Monday, November 4, 2019

Anna Univ can follow 69% reservation even as Institute of Eminence: Centre

Ragu.Raman @timesgroup.com

Chennai:4.11.2019

Clearing a major road block in Anna University getting the Institute of Eminence (IoE) status, the Union HRD ministry has clarified that there won’t be any change in the reservation policy. This would mean the premier engineering university can follow 69% reservation in admissions even after getting the IoE tag. After a notification issued by the Centre said public institutions with IoE status would be allowed to follow 49.5% reservation, the state sought a clarification from the Centre whether the university would be allowed to continue with its 69% admission quota.

The MHRD letter, received last week, came in response to the state government’s query.

“With this letter, all doubts of the state government with regards to IoE status to Anna University have been clarified. The state government has to give its letter of commitment to provide the grant required under IoE,” a source from Anna University said.

The university has submitted all the financial requirement to the government. As per the proposal, the university would need ₹2,570 crore for the next five years to attain the Institute of Eminence status.

“It is high time the government gave its commitment to move forward. If we don’t move, we will fall behind,” the source added.

The higher education department made a presentation to chief minister Edappadi K Palaniswami six weeks ago about the status.

When asked about whether the largest technical university in the country can affiliate engineering colleges after getting the IoE status, a university official said, “MHRD doesn’t speak about the affiliation under IoE. If the university and government want, they can continue with it.”

“Though an IoE institute would receive up to ₹1,000 crore funding and greater autonomy, it would remain a state university,” the official added.

“Reservation is the major political issue. If this is sorted out, then the government should not hesitate to approve it. All other issues can be sorted out,” said E Balagurusamy, former vice-chancellor, Anna University.

“Any further delay would cause loss to Tamil Nadu and the university. The coveted position of IoE should not be lost,” he said.




Reservation is the major political issue. If this is sorted out, then the government should not hesitate to approve it. All other issues can be sorted out

E BALAGURUSAMY

former vice-chancellor, Anna University
Boarding from Tambaram? Keep two hours in hand

TIMES NEWS NETWORK  4.11.2019

With railways considering moving more trains to Tambaram railway station to decongest Egmore, people who live in the northern and western suburbs may have start from home several hours before departure time and brave traffic to reach the station in the far south.

It will take more than an hour for passengers to reach Tambaram from Ambattur or Ennore in peak-hour traffic cutting across core areas of the city to reach the southern suburb 37km away.

Southern Railways is already operating Chennai-Tirunelveli Nellai Express and Chennai-Madurai Pothigai Express from Tambaram. And passengers from the northern and western ends need almost two hours to reach the station.

S Murugaiyyan, general secretary of Rail Passengers Welfare Association of Thiruninravur, said, “If railways is looking at shifting more trains to Tambaram, it should increase the number of direct suburban trains from Tiruvallur via Beach to Tambaram. This will help passengers to reach the station.”

Railways wants to start trains to eastern destinations and northern destinations from Tambaram. The authorities have tried out special trains from Central via Beach and Egmore to the southern towns, and also from Egmore via Beach to the northern destinations. Though this may inconvenience passengers and lead to some resistance if made regular, this is the only way to decongest major stations and start more trains from Chennai as expansion is not possible at Egmore, said a railway official. “Many major stations in other cities have a second smaller station identified to decongest the main stations,” he said.

Sunday, November 3, 2019

`பெற்றோரின் ஊக்கம்; ஓய்வுபெறும் நாளிலும் ரூ.50,000 நிதி!' - நெகிழவைத்த அரசுப் பள்ளி ஆசிரியை

மணிமாறன்.இரா

டாக்டர், இன்ஜினீயர், வக்கீல் என என்னிடம் படித்த மாணவர்கள் பலரும் தற்போது நல்ல நிலையில் இருக்காங்க. இன்னும் பலரை உருவாக்கணும்னுதான் எனக்கு ஆசை. அதுக்குல்லயும் ஒய்வு வந்திருச்சு. ஆனாலும், தொடர்ந்து என்னால் முடிஞ்ச உதவிகளை மாணவர்களுக்குச் செய்யணும்."


ஆசிரியை ராஜசுலோச்சனா

திருவரங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் ராஜசுலோச்சனா. இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பணி ஓய்வு பெற்றார். பள்ளி சார்பில், பாராட்டு விழா நடத்தப்பட்டது. மாணவர்கள் மீது அதீத அன்பு காட்டியதாலோ என்னவோ கனத்த இதயத்தோடு மாணவர்கள் பள்ளியைவிட்டு அனுப்பி வைத்ததாகக் கூறுகின்றனர். பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். அப்போது, மாணவர்கள் பள்ளியில் கூடுதல் நேரங்கள் செலவிடுவார்கள். அந்தச் சமயத்தில் மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காகவும் புத்துணர்ச்சிக்காகவும் மாலையில் டீ, பிஸ்கட், பயறு வகைகள் உள்ளிட்ட சிற்றுண்டியைத் தனது சொந்த செலவில் வாங்கிக் கொடுக்கிறார்.


ஆசிரியை ராஜசுலோச்சனா

படிக்க முடியவில்லை என்று கூறும் மாணவர்கள் மீது தனிக்கவனம் எடுத்துக் கொள்வது. மாணவர்களிடம் இருக்கும் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வரும் பணியைச் செய்வது என ஆசிரியையின் பணி ஏராளம் என்கின்றனர் பள்ளி சக ஆசிரியர்கள். இந்த நிலையில்தான், பள்ளியிலிருந்து ஓய்வு பெறும் நாளில், நம் பள்ளி மாணவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணிய ராஜசுலோச்சனா, பள்ளியின் புரவலர் நிதியாகத் தன் சொந்தப்பணம் ரூ.50,000-த்தைப் பள்ளி தலைமையாசிரியர் முருகையனிடம் கொடுத்து அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தார்.

இதுபற்றி ஆசிரியர் ராஜசுலோச்சனா கூறும்போது, ``அப்படி நான் ஒன்றும் பெரிய சாதனை எல்லாம் செய்துவிடவில்லை. ஒரு ஆசிரியையாக என் மாணவர்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதைத்தான் செய்துள்ளேன். புதுக்கோட்டை பக்கத்துல வெட்டன்விடுதிதான் எனக்குச் சொந்த ஊரு. எல்லாரையும் போலவே ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் என்னை எங்க அம்மா, அப்பா படிக்க வச்சாங்க. பள்ளியில் மாணவர்கள் சிலர் சரியாகப் படிக்க மாட்டாங்க, அவர்களைத் தனியாக அழைத்துப் பேசினால், தன்னோட குடும்பச் சூழல் பத்தி ரொம்பவே சோகமாகச் சொல்வாங்க. அவங்க வீட்டுல ஒருத்தியா அதக்கேட்டுகிட்டு, அவங்க பெற்றோர்களையும் அழைத்து என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன். மாணவர்கள், எல்லாத்தையும் நான் பார்த்துக்குவேன்னு சொல்லிட்டு படிப்பில கவனம் செலுத்திடுவாங்க. வீட்டில் குடும்ப உறுப்பினர்களுடன் இருப்பதைப் போலத்தான் பள்ளியில் இருக்கும் நேரத்தையும் கடப்பேன். ஆரம்பத்தில் மாஞ்சன்விடுதி பள்ளியில் 17 வருடங்கள் பணி செய்தேன்.


ஆசிரியை ராஜசுலோச்சனா

நான் போகும்போது அங்கு சமூக அறிவியலுக்கு ஆசிரியரே இல்லை. எனக்கு அந்தப் பொறுப்பு கிடைத்தது. முதல் வருடத்திலேயே சமூக அறிவியலில் சென்டம் ரிசல்ட் கொண்டு வந்தேன். தலைமையாசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும் பாராட்டினர். அந்த ஊக்கம் இன்னும் நிறைய பணிகளைச் செய்யத் தூண்டியது. ஒவ்வொரு மாணவரிடமும் பல்வேறு திறமைகள் இருக்கும். கலை நிகழ்ச்சிகளில்தான் அவை தெரியும். அதனால், கலை நிகழ்ச்சிகளைப் பொறுப்பெடுத்து செய்தேன். பல சூழலில் தலைமையாசிரியர்களும் சக ஆசிரியர்களும் ஒத்துழைப்பு கொடுத்திருக்காங்க. டாக்டர், இன்ஜினீயர், வக்கீல் என என்னிடம் படித்த மாணவர்கள் பலரும் தற்போது நல்ல நிலையில் இருக்காங்க. இன்னும் பலரை உருவாக்கணும்னுதான் எனக்கு ஆசை. அதுக்குல்லயும் ஓய்வு வந்திருச்சு. ஆனாலும், தொடர்ந்து என்னால் முடிஞ்ச உதவிகளை மாணவர்களுக்குச் செய்யணும்" என்கிறார்.
வந்துவிட்டது Fingerprint lock வசதி... சமீபகால சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த வாட்ஸ்அப்!

செ.சதீஸ் குமார்

செயலியைவிட்டு வெளிவந்த மறுகணமே லாக் ஆகும்படியும் 1 நிமிடம், 30 நிமிடம் கழித்து லாக் ஆகும்படியும் விருப்பத் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

வாட்ஸ்அப்

ஸ்மார்ட்போன், உலகத்தையே உள்ளங்கையில் அடக்கிவிட்டது என்றால், உரையாடல்களை விரல் நுனியில் சுருக்கிவிட்டது வாட்ஸ் அப். உலகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்களைக் குறிவைத்து அவர்களின் வாட்ஸ்அப் கணக்கை இஸ்ரேல் நிறுவனம் ஊடுருவியதை வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் உறுதி செய்தது. டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் (Pavel Durov)கூட தன் பதிவு ஒன்றில்,``10 வருட வரலாற்றில் ஒருநாள்கூட வாட்ஸ்அப் பாதுகாப்பானதாக இருந்தது கிடையாது" என்று கூறியுள்ளார்.

WhatsApp

இந்நிலையில் ஆண்ட்ராய்டு பிரியர்கள் பலரும் விரல்மேல் போன் வைத்து காத்திருந்த அப்டேட், வாட்ஸ்அப் தரப்பிலிருந்து கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. ஐபோன் பயனாளர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த கைரேகைப் பாதுகாப்பை (Fingerprint lock) ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் அறிமுகம் செய்துள்ளது வாட்ஸ்அப். இதன் மூலம் முன்றாம் தரப்பு பாதுகாப்புச் செயலிகளைப் பயன்படுத்துவதும் அதனால் தகவல் பறிபோகும் ஆபத்தும் குறையும் என்று வாட்ஸ்அப் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்தச் சேவையைப் பயன்படுத்த புதிய வாட்ஸ்அப் பதிவை அப்டேட் செய்தல் அவசியம். அதைத் தொடர்ந்து Settings --> Account --> Privacy --> Fingerprint Lock --> Unlock with fingerprint என்ற வழிமுறைகளை பின்பற்றினால் நாம் மொபைலில் பதிவு செய்துள்ள கைரேகையுடன் வாட்ஸ்அப் செயலி ஒன்றிணைந்து விடும். செயலியைவிட்டு வெளிவந்த மறுகணமே லாக் ஆகும்படியும் 1 நிமிடம், 30 நிமிடம் கழித்து லாக் ஆகும்படியும் விருப்பத் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

WhatsApp Fingerprint Unlock

எனினும் வாட்ஸ்அப் வாய்ஸ் அழைப்புகளையும் வீடியோ அழைப்புகளையும் பூட்டிய நிலையிலேயே பேசலாம். ஐபோனின் புதிய அப்டேட்களில் ஃபேஸ் ஐடி (Face ID) கொடுக்கப்பட்டதை அடுத்து, ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு இந்தப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு டார்க் மோட் (Dark mode) சேவையும் புதிய அப்டேட்டில் கொடுத்ததோடு, கூடிய விரைவில் அனைவருக்கும் இந்தச் சேவை நீட்டிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். இது வாட்ஸ்அப் குறித்த சமீபகால சர்ச்சைக்கு சிறியதொரு முற்றுப்புள்ளியாக இருக்கலாம்.
குடிநீர் இணைப்பு வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்ட பெண் அதிகாரி கைது : பொறிவைத்து பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை

சென்னை

அபார்ட்மெண்டுக்கு குடிநீர் இணைப்புத்தர ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்ட குடிநீர் வழங்கல் வாரிய கண்காணிப்பு பொறியாளர் பெண் அதிகாரி குறித்து சம்பந்தப்பட்டவர் அளித்த புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் பொறிவைத்து கையுங்களவுமாக பிடித்தனர்.

சென்னை நொளம்பூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள 94 வீடுகளுக்கு கழிவுநீர் , குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக அடுக்குமாடி குடியிருப்பின் சங்க நிர்வாகிகள் முறைப்படி ஆவணங்களை அளித்து இணைப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் ஐந்து மாதங்களாகியும் இணைப்பு வழங்காமல், அதுகுறித்து கேட்டும் பதிலளிக்காமல் இருந்துள்ளனர்.

இதையடுத்து சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பெருநகர சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட சங்கத்தினர் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அப்போது அலுவலகத்திலிருந்தவர்கள் உங்கள் ஆவணங்கள் எல்லாம் சரியாக உள்ளது, ஆனால் கண்காணிப்பு பொறியாளர் விஜயகுமாரி மேடம் உங்கள் கோப்புகளை நிறுத்தி வைத்துள்ளார் என்று கூறியுள்ளனர்.

என்ன காரணம் கோப்பை நிறுத்திவைத்துள்ளார் என்று கேட்டபோது முக்கியமான பேப்பர் இல்லை என்று மேடம் சொன்னார்கள் என்று கூறியுள்ளனர். என்ன பேப்பர் என்று கேட்டபோது மேடத்திடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று அவரிடம் அனுப்பியுள்ளனர்.

குடியிருப்பு சங்கத்தினர் கண்காணிப்பு பொறியாளரான விஜயகுமாரியிடம் போய் மேடம் ஒரு பேப்பர் குறையுது என்று சொன்னீர்களாம் எல்லா பேப்பரையும் சரியாக வைத்திருக்கிறோம் என்று கூறியுள்ளனர். முக்கியமான பேப்பர் இல்லீங்க , உங்கள் கோப்புகளில் கையெழுத்திட வேண்டும் என்றால் ரூ.1 லட்சம் பணம் தரணும் அந்தப்பேப்பரைத்தான் சொன்னேன் என்று விஜயகுமாரி கூறியுள்ளார்.

அந்தப்பேப்பரை கேட்கிறீர்களா அதுகுறித்து எங்களுக்குள் பேசிவிட்டு கலக்ட் பண்ணிக்கொண்டு வருகிறோம் என்று கூறி வெளியே வந்துள்ளனர். பின்னர் நேராக சங்கத்தினர் அனைவரும் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் விஜயகுமாரி கேட்ட ரூ.1 லட்சம் லஞ்சம் குறித்து புகார் அளித்துள்ளனர்.

புகாரை பெற்றுக் கொண்ட போலீஸார் நாங்கள் சொல்வதுபோன்று பேசுங்கள். நாங்கள் தருகிற ரூபாய்த்தாளை கொண்டுபொய் கொடுங்கள் என்று கூறி அனுப்பியுள்ளனர்.

அதேபோன்று குடியிருப்பு சங்க நிர்வாகிகள் கண்காணிப்பு அதிகாரி விஜயகுமாரியிடம் பேசி ஒரு லட்சத்தில் ஏதும் குறைக்க முடியுமா என கேட்க ஒரு ரூபாய் கூட குறைக்கமாட்டேன் என்று கூறியுள்ளார். அப்படியானால் முதலில் முன்பணமாக ரூ.50000 தருகிறோம், வேலை முடிந்தப்பின் மீதிபணத்தை தருகிறோம் என்று கூறியுள்ளனர்.

அதற்கு ஒப்புக்கொண்ட விஜயகுமாரி வேலை முடியும்முன் மீதிப்பணத்தைக்கொடுத்தால்தான் இணைப்பு கிடைக்கும் என்று கூறி பணத்தை மாலை 5 மணி அளவில் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்திற்கு வந்து தரும்படி கூறியுள்ளார். அதன்படி லஞ்ச ஒழிப்புத்துறையினர் கொடுத்த ரசாயனம் தடவிய ரூ.50,000 பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.

அவரது அறையில் அவர் கையில் 50 ஆயிரம் ரூபாயை கொடுக்க அவர் அதை வாங்கி எண்ணும்போது ஏற்கெனவே தயாராக இருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் உள்ளே நுழைந்து அவரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்த போலீஸார் அவரது அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரது அலுவலகமும் சோதனையிடப்பட்டது. போலீஸாரின் விசாரணைக்கு பிறகு தான் விஜயகுமாரியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தொகை எவ்வளவு என்பது தெரிய வரும்.

முதல் தலைமுறை மாணவருக்கு கட்டணம் ரத்து: அரசு விளக்கம் 


கோப்புப் படம்

சென்னை

முதல் தலைமுறை மாணவா்களுக்கு கல்விக் கட்டணத்தை ரத்து செய்வது தொடா்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை ரத்து செய்யும் திட்டம் 2010-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. இதனால் பொறியியல் கல்லூரிகளில் சேரும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.20 ஆயிரம் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணம் 2017-ம் ஆண்டு ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.

இதையடுத்து உயா்த்தப்பட்ட கல்விக் கட்டணத்தை முதல் தலைமுறை மாணவர்களுக்கு ரத்து செய்வதில் கல்லூரிகளிடம் குழப்பம் நீடித்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம், தனியார் கல்லூரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘‘தமிழக அரசின் கட்டண நிா்ணயக்குழு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல்விக் கட்டணத்தை மாற்றிய அமைத்து வருகிறது. அதன்படி தற்போது கட்டணக்குழு உயர்த்திய கல்விக் கட்டணத்தை முதல் தலைமுறை மாணவா்களுக்கு தொடர்ந்து ரத்து செய்ய வேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது.

மலிவுவிலை மருந்தகங்கள்: கண்டறிய செல்போன் செயலி

மக்களுக்கு குறைவான விலையில் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு, நாடு முழுவதும் 'மக்கள் நல மருந்தகங்கள்' எனும் மலிவு விலை மருந்தகங்களை மத்திய அரசு திறந்துள்ளது.

இந்த மருந்தகங்களில் கிடைக்கும் 800-க்கும் மேற்பட்ட மருந்துகள் பிரபல நிறுவனங்களின் விலையைவிட 50 முதல் 90 சதவீதம் வரை குறைவாக இருக்கின்றன. தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. கோவையில் 56, ஈரோட்டில் 29, சேலத்தில் 27, திருப்பூரில் 13, நாமக்கல்லில் 13, நீலகிரியில் 8 'மக்கள் நல மருந்தகங்கள்' செயல்படுகின்றன.

எனவே, மக்கள் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள மலிவுவிலை மருந்தகங்களின் விவரத்தையும், அங்குள்ள மருந்துகள் விவரத்தையும் அறிந்துகொள்ள Jan Aushadhi Sugam என்ற செல்போன் செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.



ஜெனரிக், பிராண்டட் மருந்துகளின் விலை ஒப்பீடு

இதுதொடர்பாக மக்கள் நல மருந்தக உரிமையாளர்கள் கூறியதாவது:

"சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய், வயிறு கோளாறுகள், காசநோய், இருதய நோய் உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகள் மக்கள் மருந்தகங்களில் கிடைக்கின்றன. Jan Aushadhi Sugam செயலியில் மருந்தின் ஜெனரிக் பெயரை பதிவிட்டால் அந்த மருந்தின் விலை விவரம், அதே மருந்தை பிராண்டட் நிறுவனத்தில் வாங்கினால் எவ்வளவு விலை என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.

அதேபோல, தங்கள் மாவட்டத்தை குறிப்பிட்டால் தங்களுக்கு அருகில் உள்ள மக்கள் நல மருந்தகங்களின் விவரத்தை தெரிந்துகொள்ளலாம். செயலி தற்போது தொடக்க நிலையில் உள்ளது. தொடர்ந்து மக்கள் தெரிவிக்கும் கருத்துகளை வைத்து குறைபாடுகளை களைந்து, செயலியை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதுதவிர, http://janaushadhi.gov.in/StoreDetails.aspx என்ற இணையதளத்திலும் தங்களுக்கு அருகில் உள்ள மக்கள் நல மருந்தகத்தின் முகவரி, தொடர்பு எண் விவரங்களை மக்கள் தெரிந்துகொள்ளலாம்.

'ஜெனரிக்' மருந்துகள்

எந்த பிராண்ட் பெயரில் மருத்துவர் மருந்து எழுதிக்கொடுத்தாரோ அதே பெயரில் மருந்து வாங்க வேண்டும் என நோயாளிகள் நினைக்கின்றனர். இன்னும் பெரும்பாலானோருக்கு 'ஜெனரிக்' மருந்துகள் குறித்த புரிதல் இல்லை. விலை அதிகமான மாத்திரைதான் அதிக பலன் அளிக்கும் என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது.

'ஜெனரிக்' மருந்துகள் பிராண்டட் மருந்துகளைவிட எந்த வகையிலும் தரத்தில் குறைவானவை அல்ல. பிராண்டட் மருந்துகளில் உள்ள அதே மூலக்கூறுகள்தான் ஜெனரிக் மருந்துகளிலும் இருக்கும். உதாரணமாக, 'குரோசின்', 'கால்பால்' போன்றவை காய்ச்சலுக்கான பிராண்டட் மாத்திரைகள். அதே மாத்திரையை, அதன் மூலப்பொருளாக விளங்கும் 'பாராசிடமால்' என்ற பொதுவான (ஜெனரிக்) பெயரில் மருந்தகங்களில் பெறலாம்.

எனவே, நோய்களுக்கான மருந்துகளை டாக்டர்கள் பரிந்துரைக்கும்போது, மூலக்கூறுகளின் பெயரையும் நோயாளிகள் கேட்டுப் பெற்று, மக்கள் நல மருந்தகங்களில் குறைவான விலையில் மருந்துகளைப் பெறலாம்"

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...