலின் நம்மை தள்ளியுள்ளார். கருணாநிதியின் இறுதி சடங்கு நாளன்று, அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. கருணாநிதியின் உடலுக்கு, பொதுமக்கள் அஞ்சலி
செலுத்துவதற்காக, ராஜாஜி ஹாலில் வைக்க அனுமதி வழங்கப்பட்டது.

ராணுவ மரியாதையுடன் நல்லடக்கமும் செய்யப்பட்டது; இறுதி சடங்கின் போது, குண்டுகள் முழங்க, அரசு மரியாதை செலுத்தப்பட்டது. மெரினா கடற்கரையில், புதிய கல்லறைகள், நினைவிடங்கள் அமைப்பது தொடர்பாக, ஐந்து பேர் தாக்கல் செய்த மனுக்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. அவை, ஜெ., நினைவிடத்தை, மெரினா கடற்கரையில் இருந்து, அப்புறப்படுத்த துடித்தவர்கள் தொடுத்தவை.

அவற்றால், சட்ட சிக்கல்கள் உருவாகி, கடைசி நேரத்தில் பெரும் குழப்பம் எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் தான், அண்ணா சதுக்கத்தில் இடம் தருவது இயலாமல் போனது. காமராஜர் நினைவிடம் அருகே, கருணாநிதிக்கு, 2 ஏக்கர் நிலம் ஒதுக்க, அரசு முன் வந்தது. இதில், ஏதுகாழ்ப்புணர்ச்சி.

காமராஜர் மற்றும் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் மறைந்த போது, அவர்களுக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்க, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியிடம், வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

'முதல்வராக இருந்து மரணமடைவோருக்கு மட்டும் தான், மெரினாவில் நினைவிடம் அமைக்க, அனுமதி அளிக்கப்படும்' என,

வழக்குகள் எதுவும் இல்லாத நிலையிலும், மறுத்தவர் தான் கருணாநிதி. அவரை சந்தித்து கோரிக்கை வைத்து, ஏமாற்றத்துடன் திரும்பியவர்கள், இன்றும் நம்முடன் வாழ்கின்றனர்.

தாங்கள் அள்ளிக்குவித்து வைத்திருக்கும், ஆயிரம் தலைமுறைக்கான செல்வம், தங்கள் அயராத உழைப்பாலும், அறிவு திறத்தாலும் வந்தது போல, ஜெ., மீது எண்ணற்ற வழக்குகள் போட்டனர். அவரை சிறையில் தள்ளி, சித்ரவதை செய்து, அவருக்கு மன வேதனையையும், அவமானத்தையும் பரிசளித்த, தி.மு.க.,வினருக்கு, அ.தி.மு.க., அரசின் களங்கமில்லா வெள்ளை உள்ளம் புரியாது.

ஆனால், அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கும், தமிழ் சமூகம் புரிந்து கொள்ளும். தி.மு.க., தலைமை பழைய பாதையில் பயணித்து, பழிச்சொல் வீசுவது கண்டு, நாங்கள் கலங்கப் போவதுமில்லை; கடமை தவறப் போவதுமில்லை. இவ்வாறு ஜெயகுமார் கூறியுள்ளார்.
'டிஜிட்டல்' ஆவணங்கள்: மத்திய அரசு உத்தரவு

Added : ஆக 09, 2018 23:09 |



புதுடில்லி : 'டிஜிட்டல்' வடிவில் உள்ள, ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு ஆவணங்களை ஏற்கும்படி, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளை நிறுத்தி, அவர்களின் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு ஆவணங்களை சரிபார்க்கும் போக்குவரத்து போலீசார், டிஜிட்டல் வடிவில் உள்ள ஆவணங்களை ஏற்க மறுப்பதாக, புகார் எழுந்தது. 'டிஜிலாக்கர்' மற்றும் 'எம்பரிவாஹன் ஆப்' களில், டிஜிட்டல் வடிவில், தாங்கள் வைத்துள்ள ஆவணங்களை, அசல் சான்றிதழுக்கு நிகராக ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

இதையடுத்து, டிஜிலாக்கர் அல்லது எம்பரிவாஹன் ஆப்களில், டிஜிட்டல் வடிவில் காண்பிக்கப்படும் ஓட்டுனர் உரிமம், ஆவணங்களை ஏற்கும்படி, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம், மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்கள் சிரமப்படாமல் இருக்க, இந்த சான்றிதழ்களை, மோட்டார் வாகன சட்டம், 1988ன் படி ஏற்றுக்கொள்ளப்படும் ஆவணங்களாக கருத வேண்டும் என்றும், மத்திய அரசு, அதன் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

Advertisement
மாநில செய்திகள்

முதல் முறையாக குழிக்குள் பேழையை இறக்க நவீன கருவி: 5 மணி நேரத்தில் தயாரான கருணாநிதி நினைவிடம்




சென்னையில் அண்ணா சமாதியின் அருகே 5 மணி நேரத்தில் கருணாநிதியின் சமாதியை பொதுப்பணித்துறையினர் அமைத்தனர். குழிக்குள் பேழையை இறக்க நாட்டிலேயே முதல் முறையாக நவீன கருவி பயன்படுத்தப்பட்டது.

பதிவு: ஆகஸ்ட் 10, 2018 05:15 AM
சென்னை,

மறைந்த முன்னாள் முதல்- அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்த போது, எந்த இடத்தில் நல்லடக்கம் செய்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இறுதியாக மெரினாவில் உள்ள அண்ணா சமாதியின் அருகே கருணாநிதி உடலை அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து பணியை விரைவாக செயல்படுத்த தமிழக அரசு பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டதுடன், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.அமுதாவை பணியை மேற்பார்வையிடவும், ஒருங்கிணைப்பதற்காகவும் நியமித்தது.

பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர் உத்தரவை ஏற்று, பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் (கட்டிடம்) மனோகரன், துணை தலைமை பொறியாளர் கே.பி.சத்தியமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் அண்ணா சமாதி இருக்கும் வளாகத்துக்கு 8 பொக்லைன் எந்திரங்கள் மற்றும் 11 டிப்பர் லாரிகள் மற்றும் 50 பொறியாளர்கள் மற்றும் 200 பணியாளர்களுடன் களம் இறங்கினார்கள்.

அண்ணா நினைவிட வளாகத்தில் எந்த இடத்தில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைப்பது என்பதை தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் தேர்வு செய்து அளித்தனர். அந்த இடத்தில் நினைவிடம் அமைக்க பொதுப்பணித்துறையும் ஒப்புக்கொண்டு பகல் 11.30 மணிக்கு பணியை தொடங்கினார்கள். 10 அடி நீளம், 6 அடி ஆழம், 7 அடி அகலத்தில் குழி தோண்டி கருணாநிதியின் உடல் வைப்பதற்காக அமைத்தனர்.

குழிக்கு உள்ளே தரைதளத்தில் கான்கிரீட்டும், பக்கவாட்டில் 10-க்கு ஒன்று என்ற அளவில் ஹாலோ பிளாக்ஸ் கற்களும் பதிக்கப்பட்டன. அத்துடன் முக்கிய விருந்தினர்களுக்காக பந்தல்கள் மற்றும் இருக்கைகளும் அமைக்கப்பட்டன.

கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருந்த பேழையை குழிக்குள் இறக்குவதற்காக இந்தியாவிலேயே முதல் முறையாக ‘ஹைட்ராலிக் மோட்டார் ஜாக்’ என்ற நவீன கருவி பயன்படுத்தப்பட்டது. தமிழக அரசின் உத்தரவை ஏற்று தி.மு.க. தலைவர் கருணாநிதிக்காக இந்த சவாலான பணியை 5 மணி நேரத்தில் அதாவது குறுகிய நேரத்தில் பணியை மின்னல் வேகத்தில் பொதுப்பணித்துறை சிறப்பாக முடித்து சாதனை படைத்துள்ளதாக அதிகாரிகள் கூறினார்கள்.
மாவட்ட செய்திகள்
 
கருணாநிதி மறைவு: திருவாரூர் மாவட்டத்தில் 2-வது நாளாக கடைகள் அடைப்பு பஸ்கள் ஓடவில்லை

கருணாநிதி மறைவு: திருவாரூர் மாவட்டத்தில் 2-வது நாளாக கடைகள் அடைப்பு பஸ்கள் ஓடவில்லை
 
கருணாநிதியின் மறைவையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ்கள் ஓடவில்லை.
திருவாரூர்,

தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இதையொட்டி திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகள் நேற்று முன்தினம் அடைக்கப்பட்டன. பஸ் போக்குவரத்தும் நிறுத்தப் பட்டது.

நேற்று 2-வது நாளாக திருவாரூர் பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப் பட்டது. ரெயில்கள் இயங்கிய போதும் பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. லாரிகள், வேன்கள், கார்கள், ஆட்டோக்கள் என அனைத்தும் இயக்கப்படவில்லை. சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன. திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கருணாநிதியின் உருவப்படத்தை வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி அவர் படித்த திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரமேஷ் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். திருவாரூர் கமலாலயம் கிழக்கு கரையில் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் சண்முகராஜ் தலைமையில் கட்சியினர் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்க தலைவர் பாலமுருகன் தலைமையில் வர்த்தகர்கள் ரெயில் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்று பஸ் நிலையம், தெற்கு வீதி வழியாக நகராட்சி அலுவலகத்தில் ஊர்வலத்தை நிறைவு செய்தனர். பின்னர் கருணாநிதிக்கு புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கருணாநிதியின் மறைவையொட்டி திருவாரூரில் பல்வேறு பகுதிகளில் வீடுகள் தோறும் கருப்புக்கொடி கட்டி துக்கம் அனுசரித்தனர். பூக் கடைகள், பிளக்ஸ் போன்ற கடைகள் மட்டுமே திறந்து இருந்தன.

திருவாரூர் பஸ் நிலையம், கடைவீதி போன்ற முக்்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சொந்த ஊர் திருவாரூர் என்பதால், அவருடைய பிரிவை தாங்க முடியாமல் திருவாரூர் பகுதியே சோகத்தில் மூழ்கியது.

நன்னிலம், கங்களாச்சேரி, ஆண்டிப்பந்தல், பனங்குடி, சன்னா நல்லூர், பூந்தோட்டம், பேரளம், கொல்லுமாங்குடி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. அதேபோல கருணாநிதியின் மறைவையொட்டி கோட்டூர், பெருகவாழ்ந்தான், களப்பாள், விக்கிரபாண்டியம், திருநெல்லிக்காவல் ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

கருணாநிதியின் மறைவையொட்டி மன்னார்குடியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 
தலையங்கம் 

2–வது பலப்பரீட்சை






2019–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை நோக்கி எல்லா அரசியல்கட்சிகளும் செல்ல இருக்கிறது.

ஆகஸ்ட் 10 2018, 04:00

2019–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை நோக்கி எல்லா அரசியல்கட்சிகளும் செல்ல இருக்கிறது. ஆளும்கட்சியாக இருக்கும் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கட்டிலை பிடிக்கப்போகிறதா?, காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி ‘ஐக்கிய முற்போக்கு கூட்டணி’ என்ற பெயரில் பா.ஜ.க.விடமிருந்து ஆட்சியை தட்டிப்பறிக்கப்போகிறதா? என்றவகையில், பெரிய எதிர்பார்ப்புகள் நாட்டு மக்களிடையே இருந்து வருகிறது. ஏற்கனவே மக்களவையில் கடந்த ஜூலை 20–ந்தேதி பா.ஜ.க. அரசாங்கத்தின்மீது தெலுங்குதேசம் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீது இரவில் ஓட்டெடுப்பு நடந்தது. மொத்தம் 451 ஓட்டுகளில், நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக 325 ஓட்டுகளும், ஆதரவாக 126 ஓட்டுகளும் கிடைத்து, பா.ஜ.க.விற்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது.


2–வது பலப்பரீட்சையாக நேற்று மாநிலங்களவையில் துணைத்தலைவர் தேர்தல் நடந்தது. மாநிலங்கள வையில் மொத்தம் உறுப்பினர்களின் எண்ணிக்கை 245 ஆகும். ஒரு காலியிடம் இருக்கிறது. 73 உறுப்பினர்களைக் கொண்ட பா.ஜ.க.தான் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாகும். காங்கிரஸ் கட்சிக்கு 50 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியை சேர்ந்த பத்திரிகையாளர் ஹரிவன்ஷ் நாராயண்சிங் போட்டியிட்டார். காங்கிரஸ் கூட்டணி சார்பில் முதலில் காங்கிரஸ் அல்லாத ஒருகட்சி வேட்பாளரை நிறுத்தும் எண்ணம் இருந்தது. ஆனால், அந்த கூட்டணி சார்பில் யார் வேட்பாளர் என்று முடிவு செய்ய முடியாதநிலையில், வேட்பாளரை முடிவு செய்யும் பொறுப்பு காங்கிரஸ் கட்சியிடமே விடப்பட்டது. கடைசிநேரத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பி.கே.ஹரிபிரசாத் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. பா.ஜ.க. கூட்டணியிலிருந்த சிவசேனா, அகாலிதளம், காஷ்மீரில் உள்ள மக்கள் தேசிய கட்சி போன்ற கட்சிகள் என்னநிலை எடுக்கும்? என்று தெரியாதநிலையில், காங்கிரஸ் கூட்டணிக்குத்தான் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருந்தது.


ஆனால் பிரதமர் நரேந்திரமோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா எடுத்த அமைதியான முயற்சிகளைத் தொடர்ந்து நிலைமையே மாறி, வேட்புமனு தாக்கலிலேயே முடிவு தெரிந்துவிட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷுக்கு ஆதரவாக பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத், அகாலி தள தலைவர் எஸ்.எஸ்.டிண்ட்சா, ஐக்கிய ஜனதாதளம் சார்பில் ஆர்.சி.பி.சிங் ஆகியோர் சார்பில் 4 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நேற்று துணைத்தலைவர் தேர்தல் நடந்தபோது, அவையில் 232 உறுப்பி னர்கள்தான் இருந்தனர். வெற்றி பெறுவதற்கு 116 உறுப்பினர்களின் ஆதரவுவேண்டும். ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷுக்கு 125 ஓட்டுகளும், காங்கிரஸ் கட்சியின் பி.கே.ஹரிபிர சாத்துக்கு 105 ஓட்டுகளும் கிடைத்தன. 2 உறுப்பினர்கள் ஓட்டெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. ஹரிவன்ஷ் வெற்றிக்கு முழுகாரணம் அ.தி.மு.க.வின் 13 உறுப்பி னர்களும் ஆதரவாக ஓட்டுபோட்டதுதான். 40 ஆண்டுகளுக்குப்பிறகு இப்போதுதான் முதல்முறையாக காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியை சேர்ந்தவர் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க.வுக்கு இது நிச்சயமாக பெரிய வெற்றியாகும். 2 பலப் பரீட்சைகளிலும் பா.ஜ.க. வெற்றிபெற்ற நிலையில், பா.ஜ.க.வுக்கு ஆதரவாக யார்–யார் இருக்கிறார்கள்?, எதிர்ப்பாக யார்–யார் இருக்கிறார்கள்?, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக யார்–யார் இருக்கிறார்கள்?, இது 2019 தேர்தலில் எதிரொலிக்குமா? என்ற பூர்வாங்க கணக்கீட்டை மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தல் காட்டிவிட்டது.

Thursday, August 9, 2018

Madras HC Allows Marina Beach To Be The Final Resting Place of Karunanidhi [ Read Order] | Live Law

Madras HC Allows Marina Beach To Be The Final Resting Place of Karunanidhi [ Read Order] | Live Law: (Story updated with the operative portion of Order) The Madras High Court has allowed ex-CM and DMK leader Karunanidhi to be interred near Anna Memorial at Marina Beach, after a special hearing session. The special hearing was held by Acting CJ Huluvadi.G Ramesh and Justice S.S Sundar when DMK moved an urgent petition against the …

NEWS TODAY 27.06.2026