Monday, November 4, 2019


சிகிச்சை டைரி: அம்மா என்றால் துணிவு 


the hindu 




பிருந்தா சீனிவாசன்

அகந்தையும் ஆணவமும் மண்டிக்கிடக்கிறவர்களைச் சந்திக்க நேரிடும் போதெல்லாம் அவர்களை ஒரு நாளாவது புற்றுநோய் மருத்துவமனைக்கோ அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கோ அழைத்துச் சென்று அமரவைத்துவிடத் தோன்றும். வாழ்க்கையின் மகத்துவத்தை அந்த ஒரு நாள் அவர்களுக்கு உணர்த்திவிடக்கூடும். நாங்களும் அப்படித்தான் அதை உணர்ந்தோம். வாழ்தல் என்பது சுவாசிப்பது மட்டுமல்ல என்ற பாடத்தையும் பயின்றோம்.

ஆறு ஆண்டுகளுக்கு முந்தைய கோடை விடுமுறை. மகளுடன் அம்மா வீட்டுக்குச் சென்றிருந்தேன். கோடைக்காலத்தில் அம்மாவுக்கு ஒவ்வாமையால் உடலில் தடிப்பு ஏற்படும். அந்த ஆண்டு அரிப்பும் தடிப்பும் அதிகமாக இருந்ததாகச் சொன்னார். அப்போது நாங்கள் வீடு கட்டிக்கொண்டிருந்தோம். வெயிலில் நீண்ட நேரம் நின்றதால் அப்படி இருக்கும் என அவரே சமாதானம் சொல்லிக்கொண்டார்.

ஆனால், மார்பில் அரிப்புடன் வலியும் இருக்கிறது என அம்மா சொன்னபோது ஏதோ நெருடலாகப் பட்டது. மருத்துவரைப் பார்க்கலாம் என்று சொன்னபோது கூச்சத்தின் காரணமாக மறுத்துவிட்டார். அவரை வற்புறுத்தி மறுநாளே மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம். மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர் என்பதால் மார்பைத் தொட்டதுமே கட்டி இருப்பதாகவும் அது புற்றுநோய்க் கட்டியாக இருக்கலாம் எனவும் சொல்லிவிட்டார். பயாப்ஸி எடுத்துவிட்டு வரச் சொன்னார்.

உறுதிசெய்த பரிசோதனை

மருத்துவர் பயாப்ஸி எடுக்கச் சொன்னதுமே காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையத்துக்குச் சென்றுவிடலாம் என்று அம்மா சொன்னார். காரணம், எங்களுக்குத் தெரிந்த ஒருவர் மார்பகப் புற்றுநோய்க்கு அங்கேதான் சிகிச்சை எடுத்துக்கொண்டார். இரண்டு மார்பையும் நீக்கிவிட்டு நலமுடன் இருக்கிறார். அம்மாவும் மறுநாளே மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனைகளை முடித்துக்கொண்டு வந்தார். அவருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதுவரை நாங்கள் பார்த்த அம்மாவுக்கும் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்த பிறகு நாங்கள் பார்த்த அம்மாவுக்கும் அப்படியொரு வேறுபாடு.

கீமோவின் பாதிப்புகள்

அம்மாவின் இடத்தில் வேறு யார் இருந்திருந்தாலும் நோயைவிடக் கவலையிலும் பயத்திலுமே உயிரை விட்டிருப்பார்கள். ஆனால், என் அம்மா உறுதியோடு இருந்தார்; எதையும் மோதிப் பார்த்துவிடும் திடத்துடன் இருந்தார். வரிசையாகப் போடப்பட்டிருந்த படுக்கைகளில் ஒரு படுக்கையின் மீது எங்கோ வெறித்துப் பார்த்தபடி அம்மா அமர்ந்துகொண்டிருந்த தோற்றம் உயிரை அறுப்பதாக இருந்தது.

கட்டி பெரிதாக இருப்பதால் முதலில் மூன்று முறை கீமோதெரபி கொடுத்துவிட்டுப் பிறகு அறுவைசிகிச்சை செய்யலாம் என மருத்துவர்கள் சொன்னார்கள். முதல் கீமோவுக்கே முடிகொட்டத் தொடங்கியது. தலைசுற்றலும் வாந்தியுமாக அவதிப்பட்டார். மூன்று கீமோவும் முடிந்த நிலையில் அம்மாவின் உடலிலிருந்த சக்தியெல்லாம் வெளியேறியதுபோல் இருந்தது. தலையில் கை வைத்தால் முடி கொத்து கொத்தாகக் கையோடு வந்தது. மொட்டையடித்துவிடும்படி அம்மா சொன்னார். தன்னுடன் சேர்த்து எங்கள் வீட்டின் மகிழ்ச்சி அனைத்தையும் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுவிட்டாரோ எனத் தோன்றியது. வீட்டில் ஒருவர் முகத்திலும் மலர்ச்சி இல்லை.

நம்பிக்கையளித்த அம்மா

ஆறு ஆண்டுகளுக்கு முந்தைய எங்கள் தீபாவளி மருத்துவமனையில்தான் கழிந்தது. அம்மாவுக்கு அறுவை சிகிச்சை செய்து இடப்பக்க மார்பை அகற்றினார்கள். நோயுற்றவரின் பொழுதுகள் எவ்வளவு நெடியவை என அதை அனுபவிப்பவருக்குத்தான் தெரியும். ஆனால், அனைத்தையும் எந்தவிதப் புகாரும் இல்லாமல் என் அம்மா எதிர்கொண்டார்.

அம்மாவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. பாடலும் கேட்க மாட்டார். மனத்தை மடை மாற்றும் எந்த வழியுமின்றி நாளெல்லாம் படுக்கையில் இருப்பது எவ்வளவு கொடுமை. ஆனால், அதை அம்மா வெளிக்காட்டிக்கொண்டதே இல்லை. தன்னைப் பார்க்க வரும் உறவினர்களை அவர்தான் ஆற்றுப்படுத்துவார். சுற்றியிருப்பவர்களிடம் பேசுவார்; அவர்களுக்கு நம்பிக்கையும் ஆறுதலும் சொல்வார்.

அம்மாவைப் பார்க்க வாரம் ஒரு முறை மருத்துவமனைக்குச் செல்வேன். ஒவ்வொரு வாரமும் அம்மாவைச் சுற்றி ஒரு படுக்கை காலியாக இருக்கும். அந்தப் படுக்கையிலிருந்தவர் இறந்திருப்பார். தன்னைச் சுற்றி ஒவ்வொருவராக மரணத்தைத் தழுவுவதைப் பார்த்த பிறகும் அம்மாவின் கண்களில் ஒளி குறையவில்லை.

வாழ்வா, சாவா எனப் போராடிக்கொண்டிருக்கும் நிலையிலும் வாழ்க்கை மீது பிடிப்புகொண்ட அம்மா எங்களுக்குப் பலவற்றை உணர்த்தினார். ‘காயமே இது பொய்யடா’ என அவர் புலம்பவில்லை; இருக்கும்வரை யாரையும் பகைத்துக்கொள்ளாமல் புகார் கூறாமல் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழக் கற்றுத்தந்தார். அம்மாவின் உறுதிதான் புற்றுநோயிலிருந்து அவரை மீட்டெடுத்தது. சிகிச்சை முடிந்து தற்போது ஏழாம் ஆண்டில் வெற்றிகரமாக நடைபோட்டுக்கொண்டிருக்கிறார் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக.

மருத்துவரின் மனிதாபிமானம்

அந்த மருத்துவமனையில் நான் பார்த்த ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் வாழ்க்கையின் தரிசனத்தைத் துலக்கமாகக் காட்டின. பெண் மருத்துவர் ஒருவர் ஒட்ட வெட்டிய தலைமுடியுடன் இருப்பார். ஏன் அவர் அடிக்கடி மொட்டை அடித்துக்கொள்கிறார் என அம்மாவிடம் கேட்டேன். புற்றுநோய் மருத்துவமனையில் நோயாளிகள் அனைவரும் மொட்டைத்தலையுடன் இருக்கும்போது, தான் மட்டும் முடியுடன் இருப்பது நோயாளிகளுக்கு வேதனையாக இருக்கக்கூடும் என்பதால் அந்த மருத்துவர் எப்போதும் முடியைச் சிறியதாகக் கத்தரித்துக்கொள்வாராம்.

அம்மாவுக்காக எங்கள் வீட்டில் நாங்கள் யாருமே அப்படி யோசிக்கவில்லை. ஆனால், மருத்துவர் ஒருவர் தன் நோயாளிகளுக்காக மனிதநேயத்துடன் யோசித்தது ஆச்சரியப்படுத்தியது. அவருடைய கணவரும் அதே மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணர். இருவரும் ஒருவருடைய சம்பளப் பணத்தை மட்டும்தான் வீட்டுக்கு எடுத்துச் செல்வார்களாம். மற்றவருடைய சம்பளத்தை மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளுக்கு ஏதாவது வாங்குவதற்குத் தந்துவிடுவார்களாம். அதைக் கேட்டதும் பேச்சற்று நின்றுவிட்டேன்.

வாழ்வின் நிதர்சனம்

அம்மாவுக்குக் கதிரியக்க சிகிச்சை என்பதால் அன்று நான் வெளியே காத்திருந்தேன். அப்போது அங்கே இருந்த தாத்தாவும் பாட்டியும் சண்டை போட்டபடி இருந்தனர். தாத்தா ஒன்று சொல்ல, பாட்டி இரண்டாகச் சொல்லச் சண்டை தொடர்ந்தபடி இருந்தது. பிறகு தாத்தா தந்த மஞ்சள் பையை உள்ளே வைத்துவிட்டு வருவதற்காகச் சென்றார் பாட்டி. அப்போது அங்கே அமர்ந்திருந்த பெண் ஒருவர், “ஏன் இப்படி அந்தம்மாவைத் திட்டுற. அதுவே ஆபரேசன் முடிஞ்சு கஷ்டப்பட்டுட்டு இருக்குதுதானே?” எனத் தாத்தாவிடம் கேட்டார்.

தாத்தாவோ, “அதை ஏம்மா கேக்கறே. இந்த அம்மா இல்லாம வூடு வூடாவே இல்லை. ஒரு வாய் தண்ணிகூடக் குடிக்கப் பிடிக்கல. பழம் கிழம்னு நல்லா சாப்பிட்டு உடம்பைத் தேத்திக்கிட்டு சீக்கிரம் வூட்டுக்கு வந்தாதானே. அதை வுட்டுட்டு காசு இல்லைன்னு எதையும் சாப்பிடாம இருக்குதும்மா” என்று சொல்லும்போதே குரல் உடைந்து அழுதுவிட்டார். அவ்வளவு நேரம் நடந்தது அன்புச் சண்டை! தாத்தாவைச் சாப்பிடச் சொல்லி பாட்டியும் பாட்டியைச் சாப்பிடச் சொல்லி தாத்தாவும் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர் போல.

இப்படி எத்தனையோ நிகழ்வுகளின் மூலம் அம்மாவும் அந்த மருத்துவமனையும் அது சார்ந்த மனிதர்களும் வாழ்வின் நிதர்சனத்தை உணர்த்தியிருக்கிறார்கள். அதனால்தானோ என்னவோ எதையுமே ஓரளவுக்காவது தள்ளி நின்று அணுக முடிகிறது. வாழ்க்கை ஒவ்வொரு நாளும் ஒளிகூடித் தெரிகிறது.

கட்டுரையாளர், தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in

விவாதம்: இந்த மரணத்துக்கு யார் பொறுப்பு? 


 https://www.hindutamil.in/news/supplements/penn-indru/523212-debate.html




க்ருஷ்ணி

தமிழகத்தைச் சேர்ந்த பலருக்கும் இந்த ஆண்டின் தீபாவளி துயரம் நிறைந்ததாகக் கழிந்திருக்கும். ஆழ்துளைக் கிணற்றுக்குள் ஆதரவு வேண்டி மேல் நோக்கி நீண்டிருந்த கைகளும் அழுகையொலியுமாகவே பலரது நெஞ்சங்களில் நிலைகொண்டுவிட்டான் இரண்டு வயது மழலை சுஜித்.


திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப் பட்டியைச் சேர்ந்த சுஜித் வில்சன், கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றுக் குள் தவறி விழுந்ததும் அவனை மீட்பதற்காக நடந்த மீட்புப் பணிகளும் ஓர் உயிரின் மரணப் போராட்டத்தை நேரலையில் காட்சிப்படுத்திய ஊடகங்களும் அவற்றைத் தொடர்ந்த சமூக வலைத்தள பதிவுகளும் பலவற்றை உணர்த்தியிருக்கின்றன.

அன்றே சொல்ல நினைத்தோம்; ஆனால், அப்படியொரு சூழலில் அதைச் சொல்ல வேண்டுமா எனத் தவிர்த்தோம் என அந்தக் குழந்தையின் பெற்றோருடைய குழந்தை வளர்ப்பு குறித்து சிலர் மேட்டிமைத்தனத்தோடு கருத்துச் சொல்ல, இன்னும் சிலரோ அவர்களுக்குக் குழந்தை வளர்ப்பு வகுப்பெடுத்தனர். சுஜித்தின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்கப்பட்டது குறித்து சிலர் மோசமாகப் பதிவிட்டனர்.


‘புள்ளையே போச்சு. அந்தப் பணத்தை வாங்க உனக்கு எப்படி மனசு வந்தது?’ என்ற கருத்தை மையமாக வைத்து மிக நாகரிகமான வார்த்தைகளில் வசைமாரி பொழிந்தவர்களும் தமிழகத்தைச் சேர்ந்த நல்லிதயக்காரர்களே. இவை அனைத்துக்கும் மகுடம் சூட்டியதுபோல் அந்தக் குழந்தையின் மதத்தைச் சுட்டிக்காட்டி, தீபாவளிக் கொண்டாட்டங்களை மழுங்கடிக்கத் தான் இப்படியொரு நாடகம் என்ற பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய கருத்தை உதிர்த்தனர்் இந்து சொந்தங்கள் சிலர். இவ்வளவு கேவலங்களுக்கு நடுவே மகனைத் தொலைத்த அந்தத் தாயின் கதறல் யாருடைய செவியையும் எட்டவில்லை.

எது தவறு?

இதற்கிடையே சுஜித்தின் மீட்புப் பணிகளை நேரலையில் பார்த்துக் கொண்டிருந்த தம்பதியரின் குழந்தை நீர்த்தொட்டிக்குள் விழுந்து மரணிக்க, இது போதாதா கருத்துச் சொல்பவர்களுக்குத் தூபம் போட. பிள்ளையைப் பெற்றால் மட்டும் போதுமா; அதைப் பொறுப்புடன் பார்த்துக்கொள்ள வேண்டாமா என மீண்டும் காவியம் பாடத் தொடங்கினர். எல்லாம் சரிதான்.

ஆனால், எந்தப் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளைப் புதைக்க தங்கள் தோட்டத்திலேயே கல்லறை சமைப்பதில்லை என்பதை அந்த மேட்டிமைவாதிகளுக்கு யார் சொல்வது? அனைவரும் அவரவர் சூழலுக்கும் பொருளாதார வலுவுக்கும் ஏற்ற வகையில் பிள்ளைகளை வளர்ப்பார்களே தவிர அவர்களைச் சாகக் கொடுப்பதற்கான வழிகளை உருவாக்கிவைக்க மாட்டார்கள்.


விபத்துக்கும் எதிர்பாராத விபரீதத்துக்கும் பொருள் தெரியாதவர்களே இப்படியெல்லாம் பிதற்றித் திரிவார்கள்.
சாதி, மதம், இனம், வர்க்கம், பொருளாதாரம் என அனைத்திலும் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்தியா போன்ற நாடுகளில் அனைத்தையும் ஒரே தராசில் வைத்துத் தீர்ப்பு வழங்குவதைவிடக் கேவலம் வேறில்லை. எதிர்பாராத விபரீதம் நிகழும்போது பெற்றோரைக் குற்றவாளியாக்குவது நியாயமா? கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறை மூடாதது அவர்களுடைய தவறுதான். அதற்காக அவர்களைக் கொலைகாரர்கள் போன்று சித்தரிப்பது அதைவிடத் தவறல்லவா?

அரசுக்குப் பொறுப்பு இல்லையா?

இந்தச் சமூகத்தில் குழந்தை என்பது ஒரு குடும்பத்தின் சொத்தல்ல. அதன் வளர்ச்சியில் சமூகத்துக்கும் அரசுக்கும் பங்கு இருக்கிறது. அந்த வகையில் சுஜித்தின் மரணத்துக்கு சமூகமும் அரசும் சேர்ந்து பொறுப்பேற்க வேண்டுமல்லவா? கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மூட வேண்டியது தனி மனித பொறுப்பு என்றால், அவற்றைக் கணக்கெடுத்து கண்காணிப்பது அரசின் பொறுப்புக்குள் வராதா? மக்களிடம் தனி மனித பொறுப்பு இல்லை; அதனால் நாங்களும் எதுவும் செய்ய மாட்டோம் என்று சொன்னால், அது மக்கள் நல அரசாங்கமா?

சட்டப்படி பார்த்தால் அந்தப் பெற்றோரைக் கைது செய்திருக்க வேண்டும்; இதே போன்ற சம்பவம் வெளிநாட்டில் நடந்தால் முதலில் பெற்றோரைத் தண்டித்துவிட்டுத்தான் குழந்தையைக் காப்பாற்றியிருப்பார்கள் என்ற உலகத்தரம் வாய்ந்த கருத்துகளையும் சிலர் சிதறவிட்டிருந்தனர். அவர்கள் குறிப்பிடும் நாடுகளும் நடுகாட்டுப்பட்டியும் ஒன்றா? அந்த நாடுகளின் அரசு செயல்படும் விதமும் இந்திய – தமிழக அரசுகள் செயல்படும் விதமும் ஒன்றா என்பதைப் பகுத்தறிய தெரிந்தவர்கள் இப்படியான கருத்து முத்துகளை வீணடித்திருக்க மாட்டார்கள்.


உயிர்ப்பலி வேண்டுமா?

சுஜித்தின் பெற்றோரைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றத் துடித்த பலருக்கும் அரசின் செயல்பாடு குறித்து எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. மிகப் பெரும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களை வைத்திருப்பதாக மார்தட்டிக்கொள்ளும் நம் நாட்டில், ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழும் குழந்தையை மீட்கக் கருவியொன்றை வடிவமைக்கும் அளவுக்கு யாருக்கும் திறமையில்லை என்பதை என்னவென்று சொல்வது? விழுகிற குழந்தைகள் எல்லாமே வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கிறவர்கள் என்பதால் அரசின் அவசரப் பட்டியலில் இப்படியான கருவிகள் எல்லாம் இடம்பெறாததில் ஆச்சரியம் ஏதுமில்லை.

மீட்புப் பணிகளுக்காக 11 கோடி ரூபாயைச் செலவிட்டதாகப் பட்டியல் வெளியிட்டிருக்கும் அரசு, மீட்புக் கருவியை வடிவமைப்பதற்கென அதில் சிறு தொகையையாவது ஒதுக்கியிருக் கிறதா? அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தானே குழந்தைகள் குழிக்குள் விழுகிறார்கள்; இறப்பு எண்ணிக்கை அதிகரித்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்; அதுவரை கயிற்றை வைத்தே மக்களைச் சமாளித்துவிடலாம் எனக் காத்திருக்கிறதா?

எதுவொன்றுமே இங்கே சட்டமாக்கப்படவோ, சட்டம் அமலாக்கப்படவோ, அது தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படவோ வேண்டுமென்றால் யாராவது ஒருவர் உயிரைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. சட்டங்கள் கடுமையாக்கப்பட ‘நீட்’ அனிதா, சேலம் ராஜலட்சுமி, ‘பேனர்’ சுபஸ்ரீ, ‘ஆழ்துளைக் கிணறு’ சுஜித் வரிசையில் இன்னும் எத்தனை உயிர்கள் தேவைப்படும் எனத் தெரியவில்லை.

நீங்க என்ன சொல்றீங்க?

பால் மணம் மாறாத மழலையின் மறைவுக்குப் பிறகு பேசுபவை எல்லாம் வெட்டிப் பேச்சுதான் என்று ஆகிவிடக் கூடாது என்பதுதான் இந்த விவாதத்தின் நோக்கம். குழந்தை சுஜித்தின் மரணத்துக்கு யார் பொறுப்பு? எப்படிச் செயல்பட்டிருந்தால் அந்தக் குழந்தையின் மரணத்தைத் தடுத்திருக்கலாம்? பரபரப்பு அரசியலுக்கு சுஜித்தின் மரணத்தைப் பயன்படுத்திக்கொண்டவர்களை என்ன செய்வது? இதில் உங்கள் கருத்து என்ன? எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்; விவாதிக்கலாம்.


https://www.hindutamil.in/news/supplements/penn-indru/523212-debate.html


நாய் பாசம் இருக்கலாம் அதுக்கு இப்படியா? பெற்றோர் திட்டியதால் இளம்பெண் தற்கொலை

தற்கொலை செய்துக் கொள்வதால் என்னை மன்னித்து விடுங்கள்

November 02, 2019 11:24:34 am

kovai young girl suicide : தாய் பாசத்தை மிஞ்சிய நாய் பாசம் தற்கொலை வரை சென்றுள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? கோவையில் நாய் வளர்க்க கூடாது என்று பெற்றோர்கள் திட்டியதால் இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்டார். இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது செல்லமகள் கவிதா தனியார் பத்திர அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். கவிதாவுக்கு நாய்கள் என்றால் கொள்ளை பிரியம். நாய்களை வளர்ப்பு, பாசத்தை கொட்டுவது, சாப்பாடு ஊட்டுவது என அநியாத்திற்கு பெட் லவ்வராக இருந்திருக்கிறார். இந்த அன்பு கடைசியில் விபரீதத்தில் முடிந்துள்ளது.

கவிதா கடந்த 2 வருடமாக தனது வீட்டில் சீசர் என்ற நாயை வளர்த்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் சீசர் பயந்து வீட்டு வாசலில் பயங்கரமாக சத்தம் போட்டுள்ளது. இதனால் கடுப்பான கவிதாவின் பெற்றோர்கள் அக்கம் பக்கத்தினர் சீசர் இரவு நேரத்தில் தொந்தரவு செய்வதாக சத்தம் போடுகிறார்கள். இனிமேல் சீசர் வேண்டாம் எங்கயாவது கொண்டு போய் விடலாம் என்று கவிதாவிடம் கூறியுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்த கவிதாவை லேசாக திட்டியுள்ளனர்.

இதனால் மனம் உடைந்த கவிதா வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். தற்கொலை செய்துகொள்ளும் முன் கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் அப்பா, அம்மா, பாட்டி மற்றும் தனது தம்பியிடம் சீசரை நன்றாக பார்த்துக்கொள்ளும் படி எழுதியுள்ளார். கவிதாவின் இந்த தற்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லை தற்கொலை செய்துக் கொள்வதால் என்னை மன்னித்து விடுங்கள் என்றும் கவிதா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கவிதாவின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வளர்ப்பு நாயை பிரிய மனமில்லாமல் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் விவாத பொருளாகவும் மாறியுள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து கவிதாவின் பெற்றோர்கள் இப்போது வரை வெளிவரவில்லை.
நீட் தேர்வை ஏன் திரும்ப பெறக்கூடாது? -சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

பதிவு: நவம்பர் 04, 2019 13:51 IST


முந்தைய காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு கொண்டு வந்த நீட் தேர்வை ஏன் இந்த அரசு திரும்ப பெறக்கூடாது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

சென்னை ஐகோர்ட்

சென்னை:4.11.2019

நீட் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் நீட் தேர்வு தொடர்பான பல்வேறு கேள்விகளை முன்வைத்து அதற்கு விளக்கம் கேட்டுள்ளனர்.

‘நீட் தேர்வு கொணடு வந்தபிறகு பயிற்சி மையங்கள் மூலம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுமார் 5 லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்தி பயிற்சி மையங்களில் படித்த மாணவர்களே அதிக மருத்துவ இடங்களை பெற்றுள்ளனர் என்பதை அறிவதில் வேதனையாக உள்ளது.

இது பணம் செலுத்தி படிக்க முடியாத ஏழை மாணவர்களை வேறுபடுத்தும் செயலாகும். பயிற்சி மையங்களால் ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளின் கதவுகள் திறப்பதில்லை. எனவே, முந்தைய காங்கிரஸ்-திமுக அரசு கொண்டு வந்த நீட் தேர்வை ஏன் இந்த அரசு திரும்பப்பெறக்கூடாது?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பிற மாநிலங்களில் நீட் ஆள்மாறாட்ட புகார் ஏதேனும் வந்துள்ளதா? என்பது குறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். இதேபோல் நீட் முறைகேடு தொடர்பாக நேரடியாக புகார் வந்துள்ளதா? என்பது குறித்து சிபிஐ அமைப்பும் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தோ்வு மையங்களில் ‘ஜாமா்கள்’ கட்டாயம்:யுஜிசி அறிவுறுத்தல்


By DIN | Published on : 04th November 2019 01:17 AM |

முறைகேடுகளைத் தடுக்க தோ்வு மையங்களில் ‘ஜாமா்’களை (செல்லிடப்பேசி சமிக்ஞைகளை முடக்கும் கருவி) நிறுவுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இதுதொடா்பான அரசின் கொள்கை முடிவுகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என பல்கலைக்கழகங்களுக்கு, பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.

ரேடியோ அதிா்வெண் அடிப்படையிலான சாதனங்கள் மூலம் தோ்வுகளில் முறைகேடு நடப்பதைத் தடுக்கும் வகையில், சோதனை முறையில் குறைந்த ஆற்றல் கொண்ட ‘ஜாமா்’களை தோ்வு மையங்களில் பொருத்த வேண்டும் என 2016-ஆம் ஆண்டில் அரசு கொள்கை முடிவெடுத்தது.

பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் ஜாமா்கள் குறித்த அரசின் உத்தரவு பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும் என யுஜிசி சாா்பில் பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கும், கல்லூரி தாளாளா்களுக்கும் ஏற்கெனவே எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எலக்ட்ரானிக்ஸ் காா்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் மற்றும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆகிய இரு அரசு நிறுவனங்கள், வாடகை அடிப்படையில், தோ்வு மையங்களுக்கு குறைந்த சக்தி கொண்ட ஜாமா்களை வழங்க அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத உற்பத்தியாளா்களிடமிருந்து ஜாமா்களை பெறக் கூடாது என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Courier firm fined Rs 45,000 for not delivering Deepavali gifts 

DECCAN CHRONICLE.


Published Nov 4, 2019, 2:00 am IST


Petitioner had sent costly gifts to his daughter living in US. 



The bench comprising its president M. Mony and member R. Baskarkumaravel said M/s. Queens International Express committed deficiency in service.

Chennai: The District Consumer Disputes Redressal Forum, Chennai (South) slapped a fine of Rs 45,000 on an international express courier firm for not delivering Deepavali gifts, including sweets, snacks and sarees to a woman in Texas, USA. Her father from the city sent the gift prior to Deepavali three years ago.

In the petition, K. Sambandam of Adyar submitted that he sent a parcel containing silk saree, blouses, tops, petticoat, sweet and snacks to his daughter, who was living in an apartment at Houston, Texas, U.S.A, as Deepawali gift. He purchased a silk saree for a price of Rs 11,850.

He sent the parcel through M/s. Queens International Express, Mylapore for Rs 4,500 on October 24, 2016. However, the courier company had not delivered the consignment. The purpose of sending the articles to celebrate Deepvali was totally defeated, which caused great mental agony and hardship, he said.

Even after repeated requests there was no proper response from Queens International Express. In its reply, the company, in an email, admitted that the shipment was wrongly delivered and they were taking steps to retrieve it and deliver it to his daughter. But so far, neither the consignment was delivered to either to the consignee nor returned to the consignor.

He issued notice on November 9, 2016. As there was no response, he filed the complaint seeking direction to K.M. Gani Proprietor of M/s. Queens International Express to pay him compensation for causing mental agony.

In his reply, K.M. Gani denied the averments made in the petition. The consignment was duly shipped to Houston Texas and it was wrongly delivered because of the address mentioned in proforma invoice. It was handed over to the transporter M/s. FedEx Express, Egmore. He sought dismissal of the petition.

The bench comprising its president M. Mony and member R. Baskarkumaravel said M/s. Queens International Express committed deficiency in service.


Considering the facts and circumstances of the case, the Forum ordered M/s. Queens International Express to pay the petitioner Rs 25,000 towards the cost of consignment and a compensation of Rs 10,000 for causing mental agony and a cost of Rs 10,000.
In a first, Pudukkottai dentist collects 64,800 human teeth 

DECCAN CHRONICLE. | R. VALAYAPATHY


Published Nov 4, 2019, 5:26 am IST

Dr Rajesh Kannan poses with his certificates for record collection of extracted human teeth. (Photo: DC) 

A Dubai-based dentist couple had created another world record by collecting 25,000 teeth in the year 2016.

Dr Rajesh Kannan poses with his certificates for record collection of extracted human teeth. (Photo: DC)

Pudukkottai: A Pudukkottai-based dentist Dr Rajesh Kannan has created a new record in India books of records, Asia book of records and also hopes to enter the Guinness book of records in collecting the largest number of 64,800 extracted human teeth, beating two previous records recently.

According to Dr Rajesh Kannan, the previous record in this category of having collected 11,500 teeth by an Indian dentist Dr Jibreel of Madurai Meenakshi Mission Hospital, had made it to both India book of records and Asian book of records in 2011. A Dubai-based dentist couple had created another world record by collecting 25,000 teeth in the year 2016. But this one exceeds both those records.

He said he had collected these teeth over 15 years of his clinical practice as well as organised more than 120 dental camps and also with the help of his fellow dentists who have been collecting teeth for the last ten years for achieving his record.

The object of his record was to create awareness among the general public about oral hygiene and the importance of teeth for their overall health, Dr Rajesh Kannan told DC.

He said he got the spot approval and certificate from Asia book of records judge Dr Harisha for both Asia book of Records and India book of records.

He has also applied to Guinness book of world records with all documentary evidence and will get his certificate from them shortly, he added.

Dr Rajesh said on February 2 this year he also created the World's largest tooth model measuring 35-ft and broke the previous record set by Sensodyne, New Zealand, which created 32-ft tooth model. A juries' panel from Guinness book of world records, London, came to Pudukkottai and after their spot verification, they handed over the certificate for that feat to him, he added.

NEWS TODAY 31.01.2026