Sunday, January 5, 2020

ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும்

Added : ஜன 04, 2020 23:21

சென்னை: 'பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக, வரும், 10ம் தேதி, விடுமுறை நாளாக இருந்தாலும், அனைத்து ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும்' என, உணவு துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், 35 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றுக்கு, மாதத்தின், முதல் மற்றும் இரண்டாவது ஞாயிற்று கிழமை, வேலை நாள். அதற்கு மாற்றாக, அந்த வார வெள்ளி கிழமைகளில் விடுமுறை. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க, வரும், 10ம் தேதி, ெவள்ளிகிழமை, ரேஷன் கடைகளுக்கு விடுமுறையாக இருந்தாலும், செயல்பட உள்ளன. இது குறித்து, உணவு வழங்கல் துறை ஆணையர், நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு வழங்கும் பணி, வரும், 9ம் தேதி முதல், 13ம் தேதி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த கடைகளுக்கு, வரும், 10ம் தேதி, இரண்டாவது வெள்ளி என்பதால், வார விடுமுறை நாளாகும்.பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடர்ந்து நடைபெறுவதால், 10ம் தேதி, கடைகளுக்கு வேலை நாளாகவும்; அதற்கு பதில், இம்மாதம், 16ம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
குறைந்த தூர, 'ஏசி' பஸ் அறிமுகம்

Added : ஜன 04, 2020 23:20

சென்னை: விழுப்புரம் போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்படும், குறைந்த துார, 'ஏசி' பஸ்களுக்கு, முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு, 'ஏசி' பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அதேபோல, புதுச்சேரி, திருப்பதி, காளஹஸ்தி, நெல்லுார், பெங்களூரு ஆகிய, பிற மாநில நகரங்களுக்கும், குறைந்த கட்டணத்தில், 52 'ஏசி' பஸ்கள் இயக்கப்படுகின்றன.சென்னையிலிருந்து, சிதம்பரம், தர்மபுரி, ஓசூர், கும்பகோணம், நெய்வேலி, புதுச்சேரி, சேலம், திருவண்ணாமலை, திருச்சி, விழுப்புரம் ஆகிய ஊர்களுக்கு, இந்த குறைந்த கட்டண, 'ஏசி' பஸ்கள் இயக்கப்படுகின்றன.இந்த பஸ்களில், முக்கியமான, 266 வழித்தடங்களுக்கு மட்டும், முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது. www.tnstc.in என்ற, அரசுப் போக்குவரத்துக் கழக இணையதளத்தின் வழியாகவும், முக்கிய தனியார் இணையதளங்களின் வழியாகவும் முன்பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
சொர்க்கவாசல் திறப்பு: நேரலை ஒளிபரப்பு

Added : ஜன 04, 2020 22:01

மதுரை: ஜன., 6ல் பெருமாள் கோவில்களில் நடக்கும், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிகள், 'தினமலர்' இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.

அதிகாலை, 4:30 மணிக்கு, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்; 4:45 மணிக்கு, ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவில் மற்றும் மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில், சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.காலை, 5:30 மணிக்கு, கடலுார் மாவட்டம் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் மற்றும் கோவை காரமடை அரங்கநாதசுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சிகள், www.dinamalar.com என்ற, 'தினமலர்' இணையதளத்தில் ஒளிபரப்பப்படும்.
பொங்கல் சிறப்பு பஸ்கள் பட்டியல் தயாரிப்பு தீவிரம்

Added : ஜன 04, 2020 21:38

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறைக்கு இயக்கப்பட உள்ள சிறப்பு பஸ்கள் குறித்த பட்டியலை தயாரிக்க, மண்டல மேலாளர்களுக்கு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழர்களின் முக்கிய பண்டிகையான, பொங்கல் பண்டிகை, 15ம் தேதி புதன் கிழமை கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து, மாட்டுப் பொங்கல், உழவர் திருநாள், சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என, ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.

இதனால் பொதுமக்கள், தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வசதியாக, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.சிறப்பு பஸ் எண்ணிக்கை மற்றும் நேரம் ஆகிய விபரத்தை, எட்டு மண்டல மேலாளர்கள் தயாரிக்கும்படி, போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'விடுமுறை, 14ம் தேதி துவங்கினாலும், 12ம் தேதி முதல், சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த முறை வந்த கலெக் ஷன் குறித்து ஆய்வு செய்து, அதற்கேற்ப இம்முறை பட்டியல் தயாரிக்கப்படும்' என்றார்
- நமது நிருபர் -.
நாளை வேட்டி தினம் கடைபிடிக்க உத்தரவு

Added : ஜன 05, 2020 01:30

புதுச்சேரி:உலக வேட்டி தினத்தையொட்டி நாளை அரசு துறைகளில் வேட்டி தினம் கொண்டாட சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய உடை வேட்டி ஆகும். ஆனால், இன்றைய இளம் தலைமுறையிடையே வேட்டி கட்டும் ஆர்வம் குறைந்து வருகிறது. உலக பாரம்பரியங்களை பாதுகாக்கும் யுனெஸ்கோ நிறுவனத்தால் ஆண்டுதோறும் ஜனவரி 6-ம் தேதி சர்வதேச வேட்டி தினம் அறிவித்துள்ளது. மத்திய அரசும் உலக வேட்டி தினம் கடை பிடிக்க மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி நாளை 6ம் தேதி புதுச்சேரி அரசு துறைகளில் உலக வேட்டி தினம் கொண்டாட சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தலைமை செயலக சார்பு செயலர் கண்ணன் அரசு துறைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கையில், கைத்தறி பயன்பாட்டை கொண்டு வரும் வகையில் நாளை 6ம் தேதி உலக வேட்டி தினம் கடை பிடிக்கப்படுகிறது.எனவே புதுச்சேரியில் உள்ள அனைத்து துறை அரசு அதிகாரிகள், ஊழியர்கள் வேட்டி தினத்தை கடைபிடித்து அன்றைய தினம் வேட்டி அணிந்து வந்து ஏழை நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முன்வர வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2 wives, 2 wins: Man basks in 2nd-hand fame

News of victory in rural body polls brought joy to many on Friday.


Published: 04th January 2020 05:28 AM 




Dhanasekaran, Selvi and Kanchana with well wishers | express

By Express News Service

TIRUVANNAMALAI: News of victory in rural body polls brought joy to many on Friday. However, for M Dhanasekaran, an employee at a Cooperative Department ration shop, joy was twofold as both his wives won panchayat president posts in Vandavasi panchayat union and Minister for Hindu Religious and Charitable Endowments ‘Sevoor’ S Ramachandran congratulated him for the victory.

Selvi (45), the first wife of M Dhanasekaran, has been re-elected to the post from Vazhoor Agaram panchayat. She secured 345 votes and won for a second time. The village has an electorate of 1,600.
“My wife had performed well in her first tenure, between 2011 and 2016. So, people have elected her again,” Dhanasekaran told Express.

His second wife Kanchana won in Koilkuppam panchayat securing 542 votes. Joy found no bounds for Dhanasekaran, who was on a thanksgiving tour, flanked by Selvi and Kanchana.

Being an AIADMK supporter for long, he also got a surprise call from HR&CE ‘Sevoor’ S Ramachandran wishing him for the win.
Madurai family robbed of jewellery, Rs 2.8 lakh at gunpoint

The incident came to light after the victim launched a complaint to the police on Friday, with a delay of six days.

Published: 04th January 2020 12:03 PM 

By Express News Service

MADURAI: An unidentified gang robbed 170 sovereign gold jewellery and cash of Rs.2.8 lakh at gunpoint from a family in the city on December 27, 2019, during the first phase of rural local body.

The incident came to light after the victim launched a complaint to the police on Friday, with a delay of six days.

The police, who were tight-lipped on the robbery, said that the complainant was frightened to launch a complaint, hence there was a delay.

According to sources, S Gunasekaran, a resident of Appadurai Nagar 1st Street in Koodal Nagar of Madurai was at home on 27 December along with his family members.

While so, a gang of five including a woman, gained entry to the house by opening the backside door posing them as police personnel with arms.

The gang had told that they wanted to raid the house to check whether Gunasekaran had stocked any banned products in the house.

During the bogus raid, the miscreants had taken 170 sovereign gold jewellery and cash to the tune of Rs.2.8 lakh.

When Gunasekaran questioned, he was threatened at gunpoint.

The miscreants also learnt that he had cash in his bank account and took him in his car to the bank to withdraw the money. However, due to first phase of election, the bank was shut down on the day.

Later, the gang abandoned him at Othakadai and escaped from the spot.

Following the incident, the man approached the Koodal Pudur police on January 3 and the police registered case and initiated an investigation.

NEWS TODAY 25.01.2026