Saturday, February 29, 2020

NEET PG Round 1 Counselling 2020: MCC To Freeze Portal To Prepare Seat Matrix On 2nd March 

By Meghna A SinghaniaPublished On 28 Feb 2020 12:01 PM

Updated On 28 Feb 2020 12:01 PM 


NEET PG Round 1 Counselling 2020: MCC to freeze portal to prepare seat matrix on 2nd March

New Delhi: Informing about the upcoming NEET PG 2020 Round 1 counselling, the Medical Counselling Committee has informed that is going to freeze the intramcc portal to prepare for the seat matrix on 2nd March 2020. 


As per Supreme Court judgement, Ministry of Health & Family Welfare has been entrusted with the responsibility to hold on-line counselling for 50% All India Quota Post-Graduate Medical and Dental seats and also as per the notification issued by the MCI for common counselling. With this MCC will conduct counselling for the following Institutions/Universities:- 

a) 50 % All India Quota seats for all State Govt. medical/dental colleges/institutes, except state of Jammu and Kashmir as per merit of PG NEET 2018. 

b) For all PG seats of the Deemed Universities as per merit of PG NEET 2018. 

c) 50 % institutional quota seats for Central Universities of Delhi University, Aligarh Muslim University, and Banaras Hindu University. 

d) PG counseling for institutes of Armed Forces Medical Services. 

e) The state Govt. of Andhra Pradesh and Telangana are participating in online counselling of All India Quota from the academic year 2018-19 onwards. 

For deciding the seat matrix for the Round 1, MCC had asked for contribution of seats by the participating colleges of All India Quota/ Deemed & Central Universities/ ESIC for the PG Counselling 2020 for MD/ MS/ Diploma/ MDS courses. 

The earlier deadline for submission for the same was 19th Feb, 2020. In the meanwhile, the apex medical council, Medical Council of India Board Of Governors has issued new Letter of permission for various courses to medical college. Keeping this in mind, MCC has now extended its deadline to allow these medical colleges to participate in round 1 of the pg medical counselling. MCC in its notice, hence stated In view of the new LOP's being issued by the BOG, MCI, the intramcc portal has been kept open by MCC which was to close earlier by 19th Feb, 2020 for contribution of seats. It is for the information to all participating colleges that the intramcc portal will freeze at 06:00 PM of 2nd March, 2020 for preparation of Seat Matrix. Any new seats for which LOP's are received after 2nd March, 2020 will be taken up in Round-II of counselling only.

2 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர் பழனிசாமி நாளை அடிக்கல் நாட்டுகிறார்

சென்னை

ராமநாதபுரம், விருதுநகரில் அமைய உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர் பழனிசாமி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.

தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், ஊட்டி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 இடங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. மத்திய அரசின் 60 சதவீத நிதி மற்றும் மாநில அரசின் 40 சதவீத நிதியில் இந்த கல்லூரிகள் தலா ரூ.325 கோடியில் கட்டப்பட உள்ளன.

இந்நிலையில், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமையவுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர் பழனிசாமி நாளை (மார்ச் 1) அடிக்கல் நாட்டுகிறார். இதைத் தொடர்ந்து அம் மாவட்டங்களில் தொடங்கப்பட உள்ள புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதோடு, முடிவுற்ற பணிகளையும் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

ராமநாதபுரம் ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காலை 10 மணிக்கும், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில், மாலை 3 மணிக்கும் விழா நடக்கிறது. விழாவுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தலைமை தாங்குகிறார். துணை முதல்வர் ஓபன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார்.
விதையுள் விருட்சம்!

By வெ. இன்சுவை | Published on : 28th February 2020 03:06 AM

கல்லூரி வாழ்க்கை என்பது தகப்பனின் தோள் மீது அமர்ந்திருப்பதைப் போல சிலருக்கு சுகமாக அமைந்து விடுகிறது. எந்தக் கவலையும், பொறுப்பும் இல்லாமல் கேலி, கிண்டல், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று இருக்கும் வாலிபப் பருவம். அந்த வயதுக்கே உரிய ஆர்ப்பாட்டமும், குறும்பும், துள்ளலும், துடிப்பும் இருக்கத்தானே செய்யும்? அதற்கான ஒரு வடிகால் வேண்டாமா? சுழன்றடிக்கும் சூறாவளியை ஒரு புட்டியில் அடைக்க முடியுமா?

அப்படித்தான் மாணவர்களையும் வெறுமனே படிப்பு, தேர்வுகள் என ஒரு சின்ன வட்டத்துக்குள் அடைக்க முடியாது. அப்படி இருந்தால் கல்லூரி வாழ்க்கை என்பது மணமில்லா காகிதப் பூக்களைப் போல ஆகிவிடும். வயதான காலத்தில்கூட ஒருவருக்குத் தன் கல்லூரிக் காலத்தை நினைத்துப் பார்த்தால் மனதில் பட்டாம்பூச்சி பறக்க வேண்டும். தன் பேராசிரியர்கள், நண்பர்கள், வகுப்பறை அலப்பறைகள், ஆண்டு விழாக்கள், விளையாட்டு விழாக்கள், கலை விழாக்கள் என அனைத்தும் ஒரு திரைக் காவியம் போல மனதில் ஓட வேண்டும். அதுவே பரவசம் ஆகும்.

பள்ளி, கல்லூரிகளில் பாடங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தராமல் பாடத்திட்டம் சாரா செயல்களுக்கும் முக்கியத்துவம் தரப்படுகின்றன. சில மாணவர்கள் படிப்பில் சற்று மந்தமாக இருப்பார்கள். பேராசிரியர்கள் அவர்களை ஓரம் கட்டி வைத்திருப்பார்கள். ஆனால், அத்தகைய மாணவர்களிடம் ஏதாவது ஓர் அபூர்வத் திறமை இருக்கும்.

ஆண்டு விழாவின்போதோ, கலை நிகழ்ச்சிகளின்போதோ ஒரு மாணவன் தன் தனித்திறமையை வெளிப்படுத்தி விட்டால் அந்த மாணவன் குறித்த கண்ணோட்டம் மாறிவிடும். அந்த மாணவன் குறித்து மற்றவர்கள் கொண்டிருந்த பிம்பமும் மாறிப் போகும்; ஓர் அடையாளம் கிட்டும், அங்கீகாரம் கிட்டும், அந்த மாணவனுக்கிருந்த தாழ்வு மனப்பான்மை நீங்கி, நம்பிக்கை துளிர் விடும். குறிக்கோளை நோக்கி அந்த மாணவன் பயணப்பட அந்தப் பாராட்டு மழை பேருதவி செய்யும்; அது பெரும் உந்து சக்தியாக விளங்கும்.

வேலையில் சேர்ந்த பின்னர் எல்லோருமே செக்கு மாடுகளே; பணிச் சுமை, குடும்பச் சூழல் என அல்லாடும்போது கலையெல்லாம் மாயமாகும். தங்களின் திறமைகளை வெளிக்காட்ட எத்தனை பேருக்கு வாய்ப்பு கிட்டும்? "அது ஓர் அழகிய கனாக்காலம்' என்று ஏக்கப் பெருமூச்சு மட்டும்தான் விட முடியும். 

எனவேதான், அனைத்துக் கல்லூரிகளும் மூன்று அல்லது நான்கு நாள்கள் கோலாகலமாக கலை விழா எடுக்கிறார்கள். மாணவர்களும் பாடத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு வேறு அவதாரம் எடுக்கிறார்கள்; கல்லூரி வளாகமே விழாக்கோலம் பூண்டிருக்க, பிற கல்லூரிகளில் இருந்துவரும் போட்டியாளர்கள், சிறப்பு விருந்தினர்கள், பிரபலங்கள் என அந்தச் சங்கமம் மகிழ்ச்சி விதைகளை அனைத்து மனங்களிலும் தூவும்.

மிகவும் பிரபலமான கல்லூரிகளின் நிர்வாகிகள் தாங்களே இத்தகைய கலை விழாக்களை நடத்துகிறார்கள். மாணவர்களுக்கு ஒரு சிரமும் கொடுப்பதில்லை. பிரபலங்களை வரவழைப்பது, விருந்து, உபசரிப்பு, பரிசு என எல்லாவற்றையும் அதிக பொருட்செலவில் ஏற்பாடு செய்து விடுகிறார்கள். தங்களுடைய செல்வாக்கைப் பறைசாற்றவும் இந்த விழாவைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

சில தனியார் கல்லூரிகளும் அதிக ஆடம்பரம் இன்றி கலை விழாவை நடத்துகிறார்கள். ஆனால், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு கலைக் கல்லூரிகள் ஆகியவற்றின் நிலைமை வேறு. இக்கல்லூரிகளிலும் தமிழ் மன்றம், மாணவர் பேரவை, நுண்கலை மன்றம் ஆகியவை சிறப்பாகச் செயல்படுகின்றன. இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், கலை விழாக்களை நடத்த நன்கொடையாளர்கள் மற்றும் விளம்பரதாரர்களைத் தேடி அலைகிறார்கள். பொறுப்பில் இருக்கும் மாணவர்கள் விழாவை நடத்த வெகுவாக சிரமப்படுகிறார்கள்.

இதுபோன்ற கலை நிகழ்ச்சிகளில் ஆர்வமுள்ள பேராசிரியர்களுக்கு பொறுப்பு தரப்பட்டால் அவர்கள் மாணவர்களுக்கு உதவுகிறார்கள். ஆனால், விருப்பமில்லாத பேராசிரியர்களுக்கு பொறுப்பு தரப்பட்டால் மாணவர்களுக்குத் திண்டாட்டம். எல்லா ஏற்பாடுகளையும் மாணவர்களே செய்தாக வேண்டும். கலை விழா என்பதால், திரைக் கலைஞர்களையே சிறப்பு விருந்தினராக அழைக்க ஆசைப்படுகிறார்கள். அதே சமயம், யார் மூலம் அந்தப் பிரபலங்களைப் பிடிப்பது என்பது தெரியாமல் அல்லாடுகிறார்கள். நேரிலும், அவர்களைப் பார்க்க முடியாமல், செல்லிடப்பேசியிலும் பிடிக்க முடியாமல் நொந்து போகிறார்கள்.

ஒரு நகைக்கடை, துணிக்கடை திறப்பு விழாவுக்கு வருவதற்கு பல ஆயிரங்களை வாங்கும் அவர்கள், மாணவர் விழாவுக்கு வர இசைவதில்லை.
அவர்களுக்குப் பெரும் தொகை கொடுக்கவும் மாணவர்களால் இயலாது. விழா நடத்த நிறைய செலவாகும். மேடை, அலங்காரம், உணவு, உபசரிப்பு, சிறப்பு விருந்தினர், சன்மானம், போக்குவரத்து, பரிசுகள் எனப் பட்டியல் நீளும். எனவே தான் பிள்ளைகள் நன்கொடையாளர்களைத் தேடி அலைகிறார்கள். ஒரு வருடம் நன்கொடை அளிப்பவர், ஒவ்வொரு வருடமும் தருவாரா?

எடுத்துக்காட்டுக்கு ஒன்று. ஒரு மாவட்டத்தில் ஓர் அரசு மருத்துவக்கல்லூரி உள்ளது என்றால், அந்த மாணவர்கள் நன்கொடைக்காக சிறிய, பெரிய மருத்துவமனைகள் என அனைத்தையும் நாடுகிறார்கள். பெரிய மருத்துவமனையாகவே இருந்தாலுமே வருடா வருடம் இவர்கள் சென்று கேட்கும்போது தருபவர்களுக்குச் சங்கடம் ஏற்படுகிறது. பலரும் கேட்ட உடனே பணம் தராமல், "நாளை', "அடுத்த வாரம்' என இழுத்தடிக்கிறார்கள். மாணவர்களும் சளைக்காமல் நடக்கிறார்கள். சிறிய கிளினிக் வைத்திருப்பவர்கள் ரூ.500 கொடுக்கவே யோசிப்பர்.

பொதுவாகவே எதையும், எவரிடமும் கேட்க நமக்குத் தயக்கமாக இருக்கும்; "விழாவுக்காக நன்கொடை தாருங்கள்' என மென்று முழுங்கித்தான் கேட்கிறார்கள். ஒரு மாத காலம் இதே வேலையாக அலைகிறார்கள். இவ்வளவு செலவாகும் என்று போட்டு வைத்த கணக்கு எப்போதும் தவறாகிப் போய் செலவு எகிறி விடுகிறது. சமாளிக்க முடியாமல் மாணவர்களுக்கு விழி பிதுங்கிப் போய் விடுகிறது. ஆயிரத்துக்கும், ஐநூறுக்கும் மருத்துவர்களிடம் காத்துக் கிடக்கும் மருத்துவ மாணவர், பின்னாளில் தான் மருத்துவராகப் பணி செய்யும்போது தாராளமாகப் பணம் தருவாரா என்பது சந்தேகமே.

இப்போதெல்லாம் வங்கிகள் இந்த வகையில் மாணவர்களுக்கு உதவ முன் வருகின்றன. ஒரு சமூகக் கடமையாக எண்ணி விளம்பரம் தருகின்றன. இதை அறிந்த மாணவர்கள் வங்கிகளை அணுகுகிறார்கள். ஆண்டு மலருக்கு விளம்பரம் தேடுவதும் ஒரு பெரிய தலைவலி. பலரும் விளம்பரத்தை நம்பித்தான் மலரை வெளியிடுகிறார்கள். 

வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு விழா ஏற்பாடுகளைச் செய்யவும், நன்கொடை பெறவும் அலைகிறார்கள். இதைப் பல பேராசிரியர்கள் விரும்புவதில்லை. குதிரைக்குக் கடிவாளம் இடுவதைப் போல பல பேராசிரியர்களுக்குப் பாடத்தைத் தவிர வேறு எதுவும் பிடிக்காது. அதுவும் ஆட்டம், பாட்டம் என்றால் வேம்பாய்க் கசக்கும். அதற்காக அலையும் மாணவர்களின் வருகைப் பதிவேட்டில் கை வைத்து விடுகிறார்கள். செய்முறை வகுப்புகள் தவறிப் போனால் மாணவர்களை மீண்டும் செய்ய அனுமதிக்க மாட்டார்கள்.

பண விஷயம் என்பதால் வேறு பல சிக்கல்களும் வருகின்றன. அவர்களிடையே கருத்து வேறுபாடு வருகிறது. புகைச்சல் பகையாக மாறுகிறது. உட்பூசல் ஏற்படுகிறது. வரவு, செலவுக்குத் தணிக்கை இருந்தாலும் முன் நிற்பவர்கள் மீது அவச்சொல் உண்டாவது உண்டு. நிகழ்ச்சிக்கு வர முதலில் இசைவு தந்த பிரபலம், கடைசி நேரத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால் வர இயலவில்லை என்று கூறி விட்டால், வேறு நபரை ஏற்பாடு செய்ய தவித்துப் போகிறார்கள். கடைசி நேரத்தில் ஒருவரும் வர மாட்டார்கள். நிறைய வலிகளும், மன உளைச்சலும் இருந்தே தீரும். தான் பொறுப்பில் இருக்கும்போது சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற அவா உந்தித்தள்ள அவர்கள் நிறையவே மெனக்கெடுகிறார்கள்.

விழா இனிதே நடந்து முடிந்த பின் கிடைக்கும் பாராட்டு, அவர்களுக்கு வலி நிவாரணி. வீட்டிலோ, ஊரிலோ எந்த நிகழ்ச்சியையும் எடுத்து நடத்தாதவர்கள் கல்லூரி விழாவை நன்கு திட்டமிட்டு அருமையாக நடத்தும் அளவுக்கு திறமைசாலிகள் என்று பார்க்கும்போது வியப்பு மேலிடுகிறது. அலைச்சல், பயம், ஏமாற்றம், எதிர்மறை விமர்சனம் என எல்லாம் சேர்ந்த கவலையான மனநிலையில்கூட அவர்கள் வாகை சூடுகிறார்கள்.

கோழிக் குஞ்சுகளாகத் தங்களை நினைத்துக் கொண்டிருந்தவர்கள், இந்த வாய்ப்பால் வல்லூறுகளாக மாறுகிறார்கள். "சில காயங்கள் நம்மை நேர்த்தி செய்யும்; சில வலிகள் நம்மைச் செதுக்கும்' என்ற வாழ்க்கைப் பாடத்தைப் புரிந்து கொள்கிறார்கள். பட்ட வலிகள் மறந்து போகும். ஆனால், நல்ல சுவையான, இனிமையான நினைவுகள் மட்டும் அழியாது, அவர்கள் மனதில் ஆசனம் போட்டு அமர்ந்து கொள்ளும். அவற்றை அவர்கள் பின்னாளில் மெதுவாக மனதில் அசை போட்டுக் கொண்டிருப்பார்கள்.

கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு)

'இன்டர்நெட்' வேகம் எங்கு அதிகம்

Added : பிப் 29, 2020 01:03

உலகளவில் சராசரி இன்டர்நெட் வேகம் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் தைவான் முதலிடத்தை பெற்றுள்ளது.

உள்ளங்கையில் உலகம் என்பது 'இன்டர்நெட்' வளர்ச்சியால் சாத்தியமானது. ஸ்பெயினின் 'வெப்சைட் டூல் டெஸ்டர்' அமைப்பை சேர்ந்த விஞ்ஞானிகள் உலக நாடுகளில் 2017 -2019ம் ஆண்டுகளில் 'பிராட்பேண்ட்' இன்டர்நெட் வேகம் குறித்து ஆய்வு நடத்தினர். ஆன்லைனில் பயனாளர்களிடம் தகவல்களை சேகரித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் முதலிடத்தை தைவான் பெற்றுள்ளது.

தைவானில் மின்னணு நிறுவனங்கள் அதிகம் உள்ளது. இவை அந்நாட்டின் மொத்த ஜி.டி.பி., யில் 18 சதவீத பங்களிப்பை அளிக்கிறது.இப்பட்டியலில் உள்ள 'டாப் - 25' நாடுகளில் 18 நாடுகள் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்தவை. முதலிடத்தில் உள்ள தைவானில் இன்டர்நெட் வேகம் 85 எம்.பி.பி.எஸ்., என்ற அளவில் உள்ளது. இதன் மூலம் 5 ஜி.பி., அளவிலான வீடியோவை, 8 விநாடிகளில் டவுண்லோடு செய்ய முடியும்.

முந்திய குட்டி தீவு

பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் இடையே உள்ள ஜெர்சி தீவில் இன்டர்நெட் வேகம் 67 எம்.பி.பி.எஸ்., ஆக உள்ளது. இங்கு வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு 'பைபர்' கேபிள் மூலம் இன்டர்நெட் சேவை வழங்கப்படுகிறது. அமெரிக்காவில் இன்டர்நெட் வேகம் 32 எம்.பி.பி.எஸ்., மற்றும் வீடியோ டவுண்லோடு செய்ய 20 வினாடிகளும், பிரிட்டனில் இன்டர்நெட் வேகம் 22 எம்.பி.பி.எஸ்., மற்றும் வீடியோ டவுண்லோடு செய்ய 30 விநாடிகளும் ஆகிறது.

11

உலகின் சராசரி இன்டர்நெட் வேகம் 2017ம் ஆண்டு 9 எம்.பி.பி.எஸ்., ஆக இருந்தது. இது 2019ல் 11 எம்.பி.பி.எஸ்., ஆக அதிகரித்துள்ளது.

30

உலகில் இன்டர்நெட் வேகம் குறைவாக உள்ள நாடு ஏமன். இது 207வது இடத்தில் உள்ளது. இங்கு 300 கே.பி.பி.எஸ்., என்ற அளவில் உள்ளது. வீடியோவை டவுண்லோடு செய்ய 30 நிமிடங்கள் தேவைப்படும்.

8.66

இப்பட்டியலில் 74வது இடத்தில் உள்ள இந்தியாவில், இன்டர்நெட் வேகம் 8.66 எம்.பி.பி.எஸ்., ஆக உள்ளது.

'டாப் - 10' நாடுகள்

'பிராட்பேண்ட்' இன்டர்நெட் வேகத்தில் அமெரிக்கா (14வது இடம்), பிரான்ஸ் (22), ஜெர்மனி (27), பிரிட்டன் (33), ஆஸ்திரேலியா (50), ரஷ்யா (54) பின்தங்கி உள்ளன. இப்பட்டியலில் 'டாப்-10' நாடுகள்.

1. தைவான்
2. சிங்கப்பூர்
3. ஜெர்சி
4. சுவீடன்
5. டென்மார்க்
6. ஜப்பான்
7. லக்சம்பர்க்
8. நெதர்லாந்து
9. சுவிட்சர்லாந்து
10. சான் மரீனோ
சாப்ட்வேர் பிரச்னையால் அரசு ஊழியர் சம்பளம் தாமதம்

Added : பிப் 28, 2020 23:36

மதுரை :சாப்ட்வேர் பிரச்னையால் இந்த மாதம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைப்பது தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.2017ல் அரசு ஊழியர்களின் சம்பள பட்டியலை புதிய சாப்ட்வேர் மூலமாக தயாரித்து, அதன் மூலம் மட்டுமே சம்பளம் பெற வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கான புதிய சாப்ட்வேர் தயாரிக்கும் பணியை விப்ரோ மேற்கொண்டது. ஒருங்கிணைந்த மனிதவள மேம்பாட்டுத் திட்டம் (ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்) எனும் சாப்ட்வேர் தயாரிக்கப்பட்டது.முதற்கட்டமாக மதுரை, தேனி, ஈரோடு, சென்னை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இந்த மாதம் முதல் நடைமுறைபடுத்தப்படுகிறது. மே 31 ற்குள் தமிழகம் முழுவதும் நடைமுறைபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.ஆனால் சாப்ட்வேர் பிரச்னையால் சம்பளம் வழங்குவது தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.தாமதமின்றி ஊதியம் வழங்ககோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மதுரையில் சம்பள கணக்கு அலுவலகம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பள பட்டியல் தயாரிப்பதில் ஏற்படுகின்ற சிக்கல்கள் குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மதுரை மாவட்ட செயலாளர் நீதிராஜா கூறியது: ஏற்கனவே இருந்த சாப்ட்வேரில் உள்ள ஊழியர்களின் தகவல்களை புதிய சாப்ட்வேரில் பதிவேற்றம் செய்ய முடிவதில்லை, தற்போது உள்ள கணினிகள் புதிய சாப்ட்வேர்க்கு ஏற்றாற்போல் இல்லை. இணையதள வசதியும் இல்லை. எனவே, சம்பள பட்டியல் தயாரிப்பதில் சிரமம் எற்படுகின்றது.சந்தேகங்களுக்கு விப்ரோ ஊழியர்கள் மழுப்பலான பதில்களையே அளிக்கின்றனர். முன்பு இருந்த நடைமுறைப்படி சம்பளம் வழங்க வேண்டும்' என்றார்.பொருளாளர் ராம்தாஸ் கூறுகையில், 'புதிய சாப்ட்வேரில் உள்ள பிரச்னைகளை சரிசெய்து, காலதாமதமாகாமல் சம்பளம் கிடைக்க அரசு வழி செய்ய வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்' என்றார்.

'ஆதார்' எடுக்க முடியாதோருக்கு இனி தனி ரேஷன் கார்டு

Added : பிப் 28, 2020 20:52

'ஆதார்' கார்டு எடுக்க முடியாத அளவுக்கு, உடல் நலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மட்டும், தனி ரேஷன் கார்டுகளை வழங்க, உணவு துறை முடிவு செய்துள்ளது.தமிழக ரேஷன் கடைகளில், மானிய விலையில், உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இவற்றை வாங்க, ரேஷன் கார்டு அவசியம். மத்திய அரசின், 'ஆதார்' எண் விபரங்கள் அடிப்படையில், உணவு வழங்கல் துறை சார்பில்,கையடக்க வடிவில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன.இதனால், ஒரே நபர், பல முகவரிகளில் கார்டுகள் வாங்குவது தடுக்கப்பட்டு உள்ளது. பிறக்கும் போது, கைகள் செயல்படாதவர்கள்; விபத்துக்களால், உடல் உறுப்புகளை இழந்தவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களால், 'ஆதார்' கார்டு எடுக்க முடியவில்லை. ஆதார் இல்லாததால், அவர்களுக்கு, ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க முடிவதில்லை. இதனால், ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல், அவர்கள் சிரமப்படுகின்றனர்.

இதையடுத்து, ஆதார் கார்டு எடுக்க முடியாத அளவுக்கு, உடல் நலம் குன்றியவர்களுக்கு, ஆதார் இல்லாமல், ரேஷன் கார்டு வழங்குமாறு, உணவு வழங்கல் துறைக்கு, மாநில உணவு ஆணையம் பரிந்துரை செய்தது. ஆனால், ஆதார் எண் பதிவு செய்யாமல், ரேஷன் கார்டு வழங்க முடியாத அளவுக்கு, மென்பொருள் உருவாக்கப்பட்டு உள்ளது.எனவே, ஆதார் எடுக்க முடியாத நபர்களுக்கு மட்டும், ஸ்மார்ட் கார்டுக்கு மாற்றாக, காகித வடிவில், தனி ரேஷன் கார்டுகளை வழங்க, உணவு துறை முடிவு செய்துள்ளது. - நமது நிருபர் -

மார்ச் முதல் மே வரை வெயில் கொளுத்தும்

Updated : பிப் 29, 2020 02:00 | Added : பிப் 29, 2020 01:59

புதுடில்லி, :இந்தியாவில், வரும் மார்ச் முதல், மே வரை, வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம், நேற்று அளித்த தகவலின் அடிப்படையில், இந்தியாவின் மேற்கு, வடமேற்கு, மத்திய மற்றும் தென் பகுதிகளில் மார்ச் முதல், மே வரை, வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை அதிகமாக பதிவாகும். பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம், டில்லி, உத்தரகண்ட், ஹரியானா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், பீஹார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா மற்றும் கடலோர ஆந்திராவின் சில பகுதிகளிலும், வழக்கத்தை விட வெப்பம் கூடுதலாக இருக்கும்.

இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும் போது, தமிழகத்தில் குறைந்த அளவு மட்டுமே வெப்பம் அதிகரிக்கும். வடமேற்கு, மேற்கு மற்றும் மத்திய இந்தியாவில், கடும் அனல் காற்று வீசுவதற்கும் வாய்ப்புள்ளது.

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...