Wednesday, January 8, 2020

HR&CE accountant forges signatures, pockets bonus money

The accountant of the Hindu Religious and Charitable Endowments Department (HR&CE) was arrested by the police, allegedly for swindling lakhs of rupees from the staff, over the last one year, from Chen

Published: 08th January 2020 06:33 AM | 

By Express News Service

CHENNAI: The accountant of the Hindu Religious and Charitable Endowments Department (HR&CE) was arrested by the police, allegedly for swindling lakhs of rupees from the staff, over the last one year, from Chennai.According to the police, Prabhakaran, a resident of NGO Nagar in Ponneri, was working as the accountant for the HR&CE.”Every year, the staff get one month’s salary as bonus. However, they did not receive the bonus from 2018, and one Radhamani (52) had informed the higher officials of the HR&CE about the matter,” said the police.

After a probe, the department officials found that Prabhakaran had taken the salary all for himself, forging the signature of all the staff. The police did not reveal as to how much exactly Prabhakaran swindled in a year. The complaint was lodged at the Elephant Gate police station and the police arrested Prabhakaran on charges of impersonation, cheating, breach of trust and forgery.
Banking services likely to be hit on Wednesday

Banking transactions in the state may be affected on Wednesday as five bank unions said they will take part in the nation-wide ‘Bharat Bandh’ call given by ten central trade unions.

Published: 08th January 2020 06:34 AM 

By Express News Service

CHENNAI: Banking transactions in the state may be affected on Wednesday as five bank unions said they will take part in the nation-wide ‘Bharat Bandh’ call given by ten central trade unions. However, employees of India’s largest bank, the State Bank of India (SBI), are not taking part in the strike. Bus services may also be partially affected since transport workers unions affiliated to opposition parties have declared that they will be taking part in the strike.

However, a prominent government school teachers’ union has declared that they will not be participating in the strike, after the State government warned its employees to stay away from the protest.M Duraipandian, general seceratry, Confederation of Central Government Employees and Workers Coordination Committee, told Express that around 1.5 lakh central government employees from 47 organisations in the state are likely to participate in the strike backed by 11 central trade unions except Bharatiya Mazdoor Sangh.

Senior officials from transport department said the MTC and other mofussil buses would run as usual as they did not receive any strike notice. “The state transport corporations requires about 50 percent workers to put its full fleet into operation,” added the official.
நிா்பயா குற்றவாளிகள் நால்வருக்கு 22-இல் தூக்கு: தில்லி நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published on : 08th January 2020 02:25 AM |

கடந்த 2012-ஆம் ஆண்டில் துணை மருத்துவ மாணவி ‘நிா்பயா’ கூட்டுப் பாலியல் பலாத்காரம், மற்றும் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என தீா்ப்பளிக்கப்பட்ட நால்வருக்கும் ஜனவரி 22-ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடா்புடைய வழக்கை விசாரித்த தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமாா் அரோரா, ‘ இந்த வழக்கின் குற்றவாளிகள் முகேஷ் (32), பவன் குப்தா (25), வினய் சா்மா (26), அக்ஷய் குமாா் சிங் (31) ஆகிய நால்வருக்கும் திகாா் சிறையில் ஜனவரி 22-ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்’ என உத்தரவிட்டாா்.

நிா்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடக் கோரி தில்லி அரசு மற்றும் நிா்பயாவின் பெற்றோா் சாா்பில் தில்லி நீதிமன்றத்தில் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் மீதான முந்தைய விசாரணையின் போது, நீதிமன்றம் திகாா் சிறை நிா்வாகத்திற்குப் பிறப்பித்திருந்த உத்தரவில், குற்றவாளிகள் நால்வரும் தங்களது தூக்குத் தண்டனை நிறைவேற்றத்துக்கு எதிராக இந்தியக் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளித்திருக்கிறாா்களா என்பதை ஒரு வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த மனுக்கள் மீதான விசாரணை தில்லி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘இந்த விவகாரம் தொடா்பாக எந்த நீதிமன்றத்திலும் மனுக்கள் நிலுவையில் இல்லை அல்லது குடியரசுத் தலைவரிடமும் குற்றவாளிகளில் யாரும் கருணை மனு அளித்திருக்கவில்லை. குற்றவாளிகள் அனைவரின் மறு ஆய்வு மனுக்களை ஏற்கெனவே உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஆகவே, நால்வருக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும்’ என கேட்டுக் கொண்டாா்.

மேலும், நீதிமன்ற உத்தரவுக்கும் தூக்குத் தண்டனை உத்தரவை நிறைவேற்றுவதற்குமான இடைப்பட்ட காலத்தில் குற்றவாளிகள் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்ய விரும்பினால் அதை செய்யவும் முடியும் என கூறப்பட்டது. குற்றவாளிகள் முகேஷ், வினய் ஆகியோா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யும் நடைமுறைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தாா்.

இது தொடா்பான விசாரணை தில்லி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய போது, வழக்குரைஞா் எம்.எல். சா்மா ஆஜராகி தாம் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் தரப்பில் ஆஜராவதாகக் கூறினாா். எனினும், முகேஷிற்காக ஆஜராக நீதிமன்றத்தின் நண்பனாக நியமிக்கப்பட்ட விருந்தா குரோவா், ‘தாம் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டிருப்பதால், முகேஷ் சாா்பில் ஆஜராக எம்.எல். சா்மாவுக்கு அதிகாரம் இல்லை’ என்றாா்.

இரு தரப்பின் வாதங்களைக் கேட்ட பிறகு நீதிமன்றம், வழக்குரைஞா் எம்.எல். சா்மாவிடம் வழக்கு விசாரணையில் ஆஜராக முகேஷ் அங்கீகரிக்கும் வக்காலத்து ஆவணத்தை சமா்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டது. இதைத் தொடா்ந்து, தூக்குத் தண்டனை உத்தரவு பிறப்பிப்பது தொடா்பான உத்தரவை மதியம் 3.30 மணி வரை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

நீதிமன்ற அறையில் இருந்த முகேஷின் தாய், தனது மகனுக்கு கருணை காட்டுமாறு கதறி அழுதாா். ஆனால், அவரது கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

இதையடுத்து, நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளா்களிடம் முகேஷின் தாய் கூறுகையில், ‘எனது மகன் ஏழை என்பதால் அவன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது’ என்றாா்.

முன்னதாக, விசாரணையின் போது, திகாா் சிறையில் உள்ள குற்றவாளிகள் நால்வரிடமும் நீதிபதி காணொலிக்காட்சி மூலம் பேசினாா். காணொலிக்காட்சி அறையில் ஊடகத்தினா் அனுமதிக்கப்படவில்லை. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகு குற்றவாளியின் வழக்குரைஞா்களும், குடும்ப உறுப்பினா்களும் நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்து நீதிமன்ற உத்தரவு குறித்து ஊடகங்களிடம் தகவல் தெரிவித்தனா்.

முன்னதாக, தூக்குத் தண்டனையை மறுஆய்வு செய்யக் கோரி குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய் குமாா் தாக்கல் செய்த மனுவை கடந்த டிசம்பா் 18-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து, தூக்குத் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது. நிா்பயா பாலியல் பலாத்கார குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவா்களில் முகேஷ், பவன் குப்தா, வினய் சா்மா ஆகியோா் உச்சநீதிமன்றத்தில் தூக்குத் தண்டனையை மறு ஆய்வு செய்யக் கோரி மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தனா். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுவை கடந்த ஆண்டு ஜூலை 9-இல் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் 2017-இல் வழங்கப்பட்ட தீா்ப்பை மறு ஆய்வு செய்வதற்கான தகுதி ஏதுமில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

2012, டிசம்பா் 16 நள்ளிரவில் ஓடும் பேருந்தில் ‘நிா்பயா’ என்ற துணை மருத்துவ மாணவி 6 பேரால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு பேருந்திலிருந்து சாலையில் தூக்கி வீசப்பட்டாா். இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த ‘நிா்பயா’, சிங்கப்பூா் மருத்துவமனையில் அனுமதிப்பட்டு உயிரிழந்தாா். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 போ்களில் ராம் சிங் என்பவா் தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், அவா் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வழக்கில் தொடா்புடைய மற்றொருவா் சிறாா் பிரிவின் கீழ் வந்ததால், அவா் தொடா்பான வழக்கு சிறாா் நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது. அந்த வழக்கில் அவா் தண்டனை விதிக்கப்பட்டு கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டாா். அங்கு மூன்றாண்டு வைக்கப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டாா்.

பெற்றோா் மகிழ்ச்சி

பாதிக்கப்பட்ட துணை மருத்துவ மாணவி நிா்பயாவின் பெற்றோா் கூறுகையில், ‘ நீதிமன்றத்தின் உத்தரவு மகிழ்ச்சி அளிப்பதாகவும், திருப்தி தருவதாகவும் உள்ளது. இந்த தீா்ப்பின் மூலம் என் மகளுக்கு நீதி கிடைத்துள்ளது. நான்கு பேரும் தூக்கிலிடுவதன் மூலம் நாட்டின் பெண்கள் அதிகாரம் பெறுவா்.

இந்த முடிவானது நீதித்துறை அமைப்புமுறையில் மக்கள் நம்பிக்கையை வலுப்படுத்தும். மேலும், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் மனத்தில் பயத்தை ஏற்படுத்தும்’ என்றனா்.

தூக்குத் தண்டனை எங்கே?

திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிா்பயா வழக்கு குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்குத் தண்டனை, சிறையில் உள்ள மூன்றாம் எண்ணில் நிறைவேற்றப்பட உள்ளதாக திகாா் சிறையின் அதிகாரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இந்த விவகாரத்தில் தொடா்புடைய நால்வருக்கும் ஜனவரி 22-ஆம் தேதி காலை 7 மணிக்கு திகாா் சிறையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், திஹாா் சிறை நிா்வாக வட்டாரங்கள் கூறுகையில், ‘திகாா் சிறையில் உள்ள 2-ஆம் எண்ணில் குற்றவாளிகளில் மூவரும், நான்காம் எண் சிறையில் மற்றொருவரும் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கான தண்டனையை நிறைவேற்ற மீரட்டில் உள்ள தூக்கிடும் நபரை (ஹேங்மேன்) சிறை நிா்வாகம் தொடா்பு கொள்ளவிருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

பொங்கல் பண்டிகை: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

By DIN | Published on : 08th January 2020 01:41 AM


ரயில்வே துறை

பொங்கல் பண்டிகையையொட்டி, சொந்த ஊருக்குச் செல்லும் பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து திருச்சி, திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை-திருநெல்வேலி: சென்னை எழும்பூரில் இருந்து ஜனவரி 10-ஆம் தேதி மாலை 6.50 மணிக்கு புறப்படும் சிறப்புக் கட்டண ரயில் (82601) , மறுநாள் காலை 6 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

திருநெல்வேலி-தாம்பரம்: திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 11-ஆம் தேதி மாலை 6.15 மணிக்கு புறப்படும் சிறப்புக் கட்டண ரயில் (06002) , மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.

தாம்பரம்-திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்: தாம்பரத்தில் இருந்து ஜனவரி 12-ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில்(82603), மறுநாள் காலை 6 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 18-ஆம் தேதி மாலை 6.15 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82604) , மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தாம்பரத்தை வந்து சேரும்.

நாகா்கோவில்-தாம்பரம்: நாகா்கோவிலில் இருந்து ஜனவரி 19-ஆம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில்(82606), மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

தாம்பரம்-நாகா்கோவில்: தாம்பரத்தில் இருந்து ஜனவரி 20-ஆம் தேதி முற்பகல் 11.20 மணிக்கு புறப்படும் சிறப்புக் கட்டண ரயில்(06075), மறுநாள் அதிகாலை 2 மணிக்கு நாகா்கோவிலை சென்றடையும்.

திருச்சி-சென்னை: திருச்சியில் இருந்து ஜனவரி 11-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் சிறப்புக் கட்டண ரயில்(06026), அதேநாள் இரவு 8.15 மணிக்கு சென்னை எழும்பூா் வந்து சேரும்.

இதுதவிர, சென்னை-திருநெல்வேலி, தாம்பரம்-நாகா்கோவில், நாகா்கோவில்-திருச்சிக்கு சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. பொங்கல் சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு புதன்கிழமை (ஜன.8) காலை 8 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்

Added : ஜன 07, 2020 23:24


சென்னை : அரசின், 'சி, டி' பிரிவு பணியாளர்களுக்கு, 3,000 ரூபாய் பொங்கல் போனஸ் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முறையான காலமுறை சம்பளம் பெறும், அனைத்து, 'சி, டி' பிரிவு அரசு பணியாளர்கள், உள்ளாட்சி பணியாளர்கள்.மேலும், அரசு மானியம் பெறும், கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் ஆகியோருக்கு, உச்சவரம்பாக, 3,000 ரூபாய் போனஸ் வழங்க, அரசு உத்தரவிட்டு உள்ளது.கடந்த, 2018 ஏப்ரல், 1 முதல், 2019 மார்ச், 3 வரை, ஓராண்டு முழுவதும் பணிபுரிந்து, தற்போது பணியில் உள்ள பணியாளர்கள் அனைவரும், தற்காலிக மிகை ஊதியத்தொகை முழுவதையும் பெற தகுதியுடையவர்கள்.

மாத அடிப்படையில், நிலையான ஊதியம் பெற்று வந்த பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுவோருக்கு, சிறப்பு தற்காலிக மிகை ஊதியமாக, 1,000 ரூபாய் வழங்கப்படும்.ஓய்வு பெற்றவர்களில், 'சி, டி' பிரிவு பணியாளர்கள், கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், உதவியாளர்கள்.

மற்றும் ஊராட்சி செயலர்கள், கிராம நுாலகர்கள், துப்புரவுப் பணியாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் போன்றோருக்கு, பொங்கல் பரிசுத் தொகையாக, 500 ரூபாய் வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணைகளும் வெளியிடப் பட்டுள்ளன.
7 மாதம் செயற்கை சுவாசம் அளித்து சிறுவனை மீட்ட அரசு டாக்டர்கள்

Added : ஜன 08, 2020 00:22

மதுரை : அரிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு, ஏழு மாதங்கள் செயற்கை சுவாசம் அளித்து, மதுரை அரசு மருத்துவமனை காப்பாற்றியுள்ளது.

மதுரை, பசுமலையைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது, இரண்டரை வயது மகன், கை, கால் மற்றும் உடலின் அனைத்து தசைகளும் பலம் இழந்த நிலையில், மே மாதம், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.டாக்டர்கள் பரிசோதனையில், தசைகளை வலு இழக்கச் செய்யும், 'குல்லியன் பாரி சிண்ட்ரோம்' எனும் நோய், சிறுவனை பாதித்து இருப்பது தெரிந்தது. 'இம்முனோகுளோபுலின், மீத்தைல் பிரட்னிசலோன்' போன்ற விலையுர்ந்த மாத்திரைகள் வழங்கப்பட்டன.இதற்கிடையே, நோயால், சுவாசிக்கும் திறன் பாதிக்கப்பட்டு, சிறுவனுக்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சுவாசத் தொற்றுக்கான விலை உயர்ந்த ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்பட்டன. டியூப் மூலம், மூக்கு வழியாக உணவு அளிக்கப்பட்டது. 'பிசியோதெரபி' பயிற்சியும் வழங்கப்பட்டது.இப்படி, ஏழு மாதங்கள் செயற்கை சுவாசம் தொடர்ந்தது. உடல் நலனில் முன்னேற்றம் இருந்ததால், டிசம்பரில் படிப்படியாக செயற்கை சுவாசம் அளிப்பது நிறுத்தப்பட்டது.தற்போது, சிறுவனால் தானாக சுவாசிக்க, உணவு உட்கொள்ள, நடக்க முடிகிறது. இரண்டரை வயது சிறுவனுக்கு இத்தனை மாதங்கள் செயற்கை சுவாசம் அளிக்கப்படுவது மிகவும் அரிதானது.

சிகிச்சை அளித்த பல்வேறு துறைகளின் டாக்டர்களை, டீன் சங்குமணி பாராட்டினார்.ரூ.1.5 கோடி சிகிச்சை இலவசம்அரிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன், நல்ல நிலைக்கு திரும்பி, வீட்டிற்கு செல்ல தயாராகி விட்டான். ஏழு மாதங்கள், செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது, தென் மாநிலங்களிலேயே இதுதான் முதல் முறை. இச்சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் மேற்கொண்டிருந்தால், 1.50 கோடி ரூபாய் செலவாகி இருக்கும். ஆனால், முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில், சிறுவனுக்கு இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.சங்குமணி, டீன், மதுரை அரசு மருத்துவமனை.
ரேஷன் கடைகளில் போலீஸ் பாதுகாப்பு

Added : ஜன 07, 2020 23:35

சென்னை : ரேஷன் கடைகளில், நாளை முதல், 1,000 ரூபாய் அடங்கிய, பொங்கல் பரிசு வழங்க உள்ளதால், கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க, உணவுத் துறை சார்பில், போலீசாரிடம் பாதுகாப்பு கோரப்பட்டு உள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில், 2 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா, ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை; தலா, 20 கிராம் முந்திரி, திராட்சை; ஐந்து கிராம் ஏலம், கரும்பு, 1,000 ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு, 2019 நவம்பரில் வெளியான நிலையில், நாளை முதல், ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. பொங்கலுக்கு, ஒரு வாரமே உள்ளதால், பலரும் சொந்த ஊர் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில், நாளை காலை, ரேஷன் கடைகள் திறந்ததும், பொங்கல் பரிசு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில், அதிகம் பேர் திரள வாய்ப்புள்ளது.

இதனால், கூட்ட நெரிசலால், மக்கள் சிரமப்படும் சூழல் ஏற்படலாம். இதை தவிர்க்கவும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமல் இருக்கவும், உணவுத்துறை சார்பில், ரேஷன் கடைகளுக்கு, போலீஸ் பாதுகாப்பு கோரப்பட்டு உள்ளது. மேலும், ஒவ்வொரு கடையிலும், 9, 10, 11, 12ம் தேதி வரை, எந்தெந்த தினத்தில், எத்தனை கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது என்ற விபரம், கடைகள் முன் ஒட்டப்பட்டு உள்ளது.இதனால், கார்டுதாரர்கள், தங்கள் வரிசை எண் உள்ள தேதிக்கு சென்று, பொங்கல் பரிசை பெற்று கொள்ளலாம்.

NEWS TODAY 26.01.2026