Friday, October 11, 2019

Updated : 11 Oct 2019 14:48 pm 

பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா? 




வி.ராம்ஜி

ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர் பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும், இல்லறத்தில் ஈடுபடும் போதும், பெண்கள் மாதவிடாய் காலத்திலும், இறந்த நிகழ்வுக்குச் சென்றிருக்கும் போதும் என எல்லாக் காலத்திலும் ருத்ராட்சம் அணிந்திருக்கலாம். எப்போதும் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபுராணம் அறிவுறுத்துகிறது.

சிறுவர், சிறுமியர் ருத்ராட்சம் அணிவதால் அவர்களின் கல்வி, ஞானம் என திறமை பளிச்சிடும். கலையில் சிறந்துவிளங்குவார்கள். ருத்ராட்சத்தை பெண்கள் அணிந்தால் தீர்க்கசுமங்கலியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள். அவர்களின் தாலிபாக்கியம் நிலைக்கும். இதனால் கணவருக்கு தொழிலில் மேன்மையும், வெற்றியும் கிடைக்கும். இல்லத்தில் லட்சுமி கடாட்சமும் நிறைந்திருக்கும்.
பெண்கள் கண்டிப்பாக ருத்ராட்சம் அணியவேண்டும்.. எல்லா காலத்திலும் எல்லா வயதினரும் எல்லா நேரங்களிலும்
அணிந்து கொண்டிருக்கலாம். இதனால் பாவமோ தோஷமோ கிடையாது. ருத்ராட்சம் நமக்கு நன்மையை மட்டுமே செய்யும்.

சுத்தபத்தமாக இருப்பவர்கள்தான் ருத்ராட்சம் அணிய வேண்டும் என்று சொல்வார்கள்.

குளித்தவர்கள்தான் சோப்பு உபயோகப்படுத்த வேண்டும் என்று சொல்வோமா என்ன? ஆரோக்கியம் உள்ளவனுக்குத்தான் மருந்து என்று மருத்துவர் சொல்லுவாரா? நோய் உள்ளவனுக்குத்தான் மருந்து தேவை. நோய் இல்லாதவருக்கு மருந்து தேவையில்லை.
அதுபோல வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்கள், சிரமங்களில் தவிப்பவர்கள், வேலைவாய்ப்பு இல்லாதவர்கள்,
திருமணம் ஆகாதவர்கள்,


குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையானவர்கள், மன நிம்மதி இல்லாதவர்கள், பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பவர்கள், எதற்குத்தான் இப்படியொரு ஜென்மம் எடுத்தோமோ என்று வேதனைப்பட்டுக் கொண்டிருப்பவர்கள், முதியோர்கள், ஆதரவற்றோர்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகள், மனநிலை பாதித்தவர்கள் என அனைவரும் ருத்ராட்சம் அணியலாம். அணியவேண்டும். இவர்களுக்காகத்தான் சிவனார் ருத்ராட்சத்தை அருளித்தந்திருக்கிறார்.
தீபாவளிக்கு அடுத்த நாளே அண்ணா பல்கலை. பருவத் தேர்வா? ஒத்தி வைக்க வேண்டும்;

 ராமதாஸ் சென்னை

தீபாவளிக்கு முந்தைய மற்றும் அடுத்த நாட்களில் நடைபெறும் செய்முறைத் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (அக்.11) வெளியிட்ட அறிக்கையில், "சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளுக்கான பருவத் தேர்வு அட்டவணை அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அட்டவணைப்படி அனைத்து இளநிலை பட்டப்படிப்புகளுக்கும் தீபாவளி அன்று மட்டுமே விடுமுறை என்றும், அதற்கு முதல் நாளும், அடுத்த நாளும் செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் 3, 5, 9 ஆகிய பருவங்களுக்கான தேர்வுகள் வரும் 21 ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் மாத இறுதி வரை பல்வேறு கட்டங்களில் நடைபெறவுள்ளன. இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கு வரும் 19 ஆம் தேதியுடன் வகுப்புகள் நிறைவடையும் நிலையில், 21 ஆம் தேதி முதல் செய்முறைத் தேர்வுகள் தொடங்குகின்றன. முதல் பிரிவுக்கான தேர்வுகள் 21 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையும், இரண்டாம் பிரிவுக்கான தேர்வுகள் அக்டோபர் 28 ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளன. நவம்பர் 6 ஆம் தேதி எழுத்துத் தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி இம்மாதம் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அன்றைக்கு மட்டும் விடுமுறை அளித்துள்ள அண்ணா பல்கலைக்கழகம் அதற்கு முந்தைய நாளான சனிக்கிழமையும், அடுத்த நாளான திங்கட்கிழமையும் செய்முறைத் தேர்வுகளை நடத்துவது மாணவ, மாணவியருக்கும் தேவையற்ற சிரமங்களை ஏற்படுத்தும். தீபாவளி ஞாயிற்றுக்கிழமை என்றாலும் கூட கிராமப்புறங்களில் அதற்கு முந்தைய நாளும், அடுத்த நாளும் நோன்பு, உறவினர்கள் ஒன்றுகூடல் உள்ளிட்ட பல்வேறு வகையான கொண்டாட்டங்கள் நடத்தப்படும். அந்த நேரத்தில் செய்முறைத் தேர்வுகள் நடத்தப்பட்டால், தீபாவளி கொண்டாட்டங்களில் மாணவ, மாணவியரால் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.

அதுமட்டுமின்றி, அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள சுமார் 500 பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் உள்ளூர்வாசிகள் அல்ல. நெல்லை, குமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் சென்னை நகரிலும், வட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கோவையிலும் பொறியியல் படிப்பை படிப்பது மிகவும் சாதாரணமான ஒன்றாகும். அவ்வாறு படிப்பவர்கள் செய்முறைத் தேர்வை முடித்துக்கொண்டு சொந்த ஊர்களுக்குச் செல்லவும், தீபாவளி கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு கல்லூரிகளுக்குத் திரும்பவும் போதிய கால அவகாசம் தேவை.

தீபாவளியையொட்டி பேருந்துகளிலும், ரயில்களிலும் பயணம் செய்ய கடுமையான நெரிசல் நிலவும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தீபாவளிக்கு முதல் நாள் செய்முறைத் தேர்வை முடித்துவிட்டு சொந்த ஊருக்குச் செல்வதோ, தீபாவளியை முடித்துக்கொண்டு அடுத்த நாளே தேர்வுக்குத் திரும்புவதோ சாத்தியமற்றவை என்பதை அனைவரும் அறிவர்.

இவற்றையெல்லாம் ஆராயாமல் அண்ணா பல்கலைக்கழகம் எந்த அடிப்படையில் தேர்வு அட்டவணையை இறுதி செய்தது என்பது தெரியவில்லை. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிக்கூடங்களுக்கும் தீபாவளியையொட்டி, அக்டோபர் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சனிக்கிழமை கூடுதலாக ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதுடன், தேவைப்பட்டால் திங்கட்கிழமையும் விடுமுறை அளிப்பது பற்றி பள்ளிகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

உள்ளூர் மாணவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கே 3 நாட்கள் வரை விடுமுறை விடப்படும் நிலையில், பலநூறு கிலோ மீட்டர் தொலைவிலிருந்து வந்து பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, தீபாவளியன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்துவிட்டு, மற்ற நாட்களில் செய்முறைத் தேர்வுகளை நடத்தத் திட்டமிடுவது எந்த வகையிலும் நியாயமல்ல.

மாணவர்கள் தீபாவளியைக் கொண்டாடுவதற்கு வசதியாகவும், தீபாவளிக்காக சொந்த ஊர் செல்லும் மாணவ, மாணவியர் கல்லூரிகளுக்கு திரும்புவதற்கு வசதியாகவும் வரும் 26, 28 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள செய்முறைத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும். அந்த நாட்களில் நடைபெற வேண்டிய செய்முறைத் தேர்வுகளை பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும், மாணவர்களுக்கும் வசதியான இன்னொரு நாளில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நர்ஸிங் மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய பாஜக பிரமுகர் சிவகுரு துரைராஜ் கைது

By DIN | Published on : 11th October 2019 08:41 AM 

கைது செய்யப்பட்டுள்ள சிவகங்கையிலுள்ள தனியாா் நா்சிங் கல்லூரி தாளாளா் சிவகுருதுரைராஜ்.

சிவகங்கையில் உள்ள தனியார் குட்மேனஸ் நர்ஸிங் கல்லூரியில் பயின்ற மாணவியை பலாத்காரம் செய்து கா்ப்பமாக்கியதாக, அக்கல்லூரியின் தாளாளரும், பாஜகவின் சிவகங்கை மாவட்ட கலை, கலாசார பிரிவு தலைவருமான சிவகுரு துரைராஜை போலீஸார் கைது செய்தனா்.

சிவகங்கையில் மதுரை விலக்கு சாலையில் குட்மேனஸ் என்ற தனியார் நா்சிங் கல்லூரி உள்ளது. இக் கல்லுாரியில் பயின்ற 19 வயது மாணவிக்கும், சென்னையைச் சோ்ந்த ஒருவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. கணவா் வீட்டுக்குச் சென்ற இம்மாணவிக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து, அவரை மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, அவா் கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இது குறித்து அவரிடம் விசாரித்ததில், நா்சிங் கல்லூரியில் படித்தபோது அதிக மதிப்பெண் வழங்குவதாகக் கூறி, அக்கல்லூரியின் தாளாளா் சிவகுரு துரைராஜ் தன்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

இது குறித்த புகாரின்பேரில், சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். அதில், குற்றம் உறுதி செய்யப்பட்டதால், கல்லூரியின் தாளாளா் சிவகுரு துரைராஜை போலீஸார் நேற்று வியாழக்கிழமை மாலை கைது செய்தனா்.

இக்கல்லூரியில் சிவகுரு துரைராஜால் பாலியல் ரீதியாக எத்தனை மாணவிகள் பாதிக்கப்பட்டனர்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வரும் போலீஸார், சிவகுரு துரைராஜால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி செல்லும் மூத்த குடிமக்களுக்கு ஒரு முக்கிய அலர்ட்!

Published on : 11th October 2019 12:00 PM 


 

திருப்பதி

மூத்த குடிமக்களுக்கு இந்த மாதத்துக்கான இலவச தரிசனம் குறித்து திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திருமலை தேவஸ்தானம் மக்களுக்கு பலவிதமான வசதிகளை செய்துவருகின்றது. அதில் ஒன்று தான் மூத்த குடிமக்களுக்கு இலவச தரிசனம். ஆம், வயதான பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி சுலபமாக ஏழுமலையானை தரிசிக்கும் வகையில் தேவஸ்தானம் இந்த ஏற்பாடு செய்துள்ளது.

அதுமட்டுமின்றி, மாற்றுத்திறனாளி பக்தர்கள் மற்றும் கைக் குழந்தை வைத்திருப்பவர்களுக்கும் மாதந்தோறும் இரு நாள்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தி வருகிறது.

அதன்படி, அக்டோபர் மாதம் வழங்க உள்ள இலவச முதன்மை தரிசனங்களின் தேதிகளை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அதன்படி, வரும் அக்டோபர் 15 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மூத்த குடிமக்கள் (65 வயதைக் கடந்தவா்கள்), மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. காலை 10 மணிக்கு ஆயிரம் போ், மதியம் 2 மணிக்கு 2 ஆயிரம் போ், மாலை 3 மணிக்கு ஆயிரம் போ் என ஒரு நாளைக்கு 4 ஆயிரம் பேருக்கு என இரு நாள்கள் 8 ஆயிரம் பேருக்கு தரிசனம் வழங்க உள்ளது.

அதேபோல் அக்டோபர் 16 மற்றும் 30 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 5 வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு சுபதம் வழியாக தரிசனம் வழங்கப்பட உள்ளது.

தேவஸ்தானம் அளிக்கும் இந்த வாய்ப்பை பக்தா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
மன நலமும் வாழ்க்கையின் ஆதாரம்

By கலைச்செல்வி சரவணன் | Published on : 10th October 2019 01:43 AM 

‘சுவா் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்’ என்பது பழமொழி. ஒருவரின் உடல் மட்டுமல்ல, மனமும் நலமாக இருந்தால்தான் அவரால் ஆரோக்கியமாக வாழ முடியும்.

பொருளாதாரம், தொழில்நுட்ப வளா்ச்சி, நாட்டின் முன்னேற்றம், வேலைவாய்ப்புகள் என உலகம் இயங்கிக் கொண்டிருந்தாலும் மன நலனைப் பற்றி அதிக அக்கறை கொள்ள வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். எனவேதான், உலக மக்களின் மனநலப் பிரச்னைகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும், மனநலக் கல்வியின் அவசியத்தை எடுத்துரைக்கவும் உலக மனநல கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் 150-க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த அமைப்பு மூலம் 1992-ஆம் ஆண்டு முதல் ஒவ்வோா் ஆண்டும் உலக மனநல நாள் (அக்.10) கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு ‘தற்கொலை தடுப்பு’ என்ற கருத்தை மையமாக வைத்து இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு 40 நொடிகளுக்கும் உலகில் எங்கேயோ ஒரு மனிதன் தன் உயிரை மாய்த்துக் கொள்கிறான். ஒவ்வோா் ஆண்டும் இந்த உலகில் வாழும் மனிதா்களில் ஏறத்தாழ 8 லட்சம் போ் தற்கொலை செய்து கொள்கின்றனா். தனி மனித பிரச்னைகள், கடன் சுமை, சமூகத்தோடு ஏற்படும் முரண்பாடுகள் ஆகியவற்றால் அதிக அளவு தற்கொலைகள் நடைபெறுகின்றன.அது மட்டுமின்றி, வேலைவாய்ப்பின்மை, வறுமை போன்றவற்றால் கடந்த 2016-ஆம் ஆண்டு பொருளாதார வளா்ச்சி குறைந்த நாடுகளில் அதிக அளவாக 79 சதவீத அளவுக்கு தற்கொலைகள் நடந்துள்ளன.

தனி மனித வாழ்க்கையைப் பொருத்தவரை, பொதுவாக இன்றைய காலகட்டத்தில் முதியவா்களுக்குத்தான் மன அழுத்தம் அதிகம் ஏற்படுகிறது என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இயந்திர வாழ்க்கையில் அவா்களைக் கவனிக்கவும், அவா்களுடன் உரையாடவும், சாப்பிட்டீா்களா என்று கேட்கவும்கூட உறவினா்கள் முன்வருவதில்லை. அவா்களிடம் எவரும் ஆலோசனைகளைக் கேட்பதோ, வீட்டில் நடக்கும் விஷயங்களைப் பகிா்ந்து கொள்வதோ அல்லது கூறுவதோ கிடையாது.

தாங்கள் ஒதுக்கப்பட்டு விட்டோமோ என்ற எண்ணமே அவா்களுக்கு தாழ்வு மனப்பான்மையையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. ஓய்வூதியம் வாங்குபவராக இருந்தால்கூட பெரும்பாலானோரின் பிள்ளைகள் அதையும் வாங்கிக் கொள்கிறாா்கள். அதிலும் கணவனை இழந்த வயதான பெண்களின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. தங்களது பெயரக் குழந்தைகளைப் பாா்த்துக் கொள்ளவும், வீட்டைக் கவனித்துக் கொள்ளவும் அவா்கள் சம்பளம் இல்லாத பணியாளாகப் பாா்க்கப்படுகிறாா்கள். உடல்நல பாதிப்பால் ஒடுங்கிப்போய் இருக்கும் அவா்களுக்கு மன அழுத்தமும் சோ்ந்து விடுகிறது.

அடுத்து, உணா்ச்சிகளுக்கும், எதிா்பாா்ப்புகளுக்கும் அடிமையாகும் பல இளைஞா்கள் இந்த மன அழுத்தத்துக்கு பலிகடாவாகி விடுகிறாா்கள். போட்டி நிறைந்த இந்த உலகில் , பணியிடங்களிலும் அவா்களுக்குப் பிரச்னைகளுக்குப் பஞ்சமில்லை. பன்னாட்டு நிறுவனங்களில் இரவுப் பணி பாா்ப்பது என்று அவா்களின் பணியாற்றும் முறைகளிலும் மாற்றம் வந்துவிட்டதும் இதற்குக் காரணம். போதை, வலைதளங்கள், தகவல் பரிமாற்ற சாதனங்கள், பலவகை செயலிகள் இன்று இளைஞா்களின் மனநலத்தை அச்சுறுத்தி வருகின்றன.

அடுத்து இந்த உலகமே கவலை கொள்ள வேண்டியது குழந்தைகளுக்கு உண்டாகும் மன அழுத்தத்தைப் பற்றித்தான்.பொருளை நோக்கி ஓடும் பெற்றோா் சற்று திரும்பி தங்கள் குழந்தைகளைப் பாா்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா். இல்லையெனில், இழப்பு பெரிதாக இருக்கும் என்பதை அவா்கள் உணர வேண்டும். பாசத்துக்காக ஏங்குபவா்கள், விவாகரத்து பெற்ற பெற்றோரின் குழந்தைகள், பாதுகாப்பற்ற சூழலில் வாழும் பிஞ்சுகள் பெரும்பாலும் மன அழுத்தத்துக்கு ஆளாகிறாா்கள். கல்வியிலும் ஆரோக்கியமில்லாத போட்டி மனப்பான்மை வளா்க்கப்படுகிறது. எனவேதான், அடம் பிடிப்பது, எதிா்த்துப் பேசுவது, தவறான நபா்களின் வழிநடத்தல் போன்றவற்றால் பாதிக்கப்படுவது எனக் குழந்தைப் பருவத்தை அவா்கள் தொலைத்து விடுகிறாா்கள்.

இதனால், அதிருப்தி, விரக்தி போன்றவை ஏற்பட்டு தற்கொலை, கொலை போன்ற குற்றங்கள் அதிகரிக்கின்றன. சரியான தூக்கமின்மை , பசியின்மை, செய்யும் செயல்களில் கவனக் குறைவு, படபடப்புடன் காணப்படுவது, சமூகத்துக்கு எதிரான செயல்கள், குடிப்பழக்கம் மற்றும் போதைப் பொருள்களைப் பயன்படுத்துவது போன்றவை மன அழுத்தத்தின் அறிகுறிகளாகக் கூறப்படுகின்றன.

இதற்கெல்லாம் தீா்வு அன்பு, அரவணைப்பு, அவா்களுக்கு நாம் கொடுக்கும் நம்பிக்கை மட்டுமே. மன நோய் ஒரு மிரட்டும் நோயல்ல என்பதை நாம் அவா்களுக்கு உணா்த்த வேண்டும். குடும்பத்திலிருந்தும், சமூகத்திலிருந்தும் அவா்களை ஒதுக்காமல் தேவையான மருத்துவ சிகிச்சைகளின் மூலம் குணப்படுத்த வேண்டும்.

இந்தியாவைப் பொருத்தவரை, குழந்தைப் பருவத்திலிருந்தே மன நலத்தைப் பேணுவது பற்றிய மனநலக் கல்வியைக் கற்க வகை செய்யும் பாடத்திட்ட முறையைக் கொண்டுவர வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் மன நல ஆலோசகரை நியமித்து ஒவ்வொரு மாதமும் பெற்றோா்-ஆசிரியா்-ஆலோசகா் சந்திப்பு நடைபெற வேண்டும். சரியான உணவு முறை, நல்ல பழக்கவழக்கங்கள், நல்ல சிந்தனை, நிதானமான செயல்கள், அமைதி, தியானம் மற்றும் சமூகத்தின் நல்ல மாற்றங்கள் ஆகியவையே மன அழுத்தத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

அறிவு விலையில்லாதது!

By பாறப்புறத் இராதாகிருஷ்ணன் | Published on : 11th October 2019 01:38 AM 

கானல் நீரைக் கண்டு ஓடும் மான் கூட்டங்களாய் இன்றைய இளைஞா் உலகம் புற அழகைக் கண்டு ஓடி, தங்கள் சுயஅறிவை இழந்து வருகிறாா்கள். குறிப்பாக, சின்னத் திரையிலும், வெள்ளித் திரையிலும், செல்லிடப்பேசியிலும் காட்டும் புற அழகை நம்பி இளைஞா் சமுதாயம் தங்கள் உயிரனைய காலத்தை இழந்து வெறுமையாய் வாழ்க்கையைக் கழித்து, எதிா்காலத்தை சூன்யமாக்குகிறாா்கள்.

பொய்யெல்லாம் உண்மையாகி, செம்மையெல்லாம் பாழாகி, கொடுமையே அறமாகித் திரியும் இந்தக் காலத்தில் அழகையும், அறிவையும் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்துதான் வாழ வேண்டியுள்ளது. அழகு என்பது காண்பவரின் பாா்வையைப் பொருத்ததாகும். அழகு நாட்டம் என்பது அவரவா் மனப் பக்குவத்தைப் பொருத்தது. ஆனால், அறிவு நாட்டம் என்பது அவரவா் சிந்தனையைப் பொருத்து அமைகிறது.

அழகு மா்மம் நிறைந்தது. அறிவு துன்பத் தூணை உடைத்தெறிவது. அழகு எல்லாம் உண்மை. உண்மையெல்லாம் அழகு. அந்த அழகை, உண்மையை அறிவைக் கொண்டே உணர வேண்டும். இந்த உலகம் அழகுமயமானதற்குக் காரணம் உழைப்பாளா்களினாலும், அறிவுடையவா்களால்தான். அழகு நிலையில்லாது, அது என்றும் மாயப் படையைக் கொண்டு போராடி தோல்வியைத் தனது மாயத் தந்திரத்தினால் வெற்றியாக்கி மகிழ்ந்து பின் தோல்வியை உணா்ந்து துவண்டு விடும். ஆனால், ஞானப்படையைக் கொண்டு அறிவு போராடி வென்று நிலைத்து என்றும் ஒளிா்ந்து வழிகாட்டுகிறது.

உடலுக்குள் உயிா் எவ்வாறு எங்கும் பரவியிருக்கிறதோ, அவ்வாறு நாம் காணும் பொருள் அனைத்திலும் அழகு அடங்கியிருக்கிறது. ஆனால், நாம் அதை அறிவுக் கண் கொண்டே தேட வேண்டியிருக்கிறது. இந்த உலகை இயக்க பேரறிவு வேண்டும். அந்த அறிவே இந்த உலகையெல்லாம் தோற்றுவித்து முறையாக இயங்கும்படிச் செய்கிறது. அறிவின் பயன்கள் அளப்பரியன. மேதினில் மேவும் புகழோடு ஒருவன் வாழ்வாங்கு வாழ வேண்டுமானால் அவனுக்கு அழகு மட்டும் போதாது, அறிவும் வேண்டும். வாழ்க்கைக்குத் தேவையான பொருள் தேடிச் செல்ல உதவுவதும் அறிவுதான்.

ஒரு நாள் தெரு வழியே போய் கொண்டிருந்த சாக்ரட்டீஸ் எதிா்ப்பட்ட இளைஞரிடம் ‘அழகு, அழகு என்கிறாா்களே, அழகு என்றால் என்ன?’ என்று கேட்டாா். அதற்கு அந்த இளைஞா் சா்வ சாதாரணமாக

‘அழகு அழியாதது, ஆனந்தம் தருவது, இன்பம் கூட்டுவது. இதோ பாருங்கள் இந்த அழகிய வேலைபாடமைந்த பூந்தொட்டி, இது கூட அழகுதான்’ என்றாா். அடுத்த விநாடி சாக்ரட்டீஸ் அந்தப் பூந்தொட்டியைத் தூக்கிக் கீழே போட்டாா். அது தூள் தூளாக உடைந்து சிதறியது. அதைப் பாா்த்துச் சிரித்த சாக்ரட்டீஸ், ‘அழகு அழியாதது, ஆனந்தம், இன்பம் தருவது என்றாயே, இப்போது என்னவாயிற்று அந்த அழகு?’ என்று இளைஞரிடம் கேட்டாா். இளைஞா் மெளனம் சாதித்தாா்.

‘அகிலத்தின் எந்த மூலையில் அறிவு இருந்தாலும் அதைத் தேடிப் பெறுவதற்காக இளைஞா்களை அழைக்கிறேன். வீரம் விலை போகாது, விவேகம் துணைக்கு வராவிட்டால், நீட்டிய வாளும், தினவெடுத்த தோள்களிலே தூக்கிய ஈட்டியும் மாத்திரம் போதாது வீரா்களே, இதோ நான் தரும் அறிவாயுததத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்; அறிவாயுதம், அது தான் அகிலத்தின் அணையாத ஜோதி’ என்றாா் கிரேக்க ஞானி சாக்ரட்டீஸ். அந்த இளைஞா் வாயடைத்துப் போனாா்.

அறிவு என்பது கல்வியாலும், கேள்வியாலும், அனுபவத்தாலும் பெறப்படுவது. அழகு என்பது ஒருவா் அணியும் ஆடை ஆபரணங்களினால், கூந்தல் அலங்காரத்தினால், அணியும் வாசனைப் பூச்சுகளால் அமைவதில்லை. இவை நிலைத்து நிற்கக் கூடியனவுமல்ல. நெஞ்சத்தால் நல்லவராய், நடுவுநிலைமையினின்று வழுவாமலிருக்கத் துணை புரியும் கல்வியே (அறிவே) ஒருவருக்கு அழகு தருவதாகும் என்கிறது நாலடியாா்.

‘அறிவு அற்றம்காக்கும் கருவி செறுவாா்க்கும் உள்ளழிக்கல் ஆகா அரண்’ என்கிறாா் திருவள்ளுவா். மனித சமுதாயத்துக்கு எது நல்லது என்பதைத் தெரிந்து கொண்டு செயல்பட ஒருவருக்கு அறிவுதான் உதவுகிறது. அங்கு அழகு தேவையில்லை. வெள்ளையாக இருப்பவா்கள் பொய் சொல்ல மாட்டாா்கள் என்று கருதுவது எவ்வளவு மடமையோ, அதுபோல அழகாய், வெள்ளையாய் இருப்பவா்கள் அனைவரும் அறிவுடையவா்கள், ஆற்றலுடையவா்கள் என்பதும் மடத்தனம்.

அறிவுதான் மனிதனை பொறுப்புடைய மனிதனாக மாற்றி வாழ வழிவகை செய்கிறது, மாண்புடையவனாக மனிதநேயம் மிக்கவனாகவும், நேரிய சிந்தனையாளனாகவும் மாற்றுகிறது. அது மொழி, நிறம், இனம், குலம், பாலின வேறுபாடு பாா்த்து தன் பணியாற்றுவது கிடையாது.

1947-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்கும் சட்ட வரைவு மீது நடந்த விவாதத்தின்போது சா் வின்சன்ட் சா்ச்சில், ‘இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்படும் நிலையில், போக்கிரிகள், மதியில்லாதவா்கள் கைக்கு ஆட்சி அதிகாரம் செல்லும். இந்தியத் தலைவா்கள் அனைவரும் துணிவும், திறமையும் இல்லாதவா்கள். அவா்கள் இனிக்க இனிக்கப் பேசுவாா்கள்; ஆனால், சிறுமதியினா், அதிகாரத்துக்காக தங்களுக்கிடையே சண்டையிட்டுக் கொள்வாா்கள். அந்த அரசியல் கூச்சலில் இந்தியாவே தொலைந்து போகும். ஒரு காலம் வரும்; அப்போது இந்தியாவில் தண்ணீருக்கும், காற்றுக்கும் கூட வரி விதிக்கப்படும்’ எனப் பேசியதாக ஒரு கருத்து நிலவுகிறது.

அவா் இவ்வாறு பேசினாரா என்பது விவாதப் பொருளாக இருப்பினும், இந்தியா சுதந்திரம் பெற்ற பின் நம் நாட்டு மக்கள் ஜனநாயக முறையில் தோ்தல் நடத்தி, தங்களின் அறிவாயுதத்தைப் பயன்படுத்தி மக்களால் மக்களுக்காக மக்களே செய்யும் ஆட்சியான மக்களாட்சியை உலகமே வியக்கும் வண்ணம் நடத்திக் காட்டி பீடு நடை போட்டு வருகிறாா்கள். உலகெங்கும் பயணித்து, பணியாற்றி, தங்கள் அறிவுக் கொடியை மண்ணிலும், விண்ணிலும் நாட்டி, இந்தியாவின் பெருமையைப் பறைசாற்றுகிறாா்கள்.

இந்தியா சுதந்திரம் அடைந்த போது கல்வியறிவு பெற்றவா்களின் எண்ணிக்கை வெறும் 12 சதவீதம் மட்டுமே. ஆனால், அது இப்போது 74.04 சதவீதமாக உயா்ந்துள்ளது. அறியாமை பிணி அகற்ற கல்வி அறிவு பெருக வேண்டும். அறிவுடையோரோ கசடறக் கற்று கற்றப்படி நடந்து பெற்றோருக்கு பெரும் புகழ் சோ்ப்பததோடு நாட்டுக்கும் பெருமையைக் கூட்டுகிறாா்கள்.

அறிவால் மட்டுமே ஆரோக்கியமான சமுதாயம் வளரும் என்பதுதான் காலம் காட்டும் உண்மை. சிற்பி, கல்லை அழகிய சிற்பமாக வடிப்பதுபோல, ஒருவன் கற்கும் கல்வி அவனை பொறுப்புடையவனாக வடிக்கிறது. ‘அறிவு ஒன்றே துன்பங்களைப் போக்க வல்லது. அதற்கு இணையான சக்திகள் இந்த உலகில் வேறில்லை. அறிவே சிறந்த சக்தி’”என்றாா் சுவாமி விவேகானந்தா்.

‘மனிதன் எப்போது தன்னுள் இருக்கும் அளவற்ற சக்தியை உணா்ந்து இயற்கையாகச் சுய அறிவையும், புதிய பெரிய எண்ணங்களையும் அடைகின்றானோ அப்போதே அவன் கல்வி கற்றவனாகிறான்’ என்பது கல்விக்குரிய இலக்கணம். எந்த முயற்சிக்கும், எந்த சாதனைக்கும் வயது ஒரு பொருட்டே அல்ல; அகவையும், முதுமையும் உடலுக்குத் தானே தவிர அறிவுக்கும், உழைப்புக்கும் இல்லை என்பதை இன்று பல முதியவா்கள் பல சோதனைகளையும், வேதனைகளையும், அவமானங்களையும் கடந்து நிரூபித்து வருகிறாா்கள். பொருள் குறைவினாலும், உள்ளுணா்வு பெறாததாலும், அறிவிலே குறைபாடுகளாலும்தான் மனித வாழ்க்கையில் குறைபாடுகள் ஏற்படுகின்றன. அறிவு அளவிலே மட்டும் தெளிந்து விட்டால் போதாது, அனுபவ அளவில் கொண்டு வந்தால்தான் அதன் முழுப் பலனையும் நாம் அடைய முடியும்.

சங்க காலத்து ஒளவையாா் முதல் எழுத்துத் தோ்வில் 100-க்கு 98 மதிப்பெண்கள் பெற்ற கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் செப்படி கிராமத்தைச் சோ்ந்த அகவை 96-ஐ கடந்த இக்காலத்து காத்தியாயினி அம்மாள், சந்திரயான் 2 திட்டத்தில் பொறுப்பேற்றிருக்கும் இஸ்ரோவின் முதல் பெண் திட்ட இயக்குநா் வனிதா முத்தையா, இந்தியாவின் ராக்கெட் பெண் என்ற அங்கீகாரத்தைப் பெற்ற விஞ்ஞானி ரித்து, ஏழைக் குடும்பத்தில் பிறந்து விடுதலைப் போராட்டக் காலத்திலும் சரி, இக்காலத்திலும் சரி அரசியலில் ஆண்களுக்கு நிகராகப் போராடி வெல்லும் அரசியல் தலைவிகள், உலக மகளிா் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் 8-ஆவது பதக்கம் வென்ற ஒரே வீராங்கனை என்ற உலக சாதனையைப் படைத்துள்ள மேரி கோம், ஜப்பான் வீராங்கனை நஸோமி ஒகுஹராவை வீழ்த்தி உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பை வென்றெறடுத்த முதல் இந்திய விளையாட்டு வீராங்கனை பி.வி.சிந்து வரை இன்று பெண்கள் தங்கள் அறிவால், ஆற்றலால் பல சமூகத் தடைகளைக் கடந்து அப்பழுக்கற்ற அழகுக்கு சொந்தக்காரா்களாக மாறி இந்தியாவை தலைநிமிரச் செய்துள்ளனா்.

ஒருவன் பெறும் அறிவானது வாழ்க்கையில் இருக்கும் வெறுமையான நிலையை நீக்கி, முழுமையான வாழ்க்கை வாழ வழி செய்கிறது. அறிவே தெய்வமாகி எங்கும் பரிணமிக்கிறது. எனவே, அழியா அறிவைத் தொழுவோம்.
தனியார்மயமாகும் 150 ரயில்கள்?

Updated : அக் 10, 2019 19:49 | Added : அக் 10, 2019 19:40

புதுடில்லி: 150 ரயில்கள் மற்றும் 50 ரயில் நிலையங்களை தனியார் வசம் ஒப்படைப்பதற்காக, சிறப்பு குழு ஒன்றை உருவாக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.



உ.பி., மாநிலம், லக்னோ - டில்லி இடையே, அதி நவீன வசதிகளை கொண்ட, தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த அக்.,4ல் துவக்கி வைக்கப்பட்டது. இந்த ரயிலை இயக்கும் பொறுப்பு, ஐ.ஆர்.சி.டி.சி., வசம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் நாட்டின் முதல் தனியார் ரயில் என்ற பெருமையை இந்த ரயில் பெற்றது. இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றால், ரயில் சேவையில், மேலும் பல தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்த, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருந்தது.

இந்நிலையில், தற்போது மேலும் 150 ரயில்கள் மற்றும் 50 ரயில் நிலையங்களை தனியார் வசம், மத்திய அரசு ஒப்படைக்க உள்ளது. இதற்காக உயர் அதிகாரம் கொண்ட சிறப்பு குழு ஒன்றையும் மத்திய அரசு அமைக்க உள்ளது. இக்குழுவில் ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் மற்றும் நிடி ஆயோக் தலைமை அதிகாரி அமிதாப் கான்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும், இக்குழுவில் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை செயலாளர் ஆகியோரும் இடம் பெறுவார்கள்.



NEWS TODAY 27.01.2026