Saturday, January 12, 2019


அஜித்தின் ‘விஸ்வாசம்’ - திரை விமரிசனம்


By சுரேஷ் கண்ணன் | Published on : 11th January 2019 12:33 PM |

 


சாகசம் + சென்ட்டிமென்ட் என்பது சினிமாவின் அரதப்பழசான கலவை. இந்தக் கலவையையும் அஜித்தையும் வைத்து தொடர்ச்சியாகத் திரைப்படங்களை உருவாக்கிக் கொண்டிருப்பவர் இயக்குநர் சிவா. வீரத்தில் சகோதரர்கள், வேதாளத்தில் தங்கை, விவேகத்தில் மனைவி என்று சென்ட்டிமென்டைப் பிழிந்தவர், ‘விஸ்வாசத்தில்’ தந்தை – மகள் சென்ட்டிமென்டைக் கையில் எடுத்திருக்கிறார். (எனில் மீதிமிருப்பது ‘அப்பா’ சென்ட்டிமென்ட்தான். ‘விநாயகம்’ என்று கதைக்குத் தொடர்பில்லாத தலைப்போடு அதுவும் அடுத்து வரலாம்).


இப்படித் தேய்வழக்கான திரைக்கதைகளில் தொடர்ந்து நடித்தும் அஜித்தின் வணிகச்சந்தையும் ரசிக வரவேற்பும் எப்படி ஏறுமுகமாகவே இருக்கின்றன என்பது தமிழ்ச் சமூகத்தின் புரியாத விந்தைகளுள் ஒன்று.

கொடுவிளார்பட்டி என்கிற கிராமத்தில் ‘திருவிழா நடக்கலாமா, கூடாதா’ என்கிற பழம் பஞ்சாயத்துடன் படம் துவங்குகிறது. அந்த ஊரின் பெருந்தலையான ‘தூக்குதுரை’ (அஜித்) மாவட்ட ஆட்சியரிடம் பேசி திருவிழாவை நடத்தி வைக்கிறார். திருவிழாச் சடங்கின்போது உறவினர்கள் குடும்பம் சகிதமாகக் கலந்துகொள்ள, தன்னந்தனியாக நிற்கும் அஜித்தின் மீது மற்றவர்கள் பரிதாபப்படுகின்றனர். அவர் தன் மனைவி நிரஞ்சனாவை (நயன்தாரா) விட்டுப் பிரிந்திருப்பது தெரியவருகிறது. ‘மும்பையிலிருக்கும் மனைவியைத் திருவிழாவிற்கு அழைத்து வா’ என்று உருக்கமாக வேண்டுகோள் வைக்கிறார்கள். அதை ஏற்று அங்குச் செல்கிறார் அஜித். மும்பையில் அவருடைய மகளின் மீது கொலை முயற்சித் தாக்குதல்கள் நடக்கின்றன.

அஜித் ஏன் தன் மனைவியைப் பிரிந்தார், மகளுக்கு யாரால் ஆபத்து வருகிறது, அதை அவர் எப்படி முறியடிக்கிறார் போன்ற தகவல்களை அறிந்துகொள்ள மீதமுள்ள திரைப்படத்தை நீங்கள் பார்த்தாகவேண்டும்.

அஜித் வயதான தோற்றத்தில் இளமையாக இருக்கிறார். (எப்படி என்றெல்லாம் கேட்கக்கூடாது!) முரட்டுக் கிராமத்தானாக இவர் செய்யும் அலப்பறைகள் பரவாயில்லை. ஆக்ஷன் காட்சிகள் பொருத்தமாகவும் மிரட்டலாகவும் அற்புதமான வடிவமைப்புடனும் அமைந்திருக்கின்றன. தனக்குப் பிரியமானவர்களுக்குத் தெரியாமல் சண்டை போட்டு அவர்களைக் காப்பாற்றும் விஷயங்கள் இதிலும் தொடர்கின்றன.

சென்டிமென்ட் காட்சிகளில் சமயங்களில் அஜித் நெகிழ வைக்கிறார். ஆனால் அவருக்கு வராமல் அடம்பிடிக்கும் இரண்டு விஷயங்கள் நடனமும் நகைச்சுவையும். ஆரம்பக் காட்சிகளில் அவர் நகைச்சுவைக்கு முயலும்போது, தூக்குதுரை, ‘பழைய ஜோக்’ தங்கதுரையாகி விடுகிறார். முன்பாதியில் ரோபோ ஷங்கர், தம்பி ராமையா, யோகி பாபுவும் பிற்பாதியில் விவேக்கும் சிரிக்க வைக்க முயன்று எரிச்சலூட்டுகிறார்கள்.

நயன்தாரா ஆரம்பக்காட்சிகளில் நன்றாக துடைத்து வைத்த தங்கக் குத்துவிளக்கு மாதிரி மின்னுகிறார். ‘உன்னால் என் குழந்தைக்கு ஆபத்து வரக்கூடாது’ என்கிற காரணத்தைச் சொல்லி அஜித்தை நிராகரிக்கும் காட்சிகளில் நடிக்கவும் செய்திருக்கிறார். மகள் ஸ்வேதாக அனிகா நடித்திருக்கிறார். ஜெகபதி பாபு பலவீனமான வில்லன்.



இமானின் இசையில் குத்துப் பாட்டுக்களை எளிதில் நிராகரித்து விடலாம். ஆனால் விஸ்வாசத்தின் விசேஷமான அம்சமாக நீடிக்கப் போவது - ராம்ராஜ் வேட்டியின் விளம்பரத் தூதுவர் போல வரும் அஜித்தோ அல்லது கண்ணைப் பறிக்கும் நயனதாராவோ இல்லை, ‘கண்ணான கண்ணே’ என்கிற அபாரமான பாடல். இமானுக்கும் இது புரிந்திருக்கிறது. எனவேதான் பல இடங்களில் அதைப் பின்னணி இசையாகப் போட்டு அசத்தியிருக்கிறார்.

இமானின் இந்த நல்ல மெட்டு, தாமரையின் அற்புதமான வரிகள் (புதைமணலின் நடுவே / புதைந்திடவே இருந்தேன்... / குறுநகையை எறிந்தே / மீட்டாய் என்னை..!) அசத்தலான பாவத்துடன் பாடியிருக்கும் சித் ஸ்ரீராம்.. என இந்தக் கூட்டணி ஜெயித்திருக்கிறது. இந்த வருடத்தின் முதல் சூப்பர் ஹிட் மெலடி.

ஒளிப்பதிவாளர் வெற்றியின் உழைப்பு ஆக்ஷன் காட்சிகளில் கூடுதல் சிறப்புடன் அமைந்திருக்கிறது. துவக்கத்தில் வரும் சலிப்பூட்டும் காட்சிகளால் படம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளத் தடுமாறுகிறது. (இயக்குநரின் வழிகாட்டுதலோடு) எடிட்டர் ரூபன் நினைத்திருந்தால் காட்சிகளை மாற்றியமைத்து துவக்கக் காட்சிகளின் சலிப்பைப் போக்கியிருக்கலாம்.

‘வெற்றி மட்டுமே முக்கியம்’ என்று பெற்றோர்கள் இளம் தலைமுறையினருக்கு நெருக்கடியும் அழுத்தமும் தரக்கூடாது என்கிற ஆதாரமான செய்தியை சொல்ல முயன்றிருக்கும் திரைப்படம் இது. இதைத் தெரிந்து கொள்வதற்குள் பல மனஅழுத்தங்களையும் நெருடிக்கடிகளையும் நாம் தாண்டி வர வேண்டியிருக்கிறது.

சிறப்புப் பேருந்து நிலையங்களுக்குச் செல்ல 24 மணி நேரமும் இணைப்புப் பேருந்துகள்

By DIN  |   Published on : 11th January 2019 05:58 PM  |
bus

சென்னை: பொங்கல் திருநாளை முன்னிட்டு அமைக்கப்பட்ட சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு சென்றிட ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 24 மணி நேரமும் கூடுதலாக 250 சிறப்பு இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இது குறித்து மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான பயணச்சீட்டு சிறப்பு முன்பதிவு செயலறைகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கடந்த 09.01.2019 அன்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் துவக்கி வைத்தார்கள்.


சென்னையிலிருந்து 11, 12, 13 மற்றும் 14.01.2019 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ள 14,263 பேருந்துகளில் 11ஆம் தேதி 3,529 பேருந்துகளும், 12ஆம் தேதி 3,741 பேருந்துகளும், 13ஆம் தேதி 3,411 பேருந்துகளும், 14ஆம் தேதி 3,582 பேருந்துகளும் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. மேலும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 10,445 பேருந்துகள் என ஆக மொத்தம் 24,708 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மாதவரம் புதிய பேருந்துநிலையம்
தாம்பரம் புதிய பேருந்து நிலையம் (MEPZ)
தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம்
பூவிருந்தவல்லி பேருந்து நிலையம்
கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம்
கே.கே.நகர் பேருந்து நிலையம்

சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மேற்குறிப்பிட்ட பேருந்து நிலையங்கள்/பகுதிக்கு மாநகர பேருந்துகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியூர் பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள பேருந்து நிலையங்களுக்கு எளிதாக சென்று வெளிமாவட்ட நீண்ட தூர பேருந்துகளை பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக, மாநகர போக்குவரத்துக் கழகம் கூடுதலாக 250 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இன்று முதல் பின்வருமாறு 12.01.2019, 13.01.2019, 14.01.2019 ஆகிய 4 நாட்களில் 24 மணி நேரமும் இயக்கப்படுகிறது. மேலும் வழிதவறிய பயணிகள் உரிய பேருந்து நிலையங்களுக்கு  ன்றடைந்திடும் வகையிலும் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பயணிகள் தங்களது புகார்களை அல்லது கருத்துகளை தெரிவித்திட ஏதுவாக, கட்டணமில்லா தொலைபேசி சேவை எண் 18004256151 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை அட்டைக்கும் ரூ.1,000 பொங்கல் பரிசு வழங்க அனுமதி 


By DIN | Published on : 12th January 2019 04:16 AM | 

சர்க்கரை மட்டும் பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்க அனுமதியளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 வழங்கும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக் கோரி கோவையைச் சேர்ந்த டேனியல் ஜேசுதாஸ் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்க தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழக கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தைப் பொருத்தவரை 5 வகையான குடும்ப அட்டைகள் உள்ளன. அதன்படி முன்னுரிமை உடையவர்-அரிசி பெறுபவர், முன்னுரிமை உடையவர் -அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் அரிசி பெறுபவர், முன்னுரிமை அற்றவர்- அரிசி பெறுபவர், முன்னுரிமை அற்றவர்-சர்க்கரை மட்டும் பெறுபவர், எந்தப் பொருளும் வேண்டாதோர் ஆகியவை உள்ளன. இதில் சர்க்கரை மட்டும் பெறுபவர்கள் 10 லட்சத்து 11 ஆயிரத்து 330 பேர் உள்ளனர்.

இவர்களில் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி வரை, 4 லட்சத்து 12 ஆயிரத்து 558 குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத் தொகையான ரூ.1000-ஐ பெற்றுள்ளனர். இதே பிரிவில் இருந்து பரிசுத் தொகையைப் பெறாதவர்கள் வேதனையில் உள்ளனர். எனவே இவர்களுக்கு ரூ.1000 வழங்க அனுமதிக்க வேண்டும். இதற்கு ஏற்ற வகையில் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் பி.ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், கூடுதல் அரசு வழக்குரைஞர் மனோகர் ஆகியோர் ஆஜராகி, சர்க்கரை மட்டும் பெறும் குடும்ப அட்டைதாரர்களும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள்தான். இவர்கள் அரிசி வேண்டாம் எனக்கூறி சர்க்கரை உள்ளிட்ட பொருள்களை வாங்குகின்றனர். இவர்களில் 40 சதவீதம் பேருக்கு இந்த பொங்கல் பரிசுத்தொகை வழங்கப்பட்டு விட்டது. எனவே எஞ்சியவர்களுக்கு இந்த தொகையை வழங்க அனுமதிக்க வேண்டும் என்றனர். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், இந்த தொகை யாரைச் சென்றடைய வேண்டுமோ அவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றார்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசு திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அனைவருக்கும் வங்கிக் கணக்கு உள்ள நிலையில் இந்த 1000 ரூபாயை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தலாமே, இந்தத் தொகைக்காக நியாய விலைக்கடைகளில் பொதுமக்கள் 8 முதல் 10 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்க வைக்கிறீர்கள், ரூ.1000 கிடைக்காவிட்டால் தேர்தலில் வாக்களிக்க மாட்டேன் என்ற நிலையை உருவாக்கியது யார், ஓர் இலவச திட்டத்தை அறிவிக்கும் முன்பாக பயனாளிகள் யார் என்பதை முடிவு செய்து சரியாக திட்டமிட வேண்டும். மேலும் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் ரேஷன் அரிசி ஆந்திரம் மற்றும் கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. இந்த அரிசியை இலவசமாக வழங்குவதற்கு பதிலாக குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கலாமே, முன்னாள் முதல்வர் அண்ணாவே ரூபாய்க்கு ஒருபடி அரிசி என்று தான் அறிவித்தார். இன்னும் எத்தனைக் காலத்துக்குத்தான் இலவசங்கள், இனிவரும் காலங்களில் இலவசங்கள் வழங்கமாட்டோம் என முடிவெடுங்கள் என கருத்து தெரிவித்தனர்.

மேலும் தற்போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பாகுபாடு இல்லாமல் 90 சதவீதம் பேருக்கு ரூ.1000 பரிசுத்தொகை விநியோகிக்கப்பட்டு விட்டது. இதுதொடர்பாக தடை பிறப்பித்தும் எந்தப் பயனும் இல்லை.
எனவே, எதிர்காலங்களில் இலவச அரிசி வழங்குவதையும் தவிர்க்க அரசு முன்வர வேண்டும். அப்போதுதான் அதில் நடக்கும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். சர்க்கரை மட்டுமே பெறும் குடும்ப அட்டைதாரர்கள் பலருக்கு பணம் கொடுத்து விட்டதாகவும், எஞ்சியவர்களுக்கு பணம் செல்லவில்லை என்ற அரசின் கோரிக்கையை கருத்தில் கொள்ள முடியாது. ஆனால், அவர்களும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள்தான் என்ற அரசுத் தரப்பு வாதத்தைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே, பொங்கல் பரிசுத்தொகை ரூ.1000-ஐ சர்க்கரை மட்டும் பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கிக் கொள்ள உத்தரவிட்டு, அதற்கேற்ற வகையில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மாற்றியமைக்கப்படுவதாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

கற்றல் என்னும் பெருங்குணம்!

By இரா. கதிரவன் | Published on : 12th January 2019 02:10 AM 

நம்மில் பெருவாரியானோர் கல்வி கற்பதே, ஒரு வேலையில் சேர வேண்டும் என்ற நோக்கத்தோடுதான். பலருக்குக் கல்வி என்பது ஆரம்பப் பள்ளியில் தொடங்கி, ஏதோ ஒரு வேலை கிடைத்தவுடன் நிறைவுபெற்று விடுகிறது.
ஒரு நிறுவனத்தில் வேலையில் சேர்ந்த பின்னர், அவர்களது திறன் மேம்பாடு குறித்து அந்த நிறுவனங்கள் அக்கறை எடுத்துக் கொள்ளும்; காரணம், நேற்றைய தொழில் நுணுக்கங்களை இன்று பயன்படுத்தினால் நாளைய சந்தையில் நிலைத்திருக்க இயலாது எனப் பெரும் மாற்றங்கள் இடைவிடாது நிகழ்வதுதான்.

எனவே, தொழில் நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் தொழில்நுணுக்கம் மற்றும் மேலாண்மைத் திறனை இடைவிடாது வளர்த்துக் கொள்வதை, இடைவிடாக்கற்றல் என்னும் தொடர் நிகழ்வு மூலம் செயல்படுத்துகின்றன. புதிய தொழில்நுட்பங்கள், உற்பத்தித்திறன் வளர்ச்சி, தர மேம்பாடு ஆகியனவற்றை இடைவிடாது மேற்கொள்ள நிறுவனத்தின் ஒவ்வொருவரையும், மாற்றங்களுக்கும்-குறிப்பாக கற்றல் என்ற தொடர் நிகழ்வுக்கும் உட்படுத்தும்.

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியும், அங்கு பணிபுரிபவர்களின் வளர்ச்சியும் இணைகோடுகள். எனவே, ஊழியர்களது அறிவு மற்றும் செயல்திறன் வளர்ச்சிக்காக பட்டறைகள், வகுப்புகள், மேல்படிப்புக்கான ஊக்கம் ஆகியனவற்றைத் தரும்.

நிறுவனங்களுக்குப் பொருந்தும் இந்தச் செயல்முறை ஒரு நாட்டுக்கும் தனி மனிதனுக்கும் பொருந்தும். தனி மனிதனுக்கு கற்றல் என்பது ஒரு இடைவிடாத செயலாகும்போது என்ன பலன்களைத் தரும்? முதலாவதாக வீண் பொழுதுபோக்கு, வெட்டிப் பேச்சு, அக்கம்பக்கம் சச்சரவு, சூதாட்டம், அதீத தொலைக்காட்சி, குடிப்பழக்கம் ஆகிய தீங்குகளைத் தவிர்த்து நல்ல சூழலை ஏற்படுத்தும்.

குறிப்பாக, பணி ஓய்வு பெற்றவர்கள் தங்களது மனதை இலகுவாகவும், மூளையைச் சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ள உதவும். பலர் பணிபுரியும் காலத்தில், பொருள் சேர்க்க ஓய்வு ஒழிச்சலின்றி அலைந்தவர்கள், பணி ஓய்வுக்குப் பின்னர் ஒருவித மனக்குழப்ப நிலைக்கு ஆளாவதைப் பார்த்திருப்போம்; இவர்கள் இந்த நிலையில் சிக்காதிருக்க கற்றல் என்னும் பழக்கம் உதவும்.

இந்தியாவில் 60 வயது கடந்த சுமார் 35 லட்சம் பேர் மனஅழுத்தம் சார்ந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பதை நோக்கும்போது, இதன் முக்கியத்துவம் விளங்கும்.

அறுபது வயதுக்குப் பின்னர் புதிதாக ஒரு துறையைத் தேர்ந்தெடுப்பது - கற்றல் என்ற பழக்கத்தைத் தொடங்குவது எளிதான ஒன்றல்ல. எனவே, இதனை இளமையிலேயே தொடங்குவதுதான் நல்ல பலன் தரும்.
எனவே, ஒருவர் இளமையிலேயே இசை, ஓவியம், இலக்கியம், சரித்திரம் குறித்துத் தெரிந்துகொள்வதுடன், வேறு ஏதாவது ஒரு துறையில் தங்களது அறிவைப் பெருக்கிக் கொள்வதே பெரும் பலனளிக்கும் .
ஏராளமான, அருமையான விஷயங்களை உலகம் தன்னுள் பொதித்து வைத்திருக்கிறது. அவற்றில் சிலவற்றையாவது கற்பதற்கும் ரசிப்பதற்கும்கூட ஒருவரின் ஆயுட்காலம் போதாது.
வளர்ந்த நாடுகள் இடைவிடாத கற்றலை, வாழ்நாள் கல்வியாக எல்லா வயதினருக்குமான முறைசாரா கல்வியாக, தேர்வுகளற்ற ஒன்றாக வழங்குகிறது.

நிர்வாகம், கல்வி, மருத்துவம், சட்டம், கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சார்ந்த விற்பன்னர்கள் பங்களிக்கவும் - பங்கேற்பவர்கள் தங்களது அனுபவத்தினைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளவும், வாரம் சில மணி நேரங்கள் கொண்ட வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இங்கு நம்மிடையே அத்தகைய வசதிகள் இல்லாவிடினும்கூட, தங்களுக்குப் பிடித்தமான துறை சார்ந்த பத்திரிகைகள், கணினி நூல்கள் வாசிப்பது பெரும் பயனளிக்கும்.

இவற்றைவிட கற்றலின் இன்னொரு மிக முக்கிய வெளிப்பாடு, சமுதாயத்தின் அங்கமாக பலரோடும் ஒன்றிணைந்து வாழக் கற்றுக் கொள்வதுதான்.
தான் வாழும் பூமியை, அதன் சுற்றுச்சூழலை, பிற ஜீவராசிகளை, சக மனிதர்களை, இயற்கையைப் பேணுவது மற்றும் நேசிப்பது, பிறர் கருத்துகளை, உரிமைகளை, உணர்வுகளை, சுதந்திரத்தை
மதிப்பது ஆகியவை தனி மனிதனின் கற்றலின் வெளிப்பாடுதான்.
இடையறாது கற்கும் ஒருவன், நாட்டின் பிரஜை என்ற இடத்திலிருந்து நல்ல குடிமகன் என்ற இடத்துக்கு உயருகிறான்.
அடுத்ததாக ஒரு நாடு என்ற அளவில், தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப நிறுவனங்கள் மாற்றிக் கொள்ளுவதைப் போன்று, இயற்கையில் நிகழும் மாற்றங்களுக்கு நாளைய பேரிடர்களுக்கு, புவி வெப்பமயத்துக்கு, கடல் மட்ட உயர்வுக்கு எனப் பல விஷயங்களுக்கு ஏற்ப அதனைத் தயார் செய்துகொள்ள வேண்டும்.

இதற்காக ஒரு நாடு பிற நாடுகளின் வெற்றி தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளலாம்.

மேலும், கற்றல் என்ற தனிமனிதனின் பெருங்குணம் ஒரு நாட்டின் பொதுகுணமாகும்போது, அந்த மக்களின் கல்வித் தரம்-பண்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியினையும் உயர்த்தும். அங்கு ஓர் இணக்கமான, பிணக்கற்ற அமைதியான சூழல் நிலவும்; பல்வேறு மொழி-இன- மத மக்கள் நிறைந்த நாடுகளுக்கு இது மிக அவசியமான ஒன்று.
வளர்ந்த எல்லா நாடுகளிலும் கற்றல் என்பது அவற்றின் பொதுகுணமாக இருப்பதை நாம் காண முடியும். இத்தகைய கற்றலின் அருமையை உணர்த்தத்தான் யாதானும் நாடாமல் ஊராமால் என்ஒருவன்
சாந்துணையும் கல்லாத வாறு
என்றாரோ திருவள்ளுவர்?
New Antyodaya Express remains only on railway timetable 

R. Rajaram 

 
Tiruchi, January 12, 2019 00:00 IST


Passengers disappointed as date of commencement of the new service is yet to be notified

Months after the Southern Railway announced in its new timetable released in August 2018 , a daily Antyodaya Express train from Tambaram to Sengottai via main line mentioning its timings and coach composition, the delay in the announcement of the date of its introduction and stoppages has disappointed travellers.

Passengers of the delta region covering important stations such as Mayiladuthurai, Kumbakonam and Thanjavur falling on the main line route have sought early operation of the Antyodaya Express which would provide them with another direct service to Chennai besides linking some southern destinations.

Heeding public demand, the railway administration in its annual timetable revision released in November 2017 announced the introduction of the new Antyodaya Express train from Tambaram to Sengottai.

But, it merely stated then that the date of commencement of the new service would be notified later.

Later, the Southern Railway operated special day-time trains from Tambaram to Sengottai via Mayiladuthurai and Kumbakonam for few days.

However, the services were stopped apparently due to prolonged line block put in place in the Mayiladuthurai - Thanjavur section, claim passengers.

On a couple of occasions, the special train was diverted midway via Vriddhachalam without any prior announcement causing huge disappointing to passengers waiting enroute.

Then the Southern Railway in its new timetable released in August 2018 announced the introduction of a new Tambaram - Sengottai Antyodaya Express train via main line section.

The train numbers and coach composition were mentioned in both directions in the timetable as per which the train would leave Tambaram at 7 a.m. to reach Sengotttai at 10.30 p.m.

In the return direction, the train was scheduled to leave Sengottai at 6 a.m. and arrive at Tambaram at 10.15 p.m.

However, the 2018 Railway timetable said that the date of its introduction and stoppages would be "notified later".

With no word yet from the railway administration over the commencement of the new service, passengers in the delta region want its immediate introduction with stoppages provided in the November 2017 timetable.

“It is indeed disappointing that the railway administration has yet to spell out the date of the introduction of the new service after making an announcement nearly five months ago”, says V. Sathyanarayanan, secretary, All Trade and Industries Association, Kumbakonam.

The special train operated between Tambaram and Sengottai for few days failed to attract good patronage due to inordinate delay en route with no prior proper announcements to passengers, claim travellers.

Ever since the main line section was converted to broad gauge, passengers have been consistently demanding restoration of all trains that were operated when it was a metre gauge including the Chennai Egmore - Sengottai fast passenger.

Repeated representations were made and a memorandum submitted to the then Railway Minister Suresh Prabhu during his maiden visit to Kumbakonam in March 2017 also seeking the restoration of the once highly patronised Chennai - Sengottai fast passenger, said A. Giri, advisor, Thanjavur District Rail Users Association.

It was after this meeting with the Railway Minister that the announcement for the new Antyodaya Express came through, he added.
Elaborate security arrangements in Salem to tackle festival rush 

Staff Reporter 

 
SALEM, January 12, 2019 00:00 IST



City Police Commissioner K. Shankar (left) at the inauguration of the temporary control room set up at Dr. MGR Central Bus Stand (New Bus Stand) in Salem on Friday.E.Lakshmi 

NarayananE_LakshmiNarayanan

CCTV cameras, public address systems set up in New Bus Stand area

The police have made elaborate security arrangements in the city in view of the heavy festival rush. As many as 17 closed circuit television (CCTV) cameras and 17 public address systems were installed in and around Dr. M.G.R Central Bus Terminal (New Bus Stand) here on Friday.

City Police Commissioner K. Shankar inaugurated the temporary control room established at the bus stand and the LED screens set up to disseminate awareness message to the public. The cameras and public address systems were installed from Ramalinga Junction to New Bus Stand and are connected to the control room. Apart from this, seven CCTV cammeras and seven public address systems were installed at Kondalampatti junction.

Senior police officials said that in addition to the 13 cameras on the bus stand premises, 17 cameras were installed now. “These 30 cameras will help the police regulate traffic and monitor persons involving in crime activities”, they added.

Mr. Shankar said that the cameras would help in monitoring criminals and also prevent crime. He said that additional police personnel, armed reserve personnel, home guards were posted for duty during the Pongal holidays so that people can move without any fear. Special teams have been formed to monitor persons released from the prison, he added. He also distributed awareness pamphlets to the public.

Deputy Commissioners P. Thangadurai (Crime and Traffic) and C. Shyamala Devi (Law and Order), inspectors and other personnel were present.
Pongal celebrated in university 

Staff Reporter 

 
MADURAI, January 12, 2019 00:00 IST


Pongal festival was celebrated on Madurai Kamaraj University premises with the participation of hundreds of students and staff on Friday.

As the university will be on holiday during Pongal, the festival was celebrated ahead. Students and staff members, including Vice-Chancellor M. Krishnan, turned up in ethnic wear, creating a festive mood.

NEWS TODAY 25.08.2026