Sunday, January 26, 2020

ESPOUSING GRIEVANCES

Even retired employees can form a union: HC


TIMES NEWS NETWORK

Chennai:26.01.2020

The Madras high court has made it clear that law does not state that only serving employees of an organisation can form unions under the Trade Union Act as even retired employees can form a separate union to espouse their grievances relating to terminal benefits and register it.

Justice S Vaidyanathan made the observation while allowing a plea moved by Karur Vysya Bank Retirees’ Association challenging the order of the labour department denying registration to their association on the ground that the members of the association are not in service.

“India is a democratic country, where there is no restriction for citizens to express their grievances to government by means of ahimsa and as such, preventing one sect of persons, namely, retired employees to form a trade union to espouse their cause to the government cannot be permitted at any cost, by giving a different interpretation to the provisions of law,” the judge said.

To put it precisely, even if seven employees were not on the rolls, they are entitled to form an association that has to be registered under the Trade Union Act and the same cannot be refused to be registered on this score, the judge said.

Though the existing union with permanent employees can espouse the cause of retired employees or others, who were not in employment, on the ground of community of interest, consequent to the absence of such interest in the present days, there is nothing wrong in permitting the retired employees to have their own association under the act, as unions, having permanent employees on the rolls, are withering away and shirking from their moral responsibilities to espouse the cause of employees who cease to be on the rolls, said Justice Vaidyanathan.

Saturday, January 25, 2020

வேண்டாம்’ என பெயர் வைக்கப்பட்ட மாணவி; பாலின சமத்துவத்தின் தூதுவரானது எப்படி?





"ஏம்ப்பா எனக்கு இந்த பேர வச்ச?" இந்த கேள்வியை இன்றும் தன் அப்பாவிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவரின் பெயரைக் கேட்கும் பலரும் ஒரு நிமிடம் அதிசயித்து, புருவங்களை உயர்த்துகிறார்கள். தாங்கள் ஏதோ தவறாகக் கேட்டு விட்டது போன்று மீண்டும் அவரிடம் "உங்க பெயர் என்ன?" என்று கேட்டு, நாம் சரியாகத்தான் கேட்டோமா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தன் பெயர் எந்த காரணத்துக்காக அவருக்கு வைக்கப்பட்டதோ, அந்த காரணங்களையெல்லாம், தன் கடின உழைப்பாலும், அறிவாலும் தூக்கியெறிந்து முன்னுதாரணமாகியிருக்கிறார். இனி யாருக்கும் அப்படி பெயர் வைக்கக்கூடாது என்பதற்கு வழிகாட்டியிருக்கிறார். அப்படி என்ன பெயர் அவருக்கு?

சென்னை குன்றத்தூரில் உள்ள சென்னை தொழில்நுட்ப நிறுவனம் எனும் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு இசிஇ எனப்படும் மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் படிக்கும் 20 வயதான மாணவியின் பெயர் 'வேண்டாம்'. இந்த பெயருக்குப் பின்னால் பாலின சமத்துவமின்மை, பெண் குழந்தைகள் மீதான வெறுப்பும் படர்ந்திருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள சுற்றுப்புற கிரமங்களில், அடுத்தடுத்து பெண் குழந்தைகள் பிறக்கும் குடும்பங்களில் ஒரு பெண்ணுக்கு 'வேண்டாம்' எனப்பெயர் சூட்டினால், அடுத்தது ஆண் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை காலம்காலமாக இருக்கிறது. அப்படித்தான் இவருக்கும் 'வேண்டாம்' என பெயர் வந்தது.

இன்று (ஜன.24) தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அவரிடம் பேசினோம். கல்லூரியின் மதிய இடைவேளையில் பேசினார்.மாணவி 'வேண்டாம்'

"எங்கள் கிராமத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது. ஒரு குடும்பத்தில் அடுத்தடுத்து பெண் குழந்தைகள் பிறந்தால், கடைசி பெண்ணுக்கு 'வேண்டாம்' என பெயர் வைத்தால் அடுத்து ஆண் குழந்தை பிறக்கும் என்பது பெரியவர்களின் நம்பிக்கை. எனக்கு இரண்டு அக்காக்கள் உள்ளனர். அதனால், எனக்கு 'வேண்டாம்' எனப்பெயர் வைக்குமாறு என் தாத்தா, பாட்டி கூறியுள்ளனர். அதனால், என் அப்பாவும் அந்த பெயரை எனக்கு வைத்து விட்டார். எனக்கு பெயர் மட்டும் தான் இப்படி வைத்துள்ளனர். ஆனால், இதுவரை எந்த பாகுபாடும் இதுவரை காட்டியதில்லை" எனக்கூறும் 'வேண்டாம்', பல சமயங்களில் அப்பெயரால் சங்கடத்துக்கும் தயக்கத்துக்கும் ஆளாகியுள்ளார்.

தமிழகத்தின் கிராமப்புறங்களில் தங்களுக்கு பெண் குழந்தைகள் வேண்டாம் என்பதையும், அடுத்ததாக ஆண் குழந்தைகள் பிறக்க வேண்டும் என்ற விருப்பத்தின் பேரிலும் பெண் குழந்தைகளுக்கு இவ்வாறான, பாகுபாடான பெயர்களை சூட்டும் வழக்கம் உண்டு. குறிப்பாக, தென் தமிழகத்தில் 'போதும்பொன்', 'இனிப்போதும்', 'வேண்டாமணி' என்ற பெயர்களை சூட்டுவதுண்டு.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் உள்ள நாராயாணபுரம் தான் 'வேண்டாம்' சொந்த ஊர். அப்பா அசோகனும் அம்மா கவுரியும் மிக ஏழ்மையான நிலையில் உள்ள விவசாயக் கூலித் தொழிலாளர்கள். முன்பு நெசவுத்தொழில் செய்து வந்த அசோகன், நெசவுத் தொழிலின் வீழ்ச்சியாலும், வருமானம் இல்லாததாலும் விவசாயக் கூலியாக மாறியுள்ளார். விவசாய வேலைகள் ஆண்டு முழுவதும் இருக்காது. வேலைகள் இருக்கும் சமயத்தில் நாளொன்றுக்கு ரூ.100 முதல் ரூ.200 வரை கிடைக்கும். 100 நாள் வேலைத்திட்டத்தின் மூலம் சில நாட்களுக்கு வேலைகள் இருக்கும். சொந்த நிலம் இல்லை. இப்படி ஏழ்மையான நிலையிலுள்ள அசோகன் - கவுரிக்கு ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள், அவர்கள் சண்மதியும் யுவராணியும். மூன்றாவதாக பிறந்தவருக்குத் தான், அடுத்ததாக ஆண் குழந்தை பிறக்க எண்ணி 'வேண்டாம்' எனப் பெயரிட்டுள்ளனர். ஆனால், அவர்களுக்கு அடுத்ததாக பிறந்ததும் பெண் குழந்தைதான். அவரின் பெயர் சரண்யா.

"இப்படி 'வேண்டாம்' எனப்பெயர் வைக்கும் வழக்கம், எங்கள் கிராமத்தில் அவ்வளவாக இல்லை. ஆனால், பக்கத்துக் கிராமமான அம்மையார்குப்பம் எனும் கிராமத்தில் தெருவுக்கு இப்படி பெயர் கொண்டவர்கள் இருப்பார்கள். எங்கள் ஊரில் என்னுடைய அத்தைக்கு இந்த பெயர் இருந்தது. அதனால், எனக்கு இந்த பெயர் வித்தியாசமாக தெரிந்ததில்லை" என்கிறார், 'வேண்டாம்'.

தன்னுடைய இந்த பெயர் பள்ளிப்படிப்பு முடியும் வரை அவருக்குப் பெரிய சிரமத்தைக் கொடுத்ததில்லை. ஆனால், கல்லூரி படிப்புத்தான் அவருக்கு அதிக தயக்கங்களை இந்த பெயர் ஏற்படுத்தியுள்ளது.

தன் குடும்ப வறுமையையும் தாண்டி தன் மகள்களை நன்றாக படிக்க வைத்துள்ளனர் அசோகனும் கவுரியும். முதல் இரு மகள்களும் முதுகலை பட்டப் படிப்புகளை முடித்துள்ளனர். படிப்பில் எப்போதுமே முதல்நிலையில் இருக்கும் 'வேண்டாம்' 10-ம் வகுப்பில் 485 மதிப்பெண்களும் 12-ம் வகுப்பில் 1,095 மதிப்பெண்களையும் வீட்டுச்சூழல், பொருளாதார நெருகக்டிகளைத் தாண்டி பெற்றுள்ளார். பணம் இல்லாமையால், இரு அக்காக்களைப் போல பட்டப்படிப்பு படிக்க முடிவெடுத்தாலும் அவருக்கு பொறியியல் படிக்க வேண்டும் என்பதே விருப்பமாக இருந்திருக்கிறது. தற்போது அவர் படிக்கும் கல்லூரியில் உதவித்தொகை மூலம் படிக்கலாம் என்பதையறிந்து முழுக்க முழுக்க இப்போது வரை உதவித்தொகையால் இந்தாண்டு பொறியியல் படிப்பை முடிக்கவிருக்கிறார் 'வேண்டாம்'. தேர்வுக்கட்டணம், தனிப்பட்ட செலவுகளுக்கு அவருடைய அப்பா அசோகன் தன் குறைந்த வருமானத்திலிருந்து ஒதுக்க வேண்டியிருக்கிறது.

"அம்மையார்குப்பம் கிராமத்தில் தான் அரசுப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தேன். பள்ளியிலும் சிலருக்கு இந்த பெயர் இருந்தது. அதனால் எனக்கு வித்தியாசமாக தெரியவில்லை. பிளஸ் 2 முடித்து சென்னைக்கு பொறியியல் கவுன்சிலிங்குக்காக வந்தேன். அப்போது, கவுன்சிலிங்கில் "என்ன பெயர்?" என்று கேட்டனர். பெயரைச் சொன்னவுடன் "இந்த மாதிரி பெயர் இருக்கிறதா?" என்று கேட்டு ஆச்சர்யப்பட்டனர். அப்போதுதான் தயக்கமாக இருந்தது. அதன்பிறகு அவர்களிடம் என் பெயர்க்காரணத்தைச் சொல்லி புரியவைப்பேன். வகுப்புத் தோழர்களும் தோழிகளும் என் பெயரை வைத்து கேலி செய்த சம்பவங்கள் இல்லை. ஆரம்பத்தில் என்னை அறிமுகப்படுத்திக்கொண்ட போது என் பெயரைக் கேட்டு அதிர்ச்சியாகி விட்டனர். ஆனால், என் பெயர் வித்தியாசமானது தான் என எனக்கே தெரியும் என்பதால் அவற்றை பெரிதாகக் கருதியதில்லை. கல்லூரியில் பலரும் 'வேண்டாம்' என்றே கூப்பிடுவர். சில பேர் 'வேணும்' என கிண்டலாக அழைப்பார்கள்" என்று தன் வருத்தங்களையும் கடந்து வந்திருக்கிறார்.

தன் மகளுக்கு இந்த பெயரை வைத்ததில் அசோகனுக்கும் கவுரிக்கும் இன்னும் வருத்தம் நிழலாடிக்கொண்டுதான் இருக்கிறது.

"நான் 3-ம் வகுப்பு படிக்கும் போதே எனக்கு இந்த பெயர் வைத்தது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பிடிக்கவில்லை. தாத்தா பாட்டி சொன்னதால் தான் வைத்தனர். பெயரை மாற்றலாம் என்ற மனநிலைக்கு வந்தனர். ஆனால், அப்படியே விட்டு விட்டோம். 10-வது படிக்கும் வரை இதே நிலைமை தான். அதன் பிறகு மாற்றலாம் என நினைத்தோம். ஆனால், அப்போது என் பெயர் சான்றிதழிலும் வந்துவிட்டது. அதனால் அப்படியே விட்டு விட்டோம். அப்பாவும் அம்மாவும் எப்போதும் இதற்காக வருத்தப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். 'எதற்காக இந்த பெயர் வைத்தீர்கள்?', 'எனக்கு இந்த பெயர் வேண்டாம்' என சொல்லிக்கொண்டே இருப்பேன். இப்போது கூட கேட்டிருக்கிறேன். கல்லூரி முடிந்ததும் பெயரை மாற்றி விடுவேன். வீட்டில் கல்பனா என்றுதான் அழைப்பார்", எனக்கூறும் அவர், 'கல்பனா' என பெயரை மாற்ற விருப்பம் கொண்டுள்ளார்.

பெண் குழந்தைகளே வேண்டாம் என நினைத்து பெயரிடப்பட்ட 'வேண்டாம்' பெரும் சாதனைகளை புரிந்திருக்கிறார். பாலின சமத்துவம், பெண்கள் முன்னேற்றம் குறித்து மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.

கடந்த 2019-ம் ஆண்டு, ஜூன் மாதம் ஜப்பானை சேர்ந்த பெரு நிறுவனம் ஒன்று அவரது கல்லூரிக்கு கேம்பஸ் இண்டர்வியூவுக்கு வந்துள்ளது. அதில், . ஆன்லைன் தேர்வு, நேர்காணல் முடிந்து கடந்த ஜூலை மாதம் முடிவுகள் வெளியானது. இதில், மென்பொறியாளர் பணிக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருடைய ஆண்டு வருமானம் 22 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. படிப்பு முடிந்ததும் ஜப்பானுக்கு பறக்கவிருக்கிறார்.

"நேர்காணலின் போது ஜப்பானை சேர்ந்தவரகளுக்கு என் பெயரின் அர்த்தம் புரியவில்லை. என் அம்மா, அப்பாவின் உழைப்பால் தான் என்னால் படிக்க முடிந்தது. 'சம்பளம் கூட எங்களுக்கு அனுப்ப வேண்டாம், இது போதும்' என நான் இந்த நிலையை அடைந்ததே போதும் என்று என் அப்பா மகிழ்ச்சியடைந்தார்" என்கிறார்.

இவருக்குப் பிறகு அவருடைய கிராமத்தில் எந்த பெண் குழந்தைக்கும் 'வேண்டாம்' என பெயர் வைக்கவில்லை. இனியும் வைக்க மாட்டார்கள் என்பதே அவருடைய வெற்றி நமக்கு சொல்கிறது.

'வேண்டாம்' குறித்து அறிந்துகொண்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கான 'பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ' திட்டத்துக்கு திருவள்ளூர் மாவட்டத்திற்கான தூதுவராக அவரை நியமித்திருக்கிறார். இப்போது, அவர் பெண் சிசுக்கொலை, குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

பெண் குழந்தைகளை வேண்டாம் என சொல்பவர்களுக்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் எனக்கேட்டேன்.

"பெண்கள், ஆண்கள் என்ற பாகுபாடு பார்க்காதீர்கள். இருவரும் ஒன்றுதான். இரு பாலினத்தவராலும் எல்லாவற்றையும் சாதிக்க முடியும். ஆண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, பெண்கள் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டாம். இருவரையும் சமமாக நடத்துங்கள். ஆண்களுக்கு நிகராகவும் எல்லாவற்றையும் பெண்களால் சாதிக்க முடியும். அவர்களை விட உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும்" என்றார்.

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் அவர்கள் மீதான சுரண்டல்களும் அதிகரித்து வரும் இக்காலக்கட்டத்தில், எல்லாவித தடைகளையும் தாண்டி சாதித்து வரும் இவர் நமக்கு 'வேண்டாம்' அல்ல. இன்னும் 'வேண்டும்'.

தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in
நிர்பயா வழக்கு: குற்றவாளிகள் இருவர் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தது டெல்லி நீதிமன்றம்: தண்டனையைத் தாமதிக்கத் திட்டம்; அரசுத் தரப்பு வாதம்

புதுடெல்லி

கடந்த 2012-ம் ஆண்டில் டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரில் இருவர் தாக்கல் செய்த மனுவை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டுத் தூக்கி வீசப்பட்டார். அதன்பின் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்து 2013-ம் ஆண்டு செப்டம்பரில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரித் தாக்கல் செய்த மறு ஆய்வு மனு, சீராய்வு மனு ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

குற்றவாளிகளில் ஒருவரான பவன்குமார் குப்தா குற்றச் சம்பவம் நடந்தபோது தான் பதின்வயது உடையவராக இருந்தேன் என்று கூறி தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் தாக்கல் செய்த கருணை மனுவையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இதைத் தொடர்ந்து குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்குள் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என டெல்லி விசாரணை நீதிமன்றம் டெத் வாரண்ட் பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாகக் குற்றவாளிகள் வினய் குமார் சர்மா, அக்சய் குமார் சிங், பவன் குப்தா தரப்பில் வழக்கறிஞர் ஏ.பி.சிங், டெல்லி நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில் ‘வினய் குமார் கருணை மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது.

அதேபோல, அக்சய் குமார் சிங், பவன் குப்தா ஆகியோர் தனது தண்டனையை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய இன்னமும் வாய்ப்பு உள்ளது. ஆனால், சிறை அதிகாரிகள் சில ஆவணங்களைத் தர மறுப்பதால் மனுக்களைத் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. முக்கியமாக, 70 பக்கங்கள் கொண்ட வினய் குமாரின் டைரியை சிறை அதிகாரிகள் தர மறுக்கின்றனர். அதனை உடனடியாக தர சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு டெல்லி பாட்டியாலா நீதிமன்ற கூடுதல் அமர்வு நீதிபதி அஜய் குமார் ஜெயின் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது டெல்லி போலீஸார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், "குற்றவாளிகளின் வழக்கறிஞர் கேட்டதுபோல அனைத்து ஆவணங்களும் திஹார் சிறை நிர்வாகத்தினர் தரப்பில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் தண்டனை தாமதப்படுத்தும் தந்திரத்தில் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவின் ஒட்டுமொத்தநோக்கமே சட்டத்தை ஏமாற்ற வேண்டும், தோற்கடிக்க வேண்டும் என்பதுதான். அவர்களுக்குத் தேவையான அனைத்து ஆவணங்களும் வழங்கப்பட்டபின் மீண்டும் மனு செய்துள்ளார்கள். சிறை அதிகாரிகள் வழங்கிய டைரியைக் கூட உங்களிடம் தாக்கல் செய்திருக்கிறோம். குற்றவாளிகள் ஒருவரான வினய்குமார் வரைந்த ஓவியங்களையும் புகைப்படம் எடுக்க அனுமதித்துள்ளோம். நீதிமன்றம் அனுமதித்தால் அனைத்தையும் வழங்கத் தயாராக இருக்கிறோம்" எனத் தெரிவித்தார்

குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏ.பி. சிங் வாதிடுகையில், ''குற்றவாளி வினய் குமார் சிங்கிற்கு ஸ்லோ பாய்ஸன் வழங்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் மருத்துவ அறிக்கைகளைக் கேட்டால் சிறை அதிகாரிகள் வழங்க மறுக்கின்றனர். சில முக்கிய ஆவணங்கள் மட்டுமே வெள்ளிக்கிழமை இரவு வழங்கப்பட்டன. அவரின் டைரி, மருத்துவ அறிக்கை வழங்கப்படவில்லை.

சிறை அதிகாரிகள் அதுபோன்ற எந்த ஆவணங்களும் இல்லை என்று தெரிவிக்கிறார்கள். வினய் குமார் நன்றாக ஓவியம் வரையக்கூடியவர். அவர் ஓவியம் மூலம் கிடைத்த பணம் குறித்து குடியரசுத் தலைவரிடம் தெரிவித்து கருணை மனுத் தாக்கல் செய்ய இருக்கிறோம். மற்றொரு குற்றவாளி பவன் சிங் தலையில் பலத்த அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் மருத்துவமனை அறிக்கையும் வழங்கப்படவில்லை. அக்சய் சிங் குமார் மருத்துவ அறிக்கையும் வழங்கப்படவில்லை" என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அஜய் குமார் ஜெயின், "சிறை அதிகாரிகள் ஆவணங்கள், ஓவியங்களை வழங்குவார்கள். அதில் தேவைப்படுவனவற்றை வழக்கறிஞர் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு எந்தவிதமான தடையும் இல்லை. இந்த வழக்கில் இதற்கு மேல் எந்தவிதமான உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லாததால் மனுவைத் தள்ளுபடி செய்கிறேன்" எனத் தெரிவித்தார்.
International Education Fair on Jan. 29, 30

25/01/2020, STAFF REPORTER,COIMBATORE




The Hindu will organise a two-day International Education Fair on January 29 and 30 in Coimbatore.

Representatives from premier foreign universities, visa counsellors and education loan providers will attend the fair, providing a unique opportunity for the aspiring students to interact with officials from across the globe. Seminars on higher education opportunities in countries such as the United Kingdom, Australia and France will also be organised at the fair. The event will be held on January 29 at Taj Vivanta, Race Course Road, from 10:30 a.m. to 5 p.m. On January 30, the fair will be held at Kumaraguru College of Technology from 10:30 a.m. to 4 p.m.

For free registrations to attend the fair, please visit www.thehindu.com/ief2020 or call 99528 51100. New India Assurance is the overseas insurance sponsor and Kumaraguru College of Technology will be the strategic partner for the event.
People bid farewell to Nepal hotel gas victims

25/01/2020,THIRUVANANTHAPURAM

Many joined grieving relatives at Chenkottukonam, near here, on Friday to bid farewell to Praveen Krishnan Nair, his wife Saranya, and their three children who died in a suspected gas leak in Daman, Nepal. The children were laid to rest in a single grave and Praveen and Saranya were cremated on either side of it.
Former Chief Secretary T.V. Antony dead

He was known for his strong advocacy of family planning

25/01/2020, T. RAMAKRISHNAN,CHENNAI

T.V. Antony, former Chief Secretary of the Tamil Nadu government and a civil servant known for his strong advocacy of family planning, died at a hospital on Friday. He was 86, and is survived by his wife and two sons.

On the morning of Monday (January 27), a mass will be held at St. Louis Church in Adyar, followed by a burial at the Quibble Island cemetery, according to family sources.

His father T. A. Varghese, an officer of the Indian Civil Service (ICS), retired as Chief Secretary of the State government in November 1965.

Joining the Indian Administrative Service in May 1956, Mr. Antony, who held degrees in chemistry and law, served the State government in various capacities, like the Collector of Madurai, Tirunelveli and Thanjavur districts, before becoming the Special Officer of the Chennai Corporation in 1973. He was Secretary to the Rural Development and Local Administration Department for a year, and then went to the Centre, where he worked for four years as Joint Secretary in the Health Ministry. Returning to the State in 1982, Mr. Antony worked as Secretary, Planning and Development Department, for a year, after which he was made the Second Secretary in 1983. He had two stints as Chief Secretary – April 1985-July 1986 and January 1991-June 1991. When he retired in October 1991, he was holding the post of Chairman of the State Planning Commission.

For his work on population regulation and stabilisation and women’s empowerment, Mr. Antony was conferred the Padma Bhushan in 2004 and the Rajasthan State government’s award four years later.

P. N. Vedanarayanan, president of the Retired IAS Officers’ Association, who was senior to Mr. Antony by a year, says family control and planning, according to Mr. Antony, was one of the pre-requisites for overall development. Santha Sheela Nair, former civil servant, points out that Mr. Antony was equally attached to issues concerning cleanliness and sanitation. “He was the first to say how toilets, built for adults, were not comfortable for children,” she recalls, adding, “Hierarchy did not come in his way in connecting himself with problems of the common man.”

Individual accesses documents in Controller of Exam’s room

MKU VC confronts Controller as a stranger handles consolidated marksheets

25/01/2020, SANJANA GANESH,MADURAI

Access to official documents at the Controller of Examination’s room by an unauthorised individual at the Madurai Kamaraj University (MKU) has created controversy.

Vice-Chancellor M. Krishnan confronted the Controller of Examination O. Ravi on Thursday evening after the individual owning a distance education centre in Periyakulam in Theni district was found handling a series of consolidated marksheets, according to a source privy to the conversation.

Following a tip-off from a source at the university, the VC who was going on rounds at around 7 p.m. reached the controller’s room and found the individual sorting through the marksheets belonging to various students of the university and keeping aside a set of these marksheets of students belonging to his centre.

The controller was also said to have been present inside the room at the time, according to the source.

“We have received similar updates of owners of centres walking into the controller’s room to receive their certificates without utilising the proper channels. It is widely known that these distance education centres are yet to pay their dues to the university. The matter is going to be investigated,” the source added.

The source said the VC had also received a written acknowledgement from the controller that an individual was seen handling consolidated marksheets.

“However, the controller in the letter had said that he was in the adjacent room on the phone while the individual was looking at the files and was not involved,” the source added.

Mr. Ravi refused to comment on the matter and said that the administration would handle the issue.

The source said the university administration was likely to constitute a committee to investigate such malpractices. It would raise the issue in the forthcoming Syndicate meeting, the source added. Mr. Krishnan said that he was likely to issue a statement on the matter on Saturday.

NEWS TODAY 29.01.2026