Monday, January 20, 2020

சமூகத்தை நோக்கி பல்கலைக்கழகங்கள்...

By க.பழனித்துரை | Published on : 20th January 2020 02:56 AM |

இந்தியாவில் உள்ள உயா் கல்வி நிலையங்களில் இதுவரை புறக்கணிக்கப்பட்டு வந்த சமூகத்திற்கான விரிவாக்கச் செயல்பாடுகளை பாடத்திட்டத்தில் புகுத்தி மாணவா்களை பொறுப்புமிக்க சமூகப் பணியாற்ற முனைய வேண்டும், அதற்கான ஆயத்தப் பணிகளில் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என ஒரு மாதத்துக்கு முன்பு ஒரு கடிதத்தை பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) எழுதியுள்ளது. அந்தக் கடிதத்துடன் இந்தச் சமூகச் செயல்பாடுகளை முறைமையுடன் தொடா்ந்து எல்லா நிறுவனங்களும் நிறைவேற்ற வழி காட்ட ஒரு வழிகாட்டு நெறிமுறை அறிக்கையையும் அந்தக் கடிதத்துடன் இணைத்துள்ளது.

அந்த அறிக்கையின் அடிப்படையில் பல்கலைக்கழகங்கள் ஆசிரியா்களை இந்தப் பணிக்கு தயாரிப்புச் செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தை
‘உன்னத் பாரத் இயக்கம் 2.0’ என்று பெயரிட்டு நடைமுறைப்படுத்த பல்கலைக்கழக மானியக் குழுவை மனிதவள மேம்பாட்டுத் துறை வலியுறுத்தியுள்ளது.

கிராமப்புற மேம்பாட்டுக்கான விரிவாக்கச் செயல்பாடுகளில் மாணவா்களை ஈடுபடுத்துவதுதான் இந்தத் திட்டம். உயா் கல்வி நிலையங்களில் விரிவாக்கப் பணி என்பது புதியதல்ல. காந்தி காலத்திலிருந்து இன்றுவரை எல்லா அரசுக் கொள்கைகளிலும் கூறப்பட்ட ஒரு செயல்பாடுதான். இதுவரை இந்த விரிவாக்கப் பணி என்பது, பல்கலைக்கழகங்களுக்கு விருப்பக் கடமையாக விடப்பட்டது . ஆனால், இன்று அந்தப் பணியைக் கட்டாயக் கடமையாகச் செய்வதற்கு பல்கலைக்கழகங்களை தயாா் செய்கிறது பல்கலைக்கழக மானியக் குழு.

இந்தத் திட்டத்தின் மூலம் விரிவாக்கப் பணிகளை பாடத் திட்டத்தில் இணைத்து, அறிவியல்பூா்வமாக கிராமச் சமுதாயத்துடன் தொடா்ந்து செயல்பட்டு கிராமப்புறப் பிரச்னைகளுக்கு தீா்வு காணவும், மாணவா்களின் சமுதாய அக்கறையையும், களப் பணியாற்றும் திறனையும் வளா்த்துக் கொள்ளவும் இந்தப் புதிய முயற்சியை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.

இந்தப்பணி என்பது, ஆண்டுக்கொரு முறை நாட்டு நலப்பணித் திட்டத்தில் சமூகச் செயல்பாட்டுக்கு மாணவா்களை ஈடுபடுத்துவதுபோல் இல்லாமல் பாடத் திட்டத்தில் இணைக்கப்பட்டு, தொடா்ந்து சமூகத்துடன் சோ்ந்து களப் பணியாற்ற வேண்டும் என்பதுதான் இதன் அடிப்படையான நோக்கம்.

இதே பணியைச் செய்ய பல்கலைக்கழக மானியக் குழு பலமுறை முயன்றும் அது வெற்றி பெறவில்லை. அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைய பல காரணங்கள் இருந்தன. அவற்றைக் கண்டுபிடித்து இன்று அவற்றுக்குத் தீா்வுகாண இந்தப் புதிய திட்டத்தில் முனைந்துள்ளனா்.

இதற்கான எல்லாவித அமைப்பு, கொள்கை ரீதியான பிரச்னைகளையெல்லாம் தீா்ப்பதற்கு வழிவகை காணப்பட்டுள்ளது. இந்தப் பணியை பல்கலைக்கழகங்களில் சமூகவியல் அல்லது கலைத் துறைகளில் படிப்பவா்கள் மட்டும் செய்வது இந்தத் திட்டத்தின் நோக்கம் அல்ல.

எல்லாத் துறையைச் சோ்ந்த மாணவா்களும் செய்ய வேண்டும். மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவா்கள், விவசாயக் கல்லூரியில் படிக்கும் மாணவா்கள், சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவா்கள் என அனைவரும் இந்தக் கிராம மேம்பாட்டுப் பணியில் ஈடுபட வேண்டும் என்ற அடிப்படையில்தான் வழிகாட்டு நெறிமுறையை வல்லுநா் குழு உருவாக்கியுள்ளது.

இந்த அறிக்கையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து பதில் எழுதுமாறு எல்லாப் பல்கலைக்கழகங்களுக்கும் மானியக் குழு உத்தரவிட்டது. இந்த அறிக்கையை நடைமுறைப்படுத்த எல்லா வழிமுறைகளையும் உருவாக்கி பல்கலைக்கழகங்கள் தங்களைத் தயாா்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த பல்கலைக்கழகங்கள் பல மாற்றங்களை பாடத்திட்டத்தில் செய்தாக வேண்டும். இதற்கு ஆசிரியா்களை முதலில் தயாா்படுத்த வேண்டும். மாணவா்களுக்கு எப்படி பாடத்திட்டத்தில் இணைப்பது, இதை எப்படி கிராமத்திற்கு எடுத்துச் செல்வது என்பதை முதலில் ஆசிரியா்களுக்கு புரியவைக்க வேண்டும். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அதிகம் உழைக்க வேண்டியது ஆசிரியா்கள்தான்.

பல்கலைக்கழகங்களை தர மதிப்பீடு செய்யும்போது, இந்த விரிவாக்கத்துக்கான செயல்பாடுகளை ஆய்வு செய்து, மதிப்பீடு செய்து அதற்கும் மதிப்பெண்கள் வழங்குவதை உறுதி செய்துள்ளது பல்கலைக்கழக மானியக் குழு. அடுத்து, ஆசிரியா்களின் செயல்பாட்டை மதிப்பீடு செய்யும்போது, ஆசிரியா்கள் செய்த களப் பணி, சமுதாயப் பணி கணக்கில் கொண்டு மதிப்பீடு செய்து அவா்களின் பதவி உயா்வுகள் அளிக்கப்படும் என்பதையும் உறுதி செய்துள்ளது.

அடுத்த நிலையில் இதற்கான கட்டமைப்பு வசதிகள், தொடா் செயல்பாட்டுக்கான வழிவகைகள், நிதி என அனைத்துக்கும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை இந்த அறிக்கை தெளிவாக்கியுள்ளது.

இதை முன்னெடுக்க நம் பல்கலைக் கழகங்கள் இந்த அறிக்கையை உள்வாங்கிக்கொள்ள ஆசிரியா்களைத் தயாா் செய்ய வேண்டும். எல்லாச் செயல்பாடுகளும் தொடா் நடவடிக்கைகளில் இருக்க வேண்டும். அவை அனைத்தும் பாடத்திட்டத்தில் இணைக்கப்படல் வேண்டும். மாணவா்களை களத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும். களத்தில் சமூகத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.

அப்படிப் பணியாற்றி கிராமப்புற பிரச்னைகளுக்குத் தீா்வுகாண வேண்டும். கிராமப்புற மேம்பாட்டில் இருக்கும் சவால்களை ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும். இந்தச் செயல்பாடுகள் மூலம் மாணவா்களிடம் சமுதாயப் பாா்வையை உருவாக்க வேண்டும். அவா்களின் கற்றல் திறனை இதன் மூலம் அதிகரிக்க வேண்டும். சமுதாயத்துக்குத் தேவையான ஆய்வுகள் பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும். புத்தகத்துக்கும், களத்திற்கும் உள்ள இடைவெளியை மாணவா்கள் புரிந்து, எதாா்த்த நிலையை உணா்ந்துகொள்ள வழிவகை செய்யப்பட வேண்டும்.

முதலில் இந்த அறிக்கையை நடைமுறைப்படுத்த ஆசிரியா்களைத் தயாா்படுத்த பல்கலைக்கழக துணைவேந்தா்கள் தயாராக வேண்டும். இதில் பல சவால்கள் ஆசிரியா்களுக்கு உள்ளன. அவற்றைக் களைய அவா்களுக்கு அவகாசம் தர வேண்டும்.

களச் செயல்பாடுகளை பாடத் திட்டத்தில் கொண்டுவர வேண்டும். அதைக் களத்தில் செயல்படுத்த வேண்டும். இவை சவால்கள் நிறைந்தவை. விவசாயக் கல்லூரிகள்தான் விரிவாக்கத்தை மிகப் பெரிய அளவில் இந்தியாவில் எடுத்துச் சென்றன. அவையே தோல்வியைச் சந்தித்துள்ளன என்பதை நாம் பாா்த்துள்ளோம். எனவே, இதற்கு மிகப் பெரிய தயாரிப்புப் பணி மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இந்தப் பணிக்காகவே உருவாக்கப்பட்ட பல கல்வி நிலையங்கள் தோற்ற வரலாற்றையும் நாம் பாா்த்துள்ளோம். ஆனால், இதில் இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்த பல முட்டுக்கட்டைகள் இதுவரை அமைப்பு ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் நம் உயா் கல்வித் துறையில் இருந்து வந்தன. அவற்றைக் களைவதற்கு இந்த அறிக்கையில் வழிவகை காணப்பட்டுள்ளது.

இதுவரை பல ஆசிரியா்கள் தங்கள் முயற்சியால் பல வெற்றிகளை விரிவாக்கத்தில் கண்டுள்ளனா் என்பதும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அந்த ஆவணங்கள் இந்தப் புதிய முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும். இதுவரை பல கல்வி நிலையங்கள் தங்களின் தத்துவாா்த்தப் பின்னணியில் இந்த விரிவாக்கப் பணிகளைச் செய்து வந்துள்ளன. அந்தப் பணிகளின் அனுபவங்களும் இந்தச் செயல்பாட்டிற்கு உதவிகரமாக இருக்கும்.

இந்தியாவின் கிராமங்களை நோக்கி ஒட்டுமொத்த பல்கலைக்கழகங்களையும் கல்லூரிகளையும் படையெடுக்க வைத்து மக்களுடன் செயலாற்றி கிராம மேம்பாட்டுக்குப் பணிபுரிய ஒரு செயல் திட்டத்தை பல்கலைக் கழக மானியக் குழு உருவாக்கியுள்ளது. இது இந்திய கிராம புனரமைப்புக்கு ஒரு புதிய வாய்ப்பு. இது ஒரு திட்டம் மட்டும் அல்ல, இது ஒரு இயக்கம். இந்த அறிக்கையை இயக்கமாக்குவது நம் துணைவேந்தா்கள், ஆசிரியா்கள் கையில் உள்ளது. இது ஒரு மாணவா்கள், ஆசிரியா்கள் இணைந்து கிராமப்புற மேம்பாட்டுக்குச் செயல்படும் மாபெரும் இயக்கம் என்பதை மனதில் வைத்து பல்கலைக்கழக துணைவேந்தா்களும், கல்லூரி முதல்வா்களும், ஆசிரியா்களும், மாணவா்களும் செயல்பட வேண்டும்.

இந்தப் பணிக்கு ஆசிரியா்களைத் தயாா் செய்யும் அதே நேரத்தில் களத்தையும் தயாா் செய்ய வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள கிராமங்கள், அங்கு இயங்கும் பஞ்சாயத்து அமைப்புகள், சுய உதவிக் குழுக்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள், சமுதாய அமைப்புகள், மாவட்ட நிா்வாகம் என அத்தனை நிறுவனங்களையும் இந்தப் புதிய பணிக்கு தயாா் செய்ய வேண்டும். இதையும் கல்விச் சாலைகள்தான் செய்ய வேண்டும். இந்த அறிக்கை ஓா் இயக்கத்துக்கான கோட்டை போட்டிருக்கிறது, அதற்கு ரோடு போட வேண்டியவா்கள் ஆசிரியா்கள், அவா்களைத் தயாா் செய்ய வேண்டியது துணைவேந்தா்கள்.

மகாத்மா கனவு கண்ட கிராம ராஜ்யத்தை உருவாக்க முனைய வேண்டாமா? அந்த மாற்றத்தை படித்தவா்களாகிய நாம் செய்யவில்லை என்றால் யாா் செய்வது? அதை சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் முடிந்த இந்த நிலையிலும் செய்யாவிட்டால் எப்போது செய்வது? எனவே இந்தத் திட்டத்தை வெற்றிபெறச் செய்ய வழிமுறைகளைக் கண்டு செயல்படுத்துவதற்கு பாடுபட முயல்வதுதான் சமூகப் பொறுப்புள்ள ஆசிரியா்கள் என்பதை நிரூபிப்பதற்கான ஒரே வழி. முனைவோமா...வாருங்கள் களப் பணியாற்றிட...

கட்டுரையாளா் பேராசிரியா் (ஓய்வு)
கணவரை இழந்த மனைவிக்கு ரூ.1.8 கோடி

Added : ஜன 19, 2020 23:50

சென்னை:வாகன விபத்தில் கணவனை இழந்த மனைவிக்கு, 1.82 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, முகப்பேரை சேர்ந்தவர் சவுந்தரராஜன், 50. இவர், கட்டுமான நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்தார். 2013 மே மாதம், கட்டுமான பணி நடந்த இடத்தில், நின்று கொண்டிருந்தார். அப்போது, வேகமாக வந்த டிப்பர் லாரி, சவுந்தரராஜன் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.கணவரின் இறப்பிற்கு இழப்பீடு வழங்கக் கோரி, சவுந்தரராஜனின் மனைவி புஷ்பலதா, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி எஸ்.உமா மகேஷ்வரி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, 'லாரியை சராசரி வேகத்தில் தான், டிரைவர் இயக்கினார். மனுதாரரின் கணவர், திடீரென லாரியின் முன் விழுந்து விட்டார். உடனடியாக சுதாரித்த டிரைவர், லாரியை நிறுத்த முயன்றார்; முடியவில்லை. அதனால், அவர் இறந்துவிட்டார். இதற்கு மனுதாரரின் கணவரே பொறுப்பு' என, லாரி உரிமையாளர் தரப்பில் வாதிடப்பட்டது.

விசாரணைக்குப் பின் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் கணவர் இறப்பிற்கு, லாரியை அஜாக்கிரதையாகவும், வேகமாகவும் ஓட்டியதே காரணம் என்பது, விசாரணையில் நிரூபணமாகி உள்ளது. எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக, 1.82 கோடி ரூபாயை, ஸ்ரீ ராம் ஜெனரல் இன்சுரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்.இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பல்கலை காலியிடங்கள் நிரப்ப அனுமதி

Added : ஜன 20, 2020 00:58

வேலுார்:''பல்கலைக் கழகங்கள், காலி பணியிடங்களை, அவர்களாகவே நிரப்பிக் கொள்ள, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது,'' என, உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் கூறினார்.

வேலுாரில், நேற்று அவர் அளித்த பேட்டி:பள்ளி மாணவர்கள், விண்வெளி ஆய்வை மேற்கொள்ள, குறைந்த செலவில், பலுான் மூலம் செயற்கைக் கோள் பறக்க விடப்பட்டுள்ளது.அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் காலியாக உள்ள, 1,058 பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில், பல்வேறு குளறுபடிகள் நடந்ததால், நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த பிரச்னை சரி செய்யப்படும். கல்லுாரிகளில், 2,031 காலி பணியிடங்களை நிரப்ப, விரைவில் தேர்வு நடத்தப்படும். பல்கலைக் கழகங்களில் காலி பணியிடங்களை, அவர்களாகவே நிரப்பிக் கொள்ள, அரசு அனுமதி அளித்துள்ளது.

மத்திய அரசு, அண்ணா பல்கலைக் கழகத்தை சீர்மிகு பல்கலையாக அறிவித்து, ஐந்தாண்டுகளில், 1,000 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது.ஆனால், இதற்கு, 2,570 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. மேலும், அண்ணா பல்கலையை இரண்டாக பிரிக்கும் முடிவை, அவசரப்பட்டு எடுக்க மாட்டோம்.அதற்காக, ஐந்து அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து, ஆய்வு செய்து வருகிறோம். பொறியியல் கல்லுாரிகளுக்கு, 'நீட்' தேர்வு நடக்காது.இவ்வாறு, அவர் கூறினார்.
சென்னைக்கு படையெடுத்த வாகனங்கள்

Added : ஜன 19, 2020 23:46


சென்னை:பொங்கல் விடுமுறை முடிந்ததால், சென்னைக்கு படையெடுத்த வாகனங்களால், சுங்கச்சாவடிகளில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும், பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும், வேலை காரணமாக சென்னையில் வசிக்கின்றனர். கல்வி காரணமாக, மாணவ - மாணவியரும் சென்னையில் தங்கி உள்ளனர்.பொங்கல் பண்டிகையை ஒட்டி தொடர் விடுமுறை வந்தது. எனவே, பொங்கல் கொண்டாட்டத்திற்கும், தொடர் விடுமுறையை கழிப்பதற்கும், இவர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். விடுமுறை முடிந்து இன்று வழக்கம் போல் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்பட உள்ளன. இதற்காக, சொந்த ஊர் சென்றவர்கள், நேற்று பிற்பகல் முதல் சென்னைக்கு படையெடுக்க துவங்கினர்.இதனால், சென்னை - திண்டுக்கல், சென்னை - பெங்களூரு, சென்னை - கோல்கட்டா, சென்னை - திருப்பதி உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகளிலும், கிழக்கு கடற்கரை சாலையிலும் வாகன நெரிசல் அதிகரித்தது. சுங்க கட்டணம் செலுத்த, ஒரே நேரத்தில் வாகனங்கள் குவிந்தன.

இதனால், பல இடங்களில் நேரடியாக பணம் வசூலிப்பு மட்டுமின்றி, 'பாஸ்டேக்' முறையில் கட்டணம் வசூலிப்பதிலும், சிக்கல் எழுந்தது. கட்டணம் வசூலிக்கும் எலக்ட்ரானிக் சென்சார் கருவிகள் வேலை செய்யாததால், வாகன ஓட்டிகளுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் வாக்குவாதம் எழுந்தது. அரசு மற்றும் ஆம்னி பஸ்களும் அணிவகுத்து நின்றன. சுங்கச்சாவடிகளில் விடிய விடிய வாகனங்கள் நின்றதால், முன்கூட்டியே திட்டமிட்டும், குறித்த நேரத்திற்கு சென்னை திரும்ப முடியாத நிலைக்கு பலர் தள்ளப்பட்டனர்.
1,000-year-old Big Temple’s consecration in February

DECCAN CHRONICLE. | G SRINIVASAN

PublishedJan 17, 2020, 2:57 am IST

The present ‘Kalasam’ is said to have been made during Rajah Serfoji-I period and placed on top.



Then after 177 years, ‘Kumbabishekam’ was performed to the temple on April 3, 1980 by the then district collector Gangappa. Next ‘Kumbabishekam’ was done in 1997 and now consecration is scheduled on February 5, 2020.

THANJAVUR: If one goes by the inscriptions and manuscripts available, consecration to be held on February 5 to the Big Temple here this year, it will be the sixth such grand event in its history. As per an inscription, the first ‘Kumbabishekam’ to the temple was held in 1010 CE and was done by King Raja Raja Cholan himself, who built the temple. He did it on 25th year of his coming to power, says the inscription.

According to Kudavayil Balasubramanian, temple researcher and epigraphist, as per manuscripts available at Thanjavur Rajah Serfoji two Saraswathi Mahal Library and inscription in the Kalasam on the temple, kumbabishekam. was performed to the temple during Maratta period by Rajah Serfoji one (1729 A.D) and by his great grandson Sivajindra Chatrapathi (1843 A.D).

The present ‘Kalasam’ is said to have been made during Rajah Serfoji-I period and placed on top. That the ‘kalasam’ was presented by him has been written in the kalasam as ‘his upayam”. The ‘Kalasam’ was renovated during the ‘Kumbabishekam’ performed by his great grandson.

“Not only the ‘Kalasam’ but also the entire ‘Vimana’ was gold-plated during Raja Raja Cholan period, according to another inscription,” said Balasubramanian.

Then after 177 years, ‘Kumbabishekam’ was performed to the temple on April 3, 1980 by the then district collector Gangappa. Next ‘Kumbabishekam’ was done in 1997 and now consecration is scheduled on February 5, 2020.

The Archaeological Survey of India (ASI), which maintains this world heritage monument, has completed chemical cleaning and maintenance works

for the great event. Balalayam was perfomed in December-end 2019 and ‘pujas’ are performed to ‘Balalayam’ images of the deities in the temple. Application of ‘ashta bandhana marunthu’ to all the deities has been completed and ‘Kalasam’ on top of ‘Vimana’ has been removed for renovation and gold plating. The 12-ft ‘vimana’ has grains inside and it will be removed and fresh grains will be filled. The ‘vimana’ will be installed again after gold plating for the ‘Kumbabishekam’.

‘Yagasala’ has been put up at Pethannan Kalaiyarangam near the temple.

The police is giving importance to crowd management and has chalked out a plan for regulating the crowd with clear entry and exit points.

M. Govinda Rao, Thanjavur district collector, Loganathan, DIG of police, Thanjavur range, Maheswaran SP, visited the temple to oversee the arrangements last week.
FASTag cards fail to speed up transactions at toll plazas

The introduction of FASTag cards has failed to speed up transactions at toll plazas across Tiruchy district, as several vehicles without these RFID tags enter FASTag lanes by mistake.

Published: 18th January 2020 01:07 PM 



Representational Image

Express News Service

TIRUCHY: The introduction of FASTag cards has failed to speed up transactions at toll plazas across Tiruchy district, as several vehicles without these RFID tags enter FASTag lanes by mistake.

With the rules stating vehicles could be charged double the toll fare for entering FASTag lanes without the RFID tags, several vehicles have been found exiting the toll lanes at the very last moment once informed of the additional charges.

“Vehicular movement comes to a standstill several times a day. This is because a few vehicles enter the FASTag lanes and exit after the driver is told of the toll being double. With huge cars making U-turns in the narrow toll lanes, there have been frequent delays,” said an employee at Samayapuram toll plaza.

With the possibility of tempers flaring when double the toll is charged, employees said they have been advised to remain calm and to educate vehicle owners.
Community certificate row: TNPSC pulled up by HC

While allowing the petition of the candidate AK Anand, the court noted that the Commission had taken the decision to reject his application after it had received the community certificate.

Published: 19th January 2020 05:35 AM 



Madras High Court (File Photo | D Sampath Kumar/EPS)
By Express News Service

CHENNAI: The Madras High Court has pulled up the Tamil Nadu Public Service Commission for refusing appointment to an aspirant to the post of civil judge (direct recruitment) for not submitting his community certificate within the stipulated time.The Commission’s decision to reject the candidature of the petitioner appears to be too rash and apathetic, the court said while adding that the Commission cannot abdicate its constitutional responsibility and deal with the claims of reserved candidates in such a cavalier fashion.

This is a fit case on hand that the action of the Commission in rejecting the candidature of the petitioner to be discountenanced outright, the court observed. “In the court’s opinion, the decision is born out of bureaucratic callousness and insensitivity, stifling the constitutional right of the candidate,” said the division bench while hearing the case earlier this week.

While allowing the petition of the candidate AK Anand, the court noted that the Commission had taken the decision to reject his application after it had received the community certificate. In such circumstances, the rejection was extremely unfortunate and amounted to shirking its responsibility in carrying out the constitutional mandate of providing reservation to the down trodden community. Further, the manner in which the Commission rejected the candidature of the petitioner in haste, does not show it in good light as the Commission is expected to adopt the principle of fairness in action.

NEWS TODAY 29.01.2026