Sunday, January 19, 2020

HC: Banks can’t have a say on staff union membership

TNN | Jan 19, 2020, 04.04 AM IST

Chennai: The Madras high court has made it clear that the right to admit a nationalised bank employee as a member of a particular union vests with the union concerned and that the bank has no say over it.

Justice K Ravichandrabaabu made the observation while modifying a circular issued by the Union finance ministry directing all the nationalised banks to facilitate auto deduction of membership subscription of employees’ unions from the salary of their staff.

Disposing of the pleas moved by Canara Bank Employees Union and Canara Bank Officers Association, the court said such banks cannot auto debit such subscription fee without the concurrence of the union/association concerned.

The issue pertains to a circular issued by the finance ministry dated November 25, 2019 to all nationalised banks regarding online facility for recording/modifying employee mandate for deduction of association membership subscription from salary.

Claiming that the circular is against the basic tenets of trade union rights to admit the members and regulate the same, the associations has approached the court seeking to quash the circular.

“By enabling auto admission of members by accepting their subscription fee automatically from their salary, the union concerned is deprived of its right to accept or reject membership of an individual applicant on valid grounds,” the petitioners said.

Responding to the plea, the finance ministry submitted that the ultimate deduction from the salary of an employee towards subscription of union is only at his/her written request and not at the request of the union.

Such request for deduction of subscription from salary was hitherto submitted in physical format which is now digitalised, and the employees are advised to submit the same through their office application. The said guidelines are only to align with the advent of technology and seamless movement of such request and for immediate implementation of such request of deduction of subscription and therefore, there is no violation of any legal right of the petitioner, the ministry said.
None but witnesses can prove rash driving charge: HC

TNN | Jan 19, 2020, 04.51 AM IST

Chennai: Only eyewitnesses can prove charges of rash and negligent driving, without such a witness such charge cannot hold good, the Madras high court has said.

Justice K Ravichandrabaabu made the observation while dismissing an appeal moved by the Tamil Nadu State Transport Corporation (TNSTC) against the order of a labour court dated November 12, 201,3 directing the corporation to pay Rs 2 lakh compensation to the kin of a driver who was wrongly terminated by the TNSTC.

G Gopal (now deceased), was working as a driver for the corporation’s Villupuram division. On February 14, 1999, a bus driven by Gopal met with an accident in which three people died. According to Gopal, the accident was not due to his negligence or rash driving, but due to the fact that the vehicle was not properly maintained. However, the management terminated Gopal from service. Aggrieved, Gopal moved the labour court challenging his dismissal, which directed the corporation to pay Rs 2 lakh as compensation to Gopal’s kin as no eyewitnesses were examined to substantiate the charges levelled against him. TNSTC moved the present appeal challenging the same.

Rejecting the appeal, Justice Ravichandrabaabu said: “The right persons to speak about the accident are the eyewitnesses.” No eyewitness was examined in this case, he pointed out, adding: “The labour court was right in concluding that the dismissal of the deceased is not just.”

Thursday, January 16, 2020

Nirbhaya Case : Delhi HC Refuses To Interfere With The Death Warrant Issued By Trial Court

Nirbhaya Case : Delhi HC Refuses To Interfere With The Death Warrant Issued By Trial Court: Delhi High Court has refused to interfere with the order passed by the Sessions Court on January 7 for the execution of the four convicts in the Nirbhaya rape case. The Division Bench of Justice...

வெறிச்சோடியது சென்னை மாநகர்!

By DIN | Published on : 15th January 2020 10:35 AM

 


சென்னை: பொங்கல் திருநாள் தொடர் விடுமுறை காரணமாக சென்னை மாநகரமே வெறிச்சோடிக் கிடக்கிறது. வீதிகளில் மக்கள் நடமாட்டம் மிகக் குறைவாக இருக்கிறது. வாகனப் போக்குவரத்து அறவே இல்லை. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்களே செல்கின்றன.

மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைக்கப்பட்டுவிட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாகவே பேருந்துகள் செல்கின்றன. இரு சக்கர வாகனங்களும் அதிகளவில் சாலைகளில் செல்லவில்லை. ஏறத்தாழ நூறு சதவிகிதமான கடைகள் மூடப்பட்டுள்ளன. மிக மிகக் குறைந்த அளவில் சில உணவகங்களும் தேநீர்க் கடைகளுமே திறந்திருக்கின்றன.

சென்னைப் புத்தகக் காட்சி நடைபெறும் நந்தனம் ஒய்எம்சிஏ திடல் பகுதியில் ஓரளவு வாசகர்கள் வந்துசெல்கின்றனர். சென்னை மாநகரின் குறிப்பிட்ட பகுதிகள் தவிர்த்து, புதிதாக உருவான குடியிருப்புப் பகுதிகள் முழுவதும் ஆளரவமின்றிக் காணப்படுகின்றன.

சென்னை மாநகர மக்களில் வெளியூர்களிலிருந்து தொழில், வேலை உள்பட பல்வேறு காரணங்களால் குடியேறியவர்களே பெரும்பான்மையானவர்கள். தென் மாவட்டங்களிலிருந்து வந்தவர்கள் ஏராளம். எல்லா வகையிலும் இவர்களுக்குச் சென்னையே தங்கள் ஊராக மாறிவிட்டிருந்தாலும் பொங்கல் திருவிழாக் காலத்தில் (தொடர்ந்து நான்கு அல்லது ஐந்து நாள்கள் விடுமுறையாக இருப்பதும் முக்கிய காரணம்) சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.

லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டதாலும் சென்னையைச் சேர்ந்தவர்களே கூட தொடர் விடுமுறை காரணமாக வெளியூர்களுக்கும் சுற்றுலாக்களுக்கும் சென்றுவிட்டதாலும் ஒட்டுமொத்த சென்னை மாநகரே அமைதியாக அரவமின்றிக் கிடக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறைக் காலம் என்பதால் வரும் திங்கள்கிழமை, மக்கள் எல்லாம் வெளியூர்களிலிருந்து திரும்பிய பிறகுதான் சென்னை மாநகர், தனது வழமையான பணிக்கும் பரபரப்புக்கும் திரும்பும்.

இழுத்தடிப்பு! 'நிர்பயா' குற்றவாளி மீண்டும் கருணை மனு; ஜன., 22ல் தூக்கு தண்டனை நிறைவேறுமா
?

Updated : ஜன 16, 2020 00:02 | Added : ஜன 15, 2020 22:56

புதுடில்லி: டில்லியில் மருத்துவ மாணவி 'நிர்பயா' பாலியல் பலாத்காரம், கொலை வழக்கில் துாக்கு தண்டனையை நிறைவேற்ற பிறப்பிக்கப்பட்டுள்ள 'வாரன்டு'க்கு தடை விதிக்க டில்லி உயர் நீதிமன்றம் மறுத்தது. 'அதே நேரத்தில் செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுகலாம்' என கூறியுள்ளது. இந்த நிலையில், 'திட்டமிட்டபடி, ஜன. 22ல் தண்டனை நிறைவேற்ற முடியாது' என டில்லி அரசு கூறியுள்ளது.

டில்லியில் மருத்துவ மாணவி நிர்பயா 2012ல் ஆறு பேர் கும்பலால் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சித்தரவதை செய்யப்பட்ட அவர் பஸ்ஸில் இருந்து துாக்கி வீசப்பட்டார். சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு பேரில் ஒருவர் சிறுவன் என்பதால் சிறார் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அவரை மூன்று ஆண்டுகள் சிறார் சிறையில் அடைக்கும்படி தீர்ப்பு அளிக்கப்பட்டது. மற்றொரு குற்றவாளியான ராம் சிங் சிறையில் தற்கொலை செய்தார். இந்த வழக்கில் முகேஷ் 32 வினய் சர்மா 26 அக் ஷய் குமார் சிங் 31 பவன் குப்தா 25 ஆகியோருக்கான துாக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது.

நால்வருக்கும் துாக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு டில்லி நீதிமன்றம் சமீபத்தில் வாரன்ட் பிறப்பித்தது. அதன்படி 'ஜன. 22ம் தேதி டில்லி திகார் சிறையில் தண்டனை நிறைவேற்றப்படும்' என அறிவிக்கப்பட்டிருந்தது. தண்டனை நிறைவேற்றும் வாரன்டை எதிர்த்து குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங் டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் ஜனாதிபதிக்கு கருணை மனுவையும் அவர் அனுப்பியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் மன்மோகன் சங்கீதா, திங்கரா செஹல் அடங்கிய டில்லி உயர் நீதிமன்ற அமர்வு நேற்று விசாரித்தது. 'வாரன்டில் எந்தத் தவறும் இல்லை. அதனால் அதற்கு தடை விதிக்க முடியாது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என அமர்வு கூறியது. அதே நேரத்தில் 'மனுதாரர் டில்லி செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுகலாம்' என அமர்வு கூறியுள்ளது.

அப்போது டில்லி அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகுல் மெஹ்ரா கூறியதாவது: தண்டனையை இழுத்தடிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக நான்கு பேரும் மாறி மாறி புது மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். தற்போது ஒரு குற்றவாளி தண்டனையை நிறைவேற்றும் வாரன்டை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் ஜனாதிபதிக்கும் கருணை மனுவை அனுப்பியுள்ளார்.

அதே நேரத்தில் மற்ற மூவரும் எந்த மனுவையும் தாக்கல் செய்யவில்லை. முகேஷ் குமார் சிங்கின் கருணை மனு மீது முடிவு எடுக்கப்படும் வரை தண்டனையை நிறைவேற்ற முடியாது. ஒரே நேரத்தில்தான் நான்கு பேரின் தண்டனை நிறைவேற்ற வேண்டும். அதனால் திட்டமிட்டபடி 'ஜன. 22ம் தேதி தண்டனையை நிறைவேற்றுவது சந்தேகமே. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அமர்வு கூறியதாவது: சட்டவிதிகள் சரியாக இல்லை. இதுபோன்ற குழப்பங்கள் நடந்தால் மக்களுக்கு நீதியின் மீதான நம்பிக்கை போய்விடும். இவர்களுக்கான தண்டனை உறுதி செய்யப்பட்ட உடனேயே கருணை மனுவை தாக்கல் செய்யும்படி ஏன் வலியுறுத்தவில்லை. அதேபோல் குற்றஞ்சாட்டப்பட்டவர்களும் இத்தனை காலம் காத்திருந்து கடைசி நேரத்தில் மனுக்களை தாக்கல் செய்வது சரியல்ல. இவ்வாறு அமர்வு கூறியது.

உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தண்டனையை நிறைவேற்றும் வாரன்டை எதிர்த்து 'டில்லி செஷன்ஸ் நீதிமன்றத்தில் முகேஷ் சார்பில் நேற்று மாலை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 'கருணை மனு நிலுவையில் உள்ளதால் துாக்கு தண்டனையை நிறைவேற்றும் உத்தரவை ஒத்திவைக்க உத்தரவிட வேண்டும்' என மனுவில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதிலளிக்கும்படி டில்லி அரசுக்கும் மாணவியின் பெற்றோருக்கும் 'நோட்டீஸ்' அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முகேஷ் சிங் தாக்கல் செய்துள்ள கருணை மனுவை ரத்து செய்யும்படி டில்லி அரசு பரிந்துரைத்துள்ளது. ''மின்னல் வேகத்தில் செயல்பட்டுள்ளோம். கருணை மனுவை நிராகரிக்கும்படி பரிந்துரை கடிதத்தை துணை நிலை கவர்னருக்கு அனுப்பியுள்ளோம். அது மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உடனடியாக அனுப்பப்பட்டுள்ளது'' என ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டில்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா கூறியுள்ளார்.

23 முறை விதிமீறல்:திகார் சிறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஏழு ஆண்டுகளில் சிறையில் இருந்தபோது நிர்பயா குற்றவாளிகள் 23 முறை சிறை விதிகளை மீறியதற்கான தண்டனையை பெற்றுள்ளனர். இதில் வினய் 11 முறை, அக் ஷய் ஒரு முறை, முகேஷ் மூன்று முறை, பவன் எட்டு முறை விதி மீறினர். சிறையில் இருந்தபோது வேலை செய்ய முகேஷ் மறுத்தார். அதே நேரத்தில் அக் ஷய் வேலை செய்து 69,000 ரூபாய், பவன் 29 ஆயிரம் ரூபாய், வினய் 39 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெற்றனர். 2016ல் முகேஷ், பவன் மற்றும் அக் ஷய் 10ம் வகுப்பு தேர்வு எழுதினர்; ஆனால் தேர்ச்சி பெறவில்லை, என்றனர்.

கருணை மனு நிலுவையில் உள்ளதால், நால்வரின் துாக்கு தண்டனை, திட்டமிட்டபடி நிறைவேற்ற இயலாது என நீதிமன்றத்தில் டில்லி அரசு கூறியுள்ளது. தாமதப்படுத்தும் இந்த நடவடிக்கையை ஏற்க முடியாது. ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, ஜன. 22ல் துாக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும்.

ரயில் பயணத்தில் சினிமா பார்க்கலாம்

Added : ஜன 15, 2020 23:58

புதுடில்லி: ரயில் பயணத்தின்போது தங்களுக்கு விருப்பமான சினிமா அல்லது நிகழ்ச்சியை பார்க்கும் வசதி 2022ல் பயணியருக்கு வழங்கப்பட உள்ளது.

இது குறித்து ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரிகள் கூறியதாவது: தற்போது நாடு முழுவதும் உள்ள 5563 ரயில் நிலையங்களில் 'வை - பை' வசதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர அனைத்து ரயில்களிலும் வை - பை வசதி செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் பயணத்தின் போது தங்களுக்கு விருப்பமான சினிமா 'டிவி' நிகழ்ச்சி இசை கல்வி நிகழ்ச்சிகளை பார்க்கும் வசதி பயணியருக்கு வழங்கப்பட உள்ளது. சில சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்.மேலும் தாங்கள் செல்லும் ஊர்களில் கார் பஸ் ரயில்களுக்கான முன்பதிவு வசதிகளையும் ரயில்களில் பயணிக்கும்போதே செய்து கொள்ளலாம். இதைத் தவிர ரயில்களில் மக்களுக்கு தேவையான தகவல்கள் அளிக்கும் வசதியும் செய்யப்பட உள்ளது. இந்த சேவைகள் அளிப்பதற்கான நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும் 2022ல் அனைத்து ரயில்களிலும் இந்த வசதி களைப் பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Wednesday, January 15, 2020

NEWS TODAY 28.01.2026