Wednesday, October 30, 2019
Caste Of A Person Cannot Be Changed By Virtue of Marriage:Madras HC [Read Judgment]
Caste Of A Person Cannot Be Changed By Virtue of Marriage:Madras HC [Read Judgment]: The Madras High Court has reiterated that caste of a person is determined on the basis of birth and it cannot be changed by virtue of marriage. It said, '…deprivations, indignities and humiliates...
Caste Of A Person Cannot Be Changed By Virtue of Marriage:Madras HC [Read Judgment]
Caste Of A Person Cannot Be Changed By Virtue of Marriage:Madras HC [Read Judgment]: The Madras High Court has reiterated that caste of a person is determined on the basis of birth and it cannot be changed by virtue of marriage. It said, '…deprivations, indignities and humiliates...
University Bound To Provide Answer Sheets Under RTI: Madras HC
University Bound To Provide Answer Sheets Under RTI: Madras HC: The Madras High Court on Monday held that evaluated answer sheets are `information' under the Right to Information Act, 2005 and Universities are bound to provide them to the Respondent-students. In...
Compassionate Appointment Cannot Be Claimed As A Matter Of Right: Madras HC [Read Order]
Compassionate Appointment Cannot Be Claimed As A Matter Of Right: Madras HC [Read Order]: A compassionate appointment scheme is a non-statutory scheme and is in the form of a concession and it cannot be claimed as a matter of right by the claimant to be enforced through a writ
Is It Mandatory To Stand Up During The Playing Of National Anthem In Movie Halls?
Is It Mandatory To Stand Up During The Playing Of National Anthem In Movie Halls?: A viral video trending in social media shows a group of persons in a movie hall in Bengaluru shouting at few persons who chose to remain seated during the playing of the national anthem before the...
முகவா்கள் மூலம் முன்பதிவு செய்யப்படும் பயணச்சீட்டுகளை ரத்து செய்ய புதிய முறை
By DIN | Published on : 29th October 2019 11:47 PM
முகவா்கள் மூலம் முன்பதிவு செய்யப்படும் ரயில் பயணச்சீட்டுகளை ஒரு முறை கடவுச்சொல் (ஓடிபி) மூலம் மட்டுமே ரத்து செய்ய முடியும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடா்பாக, இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ஐஆா்சிடிசி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
முகவா்கள் மூலம் பதிவு செய்யப்படும் பயணச்சீட்டுகளை ரத்து செய்வதற்கும், அதற்கான கட்டணத்தைத் திரும்பப் பெறவும் ஒரு முறை கடவுச்சொல்லை மட்டுமே இனி பயன்படுத்த வேண்டும். ஐஆா்சிடிசி-யால் அங்கீகரிக்கப்பட்ட முகவா்கள் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டை பயனாளா் ரத்து செய்யும்போது, பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசி எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் அனுப்பப்படும். அந்தக் கடவுச்சொல்லை முகவரிடம் பயனாளா் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகே பயணச்சீட்டு ரத்து செய்யப்படும்.
அத்துடன் பயணச்சீட்டை ரத்து செய்வதால் திரும்பக் கிடைக்கும் தொகை குறித்த தகவல்களும் பயனாளா்களுக்கு குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) மூலம் தெரிவிக்கப்படும். இது ரயில் பயணச்சீட்டுகளை முகவா்கள் மூலம் முன்பதிவு செய்யும் நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதோடு, பயனாளா்களுக்கு சாதகமாகவும் அமையும்.
இந்தப் புதிய நடைமுறை மூலம் ரத்து செய்யப்பட்ட பயணச்சீட்டுகளுக்குக் கிடைக்கும் தொகையை பயனாளா்கள் அறிந்துகொள்ள முடியும்; முறைகேட்டில் ஈடுபடும் முகவா்களை எளிதில் கண்டறிய முடியும். அங்கீகரிக்கப்பட்ட முகவா்கள் மூலம் இணையவழியில் முன்பதிவு செய்யப்படும் பயணச்சீட்டுகளுக்கே இந்தப் புதிய நடைமுறை பொருந்தும் என்று அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ரயில்வே அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘‘நாள்தோறும் முன்பதிவு செய்யப்படும் பயணச்சீட்டுகளில் 27 சதவீதம் முகவா்கள் மூலமே முன்பதிவு செய்யப்படுகின்றன. அவற்றில் 20 சதவீத பயணச்சீட்டுகள் ரத்து செய்யப்படுகின்றன. அந்தப் பயணச்சீட்டுகளை ரத்து செய்த பிறகு திரும்பச் செலுத்தப்படும் தொகையை பயனாளா்களிடம் முகவா்கள் முறையாக வழங்குவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கிலேயே, இந்தப் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது’’ என்றாா்.
நீட் ஆள்மாறாட்டம்: 2 மாணவர்களுக்கு ஜாமீன்; தந்தைகளின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி- உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை 30.10.2019
நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் 2 மாணவர்களுக்கு ஜாமீன் வழங்கியும் அவர்கள் தந்தைகளின் ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்தும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பிரவீன், அவரது தந்தை சரவணன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில், "2016-ல் 12 ஆம் வகுப்பு முடித்த நிலையில், சென்னை பிரீஸ்ட் கல்லூரியில் மருத்துவக் கல்வியில் சேர்ந்தேன். பின்னர் மருத்துவக்கல்வி நடத்த பிரீஸ்ட் கல்லூரிக்கு அங்கீகாரம் இல்லை என்பதால் நீட் தேர்வு எழுதி 130 மதிப்பெண்கள் பெற்றேன்.
அரசு மருத்துவக்கல்லூரியில் சேர இந்த மதிப்பெண்கள் போதுமானவை என்றாலும், விருப்பத்தின் பேரில் தனியார் கல்லூரி ஒன்றில் 22 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை பதிவுக்கட்டணமாக செலுத்தி பயின்று வருகிறேன். இந்த நிலையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக எவ்விதமான ஆதாரமும் இன்றி காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை ஏற்கெனவே கீழமை நீதிமன்றங்கள் ரத்து செய்துவிட்டன. ஆகவே இந்த வழக்கில் இருவருக்கும் ஜாமீன் வழங்க உத்தரவிட வேண்டும்," என பிரவீன் கூறியிருந்தார்.
இதே போல் சென்னையைச் சேர்ந்த டேவிஸ், அவரது மகன் ராகுல் டேவிஸ் ஆகியோரும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில், "நீட் தேர்வில் 125 மதிப்பெண்கள் பெற்ற நிலையில், எனக்குப் பதிலாக வேறு ஒருவர் லக்னோவில் தேர்வெழுதியதாகவும் அதனடிப்படையில் மருத்துவக் கல்வியில் சேர்ந்ததாகவும் கூறி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நீட் ஆள்மாறாட்டம் தொடர்பான புரோக்கர் வேதாச்சலம், ரசித் பாய் தொடர்பாக விசாரித்து அவர்களைக் கைது செய்யாமல், எங்களைக் கைது செய்துள்ளனர். இந்த முறைகேட்டுக்கும் எங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஆகவே, எங்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்," என ராகுல் டேவிஸ் கூறியிருந்தார்.
இந்த வழக்குகளை இன்று (அக்.30) விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "இந்த வழக்கில் மாணவர்கள் முக்கியக் குற்றவாளிகள் அல்ல. அவர்களின் தந்தையரின் தூண்டுதலின் பேரிலேயே தவறு நடைபெற்றுள்ளது. ஆகவே, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கப்படுகிறது" என உத்தரவிட்டார்.
ஆனால், வழக்கின் விசாரணையை கருத்தில் கொண்டு தந்தையர்களின் ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
மதுரை 30.10.2019
நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் 2 மாணவர்களுக்கு ஜாமீன் வழங்கியும் அவர்கள் தந்தைகளின் ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்தும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பிரவீன், அவரது தந்தை சரவணன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில், "2016-ல் 12 ஆம் வகுப்பு முடித்த நிலையில், சென்னை பிரீஸ்ட் கல்லூரியில் மருத்துவக் கல்வியில் சேர்ந்தேன். பின்னர் மருத்துவக்கல்வி நடத்த பிரீஸ்ட் கல்லூரிக்கு அங்கீகாரம் இல்லை என்பதால் நீட் தேர்வு எழுதி 130 மதிப்பெண்கள் பெற்றேன்.
அரசு மருத்துவக்கல்லூரியில் சேர இந்த மதிப்பெண்கள் போதுமானவை என்றாலும், விருப்பத்தின் பேரில் தனியார் கல்லூரி ஒன்றில் 22 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை பதிவுக்கட்டணமாக செலுத்தி பயின்று வருகிறேன். இந்த நிலையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக எவ்விதமான ஆதாரமும் இன்றி காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை ஏற்கெனவே கீழமை நீதிமன்றங்கள் ரத்து செய்துவிட்டன. ஆகவே இந்த வழக்கில் இருவருக்கும் ஜாமீன் வழங்க உத்தரவிட வேண்டும்," என பிரவீன் கூறியிருந்தார்.
இதே போல் சென்னையைச் சேர்ந்த டேவிஸ், அவரது மகன் ராகுல் டேவிஸ் ஆகியோரும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில், "நீட் தேர்வில் 125 மதிப்பெண்கள் பெற்ற நிலையில், எனக்குப் பதிலாக வேறு ஒருவர் லக்னோவில் தேர்வெழுதியதாகவும் அதனடிப்படையில் மருத்துவக் கல்வியில் சேர்ந்ததாகவும் கூறி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நீட் ஆள்மாறாட்டம் தொடர்பான புரோக்கர் வேதாச்சலம், ரசித் பாய் தொடர்பாக விசாரித்து அவர்களைக் கைது செய்யாமல், எங்களைக் கைது செய்துள்ளனர். இந்த முறைகேட்டுக்கும் எங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஆகவே, எங்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்," என ராகுல் டேவிஸ் கூறியிருந்தார்.
இந்த வழக்குகளை இன்று (அக்.30) விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "இந்த வழக்கில் மாணவர்கள் முக்கியக் குற்றவாளிகள் அல்ல. அவர்களின் தந்தையரின் தூண்டுதலின் பேரிலேயே தவறு நடைபெற்றுள்ளது. ஆகவே, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கப்படுகிறது" என உத்தரவிட்டார்.
ஆனால், வழக்கின் விசாரணையை கருத்தில் கொண்டு தந்தையர்களின் ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
Subscribe to:
Comments (Atom)
-
கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டில் கொடிக்கும் சின்னத்துக்கும் சிதறும் அதிமுக By -திருமலை சோமு | ...
-
முடியும் என்றால் முடியும்! சென்னை மாநகரை தராசின் ஒரு தட்டிலும் எஞ்சிய மற்ற தமிழ்நாட்டுப் பகுதிகளை இன்னொரு தட்டிலும் வைத்தால் சமமாக இருக்கும்...