Tuesday, October 2, 2018

தமிழகத்தில் காவிரி டெல்டா உள்ளிட்ட 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு முடிவு



தமிழகத்தில் காவிரி டெல்டா உள்ளிட்ட 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பதிவு: அக்டோபர் 02, 2018 05:45 AM

புதுடெல்லி,

பூமிக்கு அடியில் இயற்கையாக இருக்கும் ஹைட்ரஜன் மற்றும் கார்பன் வாயுக்களின் கூட்டுப்பொருளே ஹைட்ரோ கார்பன் என அழைக்கப்படுகிறது.

இந்த கூட்டுப்பொருள் ஆக்சிஜனுடன் சேரும்போது எந்திரங்களை இயக்கும் சக்தி கிடைக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட்டு வந்தது. அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் அங்கு தற்காலிகமாக அந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் ஹைட்ரோ கார்பன் இருக்கும் இடங்களை ஆய்வு செய்து, அதை எடுக்க விரும்பும் நிறுவனங்களுக்கு அதற்கான உரிமத்தை வழங்க மத்திய அரசு தயார் ஆனது.

இதன் அடிப்படையில் முதல்கட்டமாக தமிழ்நாட்டில் 3 இடங்கள் உள்பட நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓ.என்.ஜி.சி.) உள்பட 9 நிறுவனங்கள் போட்டியிட்டன.

இந்த போட்டியில் ஓ.என்.ஜி.சி. மற்றும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் உள்பட 6 நிறுவனங்கள் வெற்றி பெற்றன.

இந்த நிறுவனங்களுக்கு ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான உரிமத்தை ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். அவரது முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.

நிகழ்ச்சியில் பெட்ரோலியத்துறை செயலாளர் எம்.எம்.குட்டி, ஹைட்ரோ கார்பன் திட்ட இயக்குனர் வி.பி.ஜாய் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி, அதிகபட்சமாக 41 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான உரிமத்தை வேதாந்தா நிறுவனம் பெற்றது. இந்த 41 இடங்களில் தமிழ்நாட்டில் காவிரி டெல்டாவில் உள்ள நாகை மாவட்டம் கமலாபுரம் உள்பட 2 இடங்கள் இடம்பெற்றுள்ளன. அவை காவிரி, கடலோடு கலக்கும் கடலோர பகுதி ஆகும். இதில் ஒரு இடத்தில் 1,794 சதுர கி.மீ. பரப்பிலும், மற்றொரு இடத்தில் 2,574 சதுர கி.மீ. பரப்பிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி. உரிமம் பெற்றுள்ளது. அங்கு 731 சதுர கி.மீ. பரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட உள்ளது. அது நிலப்பகுதி ஆகும்.

மேற்படி 55 இடங்களின் மொத்த பரப்பளவு 59 ஆயிரத்து 282 சதுர கி.மீ. ஆகும். இந்த பரப்பு, ஏற்கனவே ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட்டு வரும் இடங்களின் பரப்பளவில் 65 சதவீதம் ஆகும்.

இந்நிகழ்ச்சியில், பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பேசியதாவது:-

ஹைட்ரோ கார்பன் எடுக்க உரிமம் பெற்றுள்ள நிறுவனங்களுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களுக்கு மத்திய அரசு முழு ஆதரவும், உதவியும் அளிக்கும். இந்த நிறுவனங்கள், ரூ.6 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உறுதி பூண்டுள்ளன. இந்த பணி, இந்திய பொருளாதாரத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த அரசு ஒளிவுமறைவின்றி செயல்பட்டு வருகிறது. அனைத்து தரப்பினருடனும் ஆலோசித்த பிறகு கொள்கைகள் வகுக்கப்படுகின்றன. குறைந்தபட்ச அரசு-அதிகபட்ச நிர்வாகம் என்பது வெறும் கோஷம் மட்டுமல்ல, வழிகாட்டும் கொள்கை ஆகும்.

உலகிலேயே அதிகமான எரிசக்தி உபயோகப்படுத்தும் நாடுகளில் 3-வது இடத்தை இந்தியா பெற்றுள்ளது. மக்களுக்கு மலிவான விலையில் எரிசக்தியை அளிக்க அரசு உறுதி பூண்டுள்ளது. அதற்காகவே, உள்நாட்டு ஹைட்ரோ கார்பன் உற்பத்தியை பெருக்க இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டில் காவிரி படுகை கடற்பகுதியின் 2 இடங்களில்தான் வேதாந்தா குழுமம் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் என்பதால், பிரச்சினை வராது.

இவ்வாறு அவர் பேசினார்.

ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் நிகழ்ச்சியில் வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வாலும் கலந்து கொண்டார்.

அவர் நிருபர்களிடம் கூறுகையில், “ஹைட்ரோ கார்பனின் முக்கியத்துவத்தை பலரும் அறிந்து இருக்கவில்லை. பலரும் எதிர்த்து வருகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலை மிகவிரைவில் திறக்கப்படும் என்று நம்பிக்கை உள்ளது” என்றார்.

ஹைட்ரோ கார்பன் எடுக்கும் புதிய திட்டத்திற்கு தமிழக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் 3 இடங்கள் உள்பட நாடு முழுவதும் மொத்தம் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் வளங்களை எடுப்பதற்கான உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. காவிரி பாசன மாவட்டங்களின் வளமையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத் தான் அப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன்.

ஆனால், அதை செய்யாமல் காவிரி பாசன மாவட்டங்களை சீரழிப்பதற்காக மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அடுத்தடுத்து அறிவித்து வருகிறது. மக்களின் உணர்வுகளை மதிக்காமல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டங்களை நிச்சயமாக செயல்படுத்த முடியாது. இதை மத்திய அரசு உணர்ந்து கொண்டு ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கவுரவமாக திரும்பப்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருவாரூரில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஹைட்ரோ கார்பன், ஷேல் கியாஸ் எடுப்பதற்கு அனுமதி அளிக்கும் ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளது. இந்த திட்டம் தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் 3 இடங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு விவசாயிகள் சார்பில் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துகொள்கிறோம். இந்்த திட்டங்களால் காவிரி படுகைகள் பாலைவனமாக மாறும். எனவே காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

எனவே விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை மத்திய அரசிற்கு தெரிவிக்கும் வகையில் நாளை(புதன்கிழமை) திருவாரூருக்கு வருகை தரும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று விழுப்புரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் டெல்டா பகுதியில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான ஒப்பந்த நிறுவனங்களையும் தேர்வு செய்ததாக செய்திகள் வருகிறது. இதனை எதிர்த்து நெடுவாசலில் பல மாதங்கள் போராட்டம் நடந்தது. பல அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இந்த திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பு இருந்தால் நிச்சயமாக செயல்படுத்தப்படமாட்டாது என உறுதி அளித்தார். ஆனால் மக்களை ஏமாற்றிவிட்டு தற்போது இந்த திட்டத்தை தொடங்கவுள்ளனர். இதனை நிறைவேற்றினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். இதனை ஒருபோதும் டெல்டா மாவட்ட மக்கள் ஏற்க மாட்டார்கள். அதனை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்கினால் டெல்டா மாவட்டங்கள் போர்க்களமாக மாறும்.

இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட செய்திகள்

தனியார் பஸ்சை சிறைபிடித்து வாகன ஓட்டிகள் போராட்டம்




சேலத்தில் தனியார் பஸ்சை சிறைபிடித்து வாகன ஓட்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பதிவு: அக்டோபர் 01, 2018 03:00 AM

சேலம்,

சேலம் ஜங்சனில் இருந்து நேற்று மதியம் தனியார் பஸ் ஒன்று அஸ்தம்பட்டி வழியாக பழைய பஸ் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் வேகமாகவும், அதிக ஒலி எழுப்பியபடியும் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் விபத்து ஏற்பட்டு விடுமோ? என்ற அச்ச உணர்வில் சென்றனர்.

பஸ் அஸ்தம்பட்டியை கடந்து வின்சென்ட் பகுதியில் சென்றது. அப்போது வேகமாக சென்ற தனியார் பஸ்சால் இரு சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கின. இதில் ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள், பஸ்சை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர். பின்னர் அவர்கள் பஸ்சை மறித்தபடி சாலையில் தங்களது இரு சக்கர வாகனங்களை நிறுத்தினர். பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த போராட்டம் குறித்து தகவலறிந்ததும் அஸ்தம்பட்டி ரோந்து போலீசார் அங்கு வந்தனர். பஸ்சை சிறைபிடித்த வாகன ஓட்டிகளை கலைந்து செல்லுமாறு கூறினர். அப்போது ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள், பஸ்சை வேகமாகவும், அதிக ஒலி எழுப்பியபடியும் இயக்கிய டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று போலீசாரிடம் கூறினர். ஆனால் தொடர்ந்து போலீசார் வாகன ஓட்டிகளை கலைந்து செல்ல சொன்னதால், போலீசாருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார், தனியார் பஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து வாகன ஓட்டிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், சேலம் மாநகரில் தனியார் பஸ்கள் அதிக வேகத்திலும், அதிக ஒலி எழுப்பியபடியும் செல்கின்றன. இதனை போக்குவரத்து அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன, என்றனர்.
காஞ்சீபுரம்-சென்னை கடற்கரைக்கு புதிய பயணிகள் ரெயில் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்



காஞ்சீபுரத்தில் இருந்து சென்னைக்கு புதிய ரெயில் வண்டிகளை கூடுதலாக இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருந்தனர்.

பதிவு: அக்டோபர் 02, 2018 04:15 AM
காஞ்சீபுரம்,

தென்னக ரெயில்வே காஞ்சீபுரம்-சென்னை கடற்கரை இடையே புதிய ரெயில்விட ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து நேற்று காலை முதல் காஞ்சீபுரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரையிலான புதிய பயணிகள் மின்சார ரெயில் சேவை தொடங்கப்பட்டது. புதிய ரெயில் சேவையை காஞ்சீபுரம் தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலரசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரெயில் காஞ்சீபுரத்தில் இருந்து காலை 6.10 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரை செல்கிறது.

இதேபோல் சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6.40 மணிக்கு செங்கல்பட்டுக்கு புறப்படும் மின்சார ரெயில், காஞ்சீபுரம் ரெயில் நிலையம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரெயில் சேவைக்கு காஞ்சீபுரம் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Monday, October 1, 2018

அப்ப இத்தனை நாளா மதுரை மதுரைன்னு சொல்லிட்டிருந்தது எல்லாமே 

டூப்பா கோப்பால்?? By Hemavandhana 

Updated: Monday, October 1, 2018, 6:00 [IST] FOLLOW ONEINDIA TAMIL

 சென்னை: வளர்ச்சி வளர்ச்சி என்று கூறிக் கொண்டே மத்திய அரசும் மாநில அரசும் நம்மை எங்கு கொண்டு போய் நிறுத்த போகிறார்களோ தெரியவில்லை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அனுமதியே இன்னும் மத்திய அரசு வழங்கவில்லை என்பது அம்பலமாகி இருக்கிறது. கடந்த 4 வருடங்களாகவே எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைய போகிறது என்ற பேச்சாகவே இருந்தது. பட்ஜெட்டில் நிதி பட்ஜெட்டில் நிதி இடத்தை தேர்வு செய்வதற்கே படாத பாடு பட்டு, ஒருவழியாக 4 வருடம் கழித்து மதுரை தேர்வானது. பிறகு மருத்துவமனை அமைய 2015-ம் ஆம் ஆண்டே இதற்கான நிதியும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கவும்பட்டது.

ஆனால் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் மீண்டும் மோடி அரசு நமக்கு ஏமாற்றத்தையே தந்திருக்கிறது. வெறும் அனுமதிதான் வெறும் அனுமதிதான் தமிழகத்தின் நலன் என்பதே காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. இந்தியா டூடே இதழ் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் படி பெற்ற தகவல்களில் மதுரையில் மருத்துவமனைக்கு இன்னும் மத்திய அரசு ஒப்புதலே வழங்கவில்லை என தெரியவந்துள்ளது. தமிழகம் மட்டுமில்லை... ஜம்மு, காஷ்மீர், பீகார், தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனையை ஆரம்பிக்க அனுமதி மட்டும்தான் வழங்கியுள்ளது. ஆனால் 10 பைசா கூடஇதுவரை ஒதுக்கீடு செய்யவில்லை என்பது அம்பலமாகி உள்ளது.

மத்திய சுகாதார துறை மத்திய சுகாதார துறை பிரதமராக மோடி பொறுப்பேற்றபோது நாடு முழுவதும் 13 எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்றார். ஆனால் ஒன்றைக்கூட இதுவரை காணோம். எல்லாமே வெறும் அறிவிப்பாக இருந்தால் எப்போதுதான் அவை அரங்கேற்றப்படும் என்றும் தெரியவில்லை. தமிழகத்தில் இதற்கான போராட்டங்களும் முடிந்தவரை செய்து முடித்தாயிற்று. ஆனால் மத்திய சுகாதாரத்துறையின் செவிகளுக்கு இது இன்னமும் போய் சேரவேயில்லை. அமைச்சர்களின் உறுதி அமைச்சர்களின் உறுதி மத்திய அரசுதான் இப்படி வஞ்சித்து வருகிறது என்றால், மாநில அமைச்சர்களோ மதுரையில் எய்ம்ஸ் வரப்போகிறது என்பதற்கான நம்பிக்கையை எக்கச்சக்கமாகவே நமக்கு ஊட்டிவிட்டனர்.

வருவாய்த்துறை அமைச்சர் ஒருமுறை, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவது உறுதி என்றார். இவரை தொடர்ந்து, அமைச்சர் செல்லூர் ராஜூவும் ஆமாம்.. விரைவில் நம் மாவட்டத்திற்கு எய்ம்ஸ் வரப்போகிறது என்றார். எதை சொன்னாலும் நம்புவதா? எதை சொன்னாலும் நம்புவதா? எப்போதெல்லாம் இந்த விவகாரம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகிறாரோ, அப்போதெல்லாம் எய்ம்ஸ் விரைவில் தொடங்கப்படும் என்றார். என்ன மனப்பான்மையில், என்ன ஆதாரத்தின் அடிப்படையில் அமைச்சர்கள் இப்படியெல்லாம் இதுவரை தமிழக மக்களுக்கு உறுதியும் நம்பிக்கையும் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. இன்னும் மத்திய அமைச்சரவை ஒப்புதலே வழங்கவில்லை என்பது அதிர்ச்சிக்குரியதாக உள்ளது.

 தமிழக மக்கள் எதை சொன்னாலும் நம்பி ஏற்றுக் கொள்வார்கள் என்ற மனப்பான்மைதான் இதற்கெல்லாம் காரணமா என தெரியவில்லை. எய்ம்ஸ் என்பது கனவா? முடி உதிர்வுக்கான எளியை வழியை அறிமுகம் செய்த மருத்துவர்கள் சுகாதாரமான வீட்டு பெயிண்ட் கலவைகள் பற்றி கேள்விபட்டுள்ளீர்களா? கார் இன்சூரன்ஸை புதுபிக்க Acko வழங்கும் 80% சலுகை எய்ம்ஸ் என்பது கனவா? இப்படி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒப்புதலே வழங்கவில்லை என்றும் எந்த நிறுவனத்திற்கு டெண்டரும் விடவில்லை என்று பட்டவர்த்தனமாக தெரியவந்ததையடுத்து, மத்திய அரசு தரப்பிலிருந்து பாஜக லைவர் தமிழிசை சவுந்தரராஜனும், மாநில அரசு தரப்பிலிருந்து அமைச்சர் விஜயபாஸ்கரும் மீண்டும் மீண்டும் உறுதி கொடுக்க துவங்கி இருக்கிறார்கள். தொப்பூருக்கு எப்போது ஒப்புதல் கிடைத்து, எப்போது நிதி ஒதுக்கி, எப்போது மருத்துவமனையை கட்டி முடிப்பது? நம் மாநிலத்துக்கும் உலகத்தரமான மருத்துவமனை ஒன்று வேண்டும் நினைத்தது தப்பா? அரசியல் தலையீடுகள் இன்றி ஏழை மக்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை தமிழக மக்களுக்கு கிடைக்கவே கிடைக்காதா?

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/no-funds-have-been-allocated-thoppur-aiims-maduria-project-rti/articlecontent-pf328610-330930.html
மனசு போல வாழ்க்கை 34: அறிவுரைகளும் அனுபவங்களும்

Published : 17 Nov 2015 11:32 IST

டாக்டர். ஆர். கார்த்திகேயன்

 


பெற்றோர்களின் வாழ்க்கையைப் பிள்ளைகள் வாழ்கிறார்கள். கொஞ்சம் கூட்டல் கழித்தலோடு. சிற்சில மாறுதல்களோடு. கொஞ்சம் வேறுபாடுகளுடன். ஆனால் ஆதார வாழ்க்கை நம் பெற்றோர்களுடையதுதான். யோசித்துப் பார்த்தால் நம் வாழ்க்கையின் பெரும் பகுதியைப் பெற்றோர்களிலிருந்து தொடங்கி நம் முன்னோர்கள் வரை பலரிடமிருந்து பெற்றிருக்கிறோம்.

இதை விஞ்ஞானம் மரபணுக்களின் காரணம் என்கிறது. முன்னோர் செய்த வினை என்று ஆன்மிகம் சொல்கிறது. குறிப்பாக, இந்து மதம் பூர்வ ஜென்மம் என்றும் ஜென்மங்கள் என்றும் சொல்லும். உளவியலாளர்களில் ஒரு சாரார் தட்டையாக நாம் எல்லாவற்றையுமே பெற்றோரைப் பார்த்துக் கற்றுக் கொள்கிறோம் என்று சொல்கிறார்கள். இதில் உங்கள் நம்பிக்கைகளும் சார்பு நிலைகளும் மாறுபடலாம். ஆனால், பெற்றோர்களின் வாழ்க்கையை ஆதாரமாக வைத்துத்தான் குழந்தைகள் வாழத் தொடங்குகிறார்கள் என்பதைப் பொதுவாக யாரும் மறுக்கமாட்டார்கள்.

யாரோட ஜெராக்ஸ்?

அப்பா, அம்மா, தாத்தாக்கள், பாட்டிகள் என நிறைய மனிதர்களின் பங்களிப்பு இருப்பதால் நாம் ஒரு கார்பன் காப்பியாகயாகவோ ஜெராக்ஸ் நகலாகவோ மட்டும் இல்லாமல் ரசமான கலவையாக இருக்கிறோம். ஒவ்வொருவரிடமிருந்தும் கொஞ்சம் கொஞ்சம் வாங்கியிருக்கிறோம். சில பண்புகள் தூக்கலாகத் தெரியும். பல உள்ளார்ந்து இருக்கும். மிகச் சில பண்புகள் நமக்கே தெரியாமல் என்றோ ஒரு நாள் பீறிட்டுக்கொண்டு வரும்.

இந்த ஒற்றுமைகளைப் பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். பிறந்த குழந்தையின் உருவ ஒற்றுமைகளில் இது ஆரம்பமாகும்.

“அப்படியே அம்மா தான்” , “நெத்தி மட்டும் தாத்தா. மத்தபடி அவங்க பக்கம்தான்”, “ அப்படியே டிட்டோவா பொள்ளாச்சி ஃபீச்சர்ஸ்”, “மீசையை ஒட்ட வச்சா அப்படியே அவள் அவங்கப்பாதான். அப்படியேதான் வருவா.” என்று குழந்தையைப் பார்த்து அடிக்கப்படும் டயலாக்குகள் நமக்குத் தெரியும்தானே!

உருவ ஒற்றுமைகளுக்குப் பிறகு சுபாவங்கள் அலசப்படும்.

“அப்படியே அப்பனை உரிச்சு வச்சிருக்கு. என்ன கோபம் பாரு!” “என்னா அழுத்தம் பாரு. அவ அம்மாவே தான்.” “எப்படி மழுப்பறா பாரு. அவ அத்தை இப்படித்தான் நழுவுவா எதைக் கேட்டாலும்!”

வாழ்க்கையை கூர்ந்து நோக்கினால் வாழ்வின் நிகழ்ச்சிகள் மீண்டும் மீண்டும் நடப்பதையும் உணரலாம். தாயின் அதே துயரம் மகள் வாழ்விலும் நடக்கும். தந்தை செய்த அதே தவறை மகனும் செய்வார். வாழ்வின் நிகழ்வுகளை வரிசைப்படுத்தினால் இப்படிப்பட்ட பல ஒற்றுமைகளைக் பார்ப்பீர்கள். இவை யதேச்சையானவை அல்ல.

அறிவுரைகளும் அனுபவங்களும்

பாஸ்ட் லைஃப் ஹீலிங் என்று ஒன்று உண்டு. கடந்த காலத்தின் கர்ம வினைகளைக் களைவதற்கான சிகிச்சை முறை. மதங்கள் அனைத்துமே கர்மவினைகளைப் போக்கத்தானே முயல்கின்றன?

கர்ம வினை என்பதை முதலில் எளிமைப்படுத்துவோம். ஒரு செயலைச் செய்து அதிலிருந்து கற்றுக்கொண்ட பிறகு அதைத் தொடர்வதா வேண்டாமா என்று முடிவு செய்கிறோம். ஆனால் செயல் ஏற்படுத்திய பாதிப்பு நமக்கு வந்து விடுகிறது. அந்த பாதிப்பைப் பிறகு குறைக்கப் பார்க்கிறோம். அதன்பின் அந்த அனுபவத்தால் மற்றவர்களுக்கு, குறிப்பாக குழந்தைகளிடம் அதைச் செய். இதைச் செய்யாதே. இது பாவம். அது புண்ணியம் என்று அறிவுரை சொல்கிறோம்.

ஆனால் அறிவுரைகளை விட அனுபவங்கள்தான் சக்தி வாய்ந்தவை. அப்பாவின் தவறு மகனுக்குப் புரியாது, பட்டுத் தெரியும் வரை. படுவதற்கு முன் தெரிந்து கொள்ள முடியாதா என்பதுதான் ஒவ்வொரு தகப்பனின் ஏக்கமும். ஆனால் தீ சுடும் என்று எவ்வளவு சொன்னாலும் தொட்டால் தானே தீயின் குணம் தெரியும்? இதனால் தான் எவ்வளவு சொல்லியும் தவிர்க்க இயலாமல் பெற்றோர்களின் தவறுகள் பிள்ளைகளால் மீண்டும் செய்யப்படுகின்றன.

அறிவுரைகள் எந்தக் காலத்திலும் பெரிய பலனை அளித்ததில்லை. அறிவுரைகள் சொல்வதை விட நம் வாழ்க்கையைச் சீராக அமைத்துக் கொள்வதுதான் முக்கியம்.

பிள்ளைகள் பார்த்துத் தெரிந்துகொள்கின்றன. கேட்டுத் தெரிந்து கொள்வதல்ல. பெற்றோர்கள் சொல்வது முக்கியமில்லை. செய்வது தான் முக்கியம்.

“பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது” என்று சொல்லிவிட்டு போன் வரும் போது “நான் வீட்டில் இல்லைன்னு சொல்லு” என்று சொல்லும் அப்பாவிடம் குழந்தை எதைக் கற்றுக்கொள்ளும்?

“பொய் சொல்லலாம்; ஆனால் பொய் சொல்லக் கூடாது என்று பேசிக்கொள்ள வேண்டும்!” என்றுதான் குழந்தை கற்றுக்கொள்ளும்.

மோசமான கருத்துள்ள திரைப்படத்தையோ தொலைக்காட்சி நிகழ்ச்சியையோ எந்த மறுப்பும் விமர்சனமும் இல்லாமல் பெற்றோர்கள் பார்க்கும்போது குழந்தைகள் அதை சம்மதமாகவே என எடுத்துக்கொள்வார்கள்.

தேர்வு அவர்கள் கையில்

நம் பழக்கங்கள், நாம் பயன்படுத்தும் சொற்கள், நாம் வாழ்வில் எடுக்கும் முடிவுகள் எனக் குழந்தைகள் நம்மை நகல் எடுக்கின்றன.

“ நான் அதிகாலை எழுந்திருக்கிறேன். அவன் அப்படி இல்லையே. இதையெல்லாம் ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது?” என்று நீங்கள் கேட்கலாம். உங்களிடமிருந்து இதைத்தான் குழந்தைகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. தேர்வு செய்வது அவர்கள் கையில். ஆனால் உங்கள் வாழ்க்கையை ஆதாரமாக வைத்துத்தான் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையோ அவர்கள் தங்களின் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். நீங்கள் காட்டும் உலகம்தான் அவர்களுக்கு முதல் உலகம். பிறகுதான் அவர்கள் வாழ்வில் நண்பர்கள், ஊடகம், பயணங்கள் என மற்ற வகையான தாக்கங்கள் நிகழ்கின்றன.

பெற்றோர்களின் வாழ்வுக்கு நன்றி செலுத்திவிட்டு, உங்கள் வாழ்வைச் சீராக்குங்கள். அவைதான் அடுத்த சந்ததிக்கு நீங்கள் செய்யும் மூலதனம். என் வாழ்க்கையை என் பிள்ளை அப்படியே பெறட்டும் என்று சொல்ல முடிந்தால் நல்ல வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்று பொருள்.

உங்கள் வாழ்வைச் செப்பனிடும்போது உங்கள் பிள்ளைகள் வாழ்வு சீராகும். அதனால் மனசு போல வாழ்க்கை என்பது உங்களுக்கு மட்டுமல்ல. உங்கள் மனசு தான் உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையையும் தீர்மானிக்கின்றன.

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

From MCI website

"Medical Council of India has been superseded vide Indian Medical Council (Amendment) Ordinance, 2018 (Ordinance 8 of 2018) dated 26.09.2018, - by the Board of Governors. The Board of Governors has taken over functions of the Medical Council of India on 26.09.2018 AN.

The site is temporarily out of service due to maintenance work."

Gujarat high court holds medical student’s admission invalid

TNN | Sep 28, 2018, 04.47 AM IST
 
Gujarat high court holds medical student’s admission invalid

AHMEDABAD: Gujarat high court on Thursday allowed an appeal filed by the Medical Council of India (MCI) to discharge a PG medical student, Paresha Solanki, from the medical college of Sumandeep Vidhyapith, who is pursuing studies in the clinical course of MD, anaesthesia.

The student had cleared NEET in 2016-17, but did not score enough to figure in the centralized admission committee’s merit list. When the Centre decided to lower percentile marks in May 2017, she qualified for admission. However, her name did not appear on the merit list. She was then pursuing residency course in Baroda Medical College in non-clinical residency programme in Preventive and Social Medicine (PSM).

Solanki approached the university directly and she was granted provisional admission on basis of her NEET score. However, when MCI came to know about the admission, it directed the college and the university to discharge her from the course.

The student approached the HC against MCI’s decision to oust her from the course. MCI defended its decision by arguing that she did not get admission through the admission committee, which is the rule. The admission committee had not considered her for the merit list because she was enrolled in the residency programme. The student claimed that she had tendered her resignation from the residency programme before taking admission in MD, anaesthesia.

BHOPAL NEWS