Monday, January 6, 2020

அஞ்சல்துறை மூலம் வெளிநாடுகளுக்கு பார்சல்: 8 மாதங்களில் 35 சதவீதம் வளர்ச்சி

By DIN | Published on : 06th January 2020 01:21 AM |

 

சென்னை: அஞ்சல்துறை மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் கடிதங்கள், தபால்கள், பார்சல்கள் எண்ணிக்கை கடந்தாண்டில் (2019) ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான 8 மாதங்களில் 35 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஏற்றுமதி பொருள்களை அஞ்சல்துறை மூலம் அனுப்ப மத்திய அரசு அனுமதி வழங்கியதையடுத்து, இந்தச் சேவைக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.
சமூக மேம்பாட்டில் முக்கிய பங்கு: நாட்டில் சமூக, பொருளாதார மேம்பாட்டில் இந்திய அஞ்சல் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், நாட்டின் தகவல் தொடர்பில் முதுகெலும்பாகத் திகழ்கிறது. அஞ்சல் துறை சார்பில், பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதுதவிர, தபால்கள், விரைவு தபால்கள், கடிதங்கள், பார்சல்கள் அனுப்புவது உள்பட பல்வேறு சேவைகள் அளிக்கப்படுகின்றன.

இந்நிலையில், தமிழக அஞ்சல்துறை மூலம் வெளிநாடுகளுக்கு கடிதங்கள், தபால்கள், பார்சல்கள் அனுப்புவது தற்போது அதிகரித்து வருகிறது. 2019 ஏப்ரல் முதல் நவம்பர் வரை 8 மாதங்களில் 35 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. அஞ்சல்துறையில் தனிப்பட்ட, வணிக நோக்கம் இல்லாத தபால்கள் மட்டுமே வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வந்தன. வர்த்தக ரீதியாக பார்சல்கள், தபால்களை அனுப்ப அனுமதி அளிக்கப்படவில்லை.
42 பிரத்யேக மையங்கள்: இதற்கிடையில், வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையில் மத்திய அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூனில் மாற்றம் செய்தது. அதன்படி, வெளிநாடுகளுக்கு வர்த்தக நோக்கத்தில் ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களை அஞ்சல்துறை மூலமாக அனுப்ப அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பார்சல் சேவையை இந்திய அஞ்சல் துறை தொடங்கியது. தமிழக அஞ்சல்துறை சார்பில், வெளிநாட்டுக்கு பார்சல்களை அனுப்புவதற்காக சென்னையில் தியாகராயநகர், அண்ணாசாலை, மீனம்பாக்கம், அசோக் நகர் உள்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 42 பிரத்யேக பதிவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் மூலமாக பார்சல்கள், கடிதங்கள், தபால்கள் ஆகியவற்றை பதிவு செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

104 நாடுகளுக்கு அனுப்பப்படும் பார்சல்கள்: தமிழக அஞ்சல்துறை சார்பில், தினசரி 104 நாடுகளுக்கு சராசரியாக 400 முதல் 550 விரைவு தபால்கள், 300 முதல் 500 பார்சல்கள் அனுப்பப்படுகின்றன. வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் மொத்த விரைவு தபால்களில் 50 சதவீதம் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு மட்டுமே அனுப்பப்படுகின்றன. அதேபோல, வெளிநாடுகளுக்குச் செல்லும் மொத்த பார்சல்களில் சுமார் 75 சதவீதம் பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.
35 சதவீத வளர்ச்சி: அஞ்சல்துறை மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் கடிதங்கள், தபால்கள், பார்சல்கள் எண்ணிக்கை நிகழாண்டில் (2019-20-ஆம் ஆண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரை) 8 மாதங்களில் 35 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஏப்ரல் முதல் நவம்பர் வரை 1,32,234 சர்வதேச விரைவு அஞ்சல்கள், பார்சல்கள், கடிதங்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை 98,621 சர்வதேச விரைவு அஞ்சல்கள், பார்சல்கள், கடிதங்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டன.
ரூ.32 கோடி வருவாய்: வெளிநாடுகளுக்கு பார்சல், கடிதங்கள், தபால்கள் அனுப்பியது மூலமாக, கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரை தமிழக அஞ்சல்துறைக்கு ரூ.32 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அதேநேரத்தில், 2018-19 -ஆம் நிதியாண்டில் ரூ.25 கோடி வருவாய் கிடைத்தது.

இதுகுறித்து, சென்னையில் உள்ளஅஞ்சல்துறையின் வெளிநாட்டு அஞ்சல் பிரிவு இயக்குநர் வி.சந்தானராமன் கூறியது: இந்திய அஞ்சல்துறை மிகவும் குறைவான கட்டணம் வசூலிப்பதால், வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் தபால்கள், பார்சல்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அத்துடன், நமது அஞ்சல் துறை நெட்வொர்க் மிகப்பெரியது என்பதால், வெளிநாடுகளுக்கு பார்சல்கள் எளிதாக சென்று சேருகின்றன.

இதுதவிர, அஞ்சல்துறை மூலம் வெளிநாடுகளுக்கு பார்சல்கள் அனுப்பும்போது, சுங்கத்துறை அனுமதியையும் எளிதாகப் பெற முடிகிறது. அதிக அளவு பார்சல்களை அனுப்பும் நிறுவனங்களின் இருப்பிடத்துக்கே சென்று அவற்றை சேகரிக்கும் சேவையும் அஞ்சல் துறை வழங்குகிறது.
வெளிநாடுகளுக்கு பார்சல்களை அனுப்பும்போது, வாடிக்கையாளர்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், அதை நிவர்த்தி செய்து தேவையான ஆவணங்களைப் பெற்று அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், அஞ்சல்துறை மூலம் வெளிநாடுகளுக்கு பார்சல்களை அனுப்பும்போது, சுங்கத்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதல் முழுமையாக பின்பற்றப்படுகிறது.

அஞ்சல்துறை மூலம் வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்ப, சம்பந்தப்பட்ட ஏற்றுமதியாளரிடம் இறக்குமதி -ஏற்றுமதி எண் (ஐஇசி கோடு) இருக்க வேண்டும். அத்துடன், ஏற்றுமதிக்கான அஞ்சலக பில்லையும் அவர்கள் விண்ணப்பித்து பெற வேண்டும். வெளிநாட்டு ஏற்றுமதிக்கான பார்சல்களை சர்வதேச அஞ்சல் நிலையங்கள் மூலமாக மட்டுமே அனுப்ப முடியும்.
விழிப்புணர்வு ஏற்படுத்துதல்: அஞ்சல்துறை மூலம், வெளிநாடுகளுக்கு பார்சல்கள் அனுப்பும் சேவை குறித்து குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றார் அவர்.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (எம்.எஸ்.எம்.இ) நல்ல வாய்ப்பு
தமிழக வட்ட அஞ்சல் துறை முதன்மைத் தலைவர் எம்.சம்பத் கூறியது: அஞ்சல்துறை மூலம் வெளிநாடுகளுக்கு பார்சல்கள் அனுப்புவதில் சிறு ஏற்றுமதியாளர்களுக்கு அதிக நன்மை கிடைக்கிறது. அவர்கள் தனியாக வெளிநாட்டுக்கு பார்சல் அனுப்புவதில் அதிக சிரமத்தைச் சந்திப்பார்கள். அதேநேரத்தில், அஞ்சல்துறை மூலமாக தங்கள் பார்சல்களை எளிதாக அனுப்ப முடியும். மேலும், அஞ்சல் துறை மூலம் வெளிநாடுகளுக்கு பார்சல்களை அனுப்ப குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) இது ஒரு நல்ல வாய்ப்பு ஆகும். இதைப் பயன்படுத்தி பலன் அடையலாம் என்றார் அவர்.

-மு. வேல்சங்கர்
'நீட்' தேர்வு பதிவுக்கு இன்று கடைசி நாள்

Added : ஜன 06, 2020 01:28

சென்னை : 'நீட்' தேர்வுக்கான விண்ணப்பங்களை பதிவு செய்ய, இன்று கடைசி நாள்.

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நடப்பு கல்வி ஆண்டில் படிக்கும் மாணவர்களுக்கு, மே, 3ல், நீட் தேர்வு நடத்தப்பட உள்ளது.இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, டிசம்பர், 2ல் துவங்கியது. இன்று வரை, பதிவுக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், இன்று இரவுக்குள் விண்ணப்ப பதிவை முடிக்கும்படி, தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தி உள்ளது.


4 மருத்துவ கல்லூரிகள்; தொழில்நுட்ப மதிப்பீட்டு குழு அனுமதி

Added : ஜன 06, 2020 01:18

சென்னை : தமிழகத்தில், மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லுாரிகளை அமைக்க, தமிழக அரசு முயற்சி மேற்கொண்டது.

இதன்படி, திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய ஆறு மாவட்டங்களில், மருத்துவக் கல்லுாரி அமைக்க, 2018 அக்டோபரில், மத்திய அரசு அனுமதி அளித்தது.இதன் தொடர்ச்சியாக, நவம்பரில், திருவள்ளூர், நாகை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், கூடுதலாக மூன்று புதிய மருத்துவக் கல்லுாரிகள் துவங்க அனுமதி கிடைத்தது.

இந்நிலையில், அரியலுார், கள்ளக்குறிச்சி, கடலுார், காஞ்சிபுரம் மாவட்டங்களில், மருத்துவக் கல்லுாரிகள் அமைக்க அனுமதி கோரி, மத்திய தொழில்நுட்ப மதிப்பீடு குழுவிடம், தமிழக அரசு விண்ணப்பித்தது.அதையேற்று, நான்கு மாவட்டங்களில் மருத்துவக் கல்லுாரிகள் துவக்க, தொழில்நுட்ப மதிப்பீட்டு குழு அனுமதி அளித்துள்ளது. இதை, தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
10:00 மணிக்குள் பதவியேற்பு விழா: ஆணையம் உத்தரவு

Added : ஜன 06, 2020 01:11

சென்னை : 'உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியேற்பு விழாவை, காலை, 10:00 மணிக்குள் நடத்த வேண்டும்' என, மாநில தேர்தல் ஆணையம் தெளிவுப்படுத்தி உள்ளது.

தமிழகத்தில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட, 91 ஆயிரத்து, 975 பதவிகளுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஒரு சில இடங்களில், முடிவு அறிவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிதாக வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள், இன்று பதவி ஏற்கின்றனர். தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ள அனைத்து ஊராட்சி அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், இதற்கான விழா, இன்று காலை, 10:00 மணிக்கு நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து, மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு, மாநில தேர்தல் ஆணைய செயலர் சுப்பிரமணியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பதவியேற்பு விழாவை, காலை, 10:00 மணிக்குள் நடத்த வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில், ஊராட்சி தலைவர் தாமாக பதவியேற்க வேண்டும். பின், ஊராட்சி தலைவர் முன்னிலையில், வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்க வேண்டும்.மாவட்ட கவுன்சிலர் அல்லது ஒன்றிய கவுன்சிலர் பதவியேற்பின் போது, அதிலுள்ளமூத்த உறுப்பினரை, முதலில் பதவி ஏற்க தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அழைக்க வேண்டும்.

அதன்பின், பதவி ஏற்ற மூத்த உறுப்பினர் முன்னிலையில், மற்ற மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், வார்டு வாரியாக பதவி ஏற்க வேண்டும். பதவி ஏற்பு குறித்த விவரங்களை, ஊராட்சி கூட்ட நடவடிக்கைக்கான புத்தகத்தில் பதிய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Sunday, January 5, 2020

வைகுண்ட வாசல் திறப்புக்குத் தயாராகத் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்... பக்தர்கள் கவனத்துக்கு!

மு.முத்துக்குமரன்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும். எதிரே நம்மாழ்வாருக்கு அருளியவாறே பரமபத வாசல் வழியாகப் பெருமாள் எழுந்தருளுவார்.


பெருமாள்

உலகளந்த பெருமாளைத் தரிசிப்பதற்கு உகந்த காலம், மார்கழி. குறிப்பாகப் பகல்பத்து முடிந்து ராப்பத்து தொடங்கும் இந்த ஏகாதசித் திருநாள், பெருமாளுக்கு மிகுந்த சிறப்புடையது. நாளை, வைகுண்ட ஏகாதசி. 108 திவ்ய தேசங்களில் முதல் திவ்யதேசமான ஸ்ரீரங்கம் தொடங்கி எல்லா பெருமாள் ஆலயங்களிலும் சொர்க்கவாசல் திறப்பு வெகு விமரிசையாக நடைபெறும்.

பெருமாள்

சென்னையில் அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு வைபவம் நாளை அதிகாலையில் நடைபெறவிருக்கிறது. இந்த வைபவத்தையொட்டி திருக்கோயிலில் இன்று நள்ளிரவு விஸ்வரூப தரிசனம் நடைபெறும். அடுத்து, அதிகாலை 2 மணிவரை தனுர் மாத பூஜை நடக்கும்.

அதிகாலை 2.15 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேதராக உற்சவமூர்த்தி வைர அங்கியோடு மகாமண்டபத்தில் எழுந்தருளுவார். உற்சவருக்கு அலங்காரம் நடைபெறும். பின்னர் 4 மணியளவில் பெருமாள் உள்பிராகத்தை வலம் வருவார். சொர்க்கவாசல் சரியாக அதிகாலை 4.30 மணிக்குத் திறக்கப்படும். எதிரே நம்மாழ்வாருக்கு அருளியவாறே பரமபத வாசல் வழியாகப் பெருமாள் எழுந்தருளுவார்.

பெருமாள்

உற்சவர், பரமபத வாசல் கடந்து திருவாய்மொழி மண்டபத்தில் வீற்றிருப்பார். கட்டண அனுமதிச்சீட்டு உள்ளவர்கள் தரிசனம் செய்வார்கள். பொது தரிசன பக்தர்கள், அதிகாலை 6 மணிமுதல் பெருமாளைத் தரிசிக்க மேற்குக் கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவர்.

சொர்க்க வாசல் கடந்து சுவாமியை தரிசித்த பின்னர் கிழக்குக் கோபுரம் வழியாகத் திரும்பலாம். பொது தரிசனம் இரவு 10 மணி வரையிலும் நடைபெறும். அன்றைய தினம் நள்ளிரவில் நம்மாழ்வாருடன் உற்சவர் வீதியுலா வருவார்.

பெருமாள்

விழாவைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளுவர் என்பதால் பல்வேறு ஏற்பாடுகள் திருக்கோயில் சார்பில் செய்யப்பட்டுள்ளன. மேலும், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகளும், பரமபத வாசல் திறப்பு வைபவத்தைக் கண்டுகளிக்க எல்.இ.டி, திரைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
`50 ரூபாய்க்கு 50 மில்லி!’- தஞ்சையில் கழுதைப் பால் விற்பனை அமோகம்

கே.குணசீலன்

``கழுதைப் பாலில் பல நன்மைகள் இருப்பதால் மாட்டு பசும் பாலை விட விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என வாங்கி குடிக்கின்றனர். இதில் வரும் வருமானத்தில் கழுதைகளை முறையாக பராமரித்து நாங்களும் வாழ்த்து வருகிறோம்”

தஞ்சாவூர் மாவட்டம், பெரம்பலூர் பகுதி தொழுதூரிலிருந்து 20 -க்கு மேற்பட்ட குடும்பத்தினர் நூற்றுக்கும் மேற்பட்ட கழுதைகளுடன் டென்ட் அடித்து தங்கியுள்ளனர். இவர்கள் பகல் நேரங்களில் கழுதைகளை மேய்ச்சலுக்கு விடுகின்றனர். தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஒவ்வொருவரும் ஒரு கழுதையுடன் தனித்தனியாக `பால்... கழுதை பால்’ என கூவிக் கொண்டே பல பகுதிகளுக்குச் செல்கின்றனர்.

கழுதைப் பால் குடித்தால் உடலில் உள்ள பெரும்பாலான நோய்கள் நீங்கும். அத்துடன் எந்த நோயும் உடலை தாக்காது. கைக்குழந்தை முதல் பல்லு விழுந்த பெரியவர்கள் வரை இதை குடிக்கலாம் என சொல்கின்றனர். இதைக் கேட்ட பொதுமக்கள் பலரும் கழுதைப் பாலை வாங்கி குடித்து விட்டு, தங்கள் குழந்தைகளையும் குடிக்க வைக்கின்றனர். பலர் கழுதைப் பாலை குடிக்கலாமா என அருவருப்பாகவும் பார்த்து விட்டு செல்கின்றனர். கழுதைப் பால் அப்பகுதியில் அமோக விற்பனையாகி வரும் நிலையில் இந்த பால குடிக்கலாமா குடிக்க கூடாதா என்கிற அச்சமும் சிலருக்கு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கழுதைப் பால் விற்பவரிடம் பேசினோம், ``எங்களுக்கு பரம்பரை பரம்பரையாக கழுதை வளர்த்து அதன் பாலை விற்பது தான் தொழில். கும்பலாக தமிழகத்தின் ஒவ்வொரு ஊருக்கும் சென்று அங்கேயே ஒரு மாதம் வரை தங்கி கழுதைப் பாலை விற்பது வழக்கம். இதில் வரும் வருமானத்தை வைத்து தான் வாழ்கை நடத்தி வருகிறோம். கழுதைப் பாலை வெறும் வயிற்றில் குடித்தால் ஆஸ்த்துமா, இருமல், பல விதமான தோல் நோய், மஞ்சள் காமாலை, ரத்த சோகை, உடல் சோர்வு உள்ளிட்ட பல நோய்கள் தாக்கியிருந்தால் அவை உடனே குணமாகி விடும். பிறந்து மூன்று நாட்களே ஆன குழந்தைக்கும் இந்த பாலை கொடுக்கலாம்.

அப்படி கொடுத்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை இதை பருகினால் உடலில் எந்த நோய் தாக்குதலும் வராது. நேரடியாக மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று எந்த கலப்படமும் இல்லாமல் உடனுக்குடன் கறந்து தருகிறோம். 50 மில்லி கழுதைப் பால் 50 ரூபாய்க்கு விற்கிறோம். கழுதைப் பாலில் பல நன்மைகள் இருப்பதால் பசும் பாலை விட விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என வாங்கி குடிக்கின்றனர். இதில் வரும் வருமானத்தில் கழுதைகளை முறையாக பராமரித்து நாங்களும் வாழ்த்து வருகிறோம்” என்றார்.

இது குறித்து டாக்டர் ஒருவரிடம் கேட்டபோது, ``கழுதைப் பால் குடித்தால் நோய்கள் தீரும் என்பது மூட நம்பிக்கை. குழந்தைகளுக்கு ஒரு வருடத்திற்கு பிறகு தான் பசும்பாலே கொடுக்கப்படுகிறது. ஆனால், மூன்று நாள்களில் கழுதைப் பாலை கொடுக்கலாம் என்கிறார்கள். கட்டாயமாக குழந்தைகளுக்கு கழுதைப் பாலை கொடுக்க கூடாது. போதிய விழிப்புணர்வு இல்லாததால் பெரியவர்களும் இதை வாங்கி குடிக்கின்றனர்” என்றார்.
Chhattisgarh nominates West Bengal doctor to Dental Council of India, sparks row

TNN | Dec 13, 2019, 05.12 PM IST

RAIPUR: Chhattisgarh government has nominated to Dental Council of India (DCI) a former controversial DCI chairman and a known doctor from West Bengal Dr Dibyendu Mazumder—sparking a row with many council members questioning his nomination on multiple grounds, including that he is facing cases registered by the Central Bureau of Investigation.

DCI members have written to union minister for health and family welfare Dr Harshvardhan and chief minister Bhupesh Baghel, questioning his nomination from Chhattisgarh, pointing out a full time dentist and resident of Kolkata got his dentist registration transferred to Chhattisgarh on November 29 and he was subsequently nominated by the state government to DCI. Quoting the dentist Act, DCI members said a dentist can transfer his registration from one state to another is he is shifting his practice or residence.

Pointing out that the CBI had earlier registered cases against Mazumdar, DCI member Dr Shaji K Joseph said the ministry of health and family welfare (MoHFW) had in September this year wrote to DCI noting that his DCI membership came to an end the day he attained 65 years of age and necessary action be taken to ensure that he had no access to official files nor discharge of any of the functions of DCI.

However, Chhattisgarh health minister T S Singhdeo strongly defended his nomination to DCI from Chhattisgarh saying “We go by his merits and potential for DCI than the CBI cases which are politically motivated”.

Singhdeo told TOI “to the best of my knowledge, there is no such reservation or limitation for nominating as state representative in DCI election. I am aware that even BJP is pushing someone as its representative from Karnataka”.

“Dr Muzumdar has been president of DCI during UPA regime. I strongly defend his nomination”. Many senior Congress leaders from other states have also suggested his name from Chhattisgarh”, he said adding “If the Congress high command have any objection, we can always revise the decision”.

Former DCI member from Chhattisgarh Dr Anil Khakaria said there are many capable and known dentists in the state and it is surprising that the health minister could find only a person whose tenure in DCI as its president has been marred with controversies. He said the dentists have already sought chief minister Bhupesh Baghel’s intervention to cancel his nomination in the interests of dentists of Chhattisgarh.

NEWS TODAY 25.01.2026