Monday, January 20, 2020

சென்னை புத்தக காட்சி நாளையுடன் நிறைவடைகிறது: இதுவரை 10 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்



சென்னை

பபாசியின் புத்தகக் காட்சியை இதுவரை 10 லட்சம் பேர் வரை பார்வையிட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) 43-வது புத்தக காட்சி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த ஜனவரி 9-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 800-க்கும் மேற்பட்ட அரங்குகளில் 2 கோடி புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. புத்தக காட்சியை பார்வையிட தினமும் ஏராளமானோர் வருகை தருகின்றனர்.

நடப்பாண்டில் குழந்தைகளுக்கான சிறுகதைகள், சரித்திர நாவல்கள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான நூல்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் புத்தக காட்சி நாளை (ஜனவரி 21) முடிவடைய உள்ளது. இதுவரை 10 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். இன்னும் 2 நாட்களில் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். மேலும், புத்தக விற்பனையும் சுமார் ரூ.15 கோடியை தாண்டும் என பபாசி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சாலைகள் மாடுகளுக்கு அல்ல!

By வெ. இன்சுவை | Published on : 18th January 2020 02:33 AM |


நான் பள்ளியில் படிக்கும்போது கட்டுரைப் பயிற்சியில், தெருவில் சுற்றித் திரியும் மாடுகள், நாய்கள் குறித்து மாநகராட்சி ஆணையருக்குப் புகார் கடிதம் எழுதக் கற்றுக் கொடுத்தார்கள். என் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுத்தார்கள். இப்போது என் பெயரப் பிள்ளைகளுக்கும் இந்தப் பயிற்சி தொடர்கிறது.

தலைமுறைகள் தாண்டியும் நம் நாட்டில் இந்தப் பிரச்னை தீர்வதாக இல்லை. புகார் கடிதத்துக்குப் பதில் கடிதம் எழுத இன்னமும் எவருக்கும் சொல்லித் தரவில்லைபோலும். அதனால்தான் இந்த மாடு, நாய் தொல்லை தீராத பெரிய தலைவலியாகப் போய்க் கொண்டிருக்கிறது. நிலைமையின் தீவிரத்தைக் கண்டு தார்மிகக் கோபம் கொள்ளும் பெரியவர்கள், ஊடகங்களின் ஆசிரியர் பகுதிக்கு இது குறித்து கடிதம் எழுதி தங்கள் ஆற்றாமையைத் தணித்துக் கொள்கிறார்கள். வேறு என்ன செய்ய முடியும்?

தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும், தெருக்களிலும் சுற்றித் திரியும் மாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுதியாக உள்ள சாலைகளில் இவை சாவதானமாக நடந்து போகின்றன; நின்று கொண்டிருக்கின்றன; படுத்துக் கிடக்கின்றன. வண்டிகள் வருவதை அவை பொருட்படுத்துவதே இல்லை. நாம் விரட்டினாலும் அசையாமல் நிற்கும். வேகமாக வாகனம் ஓட்டிக் கொண்டு வருபவர்களால் சட்டென வாகனத்தை நிறுத்த முடியாது. அதனால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விடுகிறார்கள். அதன் காரணமாக கை, கால், எலும்புமுறிவு, உயிர்ச் சேதம் என ஏற்படுகிறது. புறநகர்த் தெருக்களில் மாடுகளுக்கு நடுவே புகுந்துதான் வாகனத்தை ஓட்ட வேண்டியுள்ளது.

தெரு நாய்களின் எண்ணிக்கையும் பெருகி விட்டது. ஒரு தெருவில் குறைந்தது பத்து நாய்களாவது திரிகின்றன. அவை எப்போது யாரைக் கடிக்கும் என்று தெரியாது. திடீரென்று இரு சக்கர வாகனத்தில் வருபவர்களைத் துரத்தும். நான்கு நாய்கள் குரைத்துக் கொண்டே துரத்தும்போது குலை நடுங்கிப் போகிறார்கள். சில சமயம் அவர்களை அந்த நாய்கள் கடிக்கவும் செய்கின்றன. இந்த நாய்களுக்கு எப்போது வெறி பிடிக்கும் என்று நமக்குத் தெரியாது. அப்படி வெறி பிடித்த நாய்களிடம் கடிபட்டு ரேபீஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. பச்சிளம் குழந்தைகளைக் குதறிப் போடுகின்றன.

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 17 லட்சம் பேர் நாய்க் கடிக்கு உள்ளாகிறார்கள். மருத்துவமனைகளிலும் வெறிநாய்க் கடிக்கான தடுப்பூசி மருந்து போதிய அளவு இல்லை. 80 சதவீத அளவுக்குப் பற்றாக்குறை உள்ளதாம். உலகில் வெறிநாய் கடிக்கு பலியாவோரின் எண்ணிக்கை 36 சதவீதம் என்பதுடன், ரேபீஸ் பாதிப்புக்கு உள்ளானவர்கள் படும் அவஸ்தையைக் கண் கொண்டு பார்க்க முடியாது. அது கொடுமை.
சுற்றித் திரியும் மாடுகளும், நாய்களும் சாலைகளை அசுத்தப்படுத்துகின்றன. சாலையெங்கும், தெருவெங்கும் சாணமும், நாய்களின் மலமும்தான் விரவிக் கிடக்கின்றன. அந்த அசுத்தத்தை மிதித்துக் கொண்டே மக்கள் போகும் அவலம், அருவருப்பும்கூட. போதாக்குறைக்கு மழையும் பெய்து விட்டால், சாலையில் கால் வைப்பதற்கே மனம் ஒப்ப மறுக்கிறது. ஏற்கெனவே நம் தெருக்கள் தூய்மையற்றவை. இந்த நிலையில் இந்த விலங்குகளின் கழிவுகளும் சேர்ந்து விடுகின்றன.

மாடுகள் மிரண்டு ஓடிவரும்போது வாகன ஓட்டிகள் பயந்து கீழே விழுந்து விடுகின்றனர். கடை வாசலில் நம் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே போய் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தால், வாகனத்தில் மாட்டியிருந்த பையிலிருந்து காய்கறிகளையும், பழங்களையும், கீரைகளையும் மாடுகள் தின்று கொண்டிருக்கும். காய்கறிகடைக்காரர்களுக்கும், பழக்கடை உரிமையாளர்களுக்கும் அவற்றைத் தின்ன வரும் மாடுகளை விரட்டுவதே பெரிய வேலையாகிவிட்டது.

நாய்களும், மாடுகளும் குப்பைத் தொட்டிகளில் உள்ள குப்பைகளை இழுத்து வெளியே போட்டு விடுகின்றன. அதனால் தெருவெல்லாம் குப்பைகள் சிதறிக் கிடக்கின்றன. அந்த இடம் முழுவதும் ஈக்கள் மொய்க்கும், துர்நாற்றம் கடுமையாக இருக்கும். நமக்குத்தான் எல்லா அசெளகர்யங்களும் சில நாள்களில் பழகிப் போய் விடுமே! "இங்கே இப்படித்தான்', "இங்கே எதுவும் மாறப் போவது இல்லை' என்ற முணுமுணுப்போடும், எரிச்சலோடும் அந்த இடத்தைக் கடந்து விடுவோம்.

சொந்தப் பிரச்னைகள் நம்மைத் துரத்தும்போது பொதுப் பிரச்னைக்குக் கொடி தூக்க நமக்கு ஏது நேரம்?

முக்கியமான, போக்குவரத்து அதிகமுள்ள சாலைகளையாவது தொடர்புடையவர்கள் முறையாகப் பராமரிக்கலாம் அல்லவா? சாலைகளில் மாடுகளைத் திரியவிடக் கூடாது என்பது சட்டம். மீறினால் அவ்வாறு திரியும் மாடுகளைப் பிடித்துக் கொண்டுபோய் அடைத்து விடுவர், மாட்டின் உரிமையாளர் சென்று அபராதத் தொகையைச் செலுத்தி அந்த மாட்டை மீட்டுக் கொண்டு வர வேண்டும். 

இது ஒரு கண்ணாமூச்சி விளையாட்டுபோல நடந்து கொண்டிருக்கிறது. மாடுகளோ நூற்றுக் கணக்கில் திரிந்து கொண்டிருக்கின்றன, இவர்களோ ஒரு சில மாடுகளை மட்டுமே பிடித்துக் கொண்டு போகின்றனர். அபராதம் செலுத்தி மீட்டு வருவார்கள். ஆனால், மறுநாளே அந்த மாடுகள் மறுபடியும் சாலைகளுக்கு வந்து விடும். காரணம், மாடு வளர்ப்பவர்களிடம் மாடுகளைப் பராமரிக்க இடம் இருக்காது.

மாட்டுத் தொழுவம் என்ற ஒன்றே இல்லாமல் நிறைய மாடுகளை வளர்க்கிறார்கள். பராமரிப்புச் செலவு மிச்சம், மாடுகளுக்குத் தீவனம் வைக்க வேண்டாம், தண்ணீர் காட்ட வேண்டாம்; சாணம் அள்ள வேண்டாம், காலையும், மாலையும் பாலைக் கறந்த பிறகு, அவற்றை விரட்டி விடுகின்றனர். 

அரசு என்ன சட்டம் போட்டாலும் அவர்கள் அசைந்து கொடுக்க மாட்டார்கள். அக்கம்பக்கத்தினரால் அவர்களிடம் வாயைக் கொடுத்து மீள முடியுமா? மெளனமாய் பொருமிக் கொண்டிருக்க மட்டுமே அவர்களால் முடியும். அடாவடி நபர்கள் ஏதாவது ஓர் அரசியல் கட்சியின் அடையாளத்தை வைத்துக் கொண்டு அதிகாரிகளுக்குப் பயப்படுவதில்லை.

மாநகராட்சி, பேரூராட்சி தரப்பில் உள்ள பிரச்னை என்னவென்றால் அவர்களிடம் இதற்கு போதுமான பணியாளர்கள் இல்லை. அடுத்து, பிடித்துக் கொண்டு போகும் மாடுகளை அடைத்து வைப்பதும், அவற்றுக்குத் தீவனம் கொடுப்பதும் பெரிய சவாலாக உள்ளது. அபராதத் தொகையைக் கணிசமாக உயர்த்தி அதைக் கொண்டு இன்னும் கூடுதல் நபர்களை இந்தப் பணியில் அமர்த்தலாம்.

கார் நிறுத்த இடவசதி இல்லாதவர்கள் கார் வாங்கி தெருவில்தானே நிறுத்துகிறார்கள்? தெருக்களின் இருபுறமும் கார்கள் அடைத்து நிற்க, நாம் செல்லும் வழி குறுகிப் போய் விட்டது. இன்னும் சிலர் அதிக நடமாட்டமில்லாத, வேறு ஏதாவது ஒரு தெருவில் வாகனங்களை விட்டுச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். அவர்களைத் தட்டிக் கேட்க அந்த அப்பாவி தெருவாசிகளுக்குப் பயம். நம் ஊரில் நியாய தர்மங்களுக்கு இடமில்லையே? 

மாடு வைத்திருப்பவர்களுக்கும் தெருதான் கதி, கார் வைத்திருப்பவர்களுக்கும் தெருதான் கதி. அது பொதுச் சொத்து. எதிர்த்துக் குரல் கொடுக்க முடியாது.
நாய்களின் தொல்லை என்று புகார் கொடுத்தால் நாய் பிடிக்க வருவார்கள்.

அந்த வாகனத்தையும், நபர்களையும் கண்டவுடன் எல்லா நாய்களும் ஓடி ஒளியும். அரும்பாடுபட்டு அவற்றைத் துரத்தி கயிறைப் போட்டு பிடிப்பதையும், அந்த ஜீவன்கள் கத்துவதையும் பார்த்தால் நமக்கு மனதைப் பிசையும். ஆனால், இப்போதெல்லாம் நாய்களைக் கொல்வதில்லை. அவற்றுக்குக் கருத்தடை செய்து மீண்டும் அதே இடத்தில் விட்டு விடுகிறார்கள். ஆனாலும், குட்டிகள் பெருகிக் கொண்டேதான் இருக்கின்றன. அவற்றின் தொல்லைகளும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன.
இதற்கு, மாடு வளர்ப்பவர்கள் மனம் மாறினால் மட்டுமே தீர்வு கிடைக்கும். இட வசதி இல்லாதவர்களுக்கு மாடு வளர்க்கும் எண்ணமே வரக் கூடாது. தாங்கள் குடி இருக்க வீடு வேண்டும் என்று நினைப்பவர்கள், மாடுகளுக்கும் கொட்டகை வேண்டும் என்று நினைக்க வேண்டும். தங்களின் வருமானத்துக்காக அடுத்தவர்களுக்கு இடையூறு செய்யக் கூடாது.

அவர்களின் வாழ்வாதாரத்துக்கு ஒரு வழி வேண்டும் என்றால், அரசே முன் வந்து ஏதாவது ஓர் இடத்தை ஒதுக்கி அங்கே பலர் சேர்ந்து கூட்டுப் பால் பண்ணை அமைக்கவோ அல்லது ஒவ்வொருவருக்கும் மாடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான இடமோ தரலாம்.
அருகிலேயே அதற்கான தீவனத்தையும் பயிரிட்டுக் கொள்ளச் செய்ய வேண்டும். அங்கே சேகரிக்கப்படும் சாணத்திலிருந்து சமையல் எரிவாயு தயாரிக்கலாம். இது சாத்தியமில்லை என்றால், அவர்களுக்கு வேறு ஏதாவது மாற்று ஏற்பாடு செய்யலாம்.

மாடுகளை முறையாகப் பராமரிக்காமல் சாலைகளில் அலைய விட்டு, நெகிழியையும், குப்பைகளையும், சுவரொட்டிகளையும் தின்ன வைத்து, பலரிடம் வசவும், அடியும் வாங்க வைப்பது சரியா? இவற்றால் பலர் விபத்துக்குள்ளாகி உயிர் விடுவதால் எத்தனை குடும்பங்கள் அநாதைகளாகிப் போகின்றன தெரியுமா?
நம் உரிமைப் பொருள் நம் எல்லைக்குள் இருப்பதுதானே சரி? நம் சுயநலத்துக்காக நம் தெருக்களையும், சாலைகளையும் அசிங்கப்படுத்தி, மக்களுக்கு இடையூறு செய்யலாமா? மாடு வளர்ப்பவர்கள் உணர வேண்டும்.

கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு)
சமூகத்தை நோக்கி பல்கலைக்கழகங்கள்...

By க.பழனித்துரை | Published on : 20th January 2020 02:56 AM |

இந்தியாவில் உள்ள உயா் கல்வி நிலையங்களில் இதுவரை புறக்கணிக்கப்பட்டு வந்த சமூகத்திற்கான விரிவாக்கச் செயல்பாடுகளை பாடத்திட்டத்தில் புகுத்தி மாணவா்களை பொறுப்புமிக்க சமூகப் பணியாற்ற முனைய வேண்டும், அதற்கான ஆயத்தப் பணிகளில் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என ஒரு மாதத்துக்கு முன்பு ஒரு கடிதத்தை பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) எழுதியுள்ளது. அந்தக் கடிதத்துடன் இந்தச் சமூகச் செயல்பாடுகளை முறைமையுடன் தொடா்ந்து எல்லா நிறுவனங்களும் நிறைவேற்ற வழி காட்ட ஒரு வழிகாட்டு நெறிமுறை அறிக்கையையும் அந்தக் கடிதத்துடன் இணைத்துள்ளது.

அந்த அறிக்கையின் அடிப்படையில் பல்கலைக்கழகங்கள் ஆசிரியா்களை இந்தப் பணிக்கு தயாரிப்புச் செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தை
‘உன்னத் பாரத் இயக்கம் 2.0’ என்று பெயரிட்டு நடைமுறைப்படுத்த பல்கலைக்கழக மானியக் குழுவை மனிதவள மேம்பாட்டுத் துறை வலியுறுத்தியுள்ளது.

கிராமப்புற மேம்பாட்டுக்கான விரிவாக்கச் செயல்பாடுகளில் மாணவா்களை ஈடுபடுத்துவதுதான் இந்தத் திட்டம். உயா் கல்வி நிலையங்களில் விரிவாக்கப் பணி என்பது புதியதல்ல. காந்தி காலத்திலிருந்து இன்றுவரை எல்லா அரசுக் கொள்கைகளிலும் கூறப்பட்ட ஒரு செயல்பாடுதான். இதுவரை இந்த விரிவாக்கப் பணி என்பது, பல்கலைக்கழகங்களுக்கு விருப்பக் கடமையாக விடப்பட்டது . ஆனால், இன்று அந்தப் பணியைக் கட்டாயக் கடமையாகச் செய்வதற்கு பல்கலைக்கழகங்களை தயாா் செய்கிறது பல்கலைக்கழக மானியக் குழு.

இந்தத் திட்டத்தின் மூலம் விரிவாக்கப் பணிகளை பாடத் திட்டத்தில் இணைத்து, அறிவியல்பூா்வமாக கிராமச் சமுதாயத்துடன் தொடா்ந்து செயல்பட்டு கிராமப்புறப் பிரச்னைகளுக்கு தீா்வு காணவும், மாணவா்களின் சமுதாய அக்கறையையும், களப் பணியாற்றும் திறனையும் வளா்த்துக் கொள்ளவும் இந்தப் புதிய முயற்சியை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.

இந்தப்பணி என்பது, ஆண்டுக்கொரு முறை நாட்டு நலப்பணித் திட்டத்தில் சமூகச் செயல்பாட்டுக்கு மாணவா்களை ஈடுபடுத்துவதுபோல் இல்லாமல் பாடத் திட்டத்தில் இணைக்கப்பட்டு, தொடா்ந்து சமூகத்துடன் சோ்ந்து களப் பணியாற்ற வேண்டும் என்பதுதான் இதன் அடிப்படையான நோக்கம்.

இதே பணியைச் செய்ய பல்கலைக்கழக மானியக் குழு பலமுறை முயன்றும் அது வெற்றி பெறவில்லை. அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைய பல காரணங்கள் இருந்தன. அவற்றைக் கண்டுபிடித்து இன்று அவற்றுக்குத் தீா்வுகாண இந்தப் புதிய திட்டத்தில் முனைந்துள்ளனா்.

இதற்கான எல்லாவித அமைப்பு, கொள்கை ரீதியான பிரச்னைகளையெல்லாம் தீா்ப்பதற்கு வழிவகை காணப்பட்டுள்ளது. இந்தப் பணியை பல்கலைக்கழகங்களில் சமூகவியல் அல்லது கலைத் துறைகளில் படிப்பவா்கள் மட்டும் செய்வது இந்தத் திட்டத்தின் நோக்கம் அல்ல.

எல்லாத் துறையைச் சோ்ந்த மாணவா்களும் செய்ய வேண்டும். மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவா்கள், விவசாயக் கல்லூரியில் படிக்கும் மாணவா்கள், சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவா்கள் என அனைவரும் இந்தக் கிராம மேம்பாட்டுப் பணியில் ஈடுபட வேண்டும் என்ற அடிப்படையில்தான் வழிகாட்டு நெறிமுறையை வல்லுநா் குழு உருவாக்கியுள்ளது.

இந்த அறிக்கையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து பதில் எழுதுமாறு எல்லாப் பல்கலைக்கழகங்களுக்கும் மானியக் குழு உத்தரவிட்டது. இந்த அறிக்கையை நடைமுறைப்படுத்த எல்லா வழிமுறைகளையும் உருவாக்கி பல்கலைக்கழகங்கள் தங்களைத் தயாா்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த பல்கலைக்கழகங்கள் பல மாற்றங்களை பாடத்திட்டத்தில் செய்தாக வேண்டும். இதற்கு ஆசிரியா்களை முதலில் தயாா்படுத்த வேண்டும். மாணவா்களுக்கு எப்படி பாடத்திட்டத்தில் இணைப்பது, இதை எப்படி கிராமத்திற்கு எடுத்துச் செல்வது என்பதை முதலில் ஆசிரியா்களுக்கு புரியவைக்க வேண்டும். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அதிகம் உழைக்க வேண்டியது ஆசிரியா்கள்தான்.

பல்கலைக்கழகங்களை தர மதிப்பீடு செய்யும்போது, இந்த விரிவாக்கத்துக்கான செயல்பாடுகளை ஆய்வு செய்து, மதிப்பீடு செய்து அதற்கும் மதிப்பெண்கள் வழங்குவதை உறுதி செய்துள்ளது பல்கலைக்கழக மானியக் குழு. அடுத்து, ஆசிரியா்களின் செயல்பாட்டை மதிப்பீடு செய்யும்போது, ஆசிரியா்கள் செய்த களப் பணி, சமுதாயப் பணி கணக்கில் கொண்டு மதிப்பீடு செய்து அவா்களின் பதவி உயா்வுகள் அளிக்கப்படும் என்பதையும் உறுதி செய்துள்ளது.

அடுத்த நிலையில் இதற்கான கட்டமைப்பு வசதிகள், தொடா் செயல்பாட்டுக்கான வழிவகைகள், நிதி என அனைத்துக்கும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை இந்த அறிக்கை தெளிவாக்கியுள்ளது.

இதை முன்னெடுக்க நம் பல்கலைக் கழகங்கள் இந்த அறிக்கையை உள்வாங்கிக்கொள்ள ஆசிரியா்களைத் தயாா் செய்ய வேண்டும். எல்லாச் செயல்பாடுகளும் தொடா் நடவடிக்கைகளில் இருக்க வேண்டும். அவை அனைத்தும் பாடத்திட்டத்தில் இணைக்கப்படல் வேண்டும். மாணவா்களை களத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும். களத்தில் சமூகத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.

அப்படிப் பணியாற்றி கிராமப்புற பிரச்னைகளுக்குத் தீா்வுகாண வேண்டும். கிராமப்புற மேம்பாட்டில் இருக்கும் சவால்களை ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும். இந்தச் செயல்பாடுகள் மூலம் மாணவா்களிடம் சமுதாயப் பாா்வையை உருவாக்க வேண்டும். அவா்களின் கற்றல் திறனை இதன் மூலம் அதிகரிக்க வேண்டும். சமுதாயத்துக்குத் தேவையான ஆய்வுகள் பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும். புத்தகத்துக்கும், களத்திற்கும் உள்ள இடைவெளியை மாணவா்கள் புரிந்து, எதாா்த்த நிலையை உணா்ந்துகொள்ள வழிவகை செய்யப்பட வேண்டும்.

முதலில் இந்த அறிக்கையை நடைமுறைப்படுத்த ஆசிரியா்களைத் தயாா்படுத்த பல்கலைக்கழக துணைவேந்தா்கள் தயாராக வேண்டும். இதில் பல சவால்கள் ஆசிரியா்களுக்கு உள்ளன. அவற்றைக் களைய அவா்களுக்கு அவகாசம் தர வேண்டும்.

களச் செயல்பாடுகளை பாடத் திட்டத்தில் கொண்டுவர வேண்டும். அதைக் களத்தில் செயல்படுத்த வேண்டும். இவை சவால்கள் நிறைந்தவை. விவசாயக் கல்லூரிகள்தான் விரிவாக்கத்தை மிகப் பெரிய அளவில் இந்தியாவில் எடுத்துச் சென்றன. அவையே தோல்வியைச் சந்தித்துள்ளன என்பதை நாம் பாா்த்துள்ளோம். எனவே, இதற்கு மிகப் பெரிய தயாரிப்புப் பணி மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இந்தப் பணிக்காகவே உருவாக்கப்பட்ட பல கல்வி நிலையங்கள் தோற்ற வரலாற்றையும் நாம் பாா்த்துள்ளோம். ஆனால், இதில் இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்த பல முட்டுக்கட்டைகள் இதுவரை அமைப்பு ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் நம் உயா் கல்வித் துறையில் இருந்து வந்தன. அவற்றைக் களைவதற்கு இந்த அறிக்கையில் வழிவகை காணப்பட்டுள்ளது.

இதுவரை பல ஆசிரியா்கள் தங்கள் முயற்சியால் பல வெற்றிகளை விரிவாக்கத்தில் கண்டுள்ளனா் என்பதும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அந்த ஆவணங்கள் இந்தப் புதிய முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும். இதுவரை பல கல்வி நிலையங்கள் தங்களின் தத்துவாா்த்தப் பின்னணியில் இந்த விரிவாக்கப் பணிகளைச் செய்து வந்துள்ளன. அந்தப் பணிகளின் அனுபவங்களும் இந்தச் செயல்பாட்டிற்கு உதவிகரமாக இருக்கும்.

இந்தியாவின் கிராமங்களை நோக்கி ஒட்டுமொத்த பல்கலைக்கழகங்களையும் கல்லூரிகளையும் படையெடுக்க வைத்து மக்களுடன் செயலாற்றி கிராம மேம்பாட்டுக்குப் பணிபுரிய ஒரு செயல் திட்டத்தை பல்கலைக் கழக மானியக் குழு உருவாக்கியுள்ளது. இது இந்திய கிராம புனரமைப்புக்கு ஒரு புதிய வாய்ப்பு. இது ஒரு திட்டம் மட்டும் அல்ல, இது ஒரு இயக்கம். இந்த அறிக்கையை இயக்கமாக்குவது நம் துணைவேந்தா்கள், ஆசிரியா்கள் கையில் உள்ளது. இது ஒரு மாணவா்கள், ஆசிரியா்கள் இணைந்து கிராமப்புற மேம்பாட்டுக்குச் செயல்படும் மாபெரும் இயக்கம் என்பதை மனதில் வைத்து பல்கலைக்கழக துணைவேந்தா்களும், கல்லூரி முதல்வா்களும், ஆசிரியா்களும், மாணவா்களும் செயல்பட வேண்டும்.

இந்தப் பணிக்கு ஆசிரியா்களைத் தயாா் செய்யும் அதே நேரத்தில் களத்தையும் தயாா் செய்ய வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள கிராமங்கள், அங்கு இயங்கும் பஞ்சாயத்து அமைப்புகள், சுய உதவிக் குழுக்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள், சமுதாய அமைப்புகள், மாவட்ட நிா்வாகம் என அத்தனை நிறுவனங்களையும் இந்தப் புதிய பணிக்கு தயாா் செய்ய வேண்டும். இதையும் கல்விச் சாலைகள்தான் செய்ய வேண்டும். இந்த அறிக்கை ஓா் இயக்கத்துக்கான கோட்டை போட்டிருக்கிறது, அதற்கு ரோடு போட வேண்டியவா்கள் ஆசிரியா்கள், அவா்களைத் தயாா் செய்ய வேண்டியது துணைவேந்தா்கள்.

மகாத்மா கனவு கண்ட கிராம ராஜ்யத்தை உருவாக்க முனைய வேண்டாமா? அந்த மாற்றத்தை படித்தவா்களாகிய நாம் செய்யவில்லை என்றால் யாா் செய்வது? அதை சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் முடிந்த இந்த நிலையிலும் செய்யாவிட்டால் எப்போது செய்வது? எனவே இந்தத் திட்டத்தை வெற்றிபெறச் செய்ய வழிமுறைகளைக் கண்டு செயல்படுத்துவதற்கு பாடுபட முயல்வதுதான் சமூகப் பொறுப்புள்ள ஆசிரியா்கள் என்பதை நிரூபிப்பதற்கான ஒரே வழி. முனைவோமா...வாருங்கள் களப் பணியாற்றிட...

கட்டுரையாளா் பேராசிரியா் (ஓய்வு)
கணவரை இழந்த மனைவிக்கு ரூ.1.8 கோடி

Added : ஜன 19, 2020 23:50

சென்னை:வாகன விபத்தில் கணவனை இழந்த மனைவிக்கு, 1.82 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, முகப்பேரை சேர்ந்தவர் சவுந்தரராஜன், 50. இவர், கட்டுமான நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்தார். 2013 மே மாதம், கட்டுமான பணி நடந்த இடத்தில், நின்று கொண்டிருந்தார். அப்போது, வேகமாக வந்த டிப்பர் லாரி, சவுந்தரராஜன் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.கணவரின் இறப்பிற்கு இழப்பீடு வழங்கக் கோரி, சவுந்தரராஜனின் மனைவி புஷ்பலதா, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி எஸ்.உமா மகேஷ்வரி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, 'லாரியை சராசரி வேகத்தில் தான், டிரைவர் இயக்கினார். மனுதாரரின் கணவர், திடீரென லாரியின் முன் விழுந்து விட்டார். உடனடியாக சுதாரித்த டிரைவர், லாரியை நிறுத்த முயன்றார்; முடியவில்லை. அதனால், அவர் இறந்துவிட்டார். இதற்கு மனுதாரரின் கணவரே பொறுப்பு' என, லாரி உரிமையாளர் தரப்பில் வாதிடப்பட்டது.

விசாரணைக்குப் பின் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் கணவர் இறப்பிற்கு, லாரியை அஜாக்கிரதையாகவும், வேகமாகவும் ஓட்டியதே காரணம் என்பது, விசாரணையில் நிரூபணமாகி உள்ளது. எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக, 1.82 கோடி ரூபாயை, ஸ்ரீ ராம் ஜெனரல் இன்சுரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்.இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பல்கலை காலியிடங்கள் நிரப்ப அனுமதி

Added : ஜன 20, 2020 00:58

வேலுார்:''பல்கலைக் கழகங்கள், காலி பணியிடங்களை, அவர்களாகவே நிரப்பிக் கொள்ள, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது,'' என, உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் கூறினார்.

வேலுாரில், நேற்று அவர் அளித்த பேட்டி:பள்ளி மாணவர்கள், விண்வெளி ஆய்வை மேற்கொள்ள, குறைந்த செலவில், பலுான் மூலம் செயற்கைக் கோள் பறக்க விடப்பட்டுள்ளது.அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் காலியாக உள்ள, 1,058 பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில், பல்வேறு குளறுபடிகள் நடந்ததால், நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த பிரச்னை சரி செய்யப்படும். கல்லுாரிகளில், 2,031 காலி பணியிடங்களை நிரப்ப, விரைவில் தேர்வு நடத்தப்படும். பல்கலைக் கழகங்களில் காலி பணியிடங்களை, அவர்களாகவே நிரப்பிக் கொள்ள, அரசு அனுமதி அளித்துள்ளது.

மத்திய அரசு, அண்ணா பல்கலைக் கழகத்தை சீர்மிகு பல்கலையாக அறிவித்து, ஐந்தாண்டுகளில், 1,000 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது.ஆனால், இதற்கு, 2,570 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. மேலும், அண்ணா பல்கலையை இரண்டாக பிரிக்கும் முடிவை, அவசரப்பட்டு எடுக்க மாட்டோம்.அதற்காக, ஐந்து அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து, ஆய்வு செய்து வருகிறோம். பொறியியல் கல்லுாரிகளுக்கு, 'நீட்' தேர்வு நடக்காது.இவ்வாறு, அவர் கூறினார்.
சென்னைக்கு படையெடுத்த வாகனங்கள்

Added : ஜன 19, 2020 23:46


சென்னை:பொங்கல் விடுமுறை முடிந்ததால், சென்னைக்கு படையெடுத்த வாகனங்களால், சுங்கச்சாவடிகளில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும், பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும், வேலை காரணமாக சென்னையில் வசிக்கின்றனர். கல்வி காரணமாக, மாணவ - மாணவியரும் சென்னையில் தங்கி உள்ளனர்.பொங்கல் பண்டிகையை ஒட்டி தொடர் விடுமுறை வந்தது. எனவே, பொங்கல் கொண்டாட்டத்திற்கும், தொடர் விடுமுறையை கழிப்பதற்கும், இவர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். விடுமுறை முடிந்து இன்று வழக்கம் போல் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்பட உள்ளன. இதற்காக, சொந்த ஊர் சென்றவர்கள், நேற்று பிற்பகல் முதல் சென்னைக்கு படையெடுக்க துவங்கினர்.இதனால், சென்னை - திண்டுக்கல், சென்னை - பெங்களூரு, சென்னை - கோல்கட்டா, சென்னை - திருப்பதி உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகளிலும், கிழக்கு கடற்கரை சாலையிலும் வாகன நெரிசல் அதிகரித்தது. சுங்க கட்டணம் செலுத்த, ஒரே நேரத்தில் வாகனங்கள் குவிந்தன.

இதனால், பல இடங்களில் நேரடியாக பணம் வசூலிப்பு மட்டுமின்றி, 'பாஸ்டேக்' முறையில் கட்டணம் வசூலிப்பதிலும், சிக்கல் எழுந்தது. கட்டணம் வசூலிக்கும் எலக்ட்ரானிக் சென்சார் கருவிகள் வேலை செய்யாததால், வாகன ஓட்டிகளுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் வாக்குவாதம் எழுந்தது. அரசு மற்றும் ஆம்னி பஸ்களும் அணிவகுத்து நின்றன. சுங்கச்சாவடிகளில் விடிய விடிய வாகனங்கள் நின்றதால், முன்கூட்டியே திட்டமிட்டும், குறித்த நேரத்திற்கு சென்னை திரும்ப முடியாத நிலைக்கு பலர் தள்ளப்பட்டனர்.
1,000-year-old Big Temple’s consecration in February

DECCAN CHRONICLE. | G SRINIVASAN

PublishedJan 17, 2020, 2:57 am IST

The present ‘Kalasam’ is said to have been made during Rajah Serfoji-I period and placed on top.



Then after 177 years, ‘Kumbabishekam’ was performed to the temple on April 3, 1980 by the then district collector Gangappa. Next ‘Kumbabishekam’ was done in 1997 and now consecration is scheduled on February 5, 2020.

THANJAVUR: If one goes by the inscriptions and manuscripts available, consecration to be held on February 5 to the Big Temple here this year, it will be the sixth such grand event in its history. As per an inscription, the first ‘Kumbabishekam’ to the temple was held in 1010 CE and was done by King Raja Raja Cholan himself, who built the temple. He did it on 25th year of his coming to power, says the inscription.

According to Kudavayil Balasubramanian, temple researcher and epigraphist, as per manuscripts available at Thanjavur Rajah Serfoji two Saraswathi Mahal Library and inscription in the Kalasam on the temple, kumbabishekam. was performed to the temple during Maratta period by Rajah Serfoji one (1729 A.D) and by his great grandson Sivajindra Chatrapathi (1843 A.D).

The present ‘Kalasam’ is said to have been made during Rajah Serfoji-I period and placed on top. That the ‘kalasam’ was presented by him has been written in the kalasam as ‘his upayam”. The ‘Kalasam’ was renovated during the ‘Kumbabishekam’ performed by his great grandson.

“Not only the ‘Kalasam’ but also the entire ‘Vimana’ was gold-plated during Raja Raja Cholan period, according to another inscription,” said Balasubramanian.

Then after 177 years, ‘Kumbabishekam’ was performed to the temple on April 3, 1980 by the then district collector Gangappa. Next ‘Kumbabishekam’ was done in 1997 and now consecration is scheduled on February 5, 2020.

The Archaeological Survey of India (ASI), which maintains this world heritage monument, has completed chemical cleaning and maintenance works

for the great event. Balalayam was perfomed in December-end 2019 and ‘pujas’ are performed to ‘Balalayam’ images of the deities in the temple. Application of ‘ashta bandhana marunthu’ to all the deities has been completed and ‘Kalasam’ on top of ‘Vimana’ has been removed for renovation and gold plating. The 12-ft ‘vimana’ has grains inside and it will be removed and fresh grains will be filled. The ‘vimana’ will be installed again after gold plating for the ‘Kumbabishekam’.

‘Yagasala’ has been put up at Pethannan Kalaiyarangam near the temple.

The police is giving importance to crowd management and has chalked out a plan for regulating the crowd with clear entry and exit points.

M. Govinda Rao, Thanjavur district collector, Loganathan, DIG of police, Thanjavur range, Maheswaran SP, visited the temple to oversee the arrangements last week.

NEWS TODAY 28.01.2026