Wednesday, August 14, 2019

Plea to display Athi Varadar idol for another 48 days
3 Days Left Before The Deity Is Immersed


TIMES NEWS NETWORK

Chennai:14.08.2019

Just three days before the Athi Varadar idol at the Devaraja Perumal temple in Kancheepuram is to be returned to the temple tank, where it will remain immersed for another 40 years, a PIL has been filed in the Madras high court to keep the idol on display for another 48 days.

The idol which was taken out of the tank for public worship in July, will remain outside till August 17. So far more than 90 lakh people have had a darshan of the idol and the crowd continues to swell.

Tamizharasi of Meensurutti village in Ariyalur district filed the petition saying the darshan period should be extended. Noting that the arrangements made by the Kancheepuram district administration and police officers for crowd management were very poor, the petitioner said, “This failure on the part of the state had resulted in a large number of devotees not being able to get even a glimpse of Athi Varadar, leave alone a ‘divya darshan.”

Noting that it is a oncein-40-years event, the devotee said it would not be fair to deny the opportunity of worship to several lakhs from all corners of the state and neighbouring states. Tracing the history of the Athi Varadar and why the idol had to be kept under a sheet of water in the temple tank, the petitioner said such external threats did not exist at present, and hence there was no problem in keeping the idol outside the tank for another spell of 48 days.

The PIL wanted the high court to restrain the Hindu Religious and Charitable Endowments (HR&CE) department as well as the executive officer of the temple from immersing the idol on August 17.

The petition is likely to come up for hearing on Wednesday.



HUGE DRAW: Devotees throng the Athi Varadar festival
NEET cases: HC closes petitions
TIMES NEWS NETWORK

Chennai:14.08.2019

About two weeks after it became known that the Centre had returned Tamil Nadu’s two Bills exempting the state from NEET for medical admissions in 2017 itself, the Madras high court drew curtains on a batch of PILs on the issue saying the Centre’s rejection order could be separately challenged.

Among those who filed the PILs were Tamil Nadu Students Parents Welfare, represented by P B Prince Gajendra Babu and U Mustaffa, seeking a direction to Tamil Nadu government to complete the procedures for obtaining the presidential assent for the Bills on or before August 15, 2017.

A division bench of Justice S Manikumar and Justice Subramoniam Prasad, closing the cases, referred to senior counsel R Viduthalai’s submission that reasons for the rejection ought to have been given by the Centre. They then said: “It is our considered view that the propriety, illegality or irregularity or any other can be challenged in a writ of certiorari or declaration, as the case may be, subject to the pleadings and materials and maintainability of such writ petition, if any, filed.” The writ petition was disposed of with liberty to challenge the Centre’s rejection order.

During earlier hearings, the bench had rapped the Tamil Nadu government for not informing anyone, including the state legislative assembly, about the ‘rejection/return’ of the two NEET Bills adopted by the assembly, that too after acknowledging the receipt of the returned Bills from the Centre.

Viduthalai had accused the central an state governments of being hand in glove in the issue. He submitted that it was the constitutional duty of the President to record reasons for denial of assent to a Bill.

Even while there was a raging political debate over the fate of Tamil Nadu government’s NEET Bills was on, no official nor the government spoke of the fact that it had been returned by the Centre. However, during arguments in court during the hearing of the PILs, the Centre informed the court that the Bills were returned as early in September 2017.

Tuesday, August 13, 2019

Parents Beware : Handing Over Vehicle To Your Child Could Land You In Jail Now

Parents Beware : Handing Over Vehicle To Your Child Could Land You In Jail Now: The Motor Vehicles Amendment Act 2019, which received the assent of the President on August 9, has included stringent provisions in the principal Act to curb the tendency of children using vehicles....
விமர்சனம்: நேர்கொண்ட பார்வை

the hindu tamil




பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்து உரக்கப் பேசியிருக்கும் படமே 'நேர்கொண்ட பார்வை'.

இசை நிகழ்ச்சியில் நடனம் ஆடும் ஷ்ரத்தா, நிகழ்ச்சி முடிந்த பிறகு தன் தோழிகள் அபிராமி, ஆண்ட்ரியாவுடன் வீடு திரும்புகிறார். அதே நேரத்தில் தலையிலும் கண்ணிலும் பலத்த காயமடைந்த அர்ஜுன் சிதம்பரத்தை ஆதிக் ரவிச்சந்திரனும், அஸ்வின் ராவும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கின்றனர். சுமார் நான்கு நாட்கள் கடந்தும் நடந்த சம்பவத்தை மறக்க முடியாமல் மூன்று இளம்பெண்களும் தவிக்கின்றனர். மீள முடியாத மன அழுத்தத்தில் இருக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தன் இன்னொரு தோழியுடன் காவல் நிலையம் சென்று புகார் கொடுக்கிறார். அர்ஜுன் சிதம்பரத்தின் நண்பர்கள் தொடர்ந்து ஷ்ரத்தாவையும் அவரது தோழிகளையும் மிரட்டுகின்றனர். ஒருகட்டத்தில் போலீஸ் ஷ்ரத்தாவைக் கைது செய்கிறது.


நடந்த சம்பவங்கள் அனைத்தும் அஜித்துக்குத் தெரியவர, ஷ்ரத்தாவை ஜாமீனில் கொண்டு வர முயல்கிறார். அடியாட்களைப் பந்தாடி வழக்கை நேரடியாகச் சந்திக்க சவால் விடுகிறார். இசை நிகழ்ச்சி நடந்த அன்றைய இரவில் நடந்தது என்ன? அர்ஜுன் சிதம்பரம் ஏன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்? ஷ்ரத்தாவை ஏன் போலீஸ் கைது செய்தது? அஜித் யார்? அவர் வாழ்வில் நடந்த துன்பியல் சம்பவம் என்ன? நீதி வேண்டி ஷ்ரத்தாவுக்காகப் போராடும்போது வென்றது யார்? போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.




2016-ம் ஆண்டில் இந்தியில் ஹிட்டடித்த பிங்க் படத்தை தமிழுக்கே உரிய சில மாற்றங்களுடன் மறு ஆக்கம் செய்து மலைக்க வைத்துள்ளார் இயக்குநர் எச்.வினோத். பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கு எதிராக சமகாலத்தில் பேசாப் பொருளைப் பேசத் துணிந்த அவரது முயற்சிக்கும் அக்கறைக்கும் வாழ்த்துகள்.

படத்தின் மிகப்பெரிய ஆச்சர்யம், அதிசயம் எல்லாம் அஜித்தான். பரத் சுப்பிரமணியம் என்கிற கதாபாத்திரத்துக்கு எந்தப் பாதகத்தையும் செய்யாமல் உயர்ந்து நிற்கிறார். ஸ்டைலாக நடப்பது, பறந்து பறந்து அடிப்பது, பன்ச் பேசுவது என்று ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் வழக்கமான டெம்ப்ளேட்டிலிருந்து விலகி நின்று அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்துடன் பக்குவமான நடிப்பை வழங்கியுள்ளார். அவரின் கதாபாத்திர நோக்கம் முழுமையாக நிறைவேறியுள்ளது. அந்த இடைவேளை சண்டைக் காட்சியும், என்னைப் பார்த்தா பயப்படுற மாதிரி தெரியுதா? என்று ஜெயப்பிரகாஷிடம் கேட்கும் விதமும் மாஸ் ரகம்.

முதல் பாதி முழுக்க கதைக்களத்துக்கான நியாயத்தைச் செய்ய வேண்டும் என்று ஒதுங்கி இருந்துவிட்டு இரண்டாம் பாதியில் அஜித் அசர வைக்கிறார். அதுவும் வழக்கின் முதல் நாளில் மருந்து சாப்பிட்ட களைப்பில் குறுக்கு விசாரணை செய்யாமல் இருந்துவிட்டு அடுத்தடுத்து விசாரணையில் திருப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் கச்சிதமான நடிப்பை வழங்கியுள்ளார். அவரது குரலும் கம்பீரத்தின் சாட்சியாக நின்று அப்ளாஸ் அள்ளுகிறது.



தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தலைக் கண்டு கொதிப்பது, போனில் மிரட்டும் நபரிடம் நேர்ல வந்து பேசு என்று கெத்து காட்டுவது, பின் விபரீதம் உணர்ந்து ஓட்டம் பிடிப்பது, கண்ணீரும் கதறலுமாக நடந்த சம்பவத்தை விவரிப்பது, தன் மீது எந்தத் தவறுமில்லை என்று நிரூபிக்கப் போராடுவது என தேர்ந்த நடிப்பில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் மிளிர்கிறார்.

ஷ்ரத்தாவின் தோழியாக ஃபமிதா பானு கதாபாத்திரத்தில் அபிராமி வெங்கடாசலம் பொருத்தமான வார்ப்பு. சமாதானமாகச் செல்ல நினைத்து ஸாரி கேட்பது, ஆண் திமிரில் பேசும் அர்ஜுனிடம் அப்படியே எதிர்த்து நிற்பது, சரி சரி சரி என்று செய்யாத செயலைச் செய்ததாக வாக்குமூலம் கொடுத்து வெடிப்பது, வேலை இழந்த சூழலில் கையறு நிலையை வெளிப்படுத்துவது என இயல்பான உணர்வுகளைக் கடத்துகிறார்.

ஆண்ட்ரியா தாரியங் அழுகையும் ஆற்றாமையுமாக கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் குறையில்லாமல் நடித்துள்ளார். ஆணாதிக்க மனோபாவத்தின் அதீத முகங்களாக அஸ்வின் ராவும், சுஜித் சங்கரும் வந்து போகின்றனர். ஆதிக் ரவிச்சந்திரன் தப்புக்குத் துணை போய் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கும் குழப்பமான மனநிலையை சரியாக வெளிப்படுத்துகிறார். வித்யாபாலன் கொஞ்ச நேரமே வந்தாலும் நிறைவான நடிப்பில் தனித்து ஜொலிக்கிறார்.




ரங்கராஜ் பாண்டே சில இடங்களில் செயற்கையாக நடித்திருந்தாலும் எதிர்த்தரப்பு வழக்கறிஞருக்கான வழக்கமான எதிர்வினைகளுடன் சரியாக நடித்துள்ளார். ஜூனியர் பாலையா, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் குறைந்த அளவில் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளனர். டெல்லி கணேஷ் தகப்பனின் எந்த உணர்வையும் கடத்தாமல் வெறுமனே வந்து போகிறார்.

நீரவ் ஷா கேமரா கோணங்களில், ஃபிரேம்களில் மேஜிக் நிகழ்த்தியுள்ளார். பார்ட்டி, இசை நிகழ்ச்சி, வீடு, நீதிமன்றம் என்று எல்லாவற்றையும் வித்தியாசப்படுத்தி லைட்டிங்கில் கவர்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உமாதேவி எழுதிய வானில் இருள் சூழும்போது படத்தின் அடர்த்தியை அதிகப்படுத்துகிறது. பா.விஜய் வரிகளில் அகலாதே பாடல் பின்னோக்குக் காட்சி உத்திக்கு கனம் சேர்க்கிறது. அஜித் படம் என்பதால் பின்னணி இசையில் வழக்கம் போல் எக்ஸ்ட்ரா எனர்ஜியைக் கொடுத்துள்ளார் யுவன்.

காட்சி ரீதியான அழுத்தத்தை படம் முழுக்கப் பரவவிட்டு, நடந்தது என்ன? என்பதைக் கடைசியாகக் காட்டி, அலுப்பு தட்டாமல் பார்க்க வைத்ததில் கோகுல் சந்திரனின் நேர்த்தியான படத்தொகுப்புப் பணி ஆச்சர்யப்படுத்துகிறது.

ஜெயப்பிரகாஷின் பின்னணி என்ன, மருந்துகள் எடுத்துக்கொள்ளாமல் அஜித்தால் எப்படி இயங்க முடிகிறது போன்ற சின்னச் சின்ன கேள்விகள் எழுகின்றன. ஆனால், அவை படத்துக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.



பெண் என்றாலே அடக்கமாக இருக்க வேண்டும், எதிர்த்துப் பேசக்கூடாது, நவீன ஆடைகளை அணிபவள் அந்த மாதிரிதான் இருப்பாள் அல்லது நடந்துகொள்வாள், தாமதமாக வீட்டுக்கு வருபவள் நல்லவள் அல்ல, சிரித்துப் பேசினால் அவள் எதற்கும் சம்மதிப்பாள், இரவில் தனியாக ஒரு ஆணை நம்பி வந்தால் அவனுடன் மது அருந்தினால் தப்பானவள்தான் என்று ஆண்கள் உள்ளிட்ட சமூகத்தில் இருக்கும் யாரும் நினைக்கும் பொதுப்புத்தியின் மீது மிகப்பெரிய கல்லை எறிந்து உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் வினோத்.

காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யின் நக்கலான பேச்சு, நீதிமன்றத்தில் எதிர்த்தரப்பு வழக்கறிஞரின் வாதம், சில சாட்சிகளின் முன் முடிவுகள், ஊர் உலகுக்குத் தெரியாமல் லிவிங் டூ கெதரில் இருக்கும் ஒரு விரிவுரையாளர் இன்னொரு பெண்ணைக் குற்றம் சுமத்துவது, குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஆணவப் பேச்சு, பெண்ணுக்கு எதிராகவே சில பெண்கள் என்ன நடந்தது என்றே தெரியாமல் பொத்தாம் பொதுவாகப் பேசும் கிசுகிசு பாணியிலான விமர்சனங்கள் என்று சுற்றியிருப்பவர்களின் மனவோட்டத்தையும் வலுவாகக் காட்சிப்படுத்தியதில் இயக்குநரின் ஆளுமை பளிச்சிடுகிறது.

பாதிக்கப்பட்ட பெண் அபலைப் பெண்ணாகவோ அல்லது ஏழைப் பெண்ணாகவோதான் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பொதுப்புத்தியையும் சேர்த்தே இயக்குநர் உடைத்து எறிகிறார். பெண்கள் சொல்லும் நோ என்பது வெறும் வார்த்தையல்ல... வரி. வேணாம் என்றால் வேணாம் என்றுதான் அர்த்தம் என்பதே படத்தின் மையக் கரு. அதைக் கொஞ்சமும் சிதைக்காமல் நேர்மையாகப் பதிவு செய்த விதத்தில் 'நேர்கொண்ட பார்வை' நிமிர்ந்து நிற்கிறது.
ஒகேனக்கல் காவிரியாற்றில் 2.40 லட்சம் கனஅடியைக் கடந்த நீர்வரத்து: வெள்ளத்தில் மூழ்கிய தொங்கும் பாலம்


மூழ்கிய தொங்கும் பாலம்

தருமபுரி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் தொங்கும் பாலத்தை மூழ்கடிக்கும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநில அணைகளில் இருந்து அதிகப்படியான உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டதால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 11-ம் தேதி காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 1 லட்சம் கனஅடி அளவுக்கு தண்ணீர் வந்துகொண்டிருந்தது. பின்னர், அன்று முற்பகலில் விநாடிக்கு 1.20 லட்சமாகவும், பகலில் 1.40 லட்சமாகவும், மாலை 4 மணியளவில் 1.60 லட்சமாகவும், இரவு 7 மணியளவில் 1.75 லட்சம் கன அடியாகவும் வேகமாக நீர்வரத்து அளவு உயர்ந்தது.

இன்று (12-ம் தேதி) காலை இந்த அளவில் மேலும் உயர்வு ஏற்பட்டு விநாடிக்கு 2 லட்சம் கனஅடி என்ற நிலையில் தண்ணீர் வந்தது. முற்பகலில் அது 2.40 லட்சம் கனஅடி என்ற நிலைக்கு அதிகரித்துள்ளது. மிகையான இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக ஒகேனக்கல்லில் பிரதான அருவிக்குச் செல்லும் நடைபாதையின் இருபுறங்களில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு பாதுகாப்பு வேலி புரட்டிப் போடப்பட்டுள்ளது. ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த அறிவிப்புப் பலகைகளையும் வெள்ளம் முறித்துப் போட்டுள்ளது.

மூழ்கிய தொங்கும் பாலம்

தொங்கும் பாலத்துக்குச் செல்லும் வழியில் இருந்த கதவுகள், இரும்புத் தடுப்புகள் போன்றவையும் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. இதுதவிர, வெள்ளப்பெருக்கின் அளவு படிப்படியாக அதிகரிப்பதால் தண்ணீர் தொங்கும் பாலத்தின் நடைமேடையை மூழ்கடித்துச் செல்லத் தொடங்கியுள்ளது.

கண்காணிப்பு தீவிரம்

தொங்கும் பாலத்தின் மீது ஏறும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், ஒகேனக்கல்லைப் பொறுத்தவரை அதை அசாதாரண சூழலாக அரசு நிர்வாகம் கருதுவது வழக்கம். இருப்பினும் கர்நாடகாவின் நீர்த்திறப்பு நிலவரத்துக்கு ஏற்ப தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் மற்றும் காவிரிக்கரையோர பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எனவே, அசம்பாவிதங்கள், பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

அஞ்செட்டி சாலை

ஒகேனக்கல்லில் இருந்து அஞ்செட்டி செல்லும் சாலையில் ஒகேனக்கல் அடுத்த நாடார் கொட்டாய், ஆலம்பாடி உள்ளிட்ட இடங்களில் வெள்ளத்தால் சாலை மூழ்கடிக்கப்பட்டுள்ளது. எனவே, அத்தியாவசியப் போக்குவரத்துகள் மட்டுமே மிகுந்த பாதுகாப்புடன் இந்தச் சாலையில் அனுமதிக்கப்படுகிறது.

குறைக்கப்பட்ட நீர்திறப்பு

இதற்கிடையில், இன்று காலை முதல் கர்நாடகா மாநில அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், நேற்று விநாடிக்கு 3 லட்சம் கனஅடி வரை திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல்லை இன்னும் அடையவில்லை. இன்று மாலைக்குள் இந்த நீர்வரத்து இந்த அளவை எட்டியபின் படிப்படியாகச் சரியத் தொடங்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

தொடரும் தடை

வெள்ளப்பெருக்கு காரணமாக பரிசல் இயக்கவும், அருவி, ஆறு உள்ளிட்ட இடங்களில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை ஒகேனக்கல்லில் தொடர்ந்து அமலில் உள்ளது. வெள்ள நிலவரம் இயல்பாகும் வரை சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வருவதைத் தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை

By DIN | Published on : 13th August 2019 07:59 AM |

திருநெல்வேலி: சங்கர நாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபுசு விழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள உத்தரவில், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபுசு விழாவை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், சங்கரன்கோவில் சுற்றுவட்டாரங்களில் உள்ள 7 மதுபான கடைகளை மூடவும் ஆட்சியர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைக்கு நோயாளிகள், 'சப்ளை': பொறுப்பில்லாத செயல்!

Added : ஆக 13, 2019 02:24

சேலம்:தனியார் மருத்துவமனைக்கு, நோயாளியை அனுப்பி வைத்த, அரசு மருத்துவமனை தினக்கூலி ஊழியர், பணி நீக்கம் செய்யப்பட்டார்.

சேலம், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 'பத்மாவதி ஆஸ்பிட்டல் மேனேஜ்மென்ட் சர்வீஸ்' என்ற தனியார் நிறுவனம், ஒப்பந்த அடிப்படையில், துப்புரவு பணிகளை மேற்கொண்டுள்ளது.அதற்காக, 370 பெண்கள் உள்பட, 460 பேர், தினக்கூலிக்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள், துப்புரவு பணிக்கு மாறாக, மருத்துவமனை பணியில் அதிகம் ஈடுபடுவதால், மருத்துவமனை பணியாளர்களுடன் அடிக்கடி மோதல் போக்கு உருவாகிறது.மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை, 'மூளை சலவை' செய்து, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும், 'வேலை'யிலும், தினக்கூலி பணியாளர்கள் ஈடுபடுகின்றனர்.சேலம், திருமலைகிரியை சேர்ந்தவர், வீரமணி, 36; துப்புரவு ஊழியர். இவர், சமீபத்தில், விஷம் அருந்தி சிகிச்சைக்கு வந்தவரை, தனியார் மருத்துவமனைக்கு, ஆம்புலன்சில் அனுப்பி வைத்துள்ளார்.அதற்கான, மாமூல், 1,000 ரூபாய் கேட்டு, ஆம்புலன்ஸ் டிரைவரிடம், மொபைல் போனில் மிரட்டி உள்ளார். 

அந்த உரையாடல், சமூக வலைதளங்களில் பரவியது.இதையடுத்து, மருத்துவமனை கண்காணிப்பாளர் தனபால், ஆர்.எம்.ஓ., ராணி ஆகியோர், சம்பவம் குறித்து விசாரித்தனர்.விசாரணையில், பணம் கேட்டு, வீரமணி மிரட்டியது அம்பலானது. இதையடுத்து அவர், பணியில் இருந்து நீக்கப்பட்டார்.இது குறித்து, டீன் ராஜேந்திரன் கூறியதாவது:ஏற்கனவே, பல்வேறு புகாரால், கடந்தாண்டில், வீரமணியை பணியில் இருந்து நீக்கினோம். அரசியல்வாதிகள் நெருக்கடியால், மீண்டும் பணியர்த்தப்பட்டார்.தற்போது, முறைகேடு செய்ததால், இரண்டாம் முறையாக, பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இனி, யார் சிபாரிசு செய்தாலும், ஏற்க மாட்டோம்.இவ்வாறு, அவர் கூறினர்.

NEWS TODAY 24.4 2026