Friday, October 11, 2019

S’pore to be first nation to ban ads for sugary drinks

Singapore:11.10.2019

Singapore will become the first country in the world to ban ads for the most unhealthy sugary drinks in its latest move to combat rising diabetes rates, the health ministry said on Thursday.

Products deemed “less healthy” must now display labels grading their nutritional and sugar content, with those considered to be most unhealthy banned from appearing in ads across all media platforms, including broadcast, print and online channels.

“This aims to reduce the influence of such advertisements on consumer preferences,” the ministry said, calling the ban a world-first. It added that the measures were only a start and it will continue to explore the possibility of a sugar tax or ban.

“We urge SSB (sugar-sweetened beverages) manufacturers to consider reformulating their drinks to contain less sugar even as we further study these measures,” it said. AFP
IRCTC cancels Karwa Chauth special train as only two couples book tickets

TIMES NEWS NETWORK

New Delhi:11.10.2019

The catering, tourism and ticketing subsidiary of Indian Railways, IRCTC, has cancelled the much-touted Karwa Chauth special train after only two couples signed up for their “dream holiday” in the majestic Rajasthan Deluxe.

The IRCTC had offered 78 seats in this luxury train, which offered a shower cubicle and foot massage, besides seating area, to make the journey “memorable”.

“The women fast on Karwa Chauth day and they offer puja. People might have thought they should stay at home on the day of the fast. How can you run the train without occupancy,” said an official.

Another reason could be the high fares of ₹1.03 lakh per couple in first AC and ₹90,100 per couple in AC-2 tier. Though only married couples were allowed on the train, they could bring their children along and IRCTC had assured to take care of them during the trip.

IRCTC had announced to run the Rajasthan Deluxe for a five-day tour. The train was to depart from Safdarjung station in Delhi on October 14 and visit historical sites in Rajasthan, including Jaisalmer Fort, Patwon Ki Haveli, Gadisar Lake, Mehrangarh Fort, Jaswant Thada, Amber Fort and City Palace.

The train was scheduled to return on October 18. The festival of Karwa Chauth falls on October 17.

While launching the booking for this special train, IRCTC had said the “age-old tradition emanates from Rajasthan. This is observed by womenfolk for the long life and well-being of their husband”.

Another reason could be the high fares of ₹1.03 lakh per couple in first AC and ₹90,100 per couple in AC-2 tier
I-T raids on premises of Karnataka former deputy CM Parameshwara

Searches Regarding Multi-Crore Tax Evasion In NEET Exams

TIMES NEWS NETWORK

Bengaluru:11.10.2019

Income tax department officials conducted raids on Thursday at educational institutions owned by former deputy chief minister G Parameshwara and former Union minister RL Jalappa, both from Congress, in connection with a multi-crore tax evasion case linked to the National Eligibility-cum-Entrance Test (NEET) held for medical and dental college admissions this year.

The raids were conducted even as the opposition Congress and JD(S) were gearing up to attack ruling BJP over delayed flood relief on the opening day of the three-day winter session.

Around 150 officials raided 30 premises at various locations in Bengaluru, Tumakuru, Nelamangala (Bengaluru Rural), Kolar and Chikkaballapura districts and some places in Rajasthan, official sources said. The searches will continue on Friday.

While Congress termed the raids “BJP vendetta’’, I-T officials said they initiated action as part of the probe to check alleged irregularities in allocating medical seats under the NEET quota in two medical colleges run by Parameshwara and one by Jalappa.

“A case of alleged forgery by impersonation and alleged illegal payments made to secure 186 seats by 68 students from Rajasthan was the trigger for the raids,’’ they added.

Officials swooped down on Parameshwara’s properties around 6.30am, starting from Sri Siddhartha Medical College in Tumakuru and Sri Siddhartha Institute of Medical Sciences and Research near Nelamangala. In Kolar, sleuths raided the Jalappaowned Devaraj Urs Medical College. All three colleges are deemed universities.

The teams raided real estate firms in Nelamangala and Jalappa’s relatives’ houses in Doddaballapura and Chikkaballapura. Sources said searches were also conducted at Parameshwara’s Sadashivnagar residence in Bengaluru.

Officials seized documents showing undeclared income and college managements accepting money in cash from students. They seized ₹2 crore in cash and property papers.

Parameshwara was deputy chief minister in the H D Kumaraswamy JD(S)-Congress coalition government in Karnataka that collapsed in July after losing a trust vote in the assembly. Jalappa was once a confidant of former Prime Minister HD Deve Gowda, but later switched allegiance to Congress.

Thursday, October 10, 2019

Published : 09 Oct 2019 15:46 pm

மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில்; எதிரிகளை விரட்டும் சரபேஸ்வரர்! 




வி.ராம்ஜி

நம் முன் ஜென்ம பாவங்களைப் போக்கி அருளுவதற்காக, மாடம்பாக்கத்தில் கோயில் கொண்டிருக்கிறார் தேனுபுரீஸ்வரர்.

சென்னை தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி செல்லும் வழியில், 10 கி.மீ. தொலைவில் உள்ளது மாடம்பாக்கம். இங்குதான் அருளாட்சி செய்துகொண்டிருக்கிறார் தேனுபுரீஸ்வரர்.

இங்கே, ஆலயத்தில் உள்ள சிவனாரின் திருநாமம் தேனுபுரீஸ்வரர். பசு பூஜித்து வழிபட்டதால், தேனுபுரீஸ்வரர் எனப் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். அம்பாளின் திருநாமம் தேனுகாம்பாள்.

இந்தக் கோயிலுக்கு வந்து, பிரதோஷ நாளில் சிவனாருக்கும் நந்திதேவருக்கும் நடைபெறும் அபிஷேகத்தை தரிசித்தால், இழந்ததையெல்லாம் மீட்கலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

கபில முனிவர், இடது கையில் சிவலிங்கத்தை வைத்துக்கொண்டு, பூஜை செய்தாராம். இதனால் கடும் கோபம் கொண்ட சிவபெருமான், பசுவாகும்படி சபித்தாராம். அதன்படி இங்கே இந்தப் பகுதியில், பசுவாக இருந்து சிவ வழிபாடு செய்து, அபிஷேகித்து, பூஜித்து வரம் பெற்றார். அதேபோல், இந்திரன் தன் சாபத்தைப் போக்கிக் கொள்ள இங்கு வந்து சிவபூஜை செய்து, வரம் பெற்றான் என்கிறது ஸ்தல புராணம்.

மனதை அமைதியாக்கும் அற்புதமான ஆலயம். கஜ பிருஷ்ட விமான அமைப்புடன் கட்டப்பட்டிருப்பது சிறப்பு. கோயிலின் முன்மண்டபம் அழகு. அந்த மண்டபத்தில் உள்ள தூண்களும் தூண்களில் உள்ள சிற்பங்களும் கொள்ளை அழகு.

இந்த 18 தூண்களில் ஒரு தூணில், சரபேஸ்வரர் சிலை உள்ளது. தேனுபுரீஸ்வரர், தேனுகாம்பாளுக்கு அடுத்தபடியாக,இந்தக் கோயிலுக்கு சரபேஸ்வரரை தரிசிப்பதற்காகவே ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். நரசிம்மரின் கோபம் தணிப்பதற்காக, சரபேஸ்வரர் திருவுருவத்தை உண்டுபண்ணினார் சிவபெருமான் என்கிறது புராணம்.

மிகவும் சக்தி வாய்ந்தவர் சரபேஸ்வரர். ஞாயிற்றுக்கிழமைகளில், மாலை 3 மணிக்கு மேல், ராகுகாலத்தில் (4.30 முதல் 6 மணி வரை), சரபேஸ்வரருக்கும் உத்ஸவ மூர்த்தியான சரபேஸ்வரருக்கும் அபிஷேகங்கள் விமர்சையாக நடைபெறுகின்றன. நரசிம்மரைப் போலவே, சரபேஸ்வரருக்கும் பானக அபிஷேகம் மிகவும் விசேஷம். எதிர்ப்புகள் விலகும். தீய சக்திகள் அஞ்சி ஓடும் என்பது ஐதீகம்.

மாடம்பாக்கம் சிவாலயத்துக்கு வந்து தரிசியுங்கள். நம் பாவமெல்லாம் தொலையும். புண்ணியங்கள் பெருகும். எதிரிகள் விலகுவார்கள். எதிர்ப்புகள் தவிடுபொடியாகும்.
இன்று முதல் டிச.7 வரை 60 நாட்களுக்கு நெல்லை, பொதிகை விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் 



சென்னை

சென்னை எழும்பூர் ரயில் நிலைய யார்டில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் நெல்லை, பொதிகை விரைவு ரயில்கள் இன்று முதல் அடுத்த 60 நாட்களுக்கு தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

சென்னை எழும்பூர் யார்டில் இன்று முதல் டிசம்பர் 8-ம் தேதி வரையில் தரம் உயர்த்தும் பணி நடப்பதால், சில விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி நெல்லை, பொதிகை விரைவு ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படவுள்ளன. அதுபோல் விழுப்புரம் - தாம்பரம் பயணிகள் ரயில் (56060) இன்று முதல் டிசம்பர் 8-ம் தேதி வரையில் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல், சென்னை எழும்பூர் - திருநெல்வேலி நெல்லை விரைவு ரயில் (12631), சென்னை எழும்பூர் - செங்கோட்டை பொதிகை விரைவு ரயில் (12261) இன்று முதல் வரும் டிசம்பர் 7-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

கூடுதல் மின்சார ரயில்

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘நெல்லை, பொதிகை விரைவு ரயில்கள் இன்று முதல் தாம்பரத்தில் இயக்கப்படுகிறது.

தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே போதிய அளவில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின் றன.

மேற்கண்ட 2 விரைவு ரயில்களில் முன்பதிவு செய்துள்ளவர்கள், அதே டிக்கெட்டில் எழும்பூரில் இருந்து தாம்பரத்துக்கு மின்சார ரயில்களில் பயணிக்கலாம். தேவை ஏற்பட்டால் கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப்படும்’’ என்றார்.

உச்சஸ்தாயி குயில்... கே.பி.சுந்தராம்பாள்! 



வி.ராம்ஜி

பாடப் புத்தகங்களிலும் கதைகளிலும் நாம் படித்து உணர்ந்த தலைவர்களையும் அறிஞர்களையும் நம் கண் முன்னே நடமாடச் செய்தவர் நடிகர்திலகம் சிவாஜிகணேசன். அதேபோல், அவ்வைக் கிழவியையும் கவுந்தியடிகளையும் நம் முன்னே நடக்கவிட்டு, பாடச் செய்து, போதனைகள் நடத்தியவர்... கே.பி.எஸ். என்று சொல்லப்படும் கே.பி.சுந்தராம்பாள்.

ஈரோடு அருகே உள்ள கொடுமுடிதான் சொந்த ஊர். சிறுமியாக இருந்த போது, ஊரில் உள்ள கோயிலுக்குச் சென்றிருக்கிறார். அங்கே, கோயிலில் சிலர், பாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் சிறுமி சுந்தராம்பாளுக்கும் பாடத் தோன்றியது. பாடினார். அந்தக் குரல், கோயிலின் பிரமாண்ட மதிலில் பட்டு எதிரொலித்தது. உள்ளே இருந்தவர்கள், சிறுமியை நோக்கி ஓடிவந்து, சூழ்ந்துகொண்டார்கள். வேளியே இருந்தவர்கள், கோயிலுக்குள் நுழைந்து, ‘யார் பாடியது?’ என்று கேட்டுக்கொண்டே ஓடிவந்தார்கள்.

சிறுமியின் குரல்... தனித்துவம் மிக்கதாக இருந்தது. கணீரென இருந்தது. வெண்கலக் குரல் போல் இருந்தது. உச்சஸ்தாயியில் இருந்தது. கேட்டவர்கள், சிலிர்த்துப் போனார்கள்.

பின்னர், கரூரில் ‘நல்லதங்காள்’ நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அப்போது பத்து வயது அவருக்கு. நடிப்பை விட, பாட்டு எல்லோரையும் கட்டிப்போட்டது. காலம்... கொஞ்சம் கொஞ்சமாக அவரைத் திரையுலகிற்குள் அழைத்து வந்தது.

இவரின் நாடகங்களைப் பார்க்கவும் இவர் பாடல்களைக் கேட்கவும் கூட்டம் அலைமோதின. நாடகங்களுக்கு ரிசர்வேஷனில் புக் செய்து பார்த்தவர்கள்தான் அதிகம். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் வந்தன. கடல் கடந்தும் குரலுக்கு மவுசு எகிறின.

‘நந்தனார்’ படத்தில் நடித்தார். சுந்தராம்பாளின் அற்புதமான பாடல்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. ஹைபிட்ச் என்று சொல்லப்படும் உச்சஸ்தாயியில் சுந்தராம்பாள் பாடியது போல், அவரளவுக்கு எவரும் பாடவில்லை. அந்த உச்சஸ்தாயியை எவரும் தொடமுடியாது என்று இன்றைக்கும் சிலாகிக்கிறார்கள் ரசிகர்கள்.

பால பார்ட், ஸ்த்ரீபார்ட், ராஜபார்ட் என மூன்று விதமான கதாபாத்திரங்களிலும் நடித்து, புகழ்பெற்றார் சுந்தராம்பாள்.

‘’நந்தனார்’ படத்தில், நந்தனாராக நடித்தார். ஜெமினி எஸ்.எஸ்.வாசனின் ‘அவ்வையார்’ படத்தில் அவ்வையாராக நடித்தார். உடல் மொழியாலும் பேசும் மொழியாலும் அவ்வைக்கிழவியாகவே மாறினார். ரசிகர்கள் பிரமித்தார்கள்.

ஏ.பி.நாகராஜன் - சிவாஜி கூட்டணியில் உருவான ‘திருவிளையாடல்’ படத்தில், அவ்வைப்பாட்டியாக நடித்தார். ‘மகாகவி காளிதாஸ்’, ‘காரைக்கால் அம்மையார்’ என்று இவர் நடித்த படங்களையும் பாடிய பாடல்களையும் விரல் விட்டு எண்ணிவிடலாம்.

ஒரு பக்கம் பக்திப்பாடல்கள்... இன்னொரு பக்கம் தேசபக்திப் பாடல்கள். மொத்தத்தில் சுந்தராம்பாளின் பாடல்கள், பக்தியூட்டின. தேசத்தை நேசிக்கச் செய்தன.

காந்திஜி, ஈரோட்டுப் பக்கம் வந்த தருணத்தில், இவரின் வீட்டில்தான் உணவருந்தினார். அப்போது, ‘சாப்பாடு மட்டும்தானா. இந்தத் தட்டு எங்களுக்குத்தானே’ என்றார். ‘தாராளமா எடுத்துக்கோங்க’ என்றார். அது தங்கத்தட்டு.

காந்திஜி, அந்தத் தட்டை ஏலம் விட்டார். ஏலத்தில் கிடைத்த தொகையை சுதந்திரப் போராட்டத்துக்கும் மக்களுக்குமாகப் பயன்படுத்த நிதியில் சேர்த்தார் காந்திஜி.

சுந்தராம்பாள், தன் குரல்வளத்தால் எத்தனையோ விருதுகளைப் பெற்றிருக்கிறார். மரியாதையையும் கவுரவத்தையும் அடைந்திருக்கிறார். அவரால் நமக்குக் கிடைத்தது... அற்புதமான, அழகான, கணீர்ப் பாடல்கள்.

கே.பி.சுந்தராம்பாளின் பாடல்கள், காற்றுள்ளவரை கலந்து மிதந்து வரும்.

அவரின் பிறந்தநாளில்... நினைவுகூர்வோம். அவரின் பாடல்களைக் கேட்டு இன்பமுறுவோம்!

உயிர் காக்கும் மருந்தா, உயிரை எடுக்கும் மருந்தா?

 Published : 10 Oct 2019 07:29 am




இமையம்

சிறுநீரகம் செயலிழந்து, மாற்றுச் சிறுநீரகம் பொருத்திக்கொண்ட நோயாளிகளுக்கு மாதந்தோறும் இலவசமாக தமிழ்நாடு அரசு ‘உயிர் காக்கும் மருந்துகள்’ என்று வழங்குகிறது. உயிர் காக்கும் இலவச மாத்திரைகள் பெறுவதற்குத் தகுதியானவர், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 உள்ளவர்கள் மட்டுமே. உயிர் காக்கும் இலவச மாத்திரைகள் பெறுவதற்குக் குடும்ப நலம் மற்றும் சுகாதாரத் துறைச் செயலரிடம் அனுமதி ஆணை பெற வேண்டும். பெறப்பட்ட ஆணையை மூன்று மாதத்துக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். புதுப்பிக்கத் தவறினாலோ, புதுப்பித்த ஆணையின் நகல் நோயாளியின் கைக்குக் கிடைப்பதற்குத் தாமதமானாலோ நோயாளி மாத்திரைகளைப் பெற இயலாது. அதேபோல், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.73,000 இருந்தாலும் உயிர் காக்கும் இலவச மாத்திரைகளைப் பெற முடியாது.


மாற்றுச் சிறுநீரகம் பொருத்திக்கொண்ட நோயாளிக்கு மருத்துவர் பரிந்துரைக்கும் எல்லா மாத்திரைகளுமே அரசு மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கும் என்று கூற இயலாது. அரசு மருத்துவமனையில் கிடைக்காத மாத்திரைகளை நோயாளிகள் தனியாரில் வாங்கித்தான் சாப்பிட வேண்டும். இலவசமாக அரசு வழங்கும் மாத்திரைகளைக்கூட சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மட்டும்தான் வாங்க முடியும். விலை உயர்ந்த உயிர் காக்கும் மருந்துகள் தஞ்சாவூர், மதுரை ஆகிய ஊர்களில் உள்ள மருத்துவமனைகளில் வழங்கப்படுவதாகச் சொல்லப்பட்டாலும் அங்கே போய்க் கேட்டால் ‘ஸ்டாக் இல்ல. சென்னைக்குப் போங்க’ என்றுதான் சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட நோயாளிகளும் மாதந்தோறும் சென்னைக்கு வந்துதான் மாத்திரைகளை வாங்கிக்கொண்டு போகிறார்கள். கன்னியாகுமரியிலுள்ள நோயாளி சென்னைக்கு வந்து செல்ல குறைந்தது இரண்டாயிரம் ரூபாய் செலவாகும். பயணச் செலவுக்குப் பணம் இல்லாததாலேயே பல நோயாளிகள் மாத்திரைகள் வாங்காமல் விட்டுவிடுகிறார்கள். தொடர்ந்து மாத்திரைகளைச் சாப்பிட இயலாத நிலையில், புதிதாகப் பொருத்திக்கொண்ட சிறுநீரகமும் பொருந்தாமல் போய்விடுகிறது. மாத்திரைகளை வாங்குவதற்காக சென்னைக்கு வந்து செல்லும்போது பல நோயாளிகளுக்குத் தொற்று ஏற்பட்டு, புதிதாகப் பொருத்திய சிறுநீரகம் செயலிழந்துவிடும் நிலை ஏற்படுகிறது. இப்படியாக, உயிரைக் காத்துக்கொள்ள மாத்திரை வாங்குவதற்காகப் போய், உயிரை விடும் அவல நிலை ஏற்படுகிறது.

தமிழக அரசின் முரணான சட்டம்


2017-ம் ஆண்டு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தனிநபரின் குறைந்தபட்ச ஒரு நாள் ஊதியம் எவ்வளவு என்று தீர்மானிக்க அனுப் சத்பதி தலைமையில் ஒரு வல்லுநர் குழுவை அமைத்தது. ஓராண்டு ஆய்வுசெய்த வல்லுநர் குழு 2018-ல் தனிநபருக்கான ஒரு நாள் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்து மத்திய அரசுக்கு அளித்தது. வல்லுநர் குழுவின் பரிந்துரையைத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் இணையதளத்திலும் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் வசிக்கும் தனிநபர் ஒருவரின் ஒரு நாள் ஊதியம் குறைந்தபட்சம் ரூ.414 அல்லது ஒரு மாதத்துக்கு ரூ.10,794 என்பதாகத் தீர்மானித்திருக்கிறது. ஆனால், தமிழ்நாடு அரசு ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000 உள்ளவர்களுக்கு மட்டுமே உயிர் காக்கும் மாத்திரைகளை இலவசமாக வழங்க முடியும் என்று நிர்ணயித்திருக்கிறது. உயிர் காக்கும் இலவச மாத்திரைகளைப் பெறுவதற்கு மட்டுமல்ல; தனியார் மருத்துவமனையில் மாற்றுச் சிறுநீரகம் பொருத்திக்கொள்ளவும், அறுவை சிகிச்சை செய்துகொள்ளவும் அரசு வழங்கும் உதவித்தொகையான 4 லட்சம் ரூபாயைப் பெறுவதற்கும் குடும்ப ஆண்டு வருமானமாக நிர்ணயித்திருப்பது ரூ.72,000 மட்டுமே. மாற்றுச் சிறுநீரகம் பொருத்திக்கொள்வதற்கு மட்டுமல்ல; கல்லீரல், கணையம், இதய மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளவும் இதே வருமான விதிமுறையைத்தான் தமிழ்நாடு அரசு பின்பற்றுகிறது.

தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலச் சட்டத்தின்படி தனிநபரின் ஒரு நாள் ஊதியமாக எவ்வளவு நிர்ணயித்திருக்கிறது? ஒரு நாளுக்கு ரூ.300 என்று வைத்துக்கொண்டால்கூட, மாதத்துக்கு ரூ.9,000 வருகிறது. ஆண்டுக்கு ரூ.1,08,000. கணவனுக்கும் மனைவிக்கும் என்று சேர்த்துக்கொண்டால் ரூ.2,16,000 என்றாகிறது. இந்தக் கணக்கு சட்டத்தின்படி மட்டுமே. நிஜத்தில் கூடலாம், குறையலாம். தனிநபருக்கு ஆண்டு வருமானம் ரூ.1,08,000 என்று சொல்கிற தமிழக அரசின் சட்டமானது, உயிர் காக்கும் மருந்து பெறவும், மாற்றுச் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துகொள்ளவும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 மட்டுமே இருக்க வேண்டும் என்று சொல்வது முரண் அல்லவா? அரசே, அரசின் சட்டத்தை மீறுகிறது. உழவர் காப்பீட்டுத் திட்டம் உள்ளவர்களுக்கு மட்டுமே இச்சலுகையை வழங்குகிறது. 2019-ல் தமிழ்நாட்டில் பிச்சை எடுப்பவர்களின் ஆண்டு வருமானம் நிச்சயம் ரூ.72,000-த்தைத் தாண்டித்தான் இருக்கும். அரசே ஒரு லிட்டர் தண்ணீரை 10 ரூபாய்க்கு விற்கும்போது, ஆண்டு வருமானம் ரூ.72,000-க்குள் இருப்பவர்களால் எப்படி உயிர் வாழ முடியும்? தமிழ்நாட்டில் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 மட்டுமே உள்ள எத்தனை குடும்பங்களைத் தமிழக அரசால் இன்று காட்ட இயலும்?


தமிழ்நாட்டில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.205 ஊதியமாக வழங்கப்பட்டுவந்தது. ஏப்ரல் 2018 முதல் ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.224 ஊதியமாக வழங்குகிறது. இதன்படி, மாதத்துக்கு ரூ.6,720 என்றும், ஆண்டுக்கு ரூ.80,640 என்றும் வருகிறது. கணவனுக்கும் மனைவிக்குமாக ஆண்டு வருமானம் என்று கணக்கிட்டால் ரூ.1,61,280. ஆகவே, எந்த விதத்தில் கணக்கிட்டுப் பார்த்தாலும் தமிழக அரசு நிர்ணயித்திருக்கிற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 என்பது தவறானதாகவே இருக்கிறது. மத்திய அரசு பொதுப் பிரிவினருக்கான குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000 என்று நிர்ணயித்திருப்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். அரசின் முரணான அணுகுமுறையானது உழவர் காப்பீட்டு அடையாள அட்டை பெறவும், ஆண்டு வருமானம் ரூ.72,000 என்று சான்று பெறவும், மறைமுகமாகப் பொதுமக்களைக் குற்றச்செயல்கள் செய்யத் தூண்டுகிறது.

சிறுநீரகச் செயலிழப்பு என்பது இப்போது வேகமாகப் பரவிவரும் நோயாக இருக்கிறது. ஒரு குடும்பத்தில் யாருக்காவது சிறுநீரகம் செயலிழந்துவிட்டது என்றால், அந்தக் குடும்பத்தின் துயரைச் சொல்ல இயலாது. மாற்றுச் சிறுநீரகம் பொருத்திக்கொண்ட ஒரு நோயாளி சாகும் நாள்வரை மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும். மாதத்துக்குக் குறைந்தது ரூ.12,000-க்கும் அதிகமாக மாத்திரைக்கு மட்டுமே செலவிட வேண்டும். வசதியான குடும்பம் என்பதுகூட சிறுநீரகச் செயலிழப்பு என்ற நோயால் தெருவுக்கு வந்துவிடும், சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் மட்டும் ஒரு நாளைக்கு 150 பேர் டயாலிஸிஸ் செய்துகொள்கிறார்கள் என்றால், தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டயாலிஸிஸ் செய்துகொள்கிறவர்களின் எண்ணிக்கை குறைந்தது பத்தாயிரமாவது இருக்கும்.


தமிழக அரசு செய்ய வேண்டியவை

உயிர் காக்கும் இலவச மருந்துகள் பெறவும், தனியார் மருத்துவமனையில் மாற்றுச் சிறுநீரகம், கல்லீரல், கணையம், இதய மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளவும் அரசு நிர்ணயித்திருக்கும் ஆண்டு வருமானம் ரூ.72,000 என்பதை மாற்ற வேண்டும். குறைந்தபட்சம் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் என மாற்ற வேண்டும். தனியார் மருத்துவமனையில் மாற்றுச் சிறுநீரகம் பொருத்திக்கொள்ள அரசு வழங்கும் உதவித்தொகையான ரூ.4 லட்சம் என்பதை மாற்றி ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும். உயிர் காக்கும் இலவச மருந்துகள் பெறுவதற்குக் குடும்ப நலம் மற்றும் சுகாதாரத் துறைச் செயலரிடம் ஒரு முறை அனுமதி ஆணை பெற்றாலே போதும். பெறப்பட்ட ஆணையை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்ற நிலையை மாற்ற வேண்டும். அதாவது, ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பித்தால் போதும் என்று ஆணை வழங்க வேண்டும். மாற்றுச் சிறுநீரகம் பொருத்திக்கொண்ட நோயாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் என்ற அடையாள அட்டை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்படும் அரசின் சலுகைகள் மாற்றுச் சிறுநீரகம் பொருத்திக்கொண்ட நோயாளிகளுக்கும் கிடைக்க வேண்டும். இலவசமாக வழங்கப்படும் உயிர் காக்கும் மருந்துகளை அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மருத்துவமனைகளிலேயே வழங்க வேண்டும்

உயிர் காக்கும் மருந்துகளை வாங்குவதற்காகப் போய் உயிரை விட நேர்கிற நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து மாத்திரைகளை, உணவுப் பொருட்களை வீடு தேடிச் சென்று கொடுப்பதில் முன்னோடியாகத் திகழ்கிறது தமிழக அரசு. மாற்றுச் சிறுநீரகம் பொருத்திக்கொண்ட நோயாளிகளுக்கும் ஏன் வீடு தேடிப் போய் மாத்திரைகளை வழங்கக் கூடாது? மாற்றுச் சிறுநீரகம் பொருத்திக்கொண்ட நோயாளிகளை மட்டும் அரசு ஏன் அலைக்கழித்துக் கொல்கிறது? தமிழக அரசு நோயாளிகளைக் காக்க விரும்புகிறதா? சாகடிக்க விரும்புகிறதா?

ஏனைய மாநிலங்களை விட தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பு முன்னோடியானது. இப்படிப்பட்ட மாநிலத்தில், ஒரு மக்கள் நல அரசு என்பது மக்களுக்கு உதவும்போது நடைமுறையில் உள்ள பிரச்சினைகளையும் கணக்கில் கொள்ள வேண்டுமே தவிர, உதவி பெறுவோரைக் கழித்துக் கட்டுவதற்காக விதிமுறைகளைத் திணித்து, மக்களைத் திண்டாட வைக்கக் கூடாது. ஆகவே, மாற்றுச் சிறுநீரகம் பொருத்திக்கொண்டவர்களுக்கு எளிதில் மருந்துகள் கிடைப்பதற்கு அரசு வழிவகை செய்தால், வாழ்வா சாவா என்று போராடிக்கொண்டிருக்கும் அத்தனை உள்ளங்களும் அரசை வாழ்த்தும்.


- இமையம், ‘கோவேறு கழுதைகள்’, ‘செல்லாத பணம்’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர்,

தொடர்புக்கு: imayam.annamalai@gmail.com

NEWS TODAY 27.01.2026