Wednesday, January 22, 2020

Special AC trains to be run between Chennai and Coimbatore

TNN | Jan 21, 2020, 07.25 PM IST

CHENNAI: Southern Railway has announced that 68 pairs of daily AC special fare trains will be run between Chennai and Coimbatore from January 24 to March 31 to clear extra rush of passengers.
No 06028 Coimbatore – Chennai AC special fare train will leave from Coimbatore Jn at 5am and reach Puratchi Thalaivar Dr M G Ramachandran Central at 12.45pm.

It will stop at Tirupur, Erode, Salem, Katpadi and Perambur.

No 06027 Chennai – Coimbatore AC Special fare train will depart from Dr MGR Chennai Central at 2pm and reach Coimbatore Jn at 9.45pm.

It will stop at Katpadi, Salem, Erode and Tirupur.

The trains will have two AC executive chair cars, five AC chair cars and two generator cum luggage vans.

Advance reservations for the trains will open at 8am on January 22.

Tuesday, January 21, 2020

Explained - Mercy Petition, Presidential Pardon & Judicial Review

Explained - Mercy Petition, Presidential Pardon & Judicial Review: Few days ago, two of the death row convicts in the Nirbhaya case submitted mercy petition before the President of India.After the dismissal of their curative pleas by the SC, this is the last remedy...
வரிசையாக ஆயிரம் அடுப்பு, விடியும்வரை கிடாவெட்டு... நாட்டரசன்கோட்டை செவ்வாய்ப் பொங்கல் திருவிழா!

அருண் சின்னதுரை

வேலை காரணமாக வெளியூர், வெளிநாடு என்று சென்றிருப்பவர்கள், தங்கள் வீட்டு விழாவிற்கு வரவில்லை என்றாலும், வருடத்துக்கு ஒருமுறை சொந்த ஊரில் நடக்கும் செவ்வாய்ப் பொங்கலுக்கு வந்து சேர்ந்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்
.


நாட்டரசன்கோட்டை செவ்வாய்ப் பொங்கல்

பொங்கல் விழா, தமிழர்களின் பாரம்பர்யத்தையும் பண்பாட்டையும் அடையாளப்படுத்தும் மகத்தான விழா. தமிழகத்திலேயே ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு மாதிரியான கலாசாரத்தை பொங்கல் விழா வெளிப்படுத்துகிறது. அப்படி தனித்துவமான கொண்டாட்டமாகத் திகழ்கிறது, சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை கிராமத்தினர் கொண்டாடும் செவ்வாய்ப் பொங்கல்.



நாட்டரசன்கோட்டை செவ்வாய்ப் பொங்கல்

மாட்டுப் பொங்கல் முடிந்து வரும் முதல் செவ்வாய் அன்று (இந்த ஆண்டு நாளை 21.1.2020), செவ்வாய்ப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. செட்டிநாடு பகுதியில் பரவலாகக் கடைபிடிக்கப்பட்டுவந்த இந்த செவ்வாய்ப் பொங்கல் அருகிப் போனாலும், நாட்டரசன்கோட்டையில் உள்ள நகரத்தார் மக்கள் தங்கள் பாரம்பர்யத்தைக் கைவிடாது, தற்போதும் வெகு விமரிசையாகக் கொண்டாடிவருகின்றனர். குடும்பத் தலைக்கட்டை ’ஒரு புள்ளி' எனக் கணக்கிட்டு, ஒவ்வொரு புள்ளிக்கான பெயரையும் துண்டுச் சீட்டில் எழுதி, வெள்ளிப் பானையில் போட்டு குலுக்கி, ஒரு சீட்டைத் தேர்வுசெய்கிறார்கள்.

அப்படித் தேர்க்செய்யப்படுபவர், முதல் அடுப்பில் பொங்கல் வைக்கிறார். கிட்டத்தட்ட ஆயிரம் அடுப்புகள் போடப்பட்டிருக்க, மற்றவர்கள் தத்தம் குடும்பத்துக்கான அடுப்புகளில் பொங்கல் வைக்கிறார்கள். கோயில் வாசல் எங்கும் அடுப்புகள் வரிசை வரிசையாக அமைக்கப்பட்டிருப்பதும், அதில் வெண்கலப் பானையில் ஒன்றுபோல பொங்கல் வைக்கப்படுவதும் காண்பதற்கு அவ்வளவு அழகான காட்சி.

உள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்!

வேலை காரணமாக வெளியூர், வெளிநாடு என்று சென்றிருப்பவர்கள், தங்கள் வீட்டு விழாவிற்கு வரவில்லை என்றாலும், வருடத்துக்கு ஒருமுறை சொந்த ஊரில் நடக்கும் இந்த செவ்வாய்ப் பொங்கலுக்கு வந்து சேர்ந்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஒருவேளை செவ்வாய்ப் பொங்கலுக்கு ஊருக்கு வர இயலவில்லை என்றால், அதை கெளரவக் குறைச்சலாகவும் சாமி குத்தமாகவும் நினைக்கின்றனர். தங்கள் குடும்பம் பொங்கல்வைக்க ஒதுக்கப்படும் இடத்தை வெறுமையாக விட இவர்கள் விரும்புவதில்லை.



நாட்டரசன்கோட்டை செவ்வாய்ப் பொங்கல்

ஊரின் நடுவில் வீற்றிருக்கும், 'கண்ணாத்தாள்'என்று பக்தர்களால் பரவசத்துடன் அழைக்கப்படும் ஶ்ரீ கண்ணுடையநாயகி அம்மனுக்குத்தான் இந்தப் பொங்கல் வைபவம் நடத்தப்படுகிறது. விழாவைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள, ஊர்ப் பெரியவர்களிடம் பேசினோம். தற்போது, சுமார் 980 புள்ளிகள் பொங்கல் வைக்கிறார்கள். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு 400 புள்ளிகள் என்ற கணக்கில்தான் பொங்கல் வைத்துக்கொண்டிருந்தனர். தற்போது, கணிசமாகப் புள்ளிகள் அதிகரித்திருக்கின்றன. செவ்வாய்ப் பொங்கலில் நகரத்தார் மட்டுமன்றி, பிற சமூகத்தினரும் தனி வரிசையாக அம்மனுக்கு வேண்டுதல் வைத்துப் பொங்கல் வைக்கின்றனர். செவ்வாய்ப் பொங்கலில் கலந்துகொண்டாலே சிறப்புதான். இந்த செவ்வாய்ப் பொங்கலுக்கு, எங்கள் உறவினர்கள் வெளிநாடுகளில் இருந்தாலும் வந்துவிடுவார்கள். வரமுடியாதபட்சத்தில், அவர்களது உறவினர்களாவது அவர்களுக்கான அடுப்பில் பொங்கல் வைத்துவிடுவார்கள்.

ஆயில் கருப்பையா என்பவரிடம் பேசியபோது, "செவ்வாய்ப் பொங்கல் வைக்கும் வரிசை எண்ணை துண்டுச்சீட்டுகளில் எழுதிப்போட்டு, குலுக்கல் முறையில் தேர்வுசெய்வோம். குடும்பத்தில் ஆண் வாரிசுக்குத் திருமணம் நடந்தவுடன், அவர் தனிப் புள்ளியாகக் கணக்கிடப்படுவார். ஒவ்வொரு நபருக்கும் அவருக்கு குலுக்கலில் கிடைக்கும் எண்ணின் அடிப்படையில் அடுப்பின் வரிசை ஒதுக்கப்படுகிறது. முதல் நபராகத் தேர்வு செய்யப்படும் குடும்பத்தினர், மண்பானையில் பொங்கல் வைக்க வேண்டும். அந்த நபர் தனியாகக் கிடாய் வாங்கி வெட்ட வேண்டும். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் முதல் நபர் அதிர்ஷ்டசாலியாகவும் பாக்கியசாலியாகவும் கருதப்படுவார்.

முதல் பொங்கல் வைக்கும் குடும்பத்தினரின் பொங்கல் பானை சிறப்பானதாகக் கருதப்படும். அவர்கள் பொங்கல் வைக்க ஆரம்பித்த பின்னரே மற்றவர்கள் பொங்கல் வைக்க வேண்டும். இவர்கள் மட்டும் மண்பானையில் பொங்கல் வைக்க, மற்றவர்கள் வெள்ளிப்பானை, வெண்கலப் பானை எனத் தங்கள் விருப்பம்போல பொங்கல் வைப்பார்கள்.



அண்ணன், தம்பி, பங்காளி ஒற்றுமை தொடர வேண்டும் என குடும்ப வாரியாகத்தான் புள்ளிகள் வரிசை பிரிக்கப்படும். மேலும், இப்படி உறவினர்கள் அனைவரும் ஒன்றுகூடும் விழாவாக இது இருப்பதால், திருமணத்துக்குப் பெண், மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருக்கும் குடும்பங்கள், தங்களுக்கான பெண், பையனைத் தேர்ந்தெடுக்கும், முடிவுசெய்யும் நிகழ்ச்சியாகவும் இந்தப் பொங்கல் விழா அமைந்துவிடுவது இதன் கூடுதல் சுவாரஸ்யம்” என்றார்.

மனோன்மணி ஆச்சி, "கண்ணாத்தாள் குடிகொண்டுள்ள இந்த நாட்டரசன்கோட்டையில் பிறந்து, இதே ஊரில் திருமணம் செய்துகொண்டதை பாக்கியமாகக் கருதுகிறேன். ஆன்மிகத்தில் அதிக விருப்பமுள்ள எனக்கு, செவ்வாய்ப் பொங்கல் விருப்பமான ஒன்று. செவ்வாய்ப் பொங்கலில் சீட்டு விழுந்தவர்களுக்கு மட்டுமல்ல, கலந்துகொண்ட அனைவருக்கும் சிறப்பை அள்ளித்தருவாள் கண்ணாத்தாள்.



மாட்டுப் பொங்கல் முடிந்து, வரும் முதல் செவ்வாய் அன்று, இந்தப் பாரம்பர்ய செட்டிநாட்டு செவ்வாய்ப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. உறவினர்கள், உலகில் எங்கு இருந்தாலும் அனைவரும் செவ்வாய்ப் பொங்கலுக்கு வந்தே தீருவார்கள். என் மகன் அமெரிக்காவில் பணிசெய்கிறான். அவனும் ஒரு புள்ளி கணக்குத்தான். அதனால், அங்கிருந்து செவ்வாய்ப் பொங்கலுக்கு வந்துவிடுவான். வரமுடியாதபோது, அவனுக்குத் தனியாக நான் ஒரு பொங்கல்பானை வைத்து பொங்கல் வைத்துவிடுவேன்.

முதல் பொங்கல்பானை குடும்பத்தினர் பொங்கல் வைக்க ஆரம்பித்த பின், கோயிலை பூஜை செய்து சுற்றிவருவார்கள். அப்போது, மற்ற அனைவரும் பொங்கல் வைக்க தடபுடலாகத் தயாராகிவிடுவார்கள். மாலை சுமார் 5 மணிக்கு இந்தப் பொங்கல் நிகழ்ச்சி ஆரம்பித்தவுடன், கிட்டத்தட்ட ஆயிரம் அடுப்புகளும் நெருப்பு மூட்டப்பட்டு, பொங்கல் பானைகள் வைக்கப்பட, கண்ணாத்தாள் கோயிலைச் சுற்றி மேகக்கூட்டம் சூழ்ந்ததுபோல சூழ்ந்துவிடும் அடுப்பின் புகை. பொங்கல் வைத்து, இரவு பூஜைகள் முடிந்த பின்னர்தான் பொங்கல் பானையை வீட்டுக்கு எடுத்துச்செல்வோம். பொங்கல் வைப்பு, கிடா வெட்டு என்று பல பூஜைகள் முடிவதற்குள் இருட்டிவிடும்.



நாட்டரசன்கோட்டை செவ்வாய்ப் பொங்கல்

நேர்த்திக்கடன் கிடாய்களும் வெட்டுவார்கள். அப்படி சிலநேரம் அதிக எண்ணிக்கையிலான கிடாய்கள் வெட்டும்போது விடிந்தேவிடும். ஒவ்வொரு பொங்கல் பானைக்கும் முன்பு போட்டிருக்கும் கோலத்தையும், வைக்கும் பொங்கலையும் கண்ணாத்தாள் ரசிப்பாள் என்பது ஐதிகம். செவ்வாய்ப் பொங்கலில், வெண்பொங்கல் மட்டுமே வைக்கப்படும். ஆனால், மனதில் இனிப்பு நிறைந்திருக்கும். செவ்வாய்ப் பொங்கலில் அனைத்து உறவினர்களையும் சந்திப்பது பெருமகிழ்ச்சி” என்றார்.

செவ்வாய்ப் பொங்கலைக் காண வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வரை வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு செவ்வாய்ப் பொங்கல் நாளை (21.01.2020) நடைபெறுகிறது.
மதுரையில் அடிக்கல் நாட்டி ஓராண்டாகிறது; ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு நிதி ஒதுக்குவது எப்போது?

 எய்ம்ஸ் மருத்துவமனைக்காக தேர்வு
aiims-in-madurai

பிரதமர் மோடி மதுரைக்கு வந்துஅடிக்கல் நாட்டிச் சென்று ஓராண்டாகியும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு இன்னும் திட்ட அறிக்கையும் (Project Report) தயாராகவில்லை, நிதியும் ஒதுக்கப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.

டெல்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை (அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனை) சர்வதேச அளவில் புகழ் பெற்றது. 2015-ம் ஆண்டு தமிழகத்தில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமையும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்பிறகு, மதுரையில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது.

இத்திட்டத்துக்கான அடிக்கல்நாட்டு விழா நடக்கும் வரை இத்திட்டத்தில் மத்திய, மாநில அரசுகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாத நிலை இருந்தது. ஆனாலும்,கடந்த மக்களவைத் தேர்தல் நேரத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த ஆண்டு ஜன.27-ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ரூ.1,264 கோடி செலவில் 750 படுக்கை வசதிகளுடன் 100 எம்பிபிஎஸ் இடங்களும், 60 செவிலியர் படிப்பு (நர்சிங்) இடங்களுடன் பிரம்மாண்டமாக மதுரை அருகே தோப்பூரில் அமையவுள்ள இந்த மருத்துவமனையை பிரதமர் மோடி மதுரைக்கு வந்து அடிக்கல் நாட்டிச் சென்றார்.

இதற்கிடையே, நாட்டின் மற்றஇடங்களில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டும் ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிதிக்குழு நிறுவனத்திடம் கடனுதவியை எதிர்பார்த்த நிலையில், தற்போது இந்ததிட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்று தகவல் வெளியானது.

கடன் உதவி அளிக்கவுள்ள ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிதிக் குழுவினர் ‘பிரதம மந்திரி ஸ்வராஜ் சுரக்சா' இயக்குநர் சஞ்சய்ராய் தலைமையில், மதுரையில் கடந்த 3 மாதத்துக்கு முன்பு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைய உள்ள தோப்பூரில் வந்து ஆய்வு செய்தனர். அவர்கள், ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்குப் போதுமான நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதா? சாலை, விமான நிலைய வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர். ஆனாலும், தற்போது வரை நிதி ஒதுக்கப்படவில்லை. திட்ட அறிக்கையும் (Project Report) தயாராகவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த மருத்துவமனையை 2022-ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வரை நிதி ஒதுக்கப்படாததால் இந்த திட்டம்அறிவித்து 5 ஆண்டுகள் கடந்தும்,பிரதமர் அடிக்கல் நாட்டி ஓராண்டுநிறைவடைந்தும் குறித்த காலத்துக்குள் இந்த மருத்துவமனை கட்டிமுடிக்க வாய்ப்பில்லை.

தற்போது 224.24 ஏக்கர் நிலம்மட்டும், மத்திய அரசு சுகாதாரத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தைச் சுற்றி,ரூ.5 கோடியில் காம்பவுண்ட் சுவர் அமைக்கும் பணி நடக்கிறது. இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ‘‘உலகத்தரத்தில் மருத்துவமனையைகட்டுவதற்கே ஜப்பான் நிறுவனத்திடம் கடனுதவி கேட்கப்பட்டுள்ளது.அவர்கள் பரிந்துரைக்கும் தரத்தை பயன்படுத்தி இந்த மருத்துவமனை கட்டப்படும்’’ என்றனர்.

மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறியதாவது: ஜைக்கா நிறுவனம்,வரும் மார்ச் மாதத்தில் எவ்வளவுகடன் வழங்குவோம் என்பது உள்ளிட்ட முழு விவரத்தையும் கொடுத்து விடும். கடன் எவ்வளவுகிடைக்கும் என்பதை பொறுத்துபட்ஜெட்டில் நிதி ஒதுக்குவதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால், இந்த பட்ஜெட்டிலேயே சேர்க்க வலியுறுத்தி வருகிறேன். இதுவரை 3 முறை மக்களவையில் பேசிஉள்ளேன். 6 முறை மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தி உள்ளேன்’’ என்றார்.
'நிர்பயா' குற்றவாளியின் கடைசி மனுவும், 'டிஸ்மிஸ்'

Updated : ஜன 20, 2020 23:57 | Added : ஜன 20, 2020 22:51

புதுடில்லி: மருத்துவ மாணவி 'நிர்பயா' பாலியல் பலாத்கார வழக்கின் குற்றவாளி தாக்கல் செய்த கடைசி மனுவையும் உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. வழக்கை இழுத்தடிக்கும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதை அடுத்து குற்றவாளிகள் நான்கு பேருக்கும் பிப். 1ல் துாக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன.

டில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா 2012 டிசம்பரில் ஆறு பேர் அடங்கி கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. டில்லியில் வரலாறு காணாத போராட்டங்கள் நடந்தன. இந்த வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் 'மைனர்' என்பதால் சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் அடைக்கப்பட்டார். மூன்று ஆண்டு தண்டனைக்கு பின் விடுவிக்கப்பட்டார்.

ராம்சிங் முகேஷ் குமார் 32, வினய் சர்மா 26, அக் ஷய் குமார் 31, பவன் குப்தா 25 ஆகியோருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில் ராம்சிங் டில்லி திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.மீதமுள்ள நான்கு பேரும் துாக்கு தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சீராய்வு மனு 2018ல் தள்ளுபடி செய்யப்பட்டது. நான்கு பேருக்கும் இம்மாதம் 22ல் துாக்கு தண்டனையை நிறைவேற்ற திகார் சிறையில் ஏற்பாடு நடந்து வந்தது.இதையடுத்து வினய் சர்மா, முகேஷ் குமார் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.அடுத்ததாக துாக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்காக பிறப்பித்த 'வாரன்ட்'டை எதிர்த்து டில்லி உயர் நிதிமன்றத்தில் முகேஷ் குமார் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனாலும் தண்டனையை நிறைவேற்றுவதை இழுத்தடிக்கும் வகையில் துாக்கு தண்டனையை ரத்து செய்யும்படி முகேஷ் குமார் ஜனாதிபதிக்கு கருணை மனு தாக்கல் செய்தார்.இதனால் ஏற்கனவே அறிவித்தபடி 22ல் துாக்கு தண்டனையை நிறைவேற்ற முடியாத சூழல் உருவானது. இதற்கிடையே முகேஷ் குமாரின் கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இதன்பின் நான்கு பேருக்கும் பிப். 1ல் துாக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது.

ஆனாலும் தண்டனை நிறைவேற்றுவதை மேலும் சில நாட்களுக்கு இழுத்தடிக்கும் நோக்கத்துடன் குற்றவாளி பவன் குப்தா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் 'குற்றம் நடந்தபோது நான் 18 வயதுக்கு உட்பட்ட மைனர். ஆனால் வழக்கு விசாரணையின் போது டில்லி உயர் நீதிமன்றம் நான் மைனர் என்ற கோரிக்கையை நிராகரித்து விட்டது' என கூறப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷன், ஏ.எஸ்.போபன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.பவன் குப்தா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.பி.சிங் வாதாடியதாவது:பவன் குப்தாவின் பள்ளி சான்றிதழில் அவர் பிறந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. அதை கணக்கிட்டு பார்த்தால் குற்றம் நடந்தபோது அவர் மைனர் என்பது தெளிவாக தெரிகிறது. ஆனால் விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றம் உள்ளிட்டவை இந்த விஷயத்தை பரிசீலிக்கவில்லை.இவ்வாறு அவர் வாதிட்டார்.டில்லி போலீஸ் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடியதாவது:பவன் குப்தாவின் கோரிக்கையை வழக்கு விசாரணை நடந்த அனைத்து நீதிமன்றங்களும் பரிசீலித்துள்ளன. திரும்ப திரும்ப அந்த கோரிக்கையை எழுப்புவது நீதிமன்றத்தை பரிகசிப்பதாக்கி விடும்.குற்றம் நடந்தபோது பவன் குப்தாவுக்கு 19 வயது என்பது அவரது பிறப்பு சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது; இது அனைத்து நீதிமன்றங்களிலும் பரிசீலிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் வாதிட்டார்.நீதிபதிகள் உத்தரவு:பவன் குப்தாவின் கோரிக்கையை விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவை ஏற்கனவே பரிசீலித்து நிராகரித்துள்ளன. உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.'நிர்பயா' பாலியல் பலாத்கார வழக்கின் குற்றாவளியின் கடைசி மனுவும் நிராகரிக்கப்பட்டதை அடுத்து குற்றவாளிகள் நான்கு பேருக்கும் பிப். 1ல் துாக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை டில்லி திகார் சிறை நிர்வாகம் முழுவீச்சில் செய்து வருகிறது.

வெளிநாடுகளில் வெறும் கூலிகளாக பரிதவிக்கும் தமிழக தொழிலாளர்கள்

Added : ஜன 21, 2020 01:50



சிவகங்கை:தமிழகத்தில் இருக்கும் ஏஜன்ட்கள் சிலர், மலேஷியா உள்ளிட்ட நாடுகளில் பணிபுரியும் தொழிலாளிகளிடம் கூலிப்படை மூலம் பணம் பறிக்கின்றனர்.

கூலிப்படையிடம் சிக்கிய சிவகங்கை வாலிபர், கலெக்டரின் முயற்சியால் மீட்கப்பட்டார்.சிவகங்கை மாவட்டம், பெரிய உஞ்சனையைச் சேர்ந்தவர் விஸ்வநாதன், 35.பணிக்காக, 2016ல் மலேஷியா சென்றவர், கூலிப்படையினரால் கடத்தப்பட்டு, சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன் முயற்சியால் மீட்கப்பட்டார்.நேற்று கலெக்டரை சந்தித்த அவர் கூறியதாவது:மதுரை ஏஜன்ட் ஒருவரிடம், 1.30 லட்சம் ரூபாய் கொடுத்து, மலேஷியா சென்றேன். ஏற்கனவே, 10 ஆண்டு பணி அனுபவம் இருந்ததால், நல்ல சம்பளம் கிடைத்தது.ஆனால், பாஸ்போர்ட்டை ஏஜன்ட் வாங்கி வைத்து, கூலிப்படை மூலம் மிரட்டி, மாதந்தோறும் பணம் வசூலிக்க துவங்கினார். மூன்று ஆண்டுகளில், 11 லட்சத்துக்கும் அதிகமாக கொடுத்தேன். பணம் தர மறுத்த போது, கூலிப்படை மூலம் கடத்தி உணவு, தண்ணீர் கொடுக்காமல், ஆறு நாட்கள் அடைத்து வைத்தனர். என் தாய்க்கு போன் செய்து, '5 லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் உயிரோடு விடுவோம்' என மிரட்டினர்.என் தாய், கலெக்டரிடம், கடந்த நவம்பரில் புகார் கொடுத்தார். இந்திய துாதரகத்துக்கு, கலெக்டர் கடிதம் அனுப்பியதால், என்னை விடுவித்தனர். மீண்டும் வேலைக்கு சேர்ந்த என்னிடம், தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால், துாதரகத்தில் தஞ்சம் அடைந்து, சொந்த ஊர் வந்தேன்.இவ்வாறு அவர் கூறினார்.இதுபோன்ற புகார் வரும் போது, தமிழக போலீசாரை ஏஜன்ட்கள் சரிக்கட்டி விடுவதாகவும், அதனால், 'இது வெளிநாட்டில் நடந்தது' என, போலீசார் தட்டிக் கழித்து விடுவதாகவும், தொழிலாளர்கள் புலம்புகின்றனர்.
போலியோ சொட்டு மருந்து சும்மானாச்சுக்கும் கொடுத்தேன்'

Added : ஜன 21, 2020 01:39

பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர், தன், 8 வயது மகனுக்கு, போலியோ சொட்டு மருந்து கொடுத்த புகைப்படம் மற்றும் 'வீடியோ' பதிவுகள், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இளம்பிள்ளை வாத நோயை ஒழிக்க, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் சிறப்பு முகாம், 19ம் தேதி தமிழகம் முழுவதும் நடந்தது.பெரம்பலுார் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனராக பணியாற்றுபவர், டாக்டர் கீதாராணி. இவர், 19ம் தேதி, பெரம்பலுார் புது பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த, போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமிற்கு, தன், 8 வயது மகனை அழைத்து சென்றார். அங்கு, தன் மகனுக்கு, சொட்டு மருந்து கொடுத்துள்ளார்.இதை, புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபர், 'வாட்ஸ்ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு, சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.இது குறித்து, துணை இயக்குனர் கீதாராணி கூறியதாவது:என் மகன், 3ம் வகுப்பு படிக்கிறார். அவர், போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமிற்கு என்னுடன் வந்தார்.குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து கொடுப்பதைப் பார்த்து, 'எனக்கும் வேண்டும்' என, கேட்டார்.
நான், மறுப்பு தெரிவித்தேன். 'சொட்டு மருந்து கொடுப்பது போல, போஸ் மட்டும் கொடுங்கள்... அப்பாவுக்கு, போட்டோ அனுப்பலாம்' என்றார். அதனால் நான், அவருக்கு சொட்டு மருந்து கொடுப்பது போல், போட்டோ எடுத்தேன். அந்த படத்தை, எங்கள் குடும்ப வாட்ஸ்அப் குழுவில் பதிவிடுவதற்கு பதிலாக, தவறுதலாக, மாவட்ட அளவிலான மருத்துவ அலுவலர்களுக்கான குழுவில் பதிவிட்டேன். இவ்வாறு, அவர் கூறினார்.

NEWS TODAY 29.01.2026