Thursday, August 8, 2019

லக்ஷ்மி ராவேமா இண்டிகி! - வரலட்சுமி பூஜை ஸ்பெஷல்



வி.ராம்ஜி

திருமணமான பெண்கள் கொண்டாடுகிற பண்டிகை... வரலட்சுமி பூஜை. புகுந்த வீட்டில் இந்த பூஜை கொண்டாடுகிற வழக்கம் உள்ளவர்கள், தவறாமல் கடைப்பிடிப்பார்கள். வழக்கம் இல்லையே என்பவர்கள் கூட, இந்தப் பூஜையின் பலன்களாலும் பூஜை செய்வதால் கிடைக்கும் மனநிம்மதியாலும் சகல ஐஸ்வர்யங்களும் வீடு வந்து நிறைவதாலும் கொண்டாடுகிறார்கள். 

சின்னச்சின்னதான மாறுபாடுகள் இருந்தாலும், ஏறக்குறைய எல்லோருமே அம்பாளை, கலசத்தில் இருத்தி அலங்காரங்கள் செய்து, வீட்டுக்குள் அழைத்து, பூஜை செய்வது வழக்கம். தமிழகத்தில், திருமணமான பெண்கள் தனியாக அமர்ந்தோ, மற்ற சுமங்கலிகளுடனோ செய்வார்கள். கர்நாடகாவில் தம்பதியாக அமர்ந்து பூஜை செய்வார்கள்.
வடை, பாயசம், இட்லி. கொழுக்கட்டை, பட்சணங்கள், சுண்டல், பழங்கள் என தங்களால் முடிந்ததைக் கொண்டு, நைவேத்தியம் செய்து, இந்த பூஜையைச் செய்யலாம்! 

ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்னால் வரும் வெள்ளிக்கிழமையில் இந்த வரலக்ஷ்மி பூஜையானது கொண்டாடப்படுகிறது. சில தருணங்களில், ஆடி மாதத்தில் அமையும். இதோ... இந்த வருடம்... ஆடி 24ம் தேதியான ஆகஸ்ட் 9ம் தேதி ... வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.
வருடந்தோறும் தொடர்ந்து செய்துவிட்டு, ஏதேனும் காரணத்தால் விரதம் இருக்க முடியாதவர்கள் கூட, அருகில் பூஜை செய்பவர்கள் வீட்டுக்குச் சென்று, பூஜையில் கலந்து கொள்ளலாம். 

புதிதாகக் கல்யாணமாகி புகுந்த வீட்டுக்கு வந்து, பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு, முதல் பூஜையை தலை நோன்பு என்பார்கள். இந்த வைபவத்தை முன்னிட்டு, பிறந்த வீட்டில் இருந்து எல்லா சீர் வகைகளும் அனுப்புவார்கள். அம்பாளின் முகம், கலசம், பூஜைக்கு வேண்டிய உபகரணங்கள், பழங்கள் என சிறப்பாக சீர்த்தட்டு போல் கொண்டு வந்து கொடுப்பார்கள். 

பூஜை செய்யும் இடத்தை, அழகுறச் சுத்தம் செய்து அம்பாளை அமர வைக்கும் இடத்தை தயார் செய்யவேண்டும். அந்தக் காலத்தில், மண் தரை என்பதால், பசுஞ் சாணத்தைக் கொண்டு தரை மெழுகி சுத்தம் பண்ணுவார்கள். சுவரில் சுண்ணாம்பு அடித்து மண்டபத்தில், கலசத்தில், வரலக்ஷ்மி வீற்றிருப்பதைப் போல் வண்ணக் கலவைகளால் சுவரில் ஓவியம் வரைவார்கள். இப்போது அநேகமாக படமாகவே மாட்டி விடுகின்றனர்.
அதேபோல், வரலக்ஷ்மி முகங்கள் என்று வெள்ளியில் செய்தது எதுவும் கிடையாது. கண், மூக்கு, வாய், காது என்று வெள்ளியில் செய்த அவயவங்கள் மட்டுமே கிடைக்கும்.

வெள்ளி, பித்தளை, வெண்கலம் அல்லது செப்புச் செம்புகளிலோ, சிறிய குடங்களிலோ கலசம் வைப்பார்கள். அதில், சந்தனத்தை இடுவார்கள். அந்த சந்தனத்தில் உருவங்களைப் பொருத்துவார்கள். கலசத்தில், அரிசியை நிரப்பி, வெற்றிலைப்பாக்கு, மஞ்சள், வெள்ளிக்காசுகள், தங்க நகை என அதில் போட்டு, அதன்மேல் மாவிலைக்கொத்தைச் சொருகி, குடுமியுடன் கூடிய நல்ல தேங்காயை, மஞ்சள் பூசி வைப்பார்கள். 
.
எலுமிச்சை பழம், விச்சோலை, கருகமணி அவசியம் வைப்பார்கள். இப்போது வெள்ளியில் செய்த வரலக்ஷ்மி முகம் அழகான நகை நட்டுகள் வேலைப்பாடுகளுடன் கிடைக்கின்றன. அதை வாங்கிக் கலசத்தின் மேல் பொருத்தி விடுவது வழக்கமாகிவிட்டது.
 
அம்பாள் உருவத்துக்கு, விதவிதமான பாவாடை, புடவைகளையும் அணிவித்து அழகாக அலங்காரங்கள் செய்யலாம். இதுபோல், அலங்கரித்து , அம்மனை தனியான இடத்தில் அமர்த்துவார்கள். பூஜை செய்யப்போகும் இடத்தில் மாக்கோலமிட்டு, செம்மண் பூசி அழகாக பந்தல் அமைப்பார்கள். ஒரு மேஜையைக் கொண்டு, பந்தல் அமைத்து, வாழைக் கன்றுகளைக் கட்டி, மாவிலைத் தோரணங்கள் அமைத்து அலங்கரிப்பார்கள்.
தாமரை, மல்லிகை, மருக்கொழுந்து, ரோஜா, சம்பங்கி என மலர்ச்சரங்களும் மாலைகளும் அணிவிக்கலாம். குத்துவிளக்குகளை இரண்டு பக்கமும் வைத்து ஏற்றவேண்டும். 

தன, தான்ய லக்ஷ்மியுடன், வரலக்ஷ்மியையும் சேர்த்து ஒன்பது லக்ஷ்மிகள். நோன்பின் முக்கிய அம்சமாக நோன்புக்கயிறு வைத்து, அதையும் பூஜை செய்து, மஞ்சள்சரடை பெரியவர்களைக் கொண்டு வலதுகையில் அணிந்து கொள்வார்கள்! 

பூஜை செய்யும் பந்தலுக்குள் ஒரு தாம்பாளத்தில் அரிசியைப் பரப்பி, மணைப்பலகை மீது கலசம் வைத்திருப்பார்கள். 

முதல்கட்டமாக, முதல்நாளான வியாழக்கிழமை, சாயங்காலத்திற்குப் பின் அம்பாளுக்கு விளக்கேற்றி சந்தனம் குங்குமமிட்டு, பூக்கள் சொரிந்து வழிபட்டு நமஸ்கரிக்க வேண்டும். 

வெள்ளிக்கிழமை. விடிகாலை. வாசலில் கோலம்போடுவதில் ஆரம்பித்து, குளித்து, மடியாக நைவேத்தியங்களைத் தயாரித்து, மண்டபத்தில் கோலமிட்டு, செம்மண் கோலமும் இட்டு, பூஜைக்கு தேவையானவற்றைக் கொண்டு, அம்பாளை எடுத்து வருவார்கள். இதை அம்பாளை அழைத்தல் என்பார்கள்! 

கற்பூர ஆரத்தி காண்பித்து, நமஸ்கரித்து, உடன் ஒரு சுமங்கலி அல்லது, கன்னிப்பெண்ணின் உதவியுடன், ’செளபாக்கியத்தைக் கொடுக்கும் லக்ஷ்மி தேவியே, நீங்கள் வர வேண்டுமம்மா’ என்று சிரத்தையுடன் மனமுருகிப் அழைத்து, கவனமாக கலசத்தை உள்ளே எடுத்துவந்து தயாராக அலங்கரித்து, தீபங்களுடன் கூடிய மண்டபத்தில், கிழக்கு முகமாக வைத்து பூஜிக்கவேண்டும். 

பாக்யத லக்ஷ்மி பாரம்மா. லக்ஷ்மி ராவேமா இண்டிகி. எனப் பாடுவார்கள்.
அம்மனுக்கு எல்லாவித உபசாரங்களையும் செய்து ஆசனத்தில் வைத்து, ஆடை, ஆபரணங்கள், ரவிக்கைத் துணி, பஞ்சு வஸ்திர மாலைகள் அணிவித்து, அஷ்டோத்திர சத நாமாவளிகள் சொல்லி பூக்களினால் அர்ச்சனை செய்யலாம். தூப ,தீபங்களைக் காட்டி, நைவேத்தியம் செய்யவேண்டும். நோன்புச் சரடுகளில் ஒவ்வொரு புஷ்பங்களைத் தொடுத்து வைத்திருப்பதை அம்பாளின் பாதங்களில் வைத்து அதற்கும் பூஜை செய்யவேண்டும். 

பூஜை முடிந்து ஒவ்வொரு சரடாக எடுத்துப் பெரியவர்களால் சுமங்கலிகளுக்கும், கன்யாப் பெண்களுக்கும், வலது கையில் கட்டப் படும். அப்படிக் கட்டும்போது கையில் வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், பூ, தேங்காய், பழங்களைக் கொடுத்து குங்குமமிட்டு சரடைக் கட்டுவார்கள். பெரியவர்களை நமஸ்கரித்து ஆசிர்வாதம் பெறுவார்கள்.
ஆத்மார்த்தமாகவும் முழு ஈடுபாட்டுடனும் இந்த வரலக்ஷ்மி பூஜையைச் செய்யுங்கள். நம் வீட்டுக்கு ஓடோடி வருவாள் லக்ஷ்மிதேவி. கேட்டதையெல்லாம் தந்து மகிழ்வாள் அம்பிகை!
காஞ்சியில் ஆக. 13, 14, 16-ம் தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; அத்திவரதர் வைபவ பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு 




சென்னை

அத்திவரதர் வைபவத்தில் பாது காப்பு உள்ளிட்ட பணியில் ஈடுபட் டுள்ள ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறி வித்துள்ளார். பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில் காஞ்சி புரத்தில் உள்ள பள்ளி, கல்லூரி களுக்கு வரும் 13, 14, 16-ம் தேதி களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதர் வைபவம் நடந்து வருகிறது. அனந்தசரஸ் குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை, பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கிய இந்த விழா, வரும் 17-ம் தேதி வரை நடக்கிறது. ஜூலை 31 வரை சயனக் கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதர், ஆக.1-ம் தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 2 நிலைகளிலும் தரிசித் தால் அதிக பலன் உண்டு என்ற நம்பிக்கையில், சயனக் கோலத்தை தரிசித்த பக்தர்கள், மீண்டும் நின்ற கோலத்தை தரிசிக்க வருகின்றனர்.

இதனால், தற்போது தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சி புரத்தில் குவிந்து வருகின்றனர். கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 8 லட்சம் பேர் வந்ததாக கூறப்படு கிறது. பக்தர்கள் 20 மணி நேரத் துக்கும் அதிகமாக வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசித்து வருகின்றனர்.

இன்னும் 10 நாட்களே இந்த வைபவம் நடக்கும் என்பதால் இனி வரும் நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அங்கு பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் கூடுதல் வசதிகள் மற்றும் பாது காப்பு ஏற்பாடுகளை செய்வது குறித்த ஆய்வுக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நேற்று நடந்தது. தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்ப தால், மாவட்ட நிர்வாகம் இது வரை மேற்கொண்டு வரும் ஏற்பாடு கள் குறித்தும், கூடுதல் வசதிகள், பாதுகாப்பு குறித்தும் துறை வாரி யாக கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது.

அதைத் தொடர்ந்து, முதல்வர் பழனிசாமி வெளியிட்ட உத்தரவுகள்:

காஞ்சிபுரத்துக்கு அதிகமான வாகனங்களும், மக்கள் கூட்டமும் வருவதால் கூடுதல் வாகனங்களை பள்ளி, கல்லூரி வளாகங்களில் நிறுத்தவும், அப்பகுதியில் பக்தர்கள் ஓய்வெடுத்துச் செல்ல வசதிகளும் ஏற்படுத்தித் தரவேண்டும். வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளி கள் அமர்ந்து செல்ல கூடுதல் வசதி ஏற்படுத்த வேண்டும். தூய்மைப் பணிகளை தீவிரப்படுத்த, கூடுதல் துப்புரவுப் பணியாளர்களை சென்னை மாநகராட்சியில் இருந்து அனுப்ப வேண்டும்.

செலவை ஈடுசெய்ய நிதி

பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க, கூடுதல் காவலர்களை நியமிக்க வேண்டும். பக்தர்களுக்கு உணவு, குடிநீர் போன்றவற்றை சுகாதாரத்துடன் வழங்குவதை கண்காணிக்க வேண்டும். அத்தி வரதர் வைபவத்தில் பாதுகாப்பு, துப்புரவு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படும். விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்ததை கருத்தில்கொண்டு காஞ்சிபுரம் நகராட்சிக்கு ஏற்பட்ட செலவை ஈடுசெய்ய தமிழக அரசு சிறப்பு நிதி வழங்கும்.

பக்தர்கள் அதிக அளவில் காஞ்சிபுரம் நகரத்துக்கு தொடர்ந்து வருவதால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்கும் வகையில் ஆக.13, 14 மற்றும் 16 ஆகிய நாட்களில் காஞ்சிபுரம் நகரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் பிற அலுவலர்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.

ஆய்வுக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனி வாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, டி.ஜெயக்குமார், கே.பி.அன்பழ கன், சி.விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், சேவூர் எஸ்.ராமச் சந்திரன், தலைமைச் செயலர் கே.சண்முகம், உள்துறைச் செய லர் நிரஞ்சன் மார்டி, டிஜிபி ஜே.கே.திரிபாதி, அறநிலையத் துறை செயலர் அபூர்வ வர்மா, வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால், அறநிலையத் துறை ஆணையர் பணீந்திர ரெட்டி, காஞ்சிபுரம் ஆட்சியர் பி.பொன் னையா உள்ளிட்டோர் பங்கேற் றனர்.
'நீட்' விண்ணப்ப கட்டணம் குறைக்க கோரி வழக்கு

Added : ஆக 08, 2019 00:16

மதுரை : முதுகலை மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' தேர்வு விண்ணப்பக் கட்டணத்தை குறைக்க கோரிய வழக்கில், கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

திருச்சியைச் சேர்ந்த, டாக்டர் முகமது காதர்மீரா தாக்கல் செய்த பொதுநல மனு:முதுகலை மருத்துவப் படிப்பிற்கான, 'நீட்' தேர்வை, தேசிய தேர்வுகள் வாரியம் நடத்துகிறது. இது, கணினி மூலம், 'ஆன்லைனில்' நடத்தப்படும். இதற்காக, பொது மற்றும் இதர பிற்பட்டோரிடம், 3,750, ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களிடம், 2,750 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இது, 'எய்ம்ஸ்' முதுகலை படிப்பு நுழைவுத்தேர்வு கட்டணத்தை விட பல மடங்கு அதிகம். கட்டணம் மூலம், தேசிய தேர்வுகள் வாரியம், ஆண்டுக்கு, 48 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. இதில், 8 கோடி ரூபாய் மட்டுமே, தேர்விற்கு செலவிடப்படுகிறது.இது தவிர, கவுன்சிலிங்கில் பங்கேற்போரிடம், கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முதுகலை மருத்துவப் படிப்பிற்கான, நுழைவுத் தேர்வு கட்டணத்தை குறைக்க மற்றும் அனைத்து நுழைவுத் தேர்வுகளுக்கும் புதிய வழிகாட்டுதல்களை கொண்டு வர, தேசிய தேர்வுகள் வாரியம், பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

நீதிபதிகள், எம்.சத்தியநாராயணன், பி.புகழேந்தி அமர்வு, 'மனுதாரர் கூடுதல் ஆவணங்களை, ஆக., 26ல் தாக்கல் செய்ய வேண்டும்' என்றது.
பெற்றோரை கண்டறிய முடியாமல் பரிதவிக்கும் சிறுவன்

Updated : ஆக 08, 2019 02:09 | Added : ஆக 08, 2019 00:01



தஞ்சாவூர் : தஞ்சையில், 5 வயது சிறுவன், பெற்றோரை கண்டறிய முடியாமல், பரிதவித்து வருகிறான்.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பரமேஸ்வரி, 29, என்பவர், 11, 7, 5 வயதுள்ள மூன்று சிறுவர்கள், 9 வயதுள்ள ஒரு சிறுமியுடன், பொள்ளாச்சி, திருப்பூர் போன்ற ஊர்களில் பிச்சை எடுத்துள்ளார். கரூர் ரயில்வே ஸ்டேஷனில், பிச்சை எடுத்த போது, 'சைல்டு லைன்' அமைப்பினர், குழந்தைகளை மீட்டனர்; பரமேஸ்வரி மாயமாகி விட்டார்.

அந்த குழந்தைகளிடம் விசாரித்த போது, தஞ்சாவூர் எனக் கூறியதால், தஞ்சை மாவட்ட குழந்தைகள் நல குழுவினரிடம், அவர்களை ஒப்படைத்துள்ளனர். இதில், இரண்டு சிறுவர், ஒரு சிறுமி என, மூன்று குழந்தைகள், தன்னுடையது என, மதுரையைச் சேர்ந்த கோச்சடையான் என்பவர், ஆவணங்களை காட்டி, அழைத்துச் சென்றார். தருண் என்ற, 5 வயது சிறுவன் மட்டும், 15 நாட்களாக, குழந்தைகள் நலக் குழுவினர் பராமரிப்பிலேயே இருந்து வருகிறான்.

தஞ்சை மாவட்ட குழந்தைகள் நல குழு தலைவர், திலகவதி கூறியதாவது:தருணின் பெற்றோர் குறித்து, எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஊர், பொள்ளாச்சி, தந்தை சுரேஷ், தாய் சித்ரா, தம்பி ராகவா எனக் கூறுகிறான். மற்ற விபரங்கள் அவனுக்கு தெரியவில்லை. தருணின் பெற்றோரோ அல்லது அவனை பற்றிய விபரம் அறிந்தவர்களோ வந்து அழைத்து செல்லலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சிபுரம் சென்ற பக்தர்களை திருப்பி அனுப்பிய போலீசார்

Added : ஆக 08, 2019 00:03

விழுப்புரம் : காஞ்சிபுரம் அத்தி வரதரை தரிசிக்க, நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகளவில் குவிந்ததால், தென் மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்களின் வாகனங்களை, விழுப்புரம் போலீசார், திருப்பி அனுப்பினர்.

காஞ்சிபுரத்தில் அத்தி வரதரை தரிசனம் செய்ய, நேற்று முன்தினம், 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர். சுவாமி தரிசனம் செய்ய, 10 மணி நேரத்திற்கும் மேலானது.இதையடுத்து, காஞ்சி புரத்திற்கு வரும் பக்தர்களுக்கு, அங்குள்ள கூட்ட நெரிசல் குறித்து தெரிவிக்க, விழுப்புரம் மாவட்ட போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது.இதன்படி, விழுப்புரம் மாவட்ட போலீசார், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, 'டோல்கேட்'களில், வேன், கார் மற்றும் பஸ் உள்ளிட்ட வாகனங்களை ஆய்வு செய்தனர். அதில், காஞ்சிபுரம் செல்லும் பக்தர்களிடம், அங்குள்ள கூட்ட நெரிசல் குறித்து தெரிவித்தனர்.

மதுரை, திருச்சி, துாத்துக்குடி, தேனி, நாமக்கல், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த வாகனங்களை, உளுந்துார்பேட்டை டோல்கேட்டில் தடுத்து, திருப்பி அனுப்பினர்.சேலம், ஈரோடு, கோவை பகுதிகளில் இருந்து வந்த வாகனங்களை, கள்ளக்குறிச்சி மாடூர் டோல்கேட்டில் நிறுத்தி, திருப்பி அனுப்பினர். இதனால், நீண்ட துாரத்தில் இருந்து வந்த பக்தர்கள், வேறு கோவில்களுக்கு செல்வதாக கூறிச் சென்றனர்.
பாக்., டாக்டர்கள் சவுதியில் வெளியேற்றம்

Added : ஆக 08, 2019 05:21

ஜெட்டா: பாகிஸ்தானின் முதுகலை மருத்துவ பட்டப்படிப்பின் தரம் மற்றும் பயிற்சி, போதிய அளவில் இல்லாததால், அதன் அங்கீகாரத்தை, மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியா, ரத்து செய்தது. இதையடுத்து, அந்நாட்டில் பணியாற்றும் நுாற்றுக்கணக்கான பாகிஸ்தான் டாக்டர்களை, உடனடியாக, நாட்டை விட்டு வெளியேறுமாறு, சவுதி அரசு உத்தரவிட்டது.
Recover amount paid to man who forged sale deed: Madras high court

DECCAN CHRONICLE.

PublishedAug 8, 2019, 4:12 am IST

In view of the above, this petition is disposed of with a direction to the collector to immediately act upon the directions given by this court.

Madras high court

Chennai: The Madras high court has directed the Chennai District Collector to take action for recovery of the award amount paid to a person, who allegedly forged and fabricated documents and claimed title over the property, which was acquired by the highways department for widening the road in Porur from another person.

Justice N. Anand Venkatesh gave the directive while disposing of a petition filed by V. Vanitha.

Petitioner’s counsel Abudukumar submitted that the petitioner’s father-in-law Sampath owned and possessed vast extent of landed properties in Porur village, Kancheepuram district (Presently Ambattur Taluk, Thiruvallur district). He had gifted 0.18 cents comprised in Survey No.188/25 by way of Sridhana deed to his sister Mangalammal. During the year 1993, for the purpose of road widening the front portion of the property measuring about 40 square meter of land in Survey No.188/1A was acquired by the state highways department and appropriate award was also passed. He bequeathed the remaining portion of land in Survey No.188/1A in favour of the petitioner’s husband. While so, the daughter-in-law and grand daughter of Mangalammal started claiming right over the property on the guise that the property in Survey No.188/1A and the property in Survey No.188/25 were one and the same and being aggrieved with the same, the parties have initiated appropriate civil suit for appropriate relief before the civil court concerned, he added.

Abudukumar said since there was dispute over title of the property and a suit was pending before the District Munsif, Poonamallee, the Acquisition Officer had in 2011 directed the compensation amount to be deposited in the civil court. While so, nearly after six years, the petitioner came to know that based on the sale deed submitted by one Shenbagaraman, the officer reopened and reviewed his own order and without issuing any notice to the petitioner, held that Shenbagaraman had established his title to the land in question and has paid the entire compensation amount of `23.21 lakh to him.

Therefore, the petitioner filed a petition and the high court had on December 21, 2018 directed the Chennai District Collector to conduct a detailed enquiry in respect of disbursement of compensation amount to Shenbagaraman and in the inquiry, if the collector finds that the acquisition officer concerned acted in collusion with Shenbagaraman, take suitable action including filing of criminal complaint against the erring official concerned, besides recovery of the amount from Shenbagaraman within 8 weeks.

However, since no action was taken, the petitioner has filed the present petition, he added.

In his present order, the judge said in spite of specific direction given by this court, the collector has not acted upon the same and till date, neither the criminal action nor the proceedings to recover the amount from the counter party has been initiated.

“In view of the above, this petition is disposed of with a direction to the collector to immediately act upon the directions given by this court and take action for the recovery of money from the counter party and to initiate
criminal proceedings, within six weeks,” the judge added.

NEWS TODAY 23.04.2026