Monday, January 27, 2020

SETC bus staff, passengers vandalise Paranur toll plaza
Argument Over Paying Of Toll Fee Led To Melee


TIMES NEWS NETWORK

Chennai:27.01.2020

Enraged passengers along with the driver and conductor of an SETC bus vandalised a toll plaza at Paranur near Chengalpet on Sunday. The flashpoint was an argument between the bus conductor and a toll plaza worker around 1pm.

A few toll booth and gadgets were damaged, resulting in a halt in toll collection for the entire afternoon. Traffic resumed on the stretch after two hours after the intervention of police personnel.

Chengalpet superintendent of police D Kannan said, “We have detained two people each from both sides and will book a case.” The available CCTV camera footage shows that it was an impulsive reaction by the public and not a premeditated one. Police will analyse the camera footage further to help nab suspects involved in the rampage, said the officer. “It was a riot-like situation with passengers and motorists on one side and toll plaza staff on the other,” a witness said.

The SETC bus from Koyambedu was headed towards Trichy. Around 1pm, it reached the Paranur toll plaza, where the toll plaza staff demanded the bus crew to pay toll charges, though government buses are usually not required to pay toll. Pasumpon, the bus conductor, and the driver approached a toll booth staff, Muthu, and sought to know why were they being asked to pay toll.

As the SETC staff and Muthu entered into an argument, another toll booth staff attacked the driver and conductor, sources said. Soon, passengers of the bus got down and came in support of the bus crew, police said.

Angered over the attack on them, the SETC crew used their bus to block the traffic lanes. Passengers of the bus and other motorists joined them in damaging the window panels of the toll counters, CCTV cameras and several gadgets used to collect toll. Other bus drivers and conductors joined in support of their colleagues and vandalised the toll booths.



IN TATTERS: The damaged interiors of the toll booth at Paranur
UNDER LENS

Coronavirus: 1,500 from Hong Kong screened at airport


TIMES NEWS NETWORK

Chennai:27.01.2020

Around 1,500 passengers from Hong Kong were screened at Chennai airport in the past few days for symptoms of fever as coronavirus spreads in China.

An official said counters with thermal scanners were opened and screening began on January 21.

“We have one direct flight from Hong Kong daily which has a load of 300 to 350 passengers. These passengers are being screened. A quarantine area has been set up to move people if they are found with influenza-like symptoms,” said an official.

Though airports in Hong Kong, Singapore, Tokyo, Kuala Lumpur and Bangkok are screening passengers, airlines are taking steps to ensure that passengers and crew are safe. Flights from the infected destinations are being fumigated and crew has been told to watch for those who show signs of fever. Chennai has direct flight links to Hong Kong and Japan where cases of the virus have been detected. There are around seven flights on weekdays and nine flights on weekends between Chennai and Singapore. But all passengers from Singapore flights are not screened.

There is a general instruction to look out for passengers who have visited infected areas in China.

IndiGo airlines, which operates flights to Chengdu and Guangzhou, said, “Our crew are taking appropriate precautions. There have been no cases reported yet in our Chinese points, which are around 1,000 km from Wuhan, nor indeed in India. We are in close touch with government authorities and will advise about any alterations to our schedule as and when they occur. Meantime, we have thousands of forward bookings and are serving those customers as normal.”

Airports Authority of India (AAI) has already instructed airlines to make inflight announcements to spread awareness. Notice boards have been set up to instruct passengers who do not have symptoms on arrival to report to district health authorities if they develop cold or fever within 28days of arrival.
In a first, CBSE allows dyscalculia students to use calculators in exams
Sharangee.Dutta@timesgroup.com

27.01.2020

To help students suffering from dyscalculia and other calculationrelated disorders, the Central Board of Secondary Education (CBSE) has decided to allow children with special needs (CWSN) use a basic calculator starting from this year. Students who have already registered for the upcoming class X and XII board exams under the CWSN category will be able to avail this facility.

“Teachers, NGOs, principals, and students were seeking a solution for CWSN students. They informed CBSE about the struggle of dyscalculia students while solving arithmetic problems during exams. To help them we decided to allow them to use a basic calculator,” says Sanyam Bhardwaj, controller of examinations, CBSE, while talking to Education Times.

This new move, adds Bhardwaj, will be in addition to the already existing exemptions and/or concessions offered by CBSE to CWSN students. Some of these concessions include class X Mathematics and Science question paper in braille for blind students, usage of large fonts in Math and Science paper for visually impaired candidates, and allowing the use of a computer or laptop for all disabled students.

“CBSE has taken measures to help students with special needs. It is time to support students with learning disabilities and dyscalculia,” he says.

Students who want to avail this facility must send their request to the school along with a certificate of disability as proof by January 28, 2020.

“CBSE will arrange the basic calculators depending on the number of CWSN students each exam centre has to accommodate. However, no candidate is permitted to bring a calculator from home,” says Bhardwaj.

He adds that once a regional CBSE centre receives the final list of special needs students from each school under its umbrella, the same will be sent to the board to make arrangements for the calculators.

Sunday, January 26, 2020


அமுதைப் பொழியும் நிலவு!


‘தங்கமலை ரகசியம்’ படத்தில் ஜமுனா, சிவாஜி

கு.மா.பா.திருநாவுக்கரசு

காற்றில் மிதந்துவரும் நூற்றுக் கணக்கான பாடல்களைக் கேட்டு, காலங்கடந்தும் நினைவுகூர்ந்து லயித்துப் போகிற ஏராளமான ரசிகர்களை ஈட்டிய திரைக் கவிஞர்! ‘அமுதைப் பொழியும் நிலவு’ என்ற ஒரு பாடல்போதும், தலைமுறைகளைக் கடந்தும் வசப்படுத்தும் சொற்களைக் கட்டி ஆண்ட கவிஞர் என்பதற்கு. ஒரு வெற்றிகரமான பாடலாசிரியராக, இசைக்கேற்ற திரைப்பாடல்களை வடித்த ‘சொற்களின் பாரி’ இவர்.

சொற்களின் அமுதைப் பாடல்களில் பொழிந்து தள்ளிய இந்தக் கவி நிலவு, தான் பயணித்த பால் வீதியில் பதித்துச்சென்ற நட்சத்திரப் பாடல்களின் பட்டியல் மிக நீளமானது. அவரது பாடல்களை எந்த வேளையில் கேட்டாலும் உள்ளம் கொள்ளை போகும். இரவில் கேட்டாலோ இன்ப நித்திரை கண்களைத் தழுவும். வாழும் வரை ‘வெள்ளை மனதுக்காரர்’ என்று உறவுகளையும் நண்பர்களையும் திரையுலகினரையும் சொல்லவைத்த அபூர்வக் கவிஞர்.

அவர் கு.மா.பா. என்னும் மூன்று எழுத்துக்களால் அறியப்படும் கு.மா.பாலசுப்பிரமணியம். 1920 மே 13 அன்று பிறந்த கவிஞரின் நூற்றாண்டு இது. 1979-ல் கவிஞருக்கு மணிவிழா நடத்தப்பட்டபோது அதற்குத் தலைமையேற்றார் கலைஞர் மு.கருணாநிதி. அவர் பேசியபோது கு.மா.பா எனும் மூன்று எழுத்துக்களுக்கு விளக்கமளித்தார். “ கு – என்றால் குன்றனைய கொள்கையுடையவர். மா- என்றால் மாசற்ற மனமுடையவர். பா- என்றால் பாவேந்தர் பாரதிதாசனின் பட்டியலில் இடம்பெற்றவர்” என்றார். அவரது மகன் என்பதைவிட, அவரது தலை சிறந்த ரசிகர்களில் ஒருவனாக, அவரது வாழ்க்கைக் கதையை என்னிடம் அவர் விவரித்துக் கூறியதிலிருந்து சுருக்கமாகப் பகிர்கிறேன்.

வறுமை வழங்கிய வரம்

அத்தகைய பெருமைக்குரிய கு.மா.பா. கீழத்தஞ்சை மாவட்டம் திருவாரூரிலிருந்து மன்னார்குடி செல்லும் வழியில் வேளுக்குடி என்னும் சிறிய கிராமத்தில், ஓர் எளிய விவசாயக் குடும்பத்தில், மாரிமுத்து –கோவிந்தம்மாள் தம்பதிக்குப் பிறந்த ஒரே மகன். இரண்டு வயதாக இருந்தபோதே தந்தை இறந்துவிட, தாயாரின் அரவணைப்பில் வளர்ந்தார். சில கறவை மாடுகளை வைத்து வளர்த்து, பால் வியாபாரம் செய்து வந்த இவரின் தாயார் எழுதப் படிக்கக் கற்றவர்.

தேவாரம், திருவாசகம் போன்ற பாடல்களைப் பாடி, மகனுக்குத் தாய்ப்பாலுடன் தமிழ்ப்பாலும் ஊட்டி வளர்த்து ஆளாக்கினார் கவிஞரின் தாய். ஆனால், வறுமை காரணமாக, மகனை திருவாரூர் நகருக்கு அனுப்பி ஆறாம் வகுப்புக்கு மேல் படிக்கவைக்க அந்தத் தாயால் முடியவில்லை. இதனால் இளம் வயதிலேயே மகனை விவசாய கூலிவேலைக்கு அனுப்ப வேண்டிய நிலை.

அதை மனமுவந்து ஏற்றுக்கொண்ட மகன், அந்த வேலையில் மகன் சிரமப்படுவதைக் கண்டு, பிறகு எளிதான மளிகைக்கடை வேலையில் சேர்த்துவிட்டார். வறுமையே அங்கே வரமாக மாறியது அவருக்கு. மளிகைக் கடையில் பொட்டலம் மடிக்க வாங்கும் பழைய இதழ்களை, செய்தித்தாள்களை வேலைக்கு இடையே படிக்கும் ஆர்வம் பொங்கிப் பெருகியது. அந்த வாசிப்புப் பழக்கம் அவரைச் சிறுகதைகள் எழுதத் தூண்டியது. இவர் எழுதிய ‘இன்பத்துளி’ எனும் சிறுகதையை ‘நவயுகன்’ என்ற சிற்றிதழின் ஆசிரியர் தெரிந்தெடுத்து முதன்முதலாகப் பிரசுரித்துள்ளார். தாம் எழுதிய சிறுகதையை அச்சில் கண்டதும் இளைஞன் பாலுவுக்கு நிலைகொள்ளாத மகிழ்ச்சி.

பின் தனக்குக் கிடைக்கும் மாத ஊதியத்தில் இலக்கியச் சிற்றிதழ்களை வாங்கி, அவற்றிலிருந்து பிரபல சிறுகதை எழுத்தாளர்களான புதுமைப்பித்தன், தி.ஜ.ரங்கநாதன், கு.ப.இராஜகோபாலன் போன்றோரின் கதைகளை விரும்பி வாங்கிப் படித்து, தானும் அவர்களைப் போல் எழுத வேண்டும் என்று முயன்றிருக்கிறார். சில காலம் திருவாரூரில் ஒரு ஜவுளிக்கடையில் பணிபுரிந்தபடி இவர் எழுதிய சிறுகதைகள் திருமகள், சண்டமாருதம், பிரசண்ட விகடன் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.

பத்திரிகையாளர் எனும் அடையாளம்

பிரபலத் திரைப்படப் பாடலாசிரியர் கவி கா.மு.ஷெரீப், எழுத்தாளர் ‘மேதாவி’ (கோ.த.சண்முகசுந்தரம்) ஆகியோர் வேளுக்குடியைச் சேர்ந்த இவருடைய இளமைக்கால நண்பர்கள்தாம். காந்தியக் கொள்கைகளில் பற்றுடைய இவர் திருவாரூரில் நடந்த ஆகஸ்ட் போராட்டத்திலும் கலந்துகொண்டுள்ளார். தேசபக்திப் பாடல்களில் ஈடுபாடு கொண்டு கவிதைகள் எழுதவும் முயன்றிருக்கிறார். காங்கிரஸில் இருந்துகொண்டு தந்தை பெரியார் நடத்திய தன்மான இயக்கக் கொள்கைகளில் நாட்டத்துடன் வேளுக்குடியில் கா.மு.ஷெரீப்புடன் இணைந்து, சில இயக்கங்களை நடத்தி இருக்கிறார்.

இந்த அனுபவங்களைக் கொண்டு, தனது 22-ம் வயதில் மதுரையில் இருந்து வெளிவந்த ‘தமிழன்’ பத்திரிகை நிர்வாகியான சி.பா.ஆதித்தனாரைச் சந்தித்துப் பத்திரிகையின் துணை ஆசிரியராகப் பணிசெய்தார். சில ஆண்டுகளில் அங்கிருந்து இடம்மாறி கோவை ‘வீரகேசரி’, ‘திருமகள்’ போன்ற பத்திரிகைகளிலும் பணியாற்றியுள்ளார். கொழும்பிலிருந்து வெளிவந்த ‘வீரகேசரி’ நாளிதழில், 1945-ம் ஆண்டில் துணையாசிரியராக இடம்பெயர்ந்தார். இவர் பத்திரிகையாளராக தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, தந்தை பெரியார், கோவை ஜி.டி.நாயுடு, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் முதலான அன்றைய பிரபலங்களை நேரில் சந்தித்து விரிவான பேட்டிகள் எடுத்துள்ளார்.

1946-ல் திருவாரூரைச் சேர்ந்த

ஜெயலட்சுமி என்பவரை ‘கதர்த் திருமணம்’ என்று சொல்லும் எளிய காந்திய வழியில், கதராடைகளை அணிந்து, நாகப்பட்டினத்தில் திருமணம் செய்துகொண்டார். இந்திய விடுதலைக்குப் பிறகு, கொழும்பிலிருந்து மீண்டும் திருவாரூர் திரும்பிய இவர், ராயவரத்தில் சொந்தமாக ‘தமிழ்க் குரல்’ என்ற மாதம் இருமுறை இதழை சில மாதங்கள் நடத்தினார். பெருத்த நஷ்டம் ஏற்பட்டதால் அதை விற்றுவிட்டு, சென்னைக்கு வந்துவிட்டார்.

சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானத்தின் ‘தமிழ் முரசு’ இதழில் துணை ஆசிரியர் ஆனார். அப்போது தான் சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியின் தமிழாசிரியரான திருவேங்கடம் என்பவர் இவருடைய எழுத்தாற்றல், கற்பனைத் திறனைப் படித்துப் பார்த்து, இவருக்கு யாப்பிலக்கண முறைப்படி மரபுக் கவிதைகளை எழுதப் பயிற்றுவித்துள்ளார். 1949-ம் ஆண்டில், பாவேந்தர் பாரதிதாசன் தலைமையில், கோவையில் நடைபெற்ற கவியரங்கத்தில் தன் 28-ம் வயதில் பங்கேற்றுள்ளார்.

திரையில் முதற்பாடல்

பத்திரிகைத் துறையில் இவருக்கு ஏற்கெனவே பரிச்சயமான ப.நீலகண்டன் அந்நாளில் ஏவி.எம். ஸ்டுடியோ உரிமையாளர் ஏவி. மெய்யப்பனுடன் இணைந்து திரைப்படத் துறையில் சில படங்களில் கதை, வசனம் எழுதி வெற்றியடைந்திருந்தார். அந்த நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான ‘ஓர் இரவு’ படத்துக்கான ஆயத்த வேலைகளில் மும்முரமாக ஈடிபட்டிருந்தார். அந்தப் படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்ற, தனக்குத் தெரிந்த எழுத்தாளரான கவிஞர் கு.மா.பா.வை அழைத்துவந்து ஏவி.எம்.மிடம் அறிமுகப்படுத்தி, ஒப்பந்த அடிப்படையில் கதை இலாகாவில் மாத ஊதியத்தில் பணியமர்த்திவிட்டார்.

இந்தப் படத்துக்காகத் திரைக்கதை, வசனம் எழுதுவதற்கு அறிஞர் அண்ணாதுரை வந்தபோது, அவர் எழுதிக்கொடுத்த வசனங்களை, படி எடுக்கும் பணிதான் கவிஞருக்கு ஒப்படைக்கப்பட்ட முதல் வேலை. அப்படிப் படி எடுத்தபோது ஒரு காட்சிக்குப் பொருந்தும் பாடலைத் தன்னார்வத்துடன் இவர் எழுதியிருக்கிறார். இயக்குநர் ப.நீலகண்டன், கவிஞர். கே.பி.காமாட்சி சுந்தரம், இசையமைப்பாளர் ஆர்.சுதர்சனம் ஆகியோர் கு.மா.பா. எழுதி வைத்திருந்த பாடலைப் படித்து வியந்து, இயக்குநரிடம் காட்டியிருக்கிறார்கள். அதைப் படித்துப் பார்த்த ப.நீலகண்டனுக்கு பாடல் பிடித்துவிட்டதால், ஏவி.எம்.மின் ஒப்புதலுடன் கவிஞரின் முதல் திரைப்படப் பாடலை ஒலிப்பதிவுக்கு அனுப்பினார்.

‘பெண்ணாகப் பிறந்தாலே – வாழ்வில் எந்நாளும் துயர்தானே!.’ என்ற பல்லவிக்கு, ஆர்.சுதர்சனத்தின் சோக இசையும், டி.எஸ்.பகவதியின் இனிய குரலும் சேர, கவிஞரின் முதல் இசைத்தட்டு சுழன்றது. இசையும் வரிகளும் பதிவுக்குப்பின் ஒலித்தபோது ஏற்பட்ட உணர்ச்சிப் பெருக்கை உணர்ந்து, இதே படத்தில் மேலும் இரண்டு பாடல்களை எழுதும் வாய்ப்பும் கவிஞருக்குக்
கிட்டியது. அதன்பின் கு.மா.பாவைத் திரையுலகம் அடையாளம் கண்டுகொண்டது. தமிழ்த் திரைக்கு ஒரு மாபெரும் கவிஞர் கிடைத்தார்.

தொடர்புக்கு: kmbthiruna@gmail.com

மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் திருவிழாவில் 10 ஆயிரம் பேருக்கு சுடச்சுட பிரியாணி விருந்து- 4 மாநில ஓட்டல் உரிமையாளர்கள் பங்கேற்பு

மதுரை 26.01.2020

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடக்கம்பட்டியில் முனியாண்டி கோயில் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரை ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சுடச்சுட அசைவ பிரியாணி வழங்கப்பட்டது.

வடக்கம்பட்டியில் பிரசித்தி பெற்ற முனியாண்டி கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் பிரியாணி திருவிழா நடைபெறும். இங்குள்ள முனியாண்டி சுவாமியை குலதெய்வமாக வழிபடும் இக்கிராமத்தைச் சேர்ந்த நாயுடுமற்றும் ரெட்டியார் சமூகத்தினர்தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உட்பட பிற மாநிலங்களிலும் முனியாண்டி விலாஸ் எனும் பெயரில் நூற்றுக்கணக்கான அசைவ ஓட்டல்களை நடத்தி வருகின்றனர். ஓட்டல் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை வருடம் முழுவதும் சேமித்து வருகின்றனர். சேமித்த தொகையைக் கொண்டு பிரியாணி திருவிழாவை நடத்துகின்றனர். இந்தாண்டு 85-வது பிரியாணி திருவிழா கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் காலையில் வடக்கம்பட்டி, பொட்டல்பட்டி, அகத்தாபட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான நாயுடு சமூகத்தைச் சேர்ந்த பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாகச் சென்றனர். மாலையில் நிலைமாலையுடன் பூத்தட்டு ஊர்வலமும் நடைபெற்றது.

பின்னர், முனியாண்டி சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இரவு 12 மணியளவில் பூஜை செய்து முதலில் சக்தி கிடா பலியிடப்பட்டது. பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 150 கிடாக்கள், 300-க்கும் மேற்பட்ட கோழிகள் பலியிடப்பட்டன. அதன்மூலம் 1,600கிலோ அரிசியில் பிரம்மாண்டமான பாத்திரங்களில் அசைவபிரியாணியை ஏராளமான சமையல் கலைஞர்கள் தயாரித்தனர். பின்னர் முனியாண்டி சுவாமிக்கு படையலிட்டு நேற்றுஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சுடச்சுட அசைவ பிரியாணி வழங்கப்பட்டது.

இதுகுறித்து அக்கிராமத் தைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர்கள் கூறியதாவது: தமிழகத்தின் பல கிராமங்களில் முனியாண்டி கோயில்கள் உள்ளன. ஆனால், வடக்கம்பட்டி கோயில்தான் ஆதி முனியாண்டி கோயில். இங்குள்ள கோயிலில் மட்டுமே பிரசாதமாக அசைவ பிரியாணி வழங்கப்படுகிறது. இக்கோயில் முனியாண்டியை குலதெய்வமாக வழிபடுவோர் தெய்வ வாக்காக, ஓட்டல்தொழிலில் கலப்படமின்றி சுத்தமான அசைவ உணவுகளையே வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

முதல் மனைவி விவாகரத்து பெற்றுவிட்டால் இரண்டாவது மனைவி ஓய்வூதியம் பெறலாம்- உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

முதல் மனைவி விவாகரத்து பெற்றுவிட்டாலோ அல்லது இறந்துவிட்டாலோ இரண்டாவது மனைவிசட்டப்படி ஓய்வூதியம் பெறலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் பஞ்சாயத்து யூனியனில் அரசு டாக்டராகப் பணியாற்றியவர் சின்னச்சாமி. இவருக்கும் பஞ்சோலை என்பவருக்கும் திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், சின்னச்சாமி சரோஜினிதேவி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். அவருக்கு 2 ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

முதல் மனைவி உயிரிழப்பு

இந்நிலையில், கடந்த 1997-ல் பஞ்சோலை மரணமடைந்தார். டாக்டர் சின்னச்சாமி கடந்த 1999-ல்ஓய்வு பெற்றார். இதையடுத்து, தனது குடும்ப ஓய்வூதியத்துக்கான வாரிசாக 2-வது மனைவி சரோஜினிதேவியை நியமித்தார். 2009-ல் டாக்டர் சின்னச்சாமியும் இறந்தார். இந்நிலையில் தனக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கக் கோரி சரோஜினிதேவி அதிகாரிகளிடம் மனு அளித்தார்.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு

ஆனால் அவர் 2வது மனைவி என்பதால் ஓய்வூதியம் வழங்க முடியாது என அதிகாரிகள் நிராகரித்தனர். அதையடுத்து சரோஜினிதேவி கணவரின் ஓய்வூதியத்தைதனக்கு வழங்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்டேஷ் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘ஓய்வூதிய விதிகளில் 2-வது மனைவி சட்டப்பூர்வ வாரிசு இல்லை எனக் கூறப்பட்டுள்ளதால்தான் அவருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் சின்னச்சாமியின் 2-வது மனைவியாக அவர் இறக்கும்வரை வாழ்ந்துள்ளார். முதல் மனைவி இறந்த பிறகும் 12 ஆண்டுகள் வரை கணவருடன் வாழ்ந்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் உத்தரவு

முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டாலோ அல்லது முதல் மனைவி இறந்துவிட்டாலோ கணவருடன் நீண்டநாட்களாக வாழ்க்கை நடத்தும் 2-வது மனைவிஓய்வூதிய பலன்களை பெறலாம் என தனுலாஸ் என்பவரின் வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல் மனைவி இறந்த பிறகுதான் 2-வது மனைவி ஓய்வூதியம் கோருகிறார். எனவே கணவரி்ன் குடும்ப ஓய்வூதியம் பெற இவருக்கு உரிமை உள்ளது.

ஆகையால், 12 வாரங்களுக்குள் இவருக்கு சேர வேண்டிய குடும்ப ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
நிர்பயா வழக்கில் குற்றவாளியின் வழக்கறிஞர் கோர்ட்டில் குறிப்பிட்ட சத்ருஹன் சின்ஹா வழக்கின் விவரம் என்ன?

நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளில் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் 2014-ம் ஆண்டு வழங்கப்பட்ட சத்ருஹன் சின்ஹா வழக்கின் தீர்ப்பைக் குறிப்பிட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குத் தண்டனை பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்குள் நிறைவேற்றப்பட இருக்கிறது.

குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் தாக்கல் செய்த கருணை மனுவையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 17-ம் தேதி நிராகரித்தார். குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்தது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், சத்ருஹன் சின்ஹா வழக்கில் கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்தபின் அரசியலமைப்புச் சட்டம் 32-வது பிரிவின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைச் சுட்டிக்காட்டி இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 1997-ம் ஆண்டு குஜராத்தில் சத்ருஹன் சின்ஹா, மகேந்திர சவுஹான் குடும்பத்தினரைக் கொலை செய்த வழக்கில் சுரேஷ், ராம்ஜி ஆகிய இருவருக்குத் தூக்குத் தண்டனை விதித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2000ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

ஆனால் குற்றவாளிகள் இருவரும் தங்கள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த கருணை மனு மீது கடந்த 12 ஆண்டுகளாக எந்தவிதமான முடிவும் எடுக்காமல், அந்த மனுவைக் குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்தார்.

கடந்த 12 ஆண்டுகளாக தங்களுடைய கருணை மனுமீது எந்தவிதமான முடிவும் எடுக்காமலிருந்து அதை நிராகரித்த குடியரசுத்தலைவர் முடிவுக்கு எதிராக அரசியலமைப்பு பிரிவு 21 மற்றும் 32 ஆகியவற்றின் கீழ் உச்ச நீதிமன்றத்தில் சுரேஷ், ராம்ஜி இருவரும் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சதாசிவம், ரஞ்சன் கோகய், சிவா கீர்த்தி சிங் ஆகியோர் விசாரித்தனர். குடியரசுத் தலைவர் கருணை மனு மீது தன்னுடைய முடிவை அறிவிக்க 12 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது பொறுக்க முடியாதது. அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21-க்கு எதிரானது. அரசியலமைப்புச் சட்டத்துக்கே எதிரானது. கடந்த 12 ஆண்டுகளாகக் குடியரசுத் தலைவர் தாமதித்து இருக்கக்கூடாது என்ற கூறி இருவரின் தூக்குத் தண்டனையையும் ஆயுள் தண்டனையாகக் குறைத்துத் தீர்ப்பளித்தனர்.

இந்த வழக்கைச் சுட்டிக்காட்டித்தான் நிர்பயா குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்கள்.

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...