Wednesday, October 9, 2019

தற்கொலையின் தூதர்கள் 
 Published : 05 Oct 2019 09:50 am



டாக்டர். ஆ. காட்சன்

அக்டோபர் 10: உலக மனநல நாள்


சமீபத்தில் பள்ளி மாணவர்களின் மனநலம் பற்றிய ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்குப் பின்பு என்னிடம் பேசிய ஆசிரியர் ஒருவர் ‘நீங்க சொல்ற மாதிரி நாங்க பசங்களைக் கொஞ்சம்கூடக் கண்டிக்க முடியலை சார். பிரம்பை ஓங்கினாலே, சார் சன் டிவியா, தந்தி டிவியா எந்த டிவி நியூஸ்ல வரனும்னு முடிவு பண்ணிக்கோங்க’ என்று மிரட்டுகிறார்கள் என்று கூறினார்.

மன உளைச்சலின் உச்சக்கட்டத்திலோ வாழ்க்கைப் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாமலோ மனநோய்களின் தாக்கத்தாலோ தற்கொலைதான் தீர்வு என்று முடிவெடுத்த காலம் மாறி, சிரித்துவிட்டுக் கடந்துசெல்ல வேண்டிய விஷயத்துக்கெல்லாம் சீரியஸாக முடிவெடுக்கும் தற்போதைய போக்கு பற்றி சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இதனால்தான் என்னவோ உலக சுகாதார நிறுவனமும் ‘தற்கொலைத் தடுப்பில் கவனம் செலுத்துவோம்’ என்ற மையக்கருத்தை இந்த ஆண்டு உலக மனநல நாளில் முன்வைத்துள்ளது. ஒவ்வொரு 40 நொடிகளுக்கு உலகில் ஒரு தற்கொலை மரணம் நடக்கிறது என்று இந்நிறுவனத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது.


எல்லாம் குடி மயம்

வீட்டுக்குள் விஷப்பாம்பை வைத்துக்கொண்டு யாரும் மூட்டைப்பூச்சியை நசுக்குவதற்கு நேரத்தை வீணாக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட விரட்டியடிக்கப்பட வேண்டிய ஒன்றுதான் மதுபோதையால் ஏற்படும் தற்கொலைச் சம்பவங்கள். தற்கொலை முயற்சி செய்து, காப்பாற்றப்பட்டு, மனநல ஆலோசனைக்காக என்னிடம் வந்த சுமார் 230 பேரை ஆய்வு செய்ததில் ஒரு அதிர்ச்சிகரமான காரணம் தெரியவந்தது. இதில் கிட்டத்தட்ட ஆண்களும் பெண்களும் சரிசமமாக இருந்தனர்.

இதில் ஆண்களில் சுமார் 41 சதவீதத்தினர் மது அருந்திய பிறகே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களில் பெரும்பான்மையானோர் (83%) குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எந்தவொரு காரணமும் இன்றி போதையில் இருந்தபோது தானாகவே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதிலிருந்து மது அருந்துவது தற்கொலை எண்ணங்களைத் தூண்டும் தன்மை கொண்டது என்பதும், போதையில் உள்ளவர்கள் தற்கொலை செய்துகொள்வதென்பது சர்வசாதாரணமாகிவிட்டது என்பதும் தெளிவாகிறது.

பழி ஓரிடம், பாவம் ஓரிடம்

பெண்களிடம் குடிப்பழக்கம் அதிகம் இல்லை என்பதால் அவர்கள் தப்பித்துக்கொண்டார்கள் என்று நாம் நிம்மதியாக இருந்துவிட முடியாது. இதே ஆய்வு, திருமணமான பெண்களில் 24.4 சதவீதத்தினரின் தற்கொலை முடிவுக்குக் காரணம் கணவனின் குடிப்பழக்கம்தான் என்றும் கூறுகிறது. குடிபோதையில் கணவனால் தாக்கப்படுவது, சந்தேகம் போன்ற நேரடிக் காரணங்கள் முதல் கணவனின் குடிப்பழக்கத்தால் குடும்ப அமைதி இழப்பு, சமூகத்தில் அவமானம், கடன், குழந்தைகளையும் எதிர்காலத்தையும் குறித்த பயம் போன்ற மறைமுகக் காரணங்களும் இதில் அடங்கும். பெரும்பாலான பெண்கள் தங்கள் கணவனின் குடிப்பழக்கத்தை மாற்ற முடியாமல் திணறி, என்ன செய்வது என்று தெரியாமல் உதவி கேட்டு ஒரு கதறலின் வெளிப்பாடாகவே தற்கொலை முடிவுக்கு வருகின்றனர்

யார் ஆபத்பாந்தவன்?

பெரும்பாலான தற்கொலை எண்ணங்கள் உணர்ச்சிவசப்படுதலின் உச்சத்தில், நொடிப்பொழுதில் தற்கொலை முயற்சியாக மாறிவிடுகின்றன. அதைச் செயல்படுத்துவதில் முக்கியப் பங்குவகிப்பது பூச்சிக்கொல்லி, மாத்திரைகள், கயிறு போன்ற தற்கொலை செய்துகொள்வதற்கான முறைகள் எளிதில் கிடைப்பதுதான் என்பது பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் மதுபானங்கள் எங்கும் எளிதில் கிடைப்பதுதான் சுமார் மூன்றில் ஒரு பங்கு தற்கொலை முயற்சிகளுக்குக் காரணம் என்று சொன்னால் மிகையாகாது. தற்கொலை முயற்சி மரணமாக முடிந்த சம்பவங்களை இதில் சேர்த்தால் பாதிப்பின் தீவிரம் இன்னும் அதிகமாகவே தெரியும்.

அரசு மருத்துவமனைகளில் பெண்கள், குழந்தைகளைத் தவிர்த்து உள் - வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்றுவருபவர்களில் சுமார் நான்கில் ஒரு பங்கினர் மதுவால் உடல் - மனநலப் பாதிப்புக்குள்ளானவர்கள் என்றால் மருத்துவமனையின் பெரும்பாலான சேவைகளை நுகர்வோராகவும், செலவினங்களை அதிகரிப்பவர்களாகவும் இவர்களைக் கருதுவதில் தவறேதும் இல்லை. ஒருபுறம் அரசு - தனிநபரின் வீண் பொருளாதார விரயமாக இருக்கும் மதுபானம், இன்னொரு புறம் அரசின் முக்கிய வருவாயாகக் கருதப்படுவது, பழைய படம் ஒன்றில் நாகேஷ் கீழே கிடந்த நாலணாவை ஓட்டைப்பையில் போட்டுக்கொண்டு ஓட்டலில் சாப்பிடச்சென்ற காமெடி போன்றதுதான் இது.

இன்னொரு பக்கம்

மதுப்பழக்கம் ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் இருபது வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள், பதின் பருவத்தினரின் பாதை வேறு வழியாகத் தற்கொலை உலகுக்குள் நுழைகிறது. ஸ்மார்ட்போன், விலையுயர்ந்த பைக், இரண்டும் இல்லாவிட்டால் உலகில் வாழத் தகுதியற்றவர்கள் அல்லது தரம் குறைந்துபோனவர்கள் என்ற மாயையான தோற்றமும் படிப்பில் ஒரு மதிப்பெண் குறைந்தால்கூடத் தங்கள் வாழ்க்கையிலேயே தோற்றுவிட்டதாகக் கருதும் சகிப்புத்தன்மையற்ற போக்கும் தற்போது முன்னிலையில் நிற்கும் தற்கொலை மிரட்டல், முயற்சிகளுக்கான காரணங்கள்.

பிள்ளைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாக நினைத்துக்கொண்டு ‘செய் அல்லது செத்து மடி ‘ என்ற நனவிலி மனக்கோட்பாடுகளோடு நிர்ப்பந்திக்கும் பெற்றோர்கள், படிப்பைக் கற்றுக்கொடுப்பதில் தங்கள் பள்ளிதான் சிறந்த பள்ளி என்று காட்டும் முயற்சியில் மாணவர்களை வாழக் கற்றுக்கொடுக்கத் தவறிய பள்ளிகள் என இன்னும் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இதில் எக்கச்சக்க பொதுத்தேர்வுகளும், நுழைவுத்தேர்வுகளும் வேறு.

கனடாவிலுள்ள டொரண்டோ நகரின் உயரமான பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்வது 2004 வரை அங்கு பிரபலமான ஒன்று. இந்த ஆண்டில் பாலத்தைச் சுற்றிலும் தடுப்புவேலி அமைத்த பிறகு ஆண்டுக்கு 9 ஆக இருந்த தற்கொலை மரணங்கள், வருடத்துக்கு 0.1 ஆகக் குறைந்துவிட்டதாம். இதைப் போன்ற ஏராளமான ஆய்வுகளில் ஒரு சிறிய மாற்றத்தால் தற்கொலைகள் பெரிய அளவில் தடுக்கப்பட முடியும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இப்படியிருக்க மேற்கூறிய பெரிய காரணங்களைக் கவனத்தில் கொண்டு அரசு, தனிமனிதனால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு சமுதாய - கொள்கை மாற்றமும் பல உயிரிழப்புகளைத் தவிர்ப்பதுடன் பொருளாதார விரயங்களையும் குறைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

கட்டுரையாளர்,
மனநலமருத்துவர், உதவிப்பேராசிரியர்,
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

Tuesday, October 8, 2019


வெற்றி தரும் விஜய தசமி!




வி.ராம்ஜி

நவக்கிரகங்கள், நவரத்தினங்கள், நவதானியங்கள், நவயோகங்கள், நவரசங்கள், நவபாஷாணங்கள், நவகற்பங்கள், நவமேகங்கள், நவநிதிகள் என ஒன்பதின் முக்கியத்துவத்தை விசேஷமாக கூறுவார்கள். அந்த வகையில், நாடு முழுவதும் ஒன்பது நாட்களுக்கு விமரிசையாக கொண்டாடப்படுகிறது நவராத்திரி!

சிவராத்திரி சிவனுக்கு உகந்தது; தேவியருக்கு உகந்தது நவராத்திரி! ‘நவம்’ என்ற சொல்லுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. ‘நவ நவமாய் பெருகும்’ என்று ஆச்சார்யர்கள் விவரிக்கிறார்கள்.

புரட்டாசி மாதம் அமாவாசைக்கு பிறகு பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே நவராத்திரி.

நவராத்திரி பண்டிகை முடிந்து வரும் தசமி திதியை ‘விஜயதசமி’ என்று கொண்டாடுகிறோம். பிரதமை, அஷ்டமி, நவமி ஆகிய திதிகளை சுபகாரியங்கள் செய்ய விலக்கி வைக்கிறோம். அந்த திதிகளையும் சிறப்பிப்பதற்காகவும், எல்லா திதிகளிலும் இறைவன் அம்சம் உளளது என்பதை உணர வைப்பதற்காகவும், நவராத்திரியில் இந்த திதிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

நவராத்திரியில் வரும் நவமி நாள் ஆயுத பூஜை. சரஸ்வதி பூஜை என்றும் கொண்டாடப்படுகிறது. மாணவர்கள் புத்தகங்கள், நோட்டு, பேனா, பென்சில் போன்றவற்றை வைத்து வணங்குவது வழக்கம். கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என்று எல்லா துறைகளில் இருப்பவர்களும் ஆயுத பூஜையை விமரிசையாக கொண்டாடுவார்கள்.

பத்தாவது நாள் விஜயதசமி! இந்த நாளில் தொடங்கப்படுகிற எந்தச் செயலும் வெற்றிகரமாக முடியும் என்பது ஐதீகம். இந்த நாளில் ஞானம், வித்தை மற்றும் கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வணங்குவதால் எல்லா வளமும், நலமும் கிடைத்து சகல கலைகளிலும் சிறந்து விளங்கலாம். சிறக்க வாழலாம்!

மேலும் இந்தநாளில் கல்வி கற்கவும், புது கணக்கு ஆரம்பிக்கவும், முக்கிய பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் போடுவதற்கும் இயல், இசை, நாடகம், நாட்டியம் போன்ற கலைகள் விருத்தியடையவும் வழிபடுவது மிகவும் சிறந்தது.

சரஸ்வதி பூஜையைக் கொண்டாடுவோம். விஜய தசமியை கொண்டாடி மகிழ்வோம்.
Published : 30 Jul 2019 10:51 am

வைரல் உலா: சின்ன சின்ன ஆசை... வயதாகக் கொஞ்சம் ஆசை!



குத்துமதிப்பாக 40 வயதைத் தொட்டவர்கள் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் தங்களது ஒளிப்படங்களை எளிதில் மாற்ற மாட்டார்கள். தங்களுக்கு வயது ஆகிவிட்டதைக் காட்டக் கூடாது என்பதற்காகச் சிலபல ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த ஒளிப்படங்களையே பயன்படுத்துவார்கள். ஆனால், இன்றோ நிலைமை தலைகீழ்.

பதின்பருவத்தில் உள்ள இளைஞர்கள்கூடத் தாங்கள் வயதானால் எப்படி இருப்போம் என்பதைக் காட்டும் ஒளிப்படங்களைச் சமூக ஊடகங்களில் பதிவிடத் தொடங்கிவிட்டார்கள். அதற்குப் பாதை அமைத்துக் கொடுத்தது ‘ஃபேஸ் செயலி’. கடந்த வாரம் ஃபேஸ்புக்கில் இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் எம்.எஸ். டோனி, விராட் கோலி, ரோஹித் உள்ளிட்ட வீரர்களின் வயதான தோற்றத்துடன் கூடிய ஒளிப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாயின.

இதைப் பார்த்துவிட்டு சும்மா இருப்பார்களா நம் இளைஞர்கள். உடனே ‘ஃபேஸ் செயலி’யைத் தங்களுடைய மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்து தங்களுடைய வயதான ஒளிப்படங்களைப் பகிர ஆரம்பித்துவிட்டார்கள். இதேபோல தங்களுக்குப் பிடித்த சகலமானவர்களையும் ‘ஃபேஸ் செயலி’யில் நுழைத்து, அதை மீம்களாக்கி உலவவிட்டுவந்தார்கள். கடந்த வாரம் சமூக ஊடகங்களை ‘ஃபேஸ் செயலி’தான் ஆக்கிரமித்திருந்தது.

‘ஃபேஸ் செயலி’யில் வயதான தோற்றம் மட்டுமல்லாமல், வயது குறைந்த தோற்றத்தையும் காட்டுவதால், அதைப் பயனாளர்கள் பதிவிறக்கம் செய்தது எகிறியது. கடந்த வாரத்தில் மட்டும் சுமார் 15 கோடிப் பேர் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து எண்ணிக்கையை எகிறடித்திருக்கிறார்கள். பதிவிறக்கத் தரவரிசையில் ‘ஃபேஸ் செயலி’யே முதலிடத்தில் இருந்தது. இதில் ஒளிப்படங்களைப் பதிவிறக்கம் செய்தவர்களின் தகவல்களை அந்நிறுவனம் திருடிவிட்டதாகத் தனிக் கதையும் ஓடிக்கொண்டிருக்கிறது.

மனதைக் கெடுக்கிறதா சமூக வலைத்தளம்?



மிது

சமூக வலைதளங்களில் எப்போதும் மூழ்கிக் கிடப்பதால் ஏற்படும் தீமைகளைப் பற்றி நிறைய ஆய்வுகள் வந்துவிட்டன. அண்மையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ‘லான்செட் சைல்ட் அண்ட் அடாலசென்ட் ஹெல்த்’ என்ற நிறுவனம் மேற்கொண்ட ஓர் ஆய்வில், சமூக வலைத்தளங்களால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகப் புதிய தகவலை கூறியுள்ளது.

ஒரு லட்சத்துக்கும் அதிகமான இளம் ஆண், பெண்கள் இந்த ஆய்வில் பங்கேற்றார்கள். சமூக வலைத்தளங்களில் ஈடுபாடு உடையவர்கள் மட்டுமே இந்த ஆய்வில் எடுத்துக்கொள்ளப்பட்டார்கள். அவர்களின் தினசரி நடவடிக்கைகளை ஆய்வாளர்கள் கவனித்துவந்தனர். குறிப்பாக மனரீதியாக அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை முக்கியமாக ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார்கள்.

ஆய்வின் முடிவில் இவர்களில் 90 சதவீதம் பேர் எல்லா வகையிலும் எதிர்மறையாகவும் கவலையுடனும் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள். ஆண்களைவிட பெண்களே அதிகளவில் பாதிக்கப்பட்டி ருப்பதாகவும் சொல்லியுள்ளார்கள். இரவில் உறங்காமல் நீண்ட நேரம் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் பத்து பேரில் ஏழு பேர் பெண்களே இருந்திருக்கிறார்கள்.

தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு சமூக வலைத்தளங்களே கதி என்ற கிடப்பதே எதிர்மறையான சிந்தனைக்குக் காரணம் என்று கூறியுள்ள ஆய்வாளர்கள், “இரவில் கண்விழித்து சமூக ஊடகங்களில் விழுந்து கிடக்காதீர்கள். நன்றாக உறங்குங்கள். நிஜ நண்பர்களுடன் தொடர்பை இழந்துவிடாதீர்கள். உடல்நலனையும் மன நலனையும் பேணுங்கள்” என்று அறிவுரைக் கூறியிருக்கிறார்கள்.


சமூகவலைத்தளவாசிகளே, ஆய்வாளர்கள் சொல்வது உங்கள் காதில் விழுகிறதா?

வலை 3.0: எல்லோருக்குமான மின்னஞ்சல்!



இணைய வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது ‘ஹாட்மெயி’லும், அதை உருவாக்கிய சபீர் பாட்டியாவும் மறக்க முடியாத பெயர்கள். குறிப்பாக 1990-களின் பிற்பகுதியில் இணையத்தை அறிமுகம் செய்து கொண்டவர்களுக்கு ‘ஹாட்மெயில்’ மறக்க முடியாத பெயர்.

‘ஹாட்மெயில்’ அறிமுகமான காலத்தில், அதில் கணக்கு வைத்திருப்பது பெருமையான விஷயம். 1996-ல் அறிமுகமான ‘ஹாட்மெயி’லை அடுத்த ஆண்டே மைக்ரோசாப்ட் விலைக்கு வாங்கியது. ஆனால், அதற்குள் ‘ஹாட்மெயில்’ இணையத்தில் ஏற்படுத்திய அதிர்வலை அசாத்தியமானது. ‘ஹாட்மெயில்’ சேவையை விற்பதற்கு முன்பு சபீர் பாட்டியா மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் கெத்து காட்டிய விதம் இளம் தொழிலதிபர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதது.

இத்தனைக்கும் ‘ஹாட்மெயில்’ அறிமுகமாவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே இணையத்தில் மின்னஞ்சல் அறிமுகமாகிவிட்டது. 1990-களின் தொடக்கத்தில் இணையத்தில் பலரும் மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்திக்கொண்டிருந்தனர். இருந்தாலும் ‘ஹாட்மெயி’லின் அறிமுகம் இணையவாசிகள் கொண்டாடக் கூடியதாக அமைந்தது. அதற்குக் காரணம், அது மின்னஞ்சலைச் சொந்தக் கணினியிலிருந்து விடுவித்ததுதான். எந்த நேரத்திலும் எங்கிருந்தும் மின்னஞ்சலை அணுகும் வசதியை இது சாத்தியப்படுத்தியது.

அதற்கு முன்பே மின்னஞ்சல் இருந்தாலும் அதை அணுக இணைய வசதி வேண்டும் என்பது மட்டுமல்லாமல், சொந்தக் கணினியிலிருந்து மட்டுமே அணுகும் நிலை இருந்தது. அலுவலக கணினிக்கு வந்த மின்னஞ்சலை, வீட்டில் உள்ள கணினியில் பார்க்க முடியாது. மின்னஞ்சல் வந்தபிறகு அதைக் கணினியில் தரவிறக்கம் செய்து, இணைய இணைப்பைத் துண்டித்துவிட்டு ஆப்லைனில் வாசிக்கலாம். இப்போதுபோல, அப்போது இணைய வசதி இல்லை. கட்டணமும் அதிகம்.

இந்நிலையில்தான் ‘ஹாட்மெயில்’, ‘வெப்மெயி’லாக அறிமுகமானது. அதாவது, வலையில் செயல்படும் இணையம் வாயிலாக மின்னஞ்சலை அணுகும் வசதியுடன் ‘ஹாட்மெயில்’ அறிமுகமானது. ‘ஹாட்மெயி’லில் கணக்குத் தொடங்கினால், ஒருவர் தனக்கான மின்னஞ்சலை எந்தக் கணினியிலிருந்தும் அணுகலாம் எனும் சுதந்திரம் கிடைத்தது.

இந்த வரப்பிரசாதம்தான் ‘ஹாட்மெயில்’ சேவையைத் தெறிக்கவிட்டது. இதை உருவாக்கிய இந்திய அமெரிக்கரான சபீர் பாட்டியாவும் இதுபோன்ற ஒரு வரவேற்பை எதிர்பார்த்திருந்தார். அவரும் அவருடைய நண்பரும் இந்தப் புதுமையான யோசனை பற்றி விரிவாக விவாதித்து அலைந்து திரிந்து நிதி திரட்டி ‘ஹாட்மெயில்’ சேவையை அறிமுகம் செய்தனர்.

அறிமுகமான வேகத்தில் ‘ஹாட்மெயி’லுக்கு ஜாக்பாட் அடித்தது. இலவச சேவையான ‘ஹாட்மெயி’லைப் பயன்படுத்தியவர்கள், அதைப் பலருக்கும் பரிந்துரைத்தனர். இதனால் சில நாட்களிலேயே ‘ஹாட்மெயில்’ லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களைப் பெற்றது. ஆக, மின்னஞ்சல் சேவையான ‘ஹாட்மெயில்’ மின்னஞ்சல் வாயிலாகவே இணையத்தில் பரவிப் புகழ் பெற்றது.

ஹாட்மெயிலின் அபார வெற்றி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தை ஈர்த்தது. விளைவு, ‘ஹாட்மெயி’லை மைக்ரோசாப்ட் விலைக்கு வாங்கி, தனது அவுட்லுக் மின்னஞ்சல் சேவையுடன் இணைத்துக்கொண்டது. ‘ஹாட்மெயி’லை விற்கும்போது, அதன் நிறுவனர் சபீர் பாட்டியா உறுதியாகப் பேரம் பேசியது சிலிக்கான் வேலி காணாத வெற்றிக்கதைகளில் ஒன்று. சபீர் பாட்டியா அதன் பிறகு பல இணைய நிறுவனங்களைத் தொடங்கினார். ஆனால், எந்த நிறுவனமும் ‘ஹாட்மெயில்’ அளவுக்கு வெற்றிபெறவில்லை. மின்னஞ்சலை எல்லோருக்கும் கொண்டு சேர்த்த ஹாட்மெயிலும் சபீர் பாட்டியாவும் எப்போதும் நினைவுகூரத்தக்கவர்கள்.

- சைபர்சிம்மன்

Mass cheating alleged in final year MBBS exam: Results of 5 medical colleges held

Mass cheating alleged in final year MBBS exam: Results of 5 medical colleges held: KUHS has initiated the necessary procedure to disqualify the 5 MBBS students. The governing council is all set to take a final decision on the matter after a meeting to be held soon.

Make a plan to transfer Chandulal Chandrakar Medical College medicos to state GMCs: HC tells govt

Make a plan to transfer Chandulal Chandrakar Medical College medicos to state GMCs: HC tells govt: Chandulal Chandrakar Medical College with the intake of 150 MBBS seats was declared 'zero year' by the Medical Council of India (MCI). The institute failed to get the MCI approval for 2019-20 after the medical council's team recently inspected these medical colleges' premises and found gross deficiencies.

NEWS TODAY 26.01.2026