Thursday, August 8, 2019

மனசு போல வாழ்க்கை 09: மன மாற்றம் என்பதே எண்ண மாற்றம்தான்! 






டாக்டர். ஆர். கார்த்திகேயன்

உணர்வு நிலைகளை மாற்றினால் உடல்நிலை மாறும் என்று சொன்னேன். இதை ஆமோதித்தாலும் முழுமையாக ஏற்றுக்கொள்வதில் சிரமங்கள் இருக்கலாம். எல்லா உடல் நோய்களையும் உணர்வுகளை மாற்றினாலே சரியாக்கலாம் என்பதுதான் உண்மை. நோய்கள் மட்டுமல்ல; நம் வாழ்வின் எல்லாப் பிரச்சினைகளையும் உணர்வுகளைக்கொண்டு சீர் செய்யலாம்.

வாழ்வின் மிகச் சிறிய சம்பவங்களைக்கூட உணர்வுநிலைகளை மாற்றி அமைக்கும். ஒரு பூங்காவில் காத்திருக்கிறீர்கள். காலை மணி 8. வெயில் ஆரம்பிக்கிறது. அது உங்கள் முகத்தில் படுகிறது. எப்படி இருக்கும்? அதை உங்கள் உணர்வுநிலைதான் முடிவு செய்கிறது. உங்கள் காதலி வருகைக்காகக் காத்திருக்கிறீர்கள். மனத்தில் ஒரு எதிர்பார்ப்பும் ஏக்கமும் உள்ளது. பூங்கா சூழல் கவிதையை யோசிக்க வைக்கும். வெயில் இதமாக முகத்தை வருடுவதாகத் தோன்றும்.

உங்கள் கடன்காரன் உங்களிடம் பாக்கி வசூலிக்க வருகிறான். எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் நிற்கிறீர்கள். பயமும் எரிச்சலும் சுயபச்சாதாபமும் கலந்து நிற்கிறீர்கள். இப்போது பூங்கா ரம்மியமாகத் தெரியவில்லை. முகத்தில் படும் வெயில் சுள்ளென்று எரிகிறது. இப்போது புரிகிறதா, உணர்வுகள் வண்ணக் கண்ணாடிகளாக உங்கள் அனுபவங்களை மாற்றிக் காண்பிக்கும் வல்லமை படைத்தவை என்பது.

சினமும் கருணையும் உண்டாக்கும் எண்ணங்கள்

அது சரி, இந்த உதாரணங்களில் உணர்வுகளைத் தீர்மானிப்பது சம்பவங்கள்தானே; உணர்வுகளை எப்படிக் காரணமாக்க முடியும் என்று கேட்கிறீர்களா? அப்படியென்றால் எல்லாவற்றுக்கும் காரணம் வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளே என்றுத் தோன்றினால் ‘பொறுப்புத் துறப்பு’ என்ற நம் பழைய அத்தியாயத்தைத் திரும்பவும் படியுங்கள். “எது நடப்பினும் அதற்கு நான் பொறுப்பு” என்ற எண்ணம் வலுப்பெறும்.
சூழ்நிலைகள் நம் உணர்வுகளை நேரடியாகப் பாதிப்பதில்லை.

அதைச் சமைத்துக் கொடுப்பவை நம் எண்ணங்கள். சூழ்நிலைகளுக்குப் பொருள்கொடுத்து அதற்கேற்ப உணர்வுகளை அடையாளப்படுத்தும் வேலையை நம் எண்ணங்கள் தொடர்ந்து செய்கின்றன. “இது உன்னைச் சிறுமைப்படுத்துகிறது, சினம் கொள்” என்று கோபத்தைத் தூண்டுவது நம் எண்ணம்தான். “உன் மேல் எத்தனை அன்பு இருக்கிறது பார். பாவம், இயலாமையில் அப்படிப் பேசிவிட்டாள்” என்று கருணையைத் தூண்டுவதும் நம் எண்ணம்தான். “இது பெரும் ஆபத்து” என்று புரிந்தவுடன் பயம் வருகிறது. “இது பெரும் இன்பக்கிளர்ச்சி” எனும்போது மனம் குதூகலம்கொள்கிறது. “என்னை விடச் சிறந்தவனா இவன்?” என்று ஒப்பிடுகையில் மனம் பொறாமைகொள்ளும்.

இப்படி ஒவ்வொரு உணர்வையும் சொடுக்கிவிட்டு வேலை வாங்கும் எஜமானன் எண்ணம்தான். அதனால்தான் எண்ணங்களைத் தொடர்ந்து கண்காணிப்பது அத்தனை அவசியமாகிறது.
இந்தக் காரணத்தால்தான் எதை மாற்ற வேண்டுமென்றாலும் உங்கள் எண்ணத்தை மாற்றுவது முதல் வேலையாகிறது. மன மாற்றம் என்பதே எண்ண மாற்றம்தான். காரணம் உணர்வுகளை நேரடியாக மாற்றுவது மிக மிகக் கடினம். ஆனால், எண்ணத்தை மாற்றி அதன் மூலம் உணர்வுகளை மாற்றுவது சுலபம். எல்லா நடத்தை மாற்றங்களுக்கும் விசை எண்ணங்களே!

விலகுதல் பழகு!

மதம் உங்கள் இறை நம்பிக்கை பற்றிய எண்ணங்களை மாற்றி அமைக்கிறது. அரசியல் கட்சி உங்கள் கொள்கைகள் பற்றிய எண்ணங்களை மாற்றி அமைக்கிறது. மருத்துவம் உங்கள் நோய் பற்றிய எண்ணங்களை மாற்றி அமைக்கிறது. திருமணம் உங்களைப் பற்றிய எண்ணங்களையே மாற்றி அமைக்கிறது. இப்படி ஒவ்வொன்றும் உங்கள் எண்ணங்களைத்தான் தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்கின்றன. இதனால் தான் நம் எண்ணங்களைப் பாதிக்கும் விஷயங்கள் எவை எவை என்று யோசித்து அவற்றைத் தேர்வு செய்து கொள்வது அவசியம்.
இதை அறிந்ததால்தான் துறவிகள் எதை உண்பது, எதைக் காண்பது, எப்போது பேசுவது, எப்போது விலகியிருப்பது என்பதில் மிகுந்த கவனமாக இருக்கிறார்கள்.

நாம் துறவு வாழ்வு வாழாவிட்டாலும், நம்மை அதிகம் தாக்கும் எதிர்மறை எண்ணங்களின் ஊற்று எவை என்பதை அறிந்து அவற்றிலிருந்து விலகியிருப்பதை முதல் படியாகக்கொள்ளலாம்.
ஒரே ஒரு நாள் வாட்ஸ் அப் வாசிக்காமல், செய்தி சேனல்கள் பார்க்காமல், வம்பு பேசும் நட்புகளிலிருந்து சற்று விலகியிருந்து பாருங்களேன். உங்கள் எண்ணங்களைத் தள்ளியிருந்து பார்க்கும் அரிய சந்தர்ப்பம் கிடைக்கலாம்.

மாதத்தில் ஒரு நாள் ‘Phone Fasting’ செய்யலாம். மொபைல் இல்லாத அந்நாள் ஒரு புது அனுபவமாக இருக்கும். மலையேற்றத்தின்போது அல்லது காடு வழியே செல்லும்போது உங்களுக்கு சிக்னல் கிடைக்காமல் போன் வேலை செய்யாதபோது இந்த அனுபவத்தை உணர்ந்திருப்பீர்கள். புறத் தாக்குதல்கள் இல்லாது உங்கள் எண்ணங்களைக் கவனிப்பதும் ஒரு தியான அனுபவமே!

‘மனசு போல வாழ்க்கை-2.0’ பகுதியில் நீங்கள் எதிர்கொண்டுவரும்
மனச் சிக்கலுக்கு பதில் அளிக்கத் தயாராக இருக்கிறார்
டாக்டர் ஆர். கார்த்திகேயன். உங்களுடைய கேள்விகளை அனுப்பலாம்.
முகவரி: வெற்றிக்கொடி, தி இந்து-தமிழ், கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல்: vetrikodi@thehindutamil.co.in
கட்டுரையாளர் தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

(தொடரும்)
கட்டுரையாளர், மனிதவள பயிற்றுநர்.
வைரல் உலா: சின்ன சின்ன ஆசை... வயதாகக் கொஞ்சம் ஆசை! 





குத்துமதிப்பாக 40 வயதைத் தொட்டவர்கள் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் தங்களது ஒளிப்படங்களை எளிதில் மாற்ற மாட்டார்கள். தங்களுக்கு வயது ஆகிவிட்டதைக் காட்டக் கூடாது என்பதற்காகச் சிலபல ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த ஒளிப்படங்களையே பயன்படுத்துவார்கள். ஆனால், இன்றோ நிலைமை தலைகீழ்.

பதின்பருவத்தில் உள்ள இளைஞர்கள்கூடத் தாங்கள் வயதானால் எப்படி இருப்போம் என்பதைக் காட்டும் ஒளிப்படங்களைச் சமூக ஊடகங்களில் பதிவிடத் தொடங்கிவிட்டார்கள். அதற்குப் பாதை அமைத்துக் கொடுத்தது ‘ஃபேஸ் செயலி’. கடந்த வாரம் ஃபேஸ்புக்கில் இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் எம்.எஸ். டோனி, விராட் கோலி, ரோஹித் உள்ளிட்ட வீரர்களின் வயதான தோற்றத்துடன் கூடிய ஒளிப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாயின.




இதைப் பார்த்துவிட்டு சும்மா இருப்பார்களா நம் இளைஞர்கள். உடனே ‘ஃபேஸ் செயலி’யைத் தங்களுடைய மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்து தங்களுடைய வயதான ஒளிப்படங்களைப் பகிர ஆரம்பித்துவிட்டார்கள். இதேபோல தங்களுக்குப் பிடித்த சகலமானவர்களையும் ‘ஃபேஸ் செயலி’யில் நுழைத்து, அதை மீம்களாக்கி உலவவிட்டுவந்தார்கள். கடந்த வாரம் சமூக ஊடகங்களை ‘ஃபேஸ் செயலி’தான் ஆக்கிரமித்திருந்தது.

‘ஃபேஸ் செயலி’யில் வயதான தோற்றம் மட்டுமல்லாமல், வயது குறைந்த தோற்றத்தையும் காட்டுவதால், அதைப் பயனாளர்கள் பதிவிறக்கம் செய்தது எகிறியது. கடந்த வாரத்தில் மட்டும் சுமார் 15 கோடிப் பேர் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து எண்ணிக்கையை எகிறடித்திருக்கிறார்கள். பதிவிறக்கத் தரவரிசையில் ‘ஃபேஸ் செயலி’யே முதலிடத்தில் இருந்தது. இதில் ஒளிப்படங்களைப் பதிவிறக்கம் செய்தவர்களின் தகவல்களை அந்நிறுவனம் திருடிவிட்டதாகத் தனிக் கதையும் ஓடிக்கொண்டிருக்கிறது.
சுமங்கலிகளுக்கு புடவை, வளையல், குங்குமம்; வரலட்சுமி பூஜை ஸ்பெஷல்



வி.ராம்ஜி

வரங்களைத் தந்தருளும் வைபவம்... வரலட்சுமி விரதம். இந்த விரதத்தை அனுஷ்டித்து, முறையே பிரார்த்தனை செய்தால், எல்லா வளங்களையும் தந்தருள்வாள் மகாலட்சுமி என்கிறது புராணம்.

திருமணமான பெண்கள், இந்த விரதத்தை அனுஷ்டித்து பூஜை செய்தால், குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்திருக்கும். இல்லத்தில் சுபிட்சம் குடிகொள்ளும். மாங்கல்ய பலம் பெருகும். கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
வருகிற ஆடி 24ம் தேதி ஆகஸ்ட் 9ம் தேதி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம். இந்தநாளில், பெண்கள் வீட்டை சுத்தமாக்கி, பூஜையறையை சுத்தப்படுத்தி, கலசம் வைத்து கலசத்தில் மகாலட்சுமியை ஆவாஹனம் செய்து, வேண்டிக்கொண்டால், நினைத்தது நடக்கும். கேட்டது கிடைக்கும். நாம் நினைத்ததையெல்லாம் நம் வீட்டுக்கே வந்து அருளிச்செய்வாள் மகாலட்சுமி.

இந்த நாளின் போது, வீட்டில் உள்ள சுமங்கலிகள் எல்லோரும் சேர்ந்து பூஜை செய்வது சிறப்பு. மேலும் அக்கம்பக்க வீடுகளில் உள்ள சுமங்கலிகளையும் பூஜைக்கு அழைப்பது இன்னும் வளம் சேர்க்கும். மேலும் அக்கம்பக்க பெண்களுக்கு புடவை, ஜாக்கெட் பிட், வளையல், மஞ்சள், குங்குமம் என வழங்கலாம். இதனால் சுமங்கலிகள் மகிழ்ந்து வாழ்த்துவார்கள்; வயதில் மூத்த சுமங்கலிகளின் ஆசியும் கிடைத்து, ஆனந்தமாக வாழலாம்.
வரலட்சுமி பூஜை நன்னாளில், மகாலட்சுமியை ஆராதியுங்கள். மனம் ஒருமித்து மகாலட்சுமியை பூஜித்து மகிழுங்கள். சகல செளபாக்கியங்களும் கிடைத்து இனிதே வாழ்வீர்கள்.

அடுத்த கல்வியாண்டு முதல் 4 வருட பட்டப்படிப்பு?


ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி


மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல் பட்டு வரும் தன்னாட்சி அமைப்பு யுஜிசி ஆகும். கல்வி மேம்பாடு தொடர்பாக யுஜிசி சார்பில் அவ்வப்போது குழுக்கள் அமைத்து ஆலோசனை கோருவது வழக்கம்.

அந்த வகையில், பெங்களுரு ஐஐஎஸ்சி முன்னாள் இயக்குநர் ஆர்.பலராமன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு யூஜிசிக்கு தனது அறிக்கையை அண்மையில் சமர்ப்பித்துள்ளது. அதில், 4 வருடப் பட்டப்படிப்புகளை அறிமுகம் செய் யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த 4 வருடப் பட்டப்படிப்புக்கு பின் நேரடியாக முனைவர் பட்டத் திற்கான ஆய்வில் மாணவர்கள் சேரலாம். இதற்கு ஏற்றவாறு, கடந்த 2016-ல் அமலாக்கப்பட்ட முனைவர் பட்டத்திற்கான விதி முறைகளிலும் மாற்றங்களை செய்ய குழு பரிந்துரைத்துள்ளது.

தற்போது முனைவர் பட்டம் பெறுவோர், குறைந்தபட்சம் இரண்டு ஆய்வுக் கட்டுரைகளை அங்கீகரிக்கப்பட்ட ஆய்வு இதழில் வெளியிட்டிருக்க வேண்டும். மாணவர் சமர்ப்பிக்கும் முனைவர் பட்டத்திற்கான ஆய்வில் அவரது ஆசிரியருக்கு நேரடிப் பொறுப்பு எதுவும் இல்லை.

இந்த விதிமுறைகள் மாற்றப் பட்டு, புதிய பரிந்துரையில், மாணவர்களின் ஆய்வுக்கட்டுரை கள் அங்கீகரிக்கப்பட்ட ஆய்விதழ் களில் வெளியிட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறப் பட்டுள்ளது.

மாறாக அந்த ஆய்வுக் கட்டுரை களை மாணவர்களின் வழிகாட்டி யான குறிப்பிட்ட பேராசிரியர்களே மதிப்பிடு செய்யலாம். இதேபோல், மாணவர்களின் ஆய்வுக்கு அவர் களது வழிகாட்டிகளும் பொறுப்பு நிர்ணயிக்கும் வகையில் பேராசிரி யர் பெயரும் முனைவர் பட்ட ஆய்வில் குறிப்பிடப்பட வேண்டும்.


இதனால், முனைவர் பட்டத்திற் கான மாணவர்களின் ஆய்வின் மீது எழும் புகார்களுக்கு அவர்களது பேராசிரியர்களையும் பொறுப்பாக் கும் வாய்ப்புகள் உள்ளன.

நான்கு வருடப் பட்டப்படிப்புகள் தற்போது வெளிநாடுகளில் மட்டும் உள்ளன. அதனை முடித்தவர்கள் நேரடியாக முனைவர் பட்டத்திற் கான படிப்பில் சேர முடியும். ஆனால், இந்தியாவில் பட்டப்படிப் புக்கு பிறகு, பட்டமேற்படிப்பும் முடித்த பின்பே முனைவர் பட்டத் திற்கான கல்வியில் சேர முடியும்.

இதனிடையில், எம்.பில் எனும் ஒரு வருட ஆய்வுக் கல்வியை முடிப் பவர்களுக்கு முனைவர் கல்விக் கான சேர்க்கையில் கூடுதல் சலுகை கிடைக்கிறது. இனி இந்த எம்.பில். கல்வியை முற்றிலும் ரத்து செய்யவும் யூஜிசி ஆலோசனை செய்து வருகிறது.

இது குறித்து ’இந்து தமிழ்’ நாளேட்டிடம் யூஜிசி வட்டாரங்கள் கூறும்போது, ‘வெளிநாடுகளின் கல்வி நிலையங்களை இந்தியாவில் அதிகமாக அறிமுகப்படுத்த இந்த 4 ஆண்டு பட்டப்படிப்பு திட்டம் உதவும். மூன்றாண்டுகளுக்கான பட்டப்படிப்பை தொடர்வதா? வேண் டாமா என்பதை அதை நடத்தும் கல்வி நிலையங்களே முடிவு செய்ய வேண்டும். இவை ரத்து செய்யப் பட்டால், மத்திய, மாநில அரசு களின் பணிகளை பெற திறனாய்வு தேர்வுகள் எழுதுவோர் கூடுதலாக ஒரு ஆண்டு கல்வி பயில வேண்டி வரும்’ எனத் தெரிவித்தனர்.

இதுபோல், நான்கு வருடப் பட்டப்படிப்புகள் சில ஆண்டு களுக்கு முன் டெல்லி பல்கலைக் கழகத்தில் துவக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பவே அதில் இணைந்த மாணவர்கள் மூன் றாண்டு படிப்புக்கு மாற்றப்பட்டனர்.
இருசக்கர வாகனம் ஓட்டுபவரும், பின்னால் அமர்பவரும் ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம்: போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை 



சென்னை

இருசக்கர வாகனம் ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்திருப்போரும் ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் விதிக்கும் சட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவுள் ளது என்று போக்குவரத்து காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சாலை விபத்துகளில் 90 சதவீதம் பேர் தலைக்கவசம் அணியாத காரணத்தால் இறக்கின்றனர். தலைக்கவசம் அணிபவர்களில் சிலர் ‘சின் ஸ்டிராப்’பை சரிவர அணிவதில்லை. குழந்தைகளை பள்ளிகளில் விடுகின்ற நேரமும் சந்தைக்கு செல்கின்ற நேரமும் தலைக்கவசம் அணிய விலக்கு அளிக்கப்பட்டதாக இருசக்கர வாகன ஓட்டிகள் நினைத்துக் கொள் கின்றனர்.

இருசக்கர வாகனத்தை எங்கே ஓட்டிச்சென்றாலும், எவ்வளவு தூரம் ஓட்டிச்சென்றாலும் தலைக் கவசம் அணிய வேண்டியது கட் டாயம். அதேபோல், இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந் திருப்பவரும் கட்டாயம் தலைக் கவசம் அணியவேண்டும். குழந்தை களும் தலைக்கவசம் அணிவது அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யும். விபத்து எங்கே எப்போது நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.

எத்தகைய சட்ட நடவடிக்கைகள் எடுத்தாலும், விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும், பொதுமக்களும் தங்கள் கடமையை உணர்ந்து சாலைவிதிகளையும், வாகனம் ஓட்டும்போது பொறுப்புணர்வுட னும் இருந்தால் மட்டுமே விபத்து களையும், உயிரிழப்புகளையும் தடுக்கமுடியும். மேலும், தற் போது மோட்டார் வாகன சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன்படி, தலைக்கவசம் அணியாதவருக்கு தற்போது விதிக்கப்படும் அபராதத் தொகை ரூ.100-ல் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு விரைவில் நடை முறைபடுத்தப்பட உள்ளது.

நாம் அனைவரும் வீட்டிலிருந்து புறப்படும்போது கைபேசி போன்றவற்றை எடுத்துச் செல்ல மறப்பதில்லை. அதேபோல் உயிர் காக்கும் தலைக்கவசம் அணி வதையும் ஒரு கட்டாய பழக்க மாகக் கொள்ளவேண்டும். பொது மக்கள் தங்களின் மனதில் தனி மனித ஒழுக்கத்தை ஏற் படுத்திக்கொண்டு, சாலை விதி களை கடைபிடிப்பதிலும் தங்களின் சந்ததிகளை காப்பதிலும் காவல்துறையோடு கைகோர்த்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வருவாள் மகாலட்சுமியே..! - வரலட்சுமி பூஜை இப்படித்தான்! 



வி.ராம்ஜி

ஆடி மாத அமாவாசைக்குப் பிறகு வருகிற வளர்பிறை நாளில், பெளர்ணமிக்கு முன்னதாக வருகிற வெள்ளிக்கிழமையில், கொண்டாடப்படுகிறது வரலட்சுமி விரதம். வீட்டில் சுபிட்சம் நிலவவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கவும் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. 9.8.19 வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம்.
வரலட்சுமி விரதத்தை, வெள்ளிக்கிழமையன்று காலை அல்லது மாலை என எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். வேலைக்குச் செல்லும் பெண்கள், காலை நேர பரபரப்பில் செய்யமுடியாமல் போகலாம். அவர்கள், மாலையில் வீட்டுக்கு வந்து இந்த பூஜையை மேற்கொள்ளலாம்.
 
வரலட்சுமி விரத பூஜை, முழுக்க முழுக்க பெண்கள் நடத்துகிற பூஜை. பெண்கள் இருக்கிற விரதம். இந்தப் பூஜைக்குத் தேவையான பொருட்களையெல்லாம் முதலிலேயே தயாராக வைத்துக் கொண்டு, காலையில் அல்லது மாலையில் இந்த பூஜையை மேற்கொள்ளலாம்.
எந்தவொரு பூஜையைச் செய்வதாக இருந்தாலும் முதலில் விநாயக வழிபாடு என்பது மிக மிக அவசியம். எனவே முதலில் கணபதியைத் தொழுது, ‘இந்த வரலட்சுமி பூஜையைத் தொடங்குகிறேன்’ என்று ஒப்புதல் வாங்கிவிட்டு, பூஜையில் இறங்கவேண்டும். 

பின்னர், தாம்பாளம் ஒன்றில் பச்சரிசியை பரப்பி வைத்துக்கொள்ளுங்கள். அதன் மீது கலசத்தை வைத்துக்கொள்ளவும். பழம், வெற்றிலை, பாக்கு முதலானவற்றை வைக்கவேண்டும். இந்த பூஜைக்கு, லட்டு, தயிர், பசும்பால், தேன், நெய், கற்கண்டு, கொழுக்கட்டை முதலானவற்றை நைவேத்தியமாகப் படைப்பது ரொம்பவே விசேஷம். 

அதேபோல், மாதுளை, ஆரஞ்சு, விளாம்பழம், மாம்பழம், திராட்சை முதலான பழங்களையும் நைவேத்தியத்துக்குப் பயன்படுத்த வேண்டும்.
பூஜைக்குத் தேவையானவற்றை தயாராக வைத்துக்கொண்ட பிறகு, வீட்டு நிலைவாசலில் நின்றுகொள்ளுங்கள். வெளியே நோக்கி, கற்பூர தீபாராதனை காட்டுங்கள். அதாவது, ‘மகாலட்சுமித் தாயே. எங்கள் வீட்டுக்குள் வாருங்கள் அன்னையே’ என்று அழைக்கவேண்டும்.
இதன் பிறகு, மகாலட்சுமி வீட்டுக்கு வந்துவிட்டாள். பூஜையறைக்குச் செல்லுங்கள். மகாலட்சுமித் தாயாரை மனதார நினைத்துக்கொண்டு, ஆவாஹனம் செய்யவேண்டும். அவளுக்கு, குளிரக்குளிர பூஜைகள் செய்யுங்கள். ஸ்தோத்திரம் சொல்லுங்கள். லலிதா சகஸ்ர நாமம் பாராயணம் செய்யுங்கள். 

இதையடுத்து, நோன்புக்கயிறை கும்பத்தின் மீது சாற்றுங்கள். லட்சுமி அஷ்டோத்திரம் சொல்வது, தனம், தானியத்தைப் பெருக்கும். இல்லத்தில் சுபிட்சத்தைத் தந்தருளும். 108 போற்றி சொல்லி, மகாலட்சுமித் தாயாரை ஆராதனை செய்யுங்கள். ‘தாயே, எங்கள் வீட்டில் எல்லா செல்வங்களையும் தந்து, எங்களை இன்னல்களில் இருந்து காத்தருள்வாய்’ என்று வணங்கி வேண்டுங்கள். 

பின்னர் பூஜையை நிறைவு செய்யும் தருணம். உங்கள் வீட்டில் உள்ள மூத்த சுமங்கலிகள் வீட்டில் இருந்தால், அவர்களுக்கு பிரசாதங்களை வழங்குங்கள். பிரசாதம் கொடுத்துவிட்டு, அவர்களை நமஸ்கரித்து ஆசி பெறுங்கள். பிறகு, நோன்புச்சரடை கையில் கட்டிக் கொள்ளுங்கள். 

வரலட்சுமி பூஜையின் போது, மகாலட்சுமியின் பேரருளைப் பெறுவதற்கு ஏராளமான மந்திரங்களும் ஸ்தோத்திரங்களும் ஸ்லோகங்களும் இருக்கின்றன. முக்கியமாக, லட்சுமி அஷ்டோத்திரம், லட்சுமி சகஸ்ரநாமம் சொல்லுங்கள்.

உங்கள் வீட்டுக்கு மகாலட்சுமி, வரலட்சுமியென வருவாள்; வரம் அனைத்தும் தருவாள். இல்லத்திலும் உள்ளத்திலும் ஒளியேற்றி அருள்வாள்! 

9.8.19 வரலட்சுமி விரதம்.
பூமியெங்கும் மகாலட்சுமி! - வரலட்சுமி விரதம் ஸ்பெஷல்



வி.ராம்ஜி

நம் தேசம் முழுவதும், பூமியெங்கும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். நம் தேசத்தை, பரத கண்டம் என்பார்கள். பாரத தேசம் என்று போற்றுவார்கள். எதனால் இந்தப் பெயர்... இந்த பரத கண்டம் முழுவதும் வியாபித்து அருளாட்சி செய்கிறாள் லக்ஷ்மிதேவி என்கிறது புராணம். இதுகுறித்து விளக்குகிறது புராணக் கதை ஒன்று.

கண்வ மகரிஷியின் வளர்ப்பு மகள் சகுந்தலை. ஒருநாள்... வனத்தில் உள்ள ஆஸ்ரமத்தில் பூப்பந்து விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, அங்கு துஷ்யந்தன் என்கிற மன்னன் வேட்டையாட வந்தான் . சகுந்தலையைக் கண்டான். காதல் கொண்டான். காந்தர்வத் திருமணம் நிகழ்ந்தது.
தன்னையே மறந்த சகுந்தலை, துஷ்யந்தனின் நினைவாகவே இருந்தாள். அந்த சமயம் பார்த்து, கோபத்துக்குப் பேர்போன துர்வாச முனிவர், ஆஸ்ரமத்துக்கு வந்தார். ஆனால் அவர் வந்ததைக் கூட அறியாமல், துஷ்யந்த நினைவில் மூழ்கிக் கிடந்தாள் சகுந்தலை. 

எடுத்ததற்கெல்லாம் கோபப்படும் துர்வாசர், வந்தவனை வரவேற்கவில்லையே என்று இன்னும் ஆவேசம் கொண்டார். ’ உன்னை துஷ்யந்தன், மறந்து போகக் கடவது’ எனச் சாபமிட்டாள். கர்ப்பமான நிலையில் இருந்த சகுந்தலையை மறந்தேபோனான் துஷ்யந்தன். பிறகு, சகுந்தலைக்குக் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு பரதன் எனப் பெயரிட்டாள். 

அடர்ந்த வனப்பகுதியில், சிங்கக்குட்டிகளுடன் குட்டியாய் பயமின்றி ஓடியாடி விளையாடினான் பரதன். பிறகு, ஒருகட்டத்தில்... துர்வாசரின் சாபத்தில் இருந்து விமோசனம் பெற்றாள் சகுந்தலை. மகன் பரதனுடன் சென்று, துஷ்யந்தனை சந்தித்தாள். அவனுக்கும் ஞாபகம் வந்தது. இருவரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தார்கள். 

‘‘உன் மகன் பரதன், லக்ஷ்மியின் பேரருளைப் பெற்றவன். எதிர்காலத்தில் மாபெரும் சக்கரவர்த்தியாக, மாமன்னனாகத் திகழ்வான். இந்த பூமியானது, இவனுடைய பெயரால், அழைக்கப்படும்‘‘ என அசரீரி கேட்டது.
அதன்படி, நம் அன்னைபூமிக்கு, பரத கண்டம் எனப் பெயர் அமைந்தது. இந்தப் பரதக் கண்டம் முழுவதும் லக்ஷ்மி தேவியானவள், வாசம் செய்து, ஆட்சி செய்கிறாள் என்கிறது புராணம்! 

இவளை ஆராதிக்கிற விதமாக, பூமியெங்கும் வியாபித்திருக்கிற லட்சுமியை நம் வீட்டுக்கு அழைக்கும் பண்டிகையாக, கொண்டாடப்படுகிறது வரலட்சுமி விரதம்!

NEWS TODAY 24.4 2026