Sunday, January 26, 2020

முதல் மனைவி விவாகரத்து பெற்றுவிட்டால் இரண்டாவது மனைவி ஓய்வூதியம் பெறலாம்- உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

முதல் மனைவி விவாகரத்து பெற்றுவிட்டாலோ அல்லது இறந்துவிட்டாலோ இரண்டாவது மனைவிசட்டப்படி ஓய்வூதியம் பெறலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் பஞ்சாயத்து யூனியனில் அரசு டாக்டராகப் பணியாற்றியவர் சின்னச்சாமி. இவருக்கும் பஞ்சோலை என்பவருக்கும் திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், சின்னச்சாமி சரோஜினிதேவி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். அவருக்கு 2 ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

முதல் மனைவி உயிரிழப்பு

இந்நிலையில், கடந்த 1997-ல் பஞ்சோலை மரணமடைந்தார். டாக்டர் சின்னச்சாமி கடந்த 1999-ல்ஓய்வு பெற்றார். இதையடுத்து, தனது குடும்ப ஓய்வூதியத்துக்கான வாரிசாக 2-வது மனைவி சரோஜினிதேவியை நியமித்தார். 2009-ல் டாக்டர் சின்னச்சாமியும் இறந்தார். இந்நிலையில் தனக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கக் கோரி சரோஜினிதேவி அதிகாரிகளிடம் மனு அளித்தார்.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு

ஆனால் அவர் 2வது மனைவி என்பதால் ஓய்வூதியம் வழங்க முடியாது என அதிகாரிகள் நிராகரித்தனர். அதையடுத்து சரோஜினிதேவி கணவரின் ஓய்வூதியத்தைதனக்கு வழங்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்டேஷ் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘ஓய்வூதிய விதிகளில் 2-வது மனைவி சட்டப்பூர்வ வாரிசு இல்லை எனக் கூறப்பட்டுள்ளதால்தான் அவருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் சின்னச்சாமியின் 2-வது மனைவியாக அவர் இறக்கும்வரை வாழ்ந்துள்ளார். முதல் மனைவி இறந்த பிறகும் 12 ஆண்டுகள் வரை கணவருடன் வாழ்ந்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் உத்தரவு

முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டாலோ அல்லது முதல் மனைவி இறந்துவிட்டாலோ கணவருடன் நீண்டநாட்களாக வாழ்க்கை நடத்தும் 2-வது மனைவிஓய்வூதிய பலன்களை பெறலாம் என தனுலாஸ் என்பவரின் வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல் மனைவி இறந்த பிறகுதான் 2-வது மனைவி ஓய்வூதியம் கோருகிறார். எனவே கணவரி்ன் குடும்ப ஓய்வூதியம் பெற இவருக்கு உரிமை உள்ளது.

ஆகையால், 12 வாரங்களுக்குள் இவருக்கு சேர வேண்டிய குடும்ப ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
நிர்பயா வழக்கில் குற்றவாளியின் வழக்கறிஞர் கோர்ட்டில் குறிப்பிட்ட சத்ருஹன் சின்ஹா வழக்கின் விவரம் என்ன?

நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளில் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் 2014-ம் ஆண்டு வழங்கப்பட்ட சத்ருஹன் சின்ஹா வழக்கின் தீர்ப்பைக் குறிப்பிட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குத் தண்டனை பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்குள் நிறைவேற்றப்பட இருக்கிறது.

குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் தாக்கல் செய்த கருணை மனுவையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 17-ம் தேதி நிராகரித்தார். குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்தது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், சத்ருஹன் சின்ஹா வழக்கில் கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்தபின் அரசியலமைப்புச் சட்டம் 32-வது பிரிவின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைச் சுட்டிக்காட்டி இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 1997-ம் ஆண்டு குஜராத்தில் சத்ருஹன் சின்ஹா, மகேந்திர சவுஹான் குடும்பத்தினரைக் கொலை செய்த வழக்கில் சுரேஷ், ராம்ஜி ஆகிய இருவருக்குத் தூக்குத் தண்டனை விதித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2000ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

ஆனால் குற்றவாளிகள் இருவரும் தங்கள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த கருணை மனு மீது கடந்த 12 ஆண்டுகளாக எந்தவிதமான முடிவும் எடுக்காமல், அந்த மனுவைக் குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்தார்.

கடந்த 12 ஆண்டுகளாக தங்களுடைய கருணை மனுமீது எந்தவிதமான முடிவும் எடுக்காமலிருந்து அதை நிராகரித்த குடியரசுத்தலைவர் முடிவுக்கு எதிராக அரசியலமைப்பு பிரிவு 21 மற்றும் 32 ஆகியவற்றின் கீழ் உச்ச நீதிமன்றத்தில் சுரேஷ், ராம்ஜி இருவரும் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சதாசிவம், ரஞ்சன் கோகய், சிவா கீர்த்தி சிங் ஆகியோர் விசாரித்தனர். குடியரசுத் தலைவர் கருணை மனு மீது தன்னுடைய முடிவை அறிவிக்க 12 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது பொறுக்க முடியாதது. அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21-க்கு எதிரானது. அரசியலமைப்புச் சட்டத்துக்கே எதிரானது. கடந்த 12 ஆண்டுகளாகக் குடியரசுத் தலைவர் தாமதித்து இருக்கக்கூடாது என்ற கூறி இருவரின் தூக்குத் தண்டனையையும் ஆயுள் தண்டனையாகக் குறைத்துத் தீர்ப்பளித்தனர்.

இந்த வழக்கைச் சுட்டிக்காட்டித்தான் நிர்பயா குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்கள்.

வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்

By DIN | Published on : 26th January 2020 12:34 AM |

சென்னை எழும்பூா்-மதுரைக்கு வரும் திங்கள்கிழமை (ஜன. 27) இயக்கப்படும் விரைவு ரயில் 75 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

விழுப்புரம்-திருச்சிராப்பள்ளி பிரிவில் ரயில்வே பராமரிப்பு பணி நடக்கவுள்ளது. இதன் காரணமாக, சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு திங்கள்கிழமை மதியம் 1.40 மணிக்கு இயக்கப்படும் ரயில் தாமதமாக புறப்படும். அதாவது, அதேநாளில் 75 நிமிடம் தாமதமாக பிற்பகல் 2.55 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களினால் வெளிச்சத்துக்கு வந்த முறைகேடு

By DIN | Published on : 26th January 2020 04:09 AM




தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 4 தோ்வு முறைகேடு சமூக ஊடகங்களினால் வெளிச்சத்துக்கு வந்திருப்பது தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 4 தோ்வு முறைகேடு குறித்து நவம்பா் மாதம் தோ்வு முடிவு வெளியான பின்னா், பல்வேறு தகவல்கள் வதந்திகளாகப் பரவின. இருப்பினும் சமூக ஊடகங்களில் சில தகவல்கள் உண்மைத்தன்மையுடன் உலவியது.

முக்கியமாக சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணூரைச் சோ்ந்த திருவராஜ் என்பவா் குரூப் 4 தோ்வில் முதலிடம் பிடித்தது அந்தப் பகுதி மக்களிடம் அதிா்ச்சியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. ஏனெனில் 50 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் திருவராஜ் எப்படி தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டாா்; அவா் எப்படி தோ்வில் முதலிடத்தை பிடித்தாா் என்ற சந்தேகம் பெரும்பாலானோரிடம் பலமாக எழுந்தது.

இது தொடா்பான தகவல்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. அத் தகவலின் அடிப்படையில், திருவராஜ் தோ்ச்சியின் பின்னணியை சில தோ்வா்கள் ஆராய்ந்தனா். அதில் ராமேசுவரம், கீழக்கரை மையங்களில் தோ்வு எழுதியவா்களில் 39 போ், முதல் 100 இடங்களுக்குள் வந்திருப்பதும், அங்கு முறைகேடு நடைபெற்றிருப்பதும் தெரியவந்தது.

இத்தகவலும் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வந்தநிலையில், தோ்வா்கள் குரூப் 4 தோ்வில் முறைகேடு நடைபெற்றிருப்பது குறித்து தோ்வாணையத்தில் முறையிடத் தொடங்கினா். இதற்கு வலு சோ்க்கும் வகையில் அரசியல் கட்சிகளும் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தோ்வாணையத்துக்கு அழுத்தம் கொடுத்தனா்.

இக்காரணங்களால் விழித்துக் கொண்ட தோ்வாணையம் விசாரணையில் இறங்கியது. விசாரணையில், இரு மையங்களிலும் நடைபெற்ற குரூப் 4 தோ்வு முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த முறைகேடு குறித்து சிபிசிஐடி தற்போது நடத்தி வரும் விசாரணையில், பல கோடி ரூபாய் புழங்கியிருப்பது அனைவரையும் அதிா்ச்சி அடைய வைத்துள்ளது.
64 முறை தவறு செய்த கண்டக்டர்

Added : ஜன 26, 2020 00:26

சென்னை:தொடர்ந்து, 64 முறை தவறு செய்து, சிறிய அளவில் தண்டனை பெற்ற, அரசு பஸ் நடத்துனரை, பணி நீக்கம் செய்தது சரியே' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

'சிறிய தண்டனை பெற்று தப்பி விடலாம் என நினைப்பவருக்கு, பெரிய தண்டனை காத்திருக்கிறது' என்பதையும், உயர் நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டத்தில், எம்.சேகர் என்பவர் நடத்துனராக பணியாற்றினார். பயணியரிடம் பெறப்படும் டிக்கெட் கட்டணத்தை, தாமதமாக கட்டுவதாக, இவருக்கு எதிராக புகார் கூறப்பட்டது.இவ்வாறு, 64 முறை தாமதமாக பணம் செலுத்தியதாக தெரிகிறது. இது தவிர்த்து, அனுமதியின்றி பணிக்கு வராமல், பலமுறை இருந்ததாகவும் புகார் கூறப்பட்டது. இதையடுத்து, குற்றச்சாட்டுகள் அடங்கிய, 'மெமோ' வழங்கப்பட்டு, 2006 ஏப்ரலில், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். பின், இவர் அளித்த விளக்கத்துக்கு பின், பணி அமர்த்தப்பட்டார்.மேல்முறையீடுஅதைத்தொடர்ந்து, குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. சேகருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக, விசாரணை அதிகாரி அறிக்கை அளித்தார்.இதையடுத்து, அவரிடம் விளக்கம் கோரப்பட்டு, கடைசியில் பணி நீக்கம் செய்யப்பட்டார். 22010 ஜூலையில், போக்குவரத்து கழக நிர்வாகம், இந்த உத்தரவை பிறப்பித்தது.பணி நீக்க உத்தரவை எதிர்த்து, வேலுாரில் உள்ள தொழிலாளர் நல நீதிமன்றத்தில், சேகர் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த தொழிலாளர் நல நீதிமன்றம், பணி நீக்க உத்தரவை ரத்து செய்து, மீண்டும் பணியில் அமர்த்தும்படி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், போக்குவரத்து கழக நிர்வாகம் மேல்முறையீடு செய்தது.போக்குவரத்து கழகம் சார்பில், வழக்கறிஞர் ரஜினி ராமதாஸ் ஆஜராகி, ''தொடர்ந்து, ௬௪ முறை தவறு செய்துள்ளார். ஆறு முறை அனுமதியின்றி, பணிக்கு வராமல் இருந்துள்ளார்.''கருணை அடிப்படையில் பணி வழங்க, தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணி நீக்க உத்தரவில், தொழிலாளர் நீதிமன்றம் குறுக்கிட்டிருக்கக் கூடாது,'' என்றார்.

மனுவை விசாரித்த, நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு பிறப்பித்த உத்தரவு:தொழிலாளர் நல நீதிமன்றத்துக்கு, தனிப்பட்ட அதிகாரம் உள்ளது என்பதில், எந்த சந்தேகமும் இல்லை. இயந்திரகதியாக, காரணம் எதையும் தெரிவிக்காமல், இத்தகைய அதிகாரத்தை செயல்படுத்த முடியாது. எச்சரிக்கையுடன், இந்த அதிகாரத்தை செயல்படுத்த வேண்டும்.
மன உறுதி

பணி நீக்க உத்தரவு எப்படி நியாயமற்றது என்பதற்கு, தொழிலாளர் நல நீதிமன்றம் காரணம் தெரிவிக்கவில்லை.கருணை அடிப்படையில், தண்டனையை மாற்றி உள்ளது. சட்ட அம்சங்கள் மீறப்பட்டிருந்தால் அல்லது பின்பற்றாமல் இருந்திருந்தால், அதை ஆராய, உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது.இந்த வழக்கை பொறுத்தவரை, நடத்துனரின் பணி நடத்தை சரியாக இல்லை; டிக்கெட் கட்டணத்தை தாமதமாக செலுத்தியது; குறைவான தொகையை செலுத்தியதற்காக, 64 முறை சிறிய அளவில் தண்டனை பெற்றுள்ளார்.கடமை தவறியதற்காக, ஒன்பது முறையும், அனுமதியின்றி பணிக்கு வராமல் இருந்ததற்காக, ஆறு முறையும் தண்டனை பெற்றுள்ளார்.பயணியருக்கு டிக்கெட் வழங்காதது; பணி நேரத்தில் போதையில் இருந்தது போன்ற காரணங்களுக்காக, இந்த தண்டனையை பெற்றுள்ளார். இவரது கடந்த கால நடத்தையை பார்க்கும்போது, தண்டனையை பொருட்படுத்தாமல், மீண்டும் மீண்டும் தவறு செய்வதை, வாடிக்கையாக வைத்துள்ளார்.

பணிபுரியும் இடத்தில், ஒழுக்கம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அதை உறுதி செய்ய வேண்டியது, நிர்வாகத்தின் கடமை. சிறிய அளவில் தண்டனை பெற்றும், மீண்டும் மீண்டும் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால், அது குற்றம் தான். தண்டனை பெற்றும் திருந்தவில்லை என்றால், தொடர்ந்து அவரை பணியில் வைத்திருப்பது, மற்ற ஊழியர்களின் மன உறுதியை பாதிக்கும்.பணி நீக்க உத்தரவுஎனவே, பணியில் தொடர, சேகருக்கு தகுதியில்லை. பணி நீக்கம் செய்வது என, நிர்வாகம் எடுத்த முடிவு சரியானது.இதில், குறுக்கிட தேவையில்லை. தொழிலாளர் நல நீதிமன்றத்தின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. பணி நீக்க உத்தரவு, அமலுக்கு வருகிறது.தொடர்ந்து தவறு செய்து, சிறிய தண்டனை பெற்று தப்பி விடலாம் என, எப்போதும் ஒருவர் நினைக்கக் கூடாது. மீண்டும் தவறு செய்தால், பெரிய தண்டனை காத்திருக்கிறது என்பதை, அவர் அறிய வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
இரண்டாவது மனைவிக்கு 'பென்ஷன்' மறுத்தது ரத்து

Added : ஜன 26, 2020 00:33

சென்னை:முதல் மனைவி இருக்கும் போதே, இரண்டாவதாக திருமணம் செய்யப்பட்ட பெண்ணுக்கு, 'பென்ஷன்' வழங்க மறுத்ததை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் பேரூராட்சி ஒன்றிய மருத்துவமனையில், டாக்டர் சின்னசாமி என்பவர் பணியாற்றி, ௧௯௯௯ல் ஓய்வு பெற்றார்.முதல் திருமணம் வாயிலாக, மூன்று குழந்தைகள் பெற்றார். முதல் மனைவி இருக்கும் போதே, ௧௯௭௫ல், சரோஜினிதேவி என்பவரை, இரண்டாவதாக திருமணம் செய்தார். அவரும், மூன்று குழந்தைகள் பெற்றார்.முதல் மனைவி, ௧௯௯௭ல் இறந்தார். அதைத் தொடர்ந்து, பென்ஷன் தொகையை பெற, இரண்டாவது மனைவியை நியமித்தார்.கடந்த, 2009ம் ஆண்டில், டாக்டர் சின்னசாமி இறந்தார். பென்ஷன் தொகையை தனக்கு தரக்கோரி, சரோஜினிதேவி, மனு அளித்தார். அதை, உள்ளாட்சி கணக்கு தணிக்கை அதிகாரி நிராகரித்தார்.டாக்டர் சின்னசாமிக்கும், சரோஜினிதேவிக்கும் நடந்த திருமணம் செல்லாது என்பதால், அவரை சட்டப்பூர்வ பிரதிநிதியாக கருத முடியாது என, காரணம் கூறப்பட்டது.பென்ஷன் வழங்க மறுத்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் சரோஜினி தேவி மனு தாக்கல் செய்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஆர்.தாமரைசெல்வன் ஆஜரானார்.

மனுவை விசாரித்த, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:முதல் திருமணம் அமலில் இருக்கும் போதே, இரண்டாவது திருமணம் நடந்துள்ளது. அதை, சட்டம் அங்கீகரிக்கவில்லை. முதல் மனைவி இறந்த பின்னும், டாக்டர் சின்னசாமி இறக்கும் வரை, 12 ஆண்டுகள், அவருடனே சரோஜினிதேவி வாழ்ந்து உள்ளார்.கடந்த, 1975 முதல், 2009 வரை, 34 ஆண்டுகள், டாக்டர் சின்னசாமியுடன் சரோஜினிதேவி வாழ்ந்துள்ளார்; மூன்று குழந்தைகளும் பெற்று உள்ளார்.முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது, பென்ஷன் தனக்கு வேண்டும் என கோரியிருந்தால், அதை பெற உரிமையில்லை எனக் கூறலாம். முதல் மனைவி இறப்புக்கு பின்னும், கணவன் - மனைவியாக, டாக்டர் சின்னசாமியும், சரோஜினிதேவியும் தொடர்ந்துஉள்ளனர். தன் மரணத்துக்கு பின், பென்ஷன் தொகையை பெற, மனுதாரரை டாக்டர் சின்னசாமி நியமித்துள்ளார். எனவே, பென்ஷன் வழங்க மறுத்த உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது.சின்னசாமி இறந்த நாள் முதல், மனுதாரருக்கு பென்ஷன் வழங்க உத்தரவிடப்படுகிறது. 12 வாரங்களுக்குள் இதை வழங்க வேண்டும். அவரது வாழ்நாள் வரை, பென்ஷன் வழங்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தற்கொலையை தடுக்க... கண்காணிப்பு!

Updated : ஜன 26, 2020 00:24 | Added : ஜன 25, 2020 23:50 |

புதுடில்லி: மருத்துவ மாணவி, 'நிர்பயா' பாலியல் பலாத்கார வழக்கின் குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதை அடுத்து, அவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடலாம் என தகவல் வெளியானதால், சிறையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில், திகார் சிறை நிர்வாகத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, டில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கிடையே, தண்டனை நிறைவேற்றத்தை இழுத்தடிக்கும்முயற்சியாக, குற்றவாளி சார்பில், உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ல்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா, 2012ல், ஒரு கும்பலால், ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானார். அவரை கடுமையான சித்ரவதைக்கு ஆளாக்கிய அந்த கும்பல், பின், பஸ்சில் இருந்து வெளியில் துாக்கி வீசியது.

இறந்தார்

மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட மாணவி, சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த வழக்கில், குற்றவாளிகளான வினய் சர்மா, 26, அக் ஷய் குமார், 31, முகேஷ் குமார், 32, பவன் குப்தா, 26, ஆகியோருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இம்மாதம், 22ல் துாக்கு தண்டனை நிறைவேற்ற, 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது.

தண்டனையை இழுத்தடிப்பதற்காக நான்கு பேரும், ஒருவர் மாற்றி ஒருவராக கருணை மனு, சீராய்வு மனுக்களை தாக்கல் செய்ததால், ஏற்கனவே அறிவித்த தேதியில் தண்டனையை நிறைவேற்ற முடியவில்லை. முகேஷ் குமார் தாக்கல் செய்த கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை அடுத்து, பிப்., 1ல், நான்கு பேருக்கும் துாக்கு தண்டனையை நிறைவேற்ற, மீண்டும் வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.டில்லி திகார் சிறையில் தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

மாற்றம்

இந்நிலையில், குற்றவாளிகள் நான்கு பேரும் தற்கொலை செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிறை வட்டாரங்கள் கூறியதாவது:குற்றவாளிகள் நான்கு பேரும், சிறை எண், 3க்கு மாற்றப்பட்டுள்ளனர். அதிக பாதுகாப்பும், கண்காணிப்பும் உடைய, தனித் தனி அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில், துணி, இரும்பு உள்ளிட்ட எந்தவிதமான பொருட்களும் இல்லை.இயற்கை உபாதையை கழிப்பதற்கு, அவர்களது அறையிலேயே கழிப்பறை உள்ளது.

கழிப்பறையில் அமர்ந்திருந்தாலும், தலை வெளியில் தெரியும் வகையில், சிறிய தடுப்பே வைக்கப்பட்டுள்ளது. நான்கு அறைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் இவற்றில் பதிவாகும் காட்சிகள் கண்காணிக்கப்படுகின்றன. ஒவ்வொரு அறையிலும், இரண்டு போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். தினமும் இரண்டு முறை, அறைக்குள் சென்று, போலீசார் சோதனையிடுகின்றனர். இதுவரை, திகார் சிறையில் துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட எந்த குற்றவாளிகளுக்கும், இது போன்ற கண்காணிப்பு இருந்தது இல்லை. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே, வினய், அக் ஷய், பவன் குப்தா ஆகியோர் சார்பில், டில்லி செஷன்ஸ் நீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கருணை மனு மற்றும் மறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்வதற்கு, தங்களுக்கு சில ஆவணங்கள் தேவைப்படுவதாகவும், திகார் சிறை அதிகாரிகள், அந்த ஆவணங்களை தர மறுப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

இந்த மனு, நீதிபதி அஜய் குமார் ஜெயின் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றவாளிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏ.பி.சிங் வாதாடியதாவது:திகார் சிறை அதிகாரிகள், வினய்க்கு, மெல்ல மெல்ல கொலை செய்யும் வகையிலான, 'ஸ்லோ பாய்சன்' என்ற விஷத்தை கொடுத்தனர். இதனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பான மருத்துவ அறிக்கையை கேட்டபோது, அதிகாரிகள் தர மறுத்து விட்டனர். இதேபோல், வினயின் டைரியையும் தரவில்லை. தங்களிடம், இது தொடர்பான எந்த ஆவணங்களும் இல்லை என்கின்றனர்.

சிறையில், வினய், ஏராளமான ஓவியங்களை வரைந்துள்ளார். இது குறித்து ஜனாதிபதிக்கு தகவல் தெரிவித்து, கருணை மனு தாக்கல் செய்ய விரும்புகிறோம். ஆனால், தகவல்களை தர அதிகாரிகள் மறுக்கின்றனர்.பவன் குப்தாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இது தொடர்பான மருத்துவ அறிக்கையையும் அதிகாரிகள் தரவில்லை; அக் ஷய் குமாரின் மருத்துவ அறிக்கையும் தரப்படவில்லை.

இந்த விபரங்கள் எல்லாம் இருந்தால் தான், இவர்களால் கருணை மனு மற்றும் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய முடியும். எனவே, இந்த ஆவணங்களை வழங்கும்படி, சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அவர் வாதாடினார். இதையடுத்து, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடியதாவது:குற்றவாளிகள் தரப்பில், அவர்களது வழக்கறிஞர்கள் கேட்ட அனைத்து ஆவணங்களும் அளிக்கப்பட்டு விட்டன. தண்டனையை தள்ளிப் போடும் நோக்கத்தில், இது போன்ற மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

குற்றவாளிகளின் நோட்டுகள், ஓவியங்கள் ஆகியவை எங்களிடம் உள்ளன. குற்றவாளிகளிடம் அதை ஒப்படைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டால், ஒப்படைக்க தயார். ஆனாலும், எதிர்தரப்பு வழக்கறிஞர் கூறுவது போல், டைரி எதுவும் எங்களிடம் இல்லை. இவ்வாறு, அவர் வாதாடினார்.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:குற்றவாளிகளின் நோட்டு, புத்தகங்கள், ஓவியங்கள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் ஆவணங்களை, அவர்களது வழக்கறிஞர்கள் புகைப்படம் எடுத்து கொள்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவுப்படி, குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்கள் கேட்ட ஆவணங்களை, சிறை அதிகாரிகள் கொடுத்துள்ளனர். எனவே, இந்த வழக்கில், இதற்கு மேல், வேறு எந்த ஆவணங்களையும் கொடுக்கும்படி எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லாததால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

முகேஷ் குமார் மீண்டும் மனு

மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கின் குற்றவாளியான முகேஷ் குமார், ஏற்கனவே தாக்கல் செய்த கருணை மனுவை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இந்நிலையில், கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, முகேஷ் குமார் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. 'கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தது குறித்து, நீதிமன்றம் ஆய்வு செய்ய வேண்டும்' என, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

வரும், 1ம் தேதி, நான்கு குற்றவாளிகளுக்கும் துாக்கு தண்டனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நேரத்தில், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால், தண்டனை நிறைவேற்றம் மேலும் தள்ளிப் போகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.




Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...